ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ எங்கே என் அன்பே: திரை விமர்சனம்

2 posters

Go down

நீ எங்கே என் அன்பே: திரை விமர்சனம் Empty நீ எங்கே என் அன்பே: திரை விமர்சனம்

Post by சிவா Mon May 05, 2014 12:40 am

நீ எங்கே என் அன்பே: திரை விமர்சனம் 564xNxnayan11_1876446g.jpg.pagespeed.ic.kKZssdS1nd

பெயர் தெரியாத ஊர், மொழி அறியாத மக்கள் என்று அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத்திற்கு வந்திறங்கும் அனாமிகா (நயன்தாரா), அங்கு பணிபுரியும் தனது கணவர் அஜய் சுவாமிநாதனை (ஹர்ஷவர்தன் ரானே) கடந்த இரண்டு வாரங்க ளாகக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். முதலில் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத போலீஸ், அவளின் கணவரின் சாயலும் ‘பீப்பிள் பிளாசா’வில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப் பட்டுவரும் முக்கியக் குற்றவாளி யான தீவிரவாதி மிலன் தாம்ஜியின் சாயலும் ஒத்துப்போகவே இதைத் துருவ ஆரம்பிக்கிறது. விஷயம் பூதாகரமாகிறது.

இதற்கிடையில், ஹைதராபாத் தெருவில் தன்னந்தனியாக அலைந்து திரியும் அனாமிகாவிற்கு உதவி செய்கிறார் இன்ஸ்பெக்டர் சாரதி (வைபவ் ரெட்டி). அவள் தனது கணவனைக் கண்டுபிடிக்கிறாளா? குண்டுவெடிப்பிற்குக் காரணம் யார்? அவளின் கணவரும் தீவிரவாதியும் ஓரே ஆள்தானா? அனாமிகா தனது கணவருடன் மீண்டும் இணைகிறாளா - என்பது தான் கதை.

2012-ம் ஆண்டு இந்தியில் வெற்றி பெற்ற ‘கஹானி’ என்ற படத்தைத் தழுவி எடுக்கப் பட்ட இத்திரைப் படத்தை அப்படியே ‘காப்பி-பேஸ்ட்’ செய்திருந்தாலே தேறியிருக்கும். ஆனால் புதுமையைச் சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு கதையைக் கந்தாலாக்கியிருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா.

கஹானியின் கதாநாயகியான வித்யா பாலன் அப்பாவி கர்ப்பிணிப் பெண்ணாகக் கொல்கத்தா வில் அலைந்து திரியும்போது ஏற்படும் பரிதாப உணர்வு, காலேஜ் பெண்போல் ஃபேன்ஸி பையைத் தூக்கிக் கொண்டு பட்டையாகக் கண் மையைத் தீட்டிக்கொண்டு அடிக்கடி அழும் நயன்தாராவிடம் ஏற்படவில்லை. சமயத்தில், டிவி சீரியல் ஹீரோயின்களின் ஞாபகம் வந்து போகிறது. தமிழ்த் திரைப்படங்களில் பெண் தெய்வத்தையும் கதாநாயகியையும் ஒப்பிட்டுக் காட்டும் காட்சியை ஒருமுறை காட்டினாலே, ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால், நயன்தாராவைக் காட்டும் காட்சிகளுக்கு நிகராகக் ‘காளி’யைக் காட்டுவதற்கான அவசியம் என்னவென்று புரியவில்லை.

அனாமிகாவின் இயல்பில் ஈர்க்கப்படும் இன்ஸ்பெக்டர் சாரதி அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதும், சாரதிக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வாங்கிப் பார்த்துப் பெண்களின் மனம் பற்றி அனாமிகா கொடுக்கும் லெக்சரும் யதார்த்தத்தை விட்டுத் தள்ளியே நிற்கின்றன.

ஹோட்டல் அறையில் வேலை செய்யும் சிறுவனிடம் ஆங்கிலத் தில் பேசச் சொல்வதும், அனாமிகா வின் மொழியே புரியாத இமாம், அவள் கண்ணீர் வழியப் பேசும் வசனத்திற்கு உருகி உதவி செய்வதுமாக லாஜிக்கே இல்லாமல் மேஜிக் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர்.

‘கஹானி’யில் தன் கணவனைத் தேடும்போது அவள் சந்திக்கும் நபர்களின் மத அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால், இப்படத்தில் அனாமிகா சந்திக்கும் பெரும்பான்மை யான நபர்களை ஏன் இஸ்லாமியர் களாவே காட்ட வேண்டும்? இயக்குநருக்கே வெளிச்சம்.

அனாமிகாவின் ‘சுப்ரபாதம்’ ரிங் டோன், மசூதியின் ஓலி, பின் காளியின் தெய்வீகக் காட்சி என திரும்ப திரும்ப வரும் காட்சிகளில் சலிப்படைந்து படத்தின் முதல் பாதியிலே தியேட்டரை விட்டுக் கிளம்பிவிடுகிறார்கள் ரசிகர்கள். முதல் பாதியின் ஆமை வேகமும் பொறுமையைச் சோதிக்கிறது.

தெலுங்கில் ‘ஆனந்த்’, ‘ஹேப்பி டேஸ்’, ‘லைஃப் இஸ் ப்யூடிஃபுல்’ என ‘மென்மையான’ திரைப்படங்களை இயக்கிய சேகர் கம்முலாவுடன் கூட்டணியில் இருக்கும் எடிட்டர் மார்தாண்ட் கே. வெங்கடேஷ் இந்த விறுவிறுப்பான திரைக் கதைக்கும் அதே பாணியைப் பின்பற்றியிருப்பது படத்திற்குப் பின்னடைவு. இதனைச் சற்றே சமாளித்தி ருப்பது விஜய் சி. குமாரின் யதார்த்தமான ஒளிப்பதிவும் எம்.எம். கீராவாணியின் உயிரோட்டமுள்ள பின்னணி இசையும்தான்.

‘கஹானி’ படத்தில் வசனங்கள் சிறப்பாக அமைந்திருந்தன. தமிழில் சில இடங்களில் பரவாயில்லை. ஆனால் தெலுங்கு, தமிழ், இந்தி என்று மாறும் வசனங்களைக் கேட்கும்போது பொறுமை சோதிக்கப்படுகிறது. போலீஸ் அதிகாரி அனாமிகாவிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் வசனங்களும், புலனாய்வு அதிகாரி, “இப்படி டிரஸ் போட்டா உன்ன ஏன் கூப்பிட மாட்டாங்க” என்று சொல்வதும் எரிச்சலூட்டுகின்றன. அதற்கு அனாமிகா கொடுக்கும் பதிலடி ஆறுதல் அளிக்கிறது.

‘கஹானி’யில் நாயகியின் பாத்திர வார்ப்பைக் கண்டவர்களுக்கு தமிழில் பாத்திர வார்ப்பு பலவீனமானதாகவே தெரியும். என்றாலும் நயன்தாரா தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பசுபதியின் நடிப்பும் அப்படியே. வைபவ் படம் முழுவதும் தூக்கத் தில் நடப்பவர்போல நடமாடுகிறார்.

தனியாகப் பார்த்தால் வித்தியாசமான கதை, திருப்பங்கள் கொண்ட திரைக்கதை, நல்ல நடிப்பு, இசை, ஒளிப்பதிவு ஆகிய அம்சங்களைப் பாராட்டலாம். ஆனால் அருமையான திரைக்கதை கையில் கிடைத்தும் அதை நீர்த்துப்போகச் செய்திருப்பதை எப்படிப் பாராட்ட முடியும்?

[thanks] தி இந்து [/thanks]


நீ எங்கே என் அன்பே: திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீ எங்கே என் அன்பே: திரை விமர்சனம் Empty Re: நீ எங்கே என் அன்பே: திரை விமர்சனம்

Post by மாணிக்கம் நடேசன் Mon May 05, 2014 8:02 am

மாமா அங்கள், நீங்க எங்க அக்கா நெனப்புல தானே இப்படி ஒரு தலைப்புல போட்டிருக்கீங்க. எங்க அக்கா இந்த நயன்தாராவ விட ரொம்ப நல்லவங்க, குணத்தில இமயம் போல சிறந்தவங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum