புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:20

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
86 Posts - 67%
heezulia
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
4 Posts - 3%
viyasan
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
263 Posts - 44%
heezulia
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
222 Posts - 37%
mohamed nizamudeen
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
18 Posts - 3%
prajai
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
13 Posts - 2%
Rathinavelu
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_lcapகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_voting_barகாந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 18 May 2014 - 1:43


நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வியை தொடர்ந்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்களது கட்சி பதவியை ராஜினாமா செய்ய முன்வரலாம் என செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், அதனை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 206 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு தாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தேர்தல் முடிவு வெளியான அன்று தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, "மக்கள் தீர்ப்பு எங்களுக்கு எதிராக உள்ளது...காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

ராகுல் காந்தி கூறுகையில், " காங்கிரஸ் மோசமாக தோல்வியடைந்துள்ளது. இதுகுறித்து நாங்கள் நிறைய சிந்திக்க வேண்டியதுள்ளது. கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் தோல்விக்கு நானும் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்" என்றார்.

இந்நிலையில் வருகிற திங்கட்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தாங்கள் கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவுக்கு இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்திருப்பதுதான், ராஜினாமா செய்வதாக அறிவிக்கக்கூடிய நிலைக்கு சோனியாவையும், ராகுலையும் தள்ளியிருப்பதாகவும், இருப்பினும் இந்த ராஜினாமா அறிவிப்பு ஒரு சம்பிரதாய அறிவிப்பாக மட்டுமே இருக்கும் என்றும், கட்சித் தலைவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக பேசும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், "ஒருவேளை சோனியா மற்றும் ராகுலின் ராஜினாமாவை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், கட்சியை எதிர்காலத்தில் தோளில் சுமந்து, வெற்றி தேடித்தரக்கூடிய வல்லமை மிக்க தலைவர் காங்கிரஸில் வேறு யார் உள்ளார்? மறுபடியும் நாங்கள் பிரியங்காவிடம்தான் போய் நிற்க வேண்டும். ஆனால் அவருக்கு எந்த அளவுக்கு தீவிர அரசியலில் ஆர்வம் உள்ளது என்று தெரியவில்லை. மேலும் கட்சியை தலைமையேற்று நடத்தி செல்லவும் அவர் தயாராக உள்ளாரா என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில் ராகுல் காந்தி இந்த தோல்விக்காக சோர்ந்து போகக்கூடாது. கடந்த 1999 ஆம் ஆண்டும் இதுபோன்றுதான் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. ஆனால் அந்த விளிம்பிலிருந்தும் கட்சியை வளர்த்து 10 ஆண்டு காலம் ஆட்சி செய்யும் அளவுக்கு தனது தாயார் சோனியா கொண்டுவந்தார் என்பதை மனதில் கொண்டு, தொடர்ந்து கடுமையாக உழைத்தால், இப்போது இல்லையென்றாலும், அடுத்த முறை அவர் தன்மீது ஏற்பட்ட களங்கத்தை போக்கி நாட்டின் உயரிய பதவியிலும் அமர முடியும்" என்று கூறுகின்றனர்.

இதனிடையே நேரு - காந்தி குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமான தலைவர்களில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த மணி சங்கர் அய்யரோ, " இந்த சூழ்நிலையில் காந்தி குடும்பத்தை கைவிடுவது என்பது காங்கிரஸ் செய்யும் மிக முட்டாள்தனமான காரியங்களில் ஒன்றாக அமையும்" என்று கூறியுள்ளார்.

ஆனால் காந்தி குடும்பத்தின் பரம்பரை பிடியிலிருந்து காங்கிரஸ் விடுபட வேண்டும் என்றும், அதற்கு இதுவே தக்க தருணம் என்றும் கூறும் டெல்லி பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியரும், அரசியல் ஆய்வாளருமான துபே, "காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்தி, ஆரோக்கியமான ஜனநாயக அரசியல் தலைமையை ஏற்படுத்திக்கொண்டு, ஒரு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்க இதுவே தக்க தருணம். அப்படி செய்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல.. நாட்டிற்கும் நல்லது. ஏனெனில் இந்த ஒரு தேர்தல் தோல்விக்காவும், குடும்ப அரசியல் மீதான வெறுப்புக்காகவும் காங்கிரஸை ஒதுக்கி தள்ளிவிட முடியாது.

அந்த கட்சிதான் நாடு முழுவதும் கிராம அளவில் கட்சி வேர்களை கொண்ட, ஒரு முறையான கட்டமைப்பை கொண்ட, மக்கள் அறிந்த இயக்கம். இன்று மோடி தனிப்பெரும்பான்மை பெற்ற பலத்துடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில், அறுதிப்பெரும்பான்மை இருக்கிற தைரியத்தில் இந்த நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமான காரியங்களில் ஈடுபட்டால், அதனை வலுவாக எதிர்த்து போராடவும், தட்டிகேட்கவும், மக்கள் வெறுக்கும் காரியங்களில் ஈடுபட்டால், தேசிய அளவில் அடுத்த மாற்று கட்சியாக காங்கிரஸ்தான் முதலிடத்தில் உள்ளது. எனவே அக்கட்சி தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்கிறார்.

ஆனால் ராஜீவ் காந்தி மறைவுக்கு பின்னர் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது. அதாவது நேரு -காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து காங்கிரஸ் விடுபட்டு, சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையில், பல மாநிலங்களில் காங்கிரஸ் கரைந்துகொண்டிருந்தது. இறுதியில் "சோனியாவே சரணம்...!" என காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் காந்தி குடும்பத்தின் முன் தண்டனிட்டதை பார்த்தால், காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து காங்கிரஸ் அவ்வளவு சுலபத்தில் விடுபடும் எனத் தெரியவில்லை!

- பா. முகிலன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 18 May 2014 - 2:28

காந்தி குடும்பம் .................?
மகாத்மா காந்தி அதாவது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி !
அவர் மறைவுக்கு பிறகு காங்கிரசில் / அரசியலில் காந்தி சந்ததியினர் யாரும் இல்லை
அதன் பிறகு நேரு சந்ததியினர் தான்
அதாவது இந்திரா பிரியதர்ஷினி -பிரோஜ் கான் (தி --பின்னால் சேர்க்கப்பட்டது--அரசியலுக்குகாக --அறிந்தவர் சிலர் அறியாதவர் பலர் ) --இந்திரா கான் தி ,
இந்திரா காந்தி ஆனார் .
ராஜீவ் கான் தி பிறந்தார் .
சஞ்சய் (!) பிறந்தார்
சோனியா ---சோனியா காந்தி யக்கப்பட்டார்
அவர்கள் வாரிசு
பிரியங்கா
ராகுல்

இவர்கள் காந்தி காந்தி என்று , மகாத்மாவை வியாபார பொருளாக /பெயராக தாங்கள் உயிர் வாழ / அரசியலில் பரிமளிக்க , உபயோகப்படுத்தி வந்துள்ளனர் .
தமிழ்நாட்டில் காமராஜர் பெயரை சொல்லி வாழும் காங்கரஸ் போல்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 18 May 2014 - 16:31

கொஞ்சம் மாற்றி யோசித்துப் பார்த்தால்...
ராகுலுக்கு மனமாற்றம் ஏற்பட்டு காங்கிரசைப் புனிதப் படுத்தும் வேளையில் ஈடுபட்டால்
மீண்டும் முன்போல் இல்லாமல் புதிய மனதுடன் நேர்மையான இயக்கமாக உருவெடுக்கவும் வாய்ப்பிருக்கலாமே...

அரசியலில் எதுவும் நடக்கலாம்...

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun 18 May 2014 - 18:02

முதலில் பா.ஜ.பா. என்ன சாதிக்கவிருக்கிறார்கள் என்று தெரிந்த பின்னர் தான் காங்கிரசின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon 19 May 2014 - 9:07

காங்கிரஸ் நேர்மையான கட்சியா...? இல்லவே இல்லை...! நான் சிறு வயது முதல் அந்த கட்சியின் செயல்பாடுகளை கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் பாராளுமன்ற தேர்தல் நாள் அன்று வாக்காளர்களுக்கு சாப்பாடு போட்டு அவர்களின் வாக்குகளை பெற்ற கட்சி தான் காங்கிரஸ். மேலும் வாக்காளர்கள் சாப்பிட்டவுடன் அவர்களையெல்லாம் வாகனங்களில் ஏற்றி சென்று வாக்குச்சாவடிக்கு அருகில் விட்டு வாக்குகளை பெற்ற கயமை உணர்வு கொண்ட கட்சி காங்கிரஸ்.

அப்போதெல்லாம் மக்கள் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பழமொழிக்கேற்ப வாக்களித்தனர். ஆனால் இப்போதுள்ள நிலைமையே வேறு. நேரு குடும்பத்தினர் ஏன் நேரு பெயரை பயன்படுத்த தயங்குகிறார்கள். காந்தி பெயரை வைத்துக் கொண்டு நாட்டை ஏமாற்றினால் மக்கள் சும்மா விடுவார்களா...? கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சோனியா குடும்பத்தினருக்கு எதிர்ப்புகள் எழும். அந்த குடும்பத்தின் பிடியிலிருந்து வெளியில் வந்தால் தான் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் உண்டு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 19 May 2014 - 10:05

ரா.ரா3275 wrote:[link="/t110331-topic#1064514"]கொஞ்சம் மாற்றி யோசித்துப் பார்த்தால்...
ராகுலுக்கு மனமாற்றம் ஏற்பட்டு காங்கிரசைப் புனிதப் படுத்தும் வேளையில் ஈடுபட்டால்
மீண்டும் முன்போல் இல்லாமல் புதிய மனதுடன் நேர்மையான இயக்கமாக உருவெடுக்கவும் வாய்ப்பிருக்கலாமே...

அரசியலில் எதுவும் நடக்கலாம்...

எதுவும் நடக்கலாம் . நல்லது செய்வார்கள் என்றால் யார் வேண்டுமானாலும் ஆளலாம் . வரவேற்போம் . முதலில் காந்தி என்ற பெயரில் இருந்து விடுபட்டு , வேண்டுமானால் நேரு பெயரில் உலா வரட்டும்

ரமணியன்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon 19 May 2014 - 12:24

ஒரு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருந்து ஒருவர் ஓய்வு பெரும் பொழுது, அவருடைய இடத்தை அந்த நிறுவனத்தில் இருந்த அவருக்கு அடுத்தபடியாக சிறப்பாக பணியாற்றிய தகுதியான ஒருவருக்கே செல்ல வேண்டும். அவரது குடும்பத்தின் உறுப்பினருக்கு அல்ல...

அது போல் தான் கட்சியும்...ஒருவர் சிறந்தவர் என்பதால் அவரின் வாரிசுகளும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது நாம் பலமுறை நடைமுறையில் கண்ட உண்மை தான். கட்சி என்பது தனி நபர் சொத்து அல்ல, அது ஒரு இயக்கம்..அது சிறந்த தலைவர்களை நாடி இருக்க வேண்டுமே ஒழிய, அவர்களின் குடும்பத்தை நம்பி அல்ல. இப்படி ஒரு குடும்பத்தையே நம்பி இருந்தால் மக்கள் ஆட்சிக்கும் மன்னர் ஆட்சிக்கும் என்ன வேறுபாடு ??

மக்கள் இதை உணராததால் தான் ஒவ்வொரு முறையும் தவறு செய்கின்றனர். சிறந்த தலைமைகள் தங்களுது காலத்தில் அடுத்த தலைவர்களைத் தேர்ந்தெடுத்து அடையாளப் படுத்த வேண்டும். துரதிஷ்டமாக அப்படி ஒரு நிகழ்வு இந்திய அரசியல் அமைப்பில் வெகு குறைவாகவே நடந்துள்ளது.... யாருமே ஓய்வு பெற விரும்புவதில்லை. எம் ஜி ஆர் காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கு படைத்த அ தி மு க அவர் இறப்புக்கு பின்னால் சரியான தலைவர் இல்லாமல் தடுமாறியதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்றைக்கும் அம்மாவுக்கு பிறகு யார் என்று கேட்டால் ஒருவரும் இல்லை என்ற நிலையிலே அவர் கட்சி வாழ்கிறது. இது முறையா என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எழுதப் படிக்கத் தெரியாத பாமரரர்கள் இருந்த காலத்தில் அப்பாவுக்கு பின் பிள்ளை என்ற நிலைப்பாட்டை எடுத்து மக்களை மதிமயங்கச் செய்த காலம் இனி இருக்கப் போவதில்லை. டெல்லியில் AAP விலகாமல் சிறப்பாக நடந்திருந்தால் காங்கிரசுக்கும். பிஜேபி இந்த அளவு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

காங்கிரஸ் புத்துணர்வு பெற வேண்டுமானால் அது புனையப்பட்ட காந்தி குடும்பத்தில் இருந்த வெளியே வர வேண்டும். அப்பொழுதான் அதற்கு விடிவு காலம் பிறக்கும்.




சதாசிவம்
காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக