Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோனியா, ராகுல் ராஜினாமா நிராகரிப்பு
4 posters
Page 1 of 1
சோனியா, ராகுல் ராஜினாமா நிராகரிப்பு
புதுடில்லி: காங்., காரிய கமிட்டி கூட்டம் கூடியது என்றால் நாடு முழுவதும் ஒரு பரபரப்பும் எதிர்பார்ப்பும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து வந்தது. ஆனால் சோனியாவும், ராகுலும் கட்சிக்கு வந்த பின்னர் இதன் ஸ்ருதி குறைந்து போனது. முறையாக கூட்டி எந்தவொரு முடிவும் எடுக்ககப்படுவதில்லை.
சோனியாவும், ராகுலும் நினைப்பதே முடிவாக அறிவிக்கப்படும். இது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது, இது காங்., மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இன்று கூடும் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் வாய் திறந்து பேசுவர் என எதிர்பார்க்கப்பட்டது. தோல்விக்கு காரணமானவர்கள் மீதும் குறிப்பாக ராகுல் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை பாயுமா ? அல்லது வழக்கம் போல் 'சப்' என முடிந்து விடுமா ? என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், இன்று கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், சோனியா மற்றும் ராகுல் ராஜினாமா செய்ய முன் வந்தனர். ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டிஇதனை நிராகரித்தது. இந்த கூட்டத்தில், கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தும், தோல்வி குறித்து ஆராயவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கட்சி வளர்ச்சி தொடர்பாக முடிவெடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அதிகாரம்அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜினாமா தீர்வல்ல: மன்மோகன் சிங்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில். தலைமை பொறுப்பிலிருந்து சோனியா மற்றும் ராகுல் விலக முன் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது மன்மோகன் சிங், ராஜினாமா செய்வதுமட்டும் தீர்வாகாது. தவறுகளுக்கு தீர்வுகாண வேண்டும் என கூறினார்.
காங்கிரசில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து சோனியா முடிவு செய்வார் என பெனி பிரசாத் வர்மா கூறியுள்ளார்.
தோல்வி குறித்து ஆராய குழு: காங்காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் முடிந்துள்ள நிலையில், எதிர்பார்த்த மாற்றம் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்கர் பெர்ணாண்டஸ் கூறுகையில், நாங்கள் தொடர்ந்து போராடுவோம், சோனியா மற்றும் ராகுல் தலைமை மீது நம்பிக்கை உள்ளது என கூறினார்.
அம்ரீந்தர் சிங் கூறுகையில், சோனியா மற்றும் ராகுல் ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும், ஆனால் அனைவரும் ஒரு மனதாக அதனை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க குழு அமைக்க ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகுல் தலைமையில் தொடர்ந்து கட்சி போராடும் என ராஜ்பாப்பர் கூறியுள்ளார்.
இந்த கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி, தேர்தல் முடிவு ஏமாற்றமளிப்பதாகவும், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறினார். ஆனால், இந்த முடிவை காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஒரு மனதாக நிராகரித்தனர். எதிர்க்கட்சியினர் காங்கிரசின் ஓட்டுவங்கியை சிதறடித்ததாகவும், அமைப்பு ரீதியாக கட்சியில் மாற்றம் செய்ய வேண்டும் என சோனியா விரும்புவதாகவும், மக்களிடம் இருந்து கட்சி ஏன் விலகியுள்ளது, என்பது பற்றி ஆராய வேண்டும் என அவர் எண்ணுவதாகவும்,கட்சியில் விரும்பிய மாற்றத்தை செய்ய முடியவில்லை எனவும் திவேதி கூறினார்.
மேலும் அவர், தேர்தலில் கடுமையாக உழைத்தும் தேர்தலில் தோல்வி கிடைத்தாகவும், தோல்வி குறித்து ஏமாற்றம் தெரிவித்த ராகுல். கட்சியில் இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முன்வந்தார் என்றும், இதனையும் காங்கிரஸ் காரிய கமீட்டி நிராகரித்தது என கூறினார். கட்சியில் இருந்த சிலரின் பொறுப்பின்மை காரணமாக தோல்விகிடைத்தாதகவும் ராகுல் எண்ணுவதாகவும் கூறினார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொள்ள முன்வந்ததாகவும், ராஜினாமா செய்வதால் மட்டும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது எனவும் அவர் கூறியதாகவும், ராஜினாமா முடிவை விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்ததாக பிரதமர் கூறினார் என கூறினார்.
பிரசாரத்தில் சில பிரச்னைகள் இருந்தன. கட்சியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். லோக்சபா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்றுக்கொள்வதாகவும், கட்சியில் தற்போது நிலவும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும் என கூறினார்.
மோடி அலையில் மண்ணை கவ்வின; சமீபத்திய லோக்சபா தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சியில் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் வழிநடத்துதலே இந்த தோல்விக்கு காரணம் என மூத்த நிர்வாகிகள் பொறுமியுள்ளனர். இதனால் தலைமை பொறுப்பில் இருக்கும் காங்., தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் மற்றும் பொதுசெயலர்கள், காங்., மாநில பொறுப்பாளர்கள் தங்களின் பொறுப்பில் இருந்து விலகுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான காங்., காரிய கமிட்டி கூட்டம் இன்று டில்லியில் கூடியது. இந்தக்கூட்டத்தில் தங்களின் ராஜினாமா முடிவை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரசை பொறுத்தமட்டில் இந்த தேர்தலில் வெறும் 44 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. கடந்த முறை 206 எம்.பி.,க்கள் இந்த கட்சியின்வசம் இருந்தது. மோடியின் ஆதரவு அலையில் தற்போது எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவிற்கு பின்தங்கியிருக்கிறது. காங்., வரலாற்றிலேயே இது போல் ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை. இந்த தேர்தலில் காங்.,கட்சியின் பிரசாரத்தில் மதவாதம் , சிறுபான்மை என்பதையே பிரசார ஆயுதமாக வைத்திருந்தது. இது மக்கள் மத்தியில் எடுபடாமல் போனது.
மோடியின் அலையில் பெரும் தலைக்குனிவை சந்தித்தால் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநில கட்சி தலைவர்கள் தங்களின் பதவியை துறக்க தயாராகி வருவதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
பலத்த அடி விழுந்தது: லோக்சபா தேர்தலில் மோடியின் சுனாமி அலையில் பல்வேறு மாநில கட்சிகள் மண்ணைக்கவ்வின. குறிப்பாக உத்திரபிரதேசம், பீகார், அசாம் , மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் பெரும் செல்வாக்கு கொண்ட சமாஜ்வாடி ( முலாயம்சிங்), ராஷ்ட்டிரிய ஜனதாதளம் ( லாலு யாதவ்), தரூண்கோகை ( காங்.,) தேசியவாத காங்., ( சரத்யாதவ்), ஐக்கிய ஜனதாதளம் (நிதீஷ்குமார் ) ஆகியோர் பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர். மோடியை பிரதமராக விடக்கூடாது என வரிந்து கட்சி வரிசையில் நின்றனர். ஆனால் எதிர்த்த அனைவரும் மோடி அலையில் காணாமல் போயினர். உத்திரபிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜ., 69 தொகுதிகளை பிடித்து சாதனை படைத்துள்ளது. இது போல் லாலு, நிதீஷ்சுக்கு செல்வாக்கு கொண்ட பீகாரிலும் பலத்த அடி விழுந்தது. தமிழகத்தில் தி.மு.க., பூஜ்யமே பெற்றது. இதனால் மு.க., ஸ்டாலின் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் தி.மு.க., தலைமை இதனை நிராகரித்தது.
காஷ்மீரில் மோடி பிரசாரம் செய்ய முடியாது என்று சவால் விட்ட அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளனர். மொத்தம் 6 தொகுதிகளில் இந்த கட்சிக்கு கிடைத்தது பூஜ்யமே ! பா.ஜ.,வுக்கு மக்கள் 3 தொகுதிகளை வழங்கியிருக்கின்றனர்.
மோடி அலையில் கடும் தோல்வியை சந்தித்தால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளில் முனகல் எழுந்துள்ளது. கட்சி தலைமைதான் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதும் காங்.,தலைவர் சோனியா முதல் உ.பி.,யில் முலாயம், மாயாவதி, தமிழகத்தில் தி.மு.க,. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தங்களின் பதவியை ராஜினாமா செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக காங்., பொதுசெயலர்கள், மாநில வாரியான பொறுப்பாளர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவார்கள் என டில்லி வட்டாரம் தெரிவித்தது.
காரியம் சாதிக்குமா?... ஜால்ரா தட்டுமா? ; சுதந்திரத்திற்குப் பிறகு, இதுவரை சந்தித்திராத இக்கட்டான சூழ்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது. கமிட்டி கூடி என்ன செய்யப் போகிறது? முன்பு என்ன செய்தது என, காங்கிரசார் நிறைய யோசிக்க வேண்டிய நேரம் இது. இந்திரா காலத்திற்கு முன்பு, இக்கமிட்டி கூடுகிறது என்றாலே, கட்சி தலைவர்களுக்கு உதறல் எடுக்கும். கமிட்டி, யார் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது என, நாடு மட்டுமல்லாமல், உலகமே உற்று கவனிக்கும். ஏனெனில் அவ்வளவு அதிகாரம், அக்கமிட்டிக்கு இருந்தது. அதில் இடம் பெற்றிருந்த தலைவர்கள், யார் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்கியதே இல்லை. கட்சி மீதும் நாடு மீதும் அவ்வளவு பற்றுதலுடன் அவர்கள் இருந்தனர்.
ஆனால், இன்று நிலைமையே வேறு. இந்திரா காலத்திற்குப் பிறகு, ஜால்ராக்கள் தான் கமிட்டி உறுப்பினர் ஆக்கப்பட்டனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்த இந்த "கூத்தால்', இன்று படு தோல்வியை சந்தித்து சந்தியில் நிற்கிறது கட்சி.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி பற்றி ஆராய, சோனியா, மன்மோகன், ராகுல், அந்தோணி, குலாம் நபி, திக்விஜய் சிங், அம்பிகா சோனி, மக்கான் உள்பட 34 உறுப்பினர்கள் இன்று நடக்கும் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ராகுலுக்கு "ஜால்ரா'க்கள் : இவர்கள் அனைவருமே சோனியா, ராகுலுக்கு "ஜால்ரா'க்கள் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உண்மையிலேயே கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இவர்கள் சோனியா மற்றும் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுப்பார்களா அல்லது வழக்கம்போல், சோனியாவுக்கும் ராகுலுக்கும் "ஜால்ரா' அடித்துவிட்டு, பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுவிட்டு, காபி குடித்துவிட்டு கலைவார்களா என இன்று தெரியும்.
தினமலர்
Re: சோனியா, ராகுல் ராஜினாமா நிராகரிப்பு
ராஜினாமா தருவது போல் தருவது ,வேண்டாம் என தலைமை மறுப்பது ---இதெல்லாம் எங்களுக்கு பழக்கம்ங்க .
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: சோனியா, ராகுல் ராஜினாமா நிராகரிப்பு
முதலில் இலங்கைத் தமிழனுக்குப் பரிகாரம் செய்துவிட்டு வாருங்கள்.உங்கள் தோஷம் நிவர்த்தியாகிறதா எனப் பார்ப்போம்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சோனியா, ராகுல் ராஜினாமா நிராகரிப்பு
இவனுக பாஸ்போர்டை பிடிங்கிட்டு இந்த எலியை அனுப்பற மாதிரி இன்சாட்ல வெச்சு சனி கிரகத்துக்கு அனுப்பிட்டா தேவலாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முதல்வர் ராஜினாமா ஏற்பு - சோனியா நடவடிக்கை!
» சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com
» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
» ராகுல் எனக்கும் தலைவர் தான்: சோனியா
» ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி
» சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com
» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
» ராகுல் எனக்கும் தலைவர் தான்: சோனியா
» ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|