ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணி மகாராணி - ஜெயலலிதா

+3
விஸ்வாஜீ
T.N.Balasubramanian
சிவா
7 posters

Go down

ராணி மகாராணி - ஜெயலலிதா Empty ராணி மகாராணி - ஜெயலலிதா

Post by சிவா Sun May 18, 2014 1:34 am


நம்ப முடிகிறதா? நாட்டின் மூன்றாவது தனிப்பெரும் கட்சி அ.தி.மு.க. “தமிழ்நாடு ஒருவேளை உத்தரப் பிரதேசத்தைப் போல பெரிய மாநிலமாக 80 தொகுதிகளுடன் இருந்திருந்தால், நாட்டின் பிரதான எதிர்க் கட்சியே இன்றைக்கு அ.தி.மு.க-தான்” என்கிறார்கள் கட்சிக்காரர்கள். உண்மை. இது வரலாறு. எப்போதும் தமிழ்நாட்டு அரசியல் போக்கை முன்னெடுக்கும் முதல் அடியைத் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி எடுத்துவைப்பார் என்று சொல்லப்படுவது உண்டு. இந்த முறை சந்தேகத்துக்கே இடம் இல்லாமல் முதல் அடியை எடுத்துவைத்தார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அவர் முழங்கத் தொடங்கிய ‘நாற்பதும் நமதே' கோஷம் தமிழக அரசியல் வரலாற்றில், மக்களவைத் தேர்தலைக் கட்சிகள் எதிர்கொள்ளும் வியூகத்தையே உடைத்தெறிந்தது.

இதுவரை மக்களவைத் தேர்தல் என்றால், கூட்டணியோடு எதிர்கொள்வதை மட்டுமே வியூகமாகக் கொண்டிருந்த எல்லாக் கட்சிகளையும் தனித்துப் போட்டியிடுவதைப் பற்றியோ, சின்ன அளவிலான கூட்டணியோடு போட்டியிடுவதைப் பற்றியோ அவருடைய முடிவு யோசிக்கவைத்தது. தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி உருவாக அடித்தளம் அமைத்தவர் அவர்தான். இறுதிக் கட்டத்தில் இடதுசாரிகளை அவர் கழற்றிவிட்டுவிட்டு முழுக்கத் தனித்து இறங்கியபோது, அவருடைய முகாமில் இருப்பவர்களே கொஞ்சம் மிரண்டனர். கருத்துக் கணிப்புகள் பாதிக்குப் பாதியாக வெற்றி பிரியும் என்று கூறின. சிலர் தி.மு.க. மீண்டும் எழுச்சிபெறும் என்றெல்லாம் கூறினார்கள். எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி, தமிழகத்தின் மிகப் பெரிய கட்சி எது என்பதை நிரூபித்திருக்கிறார் ஜெயலலிதா.

இந்தத் தேர்தல் ஒருவகையில் ஜெயலலிதாவுக்கு ஒரே கல்லில் மூன்று மாங்காய்களைத் தந்திருக்கும் தேர்தல்.

1. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளைத் தாண்டி தேசியக் கட்சிகளால் எந்த அலையிலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அகில இந்திய அளவில் நிரூபித்திருக்கிறார்.

2. தன்னுடைய பரம வைரியான தி.மு.க-வைக் கூண்டோடு காலி செய்திருக்கிறார்.

3. தன்னுடைய புதிய எதிரியான தே.மு.தி.க-வையும் முற்றிலுமாக மூழ்கடித்திருக்கிறார். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள உண்மையான பலத்தையும் பலவீனங்களையும் அவர்களுக்கே காட்டியிருக்கிறார்!

சவால்கள்

மின்வெட்டும், தண்ணீர் பிரச்சினையும். இப்போதே இந்தப் பிரச்சினைகள் தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தாலும், மூன்றாண்டுகளைத் தொடும் நிலையிலும், மக்கள் ஜெயலலிதாவுக்கு இன்னும் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். மாநிலத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகள் மெச்சிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இவையெல்லாம் சீரமைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள். சீரமைக்கப்படாவிட்டால், சட்டப்பேரவைத் தேர்தலில் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

பெரிய கேள்வி

தமிழகத்தின் கடந்த கால வளர்ச்சிக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, மத்திய ஆட்சியில் தொடர்ந்து பங்கேற்று, தமிழகத்துக்கு உரிய பங்கைப் பெற்றுவந்தது. பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க. கை கோப்பது தமிழகத்துக்கான உரிய திட்டங்களையும் நிதி ஒதுக்கீட்டையும் பெற உதவும். அதேசமயம், அவர் விரும்பும் மதச்சார்பற்ற பிம்பம் சிதையும். அம்மா என்ன செய்வார்?

இவை நடக்கலாம்

தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள், மின் தட்டுப்பாட்டைப் போக்க மின் உற்பத்தித் திட்டங்கள், மேலும் சில வெகுஜனத் திட்டங்கள்.

இவையும் நடக்கலாம்


மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு. தி.மு.க-வுக்கு எதிரான வழக்குகளில் முட்டுக்கட்டைகளை நீக்க மத்திய அரசுக்கு அழுத்தம்.

இது நடக்குமா?

மீண்டும் மழைநீர் சேகரிப்புத் திட்டம்.

அலைவீச்சு

மாநிலம் முழுவதும் ஒரே அலை. இலையின் அலை. அம்மா அலை. திமுகவின் குடும்ப வாரிசு அரசியலையும் ஊழல்களையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆட்சியின் மீது பெரிய புகார்கள் இல்லாததும் முந்தைய ஆட்சிகளைப் போல ஊழல் குற்றச்சாட்டுகள் எழாமல் பார்த்துக்கொண்டதும் கட்சி ஓட்டுக்குச் சேதாரம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டது என்றால், அம்மா வெகுஜனத் திட்டங்கள் ஆட்சிக்கு ஆதரவான மனநிலைக்கு மேலும் உதவின.

எதிர்ப் புயல்

அ.தி.மு.க. இந்தத் தேர்தலில் தோற்ற இடங்கள் உண்மையில் சாதியும் மதமும் ஆக்கிரமித்திருக்கும் இடங்கள். ஒரு வகையில் தமிழகம் எதிர் கொள்ளும் புதிய அபாயம் இது.

நண்பர்கள்

தேசிய அளவில் எதிர்க் கட்சிகளில் காங்கிரஸுக்கு அடுத்து பெரிய கட்சியாக அ.தி.மு.க. உருவெடுத்திருப்பதால், டெல்லியில் ஜெயலலிதா செல்வாக்கு உயரும். எதிர்க் கட்சிகள் முகாமில் அவர் சாய்வதைத் தடுக்க பா.ஜ.க. சுமுகமான உறவையே மேற்கொள்ளும். நண்பர் மோடியின் நட்பு நெருக்கடியான தருணங்களில் உதவக் கூடும்.

எதிரிகள்

அ.தி.மு.க-வுக்கு வெளியே உள்ள ஜெயலலிதாவின் எதிரிகள் இப்போது பலவீனப்பட்டுவிட்டார்கள். கட்சிக்குள் அனேகமாக அப்படி யாரும் இல்லை. அப்படியென்றால், ஜெயலலிதாவுக்கு யார் எதிரியாகக் கூடும்? ஆம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஜெயலலிதாவுக்கு அவரேதான் எதிரியாகக் கூடும். அவர் எதிர்கொள்ளும் வழக்கு அடுத்து சமாளித்தாக வேண்டிய இன்னொரு எதிரி.

தி இந்து
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராணி மகாராணி - ஜெயலலிதா Empty Re: ராணி மகாராணி - ஜெயலலிதா

Post by T.N.Balasubramanian Sun May 18, 2014 2:17 am

கூட்டணி அமைக்காது , தேர்தலில் போட்டி இட்டால்தான் , கட்சிகளின் பலமும் , வாக்காளர்களின் எண்ணமும் வெளிப்படும் .
கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் , தன்னால்தான் வெற்றி பெற்றதாக ஒவ்வொரு கட்சிகளும் நினைக்கும் சாத்ய கூறுகள் அதிகம் . மாயை உண்டாக்கி பேதமையை வெளிப்படுத்தும் .

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராணி மகாராணி - ஜெயலலிதா Empty Re: ராணி மகாராணி - ஜெயலலிதா

Post by விஸ்வாஜீ Sun May 18, 2014 8:51 am

திமுக மீதான கோபம், தேமுதிக நடத்திய பேரம் மற்றும் எந்த
கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமை இல்லாதது இவைதான்
அதிமுகவின் வெற்றி என்பது எனது எண்ணம்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ராணி மகாராணி - ஜெயலலிதா Empty Re: ராணி மகாராணி - ஜெயலலிதா

Post by krishnaamma Sun May 18, 2014 7:52 pm

//எதிர்ப் புயல்

அ.தி.மு.க. இந்தத் தேர்தலில் தோற்ற இடங்கள் உண்மையில் சாதியும் மதமும் ஆக்கிரமித்திருக்கும் இடங்கள். ஒரு வகையில் தமிழகம் எதிர் கொள்ளும் புதிய அபாயம் இது.//


தோற்றதே 2 இடங்கள் தானே? அதற்கு ஏன் இப்படி சொல்லணும்? அநியாயம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ராணி மகாராணி - ஜெயலலிதா Empty Re: ராணி மகாராணி - ஜெயலலிதா

Post by sureshnkp Mon May 19, 2014 12:05 am

ADMK won panna mikkiya karanam 200 rs .....
sureshnkp
sureshnkp
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 05/11/2013

Back to top Go down

ராணி மகாராணி - ஜெயலலிதா Empty Re: ராணி மகாராணி - ஜெயலலிதா

Post by ரா.ரா3275 Mon May 19, 2014 12:27 am

vishwajee wrote:[link="/t110338-topic#1064475"]திமுக மீதான கோபம், தேமுதிக நடத்திய பேரம் மற்றும் எந்த
கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமை இல்லாதது இவைதான்
அதிமுகவின் வெற்றி என்பது எனது எண்ணம்.

என் எண்ணமும் இதுவே...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ராணி மகாராணி - ஜெயலலிதா Empty Re: ராணி மகாராணி - ஜெயலலிதா

Post by ராஜா Mon May 19, 2014 11:29 am

எதிர்ப் புயல்
அ.தி.மு.க. இந்தத் தேர்தலில் தோற்ற இடங்கள் உண்மையில் சாதியும் மதமும் ஆக்கிரமித்திருக்கும் இடங்கள். ஒரு வகையில் தமிழகம் எதிர் கொள்ளும் புதிய அபாயம் இது.

இந்து , தினமலர் பத்திரிகைகளின் குணம் , மனம் அனைவருக்கும் தெரிந்ததே, இந்த நா**ள் எவ்வளவு அழகாக தமிழ் மக்களின் மனதில் விஷத்தை விதைக்கிறார்கள் பாருங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணி மகாராணி - ஜெயலலிதா Empty Re: ராணி மகாராணி - ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum