Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
+30
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
Namasivayam Mu
T.N.Balasubramanian
shobana sahas
mbalasaravanan
சிவனாசான்
M.Saranya
veegopalji
ஸ்ரீரங்கா
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
rksivam
ayyasamy ram
anaamigan
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
moganan
udayarr
Jothiram
veeyaar
vasudevan31355
chittibabu
pon.sellamuththu
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
விஸ்வாஜீ
mkrsantharam
34 posters
Page 23 of 26
Page 23 of 26 • 1 ... 13 ... 22, 23, 24, 25, 26
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
First topic message reminder :
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா !
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
சில திரைப்படப் பாடல்களும்
அவை பின்னர் மறைந்திருக்கும்
சுவையான
செய்திகளும் !
பாடல் : 5.
அவை பின்னர் மறைந்திருக்கும்
சுவையான
செய்திகளும் !
பாடல் : 5.
அடுத்து :
உடனே வரும் கட்டுரை ! ( அடே சூப்பருங்க ! )
கவியரசு காங்கிரஸ் கட்சியில் சேர
தூது விட்ட பாடல் ! !
உடனே வரும் கட்டுரை ! ( அடே சூப்பருங்க ! )
கவியரசு காங்கிரஸ் கட்சியில் சேர
தூது விட்ட பாடல் ! !
" பட்டணத்தில் பூதம் " ( 1967 ) (
' பட்டணத்தில் பூதம் ' படத்தில் ஒரு ' டூயட் ' பாடல் !
பாடலிக்கு இசை :
ஆர் . கோவர்த்தனம் .
பாடலைப் பாடிய வர்கள் :
டி எம் எஸ் - சுசீலா
பாடலை எழுதியவர் :
கண்ணதாசன் .
எல்லாமே தயார் தான் .........................ஆனாலும் .......
' பிராப்ளம் ........பிராப்ளம் ..........பிராப்ளம் .....
ஒரே பிராப்ளம் !
யாருக்கு ?
இசையமைப்பாளர் ஆர் . கோவர்த்தனம் அவர்களுக்கு !
என்னவாம் ?
கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு அழகாக ' டியூன் ' போட்டு விட்டார் ......
பாடலும் அழகாக அமைந்துவிட்டது .............................
ஆனால்
படத்தின் இயக்குனர் எம் . வி . ராமன் ' கஜல் ' முறையில் பாடலை
இசையமைக்க சொல்லிவிட்டாராம் ........ !
பொதுவாக , பாடல்களை எழுதிவிட்டு அதற்கு ' டியூன் ' போட்டு
பாடலை வடிவைப்பது ஆர் . கோவர்த்தனக்கு வழக்கம் !
" பாடலை எழுதிவிட்டு பின்னர் அதற்கு மெட்டு அமைத்து
பாட்டை அமைத்தால் 100 க்கு 100 சதவிகிதம் பாடல்கள்
வெற்றி பெறும் !
அப்படி இல்லாமல் மெட்டு அமைத்து அதன் பின்னர் பாடலை
அந்த மெட்டுக்குள் ' உள்ளே புகுத்துவது ' சரிவராது !
அப்படி செய்தால் 100 பாடல்களில் 10 பாடல்கள் கூட
வெற்றி
பெறாது ! "
-----------------------------------------------சொல்கிறார் கோவார்த்தனம் !
ஆனால் அப்படி சொன்னவருக்கே சோதனை !
கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு இயக்குனர் உத்தரவு படி
'கஜல் ' முறைப்படி இசையமைக்கவேண்டும் !
முடியுமா ?
முடியும் !
பாடல்வரிகளை மாற்றி விட்டால் !
ஆனால் .........
" பாடல் வரிகளை மாற்றக் கூடாது ! "
----------- சொன்னவர் கவியரசு !
என்னவாம் ?
காரணம் இருக்கு ......இறுதியில் அது உங்களுக்குத் தெரியும் !
பாடல் வரிகளை மாற்ற கோவர்த்தனம் அவர்களுக்கே மனம்
வரவில்லை !
பாடல் வரிகள் அவ்வளவு அற்புதமாக அமைந்துள்ளன !
சரி , அப்புறம் என்னய்யா ஆச்சு ? "
என்கிறீர்களா !
என்னவாகும் .....
. " இட்லி இல்லேன்னா தோசை தான் ......
தோசை இல்லேன்னா பரோட்டா தான் ! "
கதைதான் ஆனது !
பாட்டை அமைத்தால் 100 க்கு 100 சதவிகிதம் பாடல்கள்
வெற்றி பெறும் !
அப்படி இல்லாமல் மெட்டு அமைத்து அதன் பின்னர் பாடலை
அந்த மெட்டுக்குள் ' உள்ளே புகுத்துவது ' சரிவராது !
அப்படி செய்தால் 100 பாடல்களில் 10 பாடல்கள் கூட
வெற்றி
பெறாது ! "
-----------------------------------------------சொல்கிறார் கோவார்த்தனம் !
ஆனால் அப்படி சொன்னவருக்கே சோதனை !
கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு இயக்குனர் உத்தரவு படி
'கஜல் ' முறைப்படி இசையமைக்கவேண்டும் !
முடியுமா ?
முடியும் !
பாடல்வரிகளை மாற்றி விட்டால் !
ஆனால் .........
" பாடல் வரிகளை மாற்றக் கூடாது ! "
----------- சொன்னவர் கவியரசு !
என்னவாம் ?
காரணம் இருக்கு ......இறுதியில் அது உங்களுக்குத் தெரியும் !
பாடல் வரிகளை மாற்ற கோவர்த்தனம் அவர்களுக்கே மனம்
வரவில்லை !
பாடல் வரிகள் அவ்வளவு அற்புதமாக அமைந்துள்ளன !
சரி , அப்புறம் என்னய்யா ஆச்சு ? "
என்கிறீர்களா !
என்னவாகும் .....
. " இட்லி இல்லேன்னா தோசை தான் ......
தோசை இல்லேன்னா பரோட்டா தான் ! "
கதைதான் ஆனது !
" ஆனவோன்னா ' சஸ்பன்ஸ் ' போட்டு எழுதுறான்யா இந்த ஆளு ! "
என்கிறீர்களா !
சொல்கிறேன் !
" பாடல் வரிகளை மாற்ற முடியவில்லை என்றால்
" கஜல் டியூன் " ஐ நீங்கள் தியாகம் செய்ய வேண்டும் ! "
சொன்னவர் இசையமைப்பாளர் , இயக்குனரிடம் !
இயக்குனர் " சரி " என்று தலையாட்ட
" வீணை மற்றும் " லைட் கிலாச்சிகள் " மெட்டில்
பாட்டு அரங்கேறி பாட்டு ஹிட் ஆனது !
அந்த பாட்டுத்தான் :
" அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி !
என்னை சேரும் நாள் பார்த்து சொல்லடி ! "
" அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி !
என்னை சேரும் நாள் பார்த்து சொல்லடி ! "
சரி , கண்ணதாசனின் வரிகள்
ஏன் மாற்றப்படவில்லை ? "
ஏன் மாற்றப்படவில்லை ? "
கண்ணதாசன் அப்போது
காங்கிரஸ் கட்சியில் சேர
துடித்தார் !
எனவே ......அவர் ...
" சிவகாமி மகனிடம் " பாட்டில் தூது விட்டார் !
" சரியா ! ' அது யார்யா ' சிவகாமியின் மகன் ' ? "
வேறு யார் .....
" கர்ம வீரர் காமராஜ் தான் ! "
காங்கிரஸ் கட்சியில் சேர
துடித்தார் !
எனவே ......அவர் ...
" சிவகாமி மகனிடம் " பாட்டில் தூது விட்டார் !
" சரியா ! ' அது யார்யா ' சிவகாமியின் மகன் ' ? "
வேறு யார் .....
" கர்ம வீரர் காமராஜ் தான் ! "
" சிவகாமியும் - அவரது செல்வனும் !
பாடல் :
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடுத்த பாடல் !
சரோஜாதேவியை
திட்டியும் ( ! )
பத்மினியும் வாழ்த்தி ...............வரவேற்றும்
கண்ணதாசன்
எழுதிய பாடல் !
திட்டியும் ( ! )
பத்மினியும் வாழ்த்தி ...............வரவேற்றும்
கண்ணதாசன்
எழுதிய பாடல் !
எம்கே ஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
மிக அருமை
" இட்லி இல்லேன்னா தோசை தான் ......
தோசை இல்லேன்னா பரோட்டா தான் ! "
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
இதை பலவாறு அறிப்பட்ட கதை அதை பகிர்ந்தமைக்கு நன்றி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
நம்ம டாக்டர் சார் இருக்காங்களே, சும்மா சாதாரணமா சகல விசயங்களையும் கறச்சி கலந்து சுந்தர எழுத்தோட, இதமா பதமா நம்மை படிக்க வச்சிடுவாரு. சும்மா படிச்சிகிட்டே இருக்கலாம், அம்புட்டு சுவையாக இருக்கும் அவரோட எழுதும் திறன். வாழ்த்துகள் டாக்டர் சார்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
அருமையான பதிவுகள்!
மேலும் தொடர வேண்டுகிறேன்
செல்வா!
மேலும் தொடர வேண்டுகிறேன்
செல்வா!
pkselva- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
மேற்கோள் செய்த பதிவு: 1173257mkrsantharam wrote:[center][size=24][color=#993300] ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்
சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் !
எம்கே ஆர்சாந்தாராம்
[/u]
சுத்தத் தமிழில் திட்டி விடுகிறோம்.
திரைப்பட உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தங்களை இது போன்ற ஆயிரம் கதைகள் திரும்பிப் பார்க்கட்டும். அதைத் தொடர்ந்து எழுதி எழுதித் தங்கள் கைகள் வலிக்காது இருக்கட்டும்.
அழகான பதிவுகள். முழுப் பதிவும் இன்றைய என் காலைக்கு உணவாகியது. நன்றிகள் எம். கே. சாந்தாராம்.
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
அது எப்படி எங்களால் முடியும் ஐயா ....mkrsantharam wrote:ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்
சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் !
எம்கே ஆர்சாந்தாராம்
இறைவன் உங்களுக்கு நோய்நொடியில்லாத நீண்ட ஆயுளை அளித்து , நீங்கள் இது போல இன்னும் பல்லாயிரம் கட்டுரைகளை எழுதி உலக தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் படித்து பயன்பெறவேண்டும்.
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
MKR Santharam wrote:( ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்
சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் ! மகிழ்ச்சி )
மணம் கமழும் சந்தன பதிவுகள்
மனம் வருமா திட்டுவதற்கு ?
தொடருங்கள் அய்யா , எப்போதும் போல் ,
ஆர்வத்தை தூண்டும் நடையில் ,
அழகு தமிழில் .
அணிவகுத்து நிற்போம் , படிப்பதற்கு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
கடிதங்களை அன்புடன்
வரைந்த :
1. திரு . ஹரி பிரசாத்
அடியேன் எழுதும் எழுத்துக்களை அணு அணுவாக
நீங்கள் ரசிப்பதற்கு , உங்களின்
மேற்கோளே சாட்சி !
நன்றி , ஹரி பிரசாத் !
2 . திரு . பழ முத்து ராமலிங்கம் :
" அனைவருக்கும் அறிந்த செய்திதான் , ஆனால் திரு. ஹரி பிரசாத்
போன்ற இளம் தலை முறைக்கு இந்த தொகுப்பு
புதியவை தானே !
உங்களுக்கு என் நன்றி !
"
3 . மாணிக்கம் நடேசன் :
ஐயா , தங்களின் பாராட்டுக்களுக்கு நான் எப்பொழுதும்
நன்றி உடையவனாக இருப்பேன் !
நன்றி ஐயா !
.4 . திரு . பி . கே . செல்வா
உங்களுக்கும் நன்றி ஐயா !
5. சகோதரி . ஆதிரா :
அன்புச் சகோதரி !
திரைப்படங்களைப் பற்றியும் , திரைப்படப் பாடல்களையும்
நீங்கள் எங்கே ரசிக்கப் போகிறீர்கள் என்று
" தப்பு கணக்கு "
போட்டுவிட்டேன் !
உங்களின் எழுத்துக்களில் தொனித்த நகைச் சுவை உணர்வை
மிகவும் ரசித்தேன் !
மிகவும் நன்றி , சகோதரி !
6. திரு. ராஜா :
உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி , ராஜா சார் !
7. திரு . தி . என் . பாலசுப்பிரமணியன்
உங்களின் மனம் கவரும் எழுத்துக்களுக்கு மிக்க
நன்றி , ஐயா !
ஆகிய அனைவருக்கும் நன்றி !
நன்றி !
நன்றி !
வரைந்த :
1. திரு . ஹரி பிரசாத்
அடியேன் எழுதும் எழுத்துக்களை அணு அணுவாக
நீங்கள் ரசிப்பதற்கு , உங்களின்
மேற்கோளே சாட்சி !
நன்றி , ஹரி பிரசாத் !
2 . திரு . பழ முத்து ராமலிங்கம் :
" அனைவருக்கும் அறிந்த செய்திதான் , ஆனால் திரு. ஹரி பிரசாத்
போன்ற இளம் தலை முறைக்கு இந்த தொகுப்பு
புதியவை தானே !
உங்களுக்கு என் நன்றி !
"
3 . மாணிக்கம் நடேசன் :
ஐயா , தங்களின் பாராட்டுக்களுக்கு நான் எப்பொழுதும்
நன்றி உடையவனாக இருப்பேன் !
நன்றி ஐயா !
.4 . திரு . பி . கே . செல்வா
உங்களுக்கும் நன்றி ஐயா !
5. சகோதரி . ஆதிரா :
அன்புச் சகோதரி !
திரைப்படங்களைப் பற்றியும் , திரைப்படப் பாடல்களையும்
நீங்கள் எங்கே ரசிக்கப் போகிறீர்கள் என்று
" தப்பு கணக்கு "
போட்டுவிட்டேன் !
உங்களின் எழுத்துக்களில் தொனித்த நகைச் சுவை உணர்வை
மிகவும் ரசித்தேன் !
மிகவும் நன்றி , சகோதரி !
6. திரு. ராஜா :
உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி , ராஜா சார் !
7. திரு . தி . என் . பாலசுப்பிரமணியன்
உங்களின் மனம் கவரும் எழுத்துக்களுக்கு மிக்க
நன்றி , ஐயா !
ஆகிய அனைவருக்கும் நன்றி !
நன்றி !
நன்றி !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சில திரைப்படப் பாடல்களும்
அவை பின்னர் மறைந்திருக்கும்
சுவையான
செய்திகளும் !
பாடல் : 6
அவை பின்னர் மறைந்திருக்கும்
சுவையான
செய்திகளும் !
பாடல் : 6
" ஏனடி ரோஜா !
என்னடி சிரிப்பு !
எதனை கண்டாயோ ! "
படம் : " காட்டு ரோஜா " ( 1963 )
பாடியவர் : பி . சுசீலா
இசை : கே . வி . மகாதேவன்
பாடல் : கவியரசு . கண்னதாசன் .
என்னடி சிரிப்பு !
எதனை கண்டாயோ ! "
படம் : " காட்டு ரோஜா " ( 1963 )
பாடியவர் : பி . சுசீலா
இசை : கே . வி . மகாதேவன்
பாடல் : கவியரசு . கண்னதாசன் .
" நாட்டிய " பேரொளி " பத்மினி .
லலிதா - பத்மினி - ராகினி - ஆகிய சகோதரிகள்
முதலில் , அந்த கால பிரபல நடனக் கலை நிபுணர் உதய சங்கர் ,
தயாரித்த " கல்பனா " என்கிற இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம்
ஆயினர் !
அந்த படத்தைப் பார்த்த ஏ . வி. எம் செட்டியார் , பின்னர் தான் தயாரித்த
" வேதாள உலகம் " படத்திற்கு நடனமாட பத்மினி - லலிதா வை
ஒப்பந்தம் செய்தார் !
அதன் பின்னர் நிறைய படங்கள் !
பத்மினியின் நடனங்கள் நிறைந்த படங்கள் !
" மணமகள் " படத்தில் பத்மினியின் நடிப்பைப் பார்த்து ,
" இப்படி எல்லாம் உணர்ச்சிகரமாக இவர் நடிக்கிறாரே , நான்
இப்படி எல்லாம் நடிக்க வருமா ! "
என்று ' பெரு மூச்சு ' விட்டவர் :
பத்மினிக்கு பின் நடிக்க வந்த " ஜூனியர் " :
சிவாஜி கணேசன் !
அதற்கு பின்னர் அதே சிவாஜியுடன் 44 படங்களுக்கும்
மேல் பத்மினி நடித்தார் !
அதற்கு பின்னர் எம்ஜிஆர் - ஜெமினி கணேசன் - எஸ் .எஸ் . ஆர்
, இந்தி நடிகர் ராஜ் கபூர் என அனைத்து இந்திய நடிகர்களுடன்
நடித்து அகில இந்திய நட்சத்திரம் என்கிற பெயருடன்
மகப் பெரிய புகழுடன் விளங்கி வந்தார் !
இது பத்மினி !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
" அபிநய சரஸ்வதி "
பி . சரோஜாதேவி .
பி . சரோஜாதேவி .
தமிழில் , " தங்க மலை ரகசியம் " போன்ற படங்களில் சிறு சிறு
வேடங்களில் நடித்து வந்த சரோஜாதேவி எம்ஜிஆரின் " நாடோடி மன்னன் " படத்தில்
அதாவது பத்மினி நடித்து புகழ் பெற்று ஏறக்குறைய 8 ஆண்டுகள் வந்த " ஜூனியர் "
நடிகை பி . சரோஜாதேவி .
ஸ்ரீதரின் " கல்யாண பரிசு " இவரை உச்சத்தில் கொண்டு போய் விட்டது ! அப்போதில்
இருந்து இவருக்கு ஏறுமுகம் தான் !
அந்த படத்திற்கு பின் இவர் பத்மினியை " ஓவர் டேக் " செய்தார் !
இது சரோஜாதேவி !
" என்னய்யா ஆச்சு , உமக்கு ? ஏன் இந்த நடிகைகளின்
ஆராய்ச்சி ? "
என்றா கேட்கிறீர்கள் ?
" சோழியன் குடுமி சும்மா ஆடுமய்யா ! "
1961 ஆம் ஆண்டில் நடிகை பத்மினி , டாக்டர் ராமசந்திரனை திருமணம்
செய்து கொண்டு அமெரிக்காவுக்கு குடியேறிவிட்டார் !
அவ்வளவுதான் !
பி . சரோஜாதேவி காட்டில் மழை !
ஆனால் ......செம்பரம்பாக்கம் ஏரியை ,
, ஏரி நிரம்பி இரண்டு நாட்கள் கழித்தும் முறைப்படி அனுமதி
வாங்கி , திறக்கவே முடியாத அளவுக்கு
அடை மழை !
பத்மினி விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இவரை மொய்த்துக் கொண்டார்கள் !
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் - இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு
சரோ ( ! ) வை " புக் ' செய்ய அலைந்தார்கள் !
எப்படி ?
1. சரோ வை அறிமுகம் செய்த எம்ஜிஆர் இவருக்காக காத்துக் கிடந்த
கொடுமை !
" ஏன் கடமை " படத்தின் படப் பிடிப்பை சொதப்பினார் !
2. ஒரே சமயத்தில் - ஒரே கால கட்டத்தில் :
காலையில் சிவாஜியுடன் படப்பிடிப்பு : " ஆலையமணி "
மாலை - இரவு எம்ஜிஆருடன் படப்பிடிப்பு : " பணத்தோட்டம் " !
3. சிவாஜியின் " புதிய பறவை " படப்பிடிப்பில் ஒரே சொதப்பல் !
4. எம்ஜிஆரின் " தெய்வத்தாய் " படத்தில் இவர் செய்த " கோல் மால் " கள் .
" இனி எம்ஜிஆருடன் இவர் நடிக்கும் இறுதிப் படம்
" தெய்வத்தாய் " என்று சொல்லும் அளவுக்கு இருந்தது !
இப்படி பல புகார்கள் - நடிகை சரோஜாதேவி இடம் !
இந்த " கூத்து" க்களை வேடிக்கை பார்த்து வந்த
கவியசு கண்னதாசன் , சரோஜா தேவி மீது வெறுப்பு கொண்டார் !
" இந்த பெண் தமிழ்ப் பட உலகை எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறார் ! "
என்று வெறுப்புடன் சொன்னார்
பின்பு சொன்னார் :
" இந்த " தயிர்க்கார பொம்பளைக்கு "
இவ்வளவு ' டிமாண்டா ! "
இவ்வளவு ' டிமாண்டா ! "
அது என்ன " தயிர்க்கார பொம்பளை ? "
அது வேறு ஒண்ணும் இல்லே !
நடிகை சரோஜா தேவி யின் தாயார் , கர்நாடகாவில் அவர் நடிக்க வருவதற்கு
முன் தயிர் வியாபாரம் செய்து வந்தாராம் !
அத்தான் !
இதனை நான் சொல்லவில்லை, ..................
கண்ணதாசன் சொன்னது !
[color:ef79= #339900]இந்த சமயத்தில் தான் ..................
நடிகை பத்மினி , திருமணத்திற்கு ப பின் .....
மீண்டும் நடிக்க வந்தார் !
நடிகை பத்மினி , திருமணத்திற்கு ப பின் .....
மீண்டும் நடிக்க வந்தார் !
" காட்டு ரோஜா " ( 1963 ) படத்தில் ஒப்பந்தம்
ஆனார் !
கண்னதாசன் அந்த படத்திற்கு பாடல்களை எழுதினார் !
இதுதான் நல்ல சமயம் ..........
பத்மினியை வரவேற்று .....
சரோ வை சாடி அவர் எழுதிய பாடல் :
" ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு ! "
பத்மினியை வரவேற்று .....
சரோ வை சாடி அவர் எழுதிய பாடல் :
" ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு ! "
இனி பாடலுக்கு வருவோம்
இந்த பாடல் முழுவதும் ,
நடிகை பத்மினி , நடிகை சரோஜா தேவி யை நோக்கி நக்கலாக பாடுவதாக
கண்ணதாசன் எழுதியுள்ளார் !
எனவேதான், படப்பிடிப்பு நடத்தும் போது, பத்மினியின் கையில்
ரோஜாப் பூக்களை திணித்துகே கொடுத்து ,
" அம்மா சரோஜாதேவி ! இந்த பாடல் நிஜ ரோஜாக்களைப் பார்த்து தான்
பத்மினி பாடுகின்றார் !
உங்களை நினைத்து அல்ல ! "
என்று சொல்லாமல் சொல்லிவிட்டனர் !
இந்த அழகில் இந்த படத்தின் பெயர் :
" காட்டு ரோஜா "
" ஏனடி ரோஜா "
என்பதை :
" ஏனடி ச ரோஜா "
என்று நினைத்துக் கொள்ளுங்கள் !
" அன்று போனவள் இன்று வந்துவிட்டாய் என
புன்னகை செய்தாயோ ! "
இதற்கு நான் விளக்கம் சொல்லணுமாக்கும் !
இப்படி பாடலின் அனைத்து வரிகளும் சரோஜா தேவியை
நினைத்து எழுதியிருப்பார் , கவியசு !
" மொட்டாக நின்றவளே !
முள்ளோடு வந்தவளே ! "
அது என்ன முள் ?
ரோஜாவுக்கு முள் இருக்கும்லே , அத்தான் .......!
நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள் !
" எத்தனை காலங்கள் மாறிய போதும்
என்றும் இளமையடி ! - எனக்கு
என்றும் இளமையடி ! "
நடிகை பத்மினிக்கு திருமணம் ஆனா போதும்
அவர் எப்போதும் இளமையோடுதான் இருப்பார் என்பதை
கண்ணதாசன் சொல்லுகிறார் !
அது மட்டுமா !
" ரத்தினக் கம்பளமே !
அடி முத்திரை மோதிரமே ! - நீ
நாளை பொழுதுக்கும் வாடி விழுந்திடும்
மாயக் கதையடியோ ! "
அதாவது ......
பத்மினிக்கு எப்போதும் ' மார்கெட் ' உண்டு !
சரோஜாதேவிக்கு கூடிய சீக்கிரம்
மார்கெட் விழுந்துவிடும் -
என்கிறார் !
உண்மைதான் !
திருமணம் ஆகி மறு பிரவேசம் செய்த பத்மினி
பிறகு பல ஆண்டுகள் தமிழ்த் திரை உலகில்
கோலோச்சினார் !
ஆமாம் 1986 ஆம் ஆண்டில் " லக்ஷ்மி வந்தாச்சு " படம் வரை
பத்மினி நடித்தார் !
சரோஜா தேவி ?
1976 ஆம் ஆண்டில் அவர் நடித்த :
" பத்து மாத பந்தம் " படத்திகு அப்புறம் அவர் தமிழில்
நிலைத்து நிற்க முடியவில்லை !
திருமணம் ஆகி மறு பிரவேசம் செய்த பத்மினி
பிறகு பல ஆண்டுகள் தமிழ்த் திரை உலகில்
கோலோச்சினார் !
ஆமாம் 1986 ஆம் ஆண்டில் " லக்ஷ்மி வந்தாச்சு " படம் வரை
பத்மினி நடித்தார் !
சரோஜா தேவி ?
1976 ஆம் ஆண்டில் அவர் நடித்த :
" பத்து மாத பந்தம் " படத்திகு அப்புறம் அவர் தமிழில்
நிலைத்து நிற்க முடியவில்லை !
கண்ணதாசன் ஒரு
தீர்க்கதரசிதான் !
தீர்க்கதரசிதான் !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடுத்த பாடல் :
பாடலாசிரியர் வாலியால்
மெல்லிசை மன்னரை
அழவைத்த ( உண்மையிலே ! ) பாடல் !
மெல்லிசை மன்னரை
அழவைத்த ( உண்மையிலே ! ) பாடல் !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
காட்டு ரோஜா வை பற்றிய தகவல்களை ,
காட்டிய அழகு , என்ன சொல்லுவது போங்க ,ரோஜா மனம்தான்
film news Anandhan போன்ற தகவல் களஞ்சியம் நீங்கள்
ரமணியன்
காட்டிய அழகு , என்ன சொல்லுவது போங்க ,ரோஜா மனம்தான்
film news Anandhan போன்ற தகவல் களஞ்சியம் நீங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 23 of 26 • 1 ... 13 ... 22, 23, 24, 25, 26
Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
Page 23 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|