ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

+2
பாலாஜி
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Empty ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by சிவா Thu May 08, 2014 9:43 am

First topic message reminder :

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 10172786_667867823286318_5960659694963720843_n

புதுடில்லி : தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான, 'ஜல்லிக்கட்டு' போட்டிகளை நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. 'மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கும் சில அடிப்படை உரிமைகள் உள்ளன. அவை மீறப்படுவதை ஏற்க முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பாரம்பரிய விளையாட்டு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில், காளைகளை அடக்கும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரதான இடம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையின் போது, தமிழகத்தின் பல பகுதிகளில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.இதற்காக, ஆண்டு முழுவதும் விரிவான ஏற்பாடுகளை, இப்போட்டிகளை நடத்துபவர்கள் மேற்கொள்வர். இந்தப் போட்டிகளை, ஏராளமானோர் ஆர்வமாக பார்த்து ரசிப்பதும் வழக்கம்.தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் என்றில்லாமல், சில குறிப்பிட்ட கிராமங்களில் மட்டுமே, இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வந்ததால், இதைப் பார்க்கும் ஆர்வம், பிற பகுதி மக்களுக்கு அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்றே.இந்நிலையில், 'ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது, காளைகள் துன்புறுத்தப்படுவதால், அந்த போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, பிராணிகள் நல அமைப்புகள் சார்பில், புகார் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

நல அமைப்புகள்

கடந்த ஆண்டில், இடைக்கால உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட், 'வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை, கடுமையான நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திக் கொள்ளலாம்' என, அனுமதித்தது. இதையடுத்து, தீவிர கெடுபிடிகளுடன், கடும் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.இந்த வழக்கு விசாரணையின்போது, 'ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள், பலவிதமான கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால், போட்டிகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்' என, பிராணிகள் நல அமைப்புகள் வலியுறுத்தின.தமிழக அரசு, தன் வாதத்தில், 'அரசு மற்றும் கோர்ட் விதித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன' என, தெரிவித்தது.இந்நிலையில், வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான, இரண்டு நீதிபதிகள் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: ஜல்லிக்கட்டை முறைப்படுத்துவதற்கு, 2011ல் தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது. ஜல்லிக்கட்டு நடத்துவதால், உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன; காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. பார்வையாளர்களும், போட்டியில் பங்கேற்பவர்களும் காயப்படுகின்றனர். ஜல்லிக்கட்டை நடத்த, என்ன தான் விதிமுறைகள் அரசு கொண்டு வந்தபோதிலும், அந்த விதிமுறைகள், முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை.ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மீது, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஊற்றுவது, காளைகளின் வாலை முறுக்குவது போன்ற, பலவிதமான சித்ரவதைகளுக்கு காளைகள் உட்படுத்தப்படுகின்றன.

விலங்கு உரிமை

மனிதர்களுக்கு மட்டும் தான் அடிப்படை உரிமை உள்ளது என, கூற முடியாது; விலங்குகளுக்கும் உள்ளது. அந்த உரிமையை மீறி, விலங்குகளை துன்புறுத்த முடியாது.பல நாடுகளில், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் இருப்பதாகவும், இது காலம் காலமாக தமிழகத்தில் ஒரு பாரம்பரிய விளையாட்டு என்றும், அதை தடை செய்யக் கூடாது என்றும், தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை, நியாயமானது அல்ல. விலங்குகளைத் துன்புறுத்தி, ஒரு விளையாட்டை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால், காலம் காலமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த வீர விளையாட்டை, இனிமேல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்பட்ட காளைகள், இனிமேல், விவசாய தொழில்களில் ஈடுபடுத்தப்படும்.

'ரேக்ளா ரேஸ்'களுக்கும் தடை:

'ஜல்லிக்கட்டு' போட்டிகளுக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 'ரேக்ளா ரேஸ்' எனப்படும், மாட்டு வண்டி போட்டிகளுக்கும் தடை விதித்துள்ளனர். இது குறித்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறும் போது, 'தமிழகம், மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில், வண்டிகளில் மாடுகளை பூட்டி, அவற்றை வேகமாக ஓட்டிச் செல்லும் போட்டி நடத்தப்படுகிறது; அந்த போட்டிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது' என்றனர்.

மேலும், இத்தகைய போட்டிகள் நடைபெறாமல் தடுக்க, தேவையான கண்காணிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள, விலங்குகள் நல வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சட்டசபைகளிலும், பார்லிமென்டிலும், விலங்குகள் துன்புறுத்தலை தடுக்கும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

ஜல்லிக்கட்டிற்கு தடை எதிர்த்து மேல்முறையீடு: விழா குழுவினர் கருத்து

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு கருதப்படுகிறது. தை இரண்டாம் நாளில், அனைத்து கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், அலங்காநல்லுார், பாலமேடு ஜல்லிக்கட்டு சுற்றுலா பிரசித்தி பெற்றது.


அதிர்ச்சி:

ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்த தடை இருந்த போதும், கோர்ட் வழிகாட்டுதல்படி நடந்தன. தற்போது ஜல்லிக்கட்டு நடத்த, மீண்டும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது, விழாக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்று தர வேண்டும், என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நாராயணசாமி, பேரூராட்சித் தலைவர், பாலமேடு: உழவு மாடுகளுக்கு, தை இரண்டாம் நாள் கொம்பில் துண்டு கட்டி, அதை அவிழ்க்க, மாமன் மச்சான் உறவு முறையில் இருப்பவர்களுக்கு சவால் விடுவோம். மஞ்சமலை ஆற்றில் நடக்கும் துண்டு அவிழ்க்கும் நிகழ்ச்சி, பின் ஜல்லிக்கட்டாக மாறியது. மாடு பிடி வீரர்களை, வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஜல்லிக்கட்டிற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வருத்தமளிக்கிறது.நான்கு ஆண்டுகளாக, பேரூராட்சி சார்பில் ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடந்தது. காளைகள் துன்புறுத்தப்படவில்லை; வீரர்கள் காயம்படவில்லை. இத்தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

பாலாஜி, ஜல்லிக்கட்டு விழாக்குழு கவுரவத் தலைவர், அலங்காநல்லுார்: ஜல்லிகட்டு நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் பார்ப்பர். விலங்குகள் நல வாரியத்தினர் கொடுத்த தகவலின்படி ஜல்லிக்கட்டு நடத்த, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. தமிழக பாரம்பரிய விளையாட்டிற்கு எதிரானது. தமிழக அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள்

ராஜசேகர், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர், மதுரை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது எதிர்பாராதது. மாநிலத்தில் நுாற்றுக்கணக்கான இடங்களில் நடந்த இந்த வீர விளையாட்டு, பல்வேறு காரணங்களால் தற்போது, 30 இடங்களில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது.ஜல்லிக்கட்டில், ஓரிரு வினாடிகள் மட்டும் காளைகள் களத்தில் நிற்கின்றன. பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனியில் நடக்கும் இதுபோன்ற விளையாட்டுகள் குறித்தும், கோர்ட்டில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது. 400 கிலோ எடையுள்ள மாடு, 110 கிலோ எடை வரை, சாதாரண நிலையில் தாங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி பகுதியில் கூட, 400 ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

[thanks] தினமலர் [/thanks]


ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Empty Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by கிருஷ்ணா Sat May 10, 2014 11:35 am

நல்லது. இப்படி நாலு பேர் ஆதரவு தந்தால் எதுவும் நடக்கும். :-)


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Empty Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by ஜாஹீதாபானு Sat May 10, 2014 1:34 pm

யினியவன் wrote:[link="/t110081-topic#1062231"]நலம் பானு. நீங்க எப்படி இருக்கீங்க?

நானும் நலம் அண்ணாபுன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Empty Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by சிவா Sun May 11, 2014 6:21 pm

ஜல்லிக்கட்டுக்கு தடை: தமிழர்களின் அடையாளம் காப்பாற்றப்பட வேண்டும்- கருணாநிதி வலியுறுத்தல்


சென்னை: "தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காகவும்; தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான அனுமதியினைப் பெற வேண்டும்" என்று தி.மு.க தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டு" விளையாட்டு தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில், "வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்திக் கொள்ளலாம்" என்று கடந்த ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்; "ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள், பலவிதமான கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால், போட்டிகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்" என பிராணிகள் நல அமைப்புகள் முறையிட்டுக் கொண்டதன் அடிப்படையில்; "மனிதர்களுக்கு மட்டும்தான் அடிப்படை உரிமை உள்ளது எனக் கூறமுடியாது; விலங்குகளுக்கும் உள்ளது. அந்த உரிமையை மீறி விலங்குகளைத் துன்புறுத்த முடியாது. எனவே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது" என்று தீர்ப்பளித்துள்ளது.

தமிழர்களின் நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க பண்பாட்டின் அடையாளமாகவே வீர விளையாட்டுகள் போற்றப்பட்டு வருகின்றன. வீரமும் காதலும் தமிழர் பண்பாட்டின் இரு கண்களாகும்.

அகநானூறு மற்றும் புறநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரால் குறிக்கப்படும் வீர விளையாட்டு, எருதுகளோடு வீரங்காட்டி விளையாடி அவற்றை அரவணைத்துக் காத்தல் என்ற பொருளை உள்ளடக்கியதாகும். பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில், அதாவது மூன்றாம் நூற்றாண்டில் இந்த விழா பற்றிய குறிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து தமிழகத்தை நோக்கி பிற நாட்டவர்களின் கவனத்தை ஈர்த்திடக் கூடிய பண்பாட்டுத் திருவிழா ஜல்லிக்கட்டு ஆகும்.

தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது 2007ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு போட்டிகள் அரசு நிர்வாகத்தின் கண் காணிப்பில் நடத்தப்பட்டன.

அதைப்போலவே 2008ஆம் ஆண்டும் கழக அரசால் முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி பெறப்பட்டு; உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் அரசின் நேரடிக் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

2009ஆம் ஆண்டு கழக ஆட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நெறிப் படுத்துவதற்கெனச் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுதல்– மாவட்ட ஆட்சியர் இசைவளிக்கும் இடத்திலேயே போட்டி நடத்துதல்– போட்டி நடத்தப்படும் இடத்தில் ஆறு அடி உயரத்திற்கு இரட்டைத் தடுப்பு அரண்கள் அமைத்தல்– பொதுப்பணித் துறையினரிடமிருந்து பாதுகாப்புச் சான்றிதழ் பெறுதல்– போட்டி நடக்கும் இடத்தில் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்தல்– அனைத்து ஏற்பாடுகளையும் துணை ஆட்சியர் ஒருவர் கண்காணிப்பில் செய்தல் போன்ற நிபந்தனைகள் அந்த சட்டத்திலே இடம் பெற்றிருந்தன.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் விழாக்குழுவினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வேண்டு கோளையும் உணர்வுகளையும் மதித்தும்; ஜல்லிக் கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்படும் தடையினால் ஏற்படும் சட்டம் -ஒழுங்கு விளைவுகளை எண்ணிப் பார்த்தும்; தமிழகத்தில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகள் கேரளாவுக்கு அடிமாடுகளாக அனுப்பப்படும் அபாயத்தைத் தவிர்த்திடும் நோக்கத்தோடும்; தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காகவும்; தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான அனுமதியினைப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.


ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Empty Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by ராஜா Sun May 11, 2014 8:33 pm

அட விடுங்கப்பா ....

தமிழர்கள் என்ற அடையாளத்தையே இளைய தலைமுறை இழந்து வருகிறது . இதுல ஜல்லிகட்டு ஒன்று தான் குறை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை - Page 2 Empty Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum