புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 21 of 26 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2015 11:53 am

மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர்சார் அவரது பணியில ரொம்ப பிசியா இருப்பாருன்னு நெனைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1157968

இருக்கும் மாமா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 18, 2015 12:14 pm

நன்றி நன்றி எம்கேஆர்சாந்தாராம் அவர்களே .
தெளிந்த நீரோடையில் ஓடி விளையாடும் குட்டி மீன்
போன்று இருந்தது , உங்கள் விவரிப்பு.
ரசித்து ரசித்துப் படித்தேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Aug 19, 2015 8:02 am

மடல்களை எழுதிய :



1. ஷோபனா அவர்களுக்கும் ,


2. திரு. விஸ்வாஜி அவர்களுக்கும் ,


3. தங்கை கிருஷ்ணம்மா அவர்களுக்கும்

4. தங்கை கிருஷ்ணம்மா அவர்களுக்கும்

( இரண்டு மடல்களை எழுதினாங்க இல்லே , அதனால்தான் ! புன்னகை )


5. திரு . மாணிக்கம் நடேசன் அவர்களுக்கும்



6. திரு . பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும்




நன்றி ! நன்றி நன்றி ! பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 1571444738





உங்களின் அனைவரின் அன்பையும்

என்றும் மறக்க மாட்டேன் !





சில பல வேலைகள் ,

சில பிச்சல்கள் ,

சில பிடுங்கல் கள் ,

சில லொள்ளுகள் ,

சில கொள்ளுகள் ,

சில ராவுகள் ,

சில 'லவுசுகள் ' .........


இத்தியாதி , இத்தியாதிகள் ......காரணமாக இக்கரைக்கு ......

அத்தான் " ஈகரை" க்கு எழுத முடியவில்லை !



வெகு விரைவில் .....


இந்த இழையிலும் .....

மற்றும் " பாக்கி " வைத்துள்ள வேறு இழைகளிலும்

எழுதுவேன் .......


நேரம் தவறியதற்கு பொறுத்தருள வேண்டுகிறேன் !




எம்கே ஆர் சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 19, 2015 8:42 am

டாக்டர் பணி மிகவும் பழுவான பணி. டாக்டர் ஐயா, உங்கள் நிலையை நாங்களும் அறிவோம். உங்களது பொறுப்பு எந்த அளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே. சிறப்பான உங்களது பதிவு ஒரு தொடர்கதை படிப்பது போல் இருக்கிறது. அதனால் அடுத்தது என்னவாக இருக்கும் என காத்திருக்கிறோம். நன்றி.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 6:39 pm

மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர் பணி மிகவும் பழுவான பணி. டாக்டர் ஐயா, உங்கள் நிலையை நாங்களும் அறிவோம். உங்களது பொறுப்பு எந்த அளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே. சிறப்பான உங்களது பதிவு ஒரு தொடர்கதை படிப்பது போல் இருக்கிறது. அதனால் அடுத்தது என்னவாக இருக்கும் என காத்திருக்கிறோம். நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1158043

மாமா சொல்வது ரொம்ப வாஸ்த்தவம்...........நன்றி அண்ணா, அப்பப்போ வந்து போங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 12:58 am

அய்யா .. முடிந்த போதெல்லாம் வாருங்கள் .. எங்களுக்கு செய்திகள் பல தாருங்கள் ... நன்றி அய்யா .

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Aug 27, 2015 4:30 pm

மிகவும் நன்று



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri Aug 28, 2015 7:17 am

மடல்களை எழுதிய :


1. திரு. மாணிக்கம் நடேசன்


2. தங்கை கிருஷ்ணம்மா


38000  பதிவுக்கும் மேல் !   அப்பா ! அப்பப்பா !  அம்மா ! அம்மம்மா !  இத்தனை

பதிவுகள் !  "  சர்ர்க்க் " !   அத்தான் !    உங்களை நெட்டி முறித்து

திருஷ்டி கழிக்கிறேன் !

வாழ்த்துக்கள் தங்கை சுமதி !

இன்னும் பல லட்சங்கள் பதிவுகள் நீங்கள் இடவேண்டும் !

வாழ்த்துக்கள்  !


3. ஷோபனா சஹாஸ்


4, திரு. நமசிவாயம் -  உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன் !




ஆகிய அனைவருக்கும் நன்றி !



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@






b]
     சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !



பாடல் :  3  
[/b]





  "  தாழம்பூ " (  1965 )




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 SElxNbcZTvO2YruhI36b+thazampuposter


எம்ஜிஆர் நடித்த  படத்தில் இருந்து

ஒரு பாடல் !










[color:8c67= #006600]  பாடலை எழுதியவர் :


வாலி !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 D046GkdQRRG771fviZEV+vaa





" என்னய்யா !   ' லேட் கமர் ' !    வந்த வேகத்தில் எந்த பாடல்

என்பதை குறிப்பிட மறந்தீரோ ! ? "


என்றா கேட்கிறீர்கள் !



 
 காரணம் இல்லாமலா " கம் " என்று எழுதாமல் விட்டேன் !

அது எந்த பாடல் என்று இப்போதே குறிப்பிட்டால் கட்டுரையின்

சுவாரஸ்யம் கிட்டாமல் போய்விடும் !


அத்தான் !



( சரி , சரி , அதற்காக முந்திரிக்கொட்டை மாதிரி இப்போதே

கட்டுரையின் பின் பக்கம் எட்டிப் பார்த்து

உங்களின் சுவாரஸ்யத்தை நீங்களே

" லபக்கிக்" கொள்ளாதீர்கள் , அம்புட்டுத்தேன் !    என்ன கொடுமை சார் இது






 எம்ஜிஆர் -  வாலி .




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 D5IyLPE8SOKE9v6rm8lh+images(1)



சுமார் 25 ஆண்டுகள் காலம் , கிட்டத்தட்ட

" கணவன் - மனைவி " போல

வாழ்ந்து வந்த நட்பு !


எம்ஜிஆர் மற்றும் வாலி - இந்த இருவரைப் பற்றி முற்றிலும்

அறிந்தவர்கள் நான் சொன்ன கூற்றை

மறுத்து பேசமாட்டார்கள் !



முதன் முதலில் , எம்ஜிஆர் க்காக வாலி பாடலை எழுதிய

" நல்லவன் வாழ்வான் " படத்திற்காக

சீர்காழி - சுசீலா பாடிய :

" சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் "

இடம் பெற்றபோது எம்ஜிஆருக்கு வாலி பற்றிய

ஜாதகம் மற்றும் அரிச்சுவடி கூட  தெரியாது !

அந்த பாடல்  , அண்ணா அவர்கள் சிபார்சு செய்து பதிவு

செய்த பாடல் !



அப்போ எப்போ ?


எப்போவா .....?


" படகோட்டி " படத்தின் அனைத்துப் பாடல்களையும் படத்தயாரிப்பாளர்

ஜி என் வேலுமணி யின் தயவாலும் மெல்லிசை மன்னர்களின்

தயவாலும் வாலி எழுதியபோது , எம்ஜிஆருக்கு அப்போதுதான்

அவரின் திறமை தெரிந்தது !



அன்றிலிருந்து ........


எம்ஜிஆர் , வாலியை " கப் "  என்று பிடித்துக் கொண்டார் !


திருக்கழுக்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் :



" இனிமேல் என் படங்களுக்கு வாலிதான் பாடல்களை

எழுதுவார் ! "


என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அளவுக்கு வாலிக்கு

எம்ஜிஆரின் நட்பு கிடைத்தது !



(   " அந்த காலத்தில் பாடல்களுக்கு கண்ணதாசன் தானே புகழ் பெற்றவர் ,

அவரை என் எம்ஜிஆர் கைவிட்டுவிட்டார் ? "


என்றா கேட்கிறீர்கள் ?


அந்த ' கதை ' ஐ  நான் எழுத வேண்டும் என்றால் .........

அதுவே ஒரு தனி கட்டுரை ஆகிவிடும் .........

எனவே அந்த " கசமுசா " வை அப்புறம் வைத்துக் கொள்ளலாமே !  )  





 " படகோட்டி " படத்தின் 7  (   எட்டு பாடல்கள் - ஒரு பாட்டு

படத்தில் இல்லை !   )  பாடல்கள் அனைத்தும் செம ஹிட் !

பிறகு வந்தது : " தெய்வத்தாய் "   - எல்லா பாடல்களும் செமஹிட் !

' எங்க வீட்டுப் பிள்ளை ' -  எல்லாப் பாடல்களும் செம ஹிட் !



எம்ஜிஆர் மகிழ்ச்சி அடைந்தார் !


வாலியும் மகிழ்ச்சிக்கு அளவில்லை !




அப்போது .......

என்ன நடந்தது தெரியுமா ?



" சொன்னால்தானே தெரியும் ,

சொல்லித்தொளையும் ஐயா ! "


என்றா புலம்புகின்றீகள் ?


சொல்றேன் !




யாருக்கும் சொல்லாமல் ,

யாரையும் கூப்பிடாமல் ,

வாலி திருப்பதிக்குச் சென்று

திருட்டு +  காதல்  கல்யாணம்

செய்து கொண்டார் !




எப்படி இருக்கும் , எம்ஜிஆருக்கு ?




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 0Fbu4C5LSp1fGeBDFREg+vaaliramana


( வாலி , தன துணைவியார் : ரமண திலகம்

உடன் ! நாடக நடிகையான ரமணதிலகம் -ஐ வாலி காதலித்து திருமணம்

செய்து கொண்டார் !

ரமண திலகம் நடித்த ஒரே படம் :


" பணம் தரும் பரிசு " ( 1965 ) )




பயங்கர கடுப்பு ஆனார் எம்ஜிஆர் !



" இந்த வாலி பயலுக்கு என் செலவிலே திருமணம் செய்து

வைக்கிறேன் என்று கூட சொன்னேனே , இப்போது

எனக்கே , திருமணத்திற்கு அழைக்காமல் துரோகம்

செய்து விட்டாரே ! "


என்று மனம் நொந்தார் !



ஓர் அறிவிப்பு செய்தார் :




" இனிமேல் என் படங்களுக்கு வாலி

பாடல்களை எழுத மாட்டார் !  "




விளைவு ?




எம்ஜிஆர் -ஐ வைத்து படம் எடுத்து அவரிடம் ' கால் ஷீட் ' வாங்கிய

படத்தயாரிப்பாளர்கள் வாலியை நெருங்கக் கூட துணியவில்லை !



வாலிக்கு எம்ஜிஆர் படங்களுக்கு பாடல்களை எழுத 'சான்ஸ் '

போயி போச்சு !


அதுவும் எம்ஜிஆர் எப்பேர்ப்பட்ட மனிதர் !

வாலியை தன உடன் பிறந்த தம்பியைப் போல் பாவித்து

அவருக்கு தன படங்களுக்கு  பாடல்களுக்கு 'சான்ஸ் ' வாங்கிக் கொடுத்தார்.







இந்த செய்தியைப் படியுங்கள் ,

உங்களுக்கே நன்கு புரியும் !




வாலியின் ஆரம்ப கால கட்டங்களில் , ' திரை இசைத் திலகம் '

கே . வி . மகாதேவன் அவர்களுக்கு வாலியை , என்ன காரணத்தாலோ

வெறுக்க ஆரம்பித்தார் !


சில பேர்களுக்கு - சில சமயங்களில் -  காரணம் தெரியாமல்

விரும்புவார் கள் /  வெறுப்பார்கள் -  இந்த அனுபவத்தை நானும்

உணர்ந்துள்ளேன் !

நீங்கள் எப்படி , சார் ?

இந்த மாதிரியான உணர்ச்சி மகாதேவன் அவர்களுக்கும் , வாலியை

பார்த்த பின்பு நேர்ந்தது !



" யார்யா அவரை அழைத்து வந்தது !

அது என்ன " வாலி - தொலி "   என்று பேர் வைத்துக்கொண்டு ! "



இதுதான் கே வி எம் அவர்களின் 'கம்மெண்ட் ' - வாலியைப பார்த்து !



இதனை நேரில் கேட்ட தொலி ........ஹி... ஹி  ... வாலி உடனே

'ஜகா '

வாங்கினார் !


" கே விம் அவர்கள் இசையமைத்தால் நான் பாடல்களை

எழுதமாட்டேன் ! "


இதுதான்  வாலியின் ' கம்மென் " !




இந்த சமயத்தில் ............................ !



" உடன் பிறப்பு "-  1963 .


இந்த பெயரில் , எம்ஜிஆரை வைத்து ஒரு படம்  எடுக்க

ஒரு கம்பனி முன் வந்தது !

எம்ஜிஆர் உடன் சாவித்திரி !

படக் கம்பனி ஆட்கள்  வாலியை 'அட்வான்ஸ் " உடன் வந்து

கூப்பிட்டார்கள் !

வாலியும் பணத்தை வாங்கிக் கொண்டார் !

" எங்கே மெல்லிசை மன்னர்களை காணோம் ? "

அந்த படத்திற்கு இசை மெல்லிசை மன்னர்கள் என்று வாலி

அப்படி கேட்டார் !


ஆனால் ......


" உடன் பிறப்பு " படத் தயாரிப்பாளர்கள் மென்று முழுங்கி  மெதுவாக ....



" வாலி சார் !   இந்த படத்திற்கு இசை கே வி எம் அவர்கள் ! "


என்று சொன்னார் கள் !


இதனைக் கேட்டவுடன் வாலியின் முகம் சிவந்தது !

' அட்வான்ஸ் ' ' டப்பு' வை  ' வாபஸ் ' செய்தார் - ' விருட் ' என

' எக்சிட் ' (  EXIT )   ஆனார் !



(   " யோவ் ! தமிழில் எழுதுயா ! "  - கேட்பது நீங்கள் தானே !

" சர்த்தான் நயனா !  " - இது நான் !  )  



விஷயத்தை கேள்விப்பட்டார் எம்ஜிஆர் , வாலியை அழைத்து

சமாதானம் செய்தார் !


உம ... உம ....எம்ஜிஆர் ' அம்பேல் ' ஆனார் !


ஆனாலும் எம்ஜிஆரா இல்லே கொக்கா !


மாற்று எற்பாடு செய்தார் ' வாத்தியார் ' !


என்ன அது ?




எம்ஜிஆரே , வாலியிடம் பாடலை எழுதி

வாங்கி அதனை கே வி எம் விடம் கொடுத்து பாடல்களுக்கு

இசையமைக்க எற்பாடு செய்தார் !




அத்தனை ப்ரியம் - வாலியின் மேல் எம்ஜிஆருக்கு !



ஆனால் அதனையும் மீறி வாலி , எம்ஜிஆர் இன் மீது

வைத்தார் - 'ஆப்பு "  !



எம்ஜிஆருக்கு கோபம் வருமா , வராதா !



" ரும்" !  





   
 ( ஆனால் என்ன பலன் !  , ' உடன் பிறப்பு ' படம்

பாதியில் நிறுத்தப்பட்டது , வெளிவரவில்லை !

1990 களில் வந்த " உடன் பிறப்பு "  சத்தியராஜ் , சுகன்யா நடித்து

பி . வாசு இயக்கியது - அது வேறே !  )  



( இன்னொரு ' பிராக்கட் நியூஸ் ' !

வாலியின் திறமை பின்னர் அறிந்த 'திரை இசைத் திலகம் '

விரைவில் வாலியின் நட்புக்கு பாத்திரமானார் !

'அரசகட்டளை ' , ' பேசும் தெய்வம் '

' அடிமைப் பெண் ' - இவை வாலி - கே வி எம்

பெருமையை பறை சாற்றும் படங்களில் சில

சான்றுகள் ! )








 சரி , வாலி என்ன சொன்னார் ?




 " திருமணம் என்பது என் சொந்த விஷயம் ,

அதில் யாரும் தலையிடமுடியாது !

என் குடும்பத்தினரைக் கூட யாரையும் அழைக்காமல் நான்

திருமணம் செய்து கொண்டேன் !

இந்த விஷயத்தில் எம்ஜிஆர்  அண்னன் கோபித்துக் கொண்டால்

நான் என்ன செய்வது ? "





ஆனாலும் வாலிக்கு பாடல்களை எழுத எம்ஜிஆர் படங்களைத்

தவிர மற்ற படங்களில் பாடல்களை எழுத அழைப்பு வந்தது !

அவைகளில் வாலி கவனம் செலுத்தி .......

புது மனைவியுடன் வாழ்க்கையை தொடங்கினார் !




இந்த சமயத்தில் ......


எம்ஜிஆர் படங்களை தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்கள்

" வாலியை வைத்து பாடல்களை வைத்தால் நன்றாக

இருக்கும் "

என்று சொல்லி எம்ஜிஆரை  நச்சரிக்க ஆரம்பித்தனர் !


படங்களை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் கூட

இதே நச்சரிப்புத்தான் !




எம்ஜிஆர் யோசிக்க ஆரம்பித்தார் !




ஒரு வாரப் பத்திரிக்கை இந்த சமயத்தில்

இப்படி ' கிசு - கிசு ' த்தது !





"  ஒரு மூன்றெழுத்து நடிகருக்கு

இரண்டெழுத்து பாடலாசிரியர் பாடல்களை

எழுதினால்தான் படம் ஓடும் ! "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 6W6zTfXgTBSrT86aJEdl+images





 வாலியின் பிரச்சனை பெரிதாவதாக

எம்ஜிஆர் உணர்ந்தார் !

வாலியை அழைத்து சமாதானம் செய்து , அவரை மீண்டும்

தன படங்களில் பாடல் எழுத ஏற்பாடு செய்ய விரும்பினார் !





[color:8c67= #336600]அங்கே ....வாலியின் வீட்டில் .....




வாலியின் காதல் மனைவி ரமண திலகம் , தன கணவரை

சமரசப்படுத்தில் முனைந்தார் !



" என்னங்க !  எம்ஜிஆர் எவ்வளவோ பெரியவர் !

அவர் கோபித்துக் கொண்டதில் என்ன தவறு ?

உங்கள் மேல் கொண்ட அன்பினால்தான் அவர் உங்கள் மேல்

கோபம் ஆக உள்ளார் , எனவே நீங்களே அவரை சந்தித்து

பேசிவிடுங்கள், அதுதான் நல்லது ! "



ஆனால் வாலி ' கம் '  என்று இருந்துவிட்டார் !



ஒரு நாள் காலை ......


வாலியின் வீட்டுக்கு  ' தாழம்பூ " படத் தயாரிப்பாளர் வந்தார் ....

சொன்னார் :



" சின்னவர் ( எம்ஜிஆர் )   உங்களை அழைத்து வரச் சொன்னார் ! "



வாலி ....அசைந்து கொடுக்கவில்லை .....


" வர முடியாது ! "


வாலி !


" சின்னவர் உங்களுடம் சேர்ந்து காலை உணவு சாப்பிட விரும்புகிறார் ! "



" ஐயா ! நான் காலை உணவை எப்போதோ முடித்துவிட்டேன் ! "


" சின்னவர் , வெறும் காலை உணவுக்கு மட்டும் உங்களை

அழைக்கவில்லை ! "




" தாழம்பூ " உக்கும் ( ! )    வாலிக்கும் நடந்த உரையாடல்களைக்

கேட்ட  ரமண திலகம் வாலி யை ஒப்பேத்தி ( ! )   ஒரு வழியாக

அவரை தோட்டத்திற்கு ' பார்சல் ' கட்டினார் !






தோட்டத்தில் .....





வாலியை எம்ஜிஆர் வரவேற்றார் !

காலை உணவை சாப்பிட அழைத்தார் !

வாலி , ( மீண்டும் ! )   காலை உணவை சாப்பிட்டார் !








" வாலி !   நம்ம அடுத்த படம் " தாழம்பூ " !

அந்த படத்தில் நீங்கள் பாடல்களை எழுதவேண்டும் !





" சரி அண்ணே ! "

- இது வாலி !





எம்ஜிஆர் பாடலின் " சிட்டிவேஷன் " ஐ சொன்னார் :





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 Ne1mFsMRlirPoYW5q1gR+download





" படத்தில் , கதாநாயகி கோபித்துக்கொண்டு

காரில் போகிறார் !

அவரைப் பின் தொடர்ந்து கதாநாயகன் , நாயகிக்கு

" அட்வைஸ் "

செய்தபடியே பாடவேண்டும் !


எங்கே பாடலை எழுதுங்கள் , பார்க்கலாம் ! "





 வாலி கொஞ்சம் கூட தயங்க வில்லை .....

பாடலை எழுதினார் !




" எங்கே போய்விடும் காலம் !

அது என்னையும் வாழ விடும் !

நீ  இதயத்த்தை திறந்து வைத்தால்

அது உன்னையும் வாழவைக்கும் ! "  










எம்ஜிஆர் பாடலைக் கேட்டார் !

அவருக்கு கோபம் வந்தது !

அங்கே :


" நாயகன் :  வாலி

நாயகி    : எம்ஜிஆர்   "


போல  வாலி எழுதியதை எம்ஜிஆர் ஒன்றும்

சொல்ல முடியவில்லை !


படத்தின் காட்சிக்கேற்ப பாடல் வரிகள் ஜோராக

அமர்ந்திருக்கின்றது அல்லவா !


எம்ஜிஆரால் என்ன செய்ய முடியும் !



" ஆனாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் , வாலி ! "


எம்ஜிஆர் சொன்னது !










 வாலி சிரித்துக் கொண்டெ

எம்ஜிஆஇடம் விடை பெற்றார் !





$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$





அடுத்த பாடல் :




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 9aWyWcLZRqWGA7qoYW0n+PNKtc0910



கண்னதாசன் !



அண்ணாதுரை


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 YVEt7imlRxub44e8humS+anna



அவர்களை  " கன்ன பின்னா " என்று

திட்டித் தீர்த்து

எழுதிய பாடல் !




எம்கே ஆர் சாந்தாராம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2015 7:31 am

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 103459460 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 21 3838410834
-
தொடருங்கள்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 3:28 pm

//மடல்களை எழுதிய :

தங்கை கிருஷ்ணம்மா !

38000 பதிவுக்கும் மேல் ! அப்பா ! அப்பப்பா ! அம்மா ! அம்மம்மா ! இத்தனை

பதிவுகள் ! " சர்ர்க்க் " ! அத்தான் ! உங்களை நெட்டி முறித்து

திருஷ்டி கழிக்கிறேன் !

வாழ்த்துக்கள் தங்கை சுமதி !

இன்னும் பல லட்சங்கள் பதிவுகள் நீங்கள் இடவேண்டும் !

வாழ்த்துக்கள் !//

மிக்க நன்றி அண்ணா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 21 of 26 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக