Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
+30
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
Namasivayam Mu
T.N.Balasubramanian
shobana sahas
mbalasaravanan
சிவனாசான்
M.Saranya
veegopalji
ஸ்ரீரங்கா
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
rksivam
ayyasamy ram
anaamigan
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
moganan
udayarr
Jothiram
veeyaar
vasudevan31355
chittibabu
pon.sellamuththu
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
விஸ்வாஜீ
mkrsantharam
34 posters
Page 11 of 26
Page 11 of 26 • 1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 26
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
First topic message reminder :
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா !
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
மேற்கோள் செய்த பதிவு: 1085485மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர் ஐயா, உங்களது இந்த தொகுப்பு நன்றாகவே சூசூசூசூடு பிடிகிறது, படித்து முடித்து, பதிவும் செய்துக் கொண்டேன். மிக்க நன்றி டாக்டர் ஐயா. அருமையான இத்தொடரை தொடருங்கள்.
அன்பு மிக்க திரு . மாணிக்க நடேசன் அவர்களுக்கு ,
என்ன மாதிரியான ' எக்ஸ்பிரஸ் ' வேகத்தில் பதில் கடிதம்
போடுகிறீர்கள் !
அபாரம் !
மொத்தம் உள்ள 4 பகுதிகளில் 2 பகுதிகள் மட்டும் தான் இப்போது
கொடுத்துள்ளேன் !
இன்னும் 2 பகுதிகள் தருவதற்குள் ......உடனே மடல்
போட்டு விட்டிர்கள் !
நன்றி !
இதோ ! மிச்சம் உள்ள 2 பகுதிகள் !
முழுவதும் படித்துவிட்டு மடல் எழுதுங்கள் !
நன்றி !
எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
நன்றி டாக்டர் ஐயா, உங்களது வரிகளில் வைரம், எழுத்துகளில் ஏற்றம். படிக்க படிக்க பரவசம், ஒளி விளக்காக ரம்மிய வார்த்தைகள், தொகுப்புக்கு துணையாக படங்கள், பிரமாதம் டாக்டர் ஐயா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
' யார் இந்த நிலவு '
பாடலுக்கு நடித்தவர் :
நடிகர் திலகம் :
[/center]
' யார் இந்த நிலவு ' பாடலைக் கேட்டார் நடிகர் திலகம் .
யோசனையில் ஆழ்ந்தார் !
" இந்த பாடலுக்கான படப்பிடிப்பை எப்போ வெச்சிக்கலாம்,
கணேசன் ? '
- கேட்டவர் பீம்பாய் !
( " பீம் பாய் " உடன் சிவாஜி பாய் ! )
இயக்குனர் ஏ. பீம்சிங் ஐ இப்படித்தான் அழைப்பார், நடிகர் திலகம் !
நடிகர் திலகம் பதில் பேசவில்லை !
" நாளைக்கு வைத்துக்கொள்ளலாமா... ? "
- பீம் பாய் !
யோசனையுடன் தலையை ஆட்டிவைத்தார், நடிகர் திலகம் !
மறுநாள் ....எல்லாம் ரெடி !
எப்போதும் முதல் ஆளாக வந்து ஆஜர் ஆகும் நடிகர் திலகம்
வரவில்லை !
பீம்சிங் வியப்படைந்தார் !
' இன்னிக்கு ஷூட்டிங் வேண்டாம், நாளைக்கு
வைத்துக் கொள்ளலாம் ! '
சிவாஜி தரப்பில் இருந்து போன் வந்தது !
இரண்டாம் நாளில் படப்பிடிப்பு ரெடி !
' இன்னிக்கு வேண்டாம் '
- சிவாஜி !
இப்படி பல நாட்கள் நடிகர் திலகம் தலையை ஆட்டி விட்டு,
படப்பிடிப்புக்கு வராமல் அவரே தள்ளிப் போட்டு விட்டார்.
அனைவருக்கும் ஆச்சர்யம் !
ஏன் ?
இதுவரை நடிகர் திலகத்தால் ஒரு படப்பிடிப்பு தள்ளிப் போனதோ
'கான்சல்' ஆனதோ என்று யாரும் குறை சொன்னதே இல்லை !
இப்படியே சில நாட்கள் சிவாஜி கணேசன் இந்த பாடலுக்கு
நடித்துக் கொடுக்க வராமல் 'டேக்கா' கொடுத்து வந்தார் !
ஒரு நாள்......
படப்பிடிப்புக்கு வந்தார், நடிகர் திலகம் !
" யார் அந்த நிலவு " படப் பிடிப்பு நடந்தது.....
மிகப் பிரமாதமாக நடித்து கொடுத்தார் , நடிகர் திலகம் !
பின்பு , தான் இந்த பாடலுக்கான படப்பிடிப்பை தளிப்
போட்டதற்கான காரணத்தை சொன்னார் !
இதோ !
" யார் இந்த நிலவு " பாடலைக் கேட்டேன்,
கவிஞர் அற்புதமாக எழுதிவிட்டார்!
விசு அற்புதமாக 'டியூன்' போட்டார் !
டி எம் எஸ் அற்புதமாக பாடிவிட்டார் !
இப்போ நான் இந்த பாடலில் நடித்துக் காட்டவேண்டும் !
இவர்கள் மூன்று பேர்களையும் நான் ' பீட் ' செய்யவேண்டும் !
பாடல் காட்சியில் நான் நடிக்கும் போது இவர்களை 'பீட் ' பண்ணி
நடக்க வில்லை என்றால் நான் நிற்க முடியாது !
எப்படி இவங்களை மிஞ்சுறதுன்னு வீட்டிலே மண்டையை
உடைச்சுக்கிட்டேன் !
சட்டுன்னு ஒண்ணும் பிடிபடலை !
அதான் இந்த பாட்டுக்கு என்ன ஸ்டைலில் நடிக்கணும் என்று
முடிவு பண்ணும் வரை வேணுடும் என்றுதான் 'ஷூட்டிங்க் ' ஐ
தள்ளிப் போட்டுவிட்டேன் ! "
கவிஞர் அற்புதமாக எழுதிவிட்டார்!
விசு அற்புதமாக 'டியூன்' போட்டார் !
டி எம் எஸ் அற்புதமாக பாடிவிட்டார் !
இப்போ நான் இந்த பாடலில் நடித்துக் காட்டவேண்டும் !
இவர்கள் மூன்று பேர்களையும் நான் ' பீட் ' செய்யவேண்டும் !
பாடல் காட்சியில் நான் நடிக்கும் போது இவர்களை 'பீட் ' பண்ணி
நடக்க வில்லை என்றால் நான் நிற்க முடியாது !
எப்படி இவங்களை மிஞ்சுறதுன்னு வீட்டிலே மண்டையை
உடைச்சுக்கிட்டேன் !
சட்டுன்னு ஒண்ணும் பிடிபடலை !
அதான் இந்த பாட்டுக்கு என்ன ஸ்டைலில் நடிக்கணும் என்று
முடிவு பண்ணும் வரை வேணுடும் என்றுதான் 'ஷூட்டிங்க் ' ஐ
தள்ளிப் போட்டுவிட்டேன் ! "
எல்லோரும் வியப்பால் வாயடைத்து நின்றார்கள் !
ஒரு பாடலாசிரியரையும்,
இசையமைப்பாளர்களையும்,
பாடகரையும்
மிஞ்சிக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு மாபெரும் கலைஞன்
அதைப் பற்றி சில நாட்கள் சிந்தித்து பின்பு நடித்தது என்பது
அன்று நிலவிய :
ஆரோக்கியமான போட்டிக்கு எடுத்துக்காட்டு !
இசையமைப்பாளர்களையும்,
பாடகரையும்
மிஞ்சிக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு மாபெரும் கலைஞன்
அதைப் பற்றி சில நாட்கள் சிந்தித்து பின்பு நடித்தது என்பது
அன்று நிலவிய :
ஆரோக்கியமான போட்டிக்கு எடுத்துக்காட்டு !
மெல்லிசை மன்னர், இந்த பாடல்காட்சியில் நடித்த
நடிகர் திலகத்தைப் பற்றி சொல்கிறார் :
"
நினைச்சா மாதிரியே எங்களை அந்த சீன்லே சிவாஜி 'பீட்'
பண்னிட்டார்னு சொல்லணும் !
வாயிலே ஸ்டைலாக சிகரெட் ஐக் கவ்வி கடைசி வரை
அதை எடுக்காமலேயே .... அதே சமயம் வார்த்தைகளுக்கு
தெளிவாக ' லிப் மூவ்மெண்ட் ' கொடுத்து .....அடடா !
அது சிவாஜி ஒருவரால் முடியும் ! "
பண்னிட்டார்னு சொல்லணும் !
வாயிலே ஸ்டைலாக சிகரெட் ஐக் கவ்வி கடைசி வரை
அதை எடுக்காமலேயே .... அதே சமயம் வார்த்தைகளுக்கு
தெளிவாக ' லிப் மூவ்மெண்ட் ' கொடுத்து .....அடடா !
அது சிவாஜி ஒருவரால் முடியும் ! "
அதனால்தான் இந்த பாடல் இன்று வரை
பேசப்படுகிறது !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
' யார் அந்த நிலவு ? '
பாடல் எப்படி ?
பொதுவாக பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்
களை ' இது சிவாஜி பாடல் ' , ' இது எம்ஜிஆர் பாடல் ',
' இது கண்ணதாசன் பாடல் ' , ' இது வாலி பாடல் '
என்று ' ஆட்களை பிடித்து ' ( ! ) அதற்கேற்ப தரம் பார்த்து
ரசிக்கும் மனோ பாவம் எனக்கு இல்லை !
"அப்போ எப்டி ? "
படியுங்கள் !
1. ' யார் அந்த நிலவு ' பாடலில் முதலில் வரும் இசை :
பியானோ இசை !
இந்த பியானோ இசைக் கருக்கும் , மெல்லிசை மன்னர்களுக்கும்
ஒரு நெருங்கிய ' மாமான் - மச்சான் ' உறவு உண்டு !
எப்டி ?
இவர்களுடைய குருநாதர் சி. ஆர். சுப்புராமனே ஒரு பியானோ
பிரியர் ! அவர் இசையமைத்த அநேக பாடல்களில் சுப்பராமன்
பியானோ வைப் பயன்படுத்தி பாடல்களை இசையமைத்திருப்பதை
நாம் இப்போதும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம் !
மெல்லிசை மன்னர்களும் அதே மாதிரியா பியானோ பிரியர்கள்தான் !
எப்போவும் ஆர்மோனியத்தை பயன்படுத்தி 'டியூன் ' அமைக்கும்
மெல்லிசை மன்னர் சில சமயங்களில் பியானோவை வைத்தும்
டியூன் அமைத்ததுண்டு !
'அன்பே வா ' படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற பாடலான :
" ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் "
பாடலை மெல்லிசை மன்னர் பியானோ வை பயன்படுத்தித்தான்
டியூன் போட்டதாக கவிஞர் வாலி ஒரு புத்தகத்தில் எழுதி
உள்ளார் !
மெல்லிசை மன்னர்கள் பியானோ இசைக் கருவியைப்
பயன்படுத்தி பல நூற்றுக்கணக்கான பாடல்கள் வந்துள்ளன.
எல்லாப் பாடல்களுமே ' மெலடி ' ரகத்தை சேர்ந்தவை - எல்லாமே
உயர்ந்த ரசனையைக் கொண்டவை !
வேறு எந்த இசையமைப்பாளர்கள் யாருமே இவர்கள் பியானோவை
பயன்படுத்திய மாதிரி இத்தனை வகை பாடல்களை இசையமைத்ததே
இல்லை என்றே சொல்லலாம் !
சரி, இவர்கள் ஏன் பியானோ வை பயன்படுத்தி இத்தனை பாடல்களை
இசையமைத்தார்கள் ?
அதெல்லாம் , சிதம்பர ரகசியம் இல்லை.....எல்லாம்
பியானோவின் ரகசியம்தான் !
என்ன ரகசியம் ?
எல்லா விதமான ரசனைகளையும் வெளிப்படுத்தி பாடல்களை
ரசிக்கும்படியும் , இனிமையான தாகவும் வெளிப்படுத்த
பியானோ இசைக்கருவியால் முடியும் என்பதை அவர்கள் தீர்க்கமாக
நம்புவதால் இருக்கலாம் !
சரி , இவர்கள் பியானோவைப் படுத்தி இசையமைத்த
பல பாடல்களில் எனக்கு பிடித்த 10 பாடல்களையும் அந்த பாடல்கள்
ஏன் எனக்கு மிக மிக பிடித்திருக்கின்றது என்பதையும் கீழே
தந்திருக்கிறேன், ......
அந்த 10 பாடல்களையும் நீங்கள் கேட்டு ரசிப்பதற்கும் ' லின்க்'
கொடுத்துள்ளேன் .....' டவுண் லோட் ' செய்து கேட்டு மகிழவும் !
]
1. " என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப்
பார்வையிலே ! "
" வெண்ணிற ஆடை "
ஓர் ஆடவனை மனப்பூர்வமாக காதலிக்கும் ஓர் இளம்பெண் , தன்
பிறந்த நாளில் , தான் காதலிப்பதை பியானோ வாசிக்கும்
அவனே பல பெரியவர்கள் - பெற்றோர்கள் உட்பட - முன்னிலையில்
இலைமறைவு காயாக சொல்லுகின்ற இனிமையான பாடல் !
சுசீலா மற்ற பாடகர்கள் " பீட் " செய்கிறார்களோ இல்லையோ
இந்த பாடலில் பியானோ அவரை மிஞ்சப் பார்க்கும் வகையில்
இசையமைப்பு சுப்பர் !
முக்கியமாக சுசீலா " ஹம்மிங் " கொடுக்கும் போது,
பியானோவும் அவருடன் போட்டி போடுவதை கேட்கவும் !
கொசுறு தகவல் :
இந்த பாடல் காட்சியில் பியானோ வாசிக்கும் விரல்கள்
மெல்லிசை மன்னருடையது !
பாடல் :
http://picosong.com/93yb
[/color]
2 . " பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம்
தொல்லையோ ! " - சோகம் - ' புதிய பறவை ' - பி . சுசீலா .
" பார்த்த ஞாபகம் இல்லையோ ' - சோகம் - இந்த பாடலில் சுசீலா
மட்டுமா பாடுகிறார் ?
கூடவே பியானோ வும் பாடுகிறது !
பாடலின் பாதி பாகுதியை ஆக்கிரமிப்பது இந்த பியானோ இசை
தான் !
அது மட்டுமா, படத்தில் கோபாலுக்கு - அத்தான் - நடிகர் திலகத்தை
மேலும் திகைப்பை ஏற்படுத்த இயக்குனர் தாதா மிராசிக்கு இந்த
பியானோ இசைதானே பயன்படுகிறது !
ஆக, கதையில் திகைப்பையும் விறுவிறுப்பை கூட்டுவதற்கும் பியானோ
பயன்படுகிறது அல்லவா !
பாடல் :
http://picosong.com/9YQG
%%%%%%%%%%%%%%%%%%%%%%5
3. " மனிதன் என்பவன் தெய்வமாகலாம் "
' சுமைதாங்கி ' - பி . பி . எஸ்
இந்த பாடலைக் கேளுங்கள் , தத்துவப் பாடல் - அதிலும் படத்தின்
நாயகனுக்கு வாழ்க்கையில் வேலை கிடைக்காத விரக்தி ---
இவைகளை அந்த பியானோ இசை எவ்வளவு ஆறுதலாக இசையைத்
தருகிறது,கேளுங்கள் !
படத்தில் இந்த பாடல் காட்சியை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அந்த
இரவு நேர மெரினா - எட்வர்ட் எல்ல்லியட்ஸ் - கடற்கரைய்யின் அழகை
இந்த பியானோ இசை அதிகரிக்கின்றது என்பதில் சந்தேகமேஇல்லை !
பாட்டு :
http://picosong.com/93bA
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
4. "அன்று வந்ததும் அதே நிலா,இன்று வந்ததும்
இதே நிலா ! " - மகிழ்ச்சி - ' பெரிய இடத்துப் பெண் " - டி . எம் . எஸ் -
பி. சுசீலா.
சோகத்திற்கே பியானோ பயன்படுகிறது என்றால் காதலுக்கு
கேட்கவா வேண்டும் !
மேற்கத்திய ' ரோமாண்டிக் ' ' மூட்' உடன் ஒரு பாடலை
இசையமைக்க மிகப் பொருத்தமான இசைக் கருவி - பியானோதான் !
பாடல் முழுவதும் டி எம் எஸ் - சுசீலா வுடன் முழுவதும் பியானோ
இசை வியாபித்து உள்ளதை நீங்கள் இந்த பாடலைக் கேட்டால்
உணரலாம் !
பாடல் :
http://picosong.com/93QV
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
5. கண் போன போக்கிலே கால் போகலாமா ! "
-" பணம் படைத்தவன் - டி எம் எஸ் .
இது ஒரு சுத்தமான தத்துவ பாடல்.
என்ன மாதியான இசை ?
" பாண்டு " வாத்திய கோஷ்டி யின் இசை !
அந்த மாதிரியான இசையில் எப்படி பியானோ , வயலின் ,
அக்கார்டின் போன்ற இசைக் கருவிகளை புகுத்தி ஓர் இசை வெள்ளத்தை
நமக்கு அளித்துளனர், நம் மெல்லிசை அமைப் பாளர்கள் !
அதுவும் படத்தில் மேற்கண்ட இசைக் கருவிகளை பயன்படுத்தி
எம்ஜிஆர் மிக
அழகாக வெள்ளை கோட் - சூட் அணிந்து பாடுவது
மிக ரம்மியமாக இருக்கும் !
பாடல் :
http://picosong.com/9eC6
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
6. " கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா , கதைகள்
சொல்லட்டுமா ! "
" பச்சை விளக்கு "பி பி எஸ் -எல் ஆர் ஈஸ்வரி
பொதுவாக ஒரு பாடலில் :
பல்லவிக்கும் - சரணத்திற்கும்
இடையே ஓர் இடைவெளி இருப்பது சகஜம்தான் , அது அவசியமும் கூட!
ஆனால் இந்த பாடலில் பாருங்கள்.......
பல்லவிக்கும் - சரணத்திற்கு இடையில் .....
ஏகப்பட்ட .....இடைவெளி - ஏறக்குறைய 32 வினாடிகள் !
காரணம் ?
எல்லாம் ....இந்த மெல்லிசை மன்னர்கள் பியானோ இசையின்
மேல் அதிக செல்லம் ( ! ) கொடுத்ததினால் !
மிக நீளமான பியானோ மற்றும் ' எலக்டிரிக்' கிட்டார் இசை
கொண்ட பாடல் !
கேட்டுக்கொண்டே இருக்கலாம் , அவ்வளவு அருமை !
பாடல் :
http://picosong.com/9eCZ
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
7. " பாடுவோ பாடினால் ஆடத் தோன்றும் "
கண்ணன் என் காதலன் " - டி எம் எஸ் - மெல்லிசை மன்னர்
தனித்து இசையமைத்த படம் .
'பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் ' - என்கிற கருத்தை
வலிறுத்தும் பாடல். பாடும் டி எம் எஸ் அவர்களை விட பியானோ
இசை தலை தூக்கும் மிகச் சிறந்த பாடல் !
இந்ந்த பாடலை நான் இங்கே சேர்த்ததன் காரணம் ?
சொல்லாமல் எங்கே போவேன் !
மேற்கத்திய இசைக்கருவியான பியானோ நம் நாட்டு இசைக்
கருவிகளுடன் எப்படி ஐக்கியமாகிறது என்பதை நிரூபிக்கும்
பாடல் இது !
பியானோவுடன் தபேலா எப்படி போட்டி போடுகின்றது
என்பதை இந்த பாடல் விளக்கும் !
பாடல் :
http://picosong.com/9eCa
################################################
8. " சொர்கத்திலே முடிவானது , சொந்தத்திலே
உறவானது ! " - " லலிதா " - எஸ் பி பி - வாணி ஜெயராம் - மெல்லிசை
மன்னர் தனித்து இசையமைத்தது .
பியான்னோ வுடன் மற்ற இசைக்கருவிகள் மட்டும் இணைவதில்லை,
" கைத் தட்டல் " ஓசை கூட இணைவதாலும் அற்புதமாக
இருக்கும் என்பதை நிரூபிக்கும் பாடல் !
கைதட்டல் ஒலிவுடன் பியானோ இசை ஒலிப்பதைக் கேட்டால்
இன்பமாக இருக்கின்றது !
பாடல் :
http://picosong.com/9eP9
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
9. " எனக்கொரு காதலி இருக்கின்றாள் , அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ! "
" முத்தான முத்தல்லவோ " - எஸ் பி பி வுடன் மெல்லிசை
மன்னர் - தனித்து இசையமைத்த படம்.
இந்த பாடலில் பியானோவுடன் போட்டி போடுவது - வயலின் உடன் !
பாடலைக் கேளுங்கள் , உங்களுக்கு புரியும் !
பாடல் :
http://picosong.com/9ePm
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
10 . " மல்லிகை ...ஓய் ....மாங்கனி , தேன் மொழி , காதலி
என்றெல்லாம் கூறுவார் கேளடி ! "
" பவானி " ( 1967 ) - எல் . ஆர் . ஈஸ்வரி - மெல்லிசை மன்னர்
தனித்து இசையமைத்தது !
எல் ஆர் ஈஸ்வரிவுடன் இணைந்து பாடுவது அவ்வளவு
எளிது அல்ல !
டி எம் எஸ் வுடன் ஈஸ்வரி பாடினால் அவரைப் பிடித்துத்
தள்ளி 'மைக்' ஐ பிடுங்கி பாடுவாராம் !
எஸ் பி பி வுடன் பாடும்போதும் , அவரின் பாடு படு
திண்டாட்டம்தான் !
ஈஸ்வரிவுடன் சுசீலா பாடினாலும் அவரோடு போட்டி
மனப்பான்மைவுடன் பாடுவாராம் .
பியானோவுடன் ஈஸ்வரி பாடினால் ?
ஈஸ்வரியின் பாடு திண்டாட்டம்தான் !
இந்த பாடல்லைக் கேளுங்கள் , உங்களுக்கு
விளங்கும் !
பாட்டு :
http://picosong.com/9ePM
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
[பின் குறிப்புக்கள்
1. மிக சிரமப் பட்டுத்தான் எனக்குப் பிடித்த
பல நூறுபாடல்களில் 10 பாடல்களை நான் தேர்ந்தெடுத்தது !
2. மேற்கண்ட பாடல்களில் நான் பியானோ இசையின் பெருமைகளை
மட்டும் பீய்த்து சொன்னேன் .....மற்ற அம்சங்கள் - பாடல் வரிகள் ,
பாடகர்கள் , மற்ற இசை - இவை எல்லாம் ......பிறகு
எழுதுகிறேன் !
3. மெல்லிசை மன்னர் என்றால் ....எம் . எஸ் . விஸ்வவாதன் !
அப்போ டி. கே ராமமூர்த்தி அவர்களை எப்படி நான் எழுதுவேன் ?
" மெல்லிசை மன்னர் டி கே ராமமூர்த்தி !
4. மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்களில் பியானோ
பாடல்கள் இல்லையா ?
உண்டு ! உண்டு ! உண்டு !
அவைகளைப் பற்றி பிறகு !
" பியானோ இசையில் அமைந்த பாட்டுக்கள்
உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ ? "
என்றா கேட்கிறீர்கள் ?
...ஹி....ஹி .... ஹி .. மெய் தாங்கோ !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
[/color]
சரி, ' யார் அந்த நிலவு ' - பாடலில்
பியானோ இசை எப்படி ?'
தொடரும் ....
எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
[/color]
அந்த கால திரைப்படப் பாடலகளின் ஆரம்ப இசையை
பியானோவுக்கு அடுத்த படி மெல்லிசை மன்னர்கள்
" யார் அந்த நிலவு " பாடலில்
டி. எம். எஸ் அவர்கள் , தன துணைவியாருடன் எடுத்த படம் .
b] [/b]
சரி, கண்ணதாசன் , டி எம் எஸ் ,
பாடல் காட்சியில் - விடியு வில்
' சாந்தி "
1. " யார் அந்த நிலவு "
http://picosong.com/9qxJ
2. " யார் அந்த நிலவு "
பழைய 78 ஆர் பி எம் இசைத்தட்டில் மூன்று
http://picosong.com/9qt3
http://picosong.com/9exL
விடியோ :
எம்கேஆர்சாந்தாராம்
சரி, ' யார் அந்த நிலவு ' - பாடலில்
பியானோ இசை எப்படி ?'
பியானோ இசை எப்படி ?'
அந்த கால திரைப்படப் பாடலகளின் ஆரம்ப இசையை
கேட்டாலே அது எந்த பாடல் என்பதை அறிந்து கொள்வோம் !
எடுத்துக்காட்டு ஒன்று வேண்டுமா ?
வேகமான வயலின் களின் இசையுடன் பாடல் ஆரம்பித்து,
அக்கார்டின் இசையுடன் பாடல் வேகம் பிடிக்கும் போதே நீங்கள்
சொல்லிவிடலாம் , அந்த பாடல் : " உலகம் பிறந்தது எனக்காக , ஓடும்
நதிகளும் எனக்காக்க " என்கிற " பாசம் " திரைப் பாடல் என்பதை !
' சாந்தி' யின் ' யார் அந்த நிலவு ' பாட்டும் அந்த மாதிரியான ரகம்தான் !
பாடல் ஆரம்பிக்கும் போது ஒலிக்கும் பியானோ இசை சிறியதாக
இருந்தாலும் அதில் இனிமை அதிகம் !
மறக்க முடியாத அந்த இசையைக் கேட்டாலே :
" ஓ ! ' யார் அந்த நிலவு ' பாடல் வந்து விட்டது ! '
என்பதை அறிந்த கொள்ளலாம் !
மற்ற இசைக் கருவிகள் .
பியானோவுக்கு அடுத்த படி மெல்லிசை மன்னர்கள்
அதிகம் பயன்படுத்து இசைக் கருவி :
வயலிகள் !
மெல்லிசை மன்னர்களுக்கெ உரிய அட்டகாசமான வயலின் இசையைக்
கேட்டாலே அதூ மெலடி ரகட்த்தை சேர்ந்ததாகவே இருக்கும் !
ஒன்று அல்ல இரண்டு வயலின் கள் அல்ல, 40 அல்லது 50 வயலிங்அளை
அவர்கள் பாயன்படுத்துவார்கள் !
இந்த பாடலில்அவர்கள் பயன்படுத்தும் வயலின் கள் அதிகம் !
இந்த மாதிரிய்யான வயலின் கள் ஆர்ப்பரிக்கும் இசை மெல்ல்லிசை
மன்னர்களின் பல பாடல்களில் கேட்ட்கலாம் - ஆனால் அவை பாடலில்
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதை நாம் கேட்கலாம் !
இந்த பாடலில் ஒலிக்கும் வயலின் களின் இசை தனீ ரகம் !
இந்த பாடலில் மெல்லிசை மன்னர்கள் வேறு சில வட இந்திய
இசைக் கருவிகளை பயன்படுத்தியும் உள்ளனர்......அவைகளையும்
எழுதினால் இந்த கட்டுரை நீள்ள்ள்ள்ளும் !
" யார் அந்த நிலவு " பாடலில்
டி எம் எஸ் எப்படி பாடுகிறார்?
டி. எம். எஸ் அவர்கள் , தன துணைவியாருடன் எடுத்த படம் .
, டி எம் எஸ் அவர்கள் நம்மை விட்டு
மறையும் முன் கட்டுரை ஆசிரியர் ,
அவரை சந்தித்த போது எடுத்த படம் . )
ஏற்கனவே ' வந்த நாள் முதல் ' பாடல் மூலம்
தனக்கு மேற்கத்திய பாணியில் பாடவரும் என்பதை நிரூபித்த
டி எம் எஸ், இந்த பாடலிலும் அதே மாதிரியான உத்தியை கையாள
எண்ணினார், மெல்லிசை மன்னரும் அதைத்தான் விரும்பினார்.
ஆனால் , முதலில் டி எம் எஸ் இந்த பதிய முயற்சிக்கு ஆதரவு
தருவதற்கு சற்று தயங்கினாராம்.
''அந்நியமான பாடலை நம் மீது இவர்கள் திணிக்கிறார்களே !
என்று அவர் நினைத்திருக்கலாம்.
ஆனால் மெல்லிசை மன்னர்ர் அவ்வாரை விடுவார, என்ன !
டி எம் எஸ் விடம் கெஞ்சிக் கூத்தாடி அவாரைப் பாடச் சொல்லி
கேட்ட பின்னர்தான் டி எம் எஸ் பாடினார் !
மற்ற பாடல்களைப் போல இல்லாமல்
" ஸ்லோ பிட்ச்ச்" இல் -- அதாவது - நம்மிடம் நெருங்கி வந்து
பாடுவது போன்ற பாணி !
இந்த " ஸ்லோ பிட்ச்" பாணியில்ல் மேற்கத்திய இசையில் :
JIM REEVES ,
CLIFF RICHARDS
போன்ற பாடகர் கள் பாணியில் இந்த பாடலை டி எம் எஸ் பாட
வேண்டும் என்று மெல்லிசை மன்னர் விரும்பினார் !
ஜிம் ரீவ்ஸ் பாடல் எப்படி இருக்கும் ??
இப்படித்தான் இருக்கும் !
" யார் அந்த நிலவு ? "
ஜிம் ரீவ்ஸ் தமிழில் பாடினால் எப்படி இருக்குமோ அப்ப்படியே
பாடினார், நம்ம தமிழக டி எம் எஸ் அண்ணாச்சி !
தனக்கு மேற்கத்திய பாணியில் பாடவரும் என்பதை நிரூபித்த
டி எம் எஸ், இந்த பாடலிலும் அதே மாதிரியான உத்தியை கையாள
எண்ணினார், மெல்லிசை மன்னரும் அதைத்தான் விரும்பினார்.
ஆனால் , முதலில் டி எம் எஸ் இந்த பதிய முயற்சிக்கு ஆதரவு
தருவதற்கு சற்று தயங்கினாராம்.
''அந்நியமான பாடலை நம் மீது இவர்கள் திணிக்கிறார்களே !
என்று அவர் நினைத்திருக்கலாம்.
ஆனால் மெல்லிசை மன்னர்ர் அவ்வாரை விடுவார, என்ன !
டி எம் எஸ் விடம் கெஞ்சிக் கூத்தாடி அவாரைப் பாடச் சொல்லி
கேட்ட பின்னர்தான் டி எம் எஸ் பாடினார் !
மற்ற பாடல்களைப் போல இல்லாமல்
" ஸ்லோ பிட்ச்ச்" இல் -- அதாவது - நம்மிடம் நெருங்கி வந்து
பாடுவது போன்ற பாணி !
இந்த " ஸ்லோ பிட்ச்" பாணியில்ல் மேற்கத்திய இசையில் :
JIM REEVES ,
CLIFF RICHARDS
போன்ற பாடகர் கள் பாணியில் இந்த பாடலை டி எம் எஸ் பாட
வேண்டும் என்று மெல்லிசை மன்னர் விரும்பினார் !
ஜிம் ரீவ்ஸ் பாடல் எப்படி இருக்கும் ??
இப்படித்தான் இருக்கும் !
" யார் அந்த நிலவு ? "
ஜிம் ரீவ்ஸ் தமிழில் பாடினால் எப்படி இருக்குமோ அப்ப்படியே
பாடினார், நம்ம தமிழக டி எம் எஸ் அண்ணாச்சி !
b] [/b]
நன்றாக படியுங்கள் !
மெல்லிசை மன்னர்கள் மேல் நாட்டு இசையின்
" பாணி' - அதாவது - CONCEPT - மட்டுமே எடுத்துக் கொண்டார்கள்,
மாறாக " காப்பி ' அடிக்கவில்லை !
( இன்று நடப்பதே வேறு, இன்று நம் மக்கள் மேல் நாட்டு இசையை
மட்டும் அப்படியே காப்பி அடிப்பதும் இல்லாமல், மெல்லிசை மன்னரின்
' நினைத்தாலும் இனிக்கும் ' - ' சம்போ சிவ சம்போ " ( ' சலீம் ' )
போன்ற பாடலையும் அப்படியே 'காப்பி' அடிக்கின்றனர் ! )
டி எம் எஸ் பாடலை அற்புதமாக பாடினார்ர் !
எடுத்துக்காட்டாக, அந்த ' ஹம்மிங் ' !
அந்த ' ஹம்ம்மிங்' அவர் பாடும் போது, படத்தில் நடிகர் திலகம்
காட்ட வேண்டிய :
வெறுப்பு,,
சலிப்பு,
கோபம்,
ஆகியவைகளை வெளிப்படுத்துவதையும் நீங்கள் கேட்கலாம் !
ஆனால்ல், பாடல் வரிகளை அவர் பாடும் போது ஆங்கிலேயே
பாடல் முறைப் படி எந்த வித உணார்ச்சியையும் காட்டாமல்
பாடுவதை நீங்கள் கேட்கலாம் !
மொத்தத்தில் , டி எம் எஸ் அவர்கள் பாடிய இந்த பாடல்
மெல்லிசை மன்னர்கள் மேல் நாட்டு இசையின்
" பாணி' - அதாவது - CONCEPT - மட்டுமே எடுத்துக் கொண்டார்கள்,
மாறாக " காப்பி ' அடிக்கவில்லை !
( இன்று நடப்பதே வேறு, இன்று நம் மக்கள் மேல் நாட்டு இசையை
மட்டும் அப்படியே காப்பி அடிப்பதும் இல்லாமல், மெல்லிசை மன்னரின்
' நினைத்தாலும் இனிக்கும் ' - ' சம்போ சிவ சம்போ " ( ' சலீம் ' )
போன்ற பாடலையும் அப்படியே 'காப்பி' அடிக்கின்றனர் ! )
டி எம் எஸ் பாடலை அற்புதமாக பாடினார்ர் !
எடுத்துக்காட்டாக, அந்த ' ஹம்மிங் ' !
அந்த ' ஹம்ம்மிங்' அவர் பாடும் போது, படத்தில் நடிகர் திலகம்
காட்ட வேண்டிய :
வெறுப்பு,,
சலிப்பு,
கோபம்,
ஆகியவைகளை வெளிப்படுத்துவதையும் நீங்கள் கேட்கலாம் !
ஆனால்ல், பாடல் வரிகளை அவர் பாடும் போது ஆங்கிலேயே
பாடல் முறைப் படி எந்த வித உணார்ச்சியையும் காட்டாமல்
பாடுவதை நீங்கள் கேட்கலாம் !
மொத்தத்தில் , டி எம் எஸ் அவர்கள் பாடிய இந்த பாடல்
அந்த கால தமிழ்த் திரைப்பட உலகுக்கே புதுசு என்றே
சொல்லலாம் !
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !
1965 ஆம் ஆண்டில் வெளி வந்த ' சாந்தி' திரைப்
படத்தின் விளம்பரங்களைப் பார்த்தால் சிவாஜி கணேசனின்
மாறுபட்ட தோற்றம் ஒன்றை காண்பீர்கள் !
சற்று சாந்தாற்போல் சிவாஜி சோகத்துடன் காணப்பட்ட
போஸ்டர் !
சிவாஜி கணேசனின் அந்த தோற்றத்தைப் பார்த்தாலே அது
' சாந்தி' பட ' ஸ்டில்' என்பதை கண்டு கொள்ளலாம் !
( அந்த கால படங்களில் நடிகர்களின் தோற்றங்கள்ளை வைத்தே
அது எந்த பட போஸ்டர் என்றே சொல்லலாம் !
சிவாஜி பட ' ஸ்டில்' என்றால் சொல்லவே வேண்டாம் ! )
நடிகர் திலகம் இந்த ' யார் அந்த நிலவு' பாடல் காட்சியில்
நடிப்பதற்கு மிகவும் மெனக் கெட்டார் !
1. இந்த பாடலுக்கான படப்பிடிப்பை சில நாட்களை தள்ளிப்
போட்டார் !
சிவாஜி கணேசனின் இந்த செயல் அவரைப் பொருத்த வரையில்
மிகவும் வித்தியாசமானது !
2. கவிஞர் கண்ணதாசன், டி எம் எஸ் , மெல்லிசை மன்னர்கள்,-
இவர்களை " தோற்கடிக்க " - மற்றும் தான் ' கெலிக்க '
என்னென்ன வழி முறைகளை கையாளலாம் என்று யோசிக்கவே
சில நாட்களை எடுத்துக்கொண்டார் !
3. தலையை 'சிலுப்பி' க்கொண்டார் ! தலை முடியை கலைத்துக்
கொண்டார் ! இதுவும் நடிகர் திலகத்திற்கு புதுசு !
4. ' டெரிலின்' ஷர்ட் ! அந்த காலத்தில் மிகவும் பிரபலம் !
அந்த 'டெரிலின் ஷர்ட்' ஐ அணிந்து கொண்டார் !
5. சட்டையின் மேற்புற பட்டன் களை போட்டுக்கொள்ளாமல்
விட்டார் !
( ' அஞ்சான்' படத்தில் நம்ம ( ! ) சமந்தா தன் சட்டைக்கு போட்டுக்
கொள்ளாமல் விட்ட பட்டன் களை இங்கே ஒப்பிட
வேண்டாம் !
நடிகர் திலகம் அப்படி செய்தது - நடிப்புக்காக !
சமந்தா அப்படி செய்தது - கவர்ச்சீக்கு- சீ...சீ... கவர்ச்சிக்கு !
6. அப்பறம் அந்த சட்டையை அவர் ' இன் ' பண்ணிக்கொண்ட அழகு !
7. அப்புறம் அவரின் 'தல' ! நான் அஜித் ஐ சொல்லவில்லை, நடிகர் திலகத்தின்
தலை நேராக வைத்திருந்தால் - அது தலை !
ஒரு 25 டிக்ரி சாய்த்து அவர் தலையை வைத்திருந்தால் , அது ' தல' இல்லாமல்
பின் என்னவாம் !
பாடலின் முக்கால் வாசி பகுதி அவர் தலையை சாய்த்து பாடினார்....
ஏன் அப்படி பாடினார் ?
சோகத்தை வெளிப்படுத்தவே அவர் இப்படி செய்திருக்கலாம் !
8. வலது கையை அவர் ' பாண்ட்' பாக்கட் இல் வைத்துக் கொண்டார்,
இடது கையை அவர் எதற்கு பயன்படுத்தினார் ?
' வெண் சுருட்டு' வைத்துக் கொள்ள !
அவர் சிகரட் பிடித்துக்கொண்டிருக்கும் " ஸ்டைல்லை" பார்த்
திருக்கிறீர்களா ?
பொதுவாக விரல் இடுக்குகளில் சிகரட் ஐ பலர் பிடித்துக்
கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம் !
ஆனால் நடிகர் திலகம் அவர்களோ சுருட்டு பிடிப்பவர்கள்
வைத்திருப்பவர்களைப் போன்று :
" ஆள் காட்டி விரல் & கட்டை விரல் "
இந்த இரண்டு விரல்களிலும் சிகரட் பிடித்திக் கொண்டு
நடப்பது நடிகர் திலகத்திற்கு உரிய ஸ்டைல் !
( ஒரு ரகசியம் சொல்லட்டுமா !
எனக்கு புகை பிடிக்க சுத்தமாக பிடிக்காது !
" Passive Smokers " ஆகக் கூட இருக்க பிடிக்காது ! )
9. அப்புறம் சிவாஜியின் ஆக்ஷன் !
வாயில் சிகரட் ஐ புகைத்துக் கொண்டு , வலது கையை 'பாண்ட்' உள்
நுழைத்துக் கொண்டு ....
சோகமாகமோ
' Depression ' - ஆக வோ
' என்ன நடக்குமோ' என்கிற அதீத ஆவலோ
பரிதாபமாகமோ
வாழ்க்கையை வெறுத்துப் போகும் நிலையிலோ
சிறுது கோபமாகவோ
சிறிது பொறுமை இழந்தவராகவோ
........................போன்ற உணர்ச்சிகளில் எவை எவை உடன் அவர் நடந்து வருகிறார் ( ! )
என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையிலோ.....
நடந்து வந்து பின்னர் வாயில் புகைக்கும் சிகரட் ஐ எடுத்து பாடும்
' ஸ்டயில்! ' .......அப்பப்பா ! இனிமேல் என்னால் வர்ணிக்கவே
முடியாது ! அம்பேல் !
கையில் சிகரட் , வாயில் பாட்டு !
பாட்டு இல்லாத சமயத்தில் வாயில் சிகரட் !
இப்படி ' என்னவோ... நடிகர் திலகமே பாடுகிறாரோ'
என்கிற சந்தேகத்துடன் நாம் பாடலைப் பார்க்க்கிறோம் !
10. அவர் விரக்தியின் எல்லையில் இருப்பதை காட்டும் போது
நடிகர் திலகம் இலேசாக தோளை குலுக்கிக் கொள்வது
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் !
11. இறுதியாக சிவாஜி கணேசனின் நடை !
அவர் எப்படிப் பட்ட மனநிலையில் நடக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள
முடியாத மாதிரி அவர் ' நடத்தை ' அற்புதம் ஆக அமைதுள்ளது !
12, மொத்தத்தில் பாடல் காட்சியில் மற்றவர்களை
பின்னுக்கு தள்ளி விட்டு
முன்னிலை வந்து வெற்றி கொள்கிறார் நடிகர் திலகம் !
படத்தின் விளம்பரங்களைப் பார்த்தால் சிவாஜி கணேசனின்
மாறுபட்ட தோற்றம் ஒன்றை காண்பீர்கள் !
சற்று சாந்தாற்போல் சிவாஜி சோகத்துடன் காணப்பட்ட
போஸ்டர் !
சிவாஜி கணேசனின் அந்த தோற்றத்தைப் பார்த்தாலே அது
' சாந்தி' பட ' ஸ்டில்' என்பதை கண்டு கொள்ளலாம் !
( அந்த கால படங்களில் நடிகர்களின் தோற்றங்கள்ளை வைத்தே
அது எந்த பட போஸ்டர் என்றே சொல்லலாம் !
சிவாஜி பட ' ஸ்டில்' என்றால் சொல்லவே வேண்டாம் ! )
நடிகர் திலகம் இந்த ' யார் அந்த நிலவு' பாடல் காட்சியில்
நடிப்பதற்கு மிகவும் மெனக் கெட்டார் !
1. இந்த பாடலுக்கான படப்பிடிப்பை சில நாட்களை தள்ளிப்
போட்டார் !
சிவாஜி கணேசனின் இந்த செயல் அவரைப் பொருத்த வரையில்
மிகவும் வித்தியாசமானது !
2. கவிஞர் கண்ணதாசன், டி எம் எஸ் , மெல்லிசை மன்னர்கள்,-
இவர்களை " தோற்கடிக்க " - மற்றும் தான் ' கெலிக்க '
என்னென்ன வழி முறைகளை கையாளலாம் என்று யோசிக்கவே
சில நாட்களை எடுத்துக்கொண்டார் !
3. தலையை 'சிலுப்பி' க்கொண்டார் ! தலை முடியை கலைத்துக்
கொண்டார் ! இதுவும் நடிகர் திலகத்திற்கு புதுசு !
4. ' டெரிலின்' ஷர்ட் ! அந்த காலத்தில் மிகவும் பிரபலம் !
அந்த 'டெரிலின் ஷர்ட்' ஐ அணிந்து கொண்டார் !
5. சட்டையின் மேற்புற பட்டன் களை போட்டுக்கொள்ளாமல்
விட்டார் !
( ' அஞ்சான்' படத்தில் நம்ம ( ! ) சமந்தா தன் சட்டைக்கு போட்டுக்
கொள்ளாமல் விட்ட பட்டன் களை இங்கே ஒப்பிட
வேண்டாம் !
நடிகர் திலகம் அப்படி செய்தது - நடிப்புக்காக !
சமந்தா அப்படி செய்தது - கவர்ச்சீக்கு- சீ...சீ... கவர்ச்சிக்கு !
6. அப்பறம் அந்த சட்டையை அவர் ' இன் ' பண்ணிக்கொண்ட அழகு !
7. அப்புறம் அவரின் 'தல' ! நான் அஜித் ஐ சொல்லவில்லை, நடிகர் திலகத்தின்
தலை நேராக வைத்திருந்தால் - அது தலை !
ஒரு 25 டிக்ரி சாய்த்து அவர் தலையை வைத்திருந்தால் , அது ' தல' இல்லாமல்
பின் என்னவாம் !
பாடலின் முக்கால் வாசி பகுதி அவர் தலையை சாய்த்து பாடினார்....
ஏன் அப்படி பாடினார் ?
சோகத்தை வெளிப்படுத்தவே அவர் இப்படி செய்திருக்கலாம் !
8. வலது கையை அவர் ' பாண்ட்' பாக்கட் இல் வைத்துக் கொண்டார்,
இடது கையை அவர் எதற்கு பயன்படுத்தினார் ?
' வெண் சுருட்டு' வைத்துக் கொள்ள !
அவர் சிகரட் பிடித்துக்கொண்டிருக்கும் " ஸ்டைல்லை" பார்த்
திருக்கிறீர்களா ?
பொதுவாக விரல் இடுக்குகளில் சிகரட் ஐ பலர் பிடித்துக்
கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம் !
ஆனால் நடிகர் திலகம் அவர்களோ சுருட்டு பிடிப்பவர்கள்
வைத்திருப்பவர்களைப் போன்று :
" ஆள் காட்டி விரல் & கட்டை விரல் "
இந்த இரண்டு விரல்களிலும் சிகரட் பிடித்திக் கொண்டு
நடப்பது நடிகர் திலகத்திற்கு உரிய ஸ்டைல் !
( ஒரு ரகசியம் சொல்லட்டுமா !
எனக்கு புகை பிடிக்க சுத்தமாக பிடிக்காது !
" Passive Smokers " ஆகக் கூட இருக்க பிடிக்காது ! )
9. அப்புறம் சிவாஜியின் ஆக்ஷன் !
வாயில் சிகரட் ஐ புகைத்துக் கொண்டு , வலது கையை 'பாண்ட்' உள்
நுழைத்துக் கொண்டு ....
சோகமாகமோ
' Depression ' - ஆக வோ
' என்ன நடக்குமோ' என்கிற அதீத ஆவலோ
பரிதாபமாகமோ
வாழ்க்கையை வெறுத்துப் போகும் நிலையிலோ
சிறுது கோபமாகவோ
சிறிது பொறுமை இழந்தவராகவோ
........................போன்ற உணர்ச்சிகளில் எவை எவை உடன் அவர் நடந்து வருகிறார் ( ! )
என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையிலோ.....
நடந்து வந்து பின்னர் வாயில் புகைக்கும் சிகரட் ஐ எடுத்து பாடும்
' ஸ்டயில்! ' .......அப்பப்பா ! இனிமேல் என்னால் வர்ணிக்கவே
முடியாது ! அம்பேல் !
கையில் சிகரட் , வாயில் பாட்டு !
பாட்டு இல்லாத சமயத்தில் வாயில் சிகரட் !
இப்படி ' என்னவோ... நடிகர் திலகமே பாடுகிறாரோ'
என்கிற சந்தேகத்துடன் நாம் பாடலைப் பார்க்க்கிறோம் !
10. அவர் விரக்தியின் எல்லையில் இருப்பதை காட்டும் போது
நடிகர் திலகம் இலேசாக தோளை குலுக்கிக் கொள்வது
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் !
11. இறுதியாக சிவாஜி கணேசனின் நடை !
அவர் எப்படிப் பட்ட மனநிலையில் நடக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள
முடியாத மாதிரி அவர் ' நடத்தை ' அற்புதம் ஆக அமைதுள்ளது !
12, மொத்தத்தில் பாடல் காட்சியில் மற்றவர்களை
பின்னுக்கு தள்ளி விட்டு
முன்னிலை வந்து வெற்றி கொள்கிறார் நடிகர் திலகம் !
சரி, கண்ணதாசன் , டி எம் எஸ் ,
மெல்லிசை மன்னர்கள் , நடிகர் திலகம் - இந்த
நால்வர் கூட்டணியில் வென்றவர் யார் ?
நான் சொல்லட்டுமா !
பாடல் காட்சியில் - விடியு வில்
தனித்து நின்று வெல்கிறார் - கலைக் குரிசில் !
இசைத் தட்டில் - ஆடியோ வில்
கூட்டணி அமைத்து ( ! )
வெல்கிறார்கள் - டி எம் எஸ் - கண்னதாசன் -
மெல்லிசை மன்னர்கள் டீம் !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
' சாந்தி ' திரைப்படம் பற்றிய பல
சுவையான தகவல்கள் ......
....பின்னோட்டத்தில் எழுதுவேன் !'
சுவையான தகவல்கள் ......
....பின்னோட்டத்தில் எழுதுவேன் !'
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
' சாந்தி "
' யார் அந்த நிலவு '
டி எம் எஸ் - பாடிய பாடல் :
மூன்று வடிவங்களில் தருகிறேன் !
1. " யார் அந்த நிலவு "
- திரைப்பட வடிவம் !
திரைப்பட வடிவத்தில் இரண்டு சரணங்கள் மட்டுமே
உள்ளன :
இந்த வடிவத்தில் இபோது நான் எழுதிய கட்டுரையை
டி எம் எஸ் அவர்களே சுருக்கமாக சொல்லிய பிறகு
பாடல் ஆரம்பம் ஆவதைக் கேளுங்கள் !
http://picosong.com/9qxJ
2. " யார் அந்த நிலவு "
இசைத் தட்டு வடிவம் - 78 RPM இரு பக்க இசை !
இரண்டு பக்கமும் !
பழைய 78 ஆர் பி எம் இசைத்தட்டில் மூன்று
சரணங்களை கவிஞர் எழுதியுள்ளார் !
படத்தில் இடம் பெறாத 3 வது சரணம் இதுதான் !
' வாழ்வது போலவே பாவனை காட்டும் நெஞ்சமே !
கண் வாராதிருந்தால் நிம்மதியாவது மிஞ்சுமே !
அய்யகோ ! கானலை நீர் என நினைத்தாயே
உன் ஏழை நெஞ்சில் உண்மை ஏதென அறிவாயே !
கண் வாராதிருந்தால் நிம்மதியாவது மிஞ்சுமே !
அய்யகோ ! கானலை நீர் என நினைத்தாயே
உன் ஏழை நெஞ்சில் உண்மை ஏதென அறிவாயே !
http://picosong.com/9qt3
3 . " யார் அந்த நிலவு "
78 ஆர் பி எம் ' சுத்தி கரிக்கப்பட்ட '
சுத்தமான இரைச்சல் இல்லாத ஒலிப்பதிவில் !
இரு பக்க பாட்டு !
வாழங்கியவர் : பேராசிரியர் கந்தசாமி அவர்கள் !
அவருக்கு நாம் நன்றி சொல்வோம் !
78 ஆர் பி எம் ' சுத்தி கரிக்கப்பட்ட '
சுத்தமான இரைச்சல் இல்லாத ஒலிப்பதிவில் !
இரு பக்க பாட்டு !
வாழங்கியவர் : பேராசிரியர் கந்தசாமி அவர்கள் !
அவருக்கு நாம் நன்றி சொல்வோம் !
http://picosong.com/9exL
விடியோ :
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அடுத்த கட்டுரை :
' இயக்குனர் திலகம் '
கே. எஸ் . கோபாலகிருஷ்ணனின்
" கற்பகம் " ( 1963 )
திரைப்படம் உருவான கதை !
கே. எஸ் . கோபாலகிருஷ்ணனின்
" கற்பகம் " ( 1963 )
திரைப்படம் உருவான கதை !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
படிக்க ஆரம்பித்தவுடன் நிறுத்தமுடியவில்லை , முழு பகுதியையும் படித்துவிட்டு தான் அலுவலகத்தில் ஒரு சில தொலைபேசி அழைப்புகளை எடுத்தேன்.
இடையில் டிஎம்எஸ் ஐயாவை பார்த்ததும் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது ....
இடையில் டிஎம்எஸ் ஐயாவை பார்த்ததும் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது ....
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
டாக்டர் ஐயா, உங்களது இத்தொடர் மேலும் மேலும் வளர வேண்டும். என்னைப் போல பலருக்கு தெரியாத செய்திகளை தந்து வரும் உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. பாராட்டை விரும்பாத உங்களை பாராட்டித் தான் ஆக வேண்டும். பழம்பாடல் விரும்பிகளுக்கு இது போய் சேர வேண்டிய சிறந்த தகவல். நன்றி டாக்டர் ஐயா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
டாக்டர் ஐயா, உங்களது இத்தொடர் மேலும் மேலும் வளர வேண்டும். என்னைப் போல பலருக்கு தெரியாத செய்திகளை தந்து வரும் உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. பாராட்டை விரும்பாத உங்களை பாராட்டித் தான் ஆக வேண்டும். பழம்பாடல் விரும்பிகளுக்கு இது போய் சேர வேண்டிய சிறந்த தகவல். நன்றி டாக்டர் ஐயா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
மேற்கோள் செய்த பதிவு: 1085485மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர் ஐயா, உங்களது இந்த தொகுப்பு நன்றாகவே சூசூசூசூடு பிடிகிறது, படித்து முடித்து, பதிவும் செய்துக் கொண்டேன். மிக்க நன்றி டாக்டர் ஐயா. அருமையான இத்தொடரை தொடருங்கள்.
veegopalji- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 01/07/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
டியர் டாக்டர் சார்: எதிர் நீச்சல் திரைப்படத்தில் வரும் "என்னம்மா பொன்னம்மா" பாடலை இசைமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்றும் வி குமார் அல்ல என்றும் எதை வைத்துச்
சொல்கிறீர்கள்? மெல்லிசை மன்னர் ஏதாவது பேட்டியில் அப்படிச் சொன்னாரா அல்லது அந்தப்
பாடலின் இசையமைப்பை வைத்து நீங்களாக அனுமானம் செய்ததா...? எனக்குத் தெரிந்த வரையில்
அந்தப் பாடலையும் இசையமைத்தது வி குமார்தான் என்று தோன்றுகிறது. காரணம், அந்தப் பாடலில்
வரும் தாள சங்கதிகள் மற்றும் பின்னணி இசையில் மெல்லிசை மன்னர்களின் ஸ்டைல் இல்லவே இல்லை.
சொல்கிறீர்கள்? மெல்லிசை மன்னர் ஏதாவது பேட்டியில் அப்படிச் சொன்னாரா அல்லது அந்தப்
பாடலின் இசையமைப்பை வைத்து நீங்களாக அனுமானம் செய்ததா...? எனக்குத் தெரிந்த வரையில்
அந்தப் பாடலையும் இசையமைத்தது வி குமார்தான் என்று தோன்றுகிறது. காரணம், அந்தப் பாடலில்
வரும் தாள சங்கதிகள் மற்றும் பின்னணி இசையில் மெல்லிசை மன்னர்களின் ஸ்டைல் இல்லவே இல்லை.
veegopalji- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 01/07/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
மேற்கோள் செய்த பதிவு: 1085482mkrsantharam wrote:" சாந்தி " ' யார் அந்த
நிலவு " ........................தொட்ர்ச்சி !சரி, " யார் இந்த நிலவு ? "
பாடலின் சிறப்பம்சங்கள் என்ன ? "
என்றா கேட்கிறீர்கள் ?அந்த சிறப்பம்சங்கள்ளை நான் பட்டியலிடும்
முன்னர் , இந்த பாடல் , ' சாந்தி ' படத்தில் இடம் பெற்ற கதையின்
சூழ்நிலையை ( SITIUATION ) உங்களுக்குத் தெரியவேண்டும் !
அதற்கு.......
" சாந்தி" திரைப்படத்தின் கதையையும் ஓரளவு
தெரிந்து வைத்திருந்தால் நலம் !%%%%%%%%%%%%%%%%%%%%%%%" சாந்தி "
கதை சுருக்கம் :நடிகர் திலகமும் , எஸ் . எஸ் . ஆரும் இணை பிரியாத நண்பர்கள் !
" வாழ்ந்து பார்க்கவேண்டும் , அறிவில் மனிதன்
ஆகவேண்டும் ! " என்கிற பாடலை அவர்கள் பாடி மகிழ்கிறார்கள் !அந்த பாடலை அவர்கள் கல்லூரி நாட்களில்
பாடி மகிகிறார்கள் !
அப்போது......
ஊரில் , எஸ் எஸ் ஆருக்கு திருமண ஏற்பாடு நடக்கின்றது !
அந்த ஊரில் தோழிகள் இருவர் :
தேவிகா - விஜயகுமாரி !
இந்த இருவரில் விஜயகுமாரி இரு விழிகளை இழந்தவர்.
" தனக்கும் திருமணம் நடக்குமா ? " என்று ஏங்கும்
தன்னுடைய பார்வை இல்லாத தோழியான தேவிக ,
விஜயகுமாரிக்கு ஆறுதல்
சொல்லி பாடுகிறார் :" ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் !
வீடெங்கும் மாவிலைத் தோரணம் ! "
தேவிகா பாடும் பாட்டு !விஜயகுமாரியின் சித்தப்பாவாக வரும்
' சூபர்' வில்லன் ( ! ) எம் . ஆர் . ராதா, அவர் விழிகளை இழந்தவர் என்கிற
உண்மையைச் சொல்லாமல் , எஸ் . எஸ் . ஆருக்கு பெண் கொடுக்கிறார் !
சரி, அப்போ தேவிகா ' செட் அப் ' யாரூ ? "
என்றா கேட்கிறீர்கள் !
வேறு யார் , நம்ம நடிகர் திலகம்தான் !" நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் !
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் ! "
பாடலை தேவிகா பாட , அதற்கு ' விசில்' அடிக்கிறார் நடிகர் திலகம் !தான் மணக்கப் போகும் பெண் இரு விழிகளை
இழந்தவர் என்கிற உண்மையை அறியாத எஸ் . எஸ் . ஆர், தான் பார்க்காத
எதிர்கால மனைவுக்கு.....' காதல் கோட்டை ' - அஜித் - தேவயானை
' ஸ்டைலில்' கடிதங்களில் கவிதைகளை எழுதி மகிழ்கிறார் !" செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் ! " பாடலை அங்கே எஸ் எஸ் ஆர் பாடுவார்,
அதற்கு 'எசப் பாட்டு' விஜயகுமாரி இங்கே பாடுவார் !தன் மனைவிக்கு விழிகள் இரண்டும் இல்லை
என்று எஸ் எஸ் ஆர் க்கு தெரியாமல் எம் ஆர் ராதாவின் சூழ்ச்சியால்
திருமணம் நடந்து விடுகிறது.
விஷயம் பின்பு அதாவது , திருமணம் ஆனபிறகு , அறிந்து கொண்ட
எஸ் எஸ் ஆர் கோபம் கொள்கிறார், தான் ஏமாற்றப்பட்டதை
அறிந்து மனைவியை ஏறிட்டும் பார்க்காமல் அவரது ஒரே பொழுது போக்கான
காட்டில் மிருகங்களை வேட்டையாட வெளியேறுகிறார்." செந்தூர் முருகன் கோவிலிலே "
சோகப் பாடலை விஜயகுமாரி பாடுகிறார் !விஷயம் அறிந்த நடிகர் திலகம் , காட்டுக்குள்
சென்று எஸ் எஸ் ஆரை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.
எப்படி ?
" உனக்கு திருமணம் ஆன பிறகு உன் மனைவிக்கு கண்களை
இழந்திருந்தால் உன்னால் என்ன செய்ய முடியும் ? அப்படி
நினைத்து நீ இந்த பெண்ணுக்கு வாழ்வு கொடு ! "
என்கிறார் சிவாஜி.
ஆனால் இந்த அறிவுரையை எஸ் எஸ் ஆர் கேட்கவில்லை, தொடர்ந்து
காட்டிலேயே தங்கிவிடுகிறார் !
இந்த சமயத்தில் விஜயகுமாரிக்கு கண் ஆபெரேஷ நடக்கிறது !
ஆபெரேஷன் வெற்றி !
விஜயகுமாரிக்கு பார்வை வந்துவிட்டது !
தன் கணவனைப் பார்க்க மிகவும் விரும்புகிறார் , விஜயகுமாரி !
இந்த நேரத்தில்.......
புலி ஒன்று தாக்கி எஸ் எஸ் ஆரை இழுத்துச் சென்றுவிட்டது அந்த
களீபரத்தில் எஸ் எஸ் ஆர் இறந்து விட்டார் என்கிற சேதி ஊரில்
அடிபடுகிறது !
" எஸ் எஸ் ஆர் மரணத்திற்கு சிவாஜிதான் காரணம் ! " என்கிற
செய்தியை ஊரில் பரப்புகிறார் எம் ஆர் ராதா !
மேற்படி செய்தியை பயன்படுத்தி :
' சிவாஜியை, விஜயகுமாரியின் கணவனாக நடிக்க வேண்டும்,
இல்லையென்றால் எஸ் எஸ் ஆர் மரணத்திற்கு சிவாஜிதான் காரணம்
என்று சிவாஜியை பயமுறுத்து கிறார், ராதா !
வேறு வழி இன்றி தன் நண்பனின் மனவிக்காக , கணவன் மாதிரி
நடிக்க ஆரம்பிக்கிறார் நடிகர் திலகம் !
சிவாஜியின் மனநிலை எப்படி இருக்கும் ?
இந்த சூழலில் விஜயகுமாரியின் உண்மையான கணவன்
ஆன எஸ் எஸ் ஆர் உயிருடன் ஊருக்கு திரும்புகிறார்!
தன் மனைவிவுடன் தன் உயிர் நண்பன் " குடும்பம் " நடத்துவதை
அறிந்து மனம் வருந்துகிறார் !
இந்த சேதியை சிவாஜி அறிந்து கொண்டு மனம் வருந்துகிறார் !
சிவாஜியின் மனநிலை எப்படி இருக்கும் ?
இந்த ' கண்ணராவி' யை தேவிகாவும் காண்கிறார் !
தேவிகா அறிந்து விட்டதை சிவாஜி அறிந்து மனம்
வருந்துகிறார் !
சிவாஜியின் மன நிலை எப்படி இருக்கும் ?" யார் அந்த நிலவு "
பாடல் இந்த சூழலில்தான் நடிகர் திலகம்
பாடுகிறார் !இப்போது, ' யார் இந்த நிலவு '
பாடல் படத்தில் இடம் பெற வேண்டுமான, சும்மா கானா பாலா
மாதிரி ஒருவரை அழைத்து வந்து ' கெக்கே - பிக்கே ' என்று
' துள்ளல் இசை ' என்று படு நாகரீகமாக சொல்லிக்
கொள்ளும் ' டப்பாங்குத்து ' பாடலைப் போட்டால் அது
நன்றாகவா இருக்கும் !
கதையின் இந்த சூழ்நிலைக்கு , நடிகர் திலகம் ஏற்றிருக்கும்
கதாபாத்திரத்தின் மன நிலையை அந்த பாடல்
வெளிப்படுத்தவேண்டும்......
சரி, அந்த கதாபாத்திரத்தின் மனநிலை என்ன ?
சொல்றேன்!
1. தன் நண்பனின் மனைவுக்கு கணவன் ஆக , நிர்பந்த சூநிலையில்
நடிக்க வேண்டும்....
அது :
குற்ற உணர்வு ( GUILTY CONSCIOUS )
2. தான் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையை தான் காதலிக்கும்
பெண்ணுக்கு தெரியவந்தால் அதனால் ஏற்பட்ட :
அச்சம் - பய உணர்வு .
3. தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்கிற
சோகம் .
4. அதனால் ஏற்படும்
விரக்தி
5. தன் நண்பனுக்கு விஷயம் தெரிந்தால் தன்னை தவறாக
எண்ணுவானே என்கிற :
ஆதங்கம்
6. ஆக மொத்தத்தில் , ' தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே ,
இன்னும் இதைவிட என்ன ஆகணும் ! '
என்கிற :
அலட்சியம் !இந்த மாதிரியான
உணர்ச்சிக் கலவை யை அந்த பாடலில்
வெளிப்படுத்த வேண்டும் !இயக்குனர் ஏ பீம்சிங் க்கு அந்த பாடலை
தான் நினைத்தபடி வெளிக்கொண்டு வர நினைத்தார்.
அதில் வெற்றி கண்டாரா ?
வெற்றி கண்டார், பாடலும் வெற்றி !ஆனால் , தான் நினைத்தவாறு ஒரு பாடலைத்
தர அவர் மட்டும் எண்ணிவிட்டால் அது நடக்காது.....
பாடலை உருவாக்கும் :
" தாய்மார்கள் " ( ! )
அத்தான்,
1. பாடலாசிரியர்
2. இசையமைப் பாளர்
3. பாடகர்
4. மற்றும்
பாடல் காட்சியில் நடிப்பவர் !மேற்கண்டவர்கள் :
அதாவது :
1. பாடலாசிரியர் : கண்ணதாசன்,
2. இசையமைப்பாளர்கள் : மெல்லிசை மன்னர்கள்
3. பாடகர் : டி எம் எஸ்
4. நடிகர் : நடிகர் திலகம் .....
இவர்களின் ' ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத.....
ஆனால்.....ஆரோக்கியமான பொறாமை இல்லாத
போட்டியால் பாடல் வெற்றி பெற்றது !
எப்படி ?
சொல்றேன்" யார் அந்த நிலவு "
பாடலை எழுதிய : கவிஞர்
கண்னதாசன் :" படகோட்டி " பாடல்களுக்குப் பிறகு எம்ஜிஆர் இன்
அனைத்துப் படங்களுக்கும் பாடல்களை எழுதியர் :கவிஞர் வாலி !
( தேவர் மற்றும் ஜி என் வேலுமணி படங்களுக்கு மட்டும் இதற்கு
விதிவிலக்கு ! கண்ணதாசன் தான் பாட்டு எழுதுவார் ! )
எனவே, கண்னதாசன் நிறைய சிவாஜி படங்களுக்கும் மற்ற
நடிகர்கள் படங்களுக்கும் பாடல்களை எழுதி குவித்தார் !
அதிலும் சிவாஜி படங்களுக்கு - அதிலும் - " ப' பட இயக்குனர்
பீம்சிங் இயக்கும் படங்களுக்கு அதிக கவனம் செலுத்தி பாடல்
களை எழுதி குவித்தார் !
" சாந்தி " படத்தில் " யார் அந்த நிலவு " பாடலுக்கான
சூழ்நிலையை இயக்குமர் பீம்சிங் இடம் இருந்து கேட்டு அறிந்து
பின்னர் அழகு தமிழில் சொற்களை அமைத்து பாடலை
எழுதினார் !
ஒண்ணும் வாணாம் ! ( சென்னை தமிழ் ! )
படத்தைப் பார்க்கவேண்டாம் !
பாடகரின் குரல் வளத்தில் கவனம் செலுத்த வேண்டாம் !
இசையமைப்பில் கவனம் செலுத்த வேண்டாம் !
வெறும் பாடல் வரிகளை மட்டும் கேட்டாலே போதும் ,
'சாந்தி ' படத்தின் கதையமைப்பை நீங்கள் புரிந்து
கொள்ளமுடியும் !
எடுத்துக்காட்டுக்கள் :
" மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை "
இந்த வரிகளைப் படித்தாலே 'சாந்தி ' படத்தின்
கதை போக்கை ஓரளவு நாம் புரிந்து கொள்ளமுடியும் !
" காலம் செய்த கோலாம் இங்கு நான் வந்த வரவு ! "மேற்கண்ட வரிகளைப் படித்தாலே படத்தில்
நடிகர் திலகத்தின் சூழ்நிலை புரிய வரும் !
" உன் கோவிலின் தீபம் மாறியதை நீ அறிவாயோ ! "
" தீபம் மாறியது " என்பது எதனைக் குறிக்கின்றது என்பது உங்களுக்கு
புரியும் !
இப்படி வெறும் வார்த்தைகளால்நாகரீகமாக எளிதாக சொல்ல முடியாத
" கணவன் - மனைவி " சமாச்சாரத்தை பாடல் வரிகளைக்
கொண்டே மிக அழகாக விளக்கிய பெருமை கவியரசர்
கண்ணதாசனையே சாரும் !' யார் இந்த நிலவு '
பாடலுக்கு இசை : மெல்லிசை மன்னர்கள் :மெல்லிசை மன்னர்களின் பாடல்களுக்கும் மற்ற இசையமைப்
பாளர்களின் பாடல்களுக்கும் இருக்கும் :
ஒரே ஒரு வித்தியாசம்
என்ன தெரியுமா ?
சொல்றேன் !
" மெல்லிசை மன்னர்களின் ஒவ்வொரு பாடலும் அவர்கள் இசையமைத்த
வேறு எந்த பாடல்களுடன் ஒப்பிடாமல்
தனித்து
விளங்குவது தான் அந்த வித்தியாசம் !
( இந்த 'மேட்டரை' பின்னர் வேறு சமயத்தில் விரிவாக
சொல்கிறேன் ! )
" யார் இந்த நிலவு " பாடலும் இப்படித்தான், அவர்களின் ஏனைய
பாடல்களையும் தனித்தும் இணை இல்லாததாகவும்
சிறந்து விளங்குகிறது !
முதலில் இந்த பாடல் இடம் பெறும் ' சிடுவேஷன்' ஐ கூர்ந்து கவனித்த
இசையமைப்பாளர்கள் , இந்த பாடலுக்கு இசையமைக்க
மேலை நாட்டு இசை பாணியை பின்பற்றி இசையமைத்தால்
நல்லது என்று முடிவு எடுத்தார்கள் !
சரியாரைப் பாட வைப்பது ?இதில் என்ன குழப்பம் , ஸ்வாமி !
அந்த கால கட்டத்தில் நடிகர் திலகத்திற்கு பின்ணனி கொடுப்பவர் :
டி எம் எஸ் தானே !
அதில்தானே குழப்பம் , ஸ்வாமி !
' என்னய்யா அந்த குழப்பம் ' ?
என்கிறீர்களா ?
" டி எம் எஸ் அவர்களுக்கு மேற்கத்திய பாணியில் பாட இயலுமா ? "
என்பதுதான் மெல்லிசை மன்னர்களுக்கு
குழப்பம் !
எனினும் வேறு பாடகரை வைத்து , தாங்கள் நினைப்பது போல்
மேற்கத்திய பாணியில் இந்த பாடலை தங்களால் பாட
வைத்து பாடலை வெற்றி பெற முடியும் !
ஆனால்.......நடிகர் திலகம் அதற்கு உடன்படாவிட்டால் ?
" விச்சு ! திரைப்படங்களில் என் பாடலுக்கு டி எம் எஸ் பாடினால்தான்
அது நான் பாடுவதாக நம் ரசிகர்கள் எண்னுவார்கள் !
அப்படி டி எம் எஸ் பாடாமல் வேறு ஒருவரை வைத்து பாடினால்,
படத்தைப் பார்க்கும் போது அந்த பாடலை நான் பாடுவதாகவே
ரசிகர்கள் நினைக்கமாட்டார்கள் , மாறாக அந்த பாடகர் பாடுவதாகவே
ரசிகர்கள் நினைப்பார்கள் ! "
சொன்னவர் நடிகர் திலகம் !
" ஒரு நாளிலே உறவானதே ! "
டி எம் எஸ் - சுசீலா பாடிய ' சிவந்த மண் ' படப் பாடலை மெல்லிசை
மன்னர் முதலில் சுசீலாவுடன் பாடவைத்த பாடகர் :
பால முரளி கிருஷ்ணா !
மேற்கண்ட பாடகர் பாடிய பாடலைக் கேட்டுத்தான் நடிகர் திலகம்
மேற்கண்ட வசனங்களை மெல்லிசை மன்னரிடம் நடிகர் திலகம்
சொன்னாராம் !
மெல்லிசை மன்னர் ரொம்ப ரொம்ப கடுப்பாகித்தான் பால முரளி
கிருஷ்ணாவை நீக்கி விட்டு டி எம் எஸ் வைத்து பாடவைத்தாராம் !
" சர்த்தான் ஸ்வாமி ! அந்த பாடல் ' சிவந்த மண் ' படம் - 1970
வெளிய்யீடு ! ' சாந்தி ' படம் - 1965 படம் தானே ! "
என்கிறீர்களா ?
சொல்றேன் !
" சபாஷ் மீனா " படம் . சந்திரபாபு அந்த படத்தில் இரட்டை வேடங்களில்
பின்னிப் ' பெடல் ' எடுத்துக்கொண்டிருந்தார்..... சிவாஜி கணேசனுக்கு
அந்த படத்தில் சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரையும் கொடுக்கும்
சந்தர்ப்பம் இல்லை !
இதனை இந்த படத்தின் இசையமைப்பாளரிடம் ( டி . சலபதி ராவ் )
சொல்லிப் புலம்பினார்,
நடிகர் திலகம் !
" இந்த படத்தில் உங்களுக்கு பேர் வாங்கித் தரும் அளவுக்கு ஓர்
அழகான ' டூயட் ' பாடலைத் தரப் போகிறேன், ஆனால் பாடலைப்
பாடப் போகிறவர் டி எம் எஸ் இல்லை, வேறு பாடகரை தேர்வு செய்ய
நீங்கள் எனக்கு சுதந்திரம் தரவேண்டும், சம்மதமா ? "
சிவாஜியிடம் கேட்டவர் டி . சலபதி ராவ் !
" சரி ! "
வேண்டா வெறுப்பாக தலையை ஆட்டினார் நடிகர் திலகம் !
அந்த பாடல்தான் :
" காணா இன்பம் கனிந்தது ஏனோ ! "
சுசீலாவுடன் சிவாஜிக்கு குரல் கொடுத்த பாடகர் :
டி . ஏ. மோதி !
பாடல் சூபர் ஹிட் !
இன்னொன்று :
" குங்குமம் " படத்தில் " சின்னஞ்சிறிய வண்னப் பறவை எண்ணத்தை
சொல்லுதம்மா ! "
பாடல் ! இந்த பாடலை எஸ். ஜானகியுடன் பாடியவர் :
சீர்காழி கோவிந்தர ராஜன் !
ஆனால் நடிகர் திலகம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை !
டி எம் எஸ் ஐ பாடச் சொல்லி இசையமைப்பாளர் கே . வி .
மகாதேவனிடம் சொல்லிவிட்டார் !
வேறு வழி !
சீர்காழி யை விலக்கி விட்டு டி எம் எஸ் ஐ பாட வைத்தார்கள் !
சீர்காழிக்கு , சிவாஜி மேல் செம கடுப்பு !
" ஐயா ! நீங்கள் எல்லோருக்கும் உணவு பறிமாருங்கள் !
ஆனால் எச்சில் உணவைப் பறிமாற வேண்டாம் ! "
நடிகர் திலகத்திடம் , சீர்காழியார் சொன்ன வார்த்தை !
நடிகர் திலகம் அவரை சமாதானப் படுத்த பெரும்
சிரமப் பட்டாராம் !
' கதை ' இப்படி இருக்க , மெல்லிசை மன்னர்கள் எப்படி
டி எம் எஸ் ஐ மாற்ற துணிவார்கள் !
அழகான, இனிய பியோனா இசையுடன் .....வேகமாகவும்
இல்லாமலும், அதே சமயத்தில் மிகவும் மந்தமான கதியில்
இல்லாமலும்......துன்பமான பாடலும் இல்லாமலும் அதே சமயத்தில்
சோகம் மற்றும் தத்துவப் பாடலும் ஆக இல்லாமலும்,
பாடகர் சிரிக்காமலும் , அழாமலும் .....அதே சமயத்தில் ரசிகர்கள்
' டம் ' அடிக்க தியேடரை விட்டு வெளியே போகாமலும்....
மிகுந்த ' மெலடி' வுடன் பாடலை மிகவும் நேர்த்திவுடன்
இசையமைத்தார்கள் !
இந்த பாடல் இன்றும் வாழ்கிறது !
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
' யார் இந்த நிலவு ! '
பாடலைப் பாடிய
டி எம் எஸ் !சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ
எனக்குத் தெரியாது.....
டி எம் எஸ் முதலில் திரைப்படப் பாடல்களை பாட வரும் போது
அவர் ' காமடி ' - நகைச் சுவை பாடல்களை மட்டும் பாடுவதறு
அழைத்தார்களாம் !
பின்னர் " தூக்கு தூக்கி " படம் மூலமாக கிராமியப் பாடல்களைப்
பாடுவதில் வல்லவர் என்று அறியப்பட்டார் !
அப்புறம் ?
" அம்பிகாதி " படம் மூலம் டி எம் எஸ் மிகச் சிறந்த கர்நாடக இசைப்
பாடகர் என்கிற பெயரை தக்க வைத்துக் கொண்டார் !
இந்த நிலையில் " பாவ மன்னிப்பு " படத்தில் " வந்த நாள் முதல் "
பாடலைப் பாட யாரைப் போட்டு பாடவைக்கலாம் என்று மெல்லிசை
மன்னர்கள் மண்டையை போட்டு குடைந்து கொண்டார்கள் !
முதலில் ஜி. கே. வெங்கடேஷ் ஐ வைத்துப் பாட வைத்தார்கள் !
" சரி , இந்த ஆள் நம்ம சிஷ்யன் , படத்தில் சோகப் பாடலுக்கு
இவர் பாடியதை வைத்துக் கொள்ளலாம், ஆனால்
குழந்தையை சைக்கிளில் வைத்து சிவாஜி பாடும் பாட்டை
யாரை வைத்துப் பாட வைப்பது ? "
மீண்டும் மண்டை + குடைச்சல் + கொண்டார்கள் !
பின்னர் வந்தார் டி . ஏ . மோதி !
பாடினால்....' வந்த நாள் முதல் '....
" ச்....ச் ... செ....ச் " - அத்தான் " உச் " கொட்டினார்கள் அனைவரும் !
" அண்ணே ! நீங்க யார் யாரையோ வைத்து பாட வைக்கிறீர்கள் !
எனக்கு இந்த பாடலைப் பாடுவதற்கு 'சான்ஸ்' கொடுங்கள் !
ஊதித் தள்லிவிடுகிறேன் ! "
சொன்னவர் டி எம் எஸ் - மெல்லிசை மன்னரிடம் !
" ஐயா ! இந்த " வந்த நாள் முதல் " பாட்டு மேற்கத்திய பாணி !
இது உங்களுக்கு பாட வருமா என்று எங்களுக்கு தயக்கம்.....
அத்தான்.... ! "
சற்று தடுமாற்றத்துடன் டி எம் எஸ் விடம் சொன்னார் மெல்லிசை
மன்னர் !
" ' சான்ஸ்' ஐ எனக்கு கொடுத்துப் பாருங்கள் , அண்ணே ! "
---- டி எம் எஸ் !
டி எம் எஸ் பாடினார் !
" வந்த நாள் முதல் ",........... !
பாடல் சூபர் ஹிட் !
டி எம் எஸ் ஆவர்களின் புகழ் இப்படி பரவி இருக்க ...
" யார் இந்த நிலவு " பாடலை டி எம் எஸ் தவிர வேறு எவர்
நன்றாக பாடியிருக்க முடியும்...
சொல்லுங்கய்யா !
தொடரும் ....
எம்கே ஆர் சாந்தாராம்
veegopalji- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 01/07/2014
Page 11 of 26 • 1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 26
Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
Page 11 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|