ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலை புலிகளின் விமானங்கள் கொழும்பில் தாக்குதல்: 2 பேர் பலி 47 பேர் காயம்

Go down

விடுதலை புலிகளின் விமானங்கள் கொழும்பில் தாக்குதல்: 2 பேர் பலி 47 பேர் காயம் Empty விடுதலை புலிகளின் விமானங்கள் கொழும்பில் தாக்குதல்: 2 பேர் பலி 47 பேர் காயம்

Post by சிவா Sat Feb 21, 2009 7:11 am

தமிழீழ விடுதலை புலிகளின் இரு விமானங்கள் கொழும்பில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன் போது கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள விமானப்படைத் தலமையகம் முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டிடம் சேதத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது கவலைக்கிடமாக இருந்த 2 பேர் பிலியாகியதாகவும் 5 விமானப்படையினர் உட்பட 47 காயமடைந்ததாகவும் அதில் மேலும் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மற்றும் கட்டுநாயக்கா அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ள சிறிலங்கா வான் படைத்தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

புத்தளம் கற்பிட்டி பக்கமாக கொழும்பு நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கொழும்பு நோக்கி வருவது கதுவீயில் அவதானிக்கப்பட்டதனையடுத்து சிறிலங்கா படையினரின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் தன்னியக்கமாக இயங்கத் தொடங்கின.

அதனையடுத்து கொழும்பு நகரம் முற்றாக மின்சாரம் தடைப்பட்டும் தொலைபேசி துண்டிக்கபட்டும் இருந்தது. இதனால் ஒன்றரை மணித்தியாலம் மின் வெளிச்சம் எதுவும் இன்றி கொழும்பு நகரம் இருளில் மூழ்கியிருந்தது. கொழும்புக்குள் இரவு 9.30 மணியளவில் உள்நுழைந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீதும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுகளை வீசியுள்ளன என்றும் "இறைவரி திணைக்கள கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்த பலர் காயமடைந்திருந்ததாகவும்" அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறினார்.

பாரிய சத்தத்துடன் இந்தக் குண்டு வெடித்த போது 13 மாடிகளைக் கொண்ட இந்த பாரிய கட்டம் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. கட்டத்தின் சிதைவுகள் வீதியில் சிதறிக்கிடக்கின்றன.

உடனடியாகவே தீயணைப்புப் படையினரும், மீட்புப் பிரிவினரும் அப்பகுதிக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்தில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகின்றது.

இத்தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இரவு 11:30 நிமிடமளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் சம்பவத்தில் காயமடைந்த 47 பேர் இதுவரையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா வான் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

வான் படை தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்தே விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் இலக்குத் தவறி அதற்கு முன்பாகவுள்ள உள்நாட்டு இறைவித் திணைக்கள கட்டடத்தின் மீது குண்டு விழுந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்துள்ள இலங்கை வங்கிக் கட்டடம் உட்பட பல கட்டடங்களும் சேதமடைந்திருக்கின்றன.

சம்பவத்தையடுத்து பாதையை மூடித் தடை விதித்துள்ள படையினர் இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருக்கலாம் என்பதால் தேடுதலை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து கட்டுநாயக்க பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒரு விமானம் விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் உடைவுகளையும் விமானியின் சடலத்தையும் படையினர் மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் இரண்டாவது வானூர்தி புத்தளம் ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக புத்தளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர் என்று அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புலிகளின் இந்த வானூர்தி தாக்குதலில் ஏற்பட்ட உண்மையான சேத விபரங்கள் அல்லது எவ்வாறான தாக்குதல் இடம்பெற்றது என்பது பற்றிய சுயாதீனமான தகவல் எதனையும் பெற முடியாத வகையில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் ஊடகங்களுக்கு மறைமுகமான தடை உத்தரவினை இன்றிரவு பிறப்பித்திருக்கின்றது.

இதனையடுத்து யாழ்ப்பாணத்திலும் முழுமையான மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரியப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த தாக்குதல் குறித்து சுயாதீனமான தகவல்கள் எதனையும் பெறமுடியவில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மாஸ்கோ விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல், 31 பேர் பலி; 130 பேர் காயம்
» தொழிற்சாலைக்குள் தீவிரவாதிகள் தாக்குதல், ஏமனில் 70 பேர் பலி; 100 பேர் காயம்
» பாகிஸ்தானில் கார்க் குண்டுத் தாக்குதல்; ஒருவர் பலி; 12 பேர் காயம்
» புதுக்குடியிருப்பு தாக்குதல் - இதுவரை 1,000 படையினர் பலி;3000 பேர் காயம்
» ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum