Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
+12
lakshanika1@gmail.com
நித்யானந்தி
ayyasamy ram
ரா.ரா3275
G.Ramajayam
கிருஷ்ணா
சிவா
பிஜிராமன்
ந.க.துறைவன்
விமந்தனி
M.M.SENTHIL
முனைவர் ம.ரமேஷ்
16 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால்,
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் “ஐயப்ப பக்தர்கள்” என்று எழுதலாம் என்று நினைத்து எழுதினேன்.
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
ஐயப்ப பக்தர்கள்
பின்னர் சிந்தித்தேன்… ஐயப்ப பக்தர்கள் குளிப்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகிறது. மனிதர்கள் குளிக்கத்தானே வேண்டும். ஓர் அஃறிணை உயிரை கவிதையில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி “தவளை” என்று சேர்த்தேன். பின்னர் குதிக்கும் என்பதைச் சேர்த்து குதிக்கும் தவளை என்று மூன்றாவது அடியை எழுதி முடித்தேன்.
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை
என்று எழுதி முடித்து ஆழ்ந்து சிந்தித்தேன். நீங்களும் சிந்தியுங்கள்! (தவளை தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் என்பது தெரிந்ததுதான். ஹைக்கூவில் மூன்றாவது அடி தான் சிறப்பு வாய்ந்தது என்பார்கள் ஹைக்கூ ஆய்வாளர்கள். தவளை குதித்திருக்கிறது. ஏன் குதிக்க வேண்டும்? எதாவது துரத்தியதினால் பயந்து குதித்ததா? குளத்திலிருந்து வெளியேறி திரும்பவும் குதிக்கிறதா? அல்லது புதிதாக ஒரு தவளை குதிக்கிறதா? மெதுவாக குளத்திற்குள் இறங்காமல் ஏன் குதித்தது? இணை தேட இருக்குமா? இப்படியே இன்னும் விரித்துச் செல்லலாம்… நீங்களும் சொல்லலாம்…
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் “ஐயப்ப பக்தர்கள்” என்று எழுதலாம் என்று நினைத்து எழுதினேன்.
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
ஐயப்ப பக்தர்கள்
பின்னர் சிந்தித்தேன்… ஐயப்ப பக்தர்கள் குளிப்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகிறது. மனிதர்கள் குளிக்கத்தானே வேண்டும். ஓர் அஃறிணை உயிரை கவிதையில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி “தவளை” என்று சேர்த்தேன். பின்னர் குதிக்கும் என்பதைச் சேர்த்து குதிக்கும் தவளை என்று மூன்றாவது அடியை எழுதி முடித்தேன்.
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை
என்று எழுதி முடித்து ஆழ்ந்து சிந்தித்தேன். நீங்களும் சிந்தியுங்கள்! (தவளை தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் என்பது தெரிந்ததுதான். ஹைக்கூவில் மூன்றாவது அடி தான் சிறப்பு வாய்ந்தது என்பார்கள் ஹைக்கூ ஆய்வாளர்கள். தவளை குதித்திருக்கிறது. ஏன் குதிக்க வேண்டும்? எதாவது துரத்தியதினால் பயந்து குதித்ததா? குளத்திலிருந்து வெளியேறி திரும்பவும் குதிக்கிறதா? அல்லது புதிதாக ஒரு தவளை குதிக்கிறதா? மெதுவாக குளத்திற்குள் இறங்காமல் ஏன் குதித்தது? இணை தேட இருக்குமா? இப்படியே இன்னும் விரித்துச் செல்லலாம்… நீங்களும் சொல்லலாம்…
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
அருமையான பதிவு நண்பரே. இந்த பதிவு வளரும் கவிகளுக்கு பாடமாய் அமையும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
மகிழ்ச்சி தோழமையே... இதை தொடராகவே செய்ய திட்டமிட்டுள்ளேன்... குறைந்தது வாரம் ஒரு ஹைக்கூவையேனும் இப்படிப் பதிய எண்ணியுள்ளேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
கவியருவி ம.ரமேஷ் wrote:[link="/t110186-topic#1063102"]மகிழ்ச்சி தோழமையே... இதை தொடராகவே செய்ய திட்டமிட்டுள்ளேன்... குறைந்தது வாரம் ஒரு ஹைக்கூவையேனும் இப்படிப் பதிய எண்ணியுள்ளேன்...
நல்ல முயற்சி. ஒரு படைப்பாளிக்கு அழகே, அவர் தன்னைப்போல் மற்ற ஒரு படைப்பாளியை உருவாக்குவதே. உங்கள் பதிவால் ஒரு படைப்பாளி உருவாகினும் புகழ் முழுதும் உங்களுக்கே.
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
ஏற்கெனவே இவ்வாறு சில ஹைக்கூக்களை எழுதி பிற தளங்களில் பதிந்திருந்தேன்... காலையில் ஒரு பேஸ்புக் நண்பர் தொடர்பு கொண்டு... நான் ஹைக்கூ எழுத - ஹைக்கூ எழுதலாம் வாங்க என்ற தொடர் பயனுள்ளதாக இருப்பதாகச் சொன்னார். அவருக்கு இன்னொரு நண்பர் சொல்லி என் தொடரை படித்து ஹைக்கூ எழுத ஆரம்பித்து இருக்கிறார். இடையில் அந்தத் தொடரை நிறுத்திவிட்டேன். ஒருவராவது பயன்பெற்றுள்ளாரே என்பதால் அவர் கேட்டுக்கொண்டதின் பேரில் இனி வாரவாரம் ஒரு ஹைக்கூ எழுதலாம் வாங்க தொடரை தொடர முடிவு செய்து தொடங்கியுள்ளேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
மிக்க நன்றி தோழமையே, நிச்சயம் கவிஞர்கள் பிறப்பார்கள் உங்கள் தொடரால்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
கவியருவி ம.ரமேஷ் wrote:மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை
தவளை குதித்ததும்
குளத்தில் அலைகள் வட்டமிட்டது.
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
கிராமத்தில் இருப்பவர்கள் மேற்கண்ட நிகழ்வை பார்த்திருக்கலாம். நான் பார்த்திருக்கிறேன். இப்போது நான் கிராமத்தில் இல்லை. கிராமத்து நினைவுகள் இருக்கிறது… கிராமத்திற்கும் அவ்வவப்போது சென்று வருகிறேன். நண்பர்களோடு குளக்கரையில் அமர்ந்து பேசுவது இன்றும் தொடர்கிறது.
அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் ஒரு நாள் தண்ணீர் பாம்பு கரையில் இருப்பதைக் கண்டு நண்பன் கல்லை எடுத்து பாம்பை அடிக்க முனைந்தான். நண்பர்கள் தடுத்தி நிறுத்தி – பாம்பு எங்கே போகிறது என்று பார்க்கலாம் என கூறினோம். பாம்பு கரையிலேயே இருந்தது. அப்போது தவளை ஒன்று கரையை நோக்கி வந்தது ஒரு துணி துவைக்கும் கல்லின் அருகில் எட்டிப்பார்த்தது.
இதைக்கண்ட தண்ணீர் பாம்பு இரைக்காக அதனை கவ்வ நினைத்திருக்கலாம். நண்பனோ எதேச்சையாகக் கையில் வைத்திருந்த கல்லை குளத்தில் எறிந்தான். அப்போது பாம்பும் குதித்தது. தவளையும் நீரில் மூழ்கிப்போனது. பாம்பிடமிருந்து தப்பித்தது தவளை. அந்த நிகழ்வை இன்று ஹைக்கூவாக மாற்றியிருக்கிறேன்.
உணவுச் சங்கிலியின் விதிப்படி பாம்பு தவளையை உணவாக உட்கொள்வது தவிர்க்கமுடியாதது. அதைத் தடுக்க என் நண்பன் கல் எரிந்திருந்தான் என்றால் பாம்புக்கான உணவை நாங்கள் தந்திருக்க முடியாது. தடுத்திருந்தால் மனித நேயம் ஆகியிருக்குமே தவளையை காப்பாற்றியிருக்கலாமே என்று நீங்கள் நினைத்தால் அது சென்ரியூ கவிதையாகிவிடும். நண்பன் கல் எறிந்தது எதேச்சையானது அதை கவிதைக்குள் கொண்டு வந்துதான் கீழே உள்ளவாறு ஹைக்கூவை எழுதினேன்.
தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
எறிந்த கல்
எறிந்த கல் – ஹைக்கூவுக்குள் சரியாகப் பொருந்தவில்லை. பின்னர் திருத்திய வடிவம்தான் இது.
தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
மேலே உள்ளதை இன்னும் திருத்த வேண்டும் – சுருக்க வேண்டும். எப்படி என்று பார்ப்போம்.
நண்பன் கல் எரிந்தால் அது சென்ரியூ என்று குறிப்பிட்டேன். ஆனால் அந்த கவிதையை சென்ரியூவாக்க விரும்பவில்லை. ஹைக்கூவாக எழுத முனைய துணிந்தேன். இப்படி:
அதே நிகழ்வு – அதே பாம்பு – அதே தவளை – நண்பனை மாற்றிவிட்டேன். குளத்தின் கரையில் பல செடிகள், மரங்கள் இருக்கும். அதிலிருந்து ஏதேனும் ஒன்று கல்லுக்குப் பதிலாக விழுவதாக மாற்றிவிட்டேன். இலை, காய், பழம் இந்த வரிசையில் அலரிப் பூ என்று எழுதினேன்.
தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
இரண்டாவது, மூன்றாவது அடியில் குளம் என்ற சொல் இடம்பெறுகிறது. எனவே இதைச் சுருக்க வேண்டும்.
தவளையைக் கவ்வ
தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
என்று சுருக்கிவிட்டேன். அலரிப்பூவை தேர்ந்தெடுத்ததில் சிக்கல் இருப்பதாக நினைத்தேன். அதில் என்ன சிக்கல் என்கிறீர்களா? இருக்கிறது. அலரிப்பூ இறைவனுக்குச் சூட பயன்படுத்துவார்கள். சரி அந்தப் பூ உதிர்வது இறைவனே பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்றிவிட்டான் என்று உயர்வாக நீங்கள் எண்ணலாம். ஆனால், அது எனக்குப் பிடிக்கவில்லை. இறைவன் தானே உலக உயிர்களைப் படைத்து எது எது எதை எதை உண்ணலாம் என்றும் குறித்திருப்பான். அதனால் மாற்ற நினைத்தேன்.
மேலும், அலரிப்பூ என்பது எப்போதாவது ஒரு முறைதான் விழும். அதனாலும், அதை மாற்ற நினைத்தேன். ஆலம்பழம் என்று மாற்றலாம் என்று எண்ணினேன். ஆமாம் ஆலம்பழம் சிறப்பாகப் பொருந்தி வருகிறது. எப்படிப் பொருந்துகிறது என்று நீங்களே பாருங்களேன்.
அலரிப்பூ குளத்தில் விழுந்தால் ஒரு முறைதான் பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்ற முடியும். அடிக்கடிக் காப்பது யார்? ஆலம் மரத்தில் பழம் பழுத்தால் அதை உண்ண பல பறவைகள் வரும். அதனால் பழம் அடிக்கடி கீழே விழும். அதனால் அடிக்கடி தவளை பாம்பிடமிருந்து தப்பிக்க வழி இருக்கிறது. இப்போது ஹைக்கூ, ஹைக்கூவாக இருக்கிறது. இப்படி:
தவளையைக் கவ்வ
தயாராய் பாம்பு
குளத்தில் விழும் ஆலம்பழம்
எல்லாம் சரி… ஒரு ஹைக்கூ எழுதும்போது இத எல்லாத்தையுமா பாத்து எழுதுவாங்க – சிந்திப்பாங்க. சரி… பாவம் அந்தத் தவளைக்கு உணவு கொடுப்பது யார்? சிந்தியுங்கள் நீங்களும் ஹைக்கூ எழுதலாம். எழுதுங்கள்… என் ஆசையும் நீங்கள் எழுத வேண்டும் என்பதுதான்… (அடுத்த வாரம் இதே எங்க ஊர் குளத்தொடும் தவளையோடும் – ஆனால் பாம்பு தவளையை உண்ணும்படி ஒரு ஹைக்கூவோடு – ஹைக்கூ எழுதலாம் வாங்க தொடரில் சந்திக்கிறேன். – அடுத்த வாரத்துக்கு இப்பவே எழுதி வைச்சுட்டேன்!)
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
கிராமத்தில் இருப்பவர்கள் மேற்கண்ட நிகழ்வை பார்த்திருக்கலாம். நான் பார்த்திருக்கிறேன். இப்போது நான் கிராமத்தில் இல்லை. கிராமத்து நினைவுகள் இருக்கிறது… கிராமத்திற்கும் அவ்வவப்போது சென்று வருகிறேன். நண்பர்களோடு குளக்கரையில் அமர்ந்து பேசுவது இன்றும் தொடர்கிறது.
அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் ஒரு நாள் தண்ணீர் பாம்பு கரையில் இருப்பதைக் கண்டு நண்பன் கல்லை எடுத்து பாம்பை அடிக்க முனைந்தான். நண்பர்கள் தடுத்தி நிறுத்தி – பாம்பு எங்கே போகிறது என்று பார்க்கலாம் என கூறினோம். பாம்பு கரையிலேயே இருந்தது. அப்போது தவளை ஒன்று கரையை நோக்கி வந்தது ஒரு துணி துவைக்கும் கல்லின் அருகில் எட்டிப்பார்த்தது.
இதைக்கண்ட தண்ணீர் பாம்பு இரைக்காக அதனை கவ்வ நினைத்திருக்கலாம். நண்பனோ எதேச்சையாகக் கையில் வைத்திருந்த கல்லை குளத்தில் எறிந்தான். அப்போது பாம்பும் குதித்தது. தவளையும் நீரில் மூழ்கிப்போனது. பாம்பிடமிருந்து தப்பித்தது தவளை. அந்த நிகழ்வை இன்று ஹைக்கூவாக மாற்றியிருக்கிறேன்.
உணவுச் சங்கிலியின் விதிப்படி பாம்பு தவளையை உணவாக உட்கொள்வது தவிர்க்கமுடியாதது. அதைத் தடுக்க என் நண்பன் கல் எரிந்திருந்தான் என்றால் பாம்புக்கான உணவை நாங்கள் தந்திருக்க முடியாது. தடுத்திருந்தால் மனித நேயம் ஆகியிருக்குமே தவளையை காப்பாற்றியிருக்கலாமே என்று நீங்கள் நினைத்தால் அது சென்ரியூ கவிதையாகிவிடும். நண்பன் கல் எறிந்தது எதேச்சையானது அதை கவிதைக்குள் கொண்டு வந்துதான் கீழே உள்ளவாறு ஹைக்கூவை எழுதினேன்.
தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
எறிந்த கல்
எறிந்த கல் – ஹைக்கூவுக்குள் சரியாகப் பொருந்தவில்லை. பின்னர் திருத்திய வடிவம்தான் இது.
தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
மேலே உள்ளதை இன்னும் திருத்த வேண்டும் – சுருக்க வேண்டும். எப்படி என்று பார்ப்போம்.
நண்பன் கல் எரிந்தால் அது சென்ரியூ என்று குறிப்பிட்டேன். ஆனால் அந்த கவிதையை சென்ரியூவாக்க விரும்பவில்லை. ஹைக்கூவாக எழுத முனைய துணிந்தேன். இப்படி:
அதே நிகழ்வு – அதே பாம்பு – அதே தவளை – நண்பனை மாற்றிவிட்டேன். குளத்தின் கரையில் பல செடிகள், மரங்கள் இருக்கும். அதிலிருந்து ஏதேனும் ஒன்று கல்லுக்குப் பதிலாக விழுவதாக மாற்றிவிட்டேன். இலை, காய், பழம் இந்த வரிசையில் அலரிப் பூ என்று எழுதினேன்.
தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
இரண்டாவது, மூன்றாவது அடியில் குளம் என்ற சொல் இடம்பெறுகிறது. எனவே இதைச் சுருக்க வேண்டும்.
தவளையைக் கவ்வ
தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
என்று சுருக்கிவிட்டேன். அலரிப்பூவை தேர்ந்தெடுத்ததில் சிக்கல் இருப்பதாக நினைத்தேன். அதில் என்ன சிக்கல் என்கிறீர்களா? இருக்கிறது. அலரிப்பூ இறைவனுக்குச் சூட பயன்படுத்துவார்கள். சரி அந்தப் பூ உதிர்வது இறைவனே பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்றிவிட்டான் என்று உயர்வாக நீங்கள் எண்ணலாம். ஆனால், அது எனக்குப் பிடிக்கவில்லை. இறைவன் தானே உலக உயிர்களைப் படைத்து எது எது எதை எதை உண்ணலாம் என்றும் குறித்திருப்பான். அதனால் மாற்ற நினைத்தேன்.
மேலும், அலரிப்பூ என்பது எப்போதாவது ஒரு முறைதான் விழும். அதனாலும், அதை மாற்ற நினைத்தேன். ஆலம்பழம் என்று மாற்றலாம் என்று எண்ணினேன். ஆமாம் ஆலம்பழம் சிறப்பாகப் பொருந்தி வருகிறது. எப்படிப் பொருந்துகிறது என்று நீங்களே பாருங்களேன்.
அலரிப்பூ குளத்தில் விழுந்தால் ஒரு முறைதான் பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்ற முடியும். அடிக்கடிக் காப்பது யார்? ஆலம் மரத்தில் பழம் பழுத்தால் அதை உண்ண பல பறவைகள் வரும். அதனால் பழம் அடிக்கடி கீழே விழும். அதனால் அடிக்கடி தவளை பாம்பிடமிருந்து தப்பிக்க வழி இருக்கிறது. இப்போது ஹைக்கூ, ஹைக்கூவாக இருக்கிறது. இப்படி:
தவளையைக் கவ்வ
தயாராய் பாம்பு
குளத்தில் விழும் ஆலம்பழம்
எல்லாம் சரி… ஒரு ஹைக்கூ எழுதும்போது இத எல்லாத்தையுமா பாத்து எழுதுவாங்க – சிந்திப்பாங்க. சரி… பாவம் அந்தத் தவளைக்கு உணவு கொடுப்பது யார்? சிந்தியுங்கள் நீங்களும் ஹைக்கூ எழுதலாம். எழுதுங்கள்… என் ஆசையும் நீங்கள் எழுத வேண்டும் என்பதுதான்… (அடுத்த வாரம் இதே எங்க ஊர் குளத்தொடும் தவளையோடும் – ஆனால் பாம்பு தவளையை உண்ணும்படி ஒரு ஹைக்கூவோடு – ஹைக்கூ எழுதலாம் வாங்க தொடரில் சந்திக்கிறேன். – அடுத்த வாரத்துக்கு இப்பவே எழுதி வைச்சுட்டேன்!)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
ஹைக்கூ எழுதலாம் முயற்சிக்குப் பாராட்டுக்கள் ரமேஷ்...
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
மகிழ்ச்சி தோழமையே...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஹைக்கூ எழுதலாம் வாங்க
» தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
» சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
» சிரிக்கலாம் வாங்க....{தொடர் பதிவு}
» தெரிஞ்சுக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)
» தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
» சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
» சிரிக்கலாம் வாங்க....{தொடர் பதிவு}
» தெரிஞ்சுக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|