புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
59 Posts - 56%
heezulia
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
54 Posts - 55%
heezulia
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_m10மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 4:21 pm


ஒரு ஊரில் திருடர்கள் பெருகிவிட்டார்கள் என்பதாலேயே திருட்டைச் சட்டபூர்வமாக்கிவிட முடியாதல்லவா?

சேவைத்துறைகளில் பெரும் மூலதனத்தைக் கட்டுப்பாடின்றி அனுமதித்தால், எப்படியெல்லாம் அது பேயாட்டம் போடும்? உதாரணமாகியிருக்கிறது மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை (KDAH).

நாட்டின் அதிநவீன மருத்துவமனைகளில் ஒன்றான கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமானது. அனில் அம்பானியின் மனைவி டினா அனில் அம்பானியின் நேரடித் தலைமையில் இயங்குவது. “இந்திய மருத்துவப் பராமரிப்புத் துறையில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதே எம் மருத்துவமனையின் முக்கிய இலக்கு” என்று மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் முழங்குகிறார் டினா. ஆனால், அம்பானி மருத்துவமனையோ மருத்துவத் துறையின் அடிப்படை அறநெறிக் கட்டுமானம் எதுவோ அதையே பகிரங்கமாகச் சுக்குநூறாக உடைத்தெறிந்திருப்பதைச் செய்திகள் சொல்கின்றன.

ஆளை அனுப்பு; லட்சத்தை அள்ளு!

மருத்துவர்களைத் தரகர்களாக்கும் திட்டத்தை ஆரம்பித்து, அதற்கு விண்ணப்பங்களை அச்சடித்து, மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை அதிகாரபூர்வ மாக நடத்தியிருக்கிறது அம்பானி மருத்துவமனை. தங்களிடம் வரும் நோயாளிகளிடம், “அம்பானி மருத்துவ மனைக்குச் செல்லுங்கள்; அங்கே உங்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும்” என்று வெளி மருத்துவர்கள் ஆளை அனுப்ப வேண்டும். அப்படி அனுப்புபவர்களுக்கு, 40 நோயாளிகளை அனுப்பிவைத்தால் ரூ.1 லட்சம், 50 நோயாளிகளை அனுப்பிவைத்தால் ரூ.1.5 லட்சம், 75 நோயாளிகளை அனுப்பிவைத்தால் ரூ.2.5 லட்சம் என்று ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகாரபூர்வமாகவே லஞ்சம் கொடுத்திருக்கிறது அம்பானி மருத்துவமனை.

இந்த விவகாரம் வெளியாகி, வெளி மருத்துவர் களுக்கு அம்பானி மருத்துவமனை விநியோகித்த விண்ணப்பங்கள் வெளியே சிக்கிவிட்ட நிலையில், மகாராஷ்டிர மருத்துவக் கழகம் அம்பானி மருத்துவ மனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்ட நிலையில், தவறை ஒப்புக்கொண்டு தன்னுடைய விற்பனைத் துறையினர் ஆர்வ மிகுதியில் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்திவிட்டதாகவும், அதற்காக வருந்து வதாகவும், திட்டத்தை நிறுத்திவிடுவதாகவும் விளக்கம் அளித்திருக்கிறது அம்பானி மருத்துவமனை.

ஊரில் இல்லாததா?

இப்போது ஒரு கேள்வி எழலாம்: ஊரில் எங்கும் நடக்காத விஷயமா இது?

நியாயம்தான். தவறுகள் சம்பிரதாயங்களாகிவிடும் காலத்தில் இருக்கிறோம். நோயாளிக்குப் பரிந்துரைக்கும் மருந்துகளுக்காக மருந்து நிறுவனங்களிடமிருந்து ‘அன்பளிப்புகள்' பெறுவதில் தொடங்கி, பரிசோதனை நிலையங்களுக்கு நோயாளிகளை அனுப்புவதற்காக அந்த நிறுவனங்களிடமிருந்து ‘ஊக்கத்தொகை' பெறு வது வரை மருத்துவத் துறையில் லஞ்சமும் ஊழலும் சகஜமாகிவிட்டன என்பது உண்மைதான். எனினும், அம்பானி மருத்துவமனை விவகாரத்தில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. லஞ்சத்தையும் ஊழலை யும் அதிகாரபூர்வமாக்கும் முன்னுதாரணம் இது. ஒரு ஊரில் திருடர்கள் பெருகிவிட்டார்கள் என்பதாலேயே திருட்டைச் சட்டபூர்வமாக்கிவிட முடியாதல்லவா?

மருத்துவச் சேவையின் அடிப்படை அறம்

தமிழில் முதன்முதலில் மருத்துவத் துறை ஊழல்களை உள்ளிருந்தே அம்பலப்படுத்திய மருத்துவர் கே.ஆர்.சேதுராமன் தன்னுடைய ‘போஸ்ட்மார்ட்டம்' நூலின் முதல் அத்தியாயத்தில் குறிப்பிடும் விஷயம் இது.

“ ‘மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்வது தான் என்னுடைய பிரதான நோக்கமாக இருக்கும். அதன் மூலம் கிடைக்கும் பணமோ, இதர சலுகைகளோ எனக்கு இரண்டாம் பட்சம்தான்... என்னிடம் வரும் நோயாளிகளைத் தேவையற்ற பரிசோதனைகள் செய்யப் பரிந்துரைக்க மாட்டேன்; பரிசோதனைக் கூடங்களுக்குப் பரிந்துரைக்கவோ, சிறப்புச் சிகிச்சை நிபுணர்களிடம் உயர் சிகிச்சைக்கு அனுப்பவோ காசு வாங்க மாட்டேன். நோயாளிகளை என்னிடம் ஈர்த்து வர முகவர்கள் யாரையும் நியமிக்க மாட்டேன்...' என்ற உறுதிமொழியை ஏற்று கையெழுத்திட்ட பின்னரே மருத்துவப் படிப்பை முடிக்கும் ஒவ்வொருவரும் இந்திய மருத்துவக் கழகத்தால் மருத்துவர்களாக அங்கீகரிக்கப்படுகிறோம்... ஆனால், நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், எத்தனை மருத்துவர்கள் இந்த உறுதிமொழிகளைக் கடைப்பிடிக்கிறோம்?”

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் சேதுராமன் சக மருத்துவச் சமூகத்தை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியபோதுகூட இந்தியாவில் சூழல் இவ்வளவு மோசமானதாக இல்லை. இன்றைக்கோ இந்திய மருத்துவத் துறையின் ஊழல் சந்திசிரிக்கிறது. சர்வதேச அளவில் மதிக்கப்படும் மருத்துவ இதழான ‘பி.எம்.ஜெ.' தன்னுடைய சமீபத்திய தலையங்கத்தில் இந்திய மருத்துவத் துறையை நாறடித்திருக்கிறது. பொதுவாக, உலகெங்கும் மருத்துவத் துறையில் புரையோடியிருக்கும் ஊழலைப் பட்டியலிடும் ‘பி.எம்.ஜெ.', இந்தியாவில் நிலைமை படுமோசம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. “சுகாதாரத் துறை என்பது ஊழலுக்கு உற்ற உறைவிடமாகிவருகிறது. உலகம் முழுக்க, சுகாதாரத் துறையில் செலவிடும் தொகையில் 10% முதல் 25% வரை ஊழலுக்கே போகிறது. நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்தும் சுகாதாரத் திட்டங்களைப் பொறுத்தும் லஞ்சமும் ஊழலும் மாறுபடுகிறது. அமெரிக்காவில் 2011-ல் மட்டும் 8,200 கோடி டாலர்கள் முதல் 27,200 கோடி டாலர்கள் வரை போலிக் காப்பீட்டுத் திட்ட ரசீதுகளால் மோசடி செய்யப்பட்டுள்ளது. எந்த நாட்டிலுமே இந்தத் துறையில் ஊழல் இல்லாமல் இல்லை. மருத்துவர்கள் இந்த ஊழல்களைத் தடுக்கத் தவறிவிட்டனர். சிலர் அதற்கு உடந்தையாகவும் இருக்கின்றனர்... எல்லா வகை ஊழல்களிலும் திளைக்கும் இந்தியா சுகாதாரத் துறை ஊழலிலும் முக்கிய இடம் வகிக்கிறது” என்று தொடங்கி இந்திய மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லாட்டத்தைத் தோலுரித்துத் தொங்க விட்டிருக்கிறது ‘பி.எம்.ஜெ'.

தொழில் கை மாறுகிறது

மருத்துவத் துறை ஊழல் ஒவ்வொன்றும் எண்ணற்ற நோயாளிகளுடனான உயிருடனான விளையாட்டு என்பதைத் தாண்டி, மருத்துவர்களிடமிருந்தே மருத்துவத் தொழிலைப் பறிக்கும் பேரபாயம் ஆகிவிட்டது என் கின்றனர், இன்னமும் மனசாட்சியை விற்றுவிடாமல் நேர்மையைக் கட்டிக்காக்கும் மருத்துவர்கள். “எப் போது நோயாளிகளைப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கத் தரகுமுறை அறிமுகமானதோ அப்போதே எதற்கெடுத்தாலும் பரிசோதனைக்கு அனுப்பும் பழக்கம் மருத்துவர்களிடம் பரவ ஆரம்பித்துவிட்டது. இதன் மோசமான பின்விளைவு என்னவென்றால், இன்றைய தலைமுறை மருத்துவர்கள் பலருக்கு நோயாளிகளிடம் பேசி, அவர்கள் உடலைப் பரிசோதித்து, அவர்கள் நோயைக் கண்டறியும் ‘கிளினிக்கல் எக்ஸாம்' முறையே பரிச்சயம் இல்லாமல் போய்விட்டது. ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சலைக் கண்டறியக்கூட பரிசோதனை நிலையங்களை நாடும் ‘லெபாரட்ரிகல் எக்ஸாம்' உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. விளைவு, மருத்துவரைவிடவும் பரிசோதனைக் கருவி களும் பரிசோதனை நிலையங்களும் சக்தி படைத்தவை ஆகிவிடுகின்றன. மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான பிணைப்பு அறுந்துவிடும் நிலையில், பெரும் முதலீடுகளுடன் மருத்துவ மனைகளைத் தொடங்குபவர்கள் மருத்துவர்களை வெறும் பரிந்துரையாளர்களாகவும் தரகர்களாகவும் ஆக்கிவிடுகிறார்கள். வியாபாரிகளின் கையை நோக்கி மருத்துவம் சென்றுகொண்டிருக்கிறது” என்கிறார்கள் அவர்கள்.

வெறும் ஊழல் அல்ல; உயிர் விளையாட்டு

உலகெங்கும் ஆண்டுக்கு ரூ. 7.2 லட்சம் கோடி டாலர்கள் சுகாதாரத் துறைக்காகச் செலவிடப்படுவதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. இதில் 10%-25% தொகை ஊழலில் செல்கிறது என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை அல்ல. ஒரு சாமானியக் குடும்பம் தன் சகல சந்தோஷங்களையும் இழக்க இன்றைக்கெல்லாம் அந்த வீட்டுக்கு ஒரு நோயாளி போதும். அதுவும் புற்றுநோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் என்றால், உடலும் மனமும் துடிதுடிக்க அந்தக் குடும்பமே வலி சுமக்க வேண்டும். தம்முடைய பல நாள் உழைப்பின் மொத்த பலன்களையும் மருத்துவ மனைகளின் மேஜையில் கொண்டுவந்து கொடுத்து, அறியாமையைச் சுமந்து பரிதவித்து நிற்கும் இப்படிப் பட்ட அபலைகளிடம் நடத்தப்படும் ஊழல் கொடூரமான கொள்ளை.

இதுவரை சிக்காமல் ‘தொழில்' நடத்திய இந்தக் கொள்ளையர்கள் முதல்முறையாகப் பிடிபட்டிருக் கிறார்கள். மருத்துவம் ஒரு சேவை என்பதன் அடித் தளமாக எந்த அறம் இருக்கிறதோ, எந்த உறுதிமொழி அதை வலியுறுத்துகிறதோ அதன் மீதே தாக்குதல் நடத்தியிருக்கிறது அம்பானி மருத்துவமனை. இந்திய மருத்துவத் துறை ஊழல் புற்றால் சீழ் பிடிக்க ஆரம்பிப்பதன் அறிகுறி இது. இந்திய மருத்துவக் கழகம் இதை வழக்கம்போல வேடிக்கை பார்க்க லாகாது; நாமும்தான்!

- சமஸ் @ தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக