புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_m10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_m10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_m10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_m10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_m10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_m10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_m10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_m10பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 10:23 am

பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Ld2344

வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோக-மூர்த்தி

நம் நாட்டை ‘தாய் நாடு’ என்றும், நதிகளை ‘கங்கா, யமுனா, காவிரி’ என்று பெண்ணாகப் பாவிக்கும் அதே சமுதாயம்தான் ரத்தமும் சதையுமான பெண்களை போகப் பொருட்களாகப் பார்க்கிற அவலத்தையும் செய்கிறது. இன்று இந்த தேசத்தின் மூலை முடுக்கிலெல்லாம் பேசப்படும் செய்தியாகிவிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, நாம் அனைவரும் சேர்ந்து களை எடுக்க வேண்டிய ஒரு விஷச்செடியாக வளர்ந்து நிற்கிறது. பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இவ்வாறு ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால், தவறு இழைத்த கயவனை தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டத்தைத் தவிரவும், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை தடுக்கவும், விசாரிக்கவும், நிவாரணம் தரவும் இந்த 2013ம் ஆண்டுச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னோடியாக விளங்கியது உச்ச நீதிமன்றம் Vishaka - Ors vs State Of Rajasthan - Ors வழக்கில் கொடுத்த தீர்ப்பேயாகும். இந்த நிலையை விளக்க சற்று பின் நோக்கி செல்ல வேண்டும். பன்வாரி தேவி என்ற 50 வயது தாண்டிய ஒரு பெண்மணி ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு சமூகப் பணியாளராக பணியாற்றி வந்தார். அவர் மீது உயர்சாதியைச் சார்ந்த ஆண்கள் கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபட்டார்கள். அந்தக் கொடுமையை நிகழ்த்திய அவர்கள், ‘அது இவளைப் போன்றவர்களுக்கு சரியான பாடம்’ என்று கொக்கரித்தார்கள்.

பன்வாரி தேவி செய்த தவறுதான் என்ன?

இந்தச் சமுதாயத்தில் பரவி கிடக்கும் குழந்தைத் திருமணத்தை தடுத்ததுதான். ஒரு நல்ல செயல் செய்ததற்காக தன்னை பாலியல் வன்முறைக்கு பலி கொடுத்தும் கலங்காத அந்த வீர மங்கை, துணிந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு நடத்திய போதும், அந்த பெண்ணுக்கு கீழமை நீதிமன்றத்தில் நீதி கிடைக்கவில்லை. காவல்துறை, மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் தவறு இழைத்த ஆண்களுக்கு சாதகமாக சாட்சியம் அளித்தார்கள். மனம் தளராத பன்வாரி தேவி, பெண்கள் அமைப்புடன் இணைந்து போராடி, உச்ச நீதிமன்றம் வரை வழக்காடி, வழக்கை வென்றதுடன் பணிக்குச் செல்லும் இந்தியப் பெண்ணினத்துக்கு விடிவெள்ளியாக அமைந்த தீர்ப்புக்கும் வழி செய்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 10:25 am



இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கியது. அதோடு தீர்ப்பிலுள்ள விதிமுறைகளின்(Guidelines) படி, பாலியல் வன்முறையிலிருந்து பணி செய்யும் பெண்களைப் பாதுகாக்கும் வழிகளுக்கான சட்டம் இயற்றப்படும் வரை, இந்த வழக்கின் தீர்ப்பே சட்டமாகப் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

விதிமுறைகள் மனித உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 2(D) மனித உரிமை என்றால் என்ன என்பதை மனதில் கொண்டு...

ஒரு நிறுவனம் அல்லது கல்வி நிலையத்தின் தலைவர் அல்லது அதன் பொறுப்பிலிருப்பவர், பணியின் போது பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான வன்கொடுமைகளைத் தடுக்கவும், விசாரிக்கவும், நிவாரணம் தரவும் வழிவகை செய்வது அவசியம்.

பாலியல் வன்முறை என்பது... உடல்ரீதியாக தொடுதல் முதல் வன்புணர்ச்சி வரை, பாலியல் ஆசைக்கு இணங்கக் கோருதல், பாலியல் ரீதியான பேச்சுக்களும் கேலிகளும், பாலியல் உணர்வைத் தூண்டும்படியான படங்களைக் காட்டுதல், உடலாலோ, பேச்சினாலோ தீய நடத்தையாலோ வன்புணர்வில் ஈடுபடுதல்.

பாலியல் வன்முறையை தடுப்பதற்கான தகுந்த வழிமுறைகளை ஒரு நிர்வாகமோ, நிறுவனமோ ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

அரசாங்கம் அல்லது பொது நிறுவன (Public Sector) விதிகளில் பாலியல் வன்முறையை தடுப்பதற்கான சட்டமும் தண்டனையும் இருத்தல் அவசியம். தனியார் நிறுவனமெனில் நிலையான அறிக்கையில் (Standing Orders) குறிப்பிடுவது அவசியம்.

பணியிடத்தில் பெண் ஊழியர் களுக்கு வேலை செய்வதற்கு தேவையான வசதிகள், போதிய ஓய்வு, சுகாதார வசதிகள் செய்து தருதல் அவசியம். எந்தவொரு பெண் ஊழியருக்கும் பணியிடத்தில் தனக்கு போதிய வசதியோ பாதுகாப்போ இல்லை என்று நினைக்கும்படி இருத்தல் கூடாது.

தவறு செய்தவரின் நடத்தை அல்லது செயல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழோ, வேறு ஏதாவது தனிச் சட்டத்தின் கீழோ தண்டனைக்குரிய குற்ற மென்றால், அந்தச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தகுந்த முயற்சி செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண் தனது பணி மாற்றத்துக்காகவோ, குற்றம் இழைத்தவரின் பணி மாற்றத்துக் காகவோ கோரலாம்.

புகார் கொடுத்ததற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது எந்த வித காழ்ப்புணர்ச்சியையும் காட்டுவதோ, அவர்மீது தவறான நடவடிக்கை எடுப்பதோ கூடாது.

புகார் பெற்றவுடன் நிர்வாகம் உடனடியாக அவர்களின் விதிகளுக்கு உட்பட்டு விசாரணை மேற்கொள்வது அவசியம்.

புகார் ஏற்புக் குழு அமைத்தல், அதற்கு ஒரு பெண்ணை தலைமை ஏற்கச் செய்தல், அதிலுள்ள பாதி உறுப்பினர்கள் பெண்களாக இருத்தல், மேலும் மூன்றாம் நபராக பாலியல் வன்முறையில் பாதிக்கப் படும் பெண்களுக்கு உதவும் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடுதல், புகாரின் ரகசியம் காத்தல், தேவையெனில் மனநல ஆலோசகரை நியமித்தல் போன்றவை புகார் ஏற்புக் குழுவின் கடமைகளாகும். அரசுக்கு ஆண்டு அறிக்கை சமர்ப்பிப்பதும் அவசியம்.

தொழிலாளிகள் பணியிடத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை பற்றி அவர்கள் கூட்டங்களில் வெளிப்படுத்த அனுமதித்தல்.

பெண் ஊழியர்களின் சட்ட உரிமைகள் பற்றி அறிவிப்புப் பலகையில் அறிவிப்பு வெளியிடுதல்.

நிறுவனத்தைச் சாராத ஒருவரால் தன் நிறுவனத்தைச் சார்ந்த பெண்ணுக்கு ஒருவேளை பாலியல் வன்கொடுமை ஏற்படும் தருணங் களிலும் தகுந்த உதவி செய்தல்.

இத்தீர்ப்பு வழங்கப்பட்ட ஆண்டு 1997. ஆனால், 2012ல்தான் அதற்கான மசோதா (Bill) லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு, சமீபத்தில் ராஜ்யசபாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை தடுக்கவும், விசாரிக்கவும், நிவாரணம் தரவும் இப்போதுதான் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த ‘விசாகா’ வழக்கோடு, இன்னும் இரு வழக்குகளும் குறிப்பிடத்தக்கவை. Apparel Export Promotion Council Vs A.K.Chopra வழக்கின் தீர்ப்பில், பாலியல் வன்முறை என்பது பெண்களுக்கு எதிரான Gender Discrimination என்றும், ஒரு பெண் ஊழியரை மேலதிகாரி உடல்ரீதியாக தவறான எண்ணத்தில் தொடுவதும் பாலியல் வன்முறையே என்றும் கூறப்பட்டுள்ளது.



பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 10:27 am



Medha Kotwal Lele Vs Union of India and others வழக்கில் விசாகா வழக்கின் விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த மாநில மற்றும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையைத் தடுக்கவும் விசாரிக்கவும் நிவாரணம் தரவும் கூடிய சட்டம் 2013...

எந்த ஒரு பணியிடத்திலும் ஒரு பணிக்காக நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ, தினக்கூலியாகவோ, நேரிடையாகவோ ஒப்பந்ததாரர் மூலமாகவோ அமர்த்தப்பட்டு, ஊதியம் பெற்றோ, பெறாமலோ தன்னார்வமாக தொண்டு செய்தோ, பயிற்சிப் பணியாளராகவோ (Trainee/Apprentice) நிரந்தரப் பணிக்கு காத்திருப்பவராகவோ (Probationer) உள்ள அனைவரும், இந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எந்த ஒரு நபர் நிறுவனத்தின் பொறுப்பாளராகவோ, கண்காணிப்பாளராகவோ அந்த பணியிடத்தின் பொறுப்பை தன்னகத்தே கொண்டவராக இருப்பவரே இந்தச் சட்டத்தின் கீழ் பொறுப்பாளராகிறார்.

எந்த வயதைச் சார்ந்த பெண்ணும் - அந்த நிறுவனத்தில் பணிபுரிபவரோ, அந்த நிறுவனத் துக்குள் வந்திருப்பவரோ பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் நிலையில் இருப்பவரை பாதிக்கப்பட்ட பெண்ணாக இந்தச் சட்டம் சொல்கிறது.

வீட்டுவேலை செய்யும் பெண்களும் இந்தச் சட்டத்தின் கீழ் நிவாரணம் கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பணியிடம் என்றால் ஒரு பணியாளர் தன்னுடைய பணி நிமித்தமாக பணியின் போது செல்லக்கூடிய இடங்கள். இதனுள் பணிக்கு வந்து போகும் போக்குவரத்து வாகனமும் அடங்கும். இச்சட்டத்தின் பிரிவு 3 (2)ன் படி பாலியல் வன்முறை பட்டியலில்...

தன் இச்சைக்கு இணங்கும் பட்சத்தில் அவள் பணியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வசதி செய்து கொடுக்க உந்துதல் ஏற்படுத்துதல்.

தன் இச்சைக்கு இணங்காத பட்சத்தில், அவள் பணியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொல்லை கொடுத்தல்.

தன் இச்சைக்கு இணங்காத பட்சத்தில், பெண்ணின் இப்போதைய பணிக்கோ, எதிர்கால பணிக்கோ பங்கம் விளைவிப்பதாக மிரட்டுதல்.

பாதிக்கப்பட்ட பெண் செய்யும் பணியின் இடையே தொந்தரவு செய்தல், பணியில் சிரமம் ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குதல்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநலம் அல்லது உடல் நலத்துக்குப் பங்கம் ஏற்படக்கூடிய செயலை செய்தல் ஆகியவையும் அடங்கும்.

இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனமோ அதன் உரிமையாளரோ ‘உள்கட்டமைப்பு புகார் குழு’அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 3 ஆண்டுகளுக்கு செயல்படும். குழுவின் தலைவராக அந்நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த பெண் அதிகாரி செயல்படுவார். அந்நிறுவனத்தை சார்ந்த 2 ஊழியர்கள் - பெண்கள் நலத்துக்காக அர்ப்பணித்துக்கொண்ட சமூக ஆர்வலர்கள் அல்லது சட்டம் தெரிந்த நபர்கள் குழுவில் இருப்பது அவசியம். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒரு நபர் இக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டும். பாதியளவு அங்கத்தினர்கள் பெண்களாக இருப்பது அவசியம்.

Local Complaints Committee என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க சட்டம் வலியுறுத்துகிறது. உள்கட்டமைப்பு புகார் குழு (Internal Complaints Committee) இல்லாத பணியிடங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் இங்கு புகார் கொடுக்கவும் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் தங்கள் புகாரை தாக்கல் செய்யவும் இது அவசியம். மாவட்ட அலுவலரால் ஒவ்வொரு தாலுகாவிற்கும் புகாரை பெற ஒரு ழிஷீபீணீறீ ளியீயீவீநீமீக்ஷீ நியமிக்கப்படுவார். அவர் புகாரினை Local Complaints Committee‚° 7 நாட்களுக்குள் பரிந்துரை செய்வார்.

இதற்கு சமூக அக்கறை கொண்ட - மிகவும் அறியப்பட்ட ஒரு பெண் தலைவராக நியமிக்கப்படுவார். அந்த தாலுகாவில் பணிபுரியும் ஒரு பெண் உறுப்பினராக செயல்படுவார். மேலும் இரண்டு உறுப்பினர்கள். குறிப்பாக ஒருவர் பெண்ணாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் அங்கம் வகிப்பவர்களாகவும் அவர்களில் ஒருவர் சட்டம் தெரிந்தவராக இருப்பதும் அவசியம். அதிலும் ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவராக இருப்பது அவசியம். 3 ஆண்டுகளுக்கு இந்தக் குழு செயல்படும்.

புகார் செய்யும் முறையும் விசாரணையும்...

பாதிக்கப்பட்ட பெண் தான் பாதிக்கப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் ICC (internal compliants commitee) அல்லது LCC (local complaints commitee) புகார் தாக்கல் செய்ய வேண்டும். புகார் கொடுக்க காலதாமதம் ஆகும் பட்சத்தில் அதற்கான காலவரையறை, அவசியம் இருப்பின் நீட்டிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண் மனநிலை காரணமாகவோ, உடல்நிலை காரணமாகவோ அல்லது அவருக்கு மரணம் சம்பவிக்கும் பட்சத்தில் புகார் தாக்கல் செய்யமுடியாத பட்சத்தில் அவருடைய வாரிசுதாரர் களோ, அவர் சார்பாக யாரேனுமோ தாக்கல் செய்யலாம். புகாரின் மீது விசாரணை தொடங்குவதற்கு முன்னரோ அல்லது விசாரணையின் நடுவிலோ சமரச முயற்சி (Conciliation) மேற்கொள்ள சட்டத்தில் வழிவகை உள்ளது.

எனினும் இந்த சமரசத்தில் பணப் பரிமாற்றம் இருக்கக் கூடாது. ஒருவேளை விசாரணையின் இடையே சமரச முடிவு ஏற்படுமெனில் விசாரணை கைவிடப்படும். எதிராளி நிறுவனத்தின் பணியாளராக இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் பணி விதிகள் பின்பற்றப்படும். இந்த விசாரணை இயற்கை நீதிக்குட்பட்டே நடைபெறும். 90 நாட்களுக்குள் விசாரணை முடிவு பெற வேண்டும். இக்குழு விசாரணை முடிவில் தனது அறிக்கை யினை நிறுவனத்தின் உரிமை யாளருக்கோ, மாவட்ட அலுவலருக்கோ சமர்ப்பிக்க வேண்டும். இந்த விசார ணைக்குழு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாக எதிராளியின் ஊதியத்திலிருந்தோ பெற்றுத்தர பரிசீலனை செய்ய வேண்டும்.

விசாரணையின் போது பெண்களுக்கு இருக்கும் உரிமைகள்...

பாதிக்கப்பட்ட தனக்கோ, குற்றம் சாட்டப்பட்ட எதிர் தரப்பினரையோ பணிமாற்றம் செய்யக் கோர உரிமை உண்டு. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 மாதங்கள் வரை விடுப்பு கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த விடுப்பு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள விடுப்புகள் அல்லாது கூடுதல் விடுப்பாக கருதப்படும். தவறான புகார் மற்றும் சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குறைந்த பட்ச தண்டனை கொடுக்க சட்டம் வழி செய்துள்ளது. விசாரணைக் குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் மனவலிக்கும் வேதனைக்கும், மன உளைச்ச லுக்கும், பணி மாற்றத்துக்கும், பணி இழப்புக்கும், பாலியல் வன்முறையால் ஏற்பட்ட மருத்துவச் செலவுக்கான இழப்பீட்டுக்கும், எதிராளியின் பொருளாதாரத் தகுதியின் அடிப்படையில் மொத்த தொகையாகவோ தவணை முறையாகவோ பெற்றுத்தர வழி செய்யலாம்.

பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய விவரங்களை வெளியிடுவது அல்லது ஊடகங்கள் வாயிலாக தெரிவிப்பது அல்லது தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெறுவது மறுக்கப்பட்டி ருக்கிறது. Vishaka - Ors vs State Of Rajasthan - Ors வழக்கின் தீர்ப்பில் கொடுக்கப்பட்ட விதிமுறைகளில் பெரும்பான் மையானவை இந்தச் சட்டத்தின் விதிகளில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் விதிகளைப் பின் பற்றாத அல்லது கடமைகளை புறக்கணிக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் செயல்படும் குழுக்கள் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்வது அவசியம். இந்தச் சட்டத்தின் கீழ் எழும் வழக்குளை விசாரிக்க முதன்மை குற்றவியல் நீதிபதி அல்லது மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்டிரேட் அந்தஸ்திலுள்ள நீதிபதி விசாரிக்க வழிவகை செய்துள்ளது.

இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னோடி யாக விளங்கிய விசாகா தீர்ப்புக்குப் பிறகு, 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டு விட்டாலும் அதற்கான விதிகள் இன்னும் இயற்றப்படாமலேயே இருக்கின்றன. கூடிய விரைவில் அந்த விதிகள் இயற்றப்படாவிட்டால் இச்சட்டத்தினை அமல் செய்வது கடினம். எந்தச் சமுதாயமும் மேன்மை பெற வேண்டு மென்றால் பெண்மையை போற்றுவது அவசியம்.

[thanks] தினகரன் [/thanks]



பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 22, 2014 8:00 pm

பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 103459460 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக