ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

+30
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
Namasivayam Mu
T.N.Balasubramanian
shobana sahas
mbalasaravanan
சிவனாசான்
M.Saranya
veegopalji
ஸ்ரீரங்கா
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
rksivam
ayyasamy ram
anaamigan
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
moganan
udayarr
Jothiram
veeyaar
vasudevan31355
chittibabu
pon.sellamuththu
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
விஸ்வாஜீ
mkrsantharam
34 posters

Page 26 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26

Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 26 Empty பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 26 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Thu Mar 31, 2016 4:43 pm

கடிதங்களை வரைந்த :

1. தங்கை சுமதி - அடிக்கடி பல கட்டுரைகளை நான் இங்கே

தருவதற்கு முயற்சி செய்கிறேன் , சகோதரி !

அதுமட்டுமல்ல , இன்னும் இரண்டு அல்லது மூன்று இழைகளை

ஆரம்பித்து பல தலைப்புக்களில் 'மள ' , ' மள ' என்றும்

எழுத ஆசைதான் !

நேரம்தான் இல்லையே !



2. திரு . மாணிக்கம் நடேசன் ,


3. திரு . பாலசுப்பிரமணியன்


4. திரு . ராஜா ,

ஆகிய அனைவருக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !



பாடல் : 9





" சின்ன சின்ன இழை

பின்னிப் பின்னி வரும்

நம் சித்திரக் கைத்தறி சேலையடி ! - நம் தென்னாட்டில்

என்னாளும் கொண்டாடும் வேலையடி ! "


" புதையல் " ( 1957 )


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 26 ID62qy2RRDekTGrcH5Me+puthaiyal


இசை : மெல்லிசை மன்னர்கள்


பாடல் : பாட்டுக் கோட்டையார் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 26 HleGfCSeGJwRc3vw26w9+download




நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , பத்மினி நடித்த

கலைஞர் அவர்களின் " புதையல் " ( 1957 ) படத்தில் ஒரு பாடல் !

படத்தின் நாயகி ஆன பத்மினி , கைத்தறி நெசவு வேலை செய்தே

கைத்தறி நெசவு ஆடைகளின் பெருமையை போற்றிப் பாடுவதாக

ஒரு பாடல் காட்சி !

மேற்படி பாடலை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுத , படத்தின்

இயக்குனர் பணித்தார் !

மெல்லிசை மன்னர் , பட்டுக்கோட்டையாரை அழைத்தார் !


மெல்லிசை மன்னர் :



" இதோ பார் , கல்யாண சுந்தரம் ! படத்தில்

நாயகி நெசவு வேலை செய்தபடி பாடும் ஒரு பாடலை எழுதிக்

கொண்டு வா !

ஆனால் ஒரு " கண்டிஷன் ! "


பட்டுக்கோட்டையார் வாயைப் பிளந்தார் !

பட்டுக்கோட்டையார் :

" என்ன 'கண்டிஷன் ' ஐயா ! சொல்லுங்கள் !


மெல்லிசை மன்னர் : [/size][/color][/b]


" கண்டிஷன் " ஒன்றும் பெரியதாக இல்லை !

நெசவு வேலை செய்தபடி பாடும் பாடல் ஆனதால் , இந்த பாட்டின்

மெட்டு கூட நெசவு வேலை செய்யும் மெட்டில்தான் நான்

அமைக்கப் போகிறேன் !

ஆகவே , நீங்கள் பாட்டு எழுதும்போது :

" நெசவு வேலை செய்யும் மெட்டில் தான் "

எழுத வேண்டும், சரியா ? "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 26 G6D21qpLRqiND2AUk83B+handloom_1715289f


[color:a3e7= #330000]ஆக......

பாட்டுக்கு மெட்டு அல்ல , நஹி ...லேது ...!

மெட்டுக்கு பாட்டு !




பட்டுக்கோட்டையார்

தலையில் கையை வைத்துக் கொண்டார் !

ஏன்?



காட்டுக்கென்ன வேலி...

கடலுக்கென்ன மூடி ....

" பட்டுக்கோட்டையார் " என்கிற கங்கை வெள்ளம்

" மெட்டு " என்கிற

பொந்துக்குள் அடக்கி வைக்கவா முடியும் !



ஆமாம், பட்டுக்கோட்டையாருக்கு

பாட்டுக்களை மட்டும்தான் எழுத முடியும் !

மெட்டு போடுவதற்கு இசையமைப்பாளர் இருக்கிறார் !


ஆனால் ....

இசையமைப்பாளர் அமைத்த மெட்டுக்கு பாடலை

எழுத பட்டுக்கோட்டையாருக்கு வராது .....தெரியாது !



உண்மையிலே

பட்டுக்கோட்டையார்

" மெர்சல் "

ஆகிவிட்டார் ! பாடகன்



அதென்ன மெட்டுக்கு பாட்டு ?

அவ்வளவு கஷ்டமா !

எனக்குத் தெரியுமா !

எனக்கு மெட்டுக்கு பாட்டு எழுத வராது !

" துட்டுக்கு " வைத்தியம் செய்யத்தான் தெரியும் !

சில கவிஞர் கள் பாடல்களை எழுதத்தான் தெரியும் !

மெட்டுக்கு பாட்டு எழுத அவர்கள் " பிறக்க வில்லை ! "

( இப்படித்தான் சொல்லவேண்டும் ! )

' புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்படித்தான் !

கவிஞர் மாயவனாதனும் இப்படித்தான் !

அவ்வளவு ஏன் ?

கவிஞர் கண்ணதாசனும் ஆரம்ப கால கட்டத்தில்

இப்படித்தான் ! ஆனால் பின்னர் .....

வேதாவின் இந்தி ' டியூன் ' களுக்கு பாடல்களை

எழுதியதை யார் மறக்க முடியும் !

அதனால்தான் , மெல்லிசை மன்னர் , கவிஞர் ஐப் பார்த்து

இப்படி கேட்பார் :


1. ' என்ன அண்ணே !

சந்தத்திற்கு பாடலா , இல்லே சொந்தத்திற்கு

பாடலா , என்ன மாதிரியான பாட்டு எழுதப் போகிறீர்கள் ?

கவிஞர் பதில் சொல்வார் :

" வந்ததிற்கு பாட்டு எழுதுறேன் , விசு ! "



2. " அண்ணே !

மெட்டுக்கு பாட்டு எழுதப் போகிறீர்களா "

கவிஞர் :

" இலேப்பா ! துட்டுக்கு பாட்டு எழுதப் போகிறேன் !





மறு நாள் ......




" யானை வரும் முன்னே !

மணியோசை வரும் முன்னே ! "


ஆமாம் !

" ஆர்மோனியப் பெட்டி " வரும் முன்னே !

மெல்லிசை மன்னர் வருவார் பின்னே !


" எங்கேப்பா , கல்யாண சுந்தரம் ? "

பட்டுக்கோட்டையாரைத் தேடினார் , மெல்லிசை மன்னர் !

பட்டுக்கோட்டையாரைக் காணோம் !

இப்போது " மெர்சல் " ஆனவர் , மெல்லிசை மன்னர் !



" அங்கே , இங்கே " என்று தேடினார் !

தனக்குத் தெரிந்தவரை கேட்டார் !

" ப.கோ " ஐத் தெரிந்தவரை பிடித்து விசாரித்தார் !

பட்டுக்கோட்டையாரைக் காணோம் !

தலையை சொறிந்தார் , மெ. ம . !


3 நாட்கள் ஆகிவிட்டன !

பட்டுக்கோட்டையாரை காணோம் , ஐயா , காணோம் !


நான்காம் நாள் !


பட்டுக்கோட்டையார் வந்தார் !

" பிரசண்ட்ஸ் சார் ! " என்றார் மெல்லிசை மன்னரிடம் !

மெல்லிசை மன்னர் , " எங்கேயா போய்த் தொலைந்தீர் ? "

என்று வாயத் துழாவ முற்படும் போதே .........


பாடல் வரிகளை நீட்டினார் " ப . க " !




" சின்ன சின்ன இழை

பின்னிப் பின்னி வரும்

நம் சித்திரக் கைத்தறி சேலையடி ! - நம் தென்னாட்டில்

என்னாளும் கொண்டாடும் வேலையடி ! "








" டக்.....டக் " என்கிற

' கைத்தறி ஓசை மெட்டு " ஐ



சரி பார்த்து பின்பு அதற்கான

வார்த்தைகளை அமைத்து



பாடலை எழுதி , யாரிடமும்ஜ் சொல்லாமல்

முழுமையாக எழுதிய பாடல் தான் இது !



மெல்லிசை மன்னர்

வாயைப் பிளந்து

நின்றார் !




கைத்தறி நெசவுத் தறி யின் ஓசையை

நீங்கள் கேட்டிருக்கிறீர்களா !

அந்த ஓசையை ' இசை வடிவம் ' என்கிற

கற்பனை கலந்து கீழ் கண்ட பாட்டுக்கோட்டையாரின்

வரிகளைப் பாடுங்கள் !

கைத்தறி நெசவின் ஓசை மாதிரிதான் பாடல்

வரிகள் கூட வரும் !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 26 NQuAR4B8SbyeMTMd4zqU+1978674_1588247018134185_5881460792673573904_n




சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
அன்னையர் தந்தையர் வண்ணக் குழந்தைகள்
புன்னகை மங்கையர் போற்றிப் புகழ்ந்திடும்
ஆடையடி செய்துமடி போடுங்கடி
ஓஹ்ஹ்ஹ்ஹ் (சின்னச்சின்ன)
சிந்தை சிர்ற்பிகள் தேசத்தறிஞர்கள்
செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள்
ஒஓ.... ஓ....
மங்கல மாநிலம் எங்கள் மங்கல மாநிலம்
காக்கும் மறவர் யாவரும் - புவி
வாழ்வை உயர்த்தும் மக்கள் எல்லோரும்
வாங்கி மகிழும் பொன்னாடையடி
வாங்கி மகிழும் பொன்னாடையடி
ஓ.......... தான தையாதைய தந்தத் தன்ன தானா தையாதையா தந்தத் தானா
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி




பட்டுக்கோட்டையார் மெட்டுக்கு பாட்டு

எழுதிய முதல் பாடல் இதுதான் !




( பட்டுக்கோட்டையார் ,

" அந்த 3 நாட்களில் "

புதுவைக்க்குஸ் சென்று , 'புரட்சிக் கவிஞர் ' ஐப் பார்த்து

இந்த பாடலை எப்படி எழுதுவது என்று கேட்டதாகவும்

அதற்கு பாரதிதாசன் :

" கைத்தறி நெசவு செய்யும் இடத்திற்கு சென்று

அங்கு நீ கேட்கும் ஓசையை நன்கு கேட்டு

பின்பு அதற்கு ஏற்றபடி பாட்டு எழுத்து ! "

என்று சொன்னதாக :

ஆதாரம் இல்லாத

செய்தி உண்டு ! )




பிற நெசவுப் பாடல்கள் :



மெல்லிசை மன்னரின் சீடர் :

ஷியாம் இசையில் எஸ் ஜானகி குரலில் :

" கலீர் , கலீர் " பாடல்







2. " வண்ணத்துப் பூச்சி சிரிக்குது "

படம் : " குருவிக்கூடு " ( 1980 )



http://picosong.com/NY2L



3. " செந்தமிழ் நாட்டு கைத்தறிச் சேலை "

படம் : " புதுமைப் பெண் " ( 1959 )

பாடியவர் : ' இலட்சிய நடிகர் ' எஸ் . எஸ் . ராஜேந்திரன் !


http://picosong.com/NY22



" அது சரி ! அதென்ன, சென்ற கட்டுரையின்

இறுதியில் :

" பாட்டுக்கொட்டையாரை மாவாட்டிய மெல்லிசை மன்னர் ! "

என்று ஏன் எழுதினீர்கள் ? "

என்றா கேட்கிறீர்கள் ?


" கண்ணில் விரலை விட்டு ஆட்டிய " !


என்று சொல்வதற்கு " புதிய வார்ப்பு " இது ....!

வேறு ஒன்றும் இல்லை !


என்ன நீங்கள்

" மெர்சல் "

ஆகிவிட்டீர்களா ! ஜாலி




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




கவிஞர் கே. பி . காமாட்சியை

உங்களுக்குத் தெரியுமா ?

அத்தான் ' பராசக்தி பூசாரி '

அவர் , ஏ. வி. எம் . செட்டியாரை


" கழுவி ஊற்றி வைத்த " ( ! )

பாடல் !


" ட..டா ...ட ...டா ....ட . டா ..டட்டாட்டாடா "!




எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 26 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by T.N.Balasubramanian Thu Mar 31, 2016 7:07 pm

சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் .............
ஆஹா .......என்னே மனதை சுண்டி இழுக்கும் பாடல் .
பட்டுக்கோட்டை , ..................மறக்க முடியாத கவிஞன் ,,,,,,,,காலன் கொடூரன் .
MSV சொல்லவே வேண்டாம்

நன்றி டாக்டர் அவர்களே

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 26 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by krishnaamma Fri Apr 01, 2016 12:36 am

ஹை, அண்ணா வந்தாச்சா?...............ம்ம்... மள மள வென எழுதுங்கோ நாங்களும் கட கட வென படிக்கிறோம் ஜாலி ஜாலி ஜாலி

" சின்ன சின்ன இழை

பின்னிப் பின்னி வரும்

நம் சித்திரக் கைத்தறி சேலையடி ! - நம் தென்னாட்டில்

என்னாளும் கொண்டாடும் வேலையடி ! "

சூப்பர் பாட்டு அண்ணா  இது, எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை .....பழைய கதைகளை புது மொழிகளில் எழுதி இருக்கீங்க,

(" பாட்டுக்கொட்டையாரை மாவாட்டிய மெல்லிசை மன்னர் ! " ----  " கழுவி ஊற்றி வைத்த "  )...ஹா..ஹா..ஹா....

உங்களின் பதிவுகளை படிக்க படிக்க ரொம்ப நல்லா இருக்கு.......சுவாரசியமாய் இருக்கு ......இன்னும் கொஞ்சம் வம்பு சொல்லுங்கோ   அண்ணா.....படிக்க காத்திருக்கோம் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 26 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் Fri Apr 01, 2016 12:29 pm

சின்ன சின்ன இடையுடன் பின்ன பின்ன பிரமாத வார்த்தைகளில் குட்டி குட்டி வரிகளாய் வடிவமைத்து நமக்கு விருந்திட்ட டாக்டர் சார் அவர்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் தகும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 26 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2016 11:26 am

டாக்டர் சார் எங்கே போனாரு, இத்திரி அப்படியே முடங்கிக் கிடக்கிறது. டாக்டர் சார், சீக்கிரம் இத்திரியை தொடருங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 26 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by சிவனாசான் Thu Sep 29, 2016 2:30 pm

உண்மைக்கு  மாறான கருத்துகளை  படம் பிடித்து  வெளியிட்டு மக்களை ஏமாற்றுவது ஞாயமல்ல. தற்கால படமானதென்னவன் என்ற தமிழ்  படத்தில்  விஜயகாந்  தேர்தல் ஆணையராக நடிக்கிறார். அவர்  ஐந்து  சட்டவிதிகளை கொண்டுவருகிறார். அதற்கு அரசியல்வாதி எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதியிடம் முறையிட்டு அமூல் படுத்த வேண்டாம்என செய்கிறார். பிறகு தேர்தல்  நடக்கிறது. பிரசாரக் கூட்டத்தில்  குண்டு வீசி  உயிர் சேதம் ஏற்படுகிறது. தேர்தல்  ஆணையர்   ஓட்டு எண்ணிக்கையை  அந்த்தொகுதிக்கு நிறுத்த உத்திரவிட அரசியல்வாதி தேர்தல் ஆணையரை  தாக்குவதும் குஸ்தி சண்டை பயில்வான் போல தேர்தல் ஆணையர் நடப்பதாக படமெடுத்துள்ளது ஏற்றதல்ல. இப்படியா???!!! பெருந்தன்மையாக  நடந்து  செயல்படவேண்டிய ஊழியர் மற்றும் தேர்தல்ஆணையர் போர்புரிவது. இது வெட்டதக்கது கண்டிக்கத்தக்கது. அரசு நிர்காத்தை கொச்சை படுத்துவதாக உள்ளதே. நல்ல செய்திகளை  சட்டங்களை மதிக்கிற மாதிரியிம் , குற்றவாளி தண்டைபெறுவது போன்றும், இருக்கனும்.அப்படி எடுத்து  மக்களை விழிப்படைய செய்வதை விட்டு ஓர் உயர் அதிகாரி சண்டை பயில்வான் போல நடிப்பது வெறுக்க தக்கதாய் உள்ளது.இப்படி படம் எடுத்து நாட்டையே  கெடுத்து ஊழல்வாதிகாளாக்கி விட்டார்கள் கதை படைப்பாளிகள்.மற்றும் சிறைச்சாலை காவலர், காவல்துறை மீது களங்கம் ஏற்படும் காட்சிசெயல்களை  குறித்து ஏன்  அவதூறு வழக்குபதிவு அவர்கள் மீது செய்யக்கூடாது.  இப்படியா??? கதையை  எடிட்செய்தவர்கள் கவனத்தில் கொள்ளவில்லையா? எப்படி அனுமதித்தார்கள். என்னங்க இது. இப்படி பட்ட கதைகளுக்கு  அனுமதியே கொடுக்க கூடாதுங்க நாட்ல.........கற்பனையாகக்கூட இருக்க கூடாதுங்க.


ஈகரை அன்பர்கள் இதுகுறித்து என்ன நினைக்கிறார்கள். கருத்தை பதிவு செய்யுங்கள.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 26 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26

Back to top

- Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum