புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடந்திருப்பது காங்கிரஸ் அழித்தொழிப்பா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:25 pm


பல காரணங்களால் இந்தத் தேர்தல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் காங்கிரஸைப் பொறுத்தவரை இது வரலாறு காணாத தோல்வி. சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன் 1984 பொதுத் தேர்தலில் 400 சொச்சம் இடங்களை வென்ற காங்கிரஸ் இன்று நாற்பது சொச்சம் என்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சி தேர்தல் தொடங்கும் முன்னரே தனது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது என்பது அதன் பல முக்கியத் தலைவர்கள் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டதிலேயே தெரிந்தது. சோனியா, ராகுல், கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா, சசி தரூர் போன்ற ஒரு சில தலைவர்களைத் தவிர்த்து பிற தலைவர்கள் பெரும் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.

நெருக்கடிநிலைக்குப் பிறகு வந்த 1977 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி பெரும் தோல்வியைத் தழுவியபோதிலும் தென்னிந்திய மாநிலங்கள் கைகொடுத்ததன் காரணமாக சுமார் 150 இடங்களைப் பெற முடிந்தது. இந்த முறை கேரளாவைத் தவிர்த்து, காங் கிரஸின் கோட்டையாகக் கருதப்பட்ட அசாம் உட்பட எந்த மாநிலமும் ‘கை’கொடுக்கவில்லை. ஆக இப்போது நிகழ்ந் திருப்பது படுதோல்வி என்பதற்கும் மேலாக ‘காங்கிரஸ் அழித்தொழிப்பு’என்றே சொல்ல வேண்டும்.

இது மோடி நிகழ்த்திய சூரசம்ஹாரமாக பா.ஜ.க-வினர் சொல்லக்கூடும். ஆனால், இதுவொரு சுய அழித்தொழிப்பு. இதற்கான ‘முழுப் பெருமை’யும் காங்கிரஸை, குறிப்பாக அதன் முதல் குடும்பத்தையே சாரும்.

ஆ. ராசா வெறும் கருவிதான்

மன்மோகன் சிங் எதிர்பார்ப்பதுபோல் வரலாறு நிச்சயமாக அவரைக் கனிவாக மதிப்பிடாது. ஆனால், சோனியா மற்றும் ராகுலை வரலாறு இன்னும் அதிகக் கடுமையுடன் மதிப்பிடும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், உண்மையாக ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருந்தது காங்கிரஸ் கட்சியின் தலைவரும் துணைத் தலைவருமே.

தனது அமைச்சரவையில் நடந்த எல்லா ஊழல்களையும் பார்த்துக்கொண்டு சும்மா இருந்ததுடன் அவற்றை மூடிமறைக்கவும், அவற்றின் மீது நடவடிக்கைகள் வரமால் பார்த்துக்கொள்ளவும் முயன்றார் சிங். ஊழல்களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை அவரது எதிரிகள் கூட சந்தேகிக்க மாட்டார்கள். ஆனால், சோனியா மற்றும் அவரது குடும்பத்தினரின் கதை அப்படிப்பட்டது அல்ல. பிரதமரின் வழிகாட்டுதலை மீறி ஆ. ராசா போன்ற ஒரு ஜூனியர் அமைச்சர் (காபினட் அமைச்சராக இருந்தாலும்) இவ்வளவு பெரிய முறைகேட்டில், ஊழலில் ஈடுபட முடியும் என்பது சாத்தியமற்றது.

ராசாவால் பிரதமரை மீற முடிந்தது என்றால் பிரதமரை விட சக்தி வாய்ந்த ஒருவரின் ஆதரவு அவருக்கு இருந்திருக்கிறது என்பதுதான் காரணம். ஐ.மு.கூ. ஆட்சியில் பிரதமரை விட சக்திவாய்ந்தவர் யாரென்பது சொல்லித்தெரிய வேண்டிய விஷயமல்ல. அவர் ராசாவுக்கு ஆதரவாக இருந்ததற்கான காரணமும் சொல்லித் தெரிய வேண்டியதல்ல.

காங்கிரஸுக்கு நன்றி சொல்லுங்கள் மோடி

மோடி ஒரு நல்ல மேடைப்பேச்சாளர், பல பெருநிறுவனங்களின் அமோக ஆதரவைப் பெற்றவர், விளம்பர உத்தியில் நிபுணத்துவம் பெற்றவர். ஆனாலும், அவரது வெற்றிக்கு காரணம் காங்கிரஸ்தான். இவ்வளவு ‘மகத்துவங்கள்’ பொருந்திய மோடி 2009-ல் பா.ஜ.க-வின் வேட்பாளராக இருந்திருந்தாலும் முடிவுகளில் வித்தியாசம் அதிகம் இருந்திருக்காது.

காங்கிரஸ் மீது மக்கள் பெரும் கோபம் கொள்வதற்கான காரணங்கள் இரண்டுதான்: 1. மலைக்க வைக்கும் ஊழல்கள். 2. கடுமையான பணவீக்கமும் விலைவாசி உயர்வும். பணவீக்கத்துக்கான காரணங்கள் பல. திறன் மிகுந்த அரசாங்கத்தால் கூட சில சமயம் அதை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், ஊழல் விவகாரம் அத்தகையது அல்ல. இன்று எந்தவொரு வர்த்தகத்தையும் விட அதிக லாபம் தரும் வர்த்தகமாக அரசியல் பலராலும் பார்க்கப் படுகிறது என்றால் அந்நிலையை உருவாக்கி யதில் காங்கிஸிரசின் பங்கு தலையாயது.

குஜராத் படுகொலைகளை நினைவுபடுத்தியே சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்றவர்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற காங்கிரஸின் திட்டத்தில் மண் விழுந்திருக்கிறது. அத்வானி, மோடி, கிரிராஜ் சிங், தொகாடியா ஆகியோருக்கிடையே சித்தாந்த ரீதியாக எந்த வேறுபாடும் கிடையாது. மோடி மாறிவிட்டார் என்று கருதுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால், ராமர் கோயிலைக் காட்டி ஆட்சிக்கு வருவது சாத்தியமல்ல என்பதை மோடி உணர்ந்திருந்ததன் விளைவாகவே உத்தரப் பிரதேசத்தில் சில இடங்களைத் தவிர்த்து வேறு எங்குமே மோடியும் அமித் ஷாவும் இந்துத்துவா துருப்புச்சீட்டைப் பயன்படுத்தவேயில்லை.

பொருளாதார வளர்ச்சி மற்றும் ஊழலற்ற நல்லாட்சி என்ற கோஷங்களை மட்டுமே தான் செல்லுமிடங்களிலெல்லாம் மோடி வைத்தார். பொருளாதார மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கான மனிதராக அவர் தன்னைப் பற்றி வெற்றிகரமாகக் கட்டியமைத்த பிம்பம் அவருக்கு இப்போது பெரிதும் உதவியிருக்கிறது. சுவரின்றி சித்திரம் வரைய முடியாது. ஊழல் மிகுந்த, மேட்டிமைத்தனம் மிகுந்த காங்கிரஸ் ஆட்சிதான் அந்த சுவர். காங்கிரஸுக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறார் மோடி.

க.திருநாவுக்கரசு, சமூக-இலக்கிய விமர்சகர்


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 18, 2014 9:19 pm

மிக நல்ல கட்டுரை.நடந்திருப்பது காங்கிரஸ் அழித்தொழிப்பா? 3838410834நடந்திருப்பது காங்கிரஸ் அழித்தொழிப்பா? 103459460

எழுதிய க.தி.அய்யா சில காலம் ம.தி.மு.க.வின் சங்கொலிப் பத்திரிகை ஆசிரியராக இருந்து பின்னர் மு.க.விடம் அடைக்கலமானவர்.அதனால்தான் மோடியை ஆங்காங்கே ஊசி செருகும் விமர்சனம் செய்துள்ளார்.
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக