ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

+30
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
Namasivayam Mu
T.N.Balasubramanian
shobana sahas
mbalasaravanan
சிவனாசான்
M.Saranya
veegopalji
ஸ்ரீரங்கா
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
rksivam
ayyasamy ram
anaamigan
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
moganan
udayarr
Jothiram
veeyaar
vasudevan31355
chittibabu
pon.sellamuththu
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
விஸ்வாஜீ
mkrsantharam
34 posters

Page 5 of 26 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26  Next

Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Empty பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by udayarr Fri Jun 06, 2014 2:04 pm

அன்புள்ள டாக்டர் சார்,

வழக்கம் போல நகைச்சுவை மிக்க, வண்ணமயமான கறுப்பு வெள்ளைத்தொடரை ஈகரையில் துவங்கியிருக்கிறீர்கள்! பாராட்டுகள்.. உங்களை ஈகரைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. உங்கள் தொடர்கள் அனைத்துமே தகவல் களஞ்சியங்கள் தான் !.. இங்கேயும் உங்கள் எழுத்தாட்சி தொடர விழைகிறேன்..

அன்போடு..
உதயா
ஜெய் வானொலி தமிழ் பண்பலை
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Sat Jun 07, 2014 4:15 pm

udayarr wrote:அன்புள்ள டாக்டர் சார்,

வழக்கம் போல நகைச்சுவை மிக்க, வண்ணமயமான கறுப்பு வெள்ளைத்தொடரை ஈகரையில் துவங்கியிருக்கிறீர்கள்! பாராட்டுகள்.. உங்களை ஈகரைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. உங்கள் தொடர்கள் அனைத்துமே தகவல் களஞ்சியங்கள் தான் !.. இங்கேயும் உங்கள் எழுத்தாட்சி தொடர விழைகிறேன்..

அன்போடு..
உதயா
ஜெய் வானொலி தமிழ் பண்பலை
மேற்கோள் செய்த பதிவு: 1067870



   திரு . உதயா அவர்களுக்கு !

தங்களின் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி !

உங்களைப் போன்ற  ரசிகர்களால் தான் , நான் மென் மேலும்

எழுதவேண்டும் என்கிற ஆவல் ஏற்படுகிறது என்பது

மறுப்பதற்கில்லை !


மிக்க நன்றி , திரு . உதயா அவர்களே




 
      இன்னும் சில மணி நேரங்களில்

பாகவதரும் , சின்னப்பாவும்

உங்களை சந்திக்க வருகிறார்கள் !





எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by சிவா Sat Jun 07, 2014 4:44 pm

திரு சாவி குறித்து அறியத் தந்தமைக்கு நன்றி! நான் பழைய படங்கள் பார்ப்பேன், ஆனால் நடிகர்களில் முக்கியமானவர்களை மட்டுமே தெரிந்து வைத்துள்ளேன். மற்றவர்கள் பற்றி தெரியாது! இப்பொழுது உள்ள படங்களிலும் இதே நிலைதான்!

கேட்ட பாடலைத் தர நீங்கள் இருக்கிறீர்கள்..... இனிமேல் எனக்கென்ன கவலை !

உங்களிடம் இல்லாத பாடல்களா என்னிடம் இருக்கப் போகிறது?

ஆனால் இங்கு நீங்கள் கேட்ட பாட்டையே நான் திரும்பத் தந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளீர்கள்! அப்படித்தானே!  சிரி சிரி சிரி 


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Sun Jun 08, 2014 7:21 am

சிவா wrote:திரு சாவி குறித்து அறியத் தந்தமைக்கு நன்றி! நான் பழைய படங்கள் பார்ப்பேன், ஆனால் நடிகர்களில் முக்கியமானவர்களை மட்டுமே தெரிந்து வைத்துள்ளேன். மற்றவர்கள் பற்றி தெரியாது! இப்பொழுது உள்ள படங்களிலும் இதே நிலைதான்!

கேட்ட  பாடலைத் தர  நீங்கள்  இருக்கிறீர்கள்.....   இனிமேல் எனக்கென்ன  கவலை !

உங்களிடம் இல்லாத பாடல்களா என்னிடம் இருக்கப் போகிறது?

ஆனால் இங்கு நீங்கள் கேட்ட பாட்டையே நான் திரும்பத் தந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளீர்கள்! அப்படித்தானே!  சிரி சிரி சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1068074




  தங்களின் பதிலுக்கு என் நன்றி !


அடுத்த கட்டுரையில் உங்கள்  பெயரையும்

' இழுத்துப் போட்டுள்ளேன் ' !

கவனித்துப் படியுங்கள்  புன்னகை 




எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Sun Jun 08, 2014 7:36 am

தொகுப்பு எண் - 3









எம். கே. தியாகராஜ பாகவதர் ரசிகர்கள் -






Vs






பி . யு . சின்னப்பா ரசிகர்கள் !





" டிஷ்யூம் - டிஷ்யூம் " சண்டை !

'மசாலா ' தடவிய ஜாலி ரிப்போர்ட் !







தமிழ்த் திரைப் பட வரலாறில் எழுதப்படாத ஒரு

விதி ( ! )

ஒன்று உள்ளது !


அது என்ன தெரியுமா ?




'அன்று முதல் இன்று வரை '

தமிழ்த் திரைஉலகை எப்போதும்

இரண்டிரண்டு பேர்கள்

பெரும்பாலான திரைஉலகை தங்கள் பக்கம்

'ஆக்கிரமித்துக்' கொண்டிருப்பார்கள் !





" எப்படி ஐயா, சொல்கிறீர்கள் ?

என்றா கேட்கிறீர்கள் ?



( உங்களை வம்பில் மாட்டிவிட சில சமயங்களில் இப்படி

ஏடாகூடமாக கேட்டுத் தொலைப்பேன், ' அட்ஜஸ்ட்'

பண்ணிக்குக்கோங்கோ ! )




இதோ , இந்த புகைப்படங்களையும்

நடிகர்களின் பெயர்களையும் ' உற்று ' ப்பாருங்கள்,

உங்களுக்கு தெளிவாகும் !






தற்போது :



சிவகார்திகேயன் :
விஜய சேதுபதி !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 WgKIrT3TiCZqMns1KF6w+Sivakarthikeyan
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Mbuj4X3JSM26ARoYsjBt+Vijay-Sethupathi-gearing-up-for-another-thriller-drama







' சற்று' முன்பு !




தனுஷ் :

சிம்பு !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 8LybjPdHRAm8ZoXH9P8H+Dhanush-Latest-Pictures-And-Wallpapers2
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 ZkhRxMTxSjegbEMYgXu7+d5e3b69f1c5f41b980629959959d0a06





அதற்கு முன்பு !




'இளய தளபதி ' விஜய் !
'தல' அஜித்!





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 IywI0NPGSyy2s7EncqlH+231941-joseph-vijay
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 YC49LIyrTRmzncXtrum2+ajith-kumar-sexy-photos-0178








அதற்கும் முன்பு !





'இளய திலகம்' பிரபு !
( முத்துராமன் ) கார்த்திக் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 BsUpWgf8SZ6FOORGYN6z+2008091250810102
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 9lXVr2KaS4SjJhO2ct9o+karthick













அப்போதும்- இப்போதும் !





'சூபர் ஸ்டார்' ரஜினி !
'உலக நாயகன் ' கமல் ஹாசன்!



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 VfP7KVuSXiOU3zJaINyV+rajini-velaikaran
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 3SXdR1DSgaU8vBDWh9QS+kamal_hassan_8











60 களின் பிற்பகுதி - 70 களின் முற்பகுதி !





' மக்கள் கலைஞர் ' ஜெய்சங்கர் !
'சின்ன எம்ஜிஆர்' ( ! ) ரவிசந்திரன்!




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 0Y82VeJlSX2plvkVxZ4q+Nangu-Suvargal-1971-Tamil-Movie-Watch-Online
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 LwbWsPEgSKmoFgvizxCI+cinedoor











என்றும் - எப்போதும் !





' மக்கள் திலகம் ' எம்ஜிஆர் !
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 5GNttRQJSc2I7RVF3ZW2+mg_ramachandran
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 NzgYot1iQouzuD4qAEDU+Vasantha_Maligai_Movie_Stills644c3d417cc6f28600eb658a73ecbbf7






அதற்கும் முன்பு .....

'ஆதி காலத்தில் ' !




முதல் சூபர் ஸ்டார்- எம் கே தியாகராஜ பாகவதர் !
'சகலகலா வல்லவர் ' பி .யு சின்னப்பா !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 CW5uVXrRTGmFVzUNhTrj+4c9bdb3237954eba6bf38c8836767639_m
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 RQ3YLhQe2M1xdbL3Kqdw+P.U.-Chinnappa-1916-1951








இப்போது உங்களுக்கு புரிகிறதா இந்த இரட்டையர்களின்

' மகாத்மியம் ! '






பாகவதர் - சின்னப்பா - இவர்கள்

எப்படிப்பட்டவகள் ?





எம் கே டி பாகவதர் :




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 0WlZsE2iTZeugWT7sdvQ+DSC07119




1. பொன்னிற சட்டை, கழுத்தைச் சுற்றி ஜொலிக்கும் அங்கவஸ்திரம்,

காதில் மின்னும் வைரக் கடுக்கன் கள்,

கையில் வைர மோதிரம் !

நெற்றியில் அழகான ஜவ்வாதுப் பொட்டு சகிதம்,...

வெற்றிலையை மென்ற வாறு நடப்பார் !




2. அவர் சாப்பிட பயன்படுத்துவது தங்கத் தட்டுதான் !

அந்த தட்டு எப்படியும் 100 பவுன் கள் இருக்கும் !

இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத் தட்ட ரு. 2.25 கோடி

இருக்கலாம் !





3. பாகவதர், தன் பாடும் திறமையாலும், அழகினாலும்

அந்த கால ரசிகர்களை - குறிப்பாக ரசிகைகளை மிகவும் கவர்ந்தார் !





4. இவரின் திரைப்படப் பயணம் 1934 ஆம் ஆண்டில்

தொடங்கியது ! ( பேசும் சினிமா வந்ததே 1931 ஆம் ஆண்டில் தான் -

தமிழில் ! )

" பவளக் கொடி " - கே . சுப்பிரமணி , நாடகத்தில் நடித்து வந்த

பாகவதரை முதன் முதலாக இந்த திரைப்படத்தில் அறிமுகம்

செய்தார் !





5. 1934 ஆம் ஆண்டில் தொடங்கிய பாகவதரின் சினிமா

வாழ்க்கை தொடர்ந்து ஏறுமுகம் தான் !

அவர் நடித்த எல்லா படங்களும் 'ஹிட்' ஆயின!

பாடல்களும் 'ஹிட்' ஆயின!

எதுவரை ?


1944 ஆம் ஆண்டு - ' ஹரிதாஸ்' வெளியாகி , பாகவதர்,

'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் '

கைதாகும் வரை !




6. " சரி, அது என்ன . " லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு ? "

என்கிறீர்களா ?

சொல்றேன்.......ஆனா.......அதைப் பற்றி விரிவாக சொல்லப் போனால்

இந்த கட்டுரையின் தலைப்பையே மாற்ற வேண்டி வரும் !

அந்த 'மேட்டர்' அத்தனை பெரியது...அது மட்டுமல்ல...மிகவும்

ஆவலைத் தூண்டக்கூடியது !

எனவே அதனை " ஓரம் கட்டி " தனியே 5 அல்லது 6 பகுதிகளை

உடைய தொகுதிகளை வைத்து எழுதுகிறேன் !


இப்போது நான் சொல்ல வந்தது...


'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் ' பாகவதர் கைதான போது

அவரின் திரைப்பட வாழ்க்கையில் " இறங்கு முகம் " தான் !








பி . யு . சின்னப்பா .:




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 05qzobdvS6W45uoEGtsJ+P.U.-Chinnappa-1916-1951





1. 'அந்த கால கருப்பு நாயகன் பி யு சின்னப்பா !

கருத்த மேனி, குண்டு உருவம் , 'பீடி' குடிக்கும் பழக்கம்

உடையவர் !

குட்டையான உருவம் !




2. ஆனால் பாடினால் ?

மிக மிக நன்றாக பாடுவார் !


நடிப்பில் ?

சிவாஜி கணேசனுக்கும் முன்னோடி !

" நவராத்திரி' யில் சிவாஜிக்கு 9 வேடங்கள் - 1965 ஆம் ஆண்டு !

" ஆர்ய மாலா " படத்தில் சின்னப்பா வுக்கு 10 வேடங்கள் - 1941 ஆம் ஆண்டு !


சண்டைக் காட்சியில் ?


எம்ஜிஆருக்கும் சீனியர் !

மல்யுத்தம், குஸ்தி, வாட்சண்டை, சுருள் பட்டை வீச்சு,

கம்பு சண்டை - இவைகளில் வல்லவர் !




3. இவரின் சினிமா வாழ்க்கை 1936 ஆம் ஆண்டில்

தொடங்கியது ! ' சந்திரகாந்தா ' என்கிற படம் !

" சுண்டூர் இளவரசன் " என்கிற வேடத்தில் வெளுத்துக் கட்டினார்!




4. 1936 ஆம் ஆண்டில் தொடங்கிய இவரது சினிமா

வாழ்க்கை 1951 ஆம் ஆண்டு அவர் அகால மரணம் அடைந்த

பிறகு முடிவடைந்தது !





%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%






சரி, பாகவதர் - சின்னப்பா

ரசிகர்கள் எப்படி ?





பாகவதரின் ரசிகர்கள் !






1 .. 1934 ஆம் ஆண்டு 'பவளக் கொடி ' தொடங்கி பாகவதருக்கு ரசிகர்கள்

பட்டாளம் தான் !!

' பாகவதர் முடி ' - இது பற்ற்றி உங்க்களுக்குத் தெரியுமா ??


அது என்ன்ன ' பாகவதர் முடி ? "


ஒண்ணும் பதில் சொல்ல ' முடி'யாட்த கேள்வி அல்ல இது !

" சலூன் " க்கு போகாமல் இருந்தால் உங்கள் முடிக்கு

நேரும் " கதி " தான் ' பாகவதர் முடி ! "

பாகவதார் 'பீல்ட்' டுக்கு வந்த போது நிறைய தமிழர்களுக்கு

பாகவதர் முடிதான் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 XR0UKbs3SqlL7MYTBRLi+image





2. ஒரு தடவை ஓர் ஊரில் நாடகம் நடத்த போனார் பாகவதர்.

நாடகம் முடிந்து வெளியே வந்த பின்னர் ,, ஒரு ரசிகரை சந்தித்தார்.

அவர் பையில் இருந்து புத்தம் புதிய சீப்பு ஒன்றைக் பாகவதரிடம்

கொடுத்து, :


" பாகவதரே ! உங்களின் தலையை இந்த புதிய சீப்பால்

வாரிக்கொள்ளுங்கள்ள் ! "



என்று கேட்டுக்கொண்டார் !



"" சரி ! நம்ம தலைமுடி கலைந்திருக்கிறது போலும் !

எனவே இந்த ரசிகர் நம் தலை முடியை இந்த புதிய

சீப்பால் வாரச் சொல்கிறார் ! "


என்று நினைத்து எம்கேடி பாகவதர் தன் தலை முடியை அந்த

புதிய சீப்பால் வார்ர்ர்ர்ர்ரிக்கொண்டார்!






அப்புறம் நடந்ததுதான் தமாஷ் !




பாகவதர் வாரி முடித்தவுடன் அந்த சீப்பை பாகவரிடம் பிடுங்காத குறையாக

வாங்கி தன் பையில் போட்டுக்கொண்டார் !


அப்புறம், அந்த ரசிகர் தன் பையில் இருந்து

தன் கைகளைத் துழாவி இன்னொரு


" கேவலமான " ' பொக்கை ' மற்றும் ' மொக்கை ' சீப்பு


எடுத்து பாகவதரிடம் காட்டினார் !


" இது என்ன தெரியுமா, பாகவதரே ? " என்றாராம் அந்த ரசிகர் !


திரு. பாகவதர் , " திரு " திரு" என்று முழிக்க அந்த ரசிகரே பதில் சொன்னாராம் !

........சொல்லட்டுமா.... !






" இந்த பழைய சீப்பு போன வருடம் நீங்கள்

பொள்ளாச்சிக்கு வந்த போது வாரின சீப்பு ! "




இப்படி " சீப்பா" ன ரசிகர்கள் அப்போது பாகவதருக்கு உண்டு !





3. பெண் ரசிகைகள் ?

என்ன அப்படி கேட்டு விட்டீர்கள் !

பாகவதருக்கு வரும் ' காதல் கடிதங்கள் ' ஏராளம் !

பாகவதர் வருகிறார் என்றால் அவருக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் பெண்கள் ஏராளம் !

பாகவதர் நடந்து போன பாதையின் மண்னைத் தொட்டு கும்பிடும்

ரசிகைகள் ஏராளம் ! பாகவதரை எப்படியாவது

சந்தித்துவிட வேண்டும் என்று 'கங்கணம் ' கட்டி

வீட்டை விட்டு ஓடி வந்த பெண்கல் ஏராளம் !






4. பாகவதர் நாடகங்களைக் காண பல நூற்றுக்கணக்கான

'மைல்' களைக் கடந்து ( அப்போது 'மைல்' தான், கிலோ மீடர் கிடையாது ! )

வண்டிகளைப் பூட்டி வருபவர்கள் ஏராளம் ! நாடகங்களைப் பார்க்க

உட்கார இடம் அல்லது 'டிக்கட்' கிடைக்க வில்லை என்றால்

......' நோ டென்ஷன் ! ' ........மரங்களில் ஏறி நின்று

தேள்கள் , கட்டெறும்புகள் கடித்து ..பல்லைக் கடித்து .

..பாகவதரின் நாடகங்களை காணுவார்கள் !

அப்படி மரங்களில் ஏறி மாண்டவர்கள் ஏராளம் !







4. பாகவதர் ரயிலில் போகிறார் என்றால்.....போகும் வழியில் இருக்கும்

அனைத்து ரயில் நிலையங்களிலும் ' பிளார்பார டிக்கட்' கள்

விற்று தீர்ந்துவிடும் ! அனைத்து ரயில் நிலையங்களிலும்

ஒரு கூட்டம் நின்று கொண்டு டிரைனில் பயணம் செய்யும் பாகவதரை

'தரிசனம் ' செய்து மகிழ்வர் ! அப்படிப் பார்த்தால்

கூடுவாஞ்சேரி போன்ற சிறிய ஸ்டேஷன் களில்

'பிளாட்பார்ம் டிக்கட் ' வாங்கி காத்திருக்கும் மக்களின்

கதி எப்படி ? டிரைன் அங்கே நிற்காதே !

அந்த "பருப்பு " அங்கே வேகாது ! தண்டவாளத்தில் நின்று கைகளை

ஆட்டுவார்கள் ! டிரைன் நிற்கும் !

பாகவதர் ' காட்சி -கம் - தரிசனம் ' தருவார் ! பின்னரே டிரைன் நகரும் !

மகாத்மா காந்தி க்குப் பிறகு

பாகவதருக்குத்தான்

இந்த வரவேற்பு !




%%%%%%%%%%%%%%%%%%%%%%%%






5. கீழே எழுதியதையும் படித்து விடவும் !

.......ஆனாலும் கொஞ்சம் 'ஓவர்' தான்

சார், இந்த சம்பவம் !





இந்த இடத்தில் பாகவதரின் அன்றைய செல்வாக்கு

எந்த உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது என்பதை

இப்போது அடியேன் சொல்லப்போகும் சம்பவத்தில்

இருந்து தெரிந்து கொள்ளலாம்!

இந்தியாவில் எந்த சூபர் ஸ்டாருக்கும் இந்த மாதிரியான

சம்பவம் நடந்திருக்காது !





" பாகவதரின் நணபர் ஒரு பணக்காரர்.

திருவாரூர்காரர்.பாகவதர் திருவாரூர் வந்தால் இவரின்

பங்களாவில்தான் தங்குவார்.

பாகவதருக்கென்று :

ஒரு குதிரை சாரட் வண்டி அவருக்கென்று தயார்

நிலையில் இருக்கும்! அந்த வண்டி பாகவதருக்கு

மட்டும்தான் ! யாருக்கும் கிடையாது !

அது மட்டுமா !

பாகவதருக்கென்று ஒரு தனி " பாத் ரூம்" ஒன்று இவர்

கட்டினார் ! அந்த பாத் ரூம் அந்த மாளிகையின் பின்

கோடியில் தனியாக கட்டப்பட்டிருக்கும் . அதனை பயன்

படுத்த முடியாத அளவுக்கு பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டு

இருக்கும் !

" பாத்ரூம் " என்றால் " பார்ரிவேர்" கம்பனியில் வாங்கி

சலவைக் கல்லால் " பள" பள " என்று கட்டப்பட்டது

அல்ல ! அவை எல்லாம் அப்போது கண்டுபிடிக்கப்

படவில்லை ! வெறும் ஓலைத் தடுப்புக்களால்

வேயப்பட்டது.

அன்று........

பாகவதார் திருவாரூர் வந்தார், நண்பர் பங்க்களாவுக்கு

வந்தார். அங்கே தங்கியிருந்தார். அவருடன் அந்த பணக்காரர்

வீட்டு மக்களும்- பெரிய தட்டு - மேல் தட்டு வர்க்கங்கள்-

குடும்பத்துடன் வந்திருந்தினர் !

காலை உணவு முடித்து பேசி விட்டு வெளியே கிளம்பும்

முன் "' பாத்ரூம் " போய்விட்டு வருகிறேன் ! "

என்று பின் பக்கம் போன பாகவதர் வெகு நேரம் கழிந்தும்

திரும்பி வரவில்லை !

அவருக்கு சர்க்கரை வியாதி அப்போது இல்லை !

எனவே பாத் ரூம் போனவர் ஏன் இன்னும் வர வில்லை

என்று அனைவரும் கலக்கத்தில் இருக்க, .......

திடீரென்று..........கூச்சல் ! கூச்சல்!


" என்னை விட்டுவிடுங்கள் ! என்னை விட்டுவிடுங்கள்! "


யார் குரல் அது ?

பாகவதரின் குரல்தான் அது !

என்ன ஆச்சு ?

நண்பர்கள் எல்லோரும் கொல்லைப் பக்கம்

ஓடினார்கள் !

அங்கே அவர்கள் கண்ட காட்சி !


பாகவதரின் சில்க் சட்டை கிழிந்திருந்தது........

வேஷ்டி பயங்கரமாக கிழிக்கப்பட்டு, தன்

" மானத்தைக் " காப்பாற்ற இரண்டு கைகளால்

வேஷ்டியை மூடிக்கொண்டு ஓடி வர,

அவரின் " பாகவதரின் 'கிராப்" கலைய

தன் நண்பர்களைப் பார்த்து ஓடிவந்தார் !

நண்பர்கல் அதிர்ச்சியில் நிலை குலைய....

என்ன ஆச்சு பாகவதருக்கு ?


பின்னால்............

மேல்தட்டு அழகிய பெண்கள் ! நண்பர் பங்களாவில்

விருந்துக்கு வந்த பணக்காரப் பெண்கள் !


மகாபாரததில் ' கெளரவர்கள் " ஆண்கள் !

இங்கே பெண்கள் !




அங்கே பாஞ்சாலி பெண் !

இங்கே " பாஞ்சாலன் " -- பாகவதர் !





இப்போது பாகவதர் உயிருடன்

இருந்து , இப்போது அந்த சமாச்சாரம் நடந்தி

ருந்ததால, பாகவதர் என்ன பாட்டு பாடியிருப்பார்?




" வொய் திஸ்

கொல வெறி, கொல வெறி,

கொல வெறி டீஸ் ! "



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 RFK7No4RteyKNJn11LFx+trrd



என்றுதானே பாடியிருப்பார் !







பி . யு . சின்னப்பா வின் ரசிகர்கள் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 CsQ8ntb4TlOz4fIC3bQQ+DSC07114


இப்போது 'சூபர் ஸ்டார் ' ரஜினிக்கு இருக்கும் 'இமேஜ் ' ஐ விட

பல மடங்கு பெரும் புகழ் மற்றும் 'இமேஜ் ' கொண்டவர் சின்னப்பா !

என்னதான் இவத சின்னப்பா கரிய நிறத்தவராக இருந்தாலும் அவருக்கும்

பெண் ரசிகர்கள் ஏராளம் !


ஒரு முறை சின்னப்பா நடிப்பதை நிறுத்திக்கொண்டு ....

( இப்போது சமீபதித்தில் நடிகை ரஞ்சிதா போல் ! )

ஆன்மீகத்தில் ஈடுபட்ட போது சின்னப்பா மெளன விரதம்

மேற்கொண்டார் !

அப்போது இந்த செய்தியை கேள்விப்பட்டு ...

இரு ரசிகைகள் தற்கொலை செய்து கொண்டார்களாம் !





' முக்கூடல் பிராண்ட் ' பீடி !

" இந்த பீடியை புகைத்தீர்களா ? "

என்று விளம்பரம் பண்ண இதைக் கேட்க வில்லை !

" பிண்ணே எதுக்குய்யா ? "

என்றா கேட்கிறீர்கள் !

சொல்றேன் !

இந்த பீடித் தயாரிப்பாளர் ஹரிராம் சேட் என்பவர் ,

பி யு சின்னப்பாவின் தீவிர ரசிகர் !


இவருக்காகவே ' கிராம போன் பெட்டியையும் எக்கசக்க மான

சின்னப்பாவின் இசைத்தட்டுக்களை வாங்கி கேட்டு மகிழ்ந்தார் !

என் எஸ் கிருஷ்ணன் , இவருக்கு நண்பர் !

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 DGrxRrtrTEeM7q0ttZlr+mxvobx3qmC8gp3nNnTZp2-Q


( ஒரு வேலை கலைவாணரும் கூட " முக்கூடலில் "

சங்கமம் தானா ! )

ஒரு முறை திருநெல்வேலியில் பாகவதர் கச்சேரி நடந்த போது ,

கிருஷ்ணன் , ஹரி ராம் சேட் ஐ அந்த கச்சேரிக்கு அழைத்தார் !

நம்ம ( ! ) சேட் வும் வேண்டா வெறுப்பாக பாகவதரின் கச்சேரிக்கு

சென்றார் !

பாகவதரின் கச்சேரியைக் கேட்டவுடன் , அந்த சேட் என்ன செய்தார்

தெரியுமா !

நேரா தன வீட்டுக்கு சென்றார், சின்னப்பா வின் இசைத்தட்டுக்களை

ஒன்னொன்றாக வெளியெ போட்டு சுத்தியால் உடைத்தார் !

என்ன காரணம் ?

ஒண்ணும் இல்லே !

பாகவதரை விட சின்னப்பா சரியாக பாடவில்லையாம் !

அப்போது பாகவதரும் கிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு வந்தனர் !

இசைத்தட்டுக்கள் உடைந்து கிடந்ததைப் பார்த்து கிருஷ்ணன்

" 10 ஷன் " - அத்தான் - " டென்ஷன் " - Tension - ஆகி விட்டார் !


" ஏன்னா ஓய செய்கிறீர் , சேட்டு ? "

- கிருஷ்ணன் !


" இந்த பாகவதர் கச்சேரியை இப்போதுதான் முதன் முறையாக

கேட்கிறேன் !

இவர் கச்சேரியைக் கேட்ட பிறகு சின்னப்பா வின் பாட்டுக்களை

கேட்க பிடிக்கவில்லை ! "




பாகவதவர் , சேட் ஐ தீர்க்கமாக பார்த்தார் , பின்னர்

அவரைப் பார்த்து கேட்டார் :


" அப்போ , சின்னப்பா கச்சேரியை நீங்கள் நேரில் கேட்டால்

என்னுடைய பாடல்களைக் கொண்ட இசைத்தட்டுக்களை இப்படித்தான்

சுத்தியலால் போட்டு உடைப்பீர்கள ? "



சேட் வாயடைத்து நின்றார் !





இப்போது அந்த சேட் உயிருடன் இருந்திருந்தால்

என்ன செய்திருப்பார் ?


என்ன செய்வார் .........

இசைத்தட்டுக்களுக்குப் பதில் :

" Hard Disc " களை 'சகட்டு மேனி'க்கு போட்டு

நொறுக்கி இருப்பார் !




&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





இப்போது .....

விஷயத்திற்கு வருவோமா !


( அப்பாடா ! ஒரு வழியாக விஷயத்திற்கு வந்தானா , இந்த ஆள் ! )




தொடரும் ....


எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Sun Jun 08, 2014 7:37 am

தொகுப்பு எண் - 3









எம். கே. தியாகராஜ பாகவதர் ரசிகர்கள் -






Vs






பி . யு . சின்னப்பா ரசிகர்கள் !





" டிஷ்யூம் - டிஷ்யூம் " சண்டை !

'மசாலா ' தடவிய ஜாலி ரிப்போர்ட் !







தமிழ்த் திரைப் பட வரலாறில் எழுதப்படாத ஒரு

விதி ( ! )

ஒன்று உள்ளது !


அது என்ன தெரியுமா ?




'அன்று முதல் இன்று வரை '

தமிழ்த் திரைஉலகை எப்போதும்

இரண்டிரண்டு பேர்கள்

பெரும்பாலான திரைஉலகை தங்கள் பக்கம்

'ஆக்கிரமித்துக்' கொண்டிருப்பார்கள் !





" எப்படி ஐயா, சொல்கிறீர்கள் ?

என்றா கேட்கிறீர்கள் ?



( உங்களை வம்பில் மாட்டிவிட சில சமயங்களில் இப்படி

ஏடாகூடமாக கேட்டுத் தொலைப்பேன், ' அட்ஜஸ்ட்'

பண்ணிக்குக்கோங்கோ ! )




இதோ , இந்த புகைப்படங்களையும்

நடிகர்களின் பெயர்களையும் ' உற்று ' ப்பாருங்கள்,

உங்களுக்கு தெளிவாகும் !






தற்போது :



சிவகார்திகேயன் :
விஜய சேதுபதி !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 WgKIrT3TiCZqMns1KF6w+Sivakarthikeyan
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Mbuj4X3JSM26ARoYsjBt+Vijay-Sethupathi-gearing-up-for-another-thriller-drama







' சற்று' முன்பு !




தனுஷ் :

சிம்பு !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 8LybjPdHRAm8ZoXH9P8H+Dhanush-Latest-Pictures-And-Wallpapers2
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 ZkhRxMTxSjegbEMYgXu7+d5e3b69f1c5f41b980629959959d0a06





அதற்கு முன்பு !




'இளய தளபதி ' விஜய் !
'தல' அஜித்!





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 IywI0NPGSyy2s7EncqlH+231941-joseph-vijay
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 YC49LIyrTRmzncXtrum2+ajith-kumar-sexy-photos-0178








அதற்கும் முன்பு !





'இளய திலகம்' பிரபு !
( முத்துராமன் ) கார்த்திக் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 BsUpWgf8SZ6FOORGYN6z+2008091250810102
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 9lXVr2KaS4SjJhO2ct9o+karthick













அப்போதும்- இப்போதும் !





'சூபர் ஸ்டார்' ரஜினி !
'உலக நாயகன் ' கமல் ஹாசன்!



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 VfP7KVuSXiOU3zJaINyV+rajini-velaikaran
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 3SXdR1DSgaU8vBDWh9QS+kamal_hassan_8











60 களின் பிற்பகுதி - 70 களின் முற்பகுதி !





' மக்கள் கலைஞர் ' ஜெய்சங்கர் !
'சின்ன எம்ஜிஆர்' ( ! ) ரவிசந்திரன்!




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 0Y82VeJlSX2plvkVxZ4q+Nangu-Suvargal-1971-Tamil-Movie-Watch-Online
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 LwbWsPEgSKmoFgvizxCI+cinedoor











என்றும் - எப்போதும் !





' மக்கள் திலகம் ' எம்ஜிஆர் !
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 5GNttRQJSc2I7RVF3ZW2+mg_ramachandran
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 NzgYot1iQouzuD4qAEDU+Vasantha_Maligai_Movie_Stills644c3d417cc6f28600eb658a73ecbbf7






அதற்கும் முன்பு .....

'ஆதி காலத்தில் ' !




முதல் சூபர் ஸ்டார்- எம் கே தியாகராஜ பாகவதர் !
'சகலகலா வல்லவர் ' பி .யு சின்னப்பா !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 CW5uVXrRTGmFVzUNhTrj+4c9bdb3237954eba6bf38c8836767639_m
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 RQ3YLhQe2M1xdbL3Kqdw+P.U.-Chinnappa-1916-1951








இப்போது உங்களுக்கு புரிகிறதா இந்த இரட்டையர்களின்

' மகாத்மியம் ! '






பாகவதர் - சின்னப்பா - இவர்கள்

எப்படிப்பட்டவகள் ?





எம் கே டி பாகவதர் :




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 0WlZsE2iTZeugWT7sdvQ+DSC07119




1. பொன்னிற சட்டை, கழுத்தைச் சுற்றி ஜொலிக்கும் அங்கவஸ்திரம்,

காதில் மின்னும் வைரக் கடுக்கன் கள்,

கையில் வைர மோதிரம் !

நெற்றியில் அழகான ஜவ்வாதுப் பொட்டு சகிதம்,...

வெற்றிலையை மென்ற வாறு நடப்பார் !




2. அவர் சாப்பிட பயன்படுத்துவது தங்கத் தட்டுதான் !

அந்த தட்டு எப்படியும் 100 பவுன் கள் இருக்கும் !

இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத் தட்ட ரு. 2.25 கோடி

இருக்கலாம் !





3. பாகவதர், தன் பாடும் திறமையாலும், அழகினாலும்

அந்த கால ரசிகர்களை - குறிப்பாக ரசிகைகளை மிகவும் கவர்ந்தார் !





4. இவரின் திரைப்படப் பயணம் 1934 ஆம் ஆண்டில்

தொடங்கியது ! ( பேசும் சினிமா வந்ததே 1931 ஆம் ஆண்டில் தான் -

தமிழில் ! )

" பவளக் கொடி " - கே . சுப்பிரமணி , நாடகத்தில் நடித்து வந்த

பாகவதரை முதன் முதலாக இந்த திரைப்படத்தில் அறிமுகம்

செய்தார் !





5. 1934 ஆம் ஆண்டில் தொடங்கிய பாகவதரின் சினிமா

வாழ்க்கை தொடர்ந்து ஏறுமுகம் தான் !

அவர் நடித்த எல்லா படங்களும் 'ஹிட்' ஆயின!

பாடல்களும் 'ஹிட்' ஆயின!

எதுவரை ?


1944 ஆம் ஆண்டு - ' ஹரிதாஸ்' வெளியாகி , பாகவதர்,

'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் '

கைதாகும் வரை !




6. " சரி, அது என்ன . " லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு ? "

என்கிறீர்களா ?

சொல்றேன்.......ஆனா.......அதைப் பற்றி விரிவாக சொல்லப் போனால்

இந்த கட்டுரையின் தலைப்பையே மாற்ற வேண்டி வரும் !

அந்த 'மேட்டர்' அத்தனை பெரியது...அது மட்டுமல்ல...மிகவும்

ஆவலைத் தூண்டக்கூடியது !

எனவே அதனை " ஓரம் கட்டி " தனியே 5 அல்லது 6 பகுதிகளை

உடைய தொகுதிகளை வைத்து எழுதுகிறேன் !


இப்போது நான் சொல்ல வந்தது...


'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் ' பாகவதர் கைதான போது

அவரின் திரைப்பட வாழ்க்கையில் " இறங்கு முகம் " தான் !








பி . யு . சின்னப்பா .:




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 05qzobdvS6W45uoEGtsJ+P.U.-Chinnappa-1916-1951





1. 'அந்த கால கருப்பு நாயகன் பி யு சின்னப்பா !

கருத்த மேனி, குண்டு உருவம் , 'பீடி' குடிக்கும் பழக்கம்

உடையவர் !

குட்டையான உருவம் !




2. ஆனால் பாடினால் ?

மிக மிக நன்றாக பாடுவார் !


நடிப்பில் ?

சிவாஜி கணேசனுக்கும் முன்னோடி !

" நவராத்திரி' யில் சிவாஜிக்கு 9 வேடங்கள் - 1965 ஆம் ஆண்டு !

" ஆர்ய மாலா " படத்தில் சின்னப்பா வுக்கு 10 வேடங்கள் - 1941 ஆம் ஆண்டு !


சண்டைக் காட்சியில் ?


எம்ஜிஆருக்கும் சீனியர் !

மல்யுத்தம், குஸ்தி, வாட்சண்டை, சுருள் பட்டை வீச்சு,

கம்பு சண்டை - இவைகளில் வல்லவர் !




3. இவரின் சினிமா வாழ்க்கை 1936 ஆம் ஆண்டில்

தொடங்கியது ! ' சந்திரகாந்தா ' என்கிற படம் !

" சுண்டூர் இளவரசன் " என்கிற வேடத்தில் வெளுத்துக் கட்டினார்!




4. 1936 ஆம் ஆண்டில் தொடங்கிய இவரது சினிமா

வாழ்க்கை 1951 ஆம் ஆண்டு அவர் அகால மரணம் அடைந்த

பிறகு முடிவடைந்தது !





%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%






சரி, பாகவதர் - சின்னப்பா

ரசிகர்கள் எப்படி ?





பாகவதரின் ரசிகர்கள் !






1 .. 1934 ஆம் ஆண்டு 'பவளக் கொடி ' தொடங்கி பாகவதருக்கு ரசிகர்கள்

பட்டாளம் தான் !!

' பாகவதர் முடி ' - இது பற்ற்றி உங்க்களுக்குத் தெரியுமா ??


அது என்ன்ன ' பாகவதர் முடி ? "


ஒண்ணும் பதில் சொல்ல ' முடி'யாட்த கேள்வி அல்ல இது !

" சலூன் " க்கு போகாமல் இருந்தால் உங்கள் முடிக்கு

நேரும் " கதி " தான் ' பாகவதர் முடி ! "

பாகவதார் 'பீல்ட்' டுக்கு வந்த போது நிறைய தமிழர்களுக்கு

பாகவதர் முடிதான் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 XR0UKbs3SqlL7MYTBRLi+image





2. ஒரு தடவை ஓர் ஊரில் நாடகம் நடத்த போனார் பாகவதர்.

நாடகம் முடிந்து வெளியே வந்த பின்னர் ,, ஒரு ரசிகரை சந்தித்தார்.

அவர் பையில் இருந்து புத்தம் புதிய சீப்பு ஒன்றைக் பாகவதரிடம்

கொடுத்து, :


" பாகவதரே ! உங்களின் தலையை இந்த புதிய சீப்பால்

வாரிக்கொள்ளுங்கள்ள் ! "



என்று கேட்டுக்கொண்டார் !



"" சரி ! நம்ம தலைமுடி கலைந்திருக்கிறது போலும் !

எனவே இந்த ரசிகர் நம் தலை முடியை இந்த புதிய

சீப்பால் வாரச் சொல்கிறார் ! "


என்று நினைத்து எம்கேடி பாகவதர் தன் தலை முடியை அந்த

புதிய சீப்பால் வார்ர்ர்ர்ர்ரிக்கொண்டார்!






அப்புறம் நடந்ததுதான் தமாஷ் !




பாகவதர் வாரி முடித்தவுடன் அந்த சீப்பை பாகவரிடம் பிடுங்காத குறையாக

வாங்கி தன் பையில் போட்டுக்கொண்டார் !


அப்புறம், அந்த ரசிகர் தன் பையில் இருந்து

தன் கைகளைத் துழாவி இன்னொரு


" கேவலமான " ' பொக்கை ' மற்றும் ' மொக்கை ' சீப்பு


எடுத்து பாகவதரிடம் காட்டினார் !


" இது என்ன தெரியுமா, பாகவதரே ? " என்றாராம் அந்த ரசிகர் !


திரு. பாகவதர் , " திரு " திரு" என்று முழிக்க அந்த ரசிகரே பதில் சொன்னாராம் !

........சொல்லட்டுமா.... !






" இந்த பழைய சீப்பு போன வருடம் நீங்கள்

பொள்ளாச்சிக்கு வந்த போது வாரின சீப்பு ! "




இப்படி " சீப்பா" ன ரசிகர்கள் அப்போது பாகவதருக்கு உண்டு !





3. பெண் ரசிகைகள் ?

என்ன அப்படி கேட்டு விட்டீர்கள் !

பாகவதருக்கு வரும் ' காதல் கடிதங்கள் ' ஏராளம் !

பாகவதர் வருகிறார் என்றால் அவருக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் பெண்கள் ஏராளம் !

பாகவதர் நடந்து போன பாதையின் மண்னைத் தொட்டு கும்பிடும்

ரசிகைகள் ஏராளம் ! பாகவதரை எப்படியாவது

சந்தித்துவிட வேண்டும் என்று 'கங்கணம் ' கட்டி

வீட்டை விட்டு ஓடி வந்த பெண்கல் ஏராளம் !






4. பாகவதர் நாடகங்களைக் காண பல நூற்றுக்கணக்கான

'மைல்' களைக் கடந்து ( அப்போது 'மைல்' தான், கிலோ மீடர் கிடையாது ! )

வண்டிகளைப் பூட்டி வருபவர்கள் ஏராளம் ! நாடகங்களைப் பார்க்க

உட்கார இடம் அல்லது 'டிக்கட்' கிடைக்க வில்லை என்றால்

......' நோ டென்ஷன் ! ' ........மரங்களில் ஏறி நின்று

தேள்கள் , கட்டெறும்புகள் கடித்து ..பல்லைக் கடித்து .

..பாகவதரின் நாடகங்களை காணுவார்கள் !

அப்படி மரங்களில் ஏறி மாண்டவர்கள் ஏராளம் !







4. பாகவதர் ரயிலில் போகிறார் என்றால்.....போகும் வழியில் இருக்கும்

அனைத்து ரயில் நிலையங்களிலும் ' பிளார்பார டிக்கட்' கள்

விற்று தீர்ந்துவிடும் ! அனைத்து ரயில் நிலையங்களிலும்

ஒரு கூட்டம் நின்று கொண்டு டிரைனில் பயணம் செய்யும் பாகவதரை

'தரிசனம் ' செய்து மகிழ்வர் ! அப்படிப் பார்த்தால்

கூடுவாஞ்சேரி போன்ற சிறிய ஸ்டேஷன் களில்

'பிளாட்பார்ம் டிக்கட் ' வாங்கி காத்திருக்கும் மக்களின்

கதி எப்படி ? டிரைன் அங்கே நிற்காதே !

அந்த "பருப்பு " அங்கே வேகாது ! தண்டவாளத்தில் நின்று கைகளை

ஆட்டுவார்கள் ! டிரைன் நிற்கும் !

பாகவதர் ' காட்சி -கம் - தரிசனம் ' தருவார் ! பின்னரே டிரைன் நகரும் !

மகாத்மா காந்தி க்குப் பிறகு

பாகவதருக்குத்தான்

இந்த வரவேற்பு !




%%%%%%%%%%%%%%%%%%%%%%%%






5. கீழே எழுதியதையும் படித்து விடவும் !

.......ஆனாலும் கொஞ்சம் 'ஓவர்' தான்

சார், இந்த சம்பவம் !





இந்த இடத்தில் பாகவதரின் அன்றைய செல்வாக்கு

எந்த உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது என்பதை

இப்போது அடியேன் சொல்லப்போகும் சம்பவத்தில்

இருந்து தெரிந்து கொள்ளலாம்!

இந்தியாவில் எந்த சூபர் ஸ்டாருக்கும் இந்த மாதிரியான

சம்பவம் நடந்திருக்காது !





" பாகவதரின் நணபர் ஒரு பணக்காரர்.

திருவாரூர்காரர்.பாகவதர் திருவாரூர் வந்தால் இவரின்

பங்களாவில்தான் தங்குவார்.

பாகவதருக்கென்று :

ஒரு குதிரை சாரட் வண்டி அவருக்கென்று தயார்

நிலையில் இருக்கும்! அந்த வண்டி பாகவதருக்கு

மட்டும்தான் ! யாருக்கும் கிடையாது !

அது மட்டுமா !

பாகவதருக்கென்று ஒரு தனி " பாத் ரூம்" ஒன்று இவர்

கட்டினார் ! அந்த பாத் ரூம் அந்த மாளிகையின் பின்

கோடியில் தனியாக கட்டப்பட்டிருக்கும் . அதனை பயன்

படுத்த முடியாத அளவுக்கு பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டு

இருக்கும் !

" பாத்ரூம் " என்றால் " பார்ரிவேர்" கம்பனியில் வாங்கி

சலவைக் கல்லால் " பள" பள " என்று கட்டப்பட்டது

அல்ல ! அவை எல்லாம் அப்போது கண்டுபிடிக்கப்

படவில்லை ! வெறும் ஓலைத் தடுப்புக்களால்

வேயப்பட்டது.

அன்று........

பாகவதார் திருவாரூர் வந்தார், நண்பர் பங்க்களாவுக்கு

வந்தார். அங்கே தங்கியிருந்தார். அவருடன் அந்த பணக்காரர்

வீட்டு மக்களும்- பெரிய தட்டு - மேல் தட்டு வர்க்கங்கள்-

குடும்பத்துடன் வந்திருந்தினர் !

காலை உணவு முடித்து பேசி விட்டு வெளியே கிளம்பும்

முன் "' பாத்ரூம் " போய்விட்டு வருகிறேன் ! "

என்று பின் பக்கம் போன பாகவதர் வெகு நேரம் கழிந்தும்

திரும்பி வரவில்லை !

அவருக்கு சர்க்கரை வியாதி அப்போது இல்லை !

எனவே பாத் ரூம் போனவர் ஏன் இன்னும் வர வில்லை

என்று அனைவரும் கலக்கத்தில் இருக்க, .......

திடீரென்று..........கூச்சல் ! கூச்சல்!


" என்னை விட்டுவிடுங்கள் ! என்னை விட்டுவிடுங்கள்! "


யார் குரல் அது ?

பாகவதரின் குரல்தான் அது !

என்ன ஆச்சு ?

நண்பர்கள் எல்லோரும் கொல்லைப் பக்கம்

ஓடினார்கள் !

அங்கே அவர்கள் கண்ட காட்சி !


பாகவதரின் சில்க் சட்டை கிழிந்திருந்தது........

வேஷ்டி பயங்கரமாக கிழிக்கப்பட்டு, தன்

" மானத்தைக் " காப்பாற்ற இரண்டு கைகளால்

வேஷ்டியை மூடிக்கொண்டு ஓடி வர,

அவரின் " பாகவதரின் 'கிராப்" கலைய

தன் நண்பர்களைப் பார்த்து ஓடிவந்தார் !

நண்பர்கல் அதிர்ச்சியில் நிலை குலைய....

என்ன ஆச்சு பாகவதருக்கு ?


பின்னால்............

மேல்தட்டு அழகிய பெண்கள் ! நண்பர் பங்களாவில்

விருந்துக்கு வந்த பணக்காரப் பெண்கள் !


மகாபாரததில் ' கெளரவர்கள் " ஆண்கள் !

இங்கே பெண்கள் !




அங்கே பாஞ்சாலி பெண் !

இங்கே " பாஞ்சாலன் " -- பாகவதர் !





இப்போது பாகவதர் உயிருடன்

இருந்து , இப்போது அந்த சமாச்சாரம் நடந்தி

ருந்ததால, பாகவதர் என்ன பாட்டு பாடியிருப்பார்?




" வொய் திஸ்

கொல வெறி, கொல வெறி,

கொல வெறி டீஸ் ! "



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 RFK7No4RteyKNJn11LFx+trrd



என்றுதானே பாடியிருப்பார் !







பி . யு . சின்னப்பா வின் ரசிகர்கள் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 CsQ8ntb4TlOz4fIC3bQQ+DSC07114


இப்போது 'சூபர் ஸ்டார் ' ரஜினிக்கு இருக்கும் 'இமேஜ் ' ஐ விட

பல மடங்கு பெரும் புகழ் மற்றும் 'இமேஜ் ' கொண்டவர் சின்னப்பா !

என்னதான் இவத சின்னப்பா கரிய நிறத்தவராக இருந்தாலும் அவருக்கும்

பெண் ரசிகர்கள் ஏராளம் !


ஒரு முறை சின்னப்பா நடிப்பதை நிறுத்திக்கொண்டு ....

( இப்போது சமீபதித்தில் நடிகை ரஞ்சிதா போல் ! )

ஆன்மீகத்தில் ஈடுபட்ட போது சின்னப்பா மெளன விரதம்

மேற்கொண்டார் !

அப்போது இந்த செய்தியை கேள்விப்பட்டு ...

இரு ரசிகைகள் தற்கொலை செய்து கொண்டார்களாம் !





' முக்கூடல் பிராண்ட் ' பீடி !

" இந்த பீடியை புகைத்தீர்களா ? "

என்று விளம்பரம் பண்ண இதைக் கேட்க வில்லை !

" பிண்ணே எதுக்குய்யா ? "

என்றா கேட்கிறீர்கள் !

சொல்றேன் !

இந்த பீடித் தயாரிப்பாளர் ஹரிராம் சேட் என்பவர் ,

பி யு சின்னப்பாவின் தீவிர ரசிகர் !


இவருக்காகவே ' கிராம போன் பெட்டியையும் எக்கசக்க மான

சின்னப்பாவின் இசைத்தட்டுக்களை வாங்கி கேட்டு மகிழ்ந்தார் !

என் எஸ் கிருஷ்ணன் , இவருக்கு நண்பர் !

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 DGrxRrtrTEeM7q0ttZlr+mxvobx3qmC8gp3nNnTZp2-Q


( ஒரு வேலை கலைவாணரும் கூட " முக்கூடலில் "

சங்கமம் தானா ! )

ஒரு முறை திருநெல்வேலியில் பாகவதர் கச்சேரி நடந்த போது ,

கிருஷ்ணன் , ஹரி ராம் சேட் ஐ அந்த கச்சேரிக்கு அழைத்தார் !

நம்ம ( ! ) சேட் வும் வேண்டா வெறுப்பாக பாகவதரின் கச்சேரிக்கு

சென்றார் !

பாகவதரின் கச்சேரியைக் கேட்டவுடன் , அந்த சேட் என்ன செய்தார்

தெரியுமா !

நேரா தன வீட்டுக்கு சென்றார், சின்னப்பா வின் இசைத்தட்டுக்களை

ஒன்னொன்றாக வெளியெ போட்டு சுத்தியால் உடைத்தார் !

என்ன காரணம் ?

ஒண்ணும் இல்லே !

பாகவதரை விட சின்னப்பா சரியாக பாடவில்லையாம் !

அப்போது பாகவதரும் கிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு வந்தனர் !

இசைத்தட்டுக்கள் உடைந்து கிடந்ததைப் பார்த்து கிருஷ்ணன்

" 10 ஷன் " - அத்தான் - " டென்ஷன் " - Tension - ஆகி விட்டார் !


" ஏன்னா ஓய செய்கிறீர் , சேட்டு ? "

- கிருஷ்ணன் !


" இந்த பாகவதர் கச்சேரியை இப்போதுதான் முதன் முறையாக

கேட்கிறேன் !

இவர் கச்சேரியைக் கேட்ட பிறகு சின்னப்பா வின் பாட்டுக்களை

கேட்க பிடிக்கவில்லை ! "




பாகவதவர் , சேட் ஐ தீர்க்கமாக பார்த்தார் , பின்னர்

அவரைப் பார்த்து கேட்டார் :


" அப்போ , சின்னப்பா கச்சேரியை நீங்கள் நேரில் கேட்டால்

என்னுடைய பாடல்களைக் கொண்ட இசைத்தட்டுக்களை இப்படித்தான்

சுத்தியலால் போட்டு உடைப்பீர்கள ? "



சேட் வாயடைத்து நின்றார் !





இப்போது அந்த சேட் உயிருடன் இருந்திருந்தால்

என்ன செய்திருப்பார் ?


என்ன செய்வார் .........

இசைத்தட்டுக்களுக்குப் பதில் :

" Hard Disc " களை 'சகட்டு மேனி'க்கு போட்டு

நொறுக்கி இருப்பார் !




&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





இப்போது .....

விஷயத்திற்கு வருவோமா !


( அப்பாடா ! ஒரு வழியாக விஷயத்திற்கு வந்தானா , இந்த ஆள் ! )




தொடரும் ....


எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Sun Jun 08, 2014 7:37 am

      எம் கே டி பாகவதர்  ரசிகர்கள்





 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Ykfj0kNMTt6pTu1Grsw4+Manmadhan_leelayil



 
        Vs




 
      பி . யு . சின்னப்பா  ரசிகர்கள்  !





 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 FB3mbP4TTyKvqlHZ8zyw+DSC07116





 
   .........தொடர்ச்சி !....





   என்னதான்  பாகவதர் ஆரம்ப காலங்களில்  நாடகங்களில்

நடித்து தாலும்,  அவரின் அருமை, பெருமை எல்லாம் தமிழக மக்களுக்கு

எப்படி முழுமையாக தெரிந்தது ?


'பயாஸ்கோப் '


மூலமாகத்தானே !


1936 ஆம் ஆண்டில்  வெளியான  " பவளக் கொடி "   படம் மூலம்

பாகவதரின் புகழ் தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் பரவியது !

அவரது ரசிகர்கள் பெருகினர் !  அவருக்கென்று ஒரு 'இமேஜ் '

வளர்ந்தது !


எனினும் ,

" ஆளில் லாத டீக்கடையில்  " டீ " ஆற்றும்

பஞ்சாபி டீ காரர் போல் "


தமிழ்த் திரைஉலகில் " ஒத்தை " ஆகா வளம்

வந்தார் ம் பாகவதர் !



எதுவரை ?    


அதே 1936 ஆம் ஆண்டு பி யு சின்னப்பா நடித்த :


" சந்திரகாந்தா "


வெளிவரும் வரை !

" சந்திர காந்தா " படம் வந்த பிறகு அதுவரை , பாகவதரைப்

போன்று நாடகங்களில் நடித்து வந்த சின்னப்பா வை திரையில்

பார்த்து மகிழ்ந்தனர் !

சின்னப்பாவுக்கும் ரசிகர் பட்டாளம் உருவானது !




 
     பிரபல பட நிறுவனம் :

" ஜுபிடர் பிலிம்ஸ் "

'சந்திரகாந்தா ' படத்தை தயாரித்தது !




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 8MlxfvVqQLu7HhgmqWQJ+Jupiter-Pictures-Producers-Somasundaram-and-Mohideen




 
     " நாதா ! (  'நாதா '  என்றால் நான் தான்யா ! )

" சந்திர காந்தா " என்ன விசேஷம் ஸ்வாமி ? "



 என்றா ' பழைய பட ஸ்டையிலில் ' கேட்கிறீர்கள் ? ! "



 
     ' சுண்டூர் இளவரசன் "


என்கிற  பெயரில் சின்னப்பா நடித்த வீதம் அற்புதமாக

அமைந்தது , மக்கள் அவரை அப்படி பார்த்து மகிழ்ந்தனர் !



 
     " ஸ்வாமிகள் "



 என்று     காளி என் ரத்தினம்

பேசும் வசனம் " ரஜினியின் " இது எப்படி இருக்கு " பாணியில்

மிகவும் புகழ் பெற்றது !



 
   அது மட்டுமா !



   
   திரைப் படங்களை

ஒரே நேரத்தில்

ஒன்றுக்கும் மேற்பட்ட அரங்கில்

திரையிடும் பழக்கம்

' சந்திரகாந்தா '  மூலம்

தோன்றியது !



 
 மேற் கூறிய காரணங்களால் சின்னப்பாவுக்கு

ரசிகர்கள் பட்டாளம் பெருகியது !




 
   அந்த சமயத்தில் பாகவதர் படங்கள்

என்ன வாயின ?



   பாகவதர்  நடித்த


" சிந்தாமணி " ( 1937 )

" அம்பிகாபதி (  1937 )   வெளியாகி படங்கள்

சூபர் ஹிட்  ஆகி  ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடின!  




 
     அந்த சமயத்தில் சின்னப்பா படங்களின்

நிலை ?


சின்னப்பா படங்கள் - " பப்படங்கள் " ஆயின !




 " ராஜ் மோகன் "


" அனாதைப் பெண் "

யயாதி "

" பஞ்சாப் கேசரி "


( 1937 - 39 )  

போன்ற  சின்னப்பா படங்கள் தோல்வியடைந்தன !



 
   இந்த படங்களின் தோல்வி

பாகவதரின் ரசிகர்களுக்கு

குலாப் ஜாமுனில் வெண்ணிலா ஐஸ்கிரீம்

சாப்பிட்ட  மாதிரி

இருந்தது !




 
   இந்த சமயம் பார்த்து

பத்திரிக்கைகள் இருவரின்
 
ரசிகர்களை 'கொம் பு ‘

சீவி விட்டது !




 
     சின்னப்பா வை ஆதிரிக்கும்

தமிழ்ப் பத்திரிக்கை ஒன்று பாகவதரை

இப்படி விமர்சனம் செய்தது !









என்று கூறி்யது !



 
     அவ்வளவுதான் !

பாகவதர் ரசிகர்கள் கொதித்து , கோபம் அடைந்தனர் !

சின்னப்பா ரசிகர்கள்ளை அடித்து , உதைத்து  ்மருத்துவ மனைக்கு

அனுப்பி வைத்தனர் !

குறிப்பாக மதுரை , கோவையில் உள்ள மருத்துவ மனைகளில்

பாகவதர் ரசிகர்கள் அதிகம் அட்மிட் ஆயினர் !




 
    இதனைப் பார்த்த

பாகவதர் ஆதரவு

பத்திரிக்கை 'கம்' என்று

இருக்குமா !  இது இப்படி

எழுதியது !








     என்று சேற்றை வாரி இறைத்தது !



   
   விளைவு ?





   சின்னப்பாவின் இரண்டு ரசிகைகள்

தூக்கில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர் !





 
   நொந்து போனார் சின்னப்பா !




 
   இந்த கலாட்டாவின் நடுவில் ......




   
     " சின்னப்பா - மற்றும் பாகவதர்

இந்த இருவரும் சேர்ந்து நடித்தால் இந்த

பிரச்சனை தீரும் ! "



 என்று  யாரோ ' ஊதி ' விட்டனர் !




   ' எதைத் தின்றால் பித்தம் தெளியும் '

என்கிற நிலை - இருவரின் ரசிகர்களுக்கும் !

சரி , அப்படியே சேர்ந்து நடித்தால் என்ன '

என்றும் நினைத்தார்கள் !





       காரைக்குடியில் பாகாதரின் " பவளக் கொடி "

நாடகம் !

பாகவதர் உடன் சின்னப்பா தோன்றுவார் ! "

விளம்பரம் தூள் பரத்தியது !

நாடகம் போடப்பட்டது !

அர்ஜுனன் ஆக  பாகவதர் பாடிக்கொண்டே வந்தார் !


" செம கிளாப்ஸ் ! "


பாகவதர் பாடப் பாட அவரது ரசிகர்கள் " கிளாப்ஸ் "  

போடப் போட ........பாகவதரின் பாட்டுக்கும் செம

ரெஸ்பான்ஸ் !


கலங்கிவிட்டார் சின்னப்பா !


பின்னர் ?

" கோதா " வில் இறங்கி விட்டார் !


கிருஷ்ணன் வேடத்தில் பாடிக்கொண்டே வந்தார் , சின்னப்பா !

கரகோஷம் - அத்தான் - கிளாப்ஸ் !

ஆனால் பாகவதர் அளவுக்கு இல்லை !

என்னவோ சுமார்தான் !

யோசித்தார் சின்னப்பா !

தான் பாட்டில் விட நடிப்பில்தான் சிறந்தவர் என்பது

அவருக்குத் தெரியும் !

'மயான கண்டம் '  காட்சி வரும்போது  அழுது கொண்டெ வசனம்

பேசினார் !

பாகவதரை செம கிளாப்ஸ் !

பாகவதரும் அசந்து விட்டார் !

சின்னப்பாவை கட்டிப் பிடித்து பாராட்டினார்

பாகவதர் !
 




   அவ்வளவுதான் !

அப்புறம் பாகவதரும் சின்னப்பாவும்

சினிமாவில் கூட

சேர்ந்து நடிக்க வில்லை !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 QDnc1KJNRMiR9ibnBPKc+13082011315



 
 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 R7Ggz8BRGSsl6gpYueDU+DSC07115




 
   (   சிவாஜியும் எம்ஜிஆரும் ' கூண்டுக்கிளி '

என்கிற ஒரே படத்தில் மட்டும் இணைந்தனர் !



ஜெய்சங்கரும் , ரவிசந்திரனும்  4-5 படங்களில் மட்டும்

( நான்கு சுவர்கள் , கெளரி கல்யாணம்" .... )

இணைந்தனர் !



ரஜினியும் கமலும் 12  படங்களில்

( இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் ... )

இணைந்தனர் !



பிரபுவும் கார்த்திக்கும் சில படங்களில் மட்டும்

( ' அக்னி நட்சத்திரம் ' , ' உரிமை கீதம் ' )

இணைந்தனர்ர் !



அஜித்தும் விஜய் யும் ஒரே படத்தில் மட்டும்

( ' ராஜாவின் பார்வை " )

இணைந்தனர் !



அப்புறம் .......சிம்பு , தனுஷ் மற்றும் சிவா கார்த்திகேயன் -

விஜய பூபதி ......?

இவர்களின் ' இன்னிங்க்ஸ் '  முடியவில்லை !

பார்க்கலாம் ! )    





   1939 ஆம் ஆண்டு !


சின்னப்பாவின்  " மாத்ரு பூமி "  

படம் 'ரிலீஸ் ' ஆனது !

சின்னப்பா வின் ரசிகர்கள் அந்த படத்தை போற்றி

கொண்டாடினார்கள் !




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 RwVCbwBfReGXiHVthQLf+14CP_MATHRUBOOMI1_j_115718e


 
 (  பார்த்து !   'மாத்ருபூமி " யில் ஒரு காட்சி !

படத்தைப் பார்த்து ரொம்பத்தான் மயங்கி போய்விடாதீர்கள் , ஆமா ! )




சென்னை பிராட்வே தியேட்டரில் 'பிரிமியர் '   காட்சிக்கு

வந்த :

தீரர் சத்யா மூர்த்தி

" இந்த படம் சுதந்திர போராட்டத்தை ஊக்குவிற்கும்

படம் ! "

என்று பாராட்டினார் !




 
     தமிழ்ப் படத்தைப் பார்க்காத

பிரிட்டிஷ் ஆட்சியமைப் பாளர்களுக்கு  இந்த  செய்தி

காதில்  விழ .......



மாத்ரு பூமி '

படம் தடை செய்யப்பட்டது !





 
    விளைவு ?


பாகவதரின் ரசிகர்கள் இனிப்பு

வழங்க்கி இந்த 'தடை '  யைக்

கொண்டாடினார்கள் !




 
   ஆனால் , அதே சமயத்தில்

பாகவதரின்

" திரு நீலகண்டர் "

வெளியாகி ஒரு வருடம்

ஓடிவிட்டது !




 
     சின்னப்பா ரசிகர்கள்

வாழ்க்கையையே வெறுத்து விட்டனர் !




   எனினும் , 'மாத்ரு பூமி ' படத்தில்

இடம் பெற்ற


" நமது ஜென்ம பூமி "

என்கிற பாடல் சூபர் ஹிட் ஆகி

1,00, 000  இசைத்தட்டுக்கள் விற்று

சின்னப்பாவுக்கு புகழைத் தேடி த தந்தது !

சின்னப்பா ரசிகர்களுக்கு இது ஊர்

ஆறுதல் பரிசு !




எனினும் ' மாத்ரு பூமி ' தடையை வென்று வெளியாகி

தோல்வி


   அடைந்தது !


' மாத்ரு பூமி ' படத் தோல்விக்கு பி யு

சின்னப்பா ரசிகர்கள் சொன்ன காரணம் :



" சின்னப்பா இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகன் , எனவே

படத்தின் தோல்விக்கு சின்னப்பா காரணமே அல்ல !  "


(  முதல் கதாநாயகன் : டி எஸ் சந்தானம் என்பவர் ! )





 
     அதே சமயம் :

" திரு நீலகண்டர் "

படம் வெற்றியில்  பாகவதரின் ரசிகர்கள்

மகிழ்ச்சி அடைந்தனர் !





   
   மனம் வெறுத்தார் சின்னப்பா !

மெளன விரதம் மேற்கொண்டார் !

தன சொந்த ஊருக்கு சென்றார் !






 சின்னப்பா படங்களில் நடிக்க வேண்டும்

என்று பலரும் அவரைக் கேட்டுக்கொண்டனர் !

ஆனால் சின்னப்பா 'கம் ' என்று இருந்து விட்டார் !





 
   அப்போதுதான் ஓர்

அதிசயம் நடந்தது !




 பிரபல பட நிறுவனம் ஆன " மாடர்ன் தியேட்டர்ஸ் "

அதிபர்  டி ஆர் சுந்தரம், நேராக  புதுக்கோட்டைக்கு சென்றார் -

சின்னப்பாவை சந்தித்தார் -  தன புதிய படம் ஒன்றில்

ஒப்பந்தம் செய்ய !





 
 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 5462ct3vSKSonpJACS0S+03-05-2013_38





 பாகவதர் ரசிகர்கள் இந்த செய்தியைக்

கேட்டவுடன் 'கதி ' கலங்கினர் !




 
   தமிழ்த் திரைப் பட வரலாற்றில்

முதன் முறையாக வாய் வழியாக

ஒப்பந்தம் போடாமல் எழுத்து

மூலமாக ஒப்பந்தம் போட்டார்கள் - டி ஆர் சுந்தரமும்

பி யு சின்னப்பாவும் !

அந்த படம் தான் " உத்தம புத்திரன் "  ( 1941 )




பிரபல ஆங்கில எழுத்தாளர் :

   அலெக்சாண்டர்  டூமாக்ஷ்

எழுதிய  நாவல் :

 " The  Man  In  THe  Iron  Mask  "


 
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 S85XsrDOStSZ1HzFIryf+MV5BMTkwNTExNDE1OF5BMl5BanBnXkFtZTgwMzM0MDgyMTE@._V1__SX1303_SY591_

   ஆங்கிலத்தில் வெளியாகி பெரும் வெற்றி – 1939 .

பெற்றதை டி ஆர் சுந்தரம் , சின்னப்பாவை வைத்து

'உத்தம புத்திரன் ' ஆக்கினார் !



தமிழில் முதன் முறையாக இரட்டை வேடங்கள் முறை

இந்த படத்தில் இருந்து தொடங்கியது !

இரண்டு சின்னப்பாக்கள் மோதுவதை திரையில் பார்த்து

' லாலா கடையில் மிட்டாய் யை 'ஜொல' கொண்டு

பார்ப்பது போல் மக்கள் , குறிப்பாக சின்னப்பா ரசிகர்கள்

பார்த்து மகிழ்ந்தனர் !


( இதே கதையை , இதே பெயரில் 1958 ஆம் ஆண்டு சிவாஜி


 

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Ef0EojcRQm2PhDsLCbOc+G.Ramanathan


கணேசன் நடித்து  வெளிவந்தது உங்களுக்கு 'காப்பகம் ' -

அத்தான் - ஞாபகம் இருக்கும் , சரியா ! )



 
 " உத்தம புத்திரன் ' படம்

முலம் பி யு சின்னப்பா 'ரி என்ட்ரி'   ஆகி வெற்றி

வாகை சூடினார் !



   பாகவதர் ?


   ' அசோக் குமார் ' ( 1941 )

வெளிவந்து வெற்றி வாகை சூடியது !

( எம்ஜிஆரும் இந்த படத்தில் 'இருந்தார் ' ! )


 

 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 YwguFxVRHW31ukQQ41Hk+DSC07118



 ( இடது ஓரத்தில் எம்ஜிஆர் - கண்டுங்க்கப்பா !   ஒன்னும் புரியல )  





பாகவதர் ரசிகர்கள் மகிழ்ந்தனர் !



 அதன் பிறகு சின்னப்பாவுக்கு

தொடர்ந்து ஏறுமுகம் தான் !




 
   ' ஆர்யா மாலா ( 1941 )

" தர்ம வீரன் " ( 1941 )

" பிரிதிவி ராஜன் " ( 1942 )

அனைத்தும் 'பம்பர் ' வெற்றி !

அது மட்டுமா !

1942 ஆம் ஆண்டு வெளியான " கண்ணகி "   பி யு சின்னப்பா வை

உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்தது !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 WwtXY25SVOD1BYPXIrQw+2010100150340201



அதன் பிறகு :

' மனோன் மணி ( 1942 ) , " குபேர குசலா ' ( 1943 )

" ஹரிஸ் சந்திரா "  ( 1943 )

வெற்றி ! வெற்றி !






     பாகவதருக்கு ?



"  சிவ  கவி "


வெளியாகி 'தூள் ' கிளப்பியது !   பாட்டுக்கள்

செம தூள் !




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Aj0HkqXT8ScqjseCa4PZ+0393-vcd8





   நம்ம ' ஈகரை ' கூட

ஒரு வகையில் ' சிவ கவி ' தான் !

என்ன....

பாகவதருக்கு ' சிவ கவி ' !


ஈகரைக்கோ ......


" சிவா   கவி !   "     கண்ணடி




 
   ' நடிப்புக்கும் சண்டைக்கும்

- சின்னப்பா !


பாட்டுக்கும் சோகத்திற்கும்


பாகவதர் ! '


இரு தரப்பு ரசிகர்களும் ' பாகப் பிரிவினை'

செய்து கொண்டு 'ராசி '  ஆயினர் !




 
   அதற்கு அப்புறம் ?

ஆரோக்கியமான போட்டி

நிலவியது !



 ஆனாலும் இந்த நல்லெண்ண ஒற்றுமை சொற்ப காலம்

மட்டுமே !




என்ன ஆச்சு ?


சொல்கிறேன் !  






 1943 ஆம் ஆண்டில் பத்திரிக்கைகளில்

ஒரு விளம்பரம் வெளியானது !




 
   ' ஜெகதலப் பிரதாபன் "

பி யு சின்னப்பா நடிக்க , ஸ்ரீ ராமுலு நாய்டு இயக்க என் எஸ் கிருஷ்ணன் ,

டி ஏ மதுரம் - இவர்களும் நடிக்க

விரைவில் வருகிறது !



 
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 ZowxVlrCRY6282cNJ36X+MC-166-198x138





 இதே ஆம் ஆண்டில் பத்திரிக்கைகளில்

ஒரு விளம்பரம் வெளியானது !






 ' தியாகராஜா பாகவதர் நடிக்க  :

" ஹரிதாஸ் "

என்கிற பெயரில் ' விரைவில் வருகிறது '

என்று ஒரு விளம்பரம் !



 
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 BTUvWWgOQCCP06D59Hfw+folder(1)





   ' சபாஷ் , சரியான போட்டி !

இரண்டு சூபர் ஸ்டார்களில்

" நம்பர் ஒன "

யார் என்பதை இந்த

படங்கள் தீர்மானிக்கும் ! "



 என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர் !



   1944  ஆம் ஆண்டு ' ஜெகதலப் பிரதாபன் '

திரைக்கு வந்தது !

படத்தில் ஏராளமான மாயாஜாலக் காட்சிகள் !

5 சின்னப்பாக்கள் ஒரே சமயத்தில் திரையில் தோன்றி

இசைக் கச்சேரி செய்வதைப் பார்த்து

ஜனங்கள் வாயைப் பிளந்தனர் !

( பின்னர் 1965 ஆம் ஆண்டு : ' திருவிளையாடல் '

படத்தில் நடிகர் திலகம் இதே 'ஜாலத்தை '

செய்து காட்டினார் !  )


ஏராளமான சண்டைக் காட்சிகள் !

அற்புதமான வசனங்கள் !

பி யு சின்னப்பா , சும்மா , வாண வேடிக்கைகளை

நிகழ்த்தினார் !

படம் சுப்பர் ஹிட் !




 
 " ஹரிதாஸ் " ?


' தானிக்க்குத் தீனி '   சார் !

பாடல்களுக்கு குறைவில்லை !

பாகவதர் " பொளந்து "  கட்டினார் !

டி ஆர் ராஜகுமார் ' கவர்ச்சீ ' காட்டவில்லை,

'கவர்ச்சி '   காட்டினார் !



 

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 KjAL5xJXR9m9gAoclcQR+DSC01758



சென்னை பிராட்வே திரை அரங்கில் 3  தீபாவளிகளைக்

கடந்து  மாபெரும் வெற்றி பெற்றது !




 
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 69FnY6mdRumGFyTBr3Ss+220px-Haridas_3years




   ஆகா, முடிவில் வென்றது

பாகவதர் தான் !

'ஹரி தாஸ் ' படம் மூலம் தமிழகத்தின்

முதல் சூபர் ஸ்டார் ஆனார்

பாகவதர் !



  பாகவதர் ரசிகர்கள் வெற்றிக் களிப்பில்

திளைத்தனர் !


ஆனால்........



 
   ' லட்சுமி காந்தன் கொலை வழக்கில் '

' உள்ளே ' சென்ற பாகவதர் , சுமார் 2 வருடங்கள் கழித்து

' வெளியே' வரும் போது .......

அவர் தன ரசிகர்களை இழந்தார் !


தொடர்ந்து அவர் படங்கள் தோல்வி அடைந்தன !




 
   பி யு சின்னப்பா ?


' ஜெகதலப் பிரதாபன் ' படம் வெற்றி அடைந்த பின்னர்

அவருடைய படங்கள் தோல்வியில் முடிந்தன !


அதன் பின்னர் தனது 36 ஆம் வயதில் அகால மரணம்

அடைந்தார் !


அவரின் மரணத்தைப் பற்றி மேலும் பல செய்திகள்

இந்த கட்டுரையின் பின்னூட்டத்தில்

எழுதுகிறேன்  !




 பாகவதரும் , சின்னப்பாவும்

செல்வங்களையும் , பொருட்களையும்

வாங்கிக் குவித்தாலும்

அவர்களின்

புகழ்  

மட்டும் நம்மிடையே இன்னும்

வாழ்ந்து கொண்டிருக்கிறது !   ஆறுதல்[ /color]







 
   " பட்டணத்தில் பாதி இவன் வாங்கி

முடித்தான் - அந்த

பட்டயத்தில்     கண்டது போல் வேலி  எடுத்தான் ! - நலல

எட்டடுக்கு மாளிகை  வைத்து    கட்டிடத்தை கட்டியபின் -

எட்டடிக்குள்     வந்து படுத்தான் - மண்ணைக்

கொட்டியவன் வேலி எடுத்தான் !  "



 
 ' முகராசி ' -டி எம் எஸ் - கண்ணதாசன் !






 
  %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%





   
      அடுத்த கட்டுரை !





   இயக்குனர் மகேந்திரனின் ,

ரஜினியின்

இளையராஜா வின்

பாலு மகேந்திராவின்



 
      " முள்ளும் - மலரும் "


உருவான கதை !





 
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 RsBhFRBMRFCyOdZistCF+Mullum_Malarum_Poster





 
    முன்னோட்டம் :


( "  TRAILER  "






........................................................கமல் :


" ஐயா !   ' செந்தாழம் பூவின் ' பாடலின் தொடக்கத்தில் , அந்த

பாடல் எந்த சூழ்  நிலையில் பாடப் படுகிறது

என்பதை காட்ட வேன்டும் !

அதற்கு சரத் பாபு , ஷோபா - இவர்கள் நடிக்கும் சில

காட்சிகள் 'சத்யா வில் எடுக்க வேண்டும்...... ! "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 EuiUQM6GTQufpqhauBBd+0





வேணு செட்டியார் ( " முள்ளும் மலரும் " தயாரிப்பாளர் )




" அதெல்லாம் முடியாது கமல் ......இந்த மகேந்திரன் என் தலையில்

மண்ணைப் போட்டு விட்டான்......எல்லாம் போச்சு !

இப்போ நீ வேறே ! "





கமல் : " இல்லே , செட்டியார் , இந்த படம் வெற்றி பெறும் ....

தயைசெய்து ......... ! "




வேணு செட்டியார் :   " கமல் , இந்த மகேந்திரனை இன்னும்

நீ   நம்புகிறாயா ? ! "



கமல் :

" இல்லே ! செட்டியார் ! நீங்க அனுமதி கொடுத்தாள் போதும் !

படப்பிடிப்பு செலவை நான் பாத்துக்கிறேன் .....பிளீஸ் ! "




வேணு செட்டியார் :


" அப்படியா !  எப்படியோ செய்ந்கோ !



( மனதிற்குள் )

" இந்த மகேந்திரன் ஒரு   ..... பைத்தியம் னா

கமலும் ஒரு பைத்தியம் போலிருக்கு ! "



............................................தொ....ட.......ரு.........ம் !





எம்கே ஆர் சாந்தாராம்


Last edited by mkrsantharam on Sun Jun 08, 2014 7:47 am; edited 1 time in total
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by moganan Fri Jun 13, 2014 5:29 pm

அன்பு மருத்துவர் சாந்தாராமிற்கு...

மூன்று விதமான களஞ்சியங்களையும் அத்தான் தகவல் களஞ்சியங்களையும் ஒரே மூச்சில் படித்து ஏப்பம் விட்டுவிட்டேன். அத்தான் பசியாறி விட்டேன்...

உங்களது எழுத்திற்கு சொல்லவும் வேண்டுமா? அரிய பல தகவல்கள்... அசத்தும் மொழி நடை...

ஆதிகாலத்திலிருந்து நிகழ்காலத்திற்கும் வருகிறீர்கள்... எம்ஜிஆர்- சரோஜா தேவி மேட்டரை டீலில் விட்டுவிட்டீர்கள்... புதிர் போட்டு விட்டால் மனது குமையத்தான் செய்கிறது?

கலக்குங்க மருத்துவரே... படித்து மகிழ பட்டாளமே இருக்கிறது...


என்றென்றும் அன்புடன்

உங்கள்
மோகனன்

தமிழ் கானா பாடல்கள்
தமிழ்க் கவிதைகள்
moganan
moganan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 14/05/2014

http://tamilkkavithai.blogspot.com/

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by M.M.SENTHIL Fri Jun 13, 2014 10:10 pm

படிக்கும் போது அதில் லயிப்பு ஏற்படும் வண்ணம் பதிவது மிக சிலரால் மட்டுமே முடியும், அதில் நீங்களும் ஒருவர்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by சிவா Sat Jun 14, 2014 6:47 pm

இன்னும் இக்கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்கவில்லை, இன்று வேலை முடிந்து சென்றதும் படித்துக் கூறுகிறேன்!


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 5 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 26 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26  Next

Back to top

- Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum