ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோ... நோ... மயிலக்கா!

2 posters

Go down

நோ... நோ... மயிலக்கா! Empty நோ... நோ... மயிலக்கா!

Post by சிவா Sun May 18, 2014 8:04 pm


ஒரு காட்டில் உயரமான மரத்தின் கிளைகள் ஒன்றில் கூடுகட்டி, புறா ஒன்று தன் குஞ்சுகளோடு வாழ்ந்து வந்தது.

ஒருநாள்-

அந்த வழியாகச் சுற்றி அலைந்துக் கொண்டிருந்த குள்ளநரி ஒன்று, மரத்தின் உச்சியில் புறா தன் குஞ்சுகளோடு இருப்பதைக் கவனித்தது.

புறாக்களின் குஞ்சுகளை ருசி பார்க்கவேண்டும் என்ற ஆசை குள்ளநரிக்கு உண்டானது. அதன் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே குள்ளநரியின் மூளையில் ஒரு தந்திரம் உருவானது.

மரத்தின் அடியில் வந்து நின்ற குள்ளநரி, ""ஏ! புறாவே! மரியாதையாக உன் குஞ்சு களில் ஒன்றை எடுத்துக் கீழே போட்டு விடு. இல்லையென்றால் நானே மேலே ஏறிவந்து எல்லாக் குஞ்சுகளையும் தின்றுவிடுவேன்,'' என்று மிரட்டியது குள்ளநரி.

தாய்ப்புறா, குள்ளநரியின் மிரட்டலுக்குப் பயந்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்தது.

""ஐயோ! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்'' என்று புறா கதறியது. அதன் கதறல் காடெங்கும் எதிரொலித்தது. ஆனால், புறாவின் கதறலை எந்தப் பறவை யும் தங்களது காதில் போட்டுக் கொள்ள வில்லை.

புறா பயப்படுவதைக் கண்ட குள்ளநரி, புறாவை மேலும் பய முறுத்தத் தொடங்கியது.

""ஏ! புறாவே இன்னும் ஒரு நிமிடத்தில் ஒரு குஞ்சை என்னிடம் நீ ஒப்படைக்கவில்லை என்றால், நானே வந்து உன்னையும் உன் குஞ்சுகளையும் தின்றுவிடுவேன். என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. வீணாக எனக்கு எரிச்சல் மூட்டாதே,'' என்று மிரட்டியது குள்ளநரி.

அப்போது...!

அந்த மரத்தை நோக்கிக் காகம் ஒன்று பறந்து வந்து, புறாவின் அருகில் உட்கார்ந் தது. காகத்திடம் தனது நிலைமையை விளக்கியது புறா.

புறாவின் பரிதாப நிலைமையைக் கேட்டறிந்த காகம், ""புறாவே! உன்னுடைய நிலைமை எனக்குப் புரிகிறது. ஆனால், குள்ளநரியோ வலிமையானது; அது, தான் நினைத்ததை நடத்திக் காட்டிவிடும். எல்லாக் குஞ்சுகளையும் இழப்பதற்குப் பதிலாக, ஒரு குஞ்சை அதனிடம் போட்டு விடு,'' என்று வஞ்சகமான அறிவுரை கூறியது.

வேறு வழியில்லாத நிலையில் தாய்ப் புறா, கதறியபடியே ஒரு குஞ்சை எடுத்துக் கீழே போட்டுவிட்டது. குள்ளநரி அந்தக் குஞ்சைக் கவ்விக் கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் ஓடியது.

குஞ்சைப் பறிகொடுத்த தாய்ப்புறா ஓலமிட்டு அழுதது. அங்குமிங்கும் தாவித் தாவிப் பறந்து அழுது புலம்பிக்கொண்டு இருந்தது.

அப்போது...!

சற்று தொலைவில் மேய்ந்து கொண்டிருந்த அழகான காட்டு மயில் ஒன்று, புறாவின் வேதனைக் குரலைக் கேட்டு, அங்கு வந்தது.

""புறாவே! எதற்காக நீ அழுது கொண்டிருக்கிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று மயில் கேட்டது.

புறா, தனது சோகக் கதையை மயிலிடம் கூறியது.

""புறாவே! உலகம் புரியாதவளாக நீ இருக்கிறாயே... குள்ளநரி மரம் ஏறியதாக சரித்திரம் உண்டா? நீ முட்டாள் போல நடந்து கொண்டு, உன் அருமைக் குழந்தையை இழந்து விட்டாயே... உனது ஏமாளித்தனம் தெரிந்துதான் காகமும் தனது வஞ்சக புத்தியைக் காட்டியிருக்கிறது. உன் மீது அதற்குள்ள பொறாமையால், உன்னைப் பழி தீர்த்துக்கொண்டது,'' என்று கூறியது மயில்.

""மயிலக்கா! நாளையும் அந்தக் குள்ள நரி வந்தால் நான் என்ன செய்வது?'' என்று கேட்டது புறா.

""பயப்படாதே! குள்ளநரியினால் மரத்தின் மீது ஏறி வந்து உன்னுடைய குஞ்சுகளைத் தின்ன முடியாது!'' எனவே, நீ தைரியமாகக் கூற வேண்டியது இதுதான்!

""குள்ள நரியே! என் குஞ்சுகளை நான் கீழே போட மாட்டேன். முடிந்தால், நீ மரத்தின் மீது ஏறிவந்து குஞ்சுகளை எடுத்துச் செல்! என்று கூறிவிடு,'' என்று யோசனை கூறியது மயில்.

மறுநாள்...!

குள்ளநரி வந்து மரத்தின் கீழே நின்றது. மரத்தின் உச்சியில் இருந்த புறாவைப் பார்த்து, கம்பீரமாக, ""புறாவே! நேற்றுப் போலவே, இன்றும் ஒரு குஞ்சை எடுத்துக் கீழே போட்டுவிடு. இல்லையெனில், நானே மரத்தின் மீது ஏறி வந்துவிடுவேன்,'' என்று மிரட்டியது.

இதைக் கேட்டதும் புறா, மிகுந்த தைரியத்தோடு, ""உன்னால் முடிந்தால் மரத்தின் மீது ஏறி வந்து, என் குஞ்சுகளைப் பிடித்துக் கொள்,'' என்று குள்ள நரியைப் பார்த்துக் கூறியது.

தன்னுடைய தந்திரம் பலிக்காததை அறிந்த குள்ளநரி, புறாவைப் பார்த்து, ""அழகான புறாவே! உனக்கு இந்த ரகசியத்தைச் சொன்னது யார்?'' என்று கேட்டது.

குள்ளநரியினால் இனி தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதைப் புரிந்துக் கொண்ட புறா, சந்தோஷ மிகுதியால் கொஞ்சமும் யோசிக்காமல், ""அதோ நிற்கிறதே, அந்த மயில்தான் சொல்லிக் கொடுத்தது!'' என்று கூறியது.

உடேன குள்ளநரி, மயிலைப் பழி தீர்த்துக் கொள்ளும் நோக்கில் அதன் அருகே சென்று, ""அழகான மயிலே! புறாவுக்கு இப்படியொரு திட்டத்தை நீ கூறியுள்ளாய், உன்னுடைய அறிவுக் கூர்மையை நான் மிகவும் பாராட்டுகிறேன்,'' என்று பேச்சை ஆரம்பித்தது.

அப்போது...!

திடீரென்று சுழற்காற்று வீசியது. காற்றில் புழுதி பறந்தது. புழுதி தன் கண்களில் விழாமல் இருக்க, குள்ளநரி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது. சற்று நேரத்தில் காற்று நின்று, புழுதியும் ஓய்ந்து விட்டது.

அப்போது மயிலின் அருகே சென்ற குள்ளநரி, ""அழகான மயிலே! இதுபோல, காற்றில் புழுதி வீசும் வேளையில், நீ என்ன செய்வாய்?'' என்று கேட்டது.

""என் முகத்தை இறக்கைகளின் அடியில் புதைத்துக் கொள்வேன்,'' என்று மயில் கூறியது.

""அப்படியா? அது எப்படி முடியும்? உன் இறக்கைகளுக்கும் முகத்திற்கும் இடையில் இடைவெளி அதிகம் இருக்கிறதே,'' என்று சொல்லி ஆச்சரியத்துடன் கூறியது நரி.

""செய்து காட்டட்டுமா? என்ற கூறியவாறே, மயில் அவ்வாறு செய்யத் தொடங்கியது. மயில் தனது முகத்தை இறக்கைகளுக்குள் புதைக்கும் போது, அதனைக் கவ்விப் பிடிக்கக் குள்ளநரி சமயம் பார்த்து நின்றுகொண்டிருந்தது.

அப்போது-

அங்கே உருவாகப் போகும் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த புறா, ""மயிலக்கா! அப்படிச் செய்யாதீங்க. நரி உங்களைக் கவ்விப் பிடிக்கத் திட்டம் போட்டுள்ளது... அதோ அங்கே காட்டு நாய்கள் ஓடி வருவதைப் பாருங்கள்,'' என்று கத்தியது.

காட்டு நாய்கள் என்ற குரல் காதில் விழுந்த அடுத்த நிமிடம்... தப்பித்தோம், பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓட்டம் எடுத்தது குள்ளநரி.

தனது உயிரைக் காப்பாற்றியும், தனது முட்டாள் தனத்தைத் தனக்கும் உணர்த்திய புறாவுக்கு நன்றி சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டது மயில்.

***
சிறுவர் மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நோ... நோ... மயிலக்கா! Empty Re: நோ... நோ... மயிலக்கா!

Post by விமந்தனி Sun May 18, 2014 11:35 pm

கதை நோ... நோ... மயிலக்கா! 3838410834 


நோ... நோ... மயிலக்கா! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநோ... நோ... மயிலக்கா! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நோ... நோ... மயிலக்கா! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum