ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்ஷய திருதியை - தமிழகத்தில், 1,500 கிலோ தங்கம் விற்பனை!

Go down

அக்ஷய திருதியை - தமிழகத்தில், 1,500 கிலோ தங்கம் விற்பனை! Empty அக்ஷய திருதியை - தமிழகத்தில், 1,500 கிலோ தங்கம் விற்பனை!

Post by சிவா Sat May 03, 2014 4:12 am

அக்ஷய திருதியையை முன்னிட்டு, பொது மக்கள், நேற்று, ஆர்வமுடன், நகைக் கடைகளில், தங்க ஆபரணங்களை வாங்கிச் சென்றனர். இதனால், நேற்று, ஒரு நாளில் மட்டும், தமிழகத்தில், 1,500 கிலோ அளவுக்கு தங்க நகைகள் விற்பனையாகி உள்ளது.

தமிழகம் உட்பட, நாடு தழுவிய அளவில், நேற்று, அக் ஷய திருதியை கொண்டாடப்பட்டது. சில ஆண்டுகளாக, அக்?ஷய திருதியை அன்று, தங்கம் வாங்கும் பழக்கம், பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது.மே தினத்தையொட்டி, நேற்று முன்தினம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை. இதனால், நேற்று, ஒரு நாள் விடுமுறை எடுத்தால், தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும். எனவே, அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்க, பெரும்பாலானோர், நேற்று, அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு, நகைக் கடைகளில் முகாமிட்டிருந்தனர்.

அக்ஷய திருதியைக்கு, தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக, சில நாட்களுக்கு முன், பொதுமக்கள், நகைக் கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி, முன்பதிவு செய்தனர்.முன்பதிவு செய்தவர்கள், நேற்று, நகைக் கடைகளுக்கு சென்று, முன்பதிவு ரசீதை கொடுத்து, தங்க ஆபரணங்களை வாங்கினர். பலர், தங்களிடம் உள்ள, பழைய நகைகளைக் கொடுத்து, கூடுதல் தொகை செலுத்தி, புதிய ஆபரணங்கள் வாங்கிச் சென்றனர்.

திருச்சி, கோவை, மதுரை, திருவனந்தபுரம், கொச்சி, புதுச்சேரி போன்ற நகரங்களைக் காட்டிலும், சென்னையில், ஆபரண தங்கத்திற்கு செய்கூலி, சேதாரம் குறைவாக உள்ளது.எனவே, மேற்கண்ட பகுதிகளில் இருந்து, குறிப்பாக, இலங்கையில்

இருந்தும், பலர், சென்னைக்கு வந்து, தங்கம் வாங்கிச் சென்றனர்.இதனால், சென்னையில், தங்கம் விற்பனைக்கு பெயர் பெற்ற, தி.நகர், பாரிமுனையில் உள்ள, பெரிய நகைக் கடைகளில் மட்டும் அல்லாமல், சிறிய நகை கடைகளிலும், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.அக்ஷய திருதியையை முன்னிட்டு, தமிழகத்தில், நேற்று ஒரு நாளில் மட்டும், 1,500 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது; இதன் மதிப்பு, 420 கோடி ரூபாய். இதில், சென்னையின் பங்களிப்பு, 90 சதவீதம்; அதாவது, 1,350 கிலோ.

இதுகுறித்து, ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறியதாவது :தமிழகத்தில், நாள்தோறும், பழைய மற்றும் புதிய தங்கம் விற்பனை, சராசரியாக, 1,000 கிலோ. 2013 அக்ஷய திருதியைக்கு, சென்னையில், 1,100 கிலோ உட்பட, தமிழகத்தில், 1,300 கிலோ தங்கம் விற்பனையானது.அக்ஷய திருதியைக்கு, தங்கம் விற்பனை, வழக்கத்தை விட,20 30 சதவீதம் அதிகம் இருக்கும். எதிர்பார்த்ததை போல, இந்த ஆண்டும், தங்கம் விற்பனை நன்கு இருந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.

விலை குறைவு:

சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,814 ரூபாய்; ஒரு சவரன், 22,512 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 14 ரூபாய் குறைந்து, 2,800 ரூபாய்; சவரனுக்கு, 112 ரூபாய் சரிவடைந்து, 22,400 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 44.40 ரூபாய்; ஒரு கிலோ பார் வெள்ளி, 41,540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

[thanks]தினமலர் [/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum