புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_lcapகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_voting_barகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_lcapகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_voting_barகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_lcapகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_voting_barகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_lcapகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_voting_barகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_lcapகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_voting_barகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_lcapகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_voting_barகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_lcapகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_voting_barகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_lcapகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_voting_barகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_lcapகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_voting_barகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_lcapகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_voting_barகர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 01, 2014 5:27 pm

காலத்தால் அழியாதது எது? எல்லாக் காலத்துக்கும் பொருந்துகிற தன்மையோடு எது இருக்கிறதோ, அது காலத்தால் அழியாது. நமது திருக்குறளும் அப்படிப்பட்டதுதான். ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட திருக்குறள், இன்டர்நெட், ஆடியோ, வீடியோ சிடி என பல வடிவங்களை எடுத்து இன்றளவும் உயிர்ப்போடு இருக்கிறது.
இப்போது திருக்குறள் கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளாக மாறி சிடி வடிவம் எடுத்து இருக்கிறது.
ஆம். "திருக்குறள் மதுர கீர்த்தனை' என்ற பெயரில் ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஆர்.பத்மாசனி.
கர்நாடக சங்கீதத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அவரை, சென்னை அசோக் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்:

திருக்குறள் மதுர கீர்த்தனைகளை நீங்களே உருவாக்கினீர்களா? வேறு யாராவது உருவாக்கி வைத்திருந்த கீர்த்தனைகளை நீங்கள் பாடினீர்களா?
திருக்குறளை கீர்த்தனைகளாக எழுதி வைத்தவர் கர்நாடக சங்கீத மேதை மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகள். கி.பி.1893 இல் பிறந்த அவர் 1958 இல்தான் மறைந்தார். திருக்குறளில் உள்ள 1330 திருக்குறள்களையும் அவர் 289 கீர்த்தனைகளாக உருவாக்கி வைத்திருந்தார்.

நான் மதர் தெரசா பல்கலைக்கழகத்தில் இசையில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஆராய்ச்சி செய்ய மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகளின் திருக்குறள் கீர்த்தனைகளைத்தான் எடுத்துக் கொண்டேன். இதற்காக அவர் எழுதிய திருக்குறள் மதுர கீர்த்தனைகளைத் தேடி, சென்னையில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அங்கே கிடைக்கவில்லை. மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகளின் சகோதரர் மகன் ராமநாதனிடம் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அவருடைய வீட்டுக்குச் சென்று அந்தக் கீர்த்தனைகளை வாங்கி வந்தேன். மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகள் எழுதிய 289 திருக்குறள் மதுர கீர்த்தனைகளில் இப்போது இருப்பது 190 தான். 99 கீர்த்தனைகளைக் காணவில்லை. கிடைத்த 190 கீர்த்தனைகளும் மிகவும் இற்றுப் போன தாளில் உதிர்கின்ற வகையில்தான் இருந்தன.

அறத்துப்பாலில் 82 கீர்த்தனைகள், பொருட்பாலில் 82 கீர்த்தனைகள், இன்பத்துப்பாலில் 26 கீர்த்தனைகள்தான் கிடைத்தன. அவருடைய திருக்குறள் கீர்த்தனைகளைத்தான் நான் பாடியிருக்கிறேன்.

இசையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்ற முறையில் நீங்கள், மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகள் உருவாக்கிய திருக்குறள் மதுர கீர்த்தனைகளின் சிறப்பம்சமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகளின் கீர்த்தனைகளின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். உதாரணமாக, கர்நாடக சங்கீதத்தில் சில ராகங்கள் மட்டும் இருக்கும். அந்த ராகங்களுக்குப் பாடல்கள் இருக்காது. ரச வினோதினி, ஜகன் மனோகரி, ஆதி பைரவி, நாகரி, நாட்டியாபரணம், லதா மஞ்சரி, கமலமோகனம், வஜ்ரகாந்தி போன்ற ராகங்களுக்கு கீர்த்தனைகள் இல்லை; அல்லது குறைவு. மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகள் இந்த ராகங்களைப் பயன்படுத்தி திருக்குறள் கீர்த்தனைகளை உருவாக்கியிருக்கிறார். இது ஒரு சிறப்பு.

"அகர முதல எழுத்தெல்லாம்' குறளை ஹம்சத்வனி ராகத்தில் உருவாக்கியுள்ளார். "கேள்வி' அதிகாரக் குறள்களை காம்போதி ராகத்திலும், "இனியவை கூறல்' அதிகாரக் குறள்களை காப்பி ராகத்திலும், "புறங்கூறாமை' அதிகாரக் குறள்களை அமிர்தவர்ஷினி ராகத்திலும் உருவாக்கியிருக்கிறார்.

திருக்குறள் அளவில் மிகவும் சிறியது. கீர்த்தனையாக மாற்றப்படும்போது அளவு ஒரு பிரச்னையாக இருந்திருக்காதா?

கீர்த்தனையில் பல்லவி, அநுபல்லவி, சரணங்கள் இருக்கும். அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற குறளில், "பகவன் முதற்றே உலகு' என்பதை பல்லவியாகவும், "அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி' என்பதை அநுபல்லவியாகவும் கொண்டு கீர்த்தனையை மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகள் உருவாக்கியிருக்கிறார்.

ஒரு கீர்த்தனையில் 2 குறள்களே இடம் பெற்றிருக்கின்றன. இன்னொரு கீர்த்தனையில் 9 குறள்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது சரணங்களில் நிறையக் குறள்கள் உள்ளன. அதனால்தான் 1330 குறள்களை வெறும் 290 கீர்த்தனைகளாக அவரால் ஆக்க முடிந்திருக்கிறது.

திருக்குறளைக் கீர்த்தனைகளாக்கி பாடுவதால் என்ன பயன் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
இலக்கியத்தை வெறும் இலக்கியமாகப் படிக்கும்போது சிரமமாக இருக்கும். அதையே இசையாக, பாடலாகப் பயிலும்போது எளிதாக இருக்கும்.

எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் திருக்குறளைப் படிக்க முடியுமா? திருக்குறளைப் பாடலாக்கி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால் எளிதாக மனப்பாடம் செய்ய முடியும். அதனால்தான் திருக்குறள் கீர்த்தனைகளைப் பாடி, குறுந்தகடு வடிவில் கொடுத்திருக்கிறேன்.

கர்நாடக சங்கீதத்தை ரசிப்பவர்கள் குறைவு. திருக்குறளைக் கீர்த்தனைகள் வடிவத்தில் தரும்போது, கர்நாடக சங்கீதம் தெரிந்த சிலர் தானே ரசிக்க முடியும்?

இசையை ரசிப்பதெல்லாம் பழக்கத்தில் வரக் கூடியதே. சிறுவயதில் இருந்தே சினிமா பாடல்களை ரசிக்கப் பழகியிருந்தால் அது நமக்கு ரொம்பப் பிடிக்கும். நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டுப் பழகியிருந்தால் அவற்றைக் கேட்கப் பிடிக்கும். பழக்கப்படாத எந்த இசையையும் ஆரம்பத்தில் ரசிப்பதில் சிரமம் இருக்கும். மேற்கத்திய இசையைக் கூட எவ்வளவு பேரால் ரசிக்க முடிகிறது? கர்நாடக சங்கீதத்தில் உள்ள திருக்குறளை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டால் அதில் ஈர்க்கப்படுவார்கள் என்பது உறுதி.
அதுமட்டுமல்ல, நான் உருவாக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில் கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளைப் பாடியிருந்தாலும், மேற்கத்திய இசைக் கருவிகளையும் பயன்படுத்தியிருக்கிறோம். மேற்கத்திய இசையையும் பயன்படுத்தியிருக்கிறோம். எனவே திருக்குறள் மதுர கீர்த்தனைகளைக் கேட்கும்போது, திரைப்படப் பாடல்களைக் கேட்பதைப் போன்ற உணர்வே ஏற்படும். எனவே திருக்குறளைப் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த சிடிகள் பயன்படும் என்றே நினைக்கிறேன்.

திருக்குறளை கர்நாடக இசையில் கொண்டு வந்திருக்கிறீர்கள். மேற்கத்திய இசையில் கொண்டு வரும் எண்ணம் இருக்கிறதா?

என் மகன் அபினவ் கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி, மேற்கத்திய இசை ஆகியவற்றில் தேர்ச்சி மிக்கவர். ஏற்கெனவே திருக்குறள் ஜெர்மன் மொழியிலும், பிரெஞ்ச் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவற்றை மேற்கத்திய இசை வடிவில் பாடி, இசை ஆல்பங்களாகக் கொண்டு வரும் ஆசை உள்ளது.

திருக்குறள் மதுர கீர்த்தனைகள் குறுந்தகடு உருவாக்கும்போது சந்தித்த பிரச்னைகள்?
பெரிய அளவுக்குப் பிரச்னைகள் இல்லை. காரணம், எங்களுக்கு ஸ்டீபன் தேவாஸ் உதவியாக இருந்தார். அவர் ஓர் இசைப் பள்ளி நடத்துகிறார். அந்தப் பள்ளி மாணவர்களே இந்த சிடிக்குப் பின்னணி இசைக் கருவிகளை வாசித்தனர். அவருடைய ஸ்டுடியோவிலேயே ரெக்கார்டிங் வேலைகளும் நடந்தன. அதனால் சிரமமாகத் தெரியவில்லை. (தினமணி)

இவை தவிர இசைக்கு வேறு என்ன செய்கிறீர்கள்?
கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கிறேன். என்னிடம் வாய்ப்பாட்டுக் கற்றுக் கொள்ள ஆர்வமாக மாணவர்கள் வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு ஸ்கைப் மூலமாக கர்நாடக சங்கீதம் கற்றுத் தருகிறேன்.


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 8:58 pm

ஆர் . பத்மாசனி அவர்களுக்கும் சாமி அவர்களுக்கும் நன்றி ! அருமையான இடுகை ! தமிழர்தம் சொத்தாகிய இசையை நாம் சரியாக அறிந்துகொள்ளவில்லை ! தமிழில் கீர்த்தனை இலக்கியம் என்ற எனது முதல் நூல் வெற்றியாக அமைந்ததும்தான்  என் மூலமாகப் பல நூற்களை எழுதத் திட்டம் வகுத்தார் மறைந்த ‘ஸ்டார் பிரசுரம் இராமநாதன் செட்டியார்’ !

 கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! 1571444738 கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! 3838410834 கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! 1571444738 கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்! 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக