ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

+30
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
Namasivayam Mu
T.N.Balasubramanian
shobana sahas
mbalasaravanan
சிவனாசான்
M.Saranya
veegopalji
ஸ்ரீரங்கா
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
rksivam
ayyasamy ram
anaamigan
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
moganan
udayarr
Jothiram
veeyaar
vasudevan31355
chittibabu
pon.sellamuththu
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
விஸ்வாஜீ
mkrsantharam
34 posters

Page 3 of 26 Previous  1, 2, 3, 4 ... 14 ... 26  Next

Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by pon.sellamuththu Sun May 18, 2014 9:19 am

மருத்துவருக்கு  எமது வாழ்த்துக்கள். தொடக்கக் கட்டுரையே துடிப்பாக உள்ளது. தொடருங்கள். வசிஷ்டரிடமே பிரம்மரிஷி பட்டம் பெற்றது போல் ஈகரை நிறுவனரிடமே பாராட்டை பெற்று விட்டீர்கள்.


இப்பத்தின் நாயகன், கிணற்றில் தூர் அள்ளும் பாத்தித்திம் என எண்ணுகிறோம். உறுதிப் படுத்துங்கள். "பெற்றால்தான் பிள்ளையா" என்ற இந்தபடத்தின் தலைப்பு இப்படத்தின் நாயக நடிகருக்கு பிடித்த தலைப்பானதாக ஆரூர்தாஸ் குறிப்புட்டுள்ளார். பிடித்ததற்கான காரணம் சொல்லத்தேவையில்லை.



Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
Post by சிவா on Wed May 14, 2014 1:52 pm

* பெற்றால்தான் பிள்ளையா படத்தின் தகவல்களை தெள்ளத் தெளிவாகத் தந்துள்ளீர்கள். இந்த இரட்டை இயக்குனர்கள் திரு கிருஷ்ணன் மற்றும் திரு பஞ்சு பற்றி இன்றுதான் அறிந்துள்ளேன்.

திரு. சிவா அவர்களுக்கு வணக்கம். என்றுமே இணைபிரியாத இந்த இணை இயக்குனர்கள்,
1944 ( பூம்பாவை - K.R.ராமசமி) முதல், 1972 ( பிள்ளையோ பிள்ளை - மு.க.முத்து ) வரை திரையுலகில் அருமையாக ஆட்சி புரிந்தவர்கள்.


அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by chittibabu Sat May 24, 2014 12:06 pm

அன்புள்ள டாக்டர் சார்.

வணக்கம்,

தங்களின் புதிய தொடரை மிகுந்த ஆர்வத்துடன் படித்து ரசித்தேன்.  

நல்ல விஷயம் எங்கு கிடைத்தாலும் தேடி பிடித்து படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

தொடரட்டும் தங்களின் சேவை.

ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்.

நன்றி

என்றும் அன்புடன்
சிட்டிபாபு
chittibabu
chittibabu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Sun May 25, 2014 7:25 am

pon.sellamuththu wrote:மருத்துவருக்கு  எமது வாழ்த்துக்கள். தொடக்கக் கட்டுரையே துடிப்பாக உள்ளது. தொடருங்கள். வசிஷ்டரிடமே பிரம்மரிஷி பட்டம் பெற்றது போல் ஈகரை நிறுவனரிடமே பாராட்டை பெற்று விட்டீர்கள்.


இப்பத்தின் நாயகன், கிணற்றில் தூர் அள்ளும் பாத்தித்திம் என எண்ணுகிறோம். உறுதிப் படுத்துங்கள்.



[/i]
அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து


   அன்புள்ள திரு. கவிஞர்  செல்ல முத்து  அவர்களுக்கு,


தங்களின்  பாராட்டுக்களுக்கு  எனது நன்றி !

நான் பெறும் பாராட்டுக்கள்  எல்லாம் உங்களுக்குத்தான் போய்

சேரும், ஏன் எனில்  நீங்கள்தானே  இந்த  'ஈகரை' யை  எனக்கு

தந்தீர்கள்  !    மகிழ்ச்சி 





 
    ' பெற்றால்தான் பிள்ளையா ' படத்தில்  எம்ஜிஆர்

கிணற்றில் தூர்  வாருபவர்  ஆக  வருகிறார்  என்பதை  சரியாகத்தான்

சொன்னீர்கள் !


இதோ  !





  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 3usK8VxRQ8qLWtmKvQI4+thoor




நன்றி, ஐயா,


உங்களின்,


எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Sun May 25, 2014 7:57 am

chittibabu wrote:அன்புள்ள டாக்டர் சார்.

வணக்கம்,

தங்களின் புதிய தொடரை மிகுந்த ஆர்வத்துடன் படித்து ரசித்தேன்.  

நல்ல விஷயம் எங்கு கிடைத்தாலும் தேடி பிடித்து படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

தொடரட்டும் தங்களின் சேவை.

ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்.

நன்றி

என்றும் அன்புடன்
சிட்டிபாபு





   அன்புள்ள திரு. சிட்டிபாபு,


நானும்  தங்களை  'வருக ' , ' வருக'    என்று  வரவேற்கிறேன் !

தங்களின் பாராட்டுக்களுக்கு  என் நன்றி !



அதற்காக  'எந்திரன் '   சிட்டி  மாதிரி   ' கழுத்தை  மட்டும் திருப்பி '

எனனைப்  பார்த்து  புன்னகை  புரியவேண்டாம் !  

பயமாக்கீது  !       கூடாது 





 
       
       உங்களுக்கு  மிகவும் பிடித்த

வரிகள்  !
   




 
     
        " மச்சுலே  குடியிருந்தா  மவுசு என்னு  எண்ணாதே !

குச்சியிலே  குடியிருந்தா  குறைச்சல் என்னு  சொல்லாதே  !

மச்சு - குச்சு  எல்லாம்  மனசிலேத்தான் இருக்கு!

மனசு  நிறைஞ்சிருத்தான் மத்ததெல்லாம்  

நிறைஞ்சிருக்கும் !   "  
 




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Jblq8bMdQF6txG2Df8zt+crop_175x175_7456



   படம்  :  ' ஆயிரம்  ரூபாய் ' ( 1963  )

பாடியவர்  : பி. சுசீலா .
   


                                                                                                                                                                                                                                                     அடுத்த  கட்டுரை     தாயாராகிக் கொண்டிருக்கிறது............  


ஹி....ஹி....மன்னிக்கவும்                                        




       தயாராகிக்கொண்டிருக்கிறது     நடனம்   




                                                                       எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by chittibabu Sun May 25, 2014 2:53 pm

mkrsantharam wrote:
     
        " மச்சுலே  குடியிருந்தா  மவுசு என்னு  எண்ணாதே !

குச்சியிலே  குடியிருந்தா  குறைச்சல் என்னு  சொல்லாதே  !

மச்சு - குச்சு  எல்லாம்  மனசிலேத்தான் இருக்கு!

மனசு  நிறைஞ்சிருத்தான் மத்ததெல்லாம்  

நிறைஞ்சிருக்கும் !   "  
                                                                     எம்கேஆர்சாந்தாராம்

டாக்டர் சார்

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
chittibabu
chittibabu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Thu May 29, 2014 4:51 pm

            டி.எம். எஸ் அவர்களின்

 நவரசப் பாடல்கள் ! நடனம் 
   






     
  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 TDEwR5kBSXu46vQB0G6V+tms





 
       தொகுளுவா   மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் !   -



T. M . செளந்தரராஜன் !








நடிப்புக்கு ஒரு திலகம் -

நவரசங்களுக்கு ஒரு திலகம் ----- நடிகர் திலகம் !






பாடல்களில் நவரசங்களைக் காட்டும்

திலகம் :


டி எம் எஸ் !






இதில் மாறுபட்ட கருத்து என்பது யாருக்கும்

இருக்காது !




எனக்கு மட்டும் அல்ல, தமிழை

அறிந்தவர் அனைவரின் வாழ்வில் அன்றாடம் படும்

அனுபவங்கள் - படிபினைகள் - கசப்புணர்ச்சிகள் -

அறிவுரைகள் - சோகங்கள் - மகிழ்ச்சி .......

இன்னும் பலவற்றிலும் .....நமக்கு டி எம் எஸ்

பாடல்களை நிவுகொள்ளும் வகைகளில் அவரின்

பாடல்கள் அமைந்திருக்கின்றன என்று சொன்னால் அது

மிகையாகாது !    








  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 U6pxWNH7Txe4u4Ys3tM1+tms-2









        வேறு எந்த பாடகருக்கும் இந்த

மாதிரி


" நவரசங்கள் "



என்று பட்டியலிட்டு பாடல்களைத் தர , அந்த

பாடகரின் பாடல்கள் அமைந்துள்ளனவா   என்று

கேட்டால்.......இல்லை என்றே சொல்ல முடியும் !  




டி எம் எஸ் குரல் வளத்தைப்

பற்றி , வாலி சமீபத்தில் ஒரு வார இதழில்

சொன்னது !



 
            ” எம் கே தியாகராபாகவதர்

இறந்தவுடன் , அவரது உடலை

அவர்கள் ......

தோண்டிய குழியிலேயா

புதைத்தார்கள் ?

இல்லையே !

டி எம் எஸ் அவர்களின்

தொண்டைக் குழியில்

அல்லவா புதைத்தார்கள் ! ? “  








          சரி,  இனி.... விஷயத்திற்கு  வருவோமா !                                                                                                                  



 
   டி எம் எஸ்  அவர்களின்  நவரசப் பாடல்கள் !





               
அது சரி,    " நவரசங்கள் "  என்றால்  என்ன ?

   


   
                 எனக்குத்  தெரிந்த வரையில் .................  " நவரசங்கள் "   என்றால்







    1. மகிழ்ச்சி.
       


 
   2. கோபம்





   3. வீரம்





  4. காதல்.





    5. பயம்.





 6. சிருங்காரம்





   7. சாந்தம்.




 8. அருவருப்பு.





   9. கோபம்.






 
  போன்றவைகளை சொல்லலாம்,

இவைகளில் சொற்கள் வேறு மாதிரியாக

எழுதி சொல்பவர்களும் உண்டு !




என்னைக் கேட்டால் :    





 
   இந்த உணர்ச்சிகளையும் தாண்டி மற்ற

பாவங்க்களையும் காட்டுப் பாடிய :

ஒப்பற்ற கலைஞன், நமது டி எம் எஸ் !  








   சொல்லப்போனால் டி எம் எஸ் அவர்களின் பாடல்களை

இந்த நவரசங்களில் மட்டும் அடக்க முடியுமா என்பது

சந்தேகமே !

எனவே பாசம் இன்னொரு

உணர்ச்சியையும் இத்துடன் இணைத்திருக்கின்றேன்.





இன்னொரு செய்தி :


என்னதான் டி எம் எஸ் பாடகளை இந்த :

நவரச பட்டியலில்

அடிக்கிவிட்டாலும், ஒவ்வொரு வகைக்கும் :

எந்த பாடலை சேர்க்கலாம் - எந்த பாடல்

மற்றவைகளில் சிறந்தவை

என்பதை தேர்ந்தெடுக்கும் முறையில் நமக்குள்

சண்டையே

வரலாம் !

அந்த அளவுக்கு நம்ம டி எம் எஸ் , ஆயிரக்கணக்கான

பாடல்களைப் பாடியுள்ளார் !




இங்கே, இந்த எளியோன், என்னால்

முடிந்த வரையில் நான் கேட்டும் வியந்தும்,

உணர்ந்தும் மகிழ்ந்தும் உள்ள சில நவரசப்பாடல்களை

உங்களுக்கு அளிக்கிறேன் !

குறைகள் இருப்பின் அருள் கூர்ந்து மன்னித்து

படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் !



மேலும் சில வகை உணர்ச்சிகளுக்கு இடையே

மெல்லிய வித்தியாசம்

இருக்கும், அதையும் நீங்கள் கவனித்து பின்னர்

அதற்கேப்ப பொருத்தமான பாடல் / பாடல்களைத்

தருவது உங்கள் பொருப்பு !    







    டி எம் எஸ் அவர்களின்

நவரசப்

பாடல்கள் !    








   1. மகிழ்ச்சி !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 XwHIdCqxTY2FMa7YrQL2+jhfi







 எம் ஜி ஆர் , பல கோடி ரூபாய்களுக்கு சொந்தமான பணக்காரர்,

ஆனால் ஓய்வு, ஒழிச்சல் இன்றி  பணி புரிகிறார், ஓய்வே இல்லை,

நிம்மதி இல்லை !




 
       "சாந்தமும் லேது.....

செளக்கியமும் லேது ! "




 (    " சாந்தமும் " என்று  குறிப்பிட்டது  என்னை அல்ல, ஸ்வாமி ! )  




   என்ன செய்தார், தெரியுமா, மிஸ்டர் ஜே.பி -   அத்தான் -

" அன்பே  வா " திரைப்படத்தில்  எம்ஜிஆரின் பெயர் ! ?




   ஒரு ' பிரீப்  கேஸ்'  ஒன்றை எடுத்துக்கொள்கிறார்,

கையில் ஒரு மெல்லிசான  பிரம்பு !


எதற்கு  அந்த பிரம்பு ?


சும்மாத்தான் !   "ஸ்டையிலுக் "குத்தான் !



     சிம்லா    வுக்கு  ' ஜூட் '

விடுகிறார், விடுமுறைக்கு !




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 QMFngNAcSPiQ8fz7hlWC+MGRANBEVA02


 
  ஓய்வே இல்லாமல் வேலை செய்பவர், சிம்லா வின் இயற்கை  அழகைப்

பார்த்து.......' ஜொள்ளு ' .......ஹி...ஹி...  " மாப்ப்  கீஜ்யே ! "    - அத்தான் -  மன்னித்து

விடுங்கள் -  மனதை பறி கொடுக்கிறார் !




பாட  ஆரம்பித்து விட்டார் :   !      ஐ லவ் யூ





 
        " புதிய வானம், புதிய பூமி !

எங்கும் பனி மழை பொழிகிறது !


நான் வருகையிலே   என்னை வரவேற்க -

வண்ணப் பூமழை பொழிகிறது ! "  





 
    சற்றே  இதனைப் படித்து,

நினைத்துப் பாருங்கள் !




 
  1. தினமும் சற்றும் ஓய்வின்றி  இடைவிடாது  நம் ஊரில்

வேலை செய்து சம்பாதிக்கின்றோம் !


2. சுற்றுப் புறங்களில் நடப்பவைகளை  கவனிப்பதற்கே  நேரத்தை

ஒதுக்குவதில்லை !


3. வீட்டில்  மனைவி  சமைத்ததை -  ( சில  சமயங்களில் நாம் சமைத்ததை ! )

நாம் ருசி அறியாது சாப்பிடுகிறோம் !


4. எப்போதும் கடிகாரங்களைப் பார்க்காது  வேலைகளை கவனிப்பதே

லேது.....இல்லே....இல்லே .....   இல்லை !



   இப்படிப்பட்ட  நம்மை  சில நாட்கள்  விடுமுறை  என்று சொல்லி :

ஒரு 'லட்டி'   மற்றும்  ஒரு 'பொட்டி'   யை கையில் கொடுத்து விட்டு

" ஊர்  சுற்றிவிட்டு  வாப்பா ! "

என்று   'அருளித்தால்'   நமக்கு  எப்படி இருக்கும் ?
   



 
        மகிழ்ச்சி  உண்டாகும் !   ஜாலி








 
      இந்த  மகிழ்ச்சியைத்தான்  நமது  

டி எம் எஸ்  வெளிப்படுத்துகிறார் !




    டி  எம் எஸ்  அவர்களின்  குரலில்தான் எவ்வளவு மகிழ்ச்சி !

' என்னவோ  அந்த சிம்லா வே  டி எம் எஸ் க்குகாக  வரவேற்கிறது ! "

என்பதை உணர்த்துவது போல்  அல்லவா  பாடுகிறார் !



"

 "   நான் வருகையிலே என்னை வரவேற்க -

வண்ணப் பூமழை பொழிகிறது !
  "



என்று  பாடும் போதே  அவரின் குரலில்  மகிழ்ச்சி  தென்படும் !




   
    அப்புறம்  டி எம் எஸ்  அவர்கள்  ' மகிழ்ச்சி'

என்கிற  நவரசத்தை எப்படி மேலும் நமக்கு

உணர்த்துகிறார் ?




 
   " ஆ...ஆ...அஹ...அஹ...அஹக்கோ !

ஓஹோ....ஓஹோ...ஹக்கோ ! "




   என்கிற " ஹம்மிங்க்'  மூலம் !



   
       அது மட்டுமா !




 இந்த  எம்ஜிஆரின் ' வதனத்தைப் '     பாருங்கள் .....அத்தான் ...' Face  '  !

எவ்வளவு   அழகாக  புன்னகை புரிந்து கொண்டே   பாடுவதாக

நடிக்கிறார் !


அத்தோடு,  D.M.K  - Color   Shirt   - வேறே !  





 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 LKcCLKW5QSdmasluGW6B+images


 
       எம்ஜிஆரின் மகிழ்ச்சித் துள்ளல் !




எம்ஜிஆர்  எங்கே  இந்த பாடல் காட்சியில்  நடந்து கொன்தே  நடித்தார் !

ஒரே  துள்ளல் மயம்தான் !


அப்படி , இப்படி என்று  ஓடியும் , ஆடியும் பாடியபடித்தானே  அவர் இந்த

காட்சியில் தோன்றினார் !





 
     ஒரு  காட்சியில்  சாலை வளைவில் பாடிக்கொண்டே

.....இல்லே....துள்ளிக்கொண்டே  எம்ஜிஆர்  வரும்போது  திடீரென்று

எதிரில்  வரும் "  Sledge  "   வண்டிக்கு  மிக இலாவகமாக

வழி விடும் அழகே அழகு !






      இந்த  பாடல் காட்சியைப்    பற்றி  

பல  சுவையான  செய்திகள் !  





   1.  " எங்கும் பனி மழை  பொழிகிறது ! "


இப்படி  கவிஞர்  வாலி  பாடலில் எழுதிவிட்டார் !

ஆனால்  ஏவிஎம்  படக் குழுவினர்  சிம்லா  போகும் போது .......

பனியும்  இல்லை  மழையும் இல்லை   !   கண்ணடி

அப்புறம் ?

விழுப்புரம்  !   .......அங்கேயும்  பனியும்  இல்லை  மழையும்

இல்லை  !

" சரி, சீரியஸ்   ஆக  எழுதும் ஐயா ! "

என்கிறீர்களா !

சொல்றேன் !

ஒளிப்பதிவாளர் மேற்கண்ட   வரிகளுக்கு   ஏற்ப  வெறும்  

மலைகளைக் காட்டியே ' ஓ.பி '.   அடித்து  விட்டார் !








   2. " புதிய  சூரியனின் பார்வையிலியே ! "



இப்படி  ஒரு வரி  பாடலின் முதல்  சரணத்தில்  வரும்.

முதலில்  வாலி  மேற்கண்ட  வரியை இப்படித்தான்

எழுதினார் :



" உதய சூரியனின்   பார்வையிலே ! "



மேற்கண்ட   வரியைப்  படித்த  படத்தயாரிப்பாளர்  ஏ வி எம் செட்டியார்,

வாலியைப் பார்த்து :



" ஏம்ப்பா !  வாலி !   நம்ம  படத்திற்கு  அரசியல்  எல்லாம் வேண்டாமே !

இந்த வரியை மாற்றிவிடுப்பா ! "



என்று  கேட்ட்டார் !


அதற்கு  வாலி   சொன்ன  பதில்  :


" இல்லை  ஐயா !  எம்ஜிஆரின்  ரசிகர்கள்  இதுமாதிரியான வரிகளை

மிகவும் எதிர்ப்பார்ப்பார்கள்....எனவே  இருக்கடும் , ஐயா ! "




செட்டியார்  ஒன்றும்  சொல்லவில்லை !



படம்   தணிக்கைக்கு  சென்றது !


வந்தது..... " உதயசூரியனுக்கு "    வெட்டு  மற்றும்  வேட்டு !


" உதயசூரியனை  தூக்குப்பா! ! "

சொன்னது  தணிக்கை  !


செட்டியார்  , வாலியை  உதைக்காத  குறையாக  அவரைத்

தேடிப் போனார் !    வாலி  ( நல்ல வேளையாக ! )    ஊரில் இல்லை !

போனில்  பிடித்தார்  செட்டியார் !



" நான்  அப்போதே  சொன்னேன், நீ  கேக்கலை ! "


செட்டியார் கோபித்துக் கொண்டார் !


பின்னர்  வாலி  மாற்றிய  வரிதான் :


" புதிய  சூரியனின்  பார்வையிலே ! "



இருந்தாலும்  செடியார்  , வாலியைப்  பார்த்து  ( போனில்தான் ! )

கிடுக்குப் பிடி    போட்டார் !



" இங்கே  இருக்கிறது  ஒரே  சூரியன் தானே !

அதென்ன புதிய சூரியன், பழைய  சூரியன் ? "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 UOzmMUHDSKKTSiiFzpDn+MGR010120131




இதற்கு  வாலி  சொன்ன    ' சமாளிபிகேஷன் ! "


" நேற்று வந்தது  பழைய  சூரியன் !

இன்று  வந்ததோ  புதிய  சூரியன் ! "






       3. மெல்லிசை  மன்னரின்  இசைக்குழுவினர்களில்

ஆரம்ப காலங்களில் அவரது உதவியாளர்களில்  ஒருவராக

பணியாற்றிவர் :


 பிரபல இசையமைப்பாளர்  : ஷியாம் பிலிப் !



 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 PjXEdkmAQDSIQwwCqcZA+shyam-composing



    (  ஆர்மோனியம் கையும்   ஆக  ஷியாம் ! )  




இவர் கொஞ்சம் தமாஷ்  பேர்வழி !

ஆனால்  மிகச் சிறந்த  வயலின் கலைஞர் !

" காவல் காரன் " படத்தில்  வரும் : "  மெல்லப் போ  , மெல்லப் போ "

டி எம் எஸ் - பி .சுசீலா  பாடலின் இடையில்  வரும்  வயலின் இசை

இவரது  கைங்கர்யம் தான் !

' குழந்தையும் தெய்வமும் ' படத்தில்  வரும் ' அன்புள்ள மான் விழியே '

பாடலின் இடையில்  வரும்  வயலின் இசையும்  இவரது அர்ப்பணிப்பு

தான் !



 ஒரு  நாள்..........



இசைக் குழுவினர்  எல்லோரும் அங்கே  வந்து அவருக்காக  காத்திருக்க,

அவர்களில்  ஷியாம் உம்  இருந்தார் !

ஷியாம்  அங்கே  'கம் ' என்று  இருந்திருந்தால்  பரவாயில்லை....

தன் கைகளால்  வாயைத் திறந்து  திறந்து  மூடி  :

சிரி சிரி  சிரி  சிரி

 "  கூக்கு.....கூக்கூ...குக்கூ ! "



என்று  என்று  கூக்குரல்  அந்த  வினோத  ஒலி கேட்டு அங்கே

குழுமி இருந்த  அனைவரும்  பயங்கரமாக  சிரித்து விட்டனர் !    சிரி


அப்புறம் என்ன.... உற்சாகம்  தொற்றிக்கொண்டது  ஷியாமுக்கு !

மறுபடியும்  " குக்க் கூ ! "  


எது  வரை ?


மெல்லிசை  மன்னர் கோபத்துடன் ஷியாமைப் பார்த்து

முறைத்துக்கொண்டு  நிற்கும் வரை !




மெல்லிசை மன்னர்  வந்ததை  ஷியாம் உட்பட  யாரும் கவனிக்கவே

இல்லை !



" என்னய்யா, நடக்குது இங்கே ? "


என்று  ஷியாமைப் பார்த்துக் கேட்டார், மெல்லிசை மன்னர்!


" சும்மா, தமாஷுக்கு, சார் ! "


ஷியாமின்  மழுப்பல்  பதில் !


" தமாஷ்  பண்ற  இடமா  இது ? "

- மெல்லிசை  மன்னர்  !


ஷியாம் :   " ................."  !



அங்கே  ஓர்  அசாதரணமான   அமைதி  நிலவியது !


திடீரென்று  மெல்லிசை  மன்னரின் முகம்  மாறியது !


" எங்கே, ஷியாம்,  இன்னொரு முறை  அப்படி  கத்து ! "

- மெல்லிசை மன்னர் !


" என்னை  மன்னித்துவிடுங்கள், சார், இன்னொரு தடவை

இது மாதிரி  நடந்து கொள்ளமாட்டேன் ! "


மெல்லிசை  மன்னர் முகம் மாறியது !


" நீ  கத்தினமாதிரி  கத்து, மேன் ! "  


ஷியாம் " குக்கூ " போட்டார்,  ....போட்டார்.....போட்டார்...

யாரும் சிரிக்கவே இல்லை !


பின்னர்  மெல்லிசை  மன்னர்  சிரித்து விட்டார்  !    

என்ன  செய்தார்  மெல்லிசை மன்னர்  ?


கீழே  படியுங்கள்  !




     
  சிம்லா  நகர  மக்கள் இந்த பாடலில்

எழுப்பும்  ' கூக்கு ' என்கிற  கூகுரல்  ஒலியானது  இசையமைப்பாளர்

ஷியாம் கொடுத்த  அதே  ஒலிதான்  !     மகிழ்ச்சி



இரைச்சலைக் கூட   இசையாக்கிவிடும்  அதிசயம்  

எங்கள்  மெல்லிசை  மன்னருக்கு  மட்டுமே  உண்டு !





 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 NdsPKFu3Syy6B36n2n70+MUSIC_DIRECTOR_M_S_1575681f



 
   அந்த  கூக்குரலை  பாடலில்

கேளுங்கள் !      ஐ லவ் யூ








 
     4.  இந்த  பாடலில்  :


" எந்த  நாடு  என்ற  கேள்வி இல்லை !

எந்த  ஜாதி  என்ற  பேதமில்லை ! "



என்கிற  வரிகளை  படத்தில்  எம்ஜிஆர்  பாடும் போது  

ஒரு தேவாலயத்தின் முன்  எம்ஜிஆர்  நடந்து போகும் போது,


 கறுப்பு  - கோட்டு  போட்ட  ஒரு மனிதர்


எம்ஜிஆரை  பிடித்துத்  தள்ளாத  குறையாக  அவரை கடந்து போவார் !




 
      அந்த  மனிதர்  ஒரு  பிரபலர் !

அவர்  யார்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?


" யோவ் ! ஏதாவது  'க்ளூ' குடுய்யா ! "


என்கிறீர்களா !


க்ளூ  :

அவர்  ஒரு  நகைச்சுவை  எழுத்தாளர், பத்திரிக்கையாளர் !


போதுமா  , " க்ளூ? "  




 " புதிய   வானம் புதிய பூமி "   - " அன்பே   வா "   :


(  போனஸ்  பாடல்ல் : " லவ் பேர்ட்ஸ் ! " )



http://picosong.com/CGew










 
 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



 
     " என்ன கொடுமை  ஐயா, இது !

மகிழ்ச்சி  என்கிற  சுவைக்கு  இவ்வளவு  பெரிதாக

ஏன் எழுதணும்  ஐயா ? "




 
     ஆமாம்,  நண்பர்களே !

எனக்கு  மகிழ்ச்சிதான்  அதிகம்  வேண்டும் !       நடனம்




 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





    2 .  சாந்தம்  




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 J4Meo0hrTX2SerQr9tSJ+7h9




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 MDIGZShISnuKuONdkaqy+0feb







  ‘ அமைதிக்கு மறுபெயர் சாந்தம்!’

பாடலைக் கேட்டவுடன் உங்களின் மனது அமைதி

பெறவேண்டும் , ஆறுதன் அடையவேண்டும் ,

‘ மன நிம்மதியைத் தரும் ஒரு நல்ல பாடலைக்

கேட்டோம் !’

என்கிற ஆறுதலை அந்த பாடல் தரவேண்டும் !

என்ன பாடல் அது ?

டி எம் எஸ் இதுமாதிரியான ஆயிரக்கணக்கில் பாடல்

களைப் பாடியுள்ளார் !

அவரின் முருக பெருமானின் பக்திப்

பாடல்கள் அனைத்தும் இதே மாதிரியான

ரகம்தான் !

ஆனால் திரைப்படப் பாடல்களில் இந்த ரகத்தில்

எனக்கு மிகவும் பிடித்த பாடல் :  






   “ ஆறு மனமே ஆறு !

அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ! “    






 “ ஆண்டவன் கட்டளை “ படத்தில் இடம் பெற்ற இந்த

பாடலை....

டி எம் எஸ் நன்றாகவே பாடினார்,

கவிஞரும் நன்றாகவே பாடலை எழுதினார் !

மெல்லிசை மன்னர்களும் நன்றாகவே இசையமைத்

தார்கள் !    






  நடிகர் திலகம் என்ன செய்தார்?  






  இவர்களை எல்லோரையும் தூக்கி

சாப்பிட்டுவிட்டார்!  






ஆமாம், இந்த பாடலைக் கேட்டாலே நடிகர் திலகத்தின்

அந்த :

” முற்றும் துணிந்தவர்களின் துறவிகளின்

‘சாந்தமான ‘ முகங்கள் நினைவுக்கு வருகிறதா

இல்லையா !

இந்த கேள்விக்கு பதில் சொல்வதில் குழப்பமே

இல்லை !  







  நான்கு முழ காவி வேட்டி,

‘ஷேவ்’ பண்னாத முகம்,

முகத்தில் ‘ அமைதி’ , ‘ வெறுமை ‘

அலட்சியமான, அவசரம் இல்லாத நடை !

பின்னாடி கோவில் கோபுரம் !

சும்மா ஒரு பொட்டலம் வேர் கடலை வாங்கி

அதனை கொறித்துக் கொண்டே நடக்கும் லாவகம்!

எல்லாமே அற்புதம் !  






        அதுவும் டி எம் எஸ் அவர்களின் குரல்!


அந்த காலத்தில் ஒரு சிறந்த பாடலை உருவாக்குவதற்கு

ஒரு போட்டியே இருந்தது !


அதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு !





"  ஆறு  மனமே  ஆறு !   அந்த  ஆண்டவன் கட்டளை  ஆறு ! "


படம் :   "  ஆண்டவன்  கட்டளை "  (  1965 )  




http://music.cooltoad.com/music/song.php?id=357948




%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




 
  தொடரும்..............நவரசம் !
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் Thu May 29, 2014 5:10 pm

அன்பே வா படத்தின் புதிய வானம் புதிய பூமி பாடல் பற்றிய உங்களது விளக்கம், சம்பவங்களை நேரில் நடப்பது போன்ற ஓர் உணர்வை தந்து விட்டது. அருமை டாக்டர் சார், மிக அருமை. நவரசங்களுக்கான உங்களது விளக்கம் உங்களது அயராத அற்பணிப்பை காட்டுகிறது. இப்படி ஒரு தெளிவான செய்திகள் கிடப்பது அரிதான செயல். சிறப்பான தகவல்களை தந்து எங்களை அசத்தி விட்டீர்கள். மிக்க நன்றி டாக்டர் சார். தங்களது அடுத்த பதிவினை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Thu May 29, 2014 5:17 pm

     டி.எம். எஸ் அவர்களின்

 நவரசப் பாடல்கள் !



..............................தொடர்ச்சி...... !





       3.  காதல் .




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Owdxr0COTmy0zJrvz7mk+49r3
 



  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 QGMBs68R7ewVUirtK75K+zk5g



   நவரசத்தில் : ‘கருணை” யை நான் ‘காதல்’

என்று எடுத்துக்கொண்டு இந்த பாடலைத்

தருகிறேன் !


திரைப் படங்களில் ‘காதல்’ தானே மேலோங்கி

நிற்கிறது, அதனை சேர்க்காமல் இருந்தால் எப்படி !

டி எம் எஸ் அவர்களின் காதல் பாடல்கள் ஆயிரம்,

ஆயிரம் !

எதை குறிப்பிடுவது, சொல்லுங்கள் !

ஆனால், இந்த கட்டுரைக்காக நான் தேர்ந்தெடுத்த

பாடல் :  





 
    ” எங்கெல்லாம் வளையோசை

கேட்கின்றதோ,

அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது !”  





படம்  :        " வெகுளிப்பெண் "


   இசை  :  வி.  குமார்.





  ஆர் முத்துராமன் நடிப்பு ,

கறுப்பு வெள்ளை படம், சரியாக ஓடாதது.....  





 
இப்போது புரிகிறதா, இந்த பாடல்

‘ஹிட்’ ஆகதற்கு காரணம் !

வேறு காரணங்கள் ஏதாவது உண்டா !

இல்லையே !  





 டி எம் எஸ் இந்த பாடலில் என்ன குறை வைத்தார்?

வி குமார் அவர்களும் என்ன குறை வைத்தார்?


இருந்தும் பாடல் ‘ஹிட்’ ஆகவில்லை !


இந்த மாதிரியான அருமையான பாடல்கள் ஹிட்

ஆகாமல் இருப்பது ஏராளம், ஏராளம் !



இந்த பாடலில் டி எம் எஸ் ‘ காதல் கொண்டவனின்

எண்னங்கள’ மிக அழகாக வெளிப்படுத்துவதாக

பாடுவது அற்புதம் !


முதல் பாராவில்    






 
      "  சுகமான இசை பாடும் இள

மங்கையாளோ!

பதமாக நடமாடும் அவள் வண்ணத்தேரோ "  





 என்று பாடும் டி எம் எஸ் குரலில் தமிழ்

விளையாடுகிறது !


அதற்கு அப்புறம் அவர் கொடுக்கும் “ஹம்மிக்”

குரலும் இளமை , இனிமை !  





 
   டி எம் எஸ் அவர்களின் தமிழ்

உச்சரிப்பை கேளுங்கள் :  
     



  “ கரை போட முடியாத புது      

           வெள்ளை

   ஆடை !




 "  கலைமானும் அறியாத

     விழி    

 வண்ண ஜாடை!   "  





 
பார்வையில்
 



  இளமை,  



   வார்த்தியில்  


     மழலை


 கூந்தலும் வணங்கும் காலடி  


    நிழலை    





 
    ” ல”

“ ள”

“ழ “


இவைகளின் உச்சரிப்பைப் பாருங்கள் !  





 
 மேற்கண்ட வண்ணமிட்ட சொற்களை எப்படி

அழகாக உச்சரிக்கிறார் என்பதை கேளுங்கள் !


அதுதான் டி எம் எஸ் !  







     
    ’ வெகுளிப்பெண் “

இரண்டு உபரி செய்திகள் - சுவையுடன் !  







   1 ..  இந்த படத்தை தயாரித்து இயக்கியவர் :

எஸ் எஸ் தேவதாஸ்.


இயக்குனர் ஏ பீம்சிங் இடம் வேலை செய்தவர்.



இல்லே...இப்படி சொன்னால் உங்களுக்கு உறைக்கும் :

நடிகை தேவிகா வின் கணவர்!

நடிகை கனகா வின் அப்பா !  







 
     2 .  "  எங்கெல்லாம் வளையோசை”

பாடலை படமாக வேண்டும்.

அது சாதாரணமான பாடலாக இருந்தாலும் டான்ஸ்

மாஸ்டர் வந்துதான் ‘ மூவ் மெண்ட்ஸ்’ கொடுத்து

படமாக்க வேண்டும் !

அந்த படத்தின் ‘டான்ஸ் மாஸ்டர்’ இந்த பாடலுக்கு

இவர் போகாமல் ....

தன் சிஷ்யப் பிள்ளை யை

ஷூட்டிங்க் செய்ய அனுப்பினார் !

அந்த சிஷ்யப் பிள்ளைக்கு செம கடுப்பு !


“ என்ன மாஸ்டர் ! இந்த பாட்டில் ‘டான்ஸ் “ யே

இல்லே ! இதுக்குப் போய் என்னை அனுப்புகிறீர்கள்!

முத்துராம சாரை எதை சொல்லி டான்ஸ் ஆட

வைக்கிறது ? “


என்று அலுத்துக்கொண்டே போனாராம் !




அந்த சிஷ்யப் பிள்ளையின்  படம்  இதோ  ! :  




   
  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 JbeOYvFDQ1mvNFg8QlqL+1398489322_kamal_hassan_childhood_photos-{4}





" எங்கெல்லாம் வளையோசை " - பாடல் :



http://picosong.com/CGCD





 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




 
 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 IoREHBBQRjeu91Qmhf0q+knb2



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$





   
     4. கோபம் !
 


   
 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 LeAbHVA7SuyRrEnLFnqK+pr89



                           
 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 WNfVdrsYSLuGwEl4Ez80+iu5c




 
" கோபம் " என்கிற உணர்ச்சிக்கு பாடல்கள் அமைவது

என்பது அசாதாரணம்.

ஆனால் டி எம் எஸ் அவர்களுக்கு, அது ஒன்றும்

அசாதாரணம் அல்ல, அத்துபடி !



கோபம் கொண்டு ( ! ) பாடும் பாடல்களை டி எம் எஸ்

நிறையவே பாடியுள்ளார் !  





   
    " நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா

சொல்லுங்கள் !"

" என் மகன் "


" யாரடா மனிதன் இங்கே கூட்டி வா அவனை இங்கே! "

" லட்சுமி கல்யாணம் "  



 
போன்ற பாடல்களை சொல்லலாம்.    

ஆனால் நான் இங்கே எழுத வந்தது,  






 
   " கண்ணா ! நீயும் நானுமா ! கண்ணா!

நீயும் நானுமா ! "  





       கெளரவம்" படத்தில் இடம் பெற்ற பாடல்.



புகழ் பெற்ற அரசாங்க வக்கீல் ரஜினி காந்த், தனது

வளர்ப்பு மகனை வக்கீலுக்கு படிக்க வைக்கிறார்.

அவனோ ஒரு சந்தர்ப்பத்தில், தன் வளர்ப்பு தந்தைக்கு

எதிராக ஒரு வழக்கு விஷயத்தில் வாதாடவேண்டிய

நெருக்கடி !

எப்படி இருக்கும் , ரஜினிகாந்த் க்கு !




தன்னிடம் அன்பு காட்டிய ஒருவன்

தனக்கு எதிராக கிளம்பினால்.........





கோபம் வராமல் பின்னே

என்ன புண்ணாக்கா வரும் ?



( மேலே நான் எழுதியதைப் படிப்பவர்களுக்கு ஏதோ

நான் கோபத்தில் எழுதியதாக நினைக்க சாத்தியமுண்டு !

நான் பாரிஸ்டர் ரஜினிக்கு 'சப்போர்ட்' பண்ணி எழுதினேன்!

என்னிடம் அன்பு கொண்டவர்கள் திடீரென்று

புரியாத மாதிரி மாறினால்........

அவர்கள் மீது கோபம் கொள்ள

மாட்டேன் .......

மாறாக.....மனம் வருந்தூவேன்.....மனம்

புண்படும்....அவ்வளவுதான் !      என்ன கொடுமை சார் இது




     அந்த சமயத்தில் டி எம் எஸ்......இல்லே

சிவாஜி படத்தில் பாடும் பாட்டு !



இந்த பாட்டில் டி எம் எஸ் எப்படி 'கடுப்பாக பாடியிருக்கிறார்'

என்பதை பாருங்கள் !



" NEVER "


'NEVER ' என்று சொல்லும் இடத்தில் :


1. டி எம் எஸ் அந்த சொல்லில் கொடுக்கும் :

அழுத்தத்தில்

கோபம் தெரிகிறது அல்லவா !


2. அப்படி உணர்ச்சியைக் காட்டி பாடும்போது

நடிகர் திலகம் பாடுவது போல் இருக்க வேண்டும் !


இரண்டையும் கச்சிதமாக செய்து முடிக்கிறார்,

டி எம் எஸ் !



இந்த பாடல் ரிகார்டிங்க் சமயத்தில் டி எம் எஸ்

உணர்ச்சியுடன் பாடுகிறார்....

மெல்லிசை மன்னர் வேகமாக கைகளை ஆட்டி

இசை போடுகிறார் !

வாத்தியங்கள் ஆர்ப்பரிக்கின்றன !

வயலின் கள் இசை போடுகின்றன !

‘டிரம்ஸ்’ கள் அதிர்கின்றன !  







  இதற்கும்

இடையில் :  







 
   ” சூபர்....

டி எம் எஸ் ! “  







என்றது ஒரு குரல் !


யார் சொல்வது ?




ரிகார்டிங்க் ஐ பார்க்க

வந்து கண்களில் ஆனந்தக் கண்னீர் பொங்க

சொன்னவர்......


சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் !  
 




பாடல் : " நீயும்  நானுமா "


http://picosong.com/CGep










 
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


     5.  பயம்  !
                                                                                     

 
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 DKE8z7dLQsO9HHt5rWIv+ehnp





                                                                                                         
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 LeEKQy5tRQaIzxP22ult+oqt



 
” ஒவ்வொருத்தனுக்கு

பயம் என்றாலே பேச்சே

வராது !

இதில் பாட்டு எங்கே வரும் ! “  





 உண்மை தானே  !  


பயத்தில்  நாக்கே  வாயில்  ஒட்ட்டிக்கொள்ளுமே  !



" உமக்கு  எப்படி  ஐயா இது தெரியும் ? "


என்றா கேட்கிறீர்கள் ?



நான்  மருத்துவம்  படிக்கும்  போது எத்தனை    "  வாய்  வழி "  

நேர்முக  தேர்வுகளுக்குப்   போயிருப்பேன் !





 
 பயத்திலே பேச முடியாது !

கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது !


பின் எப்படி பாட முடியும் ?



டி எம் எஸ் பாடுகிறார்!  






 
     ” நதியினில் வெள்ளம்!

கரையினில் நெருப்பு !

இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு!

ஏன் இந்த சிரிப்பு ? “  





 
 “ தேனும் பாலும் “ படத்தில் இடம் பெற்றுள்ள

இந்த பாட்டில் டி எம் எஸ் :

பய உணர்ச்சியுடன்

பாடுகிறார் என்பது என்னுடைய தாழ்மையான

அபிப்பிராயம் !




ஒரு மனைவியைப் பெற்றவரே பயப்படும்

போது, இரண்டு மனைவிகள் என்றால் நிச்சயம்

பயம் இருக்கும் அல்லவா !

‘எப்படி இந்த பாடல் பய உணர்ச்சியில் சேரும்?’

என்று நீங்கள் கேட்கலாம் !

டி எம் எஸ் அவர்களின் குரலைக் கேளுங்கள்.

அதிலும் இந்த வரிகளை அவர் உச்சரிக்கும்

விதத்தை கேளுங்கள் :

“ ஏன் இந்த சிரிப்பு ? “

இப்படி டி எம் எஸ் பாடும் போது அவர்

குரலில் பய உணர்ச்சி

தென்படவில்லை ?

அதன் பின்னர் வரும் மெல்லிசை மன்னரின்

’டிரம்பட்’ ஒலி

இன்னும் பய உணர்ச்சியைத் தரவில்லை ?

பாடல் முழுவதும் .........

டி எம் எஸ் குரலில் :

இந்த பக்கம் வெள்ளம், அந்த

பக்கம் நெருப்பு - இனி என்ன நடக்குமோ? “

என்கிற பயம் அவர் குரலில்

தோன்றுகிறது அல்லவா ?


பய உணர்ச்சி தென்படும் டி எம் எஸ்

அவர்களின் வேறு பாடல்கள் இருப்பின்

தெரிவிக்கவும்.  





" நதியினில்  வெள்ளம் "    பாடல் :


http://picosong.com/CGCY




 
 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 QDoI2HiNSZeoqZsxMJot+jh7




 
        6. அருவருப்பு !  


                                                                                                                                             
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 B9ZpJDrMQxuC1ffo8511+aru




                                                                         
 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 IOMOPfXUTcATHqG9HVHX+7pbb







 இந்த ‘ அருவருப்பு ‘ என்கிற உணர்ச்சியை வெறும்

வார்த்தைகளால் சொல்லிவிடலாம்....


” கரப்பான் பூச்சி மேலே வந்து

உட்கார்ந்திடுச்சிப்பா.....சே....சே....! “

என்றால் அருவருப்புதானே !

ஆனால் அதனை - அந்த உணர்ச்சியை

எப்படி பாட்டில் கொண்டுவருவது ?


டி எம் எஸ் க்கு அதுவும் கைவந்த

கலைதான் !


இந்த அருவருப்பு என்கிற உணர்ச்சியை மற்ற

பாடகர்கள் பாடியிருக்கிறார்களா என்பது எனக்குத்

தெரியாது !  





 
 

ஆனால் டி எம் எஸ்

பாடியிருக்கிறார்  
                                                                                                                                                         





     
    ” நாணம் இல்லை உங்கள் கண்களுக்கு!

நாலும் இல்லை இந்த பெண்களுக்கு !

போகப் போக மிச்சம் இருப்பது போய்விடுமோ!

ஒ.ஓஹோ....ஹோ.......

ஆ...ஹா....ஹா ......அய்யஹோ ! “  






 
“ அன்பு வழி “ படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை

அருவருப்பு லிஸ்ட் இல்

சேர்க்கலாம் !


எப்படி ?


” பருவத்தை காட்டும் போட்டியோ!

போட்டியில் ஆயிரம் பாட்டியோ ! “


18 - 20 வயது அழகிய பெண்கள் கலந்து

கொள்ளும் ‘அழகிப் போட்டியில் ‘ திடீரென்று

நடிகை செளகார் ஜானகி யும் கலந்து கொண்டால்..

நமக்கு என்ன ஏற்படும் ?

அருவருப்பு தானே !



இந்த பாடலில் டி எம் எஸ் அவர்களின் குரலைக்

கேளுங்கள் !

’ அன் சகிக்கபுள்”

தன்மை ஒலிக்கின்றது அல்லவா !


” போகப் போக மிச்சம் இருப்பது

போய்விடுமோ ?”

என்று பாடும்போது பயத்தை விட

‘அசிங்கம்’ அல்லது ‘அருவருப்பு’ உணர்ச்சிதானே

தோன்றுகிறது !


இது மட்டுமா!


“ஒ.ஓஹோ....ஹோ.......

ஆ...ஹா....ஹா ......அய்யஹோ !”

என்று டி எம் எஸ் புலம்புவது....

அருவருப்பின் உச்சக்கட்டம்

என்றும் சொல்லலாம் !  




" நாணமில்லை  இந்த பெண்களுக்கு "


" அன்பு வழி "

பாடல் :


http://picosong.com/CGCj






 
  நவரசம் .....................தொடரும் !



எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Thu May 29, 2014 5:39 pm

      டி.எம். எஸ் அவர்களின்

 நவரசப் பாடல்கள் !



..............................தொடர்ச்சி...... !  





 
     7. சோகம் .
   


                                                                                               
 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 RTVpj0LQRiNje7kP8GSw+g5zd
 



                                     
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 KewKqvLbSTmizKuRTDIC+4ma





 
     ( 'பிராப்தம்’ படம் : நன்றி : திரு. வியார் )


பொதுவாக சோகப் பாடல்களைக் கேட்டாலே

நமக்கு பிடிக்காது !

அந்த மாதிரி பாடல்களைக் கேட்க நமக்கு :

MENTAL PREPARATION

பண்ணிக் கேட்கவேண்டும் !


” பெண்ணே ! உன் கதி இதுதானா!

உன் பெண்மை , ஆண்மைக்கு பலிதானா !”

என்று சி எஸ் ஜெயராமன்

பாடுவதை கேட்க , அதற்கான மன நிலையை நாம்

எற்படுத்திக்கொள்ளவேண்டும்!


ஆனால்.....


டி எம் எஸ் அவர்களின் சோகப் பாடல்

விஷயத்தில் அது தேவையே இல்லை !

எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !



” ஒரே பாடல் உன்னை அழைக்கும்”

எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !


நடந்து வந்த பாதையிலே நாலு வழி

பார்த்திருந்தேன்...நல்லது கெட்டது புரியவில்லை!

நல்லவர் எல்லாம் வாழ்வதில்லை !”

எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !



” முத்து நகையே உன்னை நான்

அறிவேன்!”


- எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !



” இதயம் இருக்கின்றதே தம்பி !

இதயம் இருக்கின்றதே - வாழும் மனிதருக்கும்

வாடிடும் ஏழைகளுக்கும் இதயம் இருக்கின்றதே,

தம்பி !”


- எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !




” பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக !”

- எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !


” காவலும் இல்லாமல் வேலியும்

இல்லாமல் தர்மம் கலங்குதம்மா!

பாதை புரியாமல் போக முடியாமல் என்

கால்கள் தயங்குதம்மா !”

- எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !



இப்படி பல நூறு பாடல்கள் !



ஆனால் இங்கே நான் குறிப்பிட நினைப்பது :


” தாலாட்டு பாடி தாயாக வேண்டும் !

தாளாத என் ஆசை சின்னன்ம்மா! - வெகு

நாளாக என் ஆசை சின்னம்மா !”


“ பிராப்தம்’ படத்தில் இடம் பெற்ற பாடலில்,

சிவாஜியின் , எஜமானானின் மகளாக வருகிறார்,

சாவித்திரி.

எஜமானனின் மகள் என்பதால்

மிகவும் அன்புடனும் பாசத்துடனும் பழகுவார், அந்த

படகோட்டியாக வரும் சிவாஜி.

சாவித்திரி மணம் புரிந்து புகுந்த வீட்டிற்கு போகும்

போது கூட மிகுந்த பாசத்துடன் : “ நேத்து பறிச்ச

ரோஜா’ என்று பாடி வழியனுப்புவார் !


அதே சாவித்திரி, விதவையாக தந்தையின் வீட்டுக்கு

திரும்பி வரும்போது துடியாய் துடித்து போய்விடுவார்

சிவாஜி !


இந்த சூழ்நிலையில் பாடும் இந்த பாடலில் சோகம்

நிரம்பி வழிந்தாலும் எத்தனை தடவைகள் கேட்டாலும்

அலுக்காத குரல், இசை ...எல்லாம் !


பாடல் முழுக்கு டி எம் எஸ் இன் குரலைக் கேளுங்கல்!

ஓர் இடத்தில் அவர் அழ ஆரம்பித்துள்ளார் !



” ஆறாது ஆறாது அழுதாலும் தீராது,

ஆனாலும் வழி என்ன , தாயே !

அறியாத பெண்ணல்ல கனவோடு உறவாடு,

சுமைதாங்கிக் கல்லாக நீயே !”


இந்த மாதிரி அழுதுகொண்டே , உணர்ச்சியுடன் பாட

இந்தியாவிலே யார் உண்டு - ஒருவரைத்

தவிர !

அவர் : முகமது ரபி !


இந்த அழுகையுடன் டி எம் எஸ் பாடுவது அந்த

பாடலின் சூழ்நிலைக்கு வலு

சேர்ப்பதாக அமைகிறதல்லவா !

அது மட்டுமா !

இதனை புரிந்து கொண்டதால்தான் மெல்லிசை

மன்னர் டி எம் எஸ் இன் குரலுடன் ,

நடிகையர் திலகம் சாவித்திரியின்

குரலில் : ” கண்ணா”

என்று சொல்லும் இடம் அற்புதம் !


இந்த “கண்ணா” என்று சாவித்திரி சொல்லும்

போது, டி எம் எஸ் மிகவும் உணர்ச்சி வசப்

பட்டு சாவித்திரியை பாராட்டினாராம் !

” நான் எத்தனை நன்றாகப் பாடினாலும்

நீங்கள் “ கண்ணா!” என்பதை அழகாக உச்சரித்து

பாட்டின் தன்மையை கூட்டிவிட்டீர்கள், அம்மா!”

என்று சாவித்திரியை பாராட்டினாராம் , டி எம் எஸ் !  






 
இதே மாதிரி “ குலவிளக்கு” படத்திலும் “ மேகம் திரண்ட

நேரத்திலே தாகம் எடுக்க வில்லை “

என்கிற பாடலில் , அருமையாகப் பாடும் டி எம் எஸ்

குரலுடன் :

”நடிகை சரோஜா தேவியின் பயங்கர

இருமல் ஒலி, பாட்டின் சோகத்திற்கு வலு சேர்க்கும்!”


நடிகை சரோஜாதேவியையும் டி எம் எஸ் மனதாரப்

பாராட்டினாராம் !  




"  தாலாட்டு  பாடி  " - " பிராப்தம் "


http://picosong.com/CGP4



 
 %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%






 8.வீரம்  .



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 L8fT61wSQzWCCfSJnvhr+si0



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 QCaWsjXgRhWfcHn43ZSd+sb2m





 
   டி எம் எஸ் அவர்களின் மறு பெயரே வீரம் தானே!


இவர் வீரத்துடன் பாடிய பாடல்கள் பல நூறு

இருந்தாலும் , அனைவரும் ஒன்று சேர தெரிவு

செய்யும் பாடல் :

” அச்சம் என்பது மடமையடா!

அஞ்சாமை திராவிட உடமையடா ! “


“ மன்னாதி மன்னன்” படத்தில் இடம் பெற்ற இந்த

பாடல் வேகம் மிகுந்த பாடல் !


டி எம் எஸ் பாடலின் ஆரம்பத்திலேயே வேகுத்துடன்

விவேகத்துடன் , வீரத்துடன்

பாட ஆரம்பித்துவிடுவார் !


போதாக்குறைக்கு மெல்லிசை மன்னர்களில் குதிரை

களின் குளம்பொலி !

வயலின் களின் வேகமான வீச்சு !


போதாக்குறைக்கு கண்ணதாசனின் ஊக்கம் மிகு

வார்த்தைகள் !


தூங்கும் போது இந்த பாட்டைக் கேளுங்கள் !

தூக்கம் போய்விடும் !

மயிர்க்கூச்செரிடும் !

கோழையை தைரியசாலியாக ஆக்கிவிடும்

இந்த பாடல் !  





 
     ” வாழ்ந்தவர் கோடி, மறைதவர்

கோடி....

மக்களின் மனதில் நிற்பவர் யார் “    





 
    நிச்சயம் டி எம் எஸ் தான்!    





" அச்சம்  என்பது   "

" மன்னாதி  மன்னன் "       பாடல் :


http://picosong.com/CGPQ



 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 5sLN0fhLSC25DI7jwTzM+lxl1




  ##########################################






 
       9. சிருங்காரம்


(  அழகு )  




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 0ZHTJcySRgpqlJbWNCYa+ldnp




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 4P3SdomATqeD4mmZgXpv+44ao




 
      1. ஒரு நடிகனுக்கு நடிப்பு அழகு !


2. ஒரு நடிகைக்கு உடல் வனப்பு அழகு !

( நடிகை நன்றாக நடித்தால் எவன் பார்க்கிறான்! )



3. ஒரு இசையமைப்பாளனுக்கு , அவனின் இசை

அழகு !



4. ஒரு ஆசிரியருக்கு போதிப்பது அழகு !


5. ஒரு மருத்துவனுக்கு நல்ல மருத்துவம்

பார்த்தல் அழகு !


( நான் ‘கிளினிக்” இல் உட்கார்ந்து ‘பிராக்டிஸ்’

பன்ணும் அழகே அழகுதான் ! )   புன்னகை 





   
  அது போல....  





   
   ஒரு பாடகனுக்கு நன்றாக

பாடுவதுதான்

அழகு !    





 
     டி எம் எஸ் இதில் என்ன

குறை வைத்தார் ? !  






 ( சுரைய கோஷல் என்கிற பெண் பாடகி பார்க்க



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 L15RVThhRJWDccUNPepi+sexy-singer-shreya-ghoshal-photos-stills(2)




அழகாக இருப்பார். பாடினால் ‘தமில்’ அழகாக

இருக்கும் ! )




” I Will Sing For You !

I Will Dance For You ! "


” மனிதருள் மாணிக்கம் “ படத்தில் இடம் பெற்ற

இந்த பாடலில் :

டி எம் எஸ் எத்தனை ரகங்களில்

பாடியுள்ளார் :

கர்நாடக,

மேற்கத்திய,

மலையாள்,

தெலுங்கு

என்று பல வகைகளில் பாடியுள்ளார் !


இது சிருங்காரம் தானே !  





 
     

” பெண்ணே உன் கையில்

ராஜாங்கம் இருந்தால் எல்லோரும் ஆடணுமா!

ராஜாதி ராஜனும் ரவிக்கைக்கு பயந்து

பின் பாட்டு பாடணுமா ? “  





 இது என்ன ?


அந்த காலத்தில் இந்திரா காந்தி,

காமராஜ் ஐ ‘ ஆட்டிப் படைத்ததை ‘

கண்னதாசன் கண்டனம் தெரிவிக்கும் ஸ்டையில்!  



பாடல் :

http://picosong.com/CGPU



 %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%





 
     10. பாசம் .


(  கொசுறு  ரசம் ! )  





  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 5UERkyreQsCf1NDT9Flt+oc9g



  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Voin1qmRlChZQf1EJf5D+gu0a





டி எம் எஸ் அவர்களுக்கும் பாசப் பாடல்களுக்கும்

நெருங்கிய தொடர்பு உள்ளது !

பல பாடல்கள் ! அனைத்தும் மிக புகழ் பெற்றவை!

அவைகளை இங்கே பட்டியலிட்டால் என்னத்

திட்டுவீர்கள் !

“ ஏன் யா ! இதெல்லாம் எங்களுக்க்த் தெரியாதா!”

என்று கூட சொல்வீர்கள் !




 
    இதை மனதில் கொண்டுதான்

டி எம் எஸ் அவர்களின் ஒன்பது நவரசப்

பாடல்களுடன் “ பாசம் “ என்கிற

உணர்ச்சியை சேர்த்து விட்டேன் !      







 
     ” இனிமேல் எனக்கென்ன கவலை- என்

இதயம் பார்ப்பது மகளை !

உறவே எனக்கு அவள் எல்லை !

இனி உலகம் வேறு எதுவும் இல்லை !”  





“ மகளுக்காக” படத்தில் இடம் பெற்ற இந்த பாடல்

டி எம் எஸ் அவர்களின் :

“பாசமான பாடல்களில் “

எனக்கு பிடித்த பாடல் !



படத்தில் ஏ வி எம் ராஜன் பாசமுள்ள தந்தையாகவும்

அவரது மகள் ஆக ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா

வருவார்கள் !


சிறையில் இருக்கும் தந்தை, தன் மகளைப் பார்க்க

“பரோல்” இல் இருந்து வருகிறார் என்று நினைக்கிறேன் !

அப்போது இந்த பாடல் ஏ வி எம் ராஜன் தன்

மகளை நினைத்து பாடுவது போல் காட்சி !


இந்த பாடலில் டி எம் எஸ் பாடும் உணர்ச்சி மிக்க

வரிகளை ராஜன் மிகுந்த செறிந்த நடிப்போடு படமாக்கி

இருப்பதை நான் ரசித்தேன் !    





 
    ஒரு தந்தை, தன்

மகளை நினைத்து பாடும்

அற்புதமான வரிகளைக் கொண்ட

பாடல் !  





 
    சுமார் 5 வருடங்களுக்கு முன்னர்

ஒரு சகோதரி ,


“ என் தந்தையின் நினைவாக எனக்கு யாராவது

இந்த பாடலை வழங்க முடியுமா ? “

என்று    என்னை  கேட்டிருந்தார்.


என்னால்  அப்போது  இந்த பாடலை அவருக்கு

வழங்க வில்லை !



காரணம் ?



யாரிடமும் இந்த பாடல் இல்லை !


அந்த சகோதரி மறுபடியும் கடிதம்

போட்டு :



“ யாருமே, என் தந்தையை நினைவு படுத்தும்

பாடலைத் தரமுடியவில்லையா ? “



என்று மிகுந்த வருத்ததுடன் கேட்க ஆரம்பித்தார்!



எனக்கு மிகுந்த வருத்தமாக போய் விட்டது.

என்னிடம் பாட்டு இல்லையா ?

இல்லை......இருந்தது !

எப்படி இருந்தது தெரியுமா ?


ஆடியோ காஸ்ஸட் வடிவில்

இருந்தது !





எனவே நான் யாரிடம் ‘ஆடியோ காஸ்ஸட்’ ஐ

எம்பி 3

ஆக்குவது என்பது தெரியவில்லை !



ஆனாலும் அந்த சகோதரிக்கு உதவ

வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்!

என்ன செய்வது ?



கீழ் கண்டவாறு செய்தேன்!




1. “ டேப் ரிகார்டரில் ‘ அந்த பாடல் அடங்கிய

‘காஸ்ஸட்’ ஐ சொருகினேன் !


2. அந்த பாட்டு தொடங்கும் போது, என் செல்பேசியில்

அந்த பாடலை பதிவு செய்தேன் !


3. செல்பேசியில் பதிவு செய்த பாடலை கேட்டேன்!

பாட்டு நன்றாகவே ‘ரிகார்ட்’ ஆகியிருந்தது ---

கூடவே கார் ‘ஹார்ன்’ ஒலியுடன்

கேட்க வேண்டியிருந்தது !  என்ன கொடுமை சார் இது



4. மறுபடியும் செல்பேசி !

போட்டேன் , கேட்டேன் !

கூடவே மின் விசிறி சுற்றும் ஒலி !

வாழ்க்கையை வெறுத்தேன் !



இரவு 12 மணி , ஊர் அடங்கும் நேரம்!


5. மறுபடியும் செல் பேசி !

பாடல் ஓகே !

கூடவே ரோட் நாய் குரைக்கும்

ஒலியுடன் !  அநியாயம்



6. கதவுகளை சாத்தினேன் ! மின் விசிறி ‘ஸ்விட்ச் ஆப்!”

செல் பேசி , கேட்டேன் - ஓகே !



7. செல் பேசியை கம்பூடரில் இணைத்தேன் , அதில்

பாட்டை இறக்கினேன் !



8. எம்பி 3 ஆக்கினேன் ! அந்த பாடலைக் அந்த

சகோதரிக்கு கொடுத்தேன் !


அந்த சகோதரி எனக்கு மிகுந்த மகிழ்வுடன் எனக்கு

நன்றி சொன்னார் !



இப்போது

நான் தரும் இந்த பாடல்

மேற்கண்ட முய்ற்சியால் உண்டானதுதான்!




இப்போதாவது இந்த பாடலை இன்னும் சிறந்த

முறையில் யாராவது தரமுடியுமா ?    




" இனிமேல் எனக்கென்ன கவலை "


" மகளுக்காக "


http://picosong.com/CGcq



 
 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




   
    என்னால் இயன்ற அளவுக்கு இந்த

கட்டுரையை எழுதி உள்ளேன் ......

உங்கள் எண்ணத்தை வரையவும்  !



 
 %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%





 
       அடுத்த  கட்டுரை !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 RLspeEFCTZ2ivDHf5UaH+download



   எம். கே . தியாகராஜ  பாகவதர் ரசிகர்கள்




       Vs




      பி . யு . சின்னப்பா ரசிகர்கள்



 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Wi6Z0K1SLWR1TNnDZjoz+hqdefault



 
      ' டிஷ்யூம் - டிஷ்யூம் ' சண்டை !

'மசாலா '  தடவிய  ஜாலி ரிபோர்ட் !   ஒன்னும் புரியல 





எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by vasudevan31355 Thu May 29, 2014 7:44 pm

அருமை டாக்டர் சார்,

என்ன சொல்வது?! எப்படிப் பாராட்டுவது?

குடத்திலிருந்து சிதறும் முத்துமணிகளைப் போல பழைய சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் தங்கள் கைவண்ணத்தில் ஈகரையில் வண்ணமயமாகச் சிதறுகின்றனவே!

அதுவும் டி எம் எஸ் அவர்களின் நவரச சாம்ராஜ்யம் பற்றிய கட்டுரை அதி அற்புதம்.

தங்கள் உழைப்பு எனக்கு மலைப்பை உண்டாக்குகிறது.

இக்கட்டுரைகளுக்காக தாங்கள் எத்தனை நாட்கள் உழைத்திருக்க வேண்டும்?!

தங்கள் படைப்புகளுக்காக காத்திருக்கிறேன்.

ஈகரையின் அன்பர்களே!

படைப்பு நீளமாக இருந்தாலும் அனைவரும் இவ்வரிய படைப்புகளை படித்து இன்புறுங்கள். படைப்பாளர்களை மனம் விட்டு பாராட்டுங்கள். அவர்கள் உழைப்பை நாம் மதிப்போம். நம்முடைய பாராட்டுதல்கள்தான் டாக்டர் சார் போன்றவர்களை மேலும் உற்சாகப்படுத்தி பல அதியற்புதமான விஷயங்களை நமக்கு அளிக்க வைக்கும்.

அரிய கருத்துக்களை நகைச்சுவை இழையோட டாக்டர் அவர்கள் அளித்து வருவதற்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 26 Previous  1, 2, 3, 4 ... 14 ... 26  Next

Back to top

- Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum