ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி!

4 posters

Go down

ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி! Empty ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி!

Post by சிவா Mon May 19, 2014 12:59 pm


கூடங்குளம்: நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த கூடங்களும் அணு உலை எதிர்ப்பாளரான உதயகுமார், தனது தேர்தல் தோல்வி குறித்து, 'குப்பைத் தொட்டியும், சப்பைக் கட்டும்' என்ற தலைப்பில் தமது ஃபேஸ்புக் தளத்தில் எழுதியிருப்பதாவது:

"கூடங்குளம் அணுமின் திட்டத்தை நம் மீது திணித்து வந்த காங்கிரசை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி எறிவோம் என்று கடந்த மூன்று ஆண்டுகளாகப் பேசிவந்தேன். அனைவருமாக சேர்ந்து அப்படியே செய்தும் விட்டோம். பிரச்சினை என்னவென்றால், சில அந்நிய சக்திகள் சதி செய்து என்னையும் அதற்குள் தள்ளி விட்டார்கள். சே, இந்த இந்திய வாக்காளர்கள் ஈவு இரக்கமற்றவர்கள். ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது?

வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் பார்த்தால் நெருக்கமான நண்பர்கள் ஏராளமானோர் விழுந்து கிடந்தார்கள். “அண்ணாச்சி, என்னாச்சி, உங்களைப் பார்த்து அநேக நாளாச்சி” என்று ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொண்டோம். “அம்மாவை”த் தவிர ஒட்டு மொத்த அரசியல் குடும்பத்தையும் அங்கே பார்த்ததில் பெருமகிழ்ச்சி; நான் மட்டும் தூக்கி எறியப்படவில்லை என்பதில் ஒருவித திருப்தி.

துக்கம் விசாரிப்பதற்காக ஏராளமானோர் கடந்த மூன்று நாட்களாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். தொலைபேசியிலும் ஏராளமான இரங்கற் செய்திகள். திட்டும் உரிமையுடைய அல்லது திட்டுவதற்கான வாய்ப்பை நழுவவிட விரும்பாத சிலர் “உனக்கெதற்கு இந்த வேலையெல்லாம்?” என்று திட்டவும் செய்தனர். அரசியலுக்கென்று வந்துவிட்டால், இதையெல்லாம் பார்க்க முடியுமா, என்ன? நமக்குத் தொழில் திட்டுவதும், திட்டுவோருக்கு பதில் சொல்வதும்தானே?

ஒருசில ஆசாமிகள் “’அம்மா ஆத்மி’ என்று கட்சியின் பெயரை மாற்றிவிட்டு, பிழைப்பைப் பார்!” என்று அறிவுரைத்தார்கள். வேறு சிலர் குப்பைத் தொட்டிக்குள்ளிருந்து தப்பிக்கும் வழிமுறைகளைச் சொன்னார்கள். நீண்ட காலமாக அங்கேயே வசிப்பவர்கள் என்று நினைக்கிறேன்.

இத்தனைத் தொந்திரவுகளையும் தாங்கிக் கொண்டு, கடந்த மூன்றாண்டுகளில் முதன்முறையாக மூன்று நாட்கள் நிறைய தூங்கினேன். மார்ச் 29 அன்று இடிந்தகரையிலிருந்து வெளியே வந்ததும், வேட்பாளர் மனு தாக்கல் செய்தேன். பிறகு என்னை யாரும் தூங்க விடவில்லை. ஏப்ரல் 25 அன்று தேர்தல் முடிந்த பிறகு, தூக்கம் வரவில்லை. மே 16 அன்று முடிவு தெரிந்த பிறகு, தூக்கம் போகவில்லை.

இந்த தொடர் தூக்கத்திற்கிடையேயும், சங்க பரிவார் “சகோதரர்”களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு செயல்திட்டக் கட்டுரை எழுதினேன். சில நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறன். அவர்கள் கருத்துக்களை அறிந்தபிறகு, விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போது ஒரு சில எண்ணங்கள்:

[1] ரூ.2௦௦ முதல் ரூ.1௦௦௦ வரை கையூட்டு வாங்கிக் கொண்டு வாக்களித்த வாக்காளப் பெருமக்களைப் போலல்லாமல், இவனிடமிருந்து ஒரு பைசாவுக்குக்கூட பிரயோசனம் கிடையாது என்று தெரிந்தும், எனக்கு வாக்களித்த சுமார் 15,5௦௦ வாக்காள பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பணம், நேரம், ஆள்பலம், அனுபவம் எதுவுமில்லாத நிலையிலும், எனது சாதி, மதம் எதையும் கணக்கிலெடுக்காது, வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்ளும் வரலாறு படைத்து விட்டீர்கள்.

[2] இப்படி ஒரு பெரிய வரலாற்று குப்பைத் தொட்டி விபத்து நடக்கப் போகிறது என்று தெரியாமலே, எனக்கு பண உதவியும், பல உதவிகளும் செய்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது நன்றியும், வணக்கங்களும்!

[3] எனது தேர்தல் வரவு-செலவு விபரங்களை விரைவில் அறியத் தருகிறேன். ஒரு நண்பர் குழு அதனை தயாரித்துக் கொண்டிருக்கிறது.

[4] தமிழக எளிய மக்கள் (ஆம் ஆத்மி) கட்சிக்குள் ஒரு சில வலிய மக்கள் வலிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அது முடியும்போது (முடிந்தால்?), என்ன நடக்கிறது என்று சொல்கிறேன்.

[5] கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினை தொடர்பாக திரு. அச்சுதானந்தன், திருவனந்தபுரம் பேராயர் சூசைபாக்கியம் போன்றோரை நண்பர்களுடன் சந்தித்துப் பேசினேன். இன்னும் ஏராளமானோரை பார்த்துப் பேசும் திட்டமிருக்கிறது. மோடி, லேடி, டாடி – இவர்களையும் பார்ப்போமே?

[6] உலகிலேயே உன்னதமான, உயர்வான, ஒப்பற்ற கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மே 14 அன்று ஒரு (சின்ன!) விபத்து நடந்தது. பலருடைய கதி என்ன ஆயிற்று என்றே தெரியவில்லையாம். “ஊ...” என்று துவக்கத்தில் கத்திய சில ஊடகங்கள் இப்போது “கம்”மென்று இருக்கிறார்கள். அங்கேயும் பண நாயகமோ? வாழ்க பண நாயகம்!

[7] “ஈழத் தமிழருக்கு இனப்படுகொலை, இங்குள்ள தமிழருக்கு கூடங்குளம் அணு உலையா?” என்று கேட்டு நாகர்கோவிலில் மே 17 அன்று ஒரு நிகழ்வுக்கு அனுமதி கோரியிருந்தோம். உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு அனுமதி மறுத்துவிட்டது. வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் ராஜபக்ஷே குடும்பத்தையும், கூடங்குளம் அணு உலையையும் கொண்டு சேர்க்கும் வரை, நாம் உறங்கக் கூடாது தோழர்களே...!". இவ்வாறு அதில் அவர் எழுதியுள்ளார்.

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி! Empty Re: ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி!

Post by ரா.ரா3275 Mon May 19, 2014 1:19 pm

அணு உலையை ஆதரித்து வாயையே திறக்காத ஆம் ஆத்மிக்கு சிஞ்சா அடிக்கும் சிந்தனை உதயகுமாருக்கு எப்படி ஏற்பட்டது?.

கெஜ்ரிவால் இதுவரை தமிழர்கள் பற்றி உதடு பிரித்து ஒரு வார்த்தை உதிர்த்ததில்லை.
அப்படி இருக்கையில் அவர் எப்படி உதயகுமார் சிந்தை கவர்ந்தார்?.

உதயகுமார் நல்லவர் என்பதில் எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை.ஆனால் அரசியல் வண்ணம் ஏற்ற பிறகு விமர்சனக் கத்திகளுக்கு உங்களைக் காவு கேட்கும் உரிமை இல்லாமல் எப்படிப் போகும்?.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி! Empty Re: ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி!

Post by ராஜா Mon May 19, 2014 1:24 pm

ஆம் ஆத்மீக்கு ஜால்ரா அடிக்கும் வரைக்கும் நானும் உதயகுமார் அவர்களை நம்பிக்கொண்டு தான் இருந்தேன், அதன் பிறகு தான் சிறிய சந்தேகம் வந்தது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி! Empty Re: ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி!

Post by ரா.ரா3275 Mon May 19, 2014 1:38 pm

ராஜா wrote:[link="/t110372-topic#1064677"]ஆம் ஆத்மீக்கு ஜால்ரா அடிக்கும் வரைக்கும் நானும் உதயகுமார் அவர்களை நம்பிக்கொண்டு தான் இருந்தேன், அதன் பிறகு தான் சிறிய சந்தேகம் வந்தது.

இவர் தன் போராட்டங்களுக்கெல்லாம் வலுவேற்ற வைகோவைப் பயன்படுத்திக்கொண்டவர் என்பது ஊரறிந்த ரகசியம்.
ஆனால் ம.தி.மு.க. வண்ணம் ஏறாமல் இருந்தார்.உளப்படியே மகிழ்ந்தேன்.ஆனால் துடைப்பக்கட்டை அரசியலில் இறங்கியதும் மக்களே துடைத்துப் பெருக்கிக் கழித்து விட்டனர்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி! Empty Re: ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி!

