ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சு திணறப் போகிறது...

4 posters

Go down

மூச்சு திணறப் போகிறது... Empty மூச்சு திணறப் போகிறது...

Post by சாமி Mon May 12, 2014 10:25 pm

மூச்சு திணறப் போகிறது... 5o6izlVaT0CeEx4j6WVX+2-8-2012_34517_l

சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசடைதல் பற்றிய சர்வதேச அறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகி இருக்கிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 178 நாடுகளில் இந்தியாவும் அடக்கம். அந்த 178 நாடுகளில் காற்று மாசைப் பொருத்தவரை பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் மட்டும்தான் இந்தியாவைவிட மோசமாக இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

உலக நகரங்களிலேயே மிக அதிக அளவில் சுற்றுப்புறக் காற்று மாசடைந்திருக்கும் நகரம் என்று இதுவரை குறிப்பிடப்படும் சீனத் தலைநகரம் பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தில்லி அந்த அவப்பெயரை இப்போது பெறுவதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. தில்லியின் காற்று அங்கு வாழும் மக்களின் சுகாதாரத்திற்கே அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிகிறது.

தில்லி மாநகராட்சி மற்றும் புது தில்லி நிர்வாகம் ஆகியவற்றுடன் இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளும் இந்த அறிக்கையின் புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். புது தில்லியின் சராசரி காற்று மாசு அளவு, அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைவிடக் குறைவு என்பது அவர்களது வாதம். இப்படியொரு வாதத்தை முன்வைக்கும் அந்த அதிகாரிகள், எந்தவொரு நேரத்

திலும் காற்று மாசு அபாயகரமான அளவுக்கு அசுத்தமாக இருந்ததே இல்லை என்று கூறுகிறார்களா என்றால் இல்லை.

சராசரி என்பது கணக்குக் காட்ட வேண்டுமானால் உதவலாம். மக்கள் சராசரியையா சுவாசிக்கிறார்கள்? எந்தவொரு கட்டத்திலும் காற்று மாசு உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய அபாயகரமான அளவில் இருக்கக்கூடாது என்பதுதானே எதிர்பார்ப்பு!

காற்று மாசைப் பொருத்தவரை தில்லி முன்னிலை வகிக்கிறதா, பெய்ஜிங் முன்னிலை வகிக்கிறாதா என்பதல்ல பிரச்னை. அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஐந்து மடங்கு அதிகமாக தில்லியின் காற்று மாசு பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. அதுமட்டுமல்ல, நாளுக்கு நாள் அந்த அளவு அதிகரித்து வருகிறது என்பதுதான் அதைவிடக் கவலை அளிப்பதாக இருக்கிறது.

தில்லியைவிட மோசமாக இருந்த சீனாவின் பெய்ஜிங்கில் காற்று மாசு படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதற்குக் காரணம் உண்மையான அக்கறையுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்கள் தீட்டப்பட்டு, காற்று மாசின் அளவை படிப்படியாகக் குறைக்க அவர்கள் முற்பட்டிருக்கிறார்கள்.

தில்லி அரசு இதுபற்றிக் கவலைப்படாமலே இருக்கிறது என்று பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டிவிட முடியாது. இந்தியாவிலேயே முதல் முதலாக எரிவாயுவில் மட்டுமே பொது வாகனங்கள் இயங்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்திய மாநிலம் தில்லி மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளாகவே தில்லியில் பேருந்துகள், லாரிகள் மட்டுமல்ல, வாடகைக் கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற பொது வாகனங்கள் அனைத்துமே எரிவாயுவில்தான் இயங்குகின்றன.

அத்துடன் நின்றுவிடாமல், 15 ஆண்டுகளுக்கும் அதிகமான தனியார், பொது வாகனங்களின் உரிமம் தில்லியில் புதுப்பிக்கப்பட மாட்டாது என்பதிலும் நிர்வாகம் கடுமையாக இருந்து வருகிறது. தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்கிற நோக்கில்தான் "தில்லி மெட்ரோ ரயில் திட்டம்' செயல்படுத்தப்பட்டது. தில்லி மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயங்குகிறது என்றாலும், இதனால் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவோ, இரு சக்கர வாகனங்கள் மற்றும் தனியார் கார்களின் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான், வருடத்தில் ஒரு சில மாதங்

களைத் தவிர, ஏனைய மாதங்களில் தில்லியின் காற்று மாசு அளவு அதிகரித்து, காற்று மண்டலம் புகை மண்டிய நிலையில் காணப்படுகிறது.

தில்லியில் மட்டுமல்ல, இந்தியாவின் ஏனைய பெரு நகரங்களிலும் சுற்றுப்புறக் காற்றில் காணப்படும் மாசு அதிகரித்து வருகிறது. அதிகரித்துவிட்ட நகர்ப்புற மக்கள் தொகையும் வாகனங்களின் எண்ணிக்கையும்தான் இதற்குக் காரணம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் காற்று மாசின் அளவு, நூறு விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்கிற உண்மையை யாரும் பேசுவதில்லை.

காற்று மாசின் விளைவால் ஏற்படும் மரணம் 2000இல் ஒரு லட்சமாக இருந்தது. அது 2010இல் ஆறு லட்சமாக அதிகரித்திருக்கிறது. காற்று மாசு விளைவிக்கும் சுகாதாரக் கேடுகளுக்கான மருத்துவச் செலவும் மிக அதிகம்.

இந்தியாவில் நல்ல தண்ணீர்தான் கிடைக்கவில்லை என்றால், இனிமேல் சுவாசிக்க சுத்தமான காற்றும் கிடைக்காத நிலைமை ஏற்படக்கூடும். அதை எதிர்கொள்ளவும், காற்று அசுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும்! (தினமணி தலையங்கம்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

மூச்சு திணறப் போகிறது... Empty Re: மூச்சு திணறப் போகிறது...

Post by M.M.SENTHIL Mon May 12, 2014 10:51 pm

நாட்டைப் பற்றி கவலை கொள்ளும் அரசு இல்லையே இங்கே. பதவியைப் பாதுகாக்கவே இவர்கள் பஞ்சாய் பறக்கிறார்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மூச்சு திணறப் போகிறது... Empty Re: மூச்சு திணறப் போகிறது...

Post by பாலாஜி Tue May 13, 2014 3:41 pm

M.M.SENTHIL wrote:[link="/t110203-topic#1063262"]நாட்டைப் பற்றி கவலை கொள்ளும் அரசு இல்லையே இங்கே. பதவியைப் பாதுகாக்கவே இவர்கள் பஞ்சாய் பறக்கிறார்கள்.

ஆமோதித்தல்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மூச்சு திணறப் போகிறது... Empty Re: மூச்சு திணறப் போகிறது...

Post by பாலாஜி Tue May 13, 2014 3:41 pm

M.M.SENTHIL wrote:[link="/t110203-topic#1063262"]நாட்டைப் பற்றி கவலை கொள்ளும் அரசு இல்லையே இங்கே. பதவியைப் பாதுகாக்கவே இவர்கள் பஞ்சாய் பறக்கிறார்கள்.

ஆமோதித்தல்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மூச்சு திணறப் போகிறது... Empty Re: மூச்சு திணறப் போகிறது...

Post by Ravi Sat Sep 06, 2014 10:37 pm

M.M.SENTHIL wrote:நாட்டைப் பற்றி கவலை கொள்ளும் அரசு இல்லையே இங்கே. பதவியைப் பாதுகாக்கவே இவர்கள் பஞ்சாய் பறக்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1063262

அய்யோ, நான் இல்லை நிஜம் இது தான் உண்மை அய்யோ, நான் இல்லை
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

மூச்சு திணறப் போகிறது... Empty Re: மூச்சு திணறப் போகிறது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum