புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடரும் "கார்பைடு கல்' மாம்பழ விற்பனை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 14, 2014 8:11 am

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் பொருள்படுத்தாமல், தொடர்ந்து கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இது போன்ற ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உண்பவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

மாம்பழங்களில் மல்கோவா, செந்துறை, பங்கணப்பள்ளி, நீலம், ஒட்டு உள்ளிட்டவற்றை பலரும் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

மாம்பழத்தில் உள்ள சத்துக்களும் ஏராளம். அதே நேரத்தில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மக்களின் உடல் நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய மாம்பழ சீசன் விற்பனை இப்போது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான மாம்பழங்கள், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகின்றன.

தினந்தோறும் 100 டன் முதல் 150 டன் வரையிலான மாம்பழங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இங்கு கொண்டு வரப்படும் மாம்பழங்கள் அனைத்தும் பழுக்காத நிலையில், காயாகத்தான் வருகின்றன. அதைத் தொடர்ந்து, கார்பைடு கல் வைக்கப்பட்டு அந்த மாங்காய்கள் அனைத்தும் பழுக்க வைக்கப்படுகின்றன. காயாக வரும் அவற்றை அப்படியே சிறு சிறு பெட்டிகளில் அடுக்கி கார்பைடு கல் சேர்த்து வைத்து விடுகின்றனர். பின்னர் இரண்டு நாள் கழித்து பழமாக மாறிய உடன் அது விற்பனை செய்யப்படுகிறது. கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அவை உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்கின்றனர் டாக்டர்கள்.

இது குறித்து சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை பொது மருத்துவ டாக்டர் ரகுநந்தன் கூறியது: கார்பைடு கல் என்பது மனித உடலுக்கு ஒவ்வாத பொருளாகும். இதனால், ஒவ்வாமை போன்றவை எற்படுவதுடன் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

அதேபோல், கார்பைடு கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு மற்றும் மன நிலை பாதிப்பு போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்போது கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களுக்கும், சாதாரண பழத்திற்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுதான் சிறந்தது என்றார் டாக்டர் ரகுநந்தன்.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அதிகாரி லஷ்மி நாராயணன் கூறியது: மாம்பழ சீசன் தொடங்கியதிலிருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இது வரை 6 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளன. இதில், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2,500 கிலோ எடையுள்ள மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு, பாதுகாப்பாக அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்த மாம்பழம் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் கார்பைடு கல், சுமார் 150 கிலோ எடை வரை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, அங்குள்ள வியாபாரிகளுக்கு கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன என்றார்.

இது போன்று எச்சரிக்கை விடுத்தாலும் கார்பைடு கல்லைக் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோர் மீது

அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கண்டறிவது எப்படி?
கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கும் சாதாரணமாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிய உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சில யோசனைகளை கூறியுள்ளனர். அவற்றின் விவரம்:

"கார்பைடு' பழத்தின் வெளியே தெரியும் வித்தியாசங்கள்:
1. வெளித் தோற்றத்துக்கு மாம்பழம் முழுவதும் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
2. மாம்பழத்தின் மீது சாம்பல் பூத்தது போல் இருக்கும்.
3. பழத்தின் தோலில் சிறு சிறு கரும்புள்ளிகள் இருக்கும்.

"கார்பைடு' பழத்தின் உள்ளே தெரியும் வித்தியாசங்கள்:
1. பழத்தின் உள்ளே சதைப்பகுதியின் மேல் மஞ்சள் நிறத்திலும், உள்பகுதியில் வெள்ளை அல்லது லேசான மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
2. சுவை குறைவாக இருக்கும்.
3. பழத்தில் சாறு குறைவாக இருக்கும்.
(தினமணி)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 14, 2014 11:23 am

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 14, 2014 3:41 pm

தினமணிக்கும் , சாமி அவர்களுக்கும் நன்றி !

உணவில் கலப்படம் என்பது பற்றி யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை !

கல் மூலம் மாம்பழம் பழுக்கவைப்பது மன்னிக்க முடியாத குற்றம் !

 அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 14, 2014 4:29 pm

பகிர்வுக்கு நன்றீ தம்பி

மாம்பழம் பார்த்து வாங்கனும் இனிமே>



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 14, 2014 8:53 pm

பழத்தின் மேல் கரும்புள்ளி அனேகமான மாம்பழங்களில் இருக்கும்தானே ?



கிருஷ்ணா
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 14, 2014 9:57 pm

நல்ல பகிர்வு...
கல்லு பழத்திற்கும், நிஜ பழத்திற்கும் உண்மையில் வித்தியாசம் தெரியவில்லை தான். பயந்து பயந்து தான் வாங்கவேண்டியதாய் இருக்கிறது.  Self risk எடுத்து தான் கண்டு பிடிக்க வேண்டியதாய் இருக்கிறது. (சாப்பிட்ட பிறகு புட் பாய்சன் ஆனால் போலி.... அப்படி எதுவும் ஆகவில்லை என்றால் அசல்.! ஓகே!!!! )



தொடரும் "கார்பைடு கல்' மாம்பழ விற்பனை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதொடரும் "கார்பைடு கல்' மாம்பழ விற்பனை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தொடரும் "கார்பைடு கல்' மாம்பழ விற்பனை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக