ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

+30
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
Namasivayam Mu
T.N.Balasubramanian
shobana sahas
mbalasaravanan
சிவனாசான்
M.Saranya
veegopalji
ஸ்ரீரங்கா
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
rksivam
ayyasamy ram
anaamigan
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
moganan
udayarr
Jothiram
veeyaar
vasudevan31355
chittibabu
pon.sellamuththu
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
விஸ்வாஜீ
mkrsantharam
34 posters

Page 12 of 26 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 19 ... 26  Next

Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 Empty பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by veegopalji Tue Sep 09, 2014 8:02 pm

குலேபகாவலி படத்தில் இடம் பெற்ற "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ" பாடலை திரையிசைத் திலகம்
கே வி மகாதேவன் பாகேஸ்வரி ராகத்தில் அமைத்திருப்பார். இந்த ராகத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களுமே உள்ளத்தைத் தொடும். உதாரணத்திற்குச் சில - நிலவே என்னிடம் நெருங்காதே [ராமு - எம் எஸ் விஸ்வநாதன் ], கானா இன்பம் கனிந்ததேனோ [சபாஷ் மீனா - டி ஜி லிங்கப்பா], கலையே என் வாழ்க்கையின் [மீண்ட சொர்க்கம் - ஏ எம் ராஜா], கொலுசே கொலுசே [பெண் புத்தி - சந்திரபோஸ்] மற்றும் வெண்ணிலவே வெண்ணிலவே [மின்சார கனவு - ஏ ஆர் ரஹ்மான்]. இந்தப் பாடல்களில் சில இடங்களில் பிற ராகங்களின் இழையையும் சேர்த்து இசையமைக்கும் போது அதன் விளைவே அற்புதமாக இருக்கும். இந்தப் பாடல்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி பாடல் ஒன்று ஹிந்தியில் உள்ளது. அதுதான் சி ராமச்சந்திரா இசையமைத்த அனார்கலி திரைப்படத்தில் ஹேமந்த் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் பாடிய
ஜாக் தர்த் எ இஷ்கே ஜாக்" என்ற அற்புதமான பாடல். இந்தப் பாடலைத் தழுவியே கேவிஎம் "மயக்கும் மாலை பொழுதே" பாடலை இசையமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். உங்களுடைய விபரமான கட்டுரைகள் அற்புதம்! இதற்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்டு செய்திகளைச் சேகரித்து எழுதியிருப்பதைப்
படிக்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் !
veegopalji
veegopalji
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 01/07/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் Wed Sep 10, 2014 8:15 am

வீகோபால்ஜி சார், உங்களது இந்த சிறப்பான விளக்கத்திற்கு மிக்க நன்றி, நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களையும் இங்கு தரலாம அல்லது அதற்கான லிங்காவது தாருங்கள்.




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by M.Saranya Wed Sep 10, 2014 2:15 pm

அருமையான பதிவு
நன்றி ஐயா


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Thu Sep 11, 2014 8:15 am

ராஜா wrote:பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 3838410834  படிக்க ஆரம்பித்தவுடன் நிறுத்தமுடியவில்லை , முழு பகுதியையும் படித்துவிட்டு தான்  அலுவலகத்தில் ஒரு சில தொலைபேசி அழைப்புகளை எடுத்தேன்.

இடையில் டிஎம்எஸ் ஐயாவை பார்த்ததும் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது .... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1085599





   அன்பு மிக்க திரு . ராஜா சார் !   தங்களின் மடலுக்கு

மிக்க நன்றி !

நான் டி எம் எஸ் அவர்களை பல முறை சந்தித்து பேசி

உள்ளேன், ஒவ்வொரு  தடவையும் அவர் உற்சாகத்துடன்

பேசுவார். பாட்டு என்றாலே அவர் உற்சாகம் அடைந்து விடுவார் !

மிக மிக சுவையாக பேசுவார் - சில சமயங்களில் :

"  Off  The  Record "

ஆக பேசுவார், " வெளியே சொல்லாதே "

என்கிற எச்சரிக்கையோடு !

அவரது பாடல்களைப் பொருத்தவரை எதைப் பற்றி

பேசினாலும் விளக்கம் சொல்லுவார் - நாம் குறுக்கே பேசினாலும்

அதனை பொருட்படுத்த மாட்டார் !


விரைவில் அவரது சந்திப்புக்களை நேரம் வரும் போது

நிச்சயம் எழுதுகிறேன் !

அவரது பேச்சுக்களை நான் எழுதுவதை நீங்கள் படித்தால்,

அவரின் பேச்சின் சுவையை படித்து இன்புறுவீர்கள் !


டி எம் எஸ் அவர்கள் பேசியதை வீடியோ படங்களாகக்

கூட தருகிறேன்.


நன்றி, ராஜா சார் !





எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by ராஜா Thu Sep 11, 2014 11:35 am

மிக்க நன்றி ஐயா , நேரம் கிடைக்கும் பொது டிஎம்எஸ் ஐயாவை சந்தித்த சுவராஸ்யமான தகவல்களை பகிருங்கள்  ஆவலுடன் இருக்கிறோம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Thu Sep 11, 2014 4:31 pm

மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர் ஐயா,  உங்களது இத்தொடர் மேலும் மேலும் வளர வேண்டும். என்னைப் போல பலருக்கு  தெரியாத செய்திகளை தந்து வரும் உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. பாராட்டை விரும்பாத உங்களை பாராட்டித் தான் ஆக வேண்டும். பழம்பாடல் விரும்பிகளுக்கு இது போய் சேர வேண்டிய  சிறந்த தகவல்.  நன்றி டாக்டர் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1085624




தங்களின் மடலுக்கு நன்றிகள் பல , திரு.

மாணிக்கம் நடேசன் அவர்களே !

பழைய திரைப் படப் பாடல்களை நாம் மற்க்கக் கூடாது

என்பது மட்டும் அல்ல, அவை நம் அடுத்த தலை முறைகளுக்கு

அவைகளை கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்கிற

எண்னமும் எனக்கு உள்ளது !

தொடர்ந்து படியுங்கள் !





எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Fri Sep 12, 2014 7:59 am

veegopalji wrote:டியர் டாக்டர் சார்:  எதிர் நீச்சல் திரைப்படத்தில் வரும் "என்னம்மா பொன்னம்மா" பாடலை இசைமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்றும் வி குமார் அல்ல என்றும் எதை வைத்துச்
சொல்கிறீர்கள்?  மெல்லிசை மன்னர் ஏதாவது பேட்டியில் அப்படிச் சொன்னாரா அல்லது அந்தப்
பாடலின் இசையமைப்பை வைத்து நீங்களாக அனுமானம் செய்ததா...?   எனக்குத் தெரிந்த வரையில்
அந்தப் பாடலையும் இசையமைத்தது வி குமார்தான் என்று தோன்றுகிறது.  காரணம்,  அந்தப் பாடலில்
வரும் தாள சங்கதிகள் மற்றும் பின்னணி இசையில் மெல்லிசை மன்னர்களின் ஸ்டைல் இல்லவே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1086022






   அன்புள்ள திரு . கோபால்ஜி  அவர்களுக்கு ,


' மெல்லிசை மாமணி ' திரு . வி. குமாரின்  சில  பாடல்களைக் கேட்டால்

அசல் மெல்லிசை மன்னரின் பாடலைப் போன்றே நினைக்கத்

தோன்றும் !

வி . குமார் அவர்களின் திறமை அந்த மாதிரியான உயர்ந்த

  திறமை  கொண்டது !  




கீழ் காணும் பாடல்களைக் கேட்டாலே உங்களுக்கு புரிந்து விடும் ,

கீழ் காணும் இந்த பாடல்கள் அசல் மெல்லிசை மன்னர் இசையமைத்த

பாடல்கள் மாதிரியே தோன்றும் , ஆனால் .....


அவை :



" மெல்லிசை மாமணி " வி. குமார் அவர்கள் இசையமைத்தவை !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 Rmw6zCytQNqysx7MG9KY+download








1. " நேற்று நீ  சின்ன பப்பா ! இன்று நீ அப்பப்பா ! "


' மேஜர் சந்திரகாந்த் ' ( 1965 )   - டி எம் எஸ் - சுசீலா





http://picosong.com/9ள்ட்Q






   

      2. " ஒரு  நாள் வருவாள் மம்மி ,  வாழ்ந்திருப்போம் அதை நம்பி ,

அன்னையின் வடிவம் மம்மி மம்மி ! "



" வெள்ளி விழா "   - டி . எம் எஸ் - சுசீலா

http://picosong.com/9Laj






3. " என்னதான் பாடுவதோ , நான் எப்படித்தான் ஆடுவதோ ! "


" நாணல் "   - பி . சுசீலா


http://picosong.com/9LU4






4. " முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ ! "


டி. எம் எஸ் - ஸ்வர்ணா ( திருமதி . வி. குமார் )


" புத்திசாலிகள் " ( 1968 )



http://picosong.com/9LHR







வி . குமார் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுத எனக்கு ஆசை !

பிறகு எழுதுகிறேன் ![  b]  [/b]




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





   " எதிர் நீச்சல் " (  1968 )  படத்திற்கு இசையமைத்தவர்

வி. குமார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் .


ஆனால் :


" என்னம்மா பொன்னம்மா "


பாடலுக்கு இசையமைத்தவர் :


மெல்லிசை மன்னர்தான் !


( நான் ' மெல்லிசை மெல்லிசை மன்னர் ' என்று எழுதுவதற்கு

பதிலாக " மெல்லிசை மன்னர்கள் ' என்று எழுதிவிட்டேன் - அவர்களின்

படத்தைப் போடுவதற்காக ! )



     ஆதாராம் :






" எதிர் நீச்சல் "  படத்தின் " டைட்டில் " ஐப் பார்த்தாலே

விளங்கும் :








 அந்த  " டைட்டில் "  இல்  முதலில் :



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 HclI844lSOdhVCOLzCf2+DSC07814






என்று வரும் !



பின்பு அடுத்த  " கார்ட் " இல்  இப்படி வரும் :



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 GF0xc881TWWitKFkk9SY+DSC07813







எதையும் ஆதாரம் இல்லாமல் கொடுத்து நான் சார்ந்திருக்கும்

இணைய தளத்திற்கு  களங்கம் செய்ய எனக்கு மனம் வராது !

அப்படி தெரியாமல் நான் தவறு செய்தாலும் அதனை உணர்ந்து

பிறகு மன்னிப்பும் கேட்க தயங்க மாட்டேன் !




மிக்க நன்றி , திரு. கோபால்ஜி சார் !









எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 12, 2014 11:39 am

அன்புள்ள டாக்டர் ஐயா,  புத்திசாலிகள் - முத்தம் முத்தம் பாடலுக்கு மிக்க  நன்றி  பல ஆண்டுகளாக இப்பாடலை பல தளங்களில் தேடினேன்,  நல்ல தரத்தில் நீங்கள் தந்து விட்டீர்கள். நன்றிகள் பல டாக்டர் ஐயா. கிடைக்காத புதையல்களை தரும் ஈகரைக்கும் எனது நன்றி,
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Tue Sep 16, 2014 5:25 pm

veegopalji wrote:குலேபகாவலி படத்தில் இடம் பெற்ற "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ" பாடலை  திரையிசைத் திலகம்
கே வி மகாதேவன் பாகேஸ்வரி ராகத்தில் அமைத்திருப்பார்.  இந்த ராகத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களுமே உள்ளத்தைத் தொடும்.  உதாரணத்திற்குச் சில  - நிலவே என்னிடம் நெருங்காதே [ராமு - எம் எஸ் விஸ்வநாதன் ], கானா இன்பம் கனிந்ததேனோ [சபாஷ் மீனா - டி ஜி லிங்கப்பா], கலையே என் வாழ்க்கையின் [மீண்ட சொர்க்கம் - ஏ எம் ராஜா], கொலுசே கொலுசே [பெண் புத்தி - சந்திரபோஸ்]  மற்றும் வெண்ணிலவே வெண்ணிலவே [மின்சார கனவு - ஏ ஆர் ரஹ்மான்].  இந்தப் பாடல்களில் சில இடங்களில் பிற ராகங்களின் இழையையும் சேர்த்து இசையமைக்கும் போது அதன் விளைவே அற்புதமாக இருக்கும்.  இந்தப் பாடல்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி பாடல் ஒன்று ஹிந்தியில் உள்ளது.  அதுதான் சி ராமச்சந்திரா இசையமைத்த அனார்கலி திரைப்படத்தில் ஹேமந்த் குமார்  மற்றும் லதா மங்கேஷ்கர் பாடிய
ஜாக் தர்த் எ இஷ்கே ஜாக்" என்ற அற்புதமான பாடல்.  இந்தப் பாடலைத் தழுவியே கேவிஎம் "மயக்கும் மாலை பொழுதே" பாடலை இசையமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.   உங்களுடைய விபரமான கட்டுரைகள் அற்புதம்!  இதற்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்டு செய்திகளைச் சேகரித்து எழுதியிருப்பதைப்
படிக்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.  வாழ்த்துக்கள் !  
மேற்கோள் செய்த பதிவு: 1086042



   திரு. மாணிக்கம் நடேசன்


















 

 அன்புள்ள திரு. மாணிக்கம் நடேசன் ,


திரு . கோபால்ஜி  சார்பாக அந்த பாடல்களை நான்

தரலாம் இல்லையா ?



இதோ :





1. " காணா இன்பம் கனிந்ததேனோ "


" சபாஷ் மீன "    டி . எ  . மோதி - சுசீலா


இசை : டி . ஜி . லிங்கப்பா :


http://picosong.com/9mdL







2. " நிலவே என்னிடம் நெருங்காதே "

" ராமு " - பி பி எஸ் -  மெல்லிசை மன்னர்









http://picosong.com/9mrU




 
   

  3. " கலையே என் வாழ்க்கையில் திசை மாற்றினாய் "


ஏ எம் ராஜா  , " மீண்ட சொர்க்கம் "

இசை : டி . சலபதி ராவ்

( ஏ எம் ராஜா அல்ல )








http://picosong.com/9mU8





     4. " கொலுசு கொலுசு "


படம் : " பெண் புத்தி முன் புத்தி "



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 GfOOzfVXQzqKxuwWYAmP+untitled



( வெறும் " பெண் புத்தி " அல்ல ! )

எஸ் பி பி - ஷைலஜா

இசை : சந்திரபோஸ்


http://picosong.com/9mdG






5 . " வெண்ணிலவே வெண்ணிலவே "

" மின்சார கனவு "

ஹரிஹரன் - சாதனா - ஏ ஆர் ரகுமான்




http://picosong.com/9mGW





   

  இந்த மாதிரி பாடல்களுக்கு

முன்னோடி :



" ஜாகி தக ஏக "


படம் :  " அனார்கலி " ( 1953 )  - இந்தி


பாடியவர்கள் : ஹேமந்த் குமார் - லதா மங்க்கேச்க்கர்

இசை : சி . ராமசந்திரா








பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 F191ehgBT46J0a5K8icL+3113c4dc7798b83d748f80a69a6f8190_m


http://picosong.com/9mUb



எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam Mon Sep 22, 2014 8:18 am

      " சாந்தி "  ( 1965 ) - திரைப்படம் :

பின்னோட்டம் !  




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 NrzgVnJQcyODKJEbaXQQ+sddefault




   " சாந்தி " திரைப்படத்தின்

முடிவு - அத்தான் - ' கிளைமாக்ஸ் ' எப்படி ?  




 

   தன் உயிர் நண்பன் எஸ் எஸ் ஆர் இன்

கண் பார்வை இல்லாத மனைவிக்கு கணவன் ஆக நடிக்க

( கதையில் )   சிவாஜி நடிக்க துளி கூட சம்மதம் இல்லை,

அதனால்தான் மனம் உடைந்து " யார் அந்த நிலவு ' "

பாடலை பாடினார் என்று சொன்னேன் அல்லவா !



இந்த  இடைவேளையில்........


தன் உண்மையான கணவன் எஸ் எஸ் ஆர் தானே தவிர , சிவாஜி

கணேசன் அல்ல என்பதை விஜயகுமாரி , தேவிகா மூலம் ( என்று

நினைக்கிறேன் )  அறிகிறார்.....துடிதுடித்துப் போகிறார்.



இந்த ' கேப்' இல் , தான் இறந்து விட்டதாக அனைவரும் எண்ணி விட்ட

நிலையில்தான் , தன் மனைவி விஜயகுமாரி , சிவாஜி கணேசனை

மணந்து கொண்டிருக்கக்  கூடும் என்கிற யூகத்தில்  அவர்களிடம்

இருந்து எஸ் எஸ் ஆர் பிரிந்து சென்றுவிடுகிறார்.


உண்மையை முழுவதும் அறிந்த விஜயகுமாரி, தன் கணவனாக

சிவாஜி கணேசன் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும்

அறிந்து துடித்துப் போகிறார்.


முடிவு ?


என்ன பண்றது.....யாராவது மண்டையைப் போட்டால்தானே

படம் முடியும் !


விஜயகுமாரி கடலில் ஓடிப்போய் மூழ்கி  இறந்து விடுகிறார்,

இதனை அறிந்து எஸ் எஸ் ஆரும் அப்படியே கடலில் மூழ்கி

இறந்து போய்விடுகிறார் .



சிவாஜியும் , தேவிகா வும் மீண்டும் இணைகிறார்கள் !






&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




" சாந்தி " திரைப்படம்

தணிக்கையில் சிக்கி பின்னர்

வெளியான  ' கதை!'







குடும்ப உறவில் சிக்கல் !





1. விழிகளை இழந்த ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுகிறான்

ஒருவன் - அவள் விழிகளை இழந்தவள் என்பதை தெரியாமல் !



2. கணவன்  இறந்து விட்டதால் அவருக்குப் பதில் வேறு  ஒருவன்

கணவன் ஆக அந்த பெண்ணிடம் நடித்துக் கொண்டிருக்கிறான் !



 " சாந்தி " திரைப்படத்தின் மையக் கருத்தான :


" குடும்ப உறவு சிக்கல் ' ஐ

ஏற்கமுடியாது என்று தணிக்கைத் துறை அனுமதி மறுக்கப்பட்டு

...விளைவு....

படத்தை தடை செய்து விட்டார்கள் !


1965 ஆம் ஆண்டில்  உச்சத்தில் இருக்கும் 'சூபர் ஸ்டார்'

சிவாஜி கணேசன் படத்திற்கு தடை என்றால் சும்மாவா !

கோபத்தின் உச்சிக்கே போனார்கள் சிவாஜி ரசிகர்கள் !

எப்படி ?

எனக்குத் தெரியாது, ஸ்வாமி, திரு. வியார் மற்றும் திரு.

வாசுதேவன் போன்ற  சிவாஜி ரசிகர்களைத் தான்

கேட்கவேண்டும் !


பணத்தை வாரி இறைத்து படத்தைத் தயாரித்த ஏ எல் ஸ்ரீனிவாசன்

அதிர்ச்சி அடைந்தார் !


படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் தலையில் கை

வைத்துக் கொண்டார்கள் !



படத்தை மறுபடியும் தணிக்கைக்குச் சென்று படத்தை " வெளி" க்

கொண்டு முயற்சி எடுத்தார்கள்......

வேலைக்கு ஆகவில்லை !


விஷயம் சிவாஜி கணேசன் காதுளுக்குச் சென்றது !

ஏ எல் எஸ் வும்  சிவாஜியும் ' உட்கார்ந்து '  பேசினார்கள் !


ஒரு முடிவுக்கு வந்தனர் !


என்ன முடிவு ?



படத்தை பெருந்தலைவர் காமராஜ் அவர்களுக்கு போட்டுக்

காட்டலாம் என்பதுதான் அந்த முடிவு !



 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 E8FvfZ0gRK2DCNfofZp4+wKamaraj01B





காமராஜ் , திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கம் உள்ளதா ?


உள்ளது !


" ஏழைப்பங்காளன் " ( 1963 )  - இந்த படத்தில் :

ஜெமினி கணேசன் மற்றும் ராகினி நடித்தது.

இந்த படத்தைத் தயாரித்தவர் ஒரு காங்கிரஸ் அபிமானி,

" ஏழைப் பங்காளன் "  என்கிற பெயரையே அவர் , கர்ம வீரர் காமராஜ்

ஐ மனதிற்கொண்டே  வைத்தாராம் !

" ஏழைப் பங்காளன் " படத்தை எடுத்த அவர் , அந்த படத்தைப் பார்க்க

வருமாறு காமராஜ் அவர்களை

' வலிச்சிக்குனு' - அத்தான்- இழுத்துக் கொண்டு ( ! )

வந்தாராம் !


" எழைப் பங்காளன் ' படத்தைப் பார்த்தார் காமராஜ்

படத்தைப் பார்த்த அவர் வெளியே வந்தார்....

' விடு விடு/ என்று நடந்தார்....

காரை நோக்கி வந்தார்.....

கார் கதவு திறக்கப் பட்டது....

காரின் உள்ளே செல்ல தயாரானார்.....


" படம் எப்படி இருந்திச்சு, அண்ணாச்சி....ஒண்ணும்

சொல்லாமல் போறீங்களே ? "

- கேட்டவர் தயாரிப்பாளர் !



காமராஜ் அவரை நோக்கினார்.....சொன்னார் :



" அதெல்லாம் நடிக்க வேண்டியவங்க நடிச்சத்தான்

நல்லா இருக்கென்னேன் ! "



காமராஜ் ஏன் அப்படி சொன்னார் ?


" ஏழைப்பங்காளன் " படத்தில் ஜெமினிக்குப் பதில்

எம்ஜிஆர்  நடித்திருந்தால்  நன்றாக

இருந்திருக்கும் என்று காமராஜ் நினைத்தார் ! -




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 5cnyN1TQTCHbrm7ShTpQ+IMG_20131120_194111219


 (  காமராஜ் -  நடிகர் திலகத்துடன் :

ஜே பி சந்திரபாபு  , மெல்லிசை மன்னர் ,

மற்றும் எம்ஜிஆர்  ஆகியோரும்  இங்கே உள்ளனர் !

எம்ஜிஆரின் " என் கடமை ' ஷூட்டிங்க் இல் எடுத்த படம் ? )  




சரி, " சாந்தி " திரைப்படத்தைக் காண காமராஜ்

வந்தார்ரா ?

வந்தார் ! படத்தைப் பார்த்தார் !

படத்தைப் பார்த்துவிட்டு காமராஜ் அடித்த " கம்மெண்ட் " இதுதான் :



" படம் நன்றாகத்தானே இருக்கிறது...

இதற்கு ஏன் தடை விதித்தார்கள் ? "



படத்தயாரிப்பாளர் ஏ எல் ஸ்ரீனிவாசன் பெருமூச்சு விட்டார், கூடவே

நடிகார் திலகமும் கூட !


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 F4johGaTCipJtEnAA6AZ+KamarajarTheKingMaker-VeryRarePhotoCollectionPartIII(7)



   காமராஜ் - சிவாஜி - ஏ. எல். ஸ்ரீநிவாசன் )  





அதன் பின் ?

" சாந்தி " திரைப்படத்திற்கு மறு தணிக்கை நடந்தது !

இறுதியில் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி கொடுத்தார்கள் !


" சாந்தி " திரைப்படம் " சாந்தி " தியேடரிலே வெளியாகி வெற்றி பெற்றது !


குறிப்பு : " சாந்தி " திரைப்படத்தின் கதை வசனத்தை எழுதியவர் :

எம் . எஸ் . சோலைமலை.

( இவர் ' பாவமன்னிப்பு ' , ' பாகபிரிவினை ' படங்களுக்கு கதை

வசனம் எழுதியவர் ! )  






 " ஒருவனுக்கு ஒருத்தி ! "

இது நமது தமிழ்நாட்டில் நிலவியுள்ள தர்மம் .

ஒரு பெண்ணுக்கு தாலி கட்டியவன் மட்டும்தான் கணவன்

ஆக இருக்க முடியும் .

காணாமல் அல்லது இறந்து போன கணவனுக்கு வேறு ஒருவன்

கணவனாக நடிக்க முடியாது., நடிக்கவும் கூடாது  .

அப்படி நடித்தால் அந்த பெண்ணின் கற்புக்கு களங்கம்

ஏற்படுத்தியதற்கு சமம்..


இப்பாடிப்பட்ட தர்மசங்கடமான கதையை படமாக்கி எடுத்ததற்காக

படத்தின் இறுதிக் காட்சியில் :


சீர்காழி கோவிந்தரராஜன் குரலில் :

ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவன் களை காட்டியதற்காக

" மன்னிப்பு "

கேட்கும் பாணீயில் ( ! )   ஒரு பாடலை அமைத்து

படத்தை முடித்திருந்தனர் !


ஆனால் இன்று நம்மை சுற்றியிருக்கும் சமுதாயத்தில்

இந்த படத்தின் கதையை விட மோசமான நிகழ்ச்சிகளை நாம்

தினம் தினம் செய்தித்தாள்களில் படிக்கிறோம் !

இன்றைய தமிழ்த்திரைப்படக் கதைகளிலும் இந்த கதையை விட

மோசமான நிகழ்ச்சிகளை அமைத்து வெளிவருவதை நாம்

காண்கிறோம் !




எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 12 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 26 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 19 ... 26  Next

Back to top

- Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum