Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
+30
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
Namasivayam Mu
T.N.Balasubramanian
shobana sahas
mbalasaravanan
சிவனாசான்
M.Saranya
veegopalji
ஸ்ரீரங்கா
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
rksivam
ayyasamy ram
anaamigan
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
moganan
udayarr
Jothiram
veeyaar
vasudevan31355
chittibabu
pon.sellamuththu
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
விஸ்வாஜீ
mkrsantharam
34 posters
Page 15 of 26
Page 15 of 26 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 26
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
First topic message reminder :
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா !
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
டாக்டர் சார்
1. கற்பகம் படத்திற்காக வாலி எழுதி ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடி ஒரு பாடல் பதிவு செய்யப் பட்டதா..
2. சித்தி படத்தில் இடம் பெற்ற சந்திப்போமா பாடல் கற்பகம் படத்திற்காக பதிவு செய்யப்பட்டதா..
சந்தேகத்தை தெளிவு செய்யுங்களேன்...
1. கற்பகம் படத்திற்காக வாலி எழுதி ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடி ஒரு பாடல் பதிவு செய்யப் பட்டதா..
2. சித்தி படத்தில் இடம் பெற்ற சந்திப்போமா பாடல் கற்பகம் படத்திற்காக பதிவு செய்யப்பட்டதா..
சந்தேகத்தை தெளிவு செய்யுங்களேன்...
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
என் கேள்விகள் ஒரு புறம்..
உங்கள் கட்டுரை...
என்னவென்று சொல்வது.. இவ்வளவு விரிவாகவும் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதும் கலை சிலருக்கு மட்டுமே வாய்க்கும்...
தங்களுடைய எழுத்துக்க அந்த வலிமை உள்ளது.
பாராட்டுக்கள்..
உங்கள் கட்டுரை...
என்னவென்று சொல்வது.. இவ்வளவு விரிவாகவும் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதும் கலை சிலருக்கு மட்டுமே வாய்க்கும்...
தங்களுடைய எழுத்துக்க அந்த வலிமை உள்ளது.
பாராட்டுக்கள்..
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
வீயார் சார், நீங்கள் குறிப்பிடுவது போல் டாக்டர் ஐயா அவர்கள் நிறைய சினிமா சம்பந்தமாக பல அறிய தகவல்களை வைத்திருப்பார் போல் இருக்கிறது. நமக்காக இங்கு அவர் தந்து வருவது நாம் செய்த பலன். அவருக்கு என்றுமே நாம் கடமைப்பட்டிருக்கிறோம். வளர்க அவரது தொண்டு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
மேற்கோள் செய்த பதிவு: 1097683மாணிக்கம் நடேசன் wrote:எம்.ஆர்.ராதாவின் அசத்தலான படம் ஒன்றை போட்டு எங்களை அசத்தி விட்டீர்கள், எங்கிருந்து இவற்றை எடுத்து வருகிறீர்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. தகவல்களுக்கும் தரமான கிடைப்பதற்கிறிய படங்களுக்கும் மிக்க நன்றி டாக்டர் சார்.
தொடரட்டும் உங்களது இந்த அற்புத பணி.
அன்புள்ள திரு. மாணிக்க்கம் நடேசன்ன் அவர்களுக்கு,
தங்களின் இரு கடிதங்களுக்கும் நன்றி !
எனக்கு நேரம் இருக்கும் போதேல்லாம் நிச்ச்சயம் எழுதுகிறேன்,
மருத்துவப் பணியில் இருக்கும் எனக்கு நேரம் கிடைப்பது
என்பது அரிது.
எனினும் , நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேஎன்.
நன்றி ஐயா,
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
மேற்கோள் செய்த பதிவு: 1097721M.M.SENTHIL wrote:தொடர் பதிவிற்கு நன்றி
நன்றி , திரு. எம். எம். செந்தில் அவர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
மேற்கோள் செய்த பதிவு: 1098487veeyaar wrote:டாக்டர் சார்
1. கற்பகம் படத்திற்காக வாலி எழுதி ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடி ஒரு பாடல் பதிவு செய்யப் பட்டதா..
2. சித்தி படத்தில் இடம் பெற்ற சந்திப்போமா பாடல் கற்பகம் படத்திற்காக பதிவு செய்யப்பட்டதா..
சந்தேகத்தை தெளிவு செய்யுங்களேன்...
நன்றி , திரு. வியார் சார் !
உங்க்களீன் இரு கடிதங்களுக்கும் நன்றிகள் பல !
முதல் கேள்விக்கு எனது பதில் :
எனக்குத் தெரிந்தவரையில் ' கற்பகம் ' படத்தில் ஏ. எல். ராகவன் - எல் .ஆர்.
ஈஸ்வரி - இவர்களின் பாடலை பதிவு செய்து பின்னர் இசைத்தட்டாக
வந்ததாக நினைவு இல்லை.
அப்படி ஒரு பாடல் வெளி வந்திருக்கும் என்று
என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் படத்தில் அந்த
பாடலை ஷீலாவும் முத்துராமனும் தான் பாடுவதாகத்தான்
படமாக்கி இருக்க வேண்டும் - ஆனால் அவர்களின் டூயட் படத்திற்க்கு
அவசியம் இல்லை என்பதே என் கருத்து !
நம் சகோதரர் திரு. நீலமேகம் கூட இதைத்தான் குறிக்கின்றார் !
இரண்டாவது கேள்விக்குப் பதில் :
" கற்பகம்" படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் எழுதியவர்
வாலி !
வாலியை வைத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியது
குறித்து கவிஞர் கண்ணதாசன் அதிருப்தி அடைந்தார் என்பது
ஒரு ' கிசு - கிசு ' செய்தி !
எனவே அவரை சமாதானப் படுத்தும் நோக்கில் ,
கே. எஸ்.. ஜி , கவிஞர் கண்ணதாசனை " சித்தி " படத்தில்
பாடல்களை எழுதச் சொன்னதாகவும் ஒரு 'கிசு- கிசு '
செய்தி !
( " கிசு- கிசு " என்பதை " குசு- குசு" என்று படித்துவிட வேண்டாம் ! )
" கற்பகம் " படத்திற்கு இசை :
மெல்லிசை மன்னர்கள் .
"சித்தி " படத்திற்கு இசை :
மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் தனித்து !
" கற்பகம் " வெளிவந்தது : 1963 ஆம் ஆண்டு !
" சித்தி" வெளிவந்தது 1966 ஆம் ஆண்டு !
இன்னொன்று :
மெல்லிசை மன்னர்களின் அற்புதமான கலவை கொண்ட ' கற்பகம்'
பாடல்களுக்கும் ,
தனித்துவம் கொண்ட அற்புத இசையமைப்பு கொண்ட
மெல்லிசை மன்னர் எம். எஸ். வி. அவார்களின்
பாடல்களுக்கும் உள்ள வித்தியாசங்களை நீங்கள்
அறியாததா, என்ன !
எனவே கண்ணதாசன் எழுதி, 'கற்பகம்' படத்தில்
' சந்தீப்போமா' பாடல் இடம் பெற
வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து.
தொடர்ந்து எழுதுங்கள், வியார் சார் !
" கற்பகம்" பாடல்காள் !
இன்று மாலைக்குள் !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
அருமையான படம்.... கற்பகம்....
நன்றி ஐயா...
நன்றி ஐயா...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
மேற்கோள் செய்த பதிவு: 1100966M.Saranya wrote:அருமையான படம்.... கற்பகம்....
நன்றி ஐயா...
மிக்க நன்றி சரண்யா சகோதரி அவர்களே,
இதோ, " கற்பகம் " பாடல்கள் !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
[ b] h2]
' கற்பகம் ' படத்தை கே. எஸ். ஜி இயக்கத்தில்
" உங்களைப் பற்றி எம். எஸ். வி அவர்கள் என்னிட்டம்
" எங்கே, எம். எஸ். வி க்கு நீங்கள் எழுதின பாட்டு ஒன்று
" ஓ.கே ! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் !
வாலியின் இருப்பிடத்திற்கு கார் வந்தது.
வாலி கொஞ்சம் கூட தயங்க வில்லை !
கே. எஸ். ஜி துள்ளிக் குதித்தார் !
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும் :
" அத்தை மடி மெத்தையடி "
மகிழ்ச்சி :
http://www.mediafire.com/listen/mvhdlmbb6q37wu2/Karpagam-1963_-_Athai_Madi_Methaiyadi-PS-Vaali.mp3
" அத்தை மடி மெத்தையடி "
இன்னொன்று :
http://www.mediafire.com/listen/psv2c4j64mf4toq/Karpagam-1963_-_Athai_Madi_Methaiyadi(Sad)-PS-Vaali.mp3
" முதலில் ஒரு பாட்டு " என்று வாலியிடம்
பாடல் :
http://www.mediafire.com/listen/zy7y4r5ze6y5og7/Karpagam-1963_-_Mannavane-PS-Vaali.mp3
இயக்குனர் திலகத்திற்கு இப்போது வாலியை இலேசில்
கல்யாணம் ஆகாத கன்னி , முதல் இரவைப் பற்றி
பாடல் :
http://www.mediafire.com/listen/wlcjugb68z94gk9/Karpagam-1963_-_Aayiram_Iravugal-PS-Vaali.mp3
இந்த பாடலும் வாலி எழுதிய பாடல்தான் !
http://www.mediafire.com/listen/acnls24502yx0bz/Karpagam-1963_-_Pakkathu_Veettu_Paruva_Machaan-PS-Vaali.mp3
எம்கேஆர்சாந்தாராம்
" கற்பகம் " பாடல்கள் !
[/b] [ [/h2]' கற்பகம் ' படத்தை கே. எஸ். ஜி இயக்கத்தில்
கே.எஸ். ஜிக்கு சொந்தமான :
" அமர்ஜோதி "
என்கிற பட நிறுவனம் எடுக்க முடிவான போதே அந்த படத்திற்கு
இசையமைப்பு :
" மெல்லிசை மன்னர்கள் "
என்று முடிவு செய்யப்பட்டது !
இந்த படத்தை தயாரிப்பதற்கு சற்றே கால இடைவெளியில்
' முக்தா பிலிம்ஸ் ' படக் கம்பையில் இருந்து :
" இதயத்தில் நீ " ( 1963 )
திரைப்படத்திற்கு இசையத்த மெல்லிசை மன்னர்
எம். எஸ். விஸ்வநாதன் கவிஞர் வாலியின் திறமைய கண்டு
மெச்சி, :
" இத்தனை காலம் நீங்கள் எங்கிருந்தீர்கள் "
என்று மெல்லிசை மன்னர், வாலியைப் பார்த்து கேட்கும்
அளவில் , வாலியின் பாடல் எழுதும் திறன் மிகவும் உயர்ந்து
காணப்பட்டது !
எனவே மெல்லிசை மன்னர், தன் கண்களில் தென்பட்ட
படத்தயாரிப்பாளர்களை சந்தித்து வாலியை சிபார்சு செய்யத்
தொடங்கினார் !
( மெல்லிசை மன்னருக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் மிகப்
பெரிய " புரிதல் ' அத்தான் - ' Chemistry ' இருந்தது என்பது
என்னவோ உண்மை ! அதனால் திறமை உள்ளவர்களை
ஊக்குவிக்க அவர் என்றும் விரும்பினார் என்பதும் உண்மை ! )
" அத்தை மடி மெத்தையடி !
ஆடி விளையாடம்மா ! "
ஆடி விளையாடம்மா ! "
" உங்களைப் பற்றி எம். எஸ். வி அவர்கள் என்னிட்டம்
நிறைய சொன்னார் ! மகிழ்ச்சி ! முதலில் ஒரே ஒரு பாட்டு
உங்களுக்குத் தருகிறேன், மற்றவை பிறகு பார்ப்போம் ! "
சொன்னார் : கே. எஸ். கோபாலகிருஷ்ணன், வாலியிடம் .
" எங்கே, எம். எஸ். வி க்கு நீங்கள் எழுதின பாட்டு ஒன்று
சொல்லுங்கள், கேட்போம் ! "
கேட்டார் இயக்குனர் திலகம்.
" உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்.
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவு இருக்கும் ! "
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்.
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவு இருக்கும் ! "
" இதயத்தில் நீ " ( 1963 ) - வாலி
மேற்கண்ட பாடலை பாடிக்காட்டினார் வாலி!
" ஓ.கே ! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் !
நாளைக்கு ஆபிசுக்கு வாங்க!
வண்டி அனுப்புகிறேன் ! "
கே. எஸ். இப்படி கூறிவிட்டு சென்றார் !
மறுநாள் காலை.........
வாலியின் இருப்பிடத்திற்கு கார் வந்தது.
கே. எஸ். ஜி யின் ஆபிஸ் :
" வாலி ! ஒரு தாலாட்டுப் பாடல் வேண்டும் !
அந்த குழந்தையின் அத்தை முறை கொண்ட ஒரு
பெண் ஒருத்தி பாடும் தாலாட்டு பாடல் !
அந்த பெண் எப்படி அந்த குழந்தைக்கு தாலாட்டுப் பாடலை
பாடுவாள் என்று சொல்லுங்கள், பார்ப்போம் ! "
இதில் வேடிக்கை என்னவென்றால்......
இயக்குனர் திலகம் கே. எஸ். ஜிக்கே திரைப்படங்களுக்கு
பாடல்களை எழுத நன்றாகத் தெரியும்.........இது பற்றி அடியேன் முன்னரே
உங்களுக்கு சொல்லிவிட்டேன் !
இப்போது விஷயம் தெரிந்தவர் முன்பு வாலி நன்றாக பாடி
பேர் எடுக்கவேண்டிய நிலைமை !
இயக்குனர் திலகம் கே. எஸ். ஜிக்கே திரைப்படங்களுக்கு
பாடல்களை எழுத நன்றாகத் தெரியும்.........இது பற்றி அடியேன் முன்னரே
உங்களுக்கு சொல்லிவிட்டேன் !
இப்போது விஷயம் தெரிந்தவர் முன்பு வாலி நன்றாக பாடி
பேர் எடுக்கவேண்டிய நிலைமை !
வாலி கொஞ்சம் கூட தயங்க வில்லை !
' பாட' ஆரம்பித்துவிட்டார் :
" அத்தை மடி மெத்தையடி !
ஆடி விளையாடம்மா !
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லிவிழி மூடம்மா ! "
ஆடி விளையாடம்மா !
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லிவிழி மூடம்மா ! "
கே. எஸ். ஜி துள்ளிக் குதித்தார் !
வாலியின் முதுகில் ஓங்கி ஒரு குத்து விட்டார் !
" சபாஷ் ! சரியான பாட்டு !
நான் எண்ணியதற்கும் மேலாக நீங்கள் எழுதி விட்டீர்கள் ! "
வாலியின் பாடல் ஓ.கே ஆனது !
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும் :
இயக்குனர் என்கிற வகையில் , கே. எஸ். ஜி அவர்கள்,
பாடலாசிரியர்களிடம் பாடலை எழுதி வாங்கும் போது பாடல்களை
அவர்கள் முதலில் எழுதுவதே கே. எஸ்.ஜிக்கு திருப்தி ஏற்பட்டு
விட்டால் அந்த பாடல் வரிகளை அவர் ஏற்றுக்கொள்வார் !
மாறாக, கே. எஸ். ஜி திருப்தி ஏற்பட்ட போதிலும் மேலும்
மேலும் பாடல் வரிகளை எழுதச் சொல்லி கவிஞர்களை
துன்புறுத்தும் வழக்கம் அவர்களுக்கு இல்லை !
' முதலில் எனக்குப் பிடிக்கும் வரிகளை இவர்கள் எழுதிவிட்டால்
பின்னர் எதற்காக மேலும் அவர்களை எழுதச் சொல்லவேண்டும் ? '
என்று வாதாடுவார் !
ஒரு சம்பவம் :
" அருகில் வந்தாள் , உருகி நின்றாள் "
என்கிற ஏ. எ,. ராஜா பாடிய " களத்தூர் கண்ணம்மா "
பாடலை எழுதிய கவிஞர் கண்ணதாசனை மேலும்
மேலும் சரணங்களை எழுதுமாறு ' டார்ச்சர்' கொடுத்தாராம்
அந்த படத்தை முதலில் இயக்கிய இயக்குனர் :
டி. பிரகாஷ் ராவ் !
கண்ணதாசன் எழுதினார்.....
எழுதினார்.......
எழுதின்னார்.....
எத்தனை சரணங்கள் தெரியுமா ?
51 சரணங்கள் !
பார்த்தார், ஏ. வி. எம் பட அதிபர் செட்டியார் !
கண்ணதாசனிடம் சொன்னார் , செட்டியார் :
" அய்யா ! இந்த டி. பிரகாஷ் ராவ் ஒரு தெலுங்கர் !
தமிழ் அவ்வளவாக அறியாதவர் !
எனவே நீங்கள் இதுதும் நிறுத்திக் கொள்ளவும் !
நீங்கள் எழூதிய இத்தனை சரணங்களில் நாங்கள்
மூன்றை மட்டும் ( ! )
எடுத்ட்துக்கொண்டு மற்றவைகளை விட்டுவிடுகின்றோம் ! "
என்றாராம் !
விளைவு ?
அந்த டி . பிரகாஷ் ராவ் , பின்னால் வேறு ஒரு பிரச்சனையின்
விளைவாக மாற்றப்பட்டு " களத்தூர் கண்ணம்மா " வை இறுதியாக
ஏ. பீம்சிங்
இயக்கினார் !
" அத்தை மடி மெத்தையடி "
மகிழ்ச்சி :
http://www.mediafire.com/listen/mvhdlmbb6q37wu2/Karpagam-1963_-_Athai_Madi_Methaiyadi-PS-Vaali.mp3
" அத்தை மடி மெத்தையடி "
இன்னொன்று :
http://www.mediafire.com/listen/psv2c4j64mf4toq/Karpagam-1963_-_Athai_Madi_Methaiyadi(Sad)-PS-Vaali.mp3
2 . " மன்னவனே அழலாமா , கண்ணீரை விடலாமா ! "
" முதலில் ஒரு பாட்டு " என்று வாலியிடம்
' சும்மாங்காட்டி '
சொன்ன கே. எஸ். ஜி , இப்போது சப்பு கொட்டினார்.....அத்தான் ...
' ஜொள்ளிட்டார் ' !
' இந்த வாலிக்கு இன்னொரு பாடலைக் கொடுத்தால் என்ன ? "
என்று எண்ண ஆரம்பித்தார் !
" கருவாட்டைத்தான் கூவி விற்க வேண்டும் !
சந்தனத்தை அப்படி விற்க வேண்டியதில்லை ! '
தானாக விற்பனை ஆகிவிடும் !
வாலியின் நிலைமை இப்படித்தான் !
" ஹலோ வாலி !
இதோ இன்னொரு பாட்டுக்கான ' சிட்டுவேஷன்! '
" இளம் மனைவியை சதி வேலையால் இழந்த கணவன்,
இன்னொரு பெண்ணை விருப்பம் இல்லாமல் மணந்து
கொள்கிறான் ....ஆனால் அவளை அவன் மணந்த பின்னரும்
அவளை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான்.......
தன் முதல் மனைவியின் நினைவுடனேயே இருக்கின்றான்.
அவனை, அந்த முதல் மனைவி நேரில் வந்து பாடினால்
அந்த பாடலை நீங்கள் எப்படி எழுதுவீர்கள் ? "
' கிடுக்குப் பிடி' போட்டார் கே. எஸ். ஜி, வாலையைப் பார்த்து !
வாலி சற்று யோசித்து எழுத ஆரம்பித்தார் :
" மன்னவனே அழலாமா ! கண்ணீரை விடலாமா "
கே. எஸ். ஜி மகிழ்ச்சி அடைந்தார்......
ஆனால் வாலியின் இந்த வரிகளில் கே. எஸ். ஜி பரவசம்
அடைந்தார் :
" என் உடலில் ஆசை இருந்தால் என்னை நீ மறந்து விடு !
என் உயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ் விடு ! "
கூடவே மெல்லிசை மன்னர்களின் இசையிலும் ,, காமரா மேதை
கர்ணனின் ஒளிப்பதிவும் அந்த பாடல் வரிகளை உயரத்தில் தூக்கி
வைத்தன !
பாடல் :
http://www.mediafire.com/listen/zy7y4r5ze6y5og7/Karpagam-1963_-_Mannavane-PS-Vaali.mp3
####################################################
3. " ஆயிரம் இரவுகள் வருவதுண்டு !
ஆனால் இதுதான் முதல் இரவு ! "
ஆனால் இதுதான் முதல் இரவு ! "
இயக்குனர் திலகத்திற்கு இப்போது வாலியை இலேசில்
வீட மனம் வரவில்லை !
அடுத்த பாடலுக்கு ' சிட்டுவேஷ' ஐ சொல்லிவிட்டார் !
" கல்யாணம் ஆகி, முதல் இரவுக்கு கிளம்பும் தன்
தோழிக்கு, கல்யாணம் ஆகாத பருவப் பெண் எப்படி
அவளை வாழ்த்திப் பாடி வழி அனுப்புவாள் ? "
வாலி எப்படி பாடலை எழுதினார் ?
வாலி, " ஆயிரம் இரவுகள் " பாடலை
முழுமையாக எழுதவில்லை !
பின்னே ?
அறைகுறையாக சொற்களை சரியாக நிரப்பாமல் :
FILL - UP THE BLANKS
முரையில் எழுதிவிட்டார் !
எப்படி ?
முழுமையாக எழுதவில்லை !
பின்னே ?
அறைகுறையாக சொற்களை சரியாக நிரப்பாமல் :
FILL - UP THE BLANKS
முரையில் எழுதிவிட்டார் !
எப்படி ?
தோழி பாடுகின்றாள் :
" வயதில் வருவது ஏக்கம் !
அது வந்தால் வராதது ------------- ! "
" வந்தது மாமலர் கட்டில் !
இனி வீட்டினில் ஆடிடும் ----------------- ! "
" வருவார் வருவார் பக்கம் !
உனக்கு வருமே வருமே __________________ ! "
" தருவார் தருவார் நித்தம்
இதழ் தித்திக்க தித்திக்க ___________________ ! "
அது வந்தால் வராதது ------------- ! "
" வந்தது மாமலர் கட்டில் !
இனி வீட்டினில் ஆடிடும் ----------------- ! "
" வருவார் வருவார் பக்கம் !
உனக்கு வருமே வருமே __________________ ! "
" தருவார் தருவார் நித்தம்
இதழ் தித்திக்க தித்திக்க ___________________ ! "
கல்யாணம் ஆகாத கன்னி , முதல் இரவைப் பற்றி
" BOLD " ஆக , தைரியமாக பாடத்தயங்கித்தான் இந்த :
" கோடிட்ட இடங்களை நிரப்பும் "
பாடல் !
அப்புறம் ?
அப்புறம் என்ன......
தியேடரில் இந்த பாடலை திரையில் வரும்போது மக்கள்
" கோடிட்ட இடங்களை நிரப்பினார்கள் ! "
" தூக்கம் "
" தொட்டில் "
" வெட்கம் "
" முத்தம் "
என்று ஒரே ஆரவாரம்.....ஆரவாரம் !
இறுதியில் பாடலை அந்த பெண் பாடுவதாக இப்படி
எழுதுகிறார் :
" யாரோ சொன்னார் கேட்டேன் - நான் கேட்டதை
உன்னிடம் சொன்னேன் !
நானோ சொன்னது பாதி !
இனி தானாய் தெரியும் மீதி ! "
இந்த பாடல் ஹிட் ஆனதுதான் உங்களுக்குத் தெரியுமே !
பாடல் :http://www.mediafire.com/listen/wlcjugb68z94gk9/Karpagam-1963_-_Aayiram_Iravugal-PS-Vaali.mp3
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
4 . " பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்,
பார்வையிலே படம் புடிச்சாம் ! "
பார்வையிலே படம் புடிச்சாம் ! "
இந்த பாடலும் வாலி எழுதிய பாடல்தான் !
பாடலைப் பாடியவரும் பி. சுசீலா அம்மாதான் !
பாடலின் இசை மெல்லிசை மன்னர்கள்தான் !
ஆனால்...............................
இந்த பாடல் ( முதலில் ) இடம் பெற்றது :
" கற்பகம் " படத்தில் அல்ல !
' பின்னே எந்த படத்தில் ஐயா இந்த பாடல் இசையமைக்கப் பட்டது ? "
என்றா கேட்கிறீர்கள் ?
சொல்றேன் !
இந்த பாடல் முதலில் கே. எஸ்.ஜி , ' கற்பகம் " படத்தை அடுத்து
இயக்கி வெளிவந்த :
" கை கொடுத்த தெய்வம் " ( 1965 )
படத்திற்காக பாடப் பட்டது !
" எப்படி ஐயா இதனை சொல்கிறீர்கள் !
ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ? "
என்றா கேட்கிறீர்கள் ?
" ஆதாரம் இல்லாத சாந்தாராமா ! "
இந்த பாடலில் இடம் பெற்ற இந்த வரிகளை படியுங்கள் :
" யமுனையிலே வெள்ளம் இல்லை.....
விடியும் வரை கதை படிச்சான் ? "
" கற்பகம் " படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரம் பாடுவதாக
அமைந்த இந்த பாட்டில்:
" வட நாட்டில் பாயும் யமுனை நதி எங்கே வந்தது ? "
சொல்லுங்கய்யா !
" காவேரியில் வெள்ளம் இல்லை "
அல்லது
" தாமிரபரணியில் வெள்ளம் இல்லை ! "
என்று ஏன் வரவில்லை ?
ஏன் யமுனை ?
சொல்றேன் !
" கை கொடுத்த தெய்வம் " படத்தில் கே. ஆர் . விஜயா பாடுவதகத்தான்
இந்த பாடல் இசையமைக்கப் பட்டது !
கே. ஆர். விஜாயா வின் கதாபாத்திரம் ' கை கொடுத்த தெய்வம் '
படத்தில்ல் வட இந்தியாவில் உள்ள பாட்னா அல்லது வேறு ஊரில்
வசிப்பதாக வருகிறது !
எனவே வட இந்தியாவில் வசிக்கும் கே. ஆர். விஜயா இந்த
பாட்டை பாடுவதற்கு ஏற்ப :
" யமுனையிலே வெள்ளம் இல்லை ! "
என்கிற வரியை வாலி எழுதியுள்ளார் !
சரியா ?
இன்னொன்று :
இந்த பாடலை ' கற்பகம் ' படத்தில் பாடும் சாவித்திரி ஏற்றுக்கொண்டு நடிக்கும்
கண்ணியமான பாத்திரத்தை களங்கப் படுத்துவதைப் போன்று
அமைந்துள்ளதாக, படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள், தங்கள்
அதிருப்தியைத் தெரிவித்தது என்பது உண்மை !
அதற்கு இயக்குனர் கே. எஸ். ஜி , எந்த விதமான விளக்கமும் அப்போது
சொல்ல்லவில்லை என்பதும் உண்மை !
ஆனால் , துடுக்குத்தனமான பாத்திரத்தை ஏற்று வித்தியாசமாக நடித்த
' கை கொடுத்த தெய்வம் ' கே. ஆர். விஜாவுக்கு இந்த பாடல் சரியாக
பொருந்துகிறது என்பதும் உண்மை !
ஆனாலும் இந்த பாடலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு !
" கற்பகம் " படத்தின் 100 வது நாள் வெற்றி விழாவுக்கு கண்ணதாசன் அவர்கள்
அழைக்கப்பாட்டார்.
அப்போது மேடையில் பேசிய பிரபல தயாரிப்பாளர் :
சின்ன அண்ணாமலை
இடது ஓரத்தில்
" ஸ்மால் " ( ! ) அண்ணாமலை !
கண்ணதாசனை புகழ்ந்து பேசும் ஆசையில் வாலியை இப்படி
பேசி விட்டார் !
என்ன பேசினார் :
" சில சமயங்களில் குதிரைப் பந்தயத்தில் " நோஞ்சான் குதிரை "
கூட எப்படியோ மூக்கை நுழைத்து ஜெயித்து விடுகிறது ! "
ஆனால், பின்னர் பேச வந்த கவிஞர் கண்ணதாசன் , சின்ன அண்ணாமலையின்
பேச்சை கண்டித்தார் !
வாலியை பாராட்டினார் !
கண்ணதாசன் சொன்னார் :
" வாலி மிகச் சிறந்த கவிஞர், இதில் சந்தேகமே இல்லை !
இதோ, அவர் " கற்பகம் " படத்தில் எழுதியுள்ள ஒரு பாடல் :
" பக்கத்து வீட்டு பருவ மச்சான் "
இந்த பாடலில் வாலி எழுதியுள்ள ஒரு வரியினைப் படியுங்கள் :
" மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான் ! "
இந்த வரிகள் ஒன்றே போதும் அவர் ஒரு சிறந்த கவிஞர்
என்பதை நிரூபிக்க ! "
என்று சொன்னாராம் !
" கற்பகம் " படத்தின் 100 வது நாள் வெற்றி விழாவுக்கு கண்ணதாசன் அவர்கள்
அழைக்கப்பாட்டார்.
அப்போது மேடையில் பேசிய பிரபல தயாரிப்பாளர் :
சின்ன அண்ணாமலை
இடது ஓரத்தில்
" ஸ்மால் " ( ! ) அண்ணாமலை !
கண்ணதாசனை புகழ்ந்து பேசும் ஆசையில் வாலியை இப்படி
பேசி விட்டார் !
என்ன பேசினார் :
" சில சமயங்களில் குதிரைப் பந்தயத்தில் " நோஞ்சான் குதிரை "
கூட எப்படியோ மூக்கை நுழைத்து ஜெயித்து விடுகிறது ! "
ஆனால், பின்னர் பேச வந்த கவிஞர் கண்ணதாசன் , சின்ன அண்ணாமலையின்
பேச்சை கண்டித்தார் !
வாலியை பாராட்டினார் !
கண்ணதாசன் சொன்னார் :
" வாலி மிகச் சிறந்த கவிஞர், இதில் சந்தேகமே இல்லை !
இதோ, அவர் " கற்பகம் " படத்தில் எழுதியுள்ள ஒரு பாடல் :
" பக்கத்து வீட்டு பருவ மச்சான் "
இந்த பாடலில் வாலி எழுதியுள்ள ஒரு வரியினைப் படியுங்கள் :
" மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான் ! "
இந்த வரிகள் ஒன்றே போதும் அவர் ஒரு சிறந்த கவிஞர்
என்பதை நிரூபிக்க ! "
என்று சொன்னாராம் !
http://www.mediafire.com/listen/acnls24502yx0bz/Karpagam-1963_-_Pakkathu_Veettu_Paruva_Machaan-PS-Vaali.mp3
" எம். எஸ். வி யை சந்திப்பதற்கு முன்னர்
எனக்கு சோற்றுக்கு வழி இல்லை !
அவரை சந்தித்த பிறகு
எனக்கு சோறு திங்க நேரம்மில்லை ! "
---- கவிஞர் வாலி !
எனக்கு சோற்றுக்கு வழி இல்லை !
அவரை சந்தித்த பிறகு
எனக்கு சோறு திங்க நேரம்மில்லை ! "
---- கவிஞர் வாலி !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அடுத்து :
" நாயகன் "
உருவான கதை !
" நாயகன் "
உருவான கதை !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
நன்றி
எம்கேஆர்சாந்தாராம் அவர்களே ! மிக மிகப் பயனுள்ள - உயிரோட்டமான செய்திகள் உங்களுடையவை !
எவ்வளவு பாராட்டினாலும் தகும் !
எம்கேஆர்சாந்தாராம் அவர்களே ! மிக மிகப் பயனுள்ள - உயிரோட்டமான செய்திகள் உங்களுடையவை !
எவ்வளவு பாராட்டினாலும் தகும் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 15 of 26 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 26
Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
Page 15 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|