Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
Last edited by சிவா on Thu May 15, 2014 5:04 am; edited 4 times in total
Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
வாய்மையே வெல்லும் என்பதை அனுபவத்தால் உணர்ந்தவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைகிறார். புது வியூகங்களால் முன்னேறத் துவங்குவீர்கள். தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும்.
எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தந்தை வழிச் சொத்துகள் வந்து சேரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளுக்கு
தீர்வு கிடைக்கும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனைவி உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். அவர்வழி உறவினரும் பக்கபலமாக இருப்பார்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.
மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத் தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும்.
குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால், முகமலர்ச்சியுடன் திகழ்வீர்கள். அதிக வட்டிக் கடனை, குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் மற்றும் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.
குரு பகவானின் சஞ்சாரம்...
13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குரு, தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு கூடும். வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சேவகாதிபதியும் சுகாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், வேலை கூடும். எதிர்பாராத காரியங்கள் முடிவடையும். தாயாருக்கு மூட்டு வலி, எலும்பு தேய்மானம் வரக்கூடும். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வீண் செலவுகள் வேண்டாம்.
28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை அஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், எவருக்கும் ஜாமீன் போட வேண்டாம். இருமல், சளித் தொந்தரவு, காய்ச்சல், மறைமுக நெருக்கடிகள், வாகன விபத்துகள் வந்து செல்லும். அயல் நாட்டில் இருப்பவர்கள் உதவுவர். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 10-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச் சொல் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...
22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், கனவுகள் நனவாகும். வி.ஐ.பி ஒருவரின் அறிமுகம் திருப்புமுனையை உண்டாக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.
வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், உணவு, என்டர்பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயம் உண்டு. விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். வங்கிக் கடனில் ஒருபகுதியைக் கட்டி முடிப்பீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள்.
உத்தியோகத்தில், உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிய பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பதவி, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.
கன்னிப்பெண்களுக்கு நல்ல உத்தியோகம் அமையும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து, திருமணம் சிறப்பாக முடியும். மாணவ- மாணவிகள், நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடங்குவீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களது படைப்புகளை அரசு கௌரவிக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு அதிகரிக்கும். தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் அதிகம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, முதல் வரிசையில் உங்களை உட்காரவைப்பதுடன், வசதி- வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்: அமாவாசை நாளில் திருவிடைமருதூரில் அருளும் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடுங்கள். வாரிசு இல்லாதவர்களுக்கு உதவுங்கள். வளம் பெருகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
இயல்பு நிலையை எதற்காகவும் மாற்றிக் கொள்ளாதவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவார். வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், மனப் பக்குவமும் வாய்க்கும். உங்களின் சில பலவீனங்களையும், பிடிவாத போக்கையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கடன் பிரச்னை மனத்தை வாட்டும்.
சந்தேகத்தையும், ஈகோவையும் ஒதுக்கிவையுங்கள்.அதனால் நட்பும் குடும்பமும் நலம்பெறும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். செலவுகளும் வழக்கால் நெருக்கடிகளும் வேலைப்பளுவும் உண்டு. சொத்து வரியை செலுத்தி சரியாகப் பராமரியுங்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகன லைசென்ஸ், இன்ஷூரன்ஸை உரிய காலத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். நகை, பணம் களவு போக வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.
தாய்வழி சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களுடைய படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.
குரு பகவானின் சஞ்சாரம்...
13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு தன் சாரமான புனர்பூசத்தில் செல்வ தால், எதிர்பார்த்த காரியங்கள் உடனே முடியும். பணவரவு உண்டு. ஆபரணங்கள் வாங்குவீர்கள். விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் தனாதிபதியும் சேவகாதிபதியுமான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப் படுவீர்கள். கடனைத் தந்து முடிப்பீர்கள். சிலர் வீடு மாறும் நிர்பந்தத்துக்கு ஆளாவார்கள். வேற்று மாநிலம், வெளி நாடுகளில் இருப்பவர்களுடன் இணைந்து புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு உண்டு.
28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரையிலும் சப்தமாதிபதியும் ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், வேலைச்சுமை, எதையோ இழந்ததைப் போன்ற கவலைகள், நம்பிக்கையின்மை வந்து செல்லும். புதியவரை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.
3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 9-ல் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் செல்வதால், சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். பிதுர்வழிச் சொத்தில் சில மாற்றங் களைச் செய்வீர்கள். அரசாங்க விஷயம் உடனே முடியும்.
22.12.14 முதல் 17.4.15 வரை ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் குரு வக்ர கதியில் செல்வதால், புதிய யோசனைகள் பிறக்கும். தந்தையின் உடல் நிலை சீராகும். அவர் வழி சொத்துகள் வந்து சேரும். அரசாங்க விஷயம் சாதகமாகும். வீடு கட்ட அப்ரூவல் கிடைக்கும்.
வியாபாரத்தில் பழைய தவறுகள் மீண்டும் நிகழாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல், ரசாயன வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்கு தாரர்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் கோபதாபங்கள் வேண்டாம். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். திடீர் இடமாற்றம் உண்டு. சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் வரும்.
கன்னிப்பெண்களே! சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் கவனமுடன் செயல்படுங்கள். திருமண விஷயத்தை பெற்றோரிடம் ஒப்படைப்பது நல்லது. மாணவ- மாணவிகள், கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். விளையாட்டின்போது காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு; கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு, சின்னச் சின்ன வாய்ப்புகளையும் போராடி பெற வேண்டியது இருக்கும். மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்லுங்கள். அரசியல்வாதிகளுக்கு, உட்கட்சி பூசலால் நெருக்கடிகள் ஏற்படலாம். தலைமையை மீறி எந்த முயற்சியிலும் இறங்கவேண்டாம். சகாக்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சற்றே போராடி புதிய முயற்சிகளை முடிக்கவைப்பதாக அமையும்.
பரிகாரம்: திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை யும், திருவாசகம் பாடி வணங்குங்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
பிறந்த மண்ணை மறவாதவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்கிறார்.
எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்வின் நெளிவுசுளிவு களைக் கற்றுக்கொள்வீர்கள். தம்பதிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திருமணம் தடைப்பட்டிருந்த அன்பர்களுக்குத் திருமணம் கூடிவரும்.
வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து, புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். அரசு விஷயங்கள் நல்லவிதமாக முடியும். மனைவி, உங்களின் புதிய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும்.
குரு உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். கடின காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கௌரவப் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரர்களுடனான பிணக்குகள் நீங்கும். ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சொத்து விஷயத்தில் மீதிப் பணத்தையும் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.
குரு பகவானின் சஞ்சாரம்:
13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் விரயாதிபதியும் சேவகாதிபதியுமான குரு, தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், அவ்வப்போது உடலளவில் பலவீனமாக உணர்வீர்கள். சிலரை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்க்கவும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் ராசிநாதனும் தனாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். புது வேலை கிடைக்கும்.
28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரையிலும் உங்களின் சஷ்டமாதிபதியும் பாக்யாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். பூர்வீகச் சொத்தில் மராமத்துப் பணிகள் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்படும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சொந்தபந்தங்கள் மத்தியில் கௌரவம் கூடும். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 8-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள் வந்துசெல்லும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...
22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பணவரவு உண்டு. மகளுக்கு திருமணம் கூடி வரும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுமுன் சட்ட ஆலோசகரை ஆலோசிப்பது நல்லது. எவரையும் விமர்சிக்க வேண்டாம். சில நேரங்களில் சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள்.
வியாபாரத்தில், சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதுத் தொடர்புகள் கிடைக்கும். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். அயல்நாட்டில் இருப்பவர் களும் உதவுவர். உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கும் பங்குதாரர் வாய்ப்பார். சிலர், வேறு தொழிலுக்கு மாற வாய்ப்பு உண்டு. புரோக்கரேஜ், ஏற்றுமதி-இறக்குமதி, கன்ஸ்ட்ரக்ஷன், பதிப்பகம், கட்டட உதிரி பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில், உங்களின் தனித்தன்மை வெளிப்படும். மேலதிகாரிகளுக்கு நெருக்கம் ஆவீர்கள். எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு தாமதமின்றிக் கிடைக்கும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். சக ஊழியர்களில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் மனம் மாறும்.
கன்னிப்பெண்களுக்கு, நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள். வேலை கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு, கடிதம் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாகும். மாணவ-மாணவியரின் எண்ணங்கள் பூர்த்தியாகும். விளை யாட்டில் பரிசு பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்பு இப்போது கூடிவரும். பிரபல கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். அரசியல்வாதிகள் பேச்சால் சாதிப்பார்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையை வளப்படுத்துவதுடன், வருங்காலத் திட்டங்களையும் நிறைவேற்று வதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசக்கரபாணிப் பெருமாளை துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
சிந்தனைவாதிகள் நீங்கள். குரு 13.6.14 முதல் 4.7.15 வரையிலும் ராசிக்கு 6-ல் மறைகிறார். 'சகட குருவாச்சே... சங்கடங்களைத் தருவாரே...’ என்று கலங்காதீர்கள். உங்கள் யோகாதிபதிகளின் சாரங்களில் அவர் செல்வதால், ஒரளவு நல்லதே நடக்கும்.
முயற்சியால் முன்னேறப் பாருங்கள். மற்றவர்களின் பலம் - பலவீனத்தை அறிவீர்கள் என்றாலும், சில தருணங்களில் ஏமாறவும் வாய்ப்பு உண்டு. செலவுகள் உண்டு. வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். சிலர், புறநகர்ப் பகுதியில் குடியேறுவர். வி.ஐ.பி-களை பகைக்க வேண்டாம். அரசு வரிகளைச் செலுத்துவதில் தாமதம் வேண்டாம்.
குரு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், பணவரவு, குடும்பத்தில் நிம்மதி உண்டு. சாமர்த்தியமாகப் பேசி காய் நகர்த்துவீர்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், புது வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொன்றை விற்கவேண்டி வரும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.
குருபகவானின் சஞ்சாரம்...
13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் தனாதிபதியும் லாபாதிபதியுமான குரு தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். புதுப் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். என்றாலும் செலவுகளும், வேலைச் சுமையும் தொடரும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் ராசிநாதனும் விரயாதிபதியுமான சனி பகவானின் பூசத்தில் குரு செல்வதால், செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புதிய நண்பர்களால் உற்சாகம் அடைவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள்.
28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும் அஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். பிள்ளை களால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். மகளின் பிடிவாதம் மாறும். மகனின் உயர்கல்வி, உத்தியோக முயற்சிகள் சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு.
3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 7-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் செல்வதால், செல்வாக்கு கூடும். பணவரவு உண்டு. மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...
22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத் திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், திடீர் பயணங்களும், செலவுகளும் துரத்தும். பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை நினைத்து பயம் எழும். கர்ப்பிணிகளுக்கு உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வீடு, மனை வாங்கு வது, விற்பது நல்ல விதத்தில் முடியும். பணவரவு உண்டு.
வியாபாரத்தில், அதிரடி மாற்றங்களால் லாபம் ஈட்டுவீர்கள். தொழில் போட்டி அதிகமாகும். புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக ஆதாயம் அடைவீர்கள். கடன் வாங்கியாவது சொந்த இடம் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வருவீர்கள். லோன் கிடைக்கும். சிமென்ட், கணினி உதிரிப் பாகங்கள், ரியல் எஸ்டேட், என்டர்பிரைசஸ் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற பலன் இல்லையே எனும் ஆதங்கம் எழும். உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போன்று செயல்பட முடிவெடுப்பீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலை அதிகமாகும். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும்.
கன்னிப் பெண்களுக்கு, பெற்றோருடனான மோதல் நீங்கும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். மாணவ-மாணவிகள் யோகா, தியானம் செய்து நினைவாற்றலை அதிகப்படுத்துங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். கலைத் துறையினருக்கு போட்டிகள், விமர்சனங்கள் அதிகரிக்கும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர் கள். அரசியல்வாதிகள், கோஷ்டிப்பூசலில் சிக்கவேண்டாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, செலவுகளையும், அலைச்சலையும் தந்தாலும், ஓரளவுக்கு வெற்றி பெற்றுத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: சஷ்டி திதி நாள்களில் விராலிமலைக்குச் சென்று ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுங்கள். வினைகள் யாவும் நீங்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
தன்னம்பிக்கை மிகுந்தவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 5-ல் அமர்வதால், புதிய பாதையில் பயணிப்பீர்கள். அடிப்படை வசதி- வாய்ப்புகள் உயரும். தடுமாற்றம் நீங்கும். கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும் கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல மணப்பெண் அமைவாள்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து பங்கு கைக்கு வரும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை விலகும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல பலன் உண்டு. வழக்கு சாதகமாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து முடிப்பீர்கள். நட்பால் பலனடைவீர்கள். கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.
குரு உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். தந்தையாருடன் மனஸ்தாபம் நீங்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 11-வது வீட்டை குரு பார்ப்பதால், உங்களின் புகழ், கௌரவம் கூடும். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். வருமானம் உயரும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ஷேர் மூலமாக பணம் வரும்.
குரு பகவானின் சஞ்சாரம்...
13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் ராசி நாதனும் ஜீவனாதிபதியுமான குரு தன் சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும். 29.6.14 முதல் 27.8.14 வரையிலும் உங்களின் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். வீடு, வாகன வசதி பெருகும். ஊர்ப் பொது நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் சுகாதிபதியும் சப்தமாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். தாய்வழி சொத்து சேரும். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 6-ல் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் செல்கிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். அரசால் அனுகூலம் உண்டு.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...
22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், காரியங்கள் கைகூடும். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். மனைவி உங்களது ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்.
வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. இதமான பேச்சால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் புதுத் தொழில் அல்லது புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக்கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள்.
உத்தியோகத்தில், உங்களைப் பிடிக்காத மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். வழக்கில் வெற்றி பெற்று, இழந்த பதவியில் மீண்டும் அமர்வீர்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு. இயக்கம், சங்கம் சார்பாக பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
கன்னிப்பெண்களுக்கு, உயர்கல்வியில் வெற்றி உண்டு. தடைப்பட்ட கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். நினைத்ததை சாதிப்பீர்கள். அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். மாணவ-மாணவிகளுக்கு, மதிப்பெண்கள் அதிகம் கிடைக்கும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். கலைத் துறையினருக்கு அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிக்கிடந்த படம் ரிலீஸாகும். அரசியல்வாதிகளின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். உங்களின் களப்பணி பாராட்டுக்கு உரியதாகும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, நீங்கள் தொட்டதை எல்லாம் துலங்கவைப்பதுடன், எதிர்பாராத திடீர் யோகங் களையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: பௌர்ணமி தினங்களில் நாமக்கல் சென்று, ஸ்ரீநரசிம்மரையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். துப்புரவுப் பணியாளருக்கு பொருளுதவி செய்யுங்கள். நினைத்தது நிறைவேறும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
திருவருள் தரும் குருவருள்!
மற்ற நட்சத்திரக்காரர்கள், வியாழக்கிழமைகளில் அருகிலிருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று கீழ்க்காணும் காயத்ரீ மற்றும் மந்திரத்தைக் கூறி ஸ்ரீகுருபகவானை வணங்குவதுடன், தெற்குப் பிராகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுங்கள். குருவருளாலும் திருவருளாலும் உங்கள் குடும்பம் சுபிட்சம் அடையும்.
குரு பகவான் காயத்ரீ
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்
குரு பகவான் மந்திரம்
தேவானாம்ச ருஷினாம்ச குரும்
காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய
தம் நமாமி பிருஹஸ்பதிம்
கருத்து: தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் குரு, பொன்னன், மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவராகிய பிரகஸ்பதியை வணங்குகிறேன்.
[thanks] சக்தி விகடன் [/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மீனம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
» ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
» குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011
» குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011
» குருப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2018 - 2019 - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
» ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
» குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011
» குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011
» குருப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2018 - 2019 - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|