புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
Page 1 of 20 •
Page 1 of 20 • 1, 2, 3 ... 10 ... 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி 8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy](https://www.filepicker.io/api/file/8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy.jpg)
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி UpmAbqkhRqK3UMuI0Biy+00000](https://www.filepicker.io/api/file/UpmAbqkhRqK3UMuI0Biy+00000.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
விமந்தனி அக்கா, நலம் . நீங்கள் நலமா ? என் பையன் நன்றாக உள்ளான் . அந்த திரியில் பதில் போட முடிய வில்லை .
நினைத்தாலே இனிக்கும் என்னது அக்கா ? வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் dvd யா ? புத்தகமா ?
suspense வைத்து விட்டு தூங்க போயிடீங்களே ? இங்க எனக்கு
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி 1757813334](/users/1813/71/41/02/smiles/1757813334.gif)
நினைத்தாலே இனிக்கும் என்னது அக்கா ? வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் dvd யா ? புத்தகமா ?
suspense வைத்து விட்டு தூங்க போயிடீங்களே ? இங்க எனக்கு
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
-
வேளுக்குடி கிருஷ்ணன் பொதிகை சேனலிலும்,
விஜய் டி.வியிலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றினார்...
-
'முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி' என்று ஒரு சொலவடை
உருவாகுமளவுக்கு, அவரது பேச்சு அத்தனை ரசிக்கத்தக்கதாக
இருந்த்துடன், மிகப் பெரிய ரசிகர் வட்டம் அவருக்கு இருந்தது...
-
.
இவரது தந்தையின் ஆன்மிக பேச்சாற்றல் குறித்து
சக்தி விகடன் இதழாசிரியர் பொறுப்பேற்றிருந்த
ரவி சங்கர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்
-
அது விபரம் பகிர்தலுக்காக
========================================
-
வேளுக்குடி கிருஷ்ணனின்
தகப்பனார் வேளுக்குடி வரதாச்சாரியரும் மிகச் சிறந்த
வைஷ்ணவப் பேரறிஞர். இந்தியாவில் இவரது சொற்பொழிவு
நடக்காத ஊரே இல்லை. இவரிடம் ஒரு விசேஷம்... என்ன பேசவேண்டும்
என்று முன்கூட்டியே தலைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை
-
இவருக்கு. அந்தச் சமயத்தில் என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ,
அதற்கேற்பச் சரளமாகவும், விஷய ஞானத்துடனும் சுவையாகப்
பேசி அசத்துவதில் மன்னனாகத் திகழ்ந்தார் இவர். அத்தனைப்
பாண்டித்யம்!
-
ஒருமுறை, "இப்போது வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி அவர்கள்,
'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்' என்பது பற்றிப் பேசுவார்கள்"
என்று ஒரு மேடையில் எகிடுதகிடாக அறிவித்துச் சிக்கலில் மாட்டி
விட்டார் நிகழ்ச்சி அறிவிப்பாளர்.
ஆனாலும், அசரவில்லை வரதாச்சாரியர். மடை திறந்ததுபோல்,
அதே தலைப்பிலேயே சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.
"தலையை மொட்டை அடித்துக்கொள்வது எதற்குத் தெரியுமா?
நான் துளியும் அகங்காரம் இல்லாதவன் என்று காண்பிப்பதற்காகத்தான்.
ஒருவன் ஒரு பந்தயத்தில் தோற்றுவிட்டால் மொட்டையடித்துக் கொள்வான்.
இவன் அவனிடத்தில் தோற்றுவிட்டான் என்பதற்கான அடையாளம் அது.
-
திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு?
‘என் அகங்காரம் அழிந்துவிட்டது. நான் உனக்கு அடிமைப்பட்டவன்’
என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு. அப்படிச் செய்துவிட்டானானால்,
அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்.
இதைத் தெரிவிக்கத்தான், திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன்,
வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி,
‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும்,
இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச்
செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்’
என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’ என்கிற ரீதியில் இரண்டு மணி
நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிவிட்டார்.
-
இப்படி ஓர் அசாத்தியத் திறமை இருந்ததால்தான், அவருக்கு
‘வாகம்ருத வர்ஷீ’ (சொல் அமுதக் கடல்) என்கிற பட்டம் கிடைத்தது.
-
நம்மாழ்வார் பிறந்த தலமான ஆழ்வார்திருநகரியில், அவர் அருளிச் செய்த
திருவாய்மொழியின் 1000 பாடல்களைப் பற்றியும் தொடர்ந்து ஒரு வருட
காலத்துக்கு உபன்யாசம் செய்துள்ளார் வரதாச்சாரியர். இது ஒரு சாதனை!
-
இதிலேயே இன்னொரு சாதனையையும் செய்தார் அவர்.
ஒரே நாளில் இடைவிடாமல் 24 மணி நேரத்துக்கு, திருவாய்மொழியின்
பொருளை உபதேசித்தார். அப்போது அவருக்கு வயது 60.
-
சொற்பொழிவின் இடையே, விடியற்காலை 3 மணிக்கு, வயதின் காரணமாக
அவருக்குச் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல்
தொடர்ந்து உபன்யாசம் செய்துகொண்டு இருந்தார்.
-
மேலே தொடர முடியாமல், தொண்டை கட்டிக்கொண்டது.
உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வரதாச்சாரியரைப்
பரிசோதித்துவிட்டு, ‘உபன்யாசத்தை உடனே நிறுத்திவிடுங்கள்.
இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று அறிவுறுத்தினார்கள்.
-
ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், உபன்யாசத்தைத் தொடர்ந்து,
திட்டமிட்டபடி காலை 6 மணிக்குதான் நிறைவு செய்தார்.
-
1991-ஆம் ஆண்டு, சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில், மார்கழி
30 நாட்களும் திருப்பாவை உபன்யாசம் செய்தார் வரதாச்சாரியர்.
அதை முடித்துவிட்டு நேரே ஸ்ரீரங்கம் போனார்.
அங்கே ஸ்ரீரங்கநாதனுக்குத் திருவாராதனம் நடந்துகொண்டு இருந்தது.
அதை ஒரு மணி நேரம் போல் கண்டு களித்துவிட்டு, பிரசாதங்கள்
பெற்றுக்கொண்டு, கோயிலைப் பிரதட்சணம் வந்தார்.
-
ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்தபோது, மயங்கி விழுந்தவர்தான்;
அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்துவிட்டார்!
-
-------------------
![ayyasamy ram](https://2img.net/u/1813/71/41/02/avatars/21011-64.jpg)
சக்தி விகடன் இதழாசிரியர் பொறுப்பேற்றிருந்த
ரவி சங்கர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்
-
அது விபரம் பகிர்தலுக்காக
========================================
-
வேளுக்குடி கிருஷ்ணனின்
தகப்பனார் வேளுக்குடி வரதாச்சாரியரும் மிகச் சிறந்த
வைஷ்ணவப் பேரறிஞர். இந்தியாவில் இவரது சொற்பொழிவு
நடக்காத ஊரே இல்லை. இவரிடம் ஒரு விசேஷம்... என்ன பேசவேண்டும்
என்று முன்கூட்டியே தலைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை
-
இவருக்கு. அந்தச் சமயத்தில் என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ,
அதற்கேற்பச் சரளமாகவும், விஷய ஞானத்துடனும் சுவையாகப்
பேசி அசத்துவதில் மன்னனாகத் திகழ்ந்தார் இவர். அத்தனைப்
பாண்டித்யம்!
-
ஒருமுறை, "இப்போது வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி அவர்கள்,
'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்' என்பது பற்றிப் பேசுவார்கள்"
என்று ஒரு மேடையில் எகிடுதகிடாக அறிவித்துச் சிக்கலில் மாட்டி
விட்டார் நிகழ்ச்சி அறிவிப்பாளர்.
ஆனாலும், அசரவில்லை வரதாச்சாரியர். மடை திறந்ததுபோல்,
அதே தலைப்பிலேயே சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.
"தலையை மொட்டை அடித்துக்கொள்வது எதற்குத் தெரியுமா?
நான் துளியும் அகங்காரம் இல்லாதவன் என்று காண்பிப்பதற்காகத்தான்.
ஒருவன் ஒரு பந்தயத்தில் தோற்றுவிட்டால் மொட்டையடித்துக் கொள்வான்.
இவன் அவனிடத்தில் தோற்றுவிட்டான் என்பதற்கான அடையாளம் அது.
-
திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு?
‘என் அகங்காரம் அழிந்துவிட்டது. நான் உனக்கு அடிமைப்பட்டவன்’
என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு. அப்படிச் செய்துவிட்டானானால்,
அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்.
இதைத் தெரிவிக்கத்தான், திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன்,
வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி,
‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும்,
இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச்
செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்’
என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’ என்கிற ரீதியில் இரண்டு மணி
நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிவிட்டார்.
-
இப்படி ஓர் அசாத்தியத் திறமை இருந்ததால்தான், அவருக்கு
‘வாகம்ருத வர்ஷீ’ (சொல் அமுதக் கடல்) என்கிற பட்டம் கிடைத்தது.
-
நம்மாழ்வார் பிறந்த தலமான ஆழ்வார்திருநகரியில், அவர் அருளிச் செய்த
திருவாய்மொழியின் 1000 பாடல்களைப் பற்றியும் தொடர்ந்து ஒரு வருட
காலத்துக்கு உபன்யாசம் செய்துள்ளார் வரதாச்சாரியர். இது ஒரு சாதனை!
-
இதிலேயே இன்னொரு சாதனையையும் செய்தார் அவர்.
ஒரே நாளில் இடைவிடாமல் 24 மணி நேரத்துக்கு, திருவாய்மொழியின்
பொருளை உபதேசித்தார். அப்போது அவருக்கு வயது 60.
-
சொற்பொழிவின் இடையே, விடியற்காலை 3 மணிக்கு, வயதின் காரணமாக
அவருக்குச் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல்
தொடர்ந்து உபன்யாசம் செய்துகொண்டு இருந்தார்.
-
மேலே தொடர முடியாமல், தொண்டை கட்டிக்கொண்டது.
உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வரதாச்சாரியரைப்
பரிசோதித்துவிட்டு, ‘உபன்யாசத்தை உடனே நிறுத்திவிடுங்கள்.
இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று அறிவுறுத்தினார்கள்.
-
ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், உபன்யாசத்தைத் தொடர்ந்து,
திட்டமிட்டபடி காலை 6 மணிக்குதான் நிறைவு செய்தார்.
-
1991-ஆம் ஆண்டு, சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில், மார்கழி
30 நாட்களும் திருப்பாவை உபன்யாசம் செய்தார் வரதாச்சாரியர்.
அதை முடித்துவிட்டு நேரே ஸ்ரீரங்கம் போனார்.
அங்கே ஸ்ரீரங்கநாதனுக்குத் திருவாராதனம் நடந்துகொண்டு இருந்தது.
அதை ஒரு மணி நேரம் போல் கண்டு களித்துவிட்டு, பிரசாதங்கள்
பெற்றுக்கொண்டு, கோயிலைப் பிரதட்சணம் வந்தார்.
-
ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்தபோது, மயங்கி விழுந்தவர்தான்;
அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்துவிட்டார்!
-
-------------------
![ayyasamy ram](https://2img.net/u/1813/71/41/02/avatars/21011-64.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இதேபோல எந்தத் தலைப்புக் கொடுத்தாலும் , பேசக்கூடிய ஆற்றல் பெற்றவராக பேரறிஞர் அண்ணா திகழ்ந்தார் .
ஒருசமயம் ,சென்னை மெரினா கடற்கரையில் பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்
கல்கி.
அதில் பலதலைப்புகளில் பல அறிஞர்கள் பேசுவதாக ஏற்பாடு. ஆனால்
பேச்சாளர்களில்
ஒருவர் கூடத் தலை காட்டவில்லை. கல்கிக்குக் கையும் ஆடவில்லை காலும்
ஓடவில்லை!
அச்சமயம் ஓர் இளைஞர் கல்கியை அணுகி அத்தனைத் தலைப்புகளிலும் தாமே
பேசுவதற்கு
அனுமதி கேட்டார். தயக்கத்தோடேயே இசைவளித்தார் கல்கி. அவ்வளவுதான் மடை
திறந்த வெள்ளம் போல்
வெளுத்துக்கட்டிவிட்டார் அந்த இளைஞர். அவர் வேறு யாருமில்லை,
அண்ணாதுரைதான்.
அப்போதே அவரைப் பாராட்டி 'வெறும் அண்ணாதுரை இல்லை,
இனி அறிஞர் அண்ணாதுரை" என்று பட்டம் வழங்கியவர் கல்கி. பெரும்
பேராசிரியரான உ.வே. சாமிநாதையருக்குத்
தமிழ்த் தாத்தா பட்டம் வழங்கியவர் அல்லவா கல்கி. அன்று அவரளித்த பட்டம்
இன்றுவரை அண்ணாவின்
பெயரோடு ஒட்டிக்கொண்டுள்ளது.
அண்ணா என்றதும் நம் மனக்கண் முனனால் வருவது அவருடைய பேச்சாற்றல்தான்.
'கேட்டர்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்" என்னும் வள்ளுவப் பெருந்தகையின் இலக்கணத்துக்கு
இலக்கியமாகத்
திகழ்ந்தவர் அண்ணாதுரை. ஆங்கிலமாக இருந்தாலும் தமிழாக இருந்தாலும்
அண்ணாவின் பேச்சும்
சொல் வீச்சும் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தன.
இந்தியப் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரைகளைக் கேட்டு
மயங்காதவரே
இல்லை எனலாம். இ;ந்தியத் தலைமை அமைச்சராக இருந்த பண்டித சவகர்லால் நேரு
அவர்கள் அண்ணாவின் உரையை மிகவும் ரசித்துக் கேட்பாராம். பாராளுமன்ற
அவைத்தலைவர்
ஆங்கிலத்தில், 'Now I invite Mr C.N.Annadurai to deliver his maiden
speech" என அழைக்கிறார்.
பாராளுமன்றத்தில் முதன் முதலாக உரையற்ற எழுகிறார் அண்ணா.
கரகரத்த தன் குரலில்
'yes I'm going to deliver my maiden speech but it's not a maiden's
speech" என்று தொடங்க அவையில் உறுப்பினர்களின்
கைதட்டல் எங்கும் எதிரொலித்ததாம். முதல் உரை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே
இவ்வளவு
கைதட்டல் வாங்கிய அரசியல்வாதி அண்ணாதுரையாகத்தான் இருப்பார்.
ஒருசமயம் ,சென்னை மெரினா கடற்கரையில் பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்
கல்கி.
அதில் பலதலைப்புகளில் பல அறிஞர்கள் பேசுவதாக ஏற்பாடு. ஆனால்
பேச்சாளர்களில்
ஒருவர் கூடத் தலை காட்டவில்லை. கல்கிக்குக் கையும் ஆடவில்லை காலும்
ஓடவில்லை!
அச்சமயம் ஓர் இளைஞர் கல்கியை அணுகி அத்தனைத் தலைப்புகளிலும் தாமே
பேசுவதற்கு
அனுமதி கேட்டார். தயக்கத்தோடேயே இசைவளித்தார் கல்கி. அவ்வளவுதான் மடை
திறந்த வெள்ளம் போல்
வெளுத்துக்கட்டிவிட்டார் அந்த இளைஞர். அவர் வேறு யாருமில்லை,
அண்ணாதுரைதான்.
அப்போதே அவரைப் பாராட்டி 'வெறும் அண்ணாதுரை இல்லை,
இனி அறிஞர் அண்ணாதுரை" என்று பட்டம் வழங்கியவர் கல்கி. பெரும்
பேராசிரியரான உ.வே. சாமிநாதையருக்குத்
தமிழ்த் தாத்தா பட்டம் வழங்கியவர் அல்லவா கல்கி. அன்று அவரளித்த பட்டம்
இன்றுவரை அண்ணாவின்
பெயரோடு ஒட்டிக்கொண்டுள்ளது.
அண்ணா என்றதும் நம் மனக்கண் முனனால் வருவது அவருடைய பேச்சாற்றல்தான்.
'கேட்டர்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்" என்னும் வள்ளுவப் பெருந்தகையின் இலக்கணத்துக்கு
இலக்கியமாகத்
திகழ்ந்தவர் அண்ணாதுரை. ஆங்கிலமாக இருந்தாலும் தமிழாக இருந்தாலும்
அண்ணாவின் பேச்சும்
சொல் வீச்சும் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தன.
இந்தியப் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரைகளைக் கேட்டு
மயங்காதவரே
இல்லை எனலாம். இ;ந்தியத் தலைமை அமைச்சராக இருந்த பண்டித சவகர்லால் நேரு
அவர்கள் அண்ணாவின் உரையை மிகவும் ரசித்துக் கேட்பாராம். பாராளுமன்ற
அவைத்தலைவர்
ஆங்கிலத்தில், 'Now I invite Mr C.N.Annadurai to deliver his maiden
speech" என அழைக்கிறார்.
பாராளுமன்றத்தில் முதன் முதலாக உரையற்ற எழுகிறார் அண்ணா.
கரகரத்த தன் குரலில்
'yes I'm going to deliver my maiden speech but it's not a maiden's
speech" என்று தொடங்க அவையில் உறுப்பினர்களின்
கைதட்டல் எங்கும் எதிரொலித்ததாம். முதல் உரை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே
இவ்வளவு
கைதட்டல் வாங்கிய அரசியல்வாதி அண்ணாதுரையாகத்தான் இருப்பார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நலம் தான் ஷோபனா!shobana sahas wrote:விமந்தனி அக்கா, நலம் . நீங்கள் நலமா ? என் பையன் நன்றாக உள்ளான் . அந்த திரியில் பதில் போட முடிய வில்லை .![]()
நினைத்தாலே இனிக்கும் என்னது அக்கா ? வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் dvd யா ? புத்தகமா ?
suspense வைத்து விட்டு தூங்க போயிடீங்களே ? இங்க எனக்கு![]()
![]()
![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
.
இது திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ayyasamy ram wrote:திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு?
‘என் அகங்காரம் அழிந்துவிட்டது. நான் உனக்கு அடிமைப்பட்டவன்’
என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு. அப்படிச் செய்துவிட்டானானால்,
அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்.
இதைத் தெரிவிக்கத்தான், திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன்,
வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி,
‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும்,
இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச்
செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்’
என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.Jagadeesan wrote:முதல் உரை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே
இவ்வளவு
கைதட்டல் வாங்கிய அரசியல்வாதி அண்ணாதுரையாகத்தான் இருப்பார்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நினைத்தாலே இனிக்கும்! (1)
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி ER1wUudmSnWjeJ4MN8M6+01](https://www.filepicker.io/api/file/eR1wUudmSnWjeJ4MN8M6+01.jpg)
பக்தி செலுத்துபவர்களுக்கு கீதையின் 15ம் அத்தியாயம் நன்றாகத் தெரிந்திருந்தால் போதும். இதில், கண்ணன் தன்னை புருஷோத்தமன் என சொல்கிறான். "புருஷோத்தமன்' என்றால் "அனைவரையும் காட்டிலும் உயர்ந்தவன்' என பொருள். தான் மிகவும் உயர்ந்தவன் என கண்ணன் பிரகடனம் செய்கிறான்.
எல்லாரிடமும் பகவான் ஒன்றை எதிர்பார்க்கிறான். "என்னை யாரொருவன் புருஷோத்தமன் என சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து கொள்கிறானோ, அவன் என்னிடம் பக்தி செய்தவன் ஆவான்,'' என்கிறார். அப்படியானால் கோயிலுக்குப் போவது, பகவானின் பெருமைகளைக் கேட்பது என்பதெல்லாம் பக்தி செலுத்துவதாக கொள்ளப்படாதா என்ற கேள்வி எழலாம்.
பக்தியில் பலவகை உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பக்தி செலுத்துகிறார்கள். சிலர் பிரதட்சணம்(கோயிலை வலம் வருதல்), சிலர் நமஸ்காரம் மட்டும் செய்வது என்று வழிபாட்டு முறை மாறுபடுகிறது. ஆழ்வார்கள் ஆடுவது, பாடுவது, பூத்தொடுப்பது என்று பலவிதமாக பக்தி செலுத்தியுள்ளனர். ஆக, எந்த விதத்திலும் பக்திசெலுத்தலாம்.
குழம்பு சாதம் மோர் சாதகமாகாது. மோர்சாதம் கேசரி ஆகாது. அதனதன் சுவையில் அது அது இருக்கும். அதுபோல, ஒவ்வொருவர் செலுத்தும் பக்தியும் தனித்துவம் வாய்ந்ததாக அமையும்.
எள் சாதம், எலுமிச்சை சாதம், அக்கார அடிசில், சர்க்கரைப் பொங்கல் என எல்லாவற்றுக்கும் தனித்தனி ருசி. அதுபோல, நீங்கள் எந்த வகையில் பக்தி செய்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறான் கண்ணன்.
இப்படி சம்பிரதாயங்கள் இல்லாத பக்தியையும் கூட கண்ணன் ஏற்றுக்கொள்கிறான். ஏன்...என்னை நினைத்தாலே போதும் என்கிறான்.
ஒருவர் 1008 பசுக்களை ரத்னகம்பளம் வைத்து தானம் செய்கிறார். இதுமாதிரி எல்லாராலும் செய்ய முடியுமா? அவரவர் சக்திக்கு தகுந்த பக்தி செலுத்தினால் போதும்.
அதனால் தான் கண்ணன் எளிமையான வழியைச் சொன்னான். "என்னை புருஷோத்தமன் என யார் ஒருவன் நினைக்கிறானோ, அந்த மகானுபாவன் என்னிடம் எல்லா வழிகளிலும் பக்தி செலுத்தியவன் ஆகிறான்,'' என்கிறான்.
ஆம்.. பகவானிடம் பக்தி செலுத்துபவன், மகாபாரதம், ராமாயணம், பாகவதம் என எல்லாப்புராணங்களையும் அறிந்தவன் போல் ஆகிறான். பகவானை புருஷோத்தமன் என நினைத்தாலே, தெரியாத எல்லாவற்றையும் தெரிந்தவர்கள் ஆகிறோம். ஆக, இப்படி நினைப்பது கஷ்டமான விஷயமா! இந்த நினைவிருந்தாலே நமக்கு முக்தி கிடைத்து விடும். இந்த எளிமையான பக்தி, கரும்பு தின்னகூலி கொடுத்தது போல் இருக்கிறது. தியானம், பூஜை, நைவேத்யம் செய்வது தான் பக்தி என்றில்லை. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன்.
ஒரு பயில்வானும், சில குத்துச்சண்டை வீரர்களுடன் பத்துநாள் போட்டி போட வேண்டும். ஜெயித்தால் கோப்பை என்று அறிவிக்கப்படுகிறது. இதையே, ஒரே நாள் அந்த பத்து வீரர்களின் தலைவருடன் மோதினால் போதும். அவரை ஜெயித்து விட்டால் கோப்பை என்றால், அந்த பயில்வான் எதைத் தேர்ந்தெடுப்பார்? வலிமை குறைந்த பத்து பேர், ஆனால் பத்துநாள். வலிமையான ஒரு நபர்..ஆனால் ஒரே நாள் தான்!
எல்லாரிடமும் பகவான் ஒன்றை எதிர்பார்க்கிறான். "என்னை யாரொருவன் புருஷோத்தமன் என சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து கொள்கிறானோ, அவன் என்னிடம் பக்தி செய்தவன் ஆவான்,'' என்கிறார். அப்படியானால் கோயிலுக்குப் போவது, பகவானின் பெருமைகளைக் கேட்பது என்பதெல்லாம் பக்தி செலுத்துவதாக கொள்ளப்படாதா என்ற கேள்வி எழலாம்.
பக்தியில் பலவகை உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பக்தி செலுத்துகிறார்கள். சிலர் பிரதட்சணம்(கோயிலை வலம் வருதல்), சிலர் நமஸ்காரம் மட்டும் செய்வது என்று வழிபாட்டு முறை மாறுபடுகிறது. ஆழ்வார்கள் ஆடுவது, பாடுவது, பூத்தொடுப்பது என்று பலவிதமாக பக்தி செலுத்தியுள்ளனர். ஆக, எந்த விதத்திலும் பக்திசெலுத்தலாம்.
குழம்பு சாதம் மோர் சாதகமாகாது. மோர்சாதம் கேசரி ஆகாது. அதனதன் சுவையில் அது அது இருக்கும். அதுபோல, ஒவ்வொருவர் செலுத்தும் பக்தியும் தனித்துவம் வாய்ந்ததாக அமையும்.
எள் சாதம், எலுமிச்சை சாதம், அக்கார அடிசில், சர்க்கரைப் பொங்கல் என எல்லாவற்றுக்கும் தனித்தனி ருசி. அதுபோல, நீங்கள் எந்த வகையில் பக்தி செய்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறான் கண்ணன்.
இப்படி சம்பிரதாயங்கள் இல்லாத பக்தியையும் கூட கண்ணன் ஏற்றுக்கொள்கிறான். ஏன்...என்னை நினைத்தாலே போதும் என்கிறான்.
ஒருவர் 1008 பசுக்களை ரத்னகம்பளம் வைத்து தானம் செய்கிறார். இதுமாதிரி எல்லாராலும் செய்ய முடியுமா? அவரவர் சக்திக்கு தகுந்த பக்தி செலுத்தினால் போதும்.
அதனால் தான் கண்ணன் எளிமையான வழியைச் சொன்னான். "என்னை புருஷோத்தமன் என யார் ஒருவன் நினைக்கிறானோ, அந்த மகானுபாவன் என்னிடம் எல்லா வழிகளிலும் பக்தி செலுத்தியவன் ஆகிறான்,'' என்கிறான்.
ஆம்.. பகவானிடம் பக்தி செலுத்துபவன், மகாபாரதம், ராமாயணம், பாகவதம் என எல்லாப்புராணங்களையும் அறிந்தவன் போல் ஆகிறான். பகவானை புருஷோத்தமன் என நினைத்தாலே, தெரியாத எல்லாவற்றையும் தெரிந்தவர்கள் ஆகிறோம். ஆக, இப்படி நினைப்பது கஷ்டமான விஷயமா! இந்த நினைவிருந்தாலே நமக்கு முக்தி கிடைத்து விடும். இந்த எளிமையான பக்தி, கரும்பு தின்னகூலி கொடுத்தது போல் இருக்கிறது. தியானம், பூஜை, நைவேத்யம் செய்வது தான் பக்தி என்றில்லை. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன்.
ஒரு பயில்வானும், சில குத்துச்சண்டை வீரர்களுடன் பத்துநாள் போட்டி போட வேண்டும். ஜெயித்தால் கோப்பை என்று அறிவிக்கப்படுகிறது. இதையே, ஒரே நாள் அந்த பத்து வீரர்களின் தலைவருடன் மோதினால் போதும். அவரை ஜெயித்து விட்டால் கோப்பை என்றால், அந்த பயில்வான் எதைத் தேர்ந்தெடுப்பார்? வலிமை குறைந்த பத்து பேர், ஆனால் பத்துநாள். வலிமையான ஒரு நபர்..ஆனால் ஒரே நாள் தான்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இதுபோல் தினமும் விளக்கேற்றி, நாமசங்கீர்த்தனம் செய்து, உபன்யாசம் கேட்டு என்று பல வழிகளில் பக்தி செலுத்துவதை விட, பகவானை நினைத்துக் கொண்டிரு என்ற ஒரே வழியைத் தேர்ந்தெடுப்பது நல்லது தானே!
ஒருவருக்கு வியாதி வந்து விட்டது. இனிப்பான மருந்தைக் கொடுத்து குடி என்கிறார்கள். அந்த இனிப்புக்கு ஆசைப்பட்டே, அந்த மனிதர், இந்த நோய் இன்னும் பத்துநாள் இருக்கக்கூடாதா என்று நினைக்க ஆரம்பித்து விடுவார். அதே நேரம் கசப்பு மருந்து கொடுத்தால், ஒரே நாளில் இந்த வியாதி ஓடிவிடாதா என கதறுவார்.
வியாதி என்பது நமது பாவங்கள். அவற்றை விரட்ட, இனிப்பு மருந்தாக பல வித பக்திமுறைகள் உள்ளன. அதைக்கொண்டு பகவானை அடைய பல பிறவிகளைக் கடக்க வேண்டிஇருக்கும். அதேநேரம் கசப்பு மருந்து என்றால் பிறவி வியாதி சீக்கிரம் பறந்து விடும். அந்த கசப்பு மருந்து தான் பகவானை நினைப்பது.
அதேநேரம், பகவானை நினைப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா? அவனை எப்படி நினைப்பது. அவனுக்கு பல வடிவங்கள் இருக்கின்றதே! எந்த வடிவத்தை தேர்ந்தெடுத்து வணங்குவது!
பகவான் சூஷ்மரூபமாக இருக்கிறான் என்கிறார்கள். அதே நேரம் தன்னை புருஷோத்தமன்.. அதாவது எல்லாரையும் விட மிகவும் உயர்ந்தவன் என நினைக்க வேண்டும் என்கிறான். ஒருவனைப் பற்றி விசாரிக்கும் போது, இவன் பாட்டு, படிப்பு எதில் உயர்ந்தவன் என்று கேட்கிறோம் இல்லையா! அதுபோல், பகவான் எந்த வகையில் உயர்ந்தவன் என்று தெரிந்து கொண்டாக வேண்டும்.
இங்கு தான் கீதையின் 15வது அத்தியாயம் முக்கிய இடம் பெறுகிறது. கீதையைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. பெரிய பெரிய மேதைகள் கூட, இன்று வரை கீதையை ஓரளவு தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதில் 15வது அத்தியாயத்தைப் படித்தாலே போதும். அவனுக்கு பிறவியில்லை என்றாகி விடும்.
சரி...பகவானை மற்றவர்களை விட உயர்ந்தவர் என்கிறார்களே! அவனுக்கு என்னைப்போல இரண்டு கண், ஒரு மூக்கு தானே இருக்கிறது. நான் ஒரு மனைவியுடன் இருக்கிறேன். அவன் 16,108 மனைவியருடன் இருக்கிறானாமே! அப்படியிருக்க, என்னை விட அவன் எப்படி உயர்ந்தவன் ஆவான்...என்று பல கேள்விகள் எழுகின்றன. இதற்கு விடை தெரிந்தால் போதும்.
கலியுகத்தில் பகவானை நினைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.
ஒன்றாம் தேதி வந்தாச்சு! சம்பளம் வாங்கியாச்சு! ஓட்டலில் போய் 500ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரை சாப்பிட்டா அந்த கண்ணனையே நேரில் சேவித்த மாதிரி ஒரு உணர்வு! ஒருவேளை சாப்பிட அழைத்துப் போகாவிட்டால், வீட்டில் ஒரே சண்டை! இதற்குத்தான் நேரமிருக்கிறதே தவிர, பகவானை நினைக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு இருக்கிறது?
ஏனெனில், கலியுகத்தில் சுகபோகத்தில்தான் புத்தி போகும். யோகத்தின் பக்கம் போகாது. இந்தக் காலத்தில் ஜெபம், தவம் பண்ண முடியுமா! 15 நிமிடம் ஓய்வு கிடைத்தால் தூங்க எண்ணம் வரும், கதை படிக்க ஆசை வரும், இந்த காலத்தில் ஒரு அனர்த்தம் இருக்கிறது. அதுதான் தொலைபேசி. அதை காதில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் பேச முடியும்! பக்கத்து வீட்டில், எதிர்வீட்டில் வேண்டாத கதைகளைப் பேசத்தோன்றும். பகவானை நினைப்பதாவது! அது எப்படி முடியும்?
ஒருவருக்கு வியாதி வந்து விட்டது. இனிப்பான மருந்தைக் கொடுத்து குடி என்கிறார்கள். அந்த இனிப்புக்கு ஆசைப்பட்டே, அந்த மனிதர், இந்த நோய் இன்னும் பத்துநாள் இருக்கக்கூடாதா என்று நினைக்க ஆரம்பித்து விடுவார். அதே நேரம் கசப்பு மருந்து கொடுத்தால், ஒரே நாளில் இந்த வியாதி ஓடிவிடாதா என கதறுவார்.
வியாதி என்பது நமது பாவங்கள். அவற்றை விரட்ட, இனிப்பு மருந்தாக பல வித பக்திமுறைகள் உள்ளன. அதைக்கொண்டு பகவானை அடைய பல பிறவிகளைக் கடக்க வேண்டிஇருக்கும். அதேநேரம் கசப்பு மருந்து என்றால் பிறவி வியாதி சீக்கிரம் பறந்து விடும். அந்த கசப்பு மருந்து தான் பகவானை நினைப்பது.
அதேநேரம், பகவானை நினைப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா? அவனை எப்படி நினைப்பது. அவனுக்கு பல வடிவங்கள் இருக்கின்றதே! எந்த வடிவத்தை தேர்ந்தெடுத்து வணங்குவது!
பகவான் சூஷ்மரூபமாக இருக்கிறான் என்கிறார்கள். அதே நேரம் தன்னை புருஷோத்தமன்.. அதாவது எல்லாரையும் விட மிகவும் உயர்ந்தவன் என நினைக்க வேண்டும் என்கிறான். ஒருவனைப் பற்றி விசாரிக்கும் போது, இவன் பாட்டு, படிப்பு எதில் உயர்ந்தவன் என்று கேட்கிறோம் இல்லையா! அதுபோல், பகவான் எந்த வகையில் உயர்ந்தவன் என்று தெரிந்து கொண்டாக வேண்டும்.
இங்கு தான் கீதையின் 15வது அத்தியாயம் முக்கிய இடம் பெறுகிறது. கீதையைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. பெரிய பெரிய மேதைகள் கூட, இன்று வரை கீதையை ஓரளவு தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதில் 15வது அத்தியாயத்தைப் படித்தாலே போதும். அவனுக்கு பிறவியில்லை என்றாகி விடும்.
சரி...பகவானை மற்றவர்களை விட உயர்ந்தவர் என்கிறார்களே! அவனுக்கு என்னைப்போல இரண்டு கண், ஒரு மூக்கு தானே இருக்கிறது. நான் ஒரு மனைவியுடன் இருக்கிறேன். அவன் 16,108 மனைவியருடன் இருக்கிறானாமே! அப்படியிருக்க, என்னை விட அவன் எப்படி உயர்ந்தவன் ஆவான்...என்று பல கேள்விகள் எழுகின்றன. இதற்கு விடை தெரிந்தால் போதும்.
கலியுகத்தில் பகவானை நினைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.
ஒன்றாம் தேதி வந்தாச்சு! சம்பளம் வாங்கியாச்சு! ஓட்டலில் போய் 500ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரை சாப்பிட்டா அந்த கண்ணனையே நேரில் சேவித்த மாதிரி ஒரு உணர்வு! ஒருவேளை சாப்பிட அழைத்துப் போகாவிட்டால், வீட்டில் ஒரே சண்டை! இதற்குத்தான் நேரமிருக்கிறதே தவிர, பகவானை நினைக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு இருக்கிறது?
ஏனெனில், கலியுகத்தில் சுகபோகத்தில்தான் புத்தி போகும். யோகத்தின் பக்கம் போகாது. இந்தக் காலத்தில் ஜெபம், தவம் பண்ண முடியுமா! 15 நிமிடம் ஓய்வு கிடைத்தால் தூங்க எண்ணம் வரும், கதை படிக்க ஆசை வரும், இந்த காலத்தில் ஒரு அனர்த்தம் இருக்கிறது. அதுதான் தொலைபேசி. அதை காதில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் பேச முடியும்! பக்கத்து வீட்டில், எதிர்வீட்டில் வேண்டாத கதைகளைப் பேசத்தோன்றும். பகவானை நினைப்பதாவது! அது எப்படி முடியும்?
இன்னும் இனிக்கும்......
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி FJcB7vYQRyCBRZmgkISu+00000](https://www.filepicker.io/api/file/fJcB7vYQRyCBRZmgkISu+00000.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 20 • 1, 2, 3 ... 10 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 20
|
|