Post by T.N.Balasubramanian Mon May 19, 2014 10:11 pm

மூன்று ஆண்டுகளாக இவர் அணு எதிர்ப்பில் உள்ளேன் என்கிறார் .
இந்த மூன்று வருடத்தில்தான் கூடங்குளம் இடம் தீர்மானிக்கப்பட்டு , ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டு , நிர்மாணிக்கப்பட்டு , செயல் பட துவங்கி உள்ளதா ?
ஒரு சிறு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது .
ஒரு குளம் . அங்கே குளிக்கக்கூடாது என்ற சட்டம் . அதை பாதுகாக்க ஒரு காவலாளி . ஒரு நாள் , ஒரு வெளியுர்காரர் களைத்து வந்து குளத்தில் நீர் பருகி ,
குளித்தால் புத்துணர்ச்சி பெறலாம் என்று , ஒவ்வொரு ஆடையாக களைந்து உள்ளாடையுடன் குளிக்க குளத்தில் இறங்கினார் .
காவலாளி , "அய்யா இங்கே குளிக்ககூடாது "
வெளியுர்காரர் : அய்யா நான் ஆடை களையும் போதே சொல்லக்கூடாதா ? வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தீகளே ?"
காவலாளி : அய்யா .ஆடை களைய தடை ஏதும் இல்லை . குளிக்கத்தான் தடை ."

அதே போல் அணு நிலையம் அமைக்க தடை கூறாத அவர் , மின் உற்பத்திக்கு மறுப்பு கூறுகிறார் .
பாவம் , வைகோ வை முட்டாளாக்கி விட்டார் .

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி! Empty Re: ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி!

Post by சிவா Mon May 19, 2014 10:19 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110372-topic#1064776"]மூன்று ஆண்டுகளாக இவர் அணு எதிர்ப்பில் உள்ளேன் என்கிறார் .
இந்த மூன்று வருடத்தில்தான் கூடங்குளம் இடம் தீர்மானிக்கப்பட்டு , ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டு , நிர்மாணிக்கப்பட்டு , செயல் பட துவங்கி உள்ளதா ?
ஒரு சிறு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது .
ஒரு குளம் . அங்கே குளிக்கக்கூடாது என்ற சட்டம் . அதை பாதுகாக்க ஒரு காவலாளி . ஒரு நாள் , ஒரு வெளியுர்காரர் களைத்து வந்து குளத்தில் நீர் பருகி ,
குளித்தால் புத்துணர்ச்சி பெறலாம் என்று , ஒவ்வொரு ஆடையாக களைந்து உள்ளாடையுடன் குளிக்க குளத்தில் இறங்கினார் .
காவலாளி , "அய்யா இங்கே குளிக்ககூடாது "
வெளியுர்காரர் : அய்யா நான் ஆடை களையும் போதே சொல்லக்கூடாதா ? வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தீகளே ?"
காவலாளி : அய்யா .ஆடை களைய தடை ஏதும் இல்லை . குளிக்கத்தான் தடை ."

அதே போல் அணு நிலையம் அமைக்க தடை கூறாத அவர் , மின் உற்பத்திக்கு மறுப்பு கூறுகிறார் .
பாவம் , வைகோ வை முட்டாளாக்கி விட்டார் .

ரமணியன்

ஹா ஹா ஹா... சரியாகக் கூறியுள்ளீர்கள்.

இவர் ஒரு அந்நியக் கைக்கூலி! வெளியில் பிச்சைக்காரன் வேடமிட்டுத் திரியும் கோடீஸ்வரன்! ஒரு நாளைக்கு 500 ரூபாய் என கூலிக்கு ஆள் பிடித்து கூடங்குளத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர். போராட்டம் நடந்தது பல மாதங்கள், கூடியிருந்தவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள். ஒரு நாள் போராட்டத்திற்கு மூன்று லட்சங்கள் வரை செலவு செய்தவர்!

இவரைக் கைது செய்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து எதற்காகப் போராட்டம் நடத்தினார் என விசாரிக்காமல் அரசும் மெத்தனமாக இருந்துவிட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி! Empty Re: ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி!

Post by T.N.Balasubramanian Mon May 19, 2014 11:00 pm


உண்மை , இவருக்கு சொத்தே இல்லையாம் இவர் மனைவிக்கு கோடிகணக்கில் உள்ளதாம் தேர்தல் விண்ணப்பத்தில் கூறியிருக்கிறார் . மனைவி பெரி -----ய பணக்கார குடும்பம் போல் உள்ளது .
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி! Empty Re: ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி!

Post by சிவா Tue May 20, 2014 4:56 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110372-topic#1064787"]
உண்மை , இவருக்கு சொத்தே இல்லையாம் இவர் மனைவிக்கு கோடிகணக்கில் உள்ளதாம் தேர்தல் விண்ணப்பத்தில் கூறியிருக்கிறார் . மனைவி பெரி -----ய பணக்கார குடும்பம் போல் உள்ளது .
ரமணியன்

பணக்காரக் குடும்பம் எல்லாம் இல்லை ஐயா!

அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் கிறிஸ்தவராக மாற்றுகிறேன் என்று இவர் வெளிநாடுகளிலிருந்து கோடி கோடியாகப் பணம் பெற்றுள்ளார்! இவைகள் அரசாங்கத்திற்கும் தெரியும்! ஆனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி! Empty Re: ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி!

Post by T.N.Balasubramanian Tue May 20, 2014 9:47 pm

மதம் மாற்றுகிறேன் என்று
மதம் பிடித்தலையும் மானிடரே ,
எந்த மதத்திற்கும் இதில்
சம்மதமில்லை ,அறிவீரோ ?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி! Empty Re: ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum