Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி...! இன்று காலை சுமார் 7.15 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 ம் நடைமேடையில் நின்றிருந்த பெங்களுரூவிலிருந்து கவுகாத்தி செல்லும் ரயிலில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. S - 4 பெட்டியில் ஒரு குண்டும், S - 5 பெட்டியில் மற்றொரு குண்டும் வெடித்துள்ளது. ரயிலின் S-4 மற்றும் S-5 பெட்டிகள் சேதம். 10 பேர் படுகாயம். ஸ்வாதி என்ற 22 வயது பெண் பலி. இவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர். சென்னை மாநகரம் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உதவி மையம் தொடர்பிற்கு தொலைபேசி எண்: 044 - 25357398.
Last edited by கோ. செந்தில்குமார் on Thu May 01, 2014 9:17 am; edited 4 times in total
Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், எத்தனை பேராக இருந்தாலும் கைது செய்யப்படாமல் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட வேண்டும்.
Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
சிவா wrote:[link="/t109891-topic#1060960"]இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், எத்தனை பேராக இருந்தாலும் கைது செய்யப்படாமல் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட வேண்டும்.
இதற்கு காரணமானவர்கள் மேல் போர் தான் தொடுக்க வேண்டும்...! போர் ஒன்றே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்...!
Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலையில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும், 6 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. பெண் ஒருவர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற விவரம் அறியப்படவில்லை. சந்தேகத்திற்கு இடமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த குண்டுவெடிப்பை அடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
காலை 7. 40 மணியளவில் கவுகாத்தியில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றதும். இந்த குண்டு வெடித்தது. 9ம் பிளாட்பாமில் இந்த சம்வபவம் நிகழ்ந்துள்ளது.
காயமுற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் 6பேர் இறந்துள்னர். ரயில் பெட்டிகள் எஸ். -4 எஸ்- 5 முழுமையாக சேதமடைந்துள்ளன.
ரயில்வே மேலாளர் பேட்டி: இந்த சம்பவம் குறித்து ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், ரயில் வந்ததும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 2 முறை குண்டு வெடித்துள்ளது. பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 2 பேர் படுகாயமுற்றுள்ளனர். 7 பேர் லேசான காயமுற்றுள்ளனர். கண்காணிப்பு காமிரா மூலம் அடுத்தடுத்து விசாரணைகள் தொடரும். பலியானவர் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும், படுகாயமுற்றோருக்கு 25 ஆயிரமும், லேசான காயமுற்றோருக்கு ரூ. 5 ஆயிரமும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. உதவி தொலைபேசிக்கு 04425357398 இந்த எண்ணில தொடர்பு கொள்ளலாம். முழு விசாரைணக்கு பின்னரே அனைத்து விஷயங்களையும் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலம் முழுவதும் போலீஸ் உஷார்: சென்னை குண்டு வெடிப்பை அடுத்து கோவை- திருச்சி-நெல்லை, சேலம் , மதுரை உள்ளிட்ட நகரங்களில் போலீஸ் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்கள், ரயில்வே நிலையம், விமான நிலையம் பகுதிகளில் போலீஸ் ரோந்து பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை விளக்கம் கேட்கிறது: இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-- dinamalar
காலை 7. 40 மணியளவில் கவுகாத்தியில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றதும். இந்த குண்டு வெடித்தது. 9ம் பிளாட்பாமில் இந்த சம்வபவம் நிகழ்ந்துள்ளது.
காயமுற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் 6பேர் இறந்துள்னர். ரயில் பெட்டிகள் எஸ். -4 எஸ்- 5 முழுமையாக சேதமடைந்துள்ளன.
ரயில்வே மேலாளர் பேட்டி: இந்த சம்பவம் குறித்து ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், ரயில் வந்ததும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 2 முறை குண்டு வெடித்துள்ளது. பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 2 பேர் படுகாயமுற்றுள்ளனர். 7 பேர் லேசான காயமுற்றுள்ளனர். கண்காணிப்பு காமிரா மூலம் அடுத்தடுத்து விசாரணைகள் தொடரும். பலியானவர் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும், படுகாயமுற்றோருக்கு 25 ஆயிரமும், லேசான காயமுற்றோருக்கு ரூ. 5 ஆயிரமும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. உதவி தொலைபேசிக்கு 04425357398 இந்த எண்ணில தொடர்பு கொள்ளலாம். முழு விசாரைணக்கு பின்னரே அனைத்து விஷயங்களையும் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலம் முழுவதும் போலீஸ் உஷார்: சென்னை குண்டு வெடிப்பை அடுத்து கோவை- திருச்சி-நெல்லை, சேலம் , மதுரை உள்ளிட்ட நகரங்களில் போலீஸ் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்கள், ரயில்வே நிலையம், விமான நிலையம் பகுதிகளில் போலீஸ் ரோந்து பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை விளக்கம் கேட்கிறது: இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-- dinamalar
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது பிளாட்பாரத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயங்கர சப்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவுஹாத்தி-பெங்களூரு விரைவு ரயில் 9-வது நடைமேடைக்கு வந்த போது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலின் எஸ் 4 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த 10 பேரும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் 2 ரயில் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவவும் தெரிகிறது.
ஒருவர் பலி:
சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குண்டூரைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் சதியா?
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளி ஜாகீர் உசேன் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டுவெடித்துள்ளது.
அறிக்கை அளிக்க உத்தரவு:
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அறிக்கை அளிக்க உத்தரவு:
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு அறிவிப்பு:
குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்ததோருக்கு ரூ.25,000, லேசான காயமடைந்தோருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ராதெரிவித்தார். குண்டுவெடிப்பு தொடர்பாக தொலைபேசியில் ரயில்வே அமைச்சர் விசாரித்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். பிற ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரயில் குண்டுவெடிப்பு தகவல்களை பெற 044 25357398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளதாக கூறினார்.
-- dinakaran
ஒருவர் பலி:
சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குண்டூரைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் சதியா?
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளி ஜாகீர் உசேன் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டுவெடித்துள்ளது.
அறிக்கை அளிக்க உத்தரவு:
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அறிக்கை அளிக்க உத்தரவு:
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு அறிவிப்பு:
குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்ததோருக்கு ரூ.25,000, லேசான காயமடைந்தோருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ராதெரிவித்தார். குண்டுவெடிப்பு தொடர்பாக தொலைபேசியில் ரயில்வே அமைச்சர் விசாரித்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். பிற ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரயில் குண்டுவெடிப்பு தகவல்களை பெற 044 25357398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளதாக கூறினார்.
-- dinakaran
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்படும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ரயிலில் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் தர வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றதை அடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரலுக்கு வர வேண்டிய ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
![சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! BlastSLche0105201401](https://2img.net/h/www.dailythanthi.com/dt/sites/default/files/blastSLche0105201401.jpg)
சென்னை சென்டரல் ரெயில் நிலையத்தில் 9 வது நடைமேடையில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் ஒருவர் பலியாகினார். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குண்டுவெடிப்பு
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் 9 வது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது ரெயிலில் இருந்த பயணிகள் இழே இறங்க தயாரானார்கள். அப்போது ரெயிலில் இருந்த 2 குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. குண்டு வெடித்ததில் ரெயிலின் எஸ் 4 மற்றும் எஸ் 5 பெட்டிகள் சேதம் அடைந்தன. குண்டு வெடிப்பில் 22 வயது சுவாதி என்ற பெண் ஒருவர் பலியாகினர். மேலும், 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
6 பேரது நிலை கவலைக்கிடம்
குண்டு வெடிப்பை அடுத்து அங்கு போலீசார் விரைந்தனர். போலீசார் அனைத்து பகுதிகளையும் சுற்றி வளைத்தனர். காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 6 பேரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் கவுகாத்தில் ரெயிலின் அனைத்து பெட்டிகளையும் சோதனை செய்தனர். தொடர்ந்து ரெயில் நிலையம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரெயில் சேவை நிறுத்தம்
ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் சோதனை நடைபெறுவதால் வேறு பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வெளி இடங்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் வெவ்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை
எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்ததை அடுத்து ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்ட்ரலில் குண்டு வெடித்ததை அடுத்து எழும்பூர் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சென்னையில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என்று தமிழக டி.ஜி.பி. தகவல் தெரிவித்துள்ளார். ,மோப்ப நாய்களுடன் அங்கு தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-- daily thanthi
குண்டுவெடிப்பு
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் 9 வது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது ரெயிலில் இருந்த பயணிகள் இழே இறங்க தயாரானார்கள். அப்போது ரெயிலில் இருந்த 2 குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. குண்டு வெடித்ததில் ரெயிலின் எஸ் 4 மற்றும் எஸ் 5 பெட்டிகள் சேதம் அடைந்தன. குண்டு வெடிப்பில் 22 வயது சுவாதி என்ற பெண் ஒருவர் பலியாகினர். மேலும், 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
6 பேரது நிலை கவலைக்கிடம்
குண்டு வெடிப்பை அடுத்து அங்கு போலீசார் விரைந்தனர். போலீசார் அனைத்து பகுதிகளையும் சுற்றி வளைத்தனர். காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 6 பேரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் கவுகாத்தில் ரெயிலின் அனைத்து பெட்டிகளையும் சோதனை செய்தனர். தொடர்ந்து ரெயில் நிலையம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரெயில் சேவை நிறுத்தம்
ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் சோதனை நடைபெறுவதால் வேறு பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வெளி இடங்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் வெவ்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை
எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்ததை அடுத்து ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்ட்ரலில் குண்டு வெடித்ததை அடுத்து எழும்பூர் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சென்னையில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என்று தமிழக டி.ஜி.பி. தகவல் தெரிவித்துள்ளார். ,மோப்ப நாய்களுடன் அங்கு தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-- daily thanthi
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8.8 கிலோ தங்கம் பறிமுதல்
» மெக்சிகோ டி.வி. நிலையத்தில் குண்டு வெடித்தது
» சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய சுரங்கப்பாதை திறப்பு: 4 போக்குவரத்து மையங்களை இணைக்கிறது
» சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!
» சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம்
» மெக்சிகோ டி.வி. நிலையத்தில் குண்டு வெடித்தது
» சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய சுரங்கப்பாதை திறப்பு: 4 போக்குவரத்து மையங்களை இணைக்கிறது
» சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!
» சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|