ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

+30
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
Namasivayam Mu
T.N.Balasubramanian
shobana sahas
mbalasaravanan
சிவனாசான்
M.Saranya
veegopalji
ஸ்ரீரங்கா
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
rksivam
ayyasamy ram
anaamigan
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
moganan
udayarr
Jothiram
veeyaar
vasudevan31355
chittibabu
pon.sellamuththu
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
விஸ்வாஜீ
mkrsantharam
34 posters

Page 8 of 26 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 26  Next

Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Empty பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Tue Jul 15, 2014 4:28 pm

'முள்ளும் - மலரும் '  தொடர்ச்சி .........




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Cameraxvx




  1. ' வாழ்ந்து காட்டுகிறேன் '

2. ' வாழ்வு என் பக்கம் '

3. ' அவளுக்கு ஆயிரம் கண்கள் '

4. ' ஆடு -புலி ஆட்டம் '

5. ' மோகம் முப்பது வருஷம் '


போன்ற படங்களின் கதை - வசனங்களை மகேந்திரன்

எழுதினார் !


எனினும் படங்களுக்கு கதை - வசனம் எழுதுவது மகேந்திரனுக்கு

சுத்தமாக பிடிக்கவில்லை !


என்ன காரணமாம் ?


" துக்ளக் " பத்திரிக்கையில் 'போஸ்ட்மார்ட்டம் ' என்கிற பெயரில்

பல படங்களின் தரத்தை ' கிழி ' - ' கிழி '  என்று கிழித்த மகேந்திரன்,

இபோது அந்த படங்களைத் தயாரிப்பவர்களைப் போல ,

தானும் கதைகளை அமைப்பது , அவருக்கே பிடிக்கவில்லை!


வருமானம் கிடைக்கிறது என்பதற்காக செய்யும் தொழிலில்

திருப்தி மற்றும் மன நிறைவு கிடைக்கவில்லை என்றால்

அந்த வருமானம் தேவை இல்லை என்கிற கொள்கையில்

உறுதியாக உள்ளவர்களில் ஒருவர் :


மகேந்திரன் !



இன்னொருவர் ?

அடியேன்தான் ! கண்ணடி



(    கிளினிக் உள்ளே நுழையும் ஒரு தடியாள்,

" யோவ் ! டாக்டரூ ! புடி 500 ரூபா!

ஒரு பாட்டில் குளுகோஸ் ஏத்து  ! "



என்று திமிராக பேசுபவனிடம் :



" குளுகோஸ் வேணா !

' ஃப்ரியா '    ஒரு  ' சுன்னத் ' ஆபரேஷன் பண்ணட்டுமா ? ! "

 என்று கேட்டு அந்த  தடியாளை   மிரட்டும் மற்றும் விரட்டும்

ரகம், அடியேன்தான் !    மண்டையில் அடி    )  



மகேந்திரனும் அந்தமாதிரி 'டைப் ' தான் !


தான் படிக்கும் போது வெறுத்து ஒதுக்கிய அதே தமிழ்ப்

படங்களைப் போல அவரும் அதே மாதிரியான 'மசாலாத் ' தனமான

திரைக்கதைகளையும் , திரைக்கதை வசனங்களையும் எழுதுவது

என்னவோ மகேந்திருக்கு பிடிக்கவில்லை !




 இப்படி , தன்னைப் பற்றி , தானே குறைத்து கொண்டிருக்கும்

போது , மகேந்திரன் மேடை நாடகமாக எழுதிக் கொடுத்த :


" ரிஷி மூலம் "



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 8943big




சிவாஜி கணேசனை வைத்து படமாக வந்து வெற்றி கரமாக ஓடியது அவருக்கு

எரிச்சலைக் ( ! )  கொடுத்தது !



 இந்த நிலையில் ......


 படங்களுக்கு கதைகளைக் கேட்டும் ,

கதை வசனங்களைக் கேட்டும் நிறைய சந்தர்ப்பங்கள்

மகேந்திரனுக்கு வந்தன !

அத்தனையும் அவர் ' நோ '   என்று சொல்லிவிட்டார் !


அப்படி கதை வசனங்களை கேட்டு வந்த படத்தயாரிப்பாளர்களிடம்

மகேந்திரன் இப்படி சொல்ல ஆரம்பித்தார் :




 " இதோ பாருங்கள் , தயாரிப்பாளர்களே !

என்னிடம் இப்போது கதை இல்லை !

ஏதாவது நாவல் ஒன்றைக் கொடுங்கள் !   அதனைப் படித்து

திரைக்கதை மற்றும் வசனம் எழுதித்தருகிறேன் , சரிதானா ! "

என்றார் !


அப்போது பல தயாரிப்பாளர்களில் ஒருவர் மகேந்திரனுக்கு

படிக்கச் சொல்லி கொடுத்த நாவல்தான் :

 உமா சந்திரன்  எழுதிய :

 " முள்ளும் - மலரும் "  நாவல் !


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 41t2x1hsh



அந்த நாவலைப் படித்து :

ஒரு திரைக்கதையை

அமைத்தார் !


மகேந்திரனுக்கே தெரியும் !

என்ன தெரியும் ?

அந்த 'முள்ளும் - மலரும் ' திரைக்கதையை எந்த படத்

தயாரிப்பாளரும் காது கொடுத்து கேட்டாலும்  முகம்

சுளிப்பார் !

காரணம் ?


' தமிழ் சினிமாவின் வழக்கமான :

மெலோடிராம ,

அதிக வசனம் ,

ஓவர் ஆக்டிங்க்க் ,

டூயட் பாட்டுக்கள்

போன்ற 'மாமூல் ' சமாச்சாரங்கள் 'முள்ளும் - மலரும் '

திரைக்கதையில் இல்லை ....நஹி ....லேது ...!



 எனினும் மகேந்திரன் எந்த

தயாரிப்பாளரையும் வற்புறுத்த வில்லை !

'பசை ' என்று இருந்தார் !

அத்தான் , " கம் " (  GUM )

என்று இருந்தார் !    ஜாலி


   இந்த சமயத்தில்தான் மகேந்திரனைத்

தேடி வந்தார் , பிரபல தயாரிப்பாளர் ' ஆனந்தி பிலிம்ஸ் '

வேணு செட்டியார் !


' மகேந்திரன் !  நான் ஒரு படம் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன் !

நீ அந்த படத்தை 'டைரக்ட் '  பண்றியா ! ? "


---  கேட்டார் , வேணு செட்டியார் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Cameraana


     இடது பக்கத்தில் இருக்கும் மகேந்திரனுக்கு

அருகில் கைகளைக் கட்டிக்கொண்டு

'தேமே' என்று இருப்பவர்தான் - வேணு செட்டியார் ! )





 மகேந்திரனும் அவருக்கு பதில் சொன்னார் :

 " ஓ ! பண்ணலாமே ! "



எதோ ,

'காப்பி சாப்பிடலாமா ? '

என்று வேணு செட்டியார் கேட்டமாதிரியாகவும் ,

" ஓ ! சாப்பிடலாமே ! "

என்று மகேந்திரன் 'பின் மொழிந்தது ' மாதிரியும்  இந்த உரையாடல்

இருந்தது !



 எனினும் மகேந்திரன் சற்று யோசிக்க ஆரம்பித்தார் !

என்னவாம் ?

" நாம் வைத்துக்கொண்டிருக்கும் ' முள்ளும் - மலரும் '  திரைக்கதையை

இவருக்கு கொடுத்த படம் பண்ணினால் என்ன ? "

என்பதுதான் !


பொதுவாக எல்லா தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களும் ' மசாலாத்'தனம்

உடையவர்கள் !   யாரும் பணத்தைப் போட்டு

' ரிஸ்க் ' ஐ 'ரஸ்க்'

மாதிரி எடுத்துக்கொள்வதில்லை - நம்ம வடிவேலு மாதிரி !




 எனவே , தான் எடுக்கப்போகும் திரைக்கதையை

' மசாலா தடவிய ' ( ! )   வேணு செட்டியாரிடம் சொல்வது என்பது "லொள்ளு "

என்பது ' கைப் புண்ணுக்கு கண்ணாடி '  என்கிற மாதிரியான

ரீதியில் உண்மை தான் !    அதிர்ச்சி


எனவே , முழு திரைக் கதையை மகேந்திரன் , தயாரிப்பாளரிடம்

சொல்லவே இல்லை !



   ' இப்படி செய்யலாமா, அது தர்மமா ,

இது மகேந்திருனுக்கே தகுமா ? "


என்று நீங்கள் கேட்பது புரிகிறது !



   ' நாயக ன் '   வேலு நாயக்கர் கூற்றுப்படி :


" நாலு பேருக்கு நன்மை என்றால் அது தப்பே இல்லை !


center] ( ' யார் அந்த 4 பேர் ?  மகேந்திரன் , ரஜினி, பாலு மகேந்திரா

மற்றும் இளையராஜா ?'

என்றா கேட்கிறீர்கள் !......ஹாய் .. ஹாய் .  சும்மா ஒரு 'பஞ்ச் '  டயலாக் !  )   புன்னகை [/center]



இருந்தாலும் :

 " துட்டு " கொடுத்து  படம் எடுப்பவரக்கு

வியர்க்காமல் இருக்குமா !

வேணு செட்டியார் , கேட்டாரே அந்த கேள்வியை !


 நீங்க டைரக்ட் செய்யப்பூகும் படத்தின் கதை

என்ன, மகேந்திரன் ? "


     மகேந்திரன் , இந்த கேள்வியை எதிர்ப்பார்த்தவரைப்

போல உடனே அவர் கேள்விக்கு பதில் சொன்னார் !

எப்படி சொன்னார் தெரியுமா ?


   " நான் இயக்கப் போகும் படத்தின்

கதை

அண்ணன் - தங்கை

பாசத்தை வெளிக்காட்டும் படம் ! "



 அவ்வளவுதான் !


 வானத்திற்கும் , பூமிக்கும் இடையே

வாமன அவதாரம் போல் குதிக்க ஆரம்பித்தார் , வே. செட்டியார் !

என்னவாம் ?

ஒண்ணுமில்லே , " பாச மலர் "   படம் மாதிரி உணர்ச்சிப் போராட்ட

வசனங்களும் , பாடல்களோடு இவர் படமும் ஹிட் ஆகும்

என்கிற ஆனந்தம் தான் வே. செட்டியாரின் மகிழ்ச்சி !



    ' போதுமப்பா , மகேந்திரா ! இது போதும் !

நீ பிச்சு உதறு !

இதுக்கும் மேலே நீ கதை சொல்லவேணா !

இதுதான் கதை ! முடிஞ்சு போச்சு ! "



 'தங்கப் பதக்கம் ' , ' ரிஷிமூலம் ' போன்ற

'கமர்ஷியன் '  வசனகர்த்தா ஆன  மகேந்திரன் அண்ணன் - தங்கை

பாசத்தை மையமாக வைத்து படத்தையே இயக்கினால்

நிச்சயம் வெற்றி பெறும் என்று வேணு செட்டியார்

எண்ணிவிட்டார் !


 வேணு செட்டியாருக்கு தெரியாது !

என்ன தெரியாது ?

'பாச மலர் ' படத்திற்கும் , 'முள்ளும் - மலரும் "  படத்திற்கும்

படமாக்கும் முறையில் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு என்பது !


'தங்கப் பதக்கம் ' பாணியில் , மேடை நாடகம் திரைப்படம் ஆன

மாதிரி , இந்த 'முள்ளும் மலரும் ' இருக்கும்

என்று ( தப்பு )  கணக்கு போட்டுவிட்டார் !


மகேந்திரன், மனதுக்குள் சிரித்துக்கொண்டார் !


 சரி, இதுவரை இந்த கதை

இன்பமுடன் சென்று கொண்டிருக்கிறது

அல்லவா , இப்போதுதானே பிரச்சனை ஆரம்பம் !






   " அண்ணன் 'காரக்டர் ' க்கு

யாரைப் போடப்போறே ? "


- வேணு செட்டியார் கிடுக்குப் பிடி !



   ' ரஜினி காந்த் ! "

 -  மகேந்திரனின் 'சம்மட்டி ' அடி !



   அவ்வளவுதான் !  

வேணு செட்டியாரின் முகம்
 கறுத்து விட்டது !


 ' என்ன , விளையாடுறயா ?

அந்த ரஜினி காந்த் செம கறுப்பான ஆளு !


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Camerakck


போதாக்குறைக்கு அவர் வில்லனாக நடிக்குறாரு !

நீ வேறே ஆளப் போடு ! "

- வேணு செட்டியார் !


 " ரஜினிதான் இந்த 'ரோல் ' க்கு சரிபட்டு வருவார் !

படத்தில் அவர் பெயர் " காளி " !

நூறு சதவிகிதன் இந்த 'ரோல்' க்கு சரி பட்டு வருவார் !

அவரை ஒதுக்கி வேறு ஆளைப் போடுவது என்பது

என்னால் எண்ணிக்கூட பார்க்கமுடியவில்லை ! "

- மகேந்திரன் !



" அத்தானே பார்த்தேன் !

ரஜினி உனக்கு 'குளோஸ் ' ' பிரண்டு ' ! அத்தான்

உனக்கு வேறு நடிகரை நினைச்சுப் பார்க்க முடியவில்லை ! "

- வேணு செட்டியார் !



 " இல்லை , ஐயா !  எனக்கு ரஜினி நண்பர்

ஆகா இல்லாவிட்டாலும் , இந்தக் படத்திற்கு அவரைத்தான்

நான் பரிசீலனை செய்திருப்பேன் , இது உறுதி ! "

- மகேந்திரன் !




 செட்டியார் , இயக்குனரை

கூர்ந்து கவனித்தார் - பேசாமல்

இருந்து விட்டார் !



     " ஒரு திரைப்பட தயாரிப்பின் போது

ஒரு நல்ல இயக்குனருக்கு :



1. அவருடைய சிந்தனைக்கு முழு சுதந்திரம் தரவேண்டும் !


2. தயாரிப்பாளர் அல்லது மற்றவர்களின் 'தலையீடு '

ஒருபோதும் இருக்கக் கூடாது !


3. அப்படி இயக்குனருக்கு இந்த அதிகாரங்கள் கூட

தயாரிப்பாளர்கள் தரவில்லையென்றால் அந்த இயக்குனர்கள்

அந்த படத்தில் இருந்து விலகிடவேண்டும் ! "  


- இயக்குனர் மகேந்திரன் !




    கீழ் கண்ட எடுத்துக்காட்டை  படியுங்கள் :

!



   ' தெய்வத்தாய் ' படத்தை இயக்கிய பி மாதவனை

அழைத்து எம்ஜிஆர் , தனக்கு இன்னொரு படத்தை இயக்கித் தருமாறு

வேண்டினார் !

காரணம் :

பி . மாதவன் , ' தெய்வத்தாய் ' படத்தின் பாடல்களை அழகாக

முறையில் படம் எடுத்தது மக்கள் திலகத்திற்கு மிகவும்

பிடித்திருந்தது !


ஆனால் , பி மாதவன் இன்னொரு எம்ஜிஆர் படத்தை இயக்க

மறுத்து விட்டார் !

' க்யா ஹுவா ' ?


' தெய்வத்தாய் ' படத்தில் எம்ஜிஆரின் தலையீடு

மாதவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவே இல்லை !

மாதவன் ( மறுபடியும் )  'உஜாலாவுக்கு ' .......ஹி..ஹி ...

சிவாஜிக்கு மாறிவிட்டார் !


 இப்போது கூட .....நடிகர் .......

...வேணா ...வேணா .....சொன்னால் வீண் பிரச்சனை வரும் !



மகேந்திரன், ரஜினியை சந்தித்தார் .....

'காளி ; யை அறிமுகம் செய்துவித்தார் !

ரஜினி 'காளி ' யை ஈற்றுக் கொண்டார் !

அவ்வளவு ஏன், காளியாகவே

தன்னை மாற்றிக்கொண்டார் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Camera4



அடுத்து ......

'எஞ்சினியர் ' ரோல் லுக்கு யாரைப் போடலாம் ?

மகேந்திரனும் , கமலும் நெருங்கிய நண்பர்கள் !

எனவே மகேந்திரன் கமலை அணுகினார் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Downloymy



ஆனால்.....

இந்த படம் எடுக்கப் பட்ட காலகட்டத்தில் கமல் நிறைய

படங்களில் நடிக்க 'கமிட் '  ஆனதால் , 'முள்ளும் மலரும் '

படத்தில் கமல் நடிக்க இயலாமல் போய்விட்டது !


அப்புறம் ?

உங்களுக்கு தெரியாதா என்ன !


சரத் பாபு நடித்தார் !





 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Mullummala



(  கமல் நடித்த ' மீண்டும் கோகிலா ' படத்தை மகேந்திரந்தான்

இயக்க வேண்டும் என்று கமல் விரும்பினார் !


ஆனால் , இப்போது மகேந்திரனால் ' மீண்டும் கோகிலா ' படத்தை

இயக்க முடியாமல் போய்விட்டது  !    சோகம்  


என்ன கொடுமை , சிவா சார் !     சிரி    )



 மற்ற கலைஞர் கள் ??


       'படா பட ' ஜெயலட்சுமி , ஷோபா ,

போன்ற கலைனர்கள்  இயக்குநருக்காக 'பிறந்தவர் கள் '  மாதிரி ( ! )

அமைந்தது ஆச்சர்யம் தான் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Camerabnb






இசைக்கு ?

இளையராஜா !  

இந்த படக்கதையின் சூழலுக்கு இசையமைக்க இளையராஜாதான்

தகுதியானவர் என்று மகேந்திரன் நினைத்தார் .....

அது எவ்வளவு தூரம் உண்மை என்பது 'முள்ளும் மலரும் '

படப் பாடல்களே சாட்சி !



ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா !


 முதலில் மகேந்திரன் அமர்த்திக் கொண்ட ஒரு மூத்த

ஒளிப்பதிவாளர் ........அவர் பெயரை சொன்னால் வம்பு என்று

மகேந்திரனனே நினைத்து 'கப் சிப் '   ஆகிவிட்டார் !

படத்திற்கு 'லொகேஷன் ' பார்க்க அவரை அழைத்துப் போன

மகேந்திரன் , அந்த ஒளிப்பதிவாளர்  'லொகேஷன் ' ஐ சரியாக

கவனிக்காமல் ' தேமேனே ' என்று இருந்ததது ....அதுவும் ...

காரில் 'கம் ' என்று இருந்தது மகேந்திரனுக்கு கடுப்பைத் தந்தது !


கமலிடம் சென்றார் , மகேந்திரன் !


" மகேந்திரன் !  உங்கள் 'டேஸ்ட்' க்கு  பொருத்தமான வர

பாலு மகேந்திரா என்பவர் !

அவர் , உங்கள் எண்ணங்களை அவரின் காமெரா மூலம்

பிரதிபலிப்பார் ! "


---- சொன்னார் கமல் !


பாலு மகேந்திரனும் , இயக்குனர் மகேந்திரனும் " ராசி "

ஆயினர் !




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Camera5






     ' முள்ளும் மலரும் '

படப் பிடிப்பு !



   உமா சந்திரைன் ' முள்ளும் - மலரும் ' நாவலை

புத்தக வடிவில் படித்தவர்கள் , ' முள்ளும் - மலரும் '  திரைப்

படத்தை பார்த்திருந்தால் ......இரண்டிற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள்

இருப்பதை காணலாம் !


காரணம் ?


இயக்குனர் மகேந்திரன் அந்த நாவலை முழுவது படிக்கவில்லை !

அவருக்கு தேவை :

வித்தியாசமான கதா பாத்திரங்கள் ,

வித்தியாசமான லொகேஷன் கள் ,

வித்தியாசமான ' ஷாட்கள் ' !


மேற்கண்டவை , ' முள்ளும் மலரும் '  நாவலைப்

முத்தை 50 பக்கங்களைப் படித்தே அவர் தெரிந்து கொண்டார் !

மகேந்திரனுக்கு அவை போதும் !

முழு நாவலை மகேந்திரன் , படத்தை எடுத்து முடித்த பின்பு,

அதுவும் படம் திரைக்கு வந்த பின்னர் படித்தாராம் !


சுருக்கமாக சொல்லப் போனால் , மகேந்திரன் ஒரு நாவலைப்

படமாக்க விரும்பவில்லை ,

மாறாக ஒரு நாவலில் அவருக்குத்

தேவையானவை மட்டும் எடுத்துக் கொண்டு , தன

இஷ்டம் போல் , தனது பாணியில் படம் எடுத்துக் கொண்டார் !

மகேந்திரன் செய்தது சரியா தவறா என்பது பற்றி நான் ஒன்றும்

சொல்ல விரும்பவில்லை !


அது அவர் இஷ்டம் !




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Camerakik




லொகெஷன்ஸ்:


     கர்னாட மாநிலத்தில் கிட்டத்தட்ட 2000 கிலோ

மீட்டர்கள் சுற்றி அலைந்து :


சிருங்கேரி

என்கிற இடத்தை மகேந்திரன் பிடித்தார் !

அந்த இடத்தில் இந்த படக் கதைக்குத் தேவையான :

நிலக்கரி சுரங்கம் ,

விஞ்சு ஊர்தி

காடு போன்ற சூழல்

ஆகியவை இருந்தன !

எனவே இந்த இடம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது !


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Mullumixi



 இது தவிர , மகேந்திரனுக்கு

இன்னொரு பழக்கம் இருந்தது !

அது என்ன தெரியுமா ?


   மகேந்திரன் எங்கேயாவது பயணிக்கும் போது




தன்னைக கவரும் காட்சிகளை ஏதேனும் கண்டால் அவைகளை

தான் இயக்கும் படங்களில் பொருத்தமான இடங்கள்

அமைந்தால் ( யாருக்கும் தெரியாமல் ( ! ) )   ' நைசாக '

புகுத்திவிடுவாராம் !


'முள்ளும் - மலரும் '   படத்திலும்  மகேந்திரன் , இந்த 'கமால் ' வேலைகள்

செய்தார் !


அவை என்ன தெரியுமா !




1. ஒரு முறை மகேந்திரன்

" உறியடி உற்சவம் "

நடப்பதை பார்த்தார் !

'முள்ளும் - மலரும் '  படத்தில் ரஜினி உறியடி அடிக்கும்

காட்சியினை - அதுவும் - இரண்டு தடவைகள் - படத்தில்

சேர்த்துக்கொண்டார் !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Mqdefazwz





2. சிருங்கேரி  அருகே  இருக்கும் ஊர் ஆற்றில் - மீன்கள் - அதுவும்

அளவில் பெரிய மீன்கள் - மக்கள் போடும் அரிசி பொரியை கரைக்கே

'கிட்டே ' வந்து சாப்பிடுவதை மகேந்திரன் பார்த்தார் !


ரஜினி மனைவி 'படா பட ' ஜெயலட்சுமியை ஒரு மீன் பைத்தியம்

என்றும் , அத்தோடு அவர்  " சாப்பாட்டு ராமி "   (   'சாப்பாட்டு ராமன் '  - எதிர்ப்பதம் ! )

என்றும் முடிவானது !




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Camera7


தொடரும்.........................
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Tue Jul 15, 2014 4:35 pm

      ' முள்ளும் - மலரும் ' ......

தொடர்ச்சி! .......



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Acaciathor




 படப்பிடிப்பும் ஒரு தடங்கலும் இல்லாமல்

தொடர்ந்து நடைபெற்றது !

மிகக் குறைந்த அளவே வசனங்கள் ,

முக பாவனைகளிலே கதையை சாமர்த்தியமாக நகர்த்தினர்

மகேந்திரன் !

எல்லோரும் ஒரு குடும்பம் போல் பழகினர் !



பாலு மகேந்திரா மட்டும் ஷோபா வுடன் சற்று ....சற்றுசற்றுசற்று

நெருக்கமாஆஆஆஆஆஅக   எப்போதும் காணப்பட்டார் !

காரணம் உங்களுக்கு தெரியாமல் இருக்காது !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 14balumahe



" யோவ் ! எனக்குத் தெரியாதுய்யா , நீ சொல்லுப்பா ! "


என்று என்னை யாராவது அதட்டினாலும் சொல்ல நான்

தயாரில்லை , ஸ்வாமி !






இறுதிக் காட்சி !

( ' கிளைமாக்ஸ் ! '  )



 கதைப் படி , ஷோபா , தான் மணக்க விருக்கும்

சரத் பாபு மற்றும் அவரது குடும்பத்தினரருடன் , அண்ணன் காளியை

விட்டு பிரியும் காட்சி !


முதலில் தைரியத்தை வரவழைத்து வள்ளி ( ஷோபா )  , தன

அண்ணனை விட்டு பிரிந்து போக, காளி தனித்து விடப்பட,

திடீரென்று , வள்ளி ஊட்டி வந்து அண்ணனைக் கட்டிப் பிடித்து :


' எனக்கு நீ தான் முக்கியம் , அண்ணா ! "


என்பதை வசனமே இல்லாமல் தன அழுகையின் மூலம்

'நடிப்பார் !'


அண்ணன் காளிக்கோ பெருமை பிடிபடாது !



 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Camera8




தங்கையை அழைத்துச் சென்று சரத் பாபுவிடம் சென்று :


' உலகத்திலே தனக்கு அண்ணன் தான் முக்கியம் என்பதை என்

தங்கை நிரூபித்துவிட்டாள் !

இப்போ என் தங்கையை உங்களுக்கு மனைவியாகத் தர

நான் தயார், சார் ! "


என்று காளி கூற .......

அதன் பின்னர் ரஜினி கூறும் வசனம்தான் படத்தைப்

பார்க்கும் எல்லோருக்கும் பிடித்தது !


அந்த வசனம் என்ன தெரியுமா ?




        "  .......ஆனா  ....இப்போவும்

உங்களைப் பார்த்தால் எனக்கு

பிடிக்கலையே சார் ! "


என்று கேலியும் கிண்டலும் கலந்து ரஜினிக்கே

உரிய ' Body  Language ' உடன் சொல்வது படத்தின் வெற்றிக்கு

முக்கிய காரணமாக அமைந்தது !




   காளியின் உண்மையான பிடிவாத

குணத்தை அந்த வசனம் அழகாக சித்தரித்துக் காட்டுகிறது !



மேற்கண்ட காட்சியில் அனைவரும் நன்றாக நடித்தனர் !

சரத்பாபுவும் நன்றாகவே நடித்தார் !


ஆனால் மேற்கண்ட காட்சியில் நடித்த

சரத் பாபு அப்புறம் அந்த படப்பிடிப்பு நடக்கும்

ஊரில் காணோம்  !




   என்ன ஆச்சு , சரத் பாபுவுக்கு ?


எல்லோரும் தேடினார்கள் , தேடினார்கள் .......

கண்டார்கள் , சரத்பாபுவை !

எங்கே தெரியுமா ?


மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் !


சரத்பாபு என் அப்படி மறைந்தார் ?


காரணத்தை சொன்னால் சிரிப்பீர்கள் !




 " அதெப்படி  காளி கடைசி

காட்சியில் கூட என்னைப் பிடிக்கவில்லை என்று

சொல்லலாம் ! ? "


கோபத்துடன் இப்படி ஒரு கேள்வியை அவர் கேட்டவுடன்

இயக்குனர் மகேந்திரன் சிரித்து விட்டார் !


பின்னர் மகேந்திரன், வழக்கமான பாணி சினிமாத்தனத்துடன்

தன பாணி எப்படி மாறுபட்டிருக்கிறது , அதை எப்படி சரத்பாபு

கவனிக்கத் தவறிவிட்டார் என்பதை ஒரு நீண்ட உரையுடன்

சொல்லி சரத்பாபுவை ' சமாதானப் ' படுத்தினாராம் !


" மாமூல் " படங்களில் நடித்து வந்த சரத்பாபு , :

" சினிமா இப்படியும் இருக்குமா ? "

என்று வியந்தாராம் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Camera6





     (  ' வீர பாண்டிய கட்ட பொம்மன் ' படத்தை

சிவாஜி ரசிகன் ஒருவனின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து

சென்ற எம்ஜிஆர் ரசிகன் , படம் முடிந்து வெளியெ வந்து சிவாஜி

ரசிகனைப் பார்த்து இப்படி கேட்டானாம் :


" டேய் , சிவாஜி பைத்தியம்  !

எங்க வாத்தியார் ( எம்ஜிஆர் )  மட்டும் இப்படி கட்டபொம்மன்

ஆகா நடித்திருந்தால் இப்படி மானம் கெட்டு ( ! ) தூக்கில்

தொங்காமல் எல்லா வெள்ளைக்காரன்களை எல்லாம்

'சொய், சொய்' என்று கத்திச் சண்டை போட்டு அவர் மீண்டும்

பாஞ்சாலங்க்குறிச்சிக்கு போயிருப்பார் , தெரியுமா ? "


என்று கேட்ட மாதிரி சரத் குமாரின் மன நிலை

அப்போது இருந்திருக்கலாம் ...லாம்....லாம்...லாம் ! )  


' கட்டபொம்மன் ஜோக் ' சொன்னவர் :

சின்ன அண்ணாமலை !  )  




' முள்ளும் - மலரும் ' படப்பிடிப்பு - இது போன்ற

ஒரு சில  இலேசான சம்பவங்கள் தவிர வேறு

எந்த பெரிய பிரச்சனைகள்ள் இல்லாமல்

நன்றாகவே நிறைவடைந்தது !



 ஆனால் பிரச்சனை

இனிமேல்தான் - அதுவும்

தயாரிப்பாளர் மூலம்தான் !


என்ன ஆச்சு ?



மகேந்திரன் மேல் வைத்திருந்த அதீத நம்பிக்கையால்

தயாரிப்பாளர் வேணு செட்டியார் படப்பிடிப்புத் தளங்களுக்கு

வருகை தரமாட்டார் , படப்பிடிப்புகளிலும் தலையிட மாட்டார் !


அதுதான் பிரச்சனை ஆகிவிட்டது !


படம் முடிவடைந்து , ஒலிச்சேர்க்கை மற்றும் இதர தொழில்நுட்ப

வேலைகளுக்கு " டபுள் பாசிடிவ் "   பிரிண்ட்  ஸ்டுடியோவில்

வைக்கப் பட்டிருந்தது !


வேணு செட்டியார் , இயக்குநருக்குத் தெரியாமல் , விநியோகஸ்தர்

சிலரை  அழைத்துச் சென்று ஸ்டுடியோ வுக்குச் சென்று

'முள்ளும் - மலரும் '  ' டபுள் பாசிடிவ் '  பிரிண்ட் ஐ பார்த்துத்

தொலைத்தார் !


அவ்வளவுதான் !

' லபோ திபோ ' என்று கத்திக் கொண்டு தியேட்டரை விட்டு

வெளியெ வந்தார் !

இவர் படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதை ஸ்டுடியோ ஊழியர்கள்

மகேந்திரனிடம் தெரிவிக்க அங்கே உடனே வந்தார் மகேந்திரன் !





  செட்டியார் புலம்ப ஆரம்பித்தார் !



     " போச் !   போச் ! எல்லாம் போச் !

அடப் பாவி ! மகேந்திரா ! என் தலையிலே மண்ணை அள்ளிப்

போட்டுட்டு விட்டாயே !

படத்திலே வசனமே இல்லையே !

அங்கே ஒண்னு , இங்கே ஒண்ணு வசனம் கிடக்கு !

படமா எடுத்திருக்கே , படம் ! "


மகேந்திரன் , செட்டியாரிடம் என்ன சொன்னார் ?

குச் நஹி ! குச் நஹி கஹா !

அத்தான் -  ஒண்ணுமே பதிலே சொல்லவில்லை !

மகேந்திரனுக்கு நன்றாகவே தெரியும் , செட்டியார் அரற்றுவதில்

நியாயம் இருக்கின்றது !

என்ன நியாயம் ?



   செட்டியார் , ஒரு ' வணிக வியாபாரி ! '

அவர் மசாலாத்தனமான படங்களைத்தான்

எதிர்ப்பார்ப்பார் !

'அட்லீஸ்ட் '  மகேந்திரனின்  ' நிறை குடம் ' படம் மாதிரி

மசாலாத்தனமாதிரியான  படத்தைத்தானே எதிர்ப்பார்த்தார் !    பைத்தியம்



" பரோட்டா - பெப்பர் பாயா "   கேட்டவருக்கு

" ஜெயின் சாம்பார் - இட்டிலி "  யை அவர் முன்

வைத்தால் ?    பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 745155



எனவே மகேந்திரன் 'கம் ' என்று இருந்து விட்டார் !





      இதற்கு அப்புறம்தான் நான் முன்பு

சொன்ன அந்த ' டிரைலர் ' செய்தி நடந்தது !


 கிட்டத்தட்ட  படம் வெளிவரும் நிலை !

தயாரிப்பாளர் செட்டியாருக்கோ ' சேஷ வான்  பிரைடு  ரைஸ் ' ஐ

தண்ணீர் இல்லாமல் , (  டோமொட்டோ சாஸ் கூட இல்லாமல் ! )

சாப்பிட்ட மாதிரியில் இருந்தார் !



     கமல் , ' முள்ளம் - மலரும் '  படம் பார்த்தார் !



        கமல் சொன்னார் :



 
   ' மகேந்திரன் படம் மிக நன்றாக இருக்கிறது ,

நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு

இருக்கிறது !


ஆனால் ஒரு குறை :

இந்த படத்தில் ஷோபாவும் சரத் பாபுவு நேரிடையாக ஒரு சந்திப்பும்

இல்லாமல் , பழக்கமும் இல்லாமல் , :

' செந்தாழம் பூவில் ' பாடலில் சந்தித்துக்கொள்வதாக ஆரம்பிக்கின்றதே !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Vxvvxv



எனவே சிறிது அறிமுகம் ஏற்பட்டு பின்னர் பாடல்

ஆரம்பித்தால் நலம் ! "




 கமல் சொன்னதைக் கவனித்த மகேந்திரன் , அவர்

சொல்வதை ஏற்றுக்கொண்டார் !


ஆனால்........


" எப்படி கமல் !  இப்போவே தயாரிப்பாளர்

என்னைப் பார்த்து சீறுகிறார், மறுபடியும் படப் பிடிப்பு

என்றால் அவர் வெகுண்டு எழுவாரே ! "




கமல்,  ' நான்  செட்டியாரிடம் பேசிப் பார்க்கிறேன் !

அவர் சம்மதித்தால் நலம் ! "  

என்றார் !



    ஆனால் வேணு செட்டியார் கடுப்பு ஆகி

விட்டார் !


" ஏற்கனவே படம் கந்தலாக உள்ளது !

இந்தஅழகில் மறுபடியும்  ' ரிஷூட் '  பண்ண என்னால்

முடியாது ! "


என்றார் !



   ' இல்லை ஐயா !

இந்தபடம் :

ரஜினிக்கு ,

மகேந்திரன்னுக்கு ,

பாலுமகேந்திராவுக்கு ,

மற்ரும்

இளையராஜாவுக்கு

ஆகியோருக்கு மிகப் பெரிய " பிரேக் '  கிடைக்கப்

போகிறது !  எனவே நீங்கள் உதவி செய்ய வேண்டும் ! "  




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Imageslxl





 செட்டியார் சொன்ன ஒரே பதில் :


" நோ ! "



   ஒரு கணம் யோசித்த பின்னர் கமல் , செட்டியாரிடம்

சொன்னார் :


" நீங்கள் ஆட்சேபனை எதுவும் சொல்லவில்லை என்றால்

இந்த படப்பிடிப்புக்கான செலவை நானே செய்து கொள்கிறேன் ,

என்ன சொல்கிறிர்கள் ? "



 செட்டியார் , கமலை வெறித்துப் பார்த்தார் !

பின்னர் சொன்னார் :


' சரி , என்ன வேனும்லானும்  செய்து கொள்ளுங்கப்பா ! "




 
   செட்டியார் - மனதிற்குள் :


" இந்த கமல் கூட சரியான 'மெண்டல் ' போலிருக்கு !   சிரி சிரி





   'சத்யா  ஸ்டுடியோ ' வில் ஒரு தோட்டத்தில்

ஷோபா , பாலு மகேந்திரா , சரத் மற்றும் துணை நடிகைகளை

அழைத்து வந்து படப்பிடிப்பை  முடித்தனர் !  எல்லாம்

கமல்   தந்த  பணம் தான் !

இன்றைய  மதிப்பில்  கமல் அந்த  படப்பிடிப்புக்கு  ரூபாய்

10 லட்சம ஆகக் கூடஇருக்கலாம் !





       ' முள்ளும் - மலரும் '

படம்  'ரிலீஸ் '



படம் வெளியானது !


முதல் 3 வாரங்கள் ......மக்கள் படத்தை பார்த்தனர் -

மெளனமாக  கலைந்து போயினர் !



" படம் எப்படிப்பா இருக்கு ? "

என்று  படம் பார்க்க வந்தவரகளைக்  கேட்டால் :


" நினைத்தாலே  இனிக்கும் "  படத்தில்  நாயகி  ஜெயபிரதா

தன் முகத்தை :

கிழக்கு - மேற்கு

வடக்கு - தெற்கு

என்று ,மாறி - மாறி தலையை ஆட்டி கமலையும்

( அத்தோடு நம்மையும் ! )    கடுப்படித்த மாதிரி ஒரு 'ரியாக்ஷனும் '

வெளிக்காட்டாமல் சென்றனர் !






   பதறிவிட்டார்கள் மகேந்திரனும்

கமலும் !



   செட்டியார் :


" அவ்வளவுதான்பா ! படம் படுத்துச்சி !  ஊத்திடுகிடுச்சி !

தேறாது !

அத்தோடு நம்ம கதையோ முடிஞ்சு போச்சு ! "


என்றார் !



   
 ரஜினி :


" எனது நடிப்புக்கு ஒரு திருப்பி முனையாக அமையும்

இந்த ' முள்ளும் - மலரும் '   படம் !

எனவே இந்த படத்திற்கு இன்னும்

'பப்ளிசிடி '

வேண்டும் ! "

என்றார் !




 அதற்கு செட்டியாரின் பதில் என்ன தெரியுமா ! ?





   " ஓடாத படத்திற்கும்

'பப்ளிசிடி ' தேவை இல்லை !


ஓடுகின்ற படத்திற்கும்

'பப்ளிசிடி ' தேவை இல்லை ! "




     அனைவரும் நொந்து போனார்கள் !



   அப்புறம் நடந்தது

தமிழ்த் திரைப்பட

உலகை திருப்பிப்

போட்டது !



        ' முள்ளும் - மலரும் ' திரையிட்ட

தியேட்டர்களில் நான்காவது வாரம் முதல் படம்

வெற்றி !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 13cjc


தியேட்டர்களில் மகிழ்ச்சி ஆரவாரம் !

கைத்தட்டல் ஓசை !

எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் !


' முள்ளும் - மலரும் ' படம் வெற்றி !

பாராட்டு மழை !

படம் 100 நாட்கள் வரை அவை ஓயவில்லை !



     வேணு செட்டியார் வாயடைத்துப் போய்விட்டார் !

நேரே மகேந்திரன் விட்டுக்குச் சென்றார் !

மகேந்திரா !  என்னை மன்னிச்சிடுப்பா! பிளீஸ் !

உன் மேலே நான் ரொம்ப கோவிச்சுபுட்டேன்!

இந்தா " பிளாங்க்க் செக் ! '

எவ்வளவு வேணும் என்றாலும் எழுதிக்கோ !

, எடுத்துக்கோ , மகேந்திரா ! "



     மகேந்திரன் அந்த 'செக்'  ஐ வாங்கி

பின்னர் செட்டியாரிடம் திருப்பிக் கொடுத்தார் !


சொன்னார் :


" இப்படி ஒரு வித்தியாசமான படத்தை இயக்க

நீங்கள் கொடுத்த இந்த சந்தர்ப்பமே

1000 கோடிக்கு சமம் !

இதனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ! "



   மகேந்திரன் ஒரு

நல்ல படைப்பாளி

என்பதற்கு இந்த

சம்பவம் ஒன்றே

போதும் !




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Ek1xF4INS3e08OsiIrJj+DSC07176








 
      ரஜினி :



" நான் நடித்த படங்களிலே எனக்கு மிகவும்

பிடித்த படம் :

" முள்ளும் - மலரும் " !



 மலேசிய நாட்டில் 'சண்' டி. வி விழாவில் ரஜினி !




 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





     ' வால் துண்டு !'

அத்தான் -

TAIL   PIECE  !  



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 529707dire



   
 மகேந்திரனும் இசையமைப்பாளர் இளையராஜாவும்

'முள்ளும் - மலரும் ' படத்தை மக்கள் எப்பரி ரசித்துப்

பார்க்கிறார்கள் என்பதை அறிய ஊர் ஊராக சென்றனர் !

சேலம் !

அந்த ஊரில் ஒரு தியேட்டரில் 'முள்ளும் மலரும் ' படம்

மிகவும் ' ஹவுஸ் புல்' காட்சிகளாக ஓடியது !

மகேந்திரனுக்கு இந்த செய்தி வியப்பாக இருந்தது !

நேரே தியேட்டருக்கு சென்றார் , அவருடன் இளையராஜா!

தியேட்டர் அதிபர் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு

படத்தைப் பார்க்க அழைத்தார் !

படத்தை மகேந்திரனும் , இளையராஜாவும் பார்த்தனர் !



படத்தைப் பார்த்த மகேந்திரனுக்கு அதிர்ச்சி !

என்ன ஆச்சு ?

படம் 6 ஆவது  ரீல் ஓடும் போது  .....

ரஜினி லாரியில் அடிபடுவார் ........

ரஜினி துடிப்பார் .....

மக்கள் துடிப்புடம் 'ரஜினிக்கு என்ன ஆச்சு ? '

என்கிற பதைப்புடன் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர் !

அப்போது ......7 ஆவது ரீல் தொடக்கம் ......

அப்போது பார்த்து .....


" இடை வேளை"     'கார்டு '  போட்டு மக்களை

'டென்ஷனில் ' தவிக்க விட்டு விட்டுருப்பதை

மகேந்திரன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் !


காரணம் ?

மகேந்திரன் , படத்தின் இடைவேளை யை 9 ஆவது

ரீலில்  அமைத்து வைத்தார் !

அதனை மாற்றி 6 ஆவது ரீலில் இடை வேளை ஐ சேலத்தில்

( மட்டும் ! )   விட்டிருந்தனர் !


படம் முடிந்தது ! நேரே தியேட்டர் அதிபரைப் பார்த்தனர்

மகேந்திரனும் இளையராஜாவு ம்!

" என்ன இப்படி இடைவேளை விஷயத்தை உங்கள் இஷ்டப்படி

வைத்திறுக்கிர்களே! "

என்று கேட்க .....

தியேட்டர் அதிபர் மிகக் 'கூலாக '   சொன்னது :



" எங்க தியேட்டர் ஆபரேட்டர் பையன் ரொம்ப புத்திசாலி சார் !

மக்கள் , லாரியில் அடிபட்ட ரஜினி பிழைத்தாரா இல்லையா

என்கிற டென்ஷனில் வைத்து 'இடை வேளை ' விட்டால் , இடைவேளைக்கு

அப்றபும் படத்தின் எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகம் ஆகும் !

இடைவேளைக்கு அப்புறம் ரஜினிக்கு ஒரு கை மட்டும்

போய்விட்டது என்று தெரிந்து ஆறுதல் அடைகிறார்கள்


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Mullumyky




பாருங்கள், அதுதான் ( அத்தான் ! )    படத்தின் வெற்றிக்கு

காரணம் ! "


மகேந்திரன் வாயடைத்து பேசாமல் இருந்தார் !




( நம்ம ( ! )   விஜயகாந்த் அங்கே இருந்திருந்தால் அந்த

தியேட்டர் அதிபரை ஒரு 'பளார் ' விட்டுருப்பார் இல்லே ! )





அப்புறம் என்ன !

அங்கே, பக்கத்தில் இருந்த இளையராஜா பாட ஆரம்பித்தார் !

என்ன பாட்டு தெரியுமா ?





"  நமக்கும் மேலே ஒருவனடா !

அவன்   நாலும்   தெரிந்த தலைவனடா !

தினம் நாடகம் ஆட்டும் கலைஞனடா !   "  





உங்கள் கருத்து ?




   %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




       அடுத்த கட்டுரை :




    எனக்குப் பிடித்த

திரைப்படப் பாடல் :



" யார் அந்த நிலவு ,

என் இந்த கனவு ? "


(  படம் : " சாந்தி " ( 1965 )   )





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Hqdefaviv




நடிகர் திலகத்திற்கும்

பாடலை உருவாக்கியவர்களுக்கும்

( டி எம் எஸ் - கண்ணதாசன் - மெல்லிசை மன்னர்கள் )

இடையே உருவான

ஆரோக்கியமான போட்டி !



எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் Tue Jul 15, 2014 5:27 pm

முள்ளும் மலரும் படத்தில் நடித்த அந்த அருமையான நடிகை ஷோபா ஏன் தற்கொலை செய்து கொண்டார்? தெரிந்தால் சொல்லுங்களேன் டாக்டர் சார்.  அன்று ஒரு முறை இந்தப் படத்தைப் பார்த்த எனது மலாய் நண்பர், மொழி விளங்காவிட்டாலும் ஷோபாவின் அழகில் மயங்கிப் போனார், அப்படி ஓர் இயற்கை அழகை
தன்னுள் கொண்டிருந்தவர் ஷோபா.

முள்ளும் மலரும் இங்கே இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=pRBZiCprjFY
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by rksivam Wed Jul 16, 2014 5:49 pm

ஐயா,

பொன்னியின் செல்வன் திரை கதையை மற்றும் வசனங்களை ஜான் மகேந்திரன் பூர்த்தி செய்யாமலே போனதாகவும் வெகு நாட்கள் புரட்சி நடிகர் அவருக்கு சம்பளம் அளித்ததாகவும் தூர்தர்ஷனில் ஒரு பேட்டியில் சிலவருடங்கள் முன்பு சொல்லியிருந்தார்.

சரியான நடிகர் கூட்டம் கிடைக்காததாலும் தயாரிப்பு செலவு, தயாரிப்பாளர் முன்வராமை, திமுக கட்சிப்பணி காரணத்தினால் நேரமின்மை ஆகிய பல காரணங்களினால் பொன்னியின் செல்வன் படத்தை தயாரிக்க முடியவில்லை. இப்போது அந்த கதையின் உரிமை கமலஹாசனிடம் இருப்பதாக செய்தி.

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by pon.sellamuththu Thu Jul 17, 2014 4:02 pm

ஈகரை நிறுவனர் திரு.சிவா அவர்களுக்கு அன்பு வணக்கம்.
“பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !”
என்ற இந்த இழையின் ஒவ்வொரு பக்கத்திலும்
“First topic message reminder “ தேவையில்லை என்பது எமது கருத்து.
புதிய நண்பர்கள் இப்பகுதியை பார்க்கும் போது சற்று குழப்பமடைய
வாய்ப்புள்ளது. மேலும் இடமும் விரயமாகிறது.



அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by pon.sellamuththu Thu Jul 17, 2014 4:12 pm

மருத்துவர் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் பதிவு(எழுத்து) பாணியை மாற்ற வேண்டாம்.
இருப்பினும் இடை வெளியை இன்னும் கொஞ்சம் குறைக்க சற்று முயற்சியுங்கள்.

அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by pon.sellamuththu Thu Jul 17, 2014 4:41 pm

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
Post by mkrsantharam on Wed May 14, 2014 7:33 அம

பாகவதரை எப்படியாவது
சந்தித்துவிட வேண்டும் என்று 'கங்கணம் ' கட்டி
வீட்டை விட்டு ஓடி வந்த பெண்கல் ஏராளம் !

தொடரும்.........
எம்கேஆர்சாந்தாராம்


பாகவதரின் தம்பி திரு.ஷண்முகம்  என்பவர் M.A.V.பிக்சர்ஸில் பணி புரிந்து வந்தார். அவர் தமது தமையனாருக்கு பெண்கள் இப்படியாக கடிதம் எழுதுவார்கள் என்று சொல்கிறார். “என்னை ஓர் இரவு மட்டும் உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள். மறுநாள் நான் தற்கொலை செய்து கொண்டு விடுகிறேன்.” இப்படி வரும் கடிதங்களையெல்லாம் தீயிலிட்டு பொசுக்கி விடுவார் பாகவதர் என்று சொல்கிரார் அவரின் தம்பி.


அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Tue Jul 29, 2014 7:49 am

மாணிக்கம் நடேசன் wrote:முள்ளும் மலரும் படத்தில் நடித்த அந்த அருமையான நடிகை ஷோபா ஏன் தற்கொலை செய்து கொண்டார்? தெரிந்தால் சொல்லுங்களேன் டாக்டர் சார்.  அன்று ஒரு முறை இந்தப் படத்தைப் பார்த்த எனது மலாய் நண்பர், மொழி விளங்காவிட்டாலும் ஷோபாவின் அழகில் மயங்கிப் போனார், அப்படி ஓர் இயற்கை அழகை
தன்னுள் கொண்டிருந்தவர் ஷோபா.

முள்ளும் மலரும்  இங்கே இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=pRBZiCprjFY
மேற்கோள் செய்த பதிவு: 1074055





   அன்புள்ள திரு . மாணிக்கம் நடேசன்  அவர்களுக்கு,


உங்களின் கடிதத்திற்கு மிக்க நன்றி !


நடிகை ஷோபா வின்  முடிவுக்கான காரணங்கள் சரியாகத்

தெரியவில்லை, அரசல் புரசலாக அங்கொன்றும் இங்கொன்றுமாக

செய்திகள் , இவரது மரணத்தைப் பற்றி வந்துகொண்டுதான்

இருக்கின்றன.


ஆனால் ஆணித்தரமான ஆதாரங்களுடன் இவரது மரணத்திற்கு

சான்றுகள் கிடைத்தபாடில்லை !


தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால்தான் நான் இந்த நடிகையின்

மரணத்தைப் பற்றி எழுத முடியும் !


( இவரது மரணத்தை நீங்கள்   :

" தற்கொலை "

என்று எழுதுவதற்கும்

நானோ வெறும்

" மரணம் "

என்று எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது

அல்லவா  !   அய்யோ, நான் இல்லை )


ஆனால் ......

ஓட்டலுக்குள் சென்று இட்டிலி களை ' ஆர்டர் ' செய்தால்,

நாம் வேறு எதனை கேட்க மறந்தாலும் ....

சாம்பாரை மட்டும் கேட்க மறக்க மாட்டோம் அல்லவா !

அதுபோல் :


ஷோபா மரணத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால்

பாலு மகேந்திரா வைப் பற்றியும்

நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும் !




எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by அசுரன் Tue Jul 29, 2014 8:55 am

ஷோபா மரணத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பாலு மகேந்திரா வைப் பற்றியும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும் ! wrote:

இது என்னப்பா புதுக்கதையா இருக்கு... ம் அப்புறம் புன்னகை

பழைய பட உலகமே விந்தையானது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Fri Aug 01, 2014 5:10 pm

அசுரன் wrote:

இது என்னப்பா புதுக்கதையா இருக்கு... ம் அப்புறம் புன்னகை

பழைய பட உலகமே விந்தையானது
மேற்கோள் செய்த பதிவு: 1076306



அன்புள்ள  ' அசுரன் '   என்பவருக்கு,


" கல்யாண பரிசு " படத்தில் போலி எழுத்தாளர் ஆக வரும்

' எழுத்தாளர் வைரவன் '- கே . ஏ.  தங்கவேலு விடம் , அவர்

மனைவி ( நிஜ மனைவியும் கூட ! )  , தன தோழி ஒருத்தியை


" ராட்சசன்  பொண்டாட்டி "

என்று அவரிடம் அறிமுகப் படுத்த , தங்கவேலு ,


" ராட்சசன் பொண்டாட்டியா !  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 433338962  "

என்று அலறுவது மாதிரி ......

என் நிலைமை .....நீங்கள் " அசுரன் "   என்று நீங்கள்

உங்களின் பெயரை எழுதுவது !   நடனம்





   




          ஆமாம் , அசுரரே , ரொம்ப விந்தைதான் !


நான் என்ன , ரொம்ப ரொம்ப பழசை யா கிளிறினேன் !




1. ' மாடர்ன் தியேட்டர்ஸ் ' அதிபர் தி ஆர் சுந்தரம் , பிரபல கவர்ச்சி நடிகை


கே எல் வி  . வசந்தா வை



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 O9Dfq3WPRciH5JfPw6rQ+download




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 MqRVZaoQSdyN0KYBg1m8+07cp_bhoologa_ramba_114098e



   ( அந்த கால " நயன் தாரா ! "  - கே .எல். வி. வசந்தா ! )






ஆஸ்திரேலியா பக்கத்தில் உள்ள

' பிஜூ  ' தீவுகளுக்கு மாதக் கணக்கில் அழைத்துச்

சென்றதையா எழுதிவிட்டேன் !






2. 'காதல் மன்னன் ' ஜெமினி கணேசன் , தன மனைவி

பாபுஜியுடன் இரவில் தூங்க்கிக் கொண்டிருக்கும் போது,



 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 5EVBOO5xShmodXOtwfkd+babji


( மனைவி பாப்ஜி வுடன் ஜெமினி கணேசன் ! )



கொட்டும் மழையில் , கும்ம்மிருட்டில்  கதவைத் தட்டிய

நடிகையர் திலகம் சாவித்திரியை அடைக்கலம் கொடுத்ததோடு

அவருக்கு தன மனைவி ஸ்தானத் தை பகிர்ந்து கொடுத்ததையா

எழுதிவிட்டேன் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 MkdNb61TTRqrQVpVd9JQ+images(1)





அப்படி எல்லாம் விரும்பி சாவித்திரியை காதல் திருமணம்  செய்து

கொண்ட ' காதல் மன்னன் ' , இரவில்

தலையணைகளை , அவர் தூங்க்குவது போல் ' செட் அப் '

செய்து , சாவித்திரியை ஏமாற்றி .......

" படி ( ! )  தாண்டியதையும் அதனால் பின்னர் மனம்

வெறுத்து சாவித்திரி , "  மது அசுரனுக்கு "  ( ! )

அடிமை ஆனதையா எழுதிவிட்டேன் !



இவை மாதிரி எவ்வளவோ இருக்கு !

ஆனால் இவைகளை ' இலைமறைவு ' காய்  மாதிரி

எழுதனால் நன்று !  இல்லை என்றால் நம்

ஈகரைக்குத்தான் இழுக்கு !  






சரி,

' புதிய - அதாவது -  இன்றைய தமிழ்ப் படஉலகம் மட்டும்

விந்தையானது இல்லையா ? "

என்றா கேட்கிறீர்கள் ?


' மூக்கை நன்றாக - ' கப்பு' வராதமாத மாதிரி-

மூடிக்கொண்டு -   சொல்ல

வண்டி வண்டியாக செய்திகள் ஆயிரம் உண்டு !


ஆனால் அவைகளை சொல்ல ஆரம்பித்தால்....


" இவன்  "  OUT  OF   SYLLABUS  "   இல்  எழுதுகிறான் ! "


என்று சொல்லிவிடுவார்களோ என்கிற அச்சம்தான்,

எனக்கு !   ஊத்திக்கிச்சு




எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 8 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 26 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 26  Next

Back to top

- Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum