புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_lcap அப்பம் கேட்ட அரங்கநாதர் I_voting_bar அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_rcap 
46 Posts - 77%
dhilipdsp
 அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_lcap அப்பம் கேட்ட அரங்கநாதர் I_voting_bar அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_rcap 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
 அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_lcap அப்பம் கேட்ட அரங்கநாதர் I_voting_bar அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_rcap 
3 Posts - 5%
mohamed nizamudeen
 அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_lcap அப்பம் கேட்ட அரங்கநாதர் I_voting_bar அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_rcap 
3 Posts - 5%
heezulia
 அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_lcap அப்பம் கேட்ட அரங்கநாதர் I_voting_bar அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
 அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_lcap அப்பம் கேட்ட அரங்கநாதர் I_voting_bar அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_rcap 
1 Post - 2%
Guna.D
 அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_lcap அப்பம் கேட்ட அரங்கநாதர் I_voting_bar அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_lcap அப்பம் கேட்ட அரங்கநாதர் I_voting_bar அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_rcap 
41 Posts - 79%
dhilipdsp
 அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_lcap அப்பம் கேட்ட அரங்கநாதர் I_voting_bar அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_rcap 
4 Posts - 8%
mohamed nizamudeen
 அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_lcap அப்பம் கேட்ட அரங்கநாதர் I_voting_bar அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_rcap 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
 அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_lcap அப்பம் கேட்ட அரங்கநாதர் I_voting_bar அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
 அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_lcap அப்பம் கேட்ட அரங்கநாதர் I_voting_bar அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_rcap 
1 Post - 2%
Guna.D
 அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_lcap அப்பம் கேட்ட அரங்கநாதர் I_voting_bar அப்பம் கேட்ட அரங்கநாதர் I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பம் கேட்ட அரங்கநாதர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 3:57 pm

 அப்பம் கேட்ட அரங்கநாதர் IHBOwnk7Skx7YJ4s248g+AnmeDT02052014_09

ஆழ்வார்களின் தீந்தமிழ்ப் பாசுரங்களால் பாடல் பெற்ற தலங்கள் பல உள்ளன. ‘காக்கும் கடவுளான திருமால்’ பள்ளி கொண்ட கோலத்தில் திருவரங்கத்தில் காட்சி தருகிறார். அங்கு தொடங்கி, நின்ற கோலத்தில் திருமலை திருப்பதி வரை காட்சி தந்து அருள்புரிகிறார்.

சூட்சும உலகத்தில் உள்ள பாற்கடல், வைகுந்தம் உட்பட நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் நின்றும், நடந்தும், கிடந்தும், அமர்ந்தும் பல்வேறு கோலங்களில் பெருமாள் காட்சி தருகிறார். ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடிக்க, பாம்பு மெத்தையில் பள்ளி கொள்ளும் கோலத்திலும் பல்வேறு திருத்தலங்களில் காட்சி தந்து பேரருள் புரிகிறார்.

அவற்றில் ஒன்று தான் ‘திருப்பேர் நகர் எனும் கோவிலடி’.

கோவில் அமைவிடம்

காவிரியின் வடகரையில் உள்ள திருவையாற்றில் இருந்து மேற்கே திருக்காட்டுப்பள்ளி உள்ளது. இங்கிருந்து 10 கி.மீ தூரத்தில் கல்லணை செல்லும் சாலையில் உள்ளது கோவிலடி. திருச்சியில் இருந்து இந்த கோவிலுக்கு செல்வது எளிதாகும். திருச்சியில் இருந்து கல்லணை சென்று அங்கிருந்து திருவாரூர் சாலையில் திருக்காட்டுப்பள்ளிக்கு பயணிக்க வேண்டும். இதன் அருகில் கோவிலடி உள்ளது. இந்த திருத்தலம், தஞ்சை மாவட்டத்தில் வடமேற்கு எல்லையில் உள்ளது.

திருவரங்க நாதரைப் போலவே காவிரி – கொள்ளிடத்துக்கு இடையே பெருமாள் எழுந்தருளி இருக்கிறார். ஆனால் இங்கே மேற்கு நோக்கி காட்சி தருவது சிறப்பாகும். தாயார் சன்னிதி கிழக்கு நோக்கி உள்ளது.

திருக்கோவில் ஒரு மேட்டின் மீது உள்ளது. 20 படிகள் ஏறித்தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். படிகள் ஏறும் போதே நடுவில் கொடி மரம் உள்ளது. கோவிலின் அடிவாரத்தில் இந்த சிறிய ஊர் இருப்பதால் ‘கோவிலடி’ என்று பெயர் பெற்றது.

பஞ்ச அரங்கம் தலம்

பெருமாளின் ‘பஞ்ச அரங்க தலம்’ என்று சொல்லக்கூடிய ஐந்து ஆலயங்களில் இதுவும் ஒன்று.

1. ஆதி ரங்கம்–ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்) – ரங்கநாதர்
2. அப்பால ரங்கம்–திருப்பேர்நகர் (கோவிலடி) – அப்பால் ரங்கநாதர்
3. மத்திய ரங்கம்–ஸ்ரீ ரங்கம் – ரங்கநாதர்
4. சதுர்த்த ரங்கம்–கும்பகே£ணம் – சாரங்கபாணி
5. பஞ்ச ரங்கம்–இந்தளூர் (மயிலாடுதுறை) – பரிமள ரங்கநாதர்

இந்த பஞ்ச ரங்க வரிசையில் பார்த்தால் கோவிலடி ஸ்ரீ ரங்கத்திற்கும் முற்பட்டது என விளங்கும்.

கோவிலடியில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு ‘அப்பால் ரெங்கநாதர்’ என்றும் பெயர் உண்டு. இதற்கான காரணத்தை ஆச்சரியத்தோடு வினவினால், ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு ‘அப்பால்’ இருப்பதால் இப்பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.

இந்திரன் வழிபட்டு சாபம் நீங்கிய தலம் என்பதால், இக்கோவில் விமானத்தின் பெயர் இந்திர விமானம். தீர்த்தத்தின் பெயர் இந்திர புஷ்கரணி. தாயாரின் பெயர் இந்திராதேவி எனும் கமலவல்லி ஆகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 3:57 pm

தலவிருட்சம்

ஒரு காலத்தில் பலாசமரம் எனும் புரச மரக்காடாக இருந்த இடத்தில் இத்தலம் தோன்றியதால் தலவிருட்சம் பலாச மரமாகிறது. அழகிய செந்நிற பூக்கள் பூப்பதால் ‘எரிதழல் என்றும் காட்டுத்தீப் பூ’ என்றும் வழங்கப்படுகிறது. இதனால் இத்தலம் ‘பலாசவன ஷேத்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

அப்பக் குடத்தான்

இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் அப்பம் கேட்ட கதை தெரியுமா?

உபமன்யு என்னும் அரசன், எதற்கெடுத்தாலும் கோபப்படும் துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளானான். சாப விமோசனம் கேட்டு துர்வாசரிடம் வேண்டியபோது பலாச வனத்தில் உள்ள இத்திருக்கோவிலில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் சாப நிவர்த்தியாகும் என்று பரிகாரம் சொன்னார்.

எனவே மன்னன் இவ்வூரில் ஒரு அரண்மனை கட்டி தினமும் அன்னதானம் செய்து வந்தான்.

எதற்கும் ஒரு முடிவு வேண்டுமல்லவா? ஒருநாள் வைகுண்ட நாதனான பெருமாள் வயதான அந்தணர் வேடத்தில் வந்து உணவு கேட்டார். சமைத்திருந்த உணவெல்லாம் தீர்ந்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் மன்னன் விழித்து உடனே, உலை வைத்து உணவினை மறுபடி தயாரிக்கச் சொன்னான்.

‘இவ்வாறு சமையல் செய்தால் அதிக நேரம் ஆகும், எனக்குப் பசிக்கிறது. எனவே உடனடியாக அப்பம் செய்து கொடு’ என்று சொன்னார் வயதான அந்தணர்.

எளிய முறையில் உடனே தயாரிக்கப்பட்டு குடம் நிறைய அப்பம் முதியவருக்குத் தரப்பட்டது. அவ்வேளையில் முதியவர் வேடத்திலிருந்த ஸ்ரீமத் நாராயணன் காட்சி தந்து, சாப விமோசனம் தந்தார். அன்றிலிருந்து அப்பம் தயாரிக்கப்பட்டு திருமாலுக்குப் படைக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த தலத்தின் பெருமாளுக்கு ‘அப்பக் குடத்தான்’ என்றும் சிறப்பு பெயர் உண்டு.

படையல்

திருவரங்கத்தில் வடை, காஞ்சி வரதராஜருக்கு இட்லி, திருமலை வேங்கடவனுக்கு லட்டு என்பது போல இக்கோவிலடி பெருமாளுக்கு அப்பம் சிறப்பு நிவேதனமாகப் படைக்கப்படு கிறது.

பள்ளி கொண்ட பெருமாளுக்கு அப்பம் எப்பொழுது படைக்கப்படுகிறது? என்று திருக்கோவில் பட்டாச்சாரியாரிடம் கேட்ட போது ஒரு பட்டியலையே தந்து அசத்திவிட்டார்.

பெருமாள் துயிலெழுந்தவுடன் பசும்பால், காலை வெண் பொங்கல், உச்சிப் பொழுதில் தயிர்சாதம், மாலை 5 மணி அளவில் இக்கோவிலில் பெருமாளுக்குப் பிடித்த அப்பமும், புளியோதரையும் படைக்கப்படுகிறது. இரவு சுத்தன்னமும், இளஞ்சூட்டில் காய்ச்சிய அரவணபால்.

இப்படியெல்லாம் ஏற்றுக் கொள்ளும் பெருமாள் எவ்வளவு சுகவாசி பாருங்கள். படுத்துக் கொண்டே நம்மைப் பாதுகாக்கும் பகவான் அல்லவா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 3:58 pm

எம பயம் போக்கும் தலம்

இத்திருத்தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் தனது ஒரு கரத்தால் மார்க்கண்டேயருக்கு ஆசி கூறுகிறார். எனவே எம பயம் போக்கும் பெருமாளாக விளங்குகிறார். அவரது தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது. இக்குடத்திற்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு அதன்மேல் தட்டில் வைத்து அப்பம் நிவேதனம் செய்யப்படுவது தற்போதைய வழக்கமாக உள்ளது.

திருக்கோவிலைச் சுற்றி வரும்போது வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தும்பிக்கை ஆழ்வார் என்னும், சிறிய பிள்ளையார் கோவிலும் உள்ளது. சாபம் நீங்க இந்திரனுக்கு வழிகாட்டியதால் இவரை ‘வழிகாட்டி விநாயகர்’ ஆக வழிபடுகின்றனர்.

ஆழ்வார் பாடல்கள்

கையிலங்கு ஆழிசங்கன் கருமுகில் திருநிறத்தன்
பொய்யிலன் மெய்யன்தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்
செய்யலர் கமலம் ஓங்கு செறிபொழில் தென்திருப்பேர்
பையரவணையான் நாமம் பரவிநான் உய்ந்தவாறே.

என்று திருமங்கை ஆழ்வாரும் மற்றும் பெரியாழ்வாரும், திருமழிசை ஆழ்வாரும், நம்மாழ்வாரும் பாடிப்பரவிய இத்திருத்தலம் 108 திவ்விய தேசங்களுள் 6–வதாக விளங்குகிறது.

நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இதுதான். அதன் பிறகு மோட்சம் சென்று விட்டார். எனவே இத்திருக்கோவில் அப்பக்குடத்தானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் எனவும், சாப விமோசனம் கிடைக்கும் எனவும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

தற்போது திருப்பணிகள் நடைபெற்று, குடமுழுக்கு செய்ய வேண்டிய காலகட்டத்தில் உள்ளதால், பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. படத்தில் வரையப்பட்டுள்ள பள்ளி கொண்ட பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயணன் உற்சவருக்கும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ‘உனது கோவிலில் வேலைகள் பூர்த்தி பெற்று, திருக்குடமுழுக்கு விரைவில் நடைபெற வேண்டும்’ என்றும் பெருமாளைப் பிரார்த்தித்துக் கொண்டு வெளியேறுகிறோம்.

அன்பர்களும் ‘அப்பம் உண்ட பெருமாள்’ திருப்பணிகளில் பங்குகொண்டு சேவிக்கலாமே!.

[thanks] டாக்டர் ச. தமிழரசன், தஞ்சாவூர் [/thanks]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக