புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இது அறிவுரை அல்ல. உங்களைப் போல் நானும் கற்றுக் கொண்டு வரும் புத்திக் கொள்முதல். இரவு உறங்கும் முன் நாளைய பொழுது இன்றை விட நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன். காலையில் ஒரு தொலைபேசி அலாரமானது அலறியது. எதிர்முனைக் கேள்விகள், அதிர்ச்சிகள், உடனே பதில் முடிவு எடுக்க முடியாத வில்லங்க விஷயங்கள், பயம், நடுக்கம்.ஆனால், அந்தத் தொலைபேசி அலாரம்தான் என்னை எழுப்பி விட்டதுமல்லாமல் உசுப்பியும் விட்டது. சூரியனுக்கு முன் சுறுசுறுப்புடன் உழைக்கத் தொடங்கினேன்.
நான் ஏதாவது திரைப்படம் பார்க்கும்போது ஒரு முடிவுடன் செல்வேன். இது நான் பார்க்க வேண்டிய படம். நான் இயக்க வேண்டிய, நடிக்க வேண்டிய படம் வேறு. என் கனவுகள் வேறு, இப்போதைய பிழைப்பு வேறு.
முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள நல்ல விஷயங்கள், திறமைகள் ஆகியவற்றைக் கவனிப்பதோடு எனக்கு உடன்படாத குணாதிசயங்கள் இருந்தால் அதைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றியே சிந்தித்து, அவரை விட நான் நல்லவன் என்ற தம் பட்டம் அடித்துப் பல நேரங்களை வீணடித்துள்ளேன். தற்போதைய புத்திக் கொள்முதலால் இப்போதைக்கு என் நம்பிக்கை நூறு சதவீதம் நல்லவனாக யாருமில்லை, நானுமில்லை, எவரும் இருக்க முடியாது.
எதிர்பார்ப்புகள் தான் நம் தினசரி எதிரி. எதிர்பார்ப்பு இல்லையென்றால் நம் சந்தோஷப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். பிரச்சினையின் அளவை வைத்துதான் வெற்றி! வெற்றி பெரிதாக வரவேண்டுமென்று ஆசைப்படும் நாம்...பிரச்சினை சிறியதாக இருந்தாலே சங்கடப் படுவது எந்தவிதத்தில் நியாயம்© பிரச்சினை இல்லாத மனிதன் இறந்தவன் ஆகிறான். நாம் அதற்காகவா ஆசைப்படுகிறோம் ! பிரச்சினைகளைப் பட்டியல் போடுங்கள். தீரும் பிரச்சினை தீராதப் பிரச்சினை என்று பிரித்துப் பாருங்கள். உங்களுக்கே சிரிப்பு வரும். அதே போல் உங்களுக்கு வந்திருக்கும் பிரச்சினை இது வரை உலகிலேயே யாருக்கும் வந்ததில்லையா© என்று யோசித்துப் பாருங்கள். பிரச்சினையோடு போரிடத் தொடங்கி விடுவீர்கள்.
வழக்காடு மன்றத்தில் வாதம் நடப்பதுபோல். நம் மனதுக்குள்ளும் வாதம்- மன நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுத்தால் நிச்சயம் வாழ்க்கையில் வழுக்கலே இருக்காது. முகம் காட்டும் கண்ணாடி முன் நம் அழகை சரி செய்வது போல் அகம் காட்டும் கண்ணாடி இருப்பதாக நினைத்து நம் மன அழுக்கை அகற்றுவோம்.
இன்று நேற்று அல்ல- உங்களை விட நூறு மடங்கு நல்ல இதயம் இல்லாதவன், உங்களை விட நூறு மடங்கு அறிவு இல்லாதவன், உங்களை விட நூறு மடங்கு மனிதநேயம் இல்லாதவன், இந்த சமுதாயத்தில் உங்களை விட நூறு மடங்குக்கு மேல் மதிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்காக வருந்தியிருப்பீர்கள். இது இன்று நேற்று அல்ல, வரலாறு தோன்றிய காலத்திலிருந்தே இப்படி ஓர் அநியாயம் இந்த உலகில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இதை நினைத்து நம் நேர்மையையும், திறமையையும் ஒப்பிட்டு வேதனைப் படக்கூடாது. ஏனென்றால் இதையெல்லாம் பிரித்து. விபத்துக்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அது ஆபத்தில்தான் முடியும். அனுபவங்கள் அதிகம் இருந்தால் தான் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். அதே நேரத்தில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டுமென்றால், சில கெட்ட அனுபவங்களைச் சந்தித்திருக்க வேண்டும்.
எந்த மனிதனைச் சந்தித்தாலும் அவரைப் பற்றி இரண்டு வார்த்தை பாராட்டிப் பேசுங்கள். பிறகு நீங்கள் எதைப் பேசினாலும் அவர் தலையாட்டுவார். ஒருவர் முன்பைவிட ஒல்லியாக இருந்தால், "எப்படி உடம்பை சிலிம்மா வெச்சிருக்கீங்க," என்றும் கேட்கலாம். அதே நேரத்தில், "என்ன உடம்பு இப்படி வீக்கா இருக்கு," என்றும் காயப்படுத்தலாம். மனிதனை மனிதன் காயப் படுத்தாமல் இருப்பது தான் மிகப்பெரிய புண்ணியம் என்று வாழத்துவங்கினால் "புகழ்" நம்மை நோக்கிப் "புயல்" வேகத்தில் வரும்.
கஷ்டப்பட்டவர்கள் எல்லாம் வெற்றி பெற்றதில்லை. ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷ்டப்பட்டவர்கள் என்று "பென்ஜமின் டிசிலெரி" என்பவரின் கருத்து. வெற்றியின் விதையே தேடுதல்தான். எல்லோரிடமும் தனித்தன்மை இருக்கும். அதைத் தேட வேண்டும்.இப்படி இருந்தால் வெற்றி கிட்டும் என்றும் விதிமுறையில்லை. ஆனால் மனதுக்குள் ஒரு விதிமுறை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் சொல்லி வரக் கூடாது. அது தானே வழக்கத்தில் இருக்க வேண்டும். மற்றவர்களின் அறிவை நீ அறிந்தாலே உன் அறிவு கூர்மையாகும். சிலநேரம் அக்கிரமங்களைக் கண்டு கொள்ளாமல் போவது கூட ஒரு பாவம் தான். உன் நம்பிக்கையை மற்றவர்களுக்குச் சொல், திணிக்காதே.
மற்றர்களின் நம்பிக்கையைக் கவனி, புறக்கணிக்காதே. பிரச்சினைகளின் வடிவம் தான் மாறுமே தவிர, பிரச்சினை தீராது. எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டால் மரண பயம் என்று ஒன்று வரும். அதற்குப் பதிலே கிடையாது. ஆனால் நாம் வேறு பிரச்சினைகளுக்கு சிந்தனையையும் செயலையும் உபயோகிப்பதால் மரண பயம் பற்றி யோசிக்காமல் இருக்கிறோம். மரணத்திற்கு மருந்து கிடையாது.
இது அறிவுரை அல்ல. உங்களைப் போல் நானும் கற்றுக் கொண்டு வரும் புத்திக் கொள்முதல். இரவு உறங்கும் முன் நாளைய பொழுது இன்றை விட நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன். காலையில் ஒரு தொலைபேசி அலாரமானது அலறியது. எதிர்முனைக் கேள்விகள், அதிர்ச்சிகள், உடனே பதில் முடிவு எடுக்க முடியாத வில்லங்க விஷயங்கள், பயம், நடுக்கம்.ஆனால், அந்தத் தொலைபேசி அலாரம்தான் என்னை எழுப்பி விட்டதுமல்லாமல் உசுப்பியும் விட்டது. சூரியனுக்கு முன் சுறுசுறுப்புடன் உழைக்கத் தொடங்கினேன்.
நான் ஏதாவது திரைப்படம் பார்க்கும்போது ஒரு முடிவுடன் செல்வேன். இது நான் பார்க்க வேண்டிய படம். நான் இயக்க வேண்டிய, நடிக்க வேண்டிய படம் வேறு. என் கனவுகள் வேறு, இப்போதைய பிழைப்பு வேறு.
முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள நல்ல விஷயங்கள், திறமைகள் ஆகியவற்றைக் கவனிப்பதோடு எனக்கு உடன்படாத குணாதிசயங்கள் இருந்தால் அதைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றியே சிந்தித்து, அவரை விட நான் நல்லவன் என்ற தம் பட்டம் அடித்துப் பல நேரங்களை வீணடித்துள்ளேன். தற்போதைய புத்திக் கொள்முதலால் இப்போதைக்கு என் நம்பிக்கை நூறு சதவீதம் நல்லவனாக யாருமில்லை, நானுமில்லை, எவரும் இருக்க முடியாது.
எதிர்பார்ப்புகள் தான் நம் தினசரி எதிரி. எதிர்பார்ப்பு இல்லையென்றால் நம் சந்தோஷப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். பிரச்சினையின் அளவை வைத்துதான் வெற்றி! வெற்றி பெரிதாக வரவேண்டுமென்று ஆசைப்படும் நாம்...பிரச்சினை சிறியதாக இருந்தாலே சங்கடப் படுவது எந்தவிதத்தில் நியாயம்© பிரச்சினை இல்லாத மனிதன் இறந்தவன் ஆகிறான். நாம் அதற்காகவா ஆசைப்படுகிறோம் ! பிரச்சினைகளைப் பட்டியல் போடுங்கள். தீரும் பிரச்சினை தீராதப் பிரச்சினை என்று பிரித்துப் பாருங்கள். உங்களுக்கே சிரிப்பு வரும். அதே போல் உங்களுக்கு வந்திருக்கும் பிரச்சினை இது வரை உலகிலேயே யாருக்கும் வந்ததில்லையா© என்று யோசித்துப் பாருங்கள். பிரச்சினையோடு போரிடத் தொடங்கி விடுவீர்கள்.
வழக்காடு மன்றத்தில் வாதம் நடப்பதுபோல். நம் மனதுக்குள்ளும் வாதம்- மன நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுத்தால் நிச்சயம் வாழ்க்கையில் வழுக்கலே இருக்காது. முகம் காட்டும் கண்ணாடி முன் நம் அழகை சரி செய்வது போல் அகம் காட்டும் கண்ணாடி இருப்பதாக நினைத்து நம் மன அழுக்கை அகற்றுவோம்.
இன்று நேற்று அல்ல- உங்களை விட நூறு மடங்கு நல்ல இதயம் இல்லாதவன், உங்களை விட நூறு மடங்கு அறிவு இல்லாதவன், உங்களை விட நூறு மடங்கு மனிதநேயம் இல்லாதவன், இந்த சமுதாயத்தில் உங்களை விட நூறு மடங்குக்கு மேல் மதிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்காக வருந்தியிருப்பீர்கள். இது இன்று நேற்று அல்ல, வரலாறு தோன்றிய காலத்திலிருந்தே இப்படி ஓர் அநியாயம் இந்த உலகில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இதை நினைத்து நம் நேர்மையையும், திறமையையும் ஒப்பிட்டு வேதனைப் படக்கூடாது. ஏனென்றால் இதையெல்லாம் பிரித்து. விபத்துக்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அது ஆபத்தில்தான் முடியும். அனுபவங்கள் அதிகம் இருந்தால் தான் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். அதே நேரத்தில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டுமென்றால், சில கெட்ட அனுபவங்களைச் சந்தித்திருக்க வேண்டும்.
எந்த மனிதனைச் சந்தித்தாலும் அவரைப் பற்றி இரண்டு வார்த்தை பாராட்டிப் பேசுங்கள். பிறகு நீங்கள் எதைப் பேசினாலும் அவர் தலையாட்டுவார். ஒருவர் முன்பைவிட ஒல்லியாக இருந்தால், "எப்படி உடம்பை சிலிம்மா வெச்சிருக்கீங்க," என்றும் கேட்கலாம். அதே நேரத்தில், "என்ன உடம்பு இப்படி வீக்கா இருக்கு," என்றும் காயப்படுத்தலாம். மனிதனை மனிதன் காயப் படுத்தாமல் இருப்பது தான் மிகப்பெரிய புண்ணியம் என்று வாழத்துவங்கினால் "புகழ்" நம்மை நோக்கிப் "புயல்" வேகத்தில் வரும்.
கஷ்டப்பட்டவர்கள் எல்லாம் வெற்றி பெற்றதில்லை. ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷ்டப்பட்டவர்கள் என்று "பென்ஜமின் டிசிலெரி" என்பவரின் கருத்து. வெற்றியின் விதையே தேடுதல்தான். எல்லோரிடமும் தனித்தன்மை இருக்கும். அதைத் தேட வேண்டும்.இப்படி இருந்தால் வெற்றி கிட்டும் என்றும் விதிமுறையில்லை. ஆனால் மனதுக்குள் ஒரு விதிமுறை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் சொல்லி வரக் கூடாது. அது தானே வழக்கத்தில் இருக்க வேண்டும். மற்றவர்களின் அறிவை நீ அறிந்தாலே உன் அறிவு கூர்மையாகும். சிலநேரம் அக்கிரமங்களைக் கண்டு கொள்ளாமல் போவது கூட ஒரு பாவம் தான். உன் நம்பிக்கையை மற்றவர்களுக்குச் சொல், திணிக்காதே.
மற்றர்களின் நம்பிக்கையைக் கவனி, புறக்கணிக்காதே. பிரச்சினைகளின் வடிவம் தான் மாறுமே தவிர, பிரச்சினை தீராது. எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டால் மரண பயம் என்று ஒன்று வரும். அதற்குப் பதிலே கிடையாது. ஆனால் நாம் வேறு பிரச்சினைகளுக்கு சிந்தனையையும் செயலையும் உபயோகிப்பதால் மரண பயம் பற்றி யோசிக்காமல் இருக்கிறோம். மரணத்திற்கு மருந்து கிடையாது.
நண்பனாவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். எனக்குத் தெரிந்து எந்த நண்பரையும் நான் இழந்ததில்லை. அப்படிப் பிரிந்து போனால் அவரை தூரத்து நண்பன் என்றே அழைப்பேன். என்மீது எத்தனை கிராம் அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், அவர்கள் மேல் இருந்த பல கிலோ கணக்கு அன்பு, சில கிராமாகக் குறைந்து விடும் என்பதைப் பலர் யோசிப்பதில்லை நீங்கள் யோசியுங்கள்.
நம் வீட்டில் வேலைப் பார்க்கும் வேலைக்காரர்களுடன் நம் குழந்தைகள் எப்படிப் பழகுகிறார்கள்,எப்படி அழைக்கிறார்கள் என்பதை நாம் கவனிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஓட்டுநரை©அண்ணன்© என்றும், வீட்டைச் சுத்தம் செய்பவரை ©அக்கா© என்றும் அவர்களாகவே கூப்பிட்டால் குழந்தைகள் குழந்தைகளாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
அப்படியில்லாது, பேர் சொல்லியோ, ©டா© போட்டோ கூப்பிடுகிறார்கள் என்றால், நம் குழந்தைகள் குட்டி ரவுடிகளாக மாறியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
நம் வீட்டில் வேலை பார்ப்பவர்களைக் கூர்ந்து கவனியுங்கள் - நாம் முகம் சுளிக்கும் வேலையையும் அவர்கள் மூக்கைப் பிடித்து கொண்டு செய்கிறார்கள். நம்மால் தூக்க முடியாத பாரங்களை அவர்கள் தம் பிடித்துத் தூக்குகிறார்கள். அதற்குத்தான் சம்பளம் தருகிறோமே என்று சொல்லலாம். பணத்தை விட முக்கியமானது பாசம்.
வேலைக்காரர்களை நண்பர்போல் நடத்துங்கள். சில வீடுகளில் குடும்ப உறுப்பினர்களை விட வேலையாட்கள் மீது குழந்தைகள் பாசமாக விளையடுவதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பாசம் தான் உண்மையான பாதுகாப்பு.
நம் வீட்டுப் பிள்ளைகளைப் படிப்பு விஷயத்தில் அவர்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதில் முழு சுதந்திரம் கொடுங்கள். இல்லையேல் அவர்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.
அதே போல் அவர்களின் விருப்ப விளையாட்டில் ஒரு மணி நேரம் சந்தோஷமாக விளையாட அனுமதியுங்கள். எப்போது பார்த்தாலும் படி, படி என்றால் அவர்களுக்கு விளையாட்டின் மீது மேலும் ஒரு படி கவனம் போய்விடும்.
குழந்தைகள் செய்யும் குறும்பையும், நகைச்சுவையையும் ரசியுங்கள். உங்களுக்கே உற்சாகம் ஊற்றெடுக்கும்.அதட்டல் இருக்கலாம். ஆனால் அடித்தல் கூடாது.
இன்றைய சூழ்நிலையில் நம் பிள்ளைகளை நண்பர்கள் போல் நடத்துவதுதான் மிக நல்லது. இல்லையென்றால் குழந்தைகள் பெற்றோர்களைப் போலீஸ்காரர் போல்தான் பார்ப்பார்கள். அதே நேரத்தில் நம் பிள்ளைகளின் நண்பர்கள் எப்பேர்ப்பட்டவர்கள் என்பதை உன்னிப்பாகக் கவனியுங்கள். பழக்கம் தான் ஒழுக்கத்தின் அஸ்திவாரம்.
சிலர் விலை உயர்ந்த சட்டையைத்தான் அணிவேன், இது என் வழக்கம் என்பார்கள். இது தவறில்லை. வசதி படைத்தவர்கள் வசதியாக வாழலாம்.
வேறு கோணத்தில் சிலரைப் பார்த்திருக்கிறேன். பல கோடிக்கு அதிபராக இருந்தும் சாதாரண சட்டை அணிந்திருப்பார்கள். அவரால் அந்த சட்டை பெருமை அடைகிறது. பெரிய எழுத்தாளர்களைச் சந்திதிருக்கிறேன். சாதாரண பேனாவைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர் எழுதும் எழுத்து பலரது தலை எழுத்தையே மாற்றிவிடும்.
எனக்குத் தோன்றுவதெல்லாம் நாம் பயன்படுத்தும் பொருளால் நமக்குப் பெருமை என்பதைவிட நம்மால் அந்தப் பொருளுக்குப் பெருமை ஏற்பட வேண்டும். பல தலைவர்களின் நினைவில்லங்களுக்குச் சென்றால் அவர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பார்த்தால் தெரியும்.
உயர உயர எளிமைதான் பெருமை சேர்க்கும் என்பதைப் புரிந்து கொண்டால் நீங்களும் தலை வராகலாம்.
நம் வீட்டில் வேலைப் பார்க்கும் வேலைக்காரர்களுடன் நம் குழந்தைகள் எப்படிப் பழகுகிறார்கள்,எப்படி அழைக்கிறார்கள் என்பதை நாம் கவனிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஓட்டுநரை©அண்ணன்© என்றும், வீட்டைச் சுத்தம் செய்பவரை ©அக்கா© என்றும் அவர்களாகவே கூப்பிட்டால் குழந்தைகள் குழந்தைகளாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
அப்படியில்லாது, பேர் சொல்லியோ, ©டா© போட்டோ கூப்பிடுகிறார்கள் என்றால், நம் குழந்தைகள் குட்டி ரவுடிகளாக மாறியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
நம் வீட்டில் வேலை பார்ப்பவர்களைக் கூர்ந்து கவனியுங்கள் - நாம் முகம் சுளிக்கும் வேலையையும் அவர்கள் மூக்கைப் பிடித்து கொண்டு செய்கிறார்கள். நம்மால் தூக்க முடியாத பாரங்களை அவர்கள் தம் பிடித்துத் தூக்குகிறார்கள். அதற்குத்தான் சம்பளம் தருகிறோமே என்று சொல்லலாம். பணத்தை விட முக்கியமானது பாசம்.
வேலைக்காரர்களை நண்பர்போல் நடத்துங்கள். சில வீடுகளில் குடும்ப உறுப்பினர்களை விட வேலையாட்கள் மீது குழந்தைகள் பாசமாக விளையடுவதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பாசம் தான் உண்மையான பாதுகாப்பு.
நம் வீட்டுப் பிள்ளைகளைப் படிப்பு விஷயத்தில் அவர்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதில் முழு சுதந்திரம் கொடுங்கள். இல்லையேல் அவர்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.
அதே போல் அவர்களின் விருப்ப விளையாட்டில் ஒரு மணி நேரம் சந்தோஷமாக விளையாட அனுமதியுங்கள். எப்போது பார்த்தாலும் படி, படி என்றால் அவர்களுக்கு விளையாட்டின் மீது மேலும் ஒரு படி கவனம் போய்விடும்.
குழந்தைகள் செய்யும் குறும்பையும், நகைச்சுவையையும் ரசியுங்கள். உங்களுக்கே உற்சாகம் ஊற்றெடுக்கும்.அதட்டல் இருக்கலாம். ஆனால் அடித்தல் கூடாது.
இன்றைய சூழ்நிலையில் நம் பிள்ளைகளை நண்பர்கள் போல் நடத்துவதுதான் மிக நல்லது. இல்லையென்றால் குழந்தைகள் பெற்றோர்களைப் போலீஸ்காரர் போல்தான் பார்ப்பார்கள். அதே நேரத்தில் நம் பிள்ளைகளின் நண்பர்கள் எப்பேர்ப்பட்டவர்கள் என்பதை உன்னிப்பாகக் கவனியுங்கள். பழக்கம் தான் ஒழுக்கத்தின் அஸ்திவாரம்.
சிலர் விலை உயர்ந்த சட்டையைத்தான் அணிவேன், இது என் வழக்கம் என்பார்கள். இது தவறில்லை. வசதி படைத்தவர்கள் வசதியாக வாழலாம்.
வேறு கோணத்தில் சிலரைப் பார்த்திருக்கிறேன். பல கோடிக்கு அதிபராக இருந்தும் சாதாரண சட்டை அணிந்திருப்பார்கள். அவரால் அந்த சட்டை பெருமை அடைகிறது. பெரிய எழுத்தாளர்களைச் சந்திதிருக்கிறேன். சாதாரண பேனாவைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர் எழுதும் எழுத்து பலரது தலை எழுத்தையே மாற்றிவிடும்.
எனக்குத் தோன்றுவதெல்லாம் நாம் பயன்படுத்தும் பொருளால் நமக்குப் பெருமை என்பதைவிட நம்மால் அந்தப் பொருளுக்குப் பெருமை ஏற்பட வேண்டும். பல தலைவர்களின் நினைவில்லங்களுக்குச் சென்றால் அவர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பார்த்தால் தெரியும்.
உயர உயர எளிமைதான் பெருமை சேர்க்கும் என்பதைப் புரிந்து கொண்டால் நீங்களும் தலை வராகலாம்.
சின்ன விஷயம் என்று அக்கறை காட்டாமல் இருப்பது தான். நாம் பல நேரங்களில் செய்யும் பெரிய தவறு. ஆம். சின்ன விஷயம் தான் பெரிய பிரச்சினைக்கு அஸ்திவாரம்.
சைக்கிளில் காற்று கம்மியாக இருந்தால் அதை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அது பஞ்சரில் ஆரம்பித்து டயரையே மற்றும் அளவு வளர்ந்திருக்கும். பையன் காலாண்டுத் தேர்வில் ஒரு பாடத்தில் பெயில் ஆகியிருந்ததைக் கவனிக்காமல் விட்டால் ஓர் ஆண்டு வீணாக வாய்ப்பு உண்டு. குழாயில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் ஒழுகும் போது அதைக் கவனிக்காமல் விட்டால் காலையில், வீட்டுத் தண்ணீர் டேங்கில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இருக்காது. வீட்டில் செல்(கரையான்) அரிப்பைக் கவனிக்காத ஒருவர் அந்த வீட்டையே விற்றுவிட்டார் என்றால் பாருங்களேன் !
இதிலிருந்து நாம் மனதில் பதிவு செய்ய வேண்டியது சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் தான் பெரிய ஆபத்திலிந்து தப்பிக்கலாம்.
ஓட்டலுக்குச் சென்று சாப்பிட ஆர்டர் கொடுக்கும்முன் விலைப்பட்டியலைப் பார்த்து விடுவது மிகவும் முக்கியமானது. இது சிறிய ஓட்டலிலிருந்து ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை பொருந்தும். சில பொருட்களில் ©ஸ்பெஷல்© என்று ஒரு வார்த்தை சேர்ந்து இருக்கும் . அந்தப் பொருளின் விலையை நிச்சயம் கவனிக்க வேண்டும். ©ஸ்பெஷல்© என்ற வார்த்தைக்கு விலை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.
அதேபோல், தாங்கள் இதற்கு முன் சாப்பிடாததாகவும் இருந்தால் அதைப்பற்றி விசாரிப்பது நல்லது. சில பலகாரங்களின் பெயர் படிப்பதற்குப் பிரமாதமாக இருக்கிறதென்று ஆர்டர் கொடுத்து விடுவீர்கள். ஆனால், அந்தப் பல காரம் உங்கள் டேபிளுக்கு வந்தபிறகு அதன் ருசியே உங்களுக்குப் பிடிக்காமலிருந்தால், காசு வீணாவதோடு சங்கடமும் ஏற்படும்.
எனவே, கூச்சப் படாமல் சாப்பிடுவது போல், சாப்பிடப் போகிற பொருள் எப்பேர்ப்பட்டது. எவ்வளவு விலை என்பதையும் கூச்சப்படாமால் கேட்பது நல்லது.
நாம் தயாரிக்கும் ஒரு பொருள் பிரமாதமாக வியாபாரம் ஆகிறது என்றால், அப்பொருளை விட இன்னும் பிரமாதமான ஒரு பொருளைத் தயாரிக்க மூளையைக் கசக்கிக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் நீங்கள் தயாரிக்கும் பொருளைவிட சிறப்பாகவும், விலை குறைவாகவும் ஒரு பொருள் திடீரென்று விற்பனைக்கு வரலாம். அந்தப் பொருள் உங்களை வீழ்த்த வந்ததாகக் கோபப் பட்டால் நஷ்டம் நமக்குத்தான். புதுப்புதுக் கண்டு பிடிப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும்.
உங்கள் தயாரிப்பு மக்களிடம் வெற்றிகரமாக இருக்கும் போதே, அடுத்த உங்களது புது வரவுக்காக அறிவை விதைத்து வையுங்கள். நாம் தயாரிக்கும் பொருள் மற்ற பொருட்களிலிருந்து எந்த எந்த விஷயத்தில் தனித்தன்மை கொண்டது என்பது தான் வியாபாரத்தின் வெற்றியாக இருக்கும். கண்ணுக்குத் தெரியாத ரகசியம் மக்களின் ரசனை அதை நாம் ©அறிவு© என்ற பூதக்கண்ணாடி போட்டுக் கண்டுபிடித்தால் தொட்டதெல்லாம் துலங்கும்.
சிலர் வில்லங்கம் உள்ள சொத்து ஏதாவது விலைக்கு இருக்கா, என்று கேட்பார்கள். அவர்களைப் பார்த்தால், நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வில்லங்கம் உள்ள சொத்து விலை குறைவாகக் கிடைக்கும் என்பது, இவர்களது பேராசை, பிரச்சனை வந்தால் கோர்ட்டுக்குப் போகலாம். இவர்கள் கோர்ட்டுக்குப் போவதற்காகவே வில்லங்கச் சொத்தை விலை பேசுவார்கள்.
ஒரு முறை கோர்ட்டுக்குப் போகும் போது ஏற்படுகிற மன உளைச்சல் இருக்கிறதே, அந்த வேதனை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சொத்து விற்கும் போது, ஒருவர் துக்கத்துடன் தான் விற்பார். அவரது இயலாமையைப் பயன்படுத்தி அடிமாட்டு விலைக்கு வாங்குவது, வாங்குபவருக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால் அதுபோல் துரோகச் செயல் வேறு எதுவும் இல்லை. ©நியாயமான விலைக்கு வாங்கும் சொத்துதான் நிலைத்து நிற்கும்© என்ற நிஜத்தைப் பலர் நினைத்துப் பார்ப்பதில்லை.
சொத்து ஒரே இடத்தில் தான் இருக்கிறது. பத்திரங்கள் தான் புதிதாகவும், புதுப்பெயருடனும் சேர்ந்து கொண்டே போகின்றன. வில்லங்கச் சொத்து வாங்குபவர்களெல்லாம், நாம் ஏதோ 200 ஆண்டு காலம் வாழப் போகிறோம் என்ற மூட நம்பிக்கையில் தான் கொள்ளை லாபம் அடிக்கும் செயலில் இயங்குகிறார்கள். பெரும்பாலும், நகை வியாபாரிகள் நகையை விற்கும் போது வாழ்த்திக் கொடுப்பார்கள். அந்த மனப்பான்மையோடு சொத்து விற்பவரும் வாழ்த்திக் கொடுக்கும் படி வியாபாரம் நடந்தால் தான், அந்த சொத்து நிலைக்கும்.
சின்ன அளவு வீடாக இருந்தாலும், பங்களா வீடாக இருந்தாலும், வீட்டில் மிக முக்கியமாகப் பராமரிக்க வேண்டிய இடம் ©பாத்ரூம்©. நம் உடம்பில் உள்ள அழுக்கைப் போக்கும் இடம் ©பாத்ரூம்© அதுவே அழுக்காக இருந்தால் எப்படி© அங்கேயே துர்நாற்றம் வீசினால் நம் உடம்பில் உள்ள துர்நாற்றம் எப்படிப் போகும்
சைக்கிளில் காற்று கம்மியாக இருந்தால் அதை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அது பஞ்சரில் ஆரம்பித்து டயரையே மற்றும் அளவு வளர்ந்திருக்கும். பையன் காலாண்டுத் தேர்வில் ஒரு பாடத்தில் பெயில் ஆகியிருந்ததைக் கவனிக்காமல் விட்டால் ஓர் ஆண்டு வீணாக வாய்ப்பு உண்டு. குழாயில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் ஒழுகும் போது அதைக் கவனிக்காமல் விட்டால் காலையில், வீட்டுத் தண்ணீர் டேங்கில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இருக்காது. வீட்டில் செல்(கரையான்) அரிப்பைக் கவனிக்காத ஒருவர் அந்த வீட்டையே விற்றுவிட்டார் என்றால் பாருங்களேன் !
இதிலிருந்து நாம் மனதில் பதிவு செய்ய வேண்டியது சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் தான் பெரிய ஆபத்திலிந்து தப்பிக்கலாம்.
ஓட்டலுக்குச் சென்று சாப்பிட ஆர்டர் கொடுக்கும்முன் விலைப்பட்டியலைப் பார்த்து விடுவது மிகவும் முக்கியமானது. இது சிறிய ஓட்டலிலிருந்து ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை பொருந்தும். சில பொருட்களில் ©ஸ்பெஷல்© என்று ஒரு வார்த்தை சேர்ந்து இருக்கும் . அந்தப் பொருளின் விலையை நிச்சயம் கவனிக்க வேண்டும். ©ஸ்பெஷல்© என்ற வார்த்தைக்கு விலை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.
அதேபோல், தாங்கள் இதற்கு முன் சாப்பிடாததாகவும் இருந்தால் அதைப்பற்றி விசாரிப்பது நல்லது. சில பலகாரங்களின் பெயர் படிப்பதற்குப் பிரமாதமாக இருக்கிறதென்று ஆர்டர் கொடுத்து விடுவீர்கள். ஆனால், அந்தப் பல காரம் உங்கள் டேபிளுக்கு வந்தபிறகு அதன் ருசியே உங்களுக்குப் பிடிக்காமலிருந்தால், காசு வீணாவதோடு சங்கடமும் ஏற்படும்.
எனவே, கூச்சப் படாமல் சாப்பிடுவது போல், சாப்பிடப் போகிற பொருள் எப்பேர்ப்பட்டது. எவ்வளவு விலை என்பதையும் கூச்சப்படாமால் கேட்பது நல்லது.
நாம் தயாரிக்கும் ஒரு பொருள் பிரமாதமாக வியாபாரம் ஆகிறது என்றால், அப்பொருளை விட இன்னும் பிரமாதமான ஒரு பொருளைத் தயாரிக்க மூளையைக் கசக்கிக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் நீங்கள் தயாரிக்கும் பொருளைவிட சிறப்பாகவும், விலை குறைவாகவும் ஒரு பொருள் திடீரென்று விற்பனைக்கு வரலாம். அந்தப் பொருள் உங்களை வீழ்த்த வந்ததாகக் கோபப் பட்டால் நஷ்டம் நமக்குத்தான். புதுப்புதுக் கண்டு பிடிப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும்.
உங்கள் தயாரிப்பு மக்களிடம் வெற்றிகரமாக இருக்கும் போதே, அடுத்த உங்களது புது வரவுக்காக அறிவை விதைத்து வையுங்கள். நாம் தயாரிக்கும் பொருள் மற்ற பொருட்களிலிருந்து எந்த எந்த விஷயத்தில் தனித்தன்மை கொண்டது என்பது தான் வியாபாரத்தின் வெற்றியாக இருக்கும். கண்ணுக்குத் தெரியாத ரகசியம் மக்களின் ரசனை அதை நாம் ©அறிவு© என்ற பூதக்கண்ணாடி போட்டுக் கண்டுபிடித்தால் தொட்டதெல்லாம் துலங்கும்.
சிலர் வில்லங்கம் உள்ள சொத்து ஏதாவது விலைக்கு இருக்கா, என்று கேட்பார்கள். அவர்களைப் பார்த்தால், நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வில்லங்கம் உள்ள சொத்து விலை குறைவாகக் கிடைக்கும் என்பது, இவர்களது பேராசை, பிரச்சனை வந்தால் கோர்ட்டுக்குப் போகலாம். இவர்கள் கோர்ட்டுக்குப் போவதற்காகவே வில்லங்கச் சொத்தை விலை பேசுவார்கள்.
ஒரு முறை கோர்ட்டுக்குப் போகும் போது ஏற்படுகிற மன உளைச்சல் இருக்கிறதே, அந்த வேதனை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சொத்து விற்கும் போது, ஒருவர் துக்கத்துடன் தான் விற்பார். அவரது இயலாமையைப் பயன்படுத்தி அடிமாட்டு விலைக்கு வாங்குவது, வாங்குபவருக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால் அதுபோல் துரோகச் செயல் வேறு எதுவும் இல்லை. ©நியாயமான விலைக்கு வாங்கும் சொத்துதான் நிலைத்து நிற்கும்© என்ற நிஜத்தைப் பலர் நினைத்துப் பார்ப்பதில்லை.
சொத்து ஒரே இடத்தில் தான் இருக்கிறது. பத்திரங்கள் தான் புதிதாகவும், புதுப்பெயருடனும் சேர்ந்து கொண்டே போகின்றன. வில்லங்கச் சொத்து வாங்குபவர்களெல்லாம், நாம் ஏதோ 200 ஆண்டு காலம் வாழப் போகிறோம் என்ற மூட நம்பிக்கையில் தான் கொள்ளை லாபம் அடிக்கும் செயலில் இயங்குகிறார்கள். பெரும்பாலும், நகை வியாபாரிகள் நகையை விற்கும் போது வாழ்த்திக் கொடுப்பார்கள். அந்த மனப்பான்மையோடு சொத்து விற்பவரும் வாழ்த்திக் கொடுக்கும் படி வியாபாரம் நடந்தால் தான், அந்த சொத்து நிலைக்கும்.
சின்ன அளவு வீடாக இருந்தாலும், பங்களா வீடாக இருந்தாலும், வீட்டில் மிக முக்கியமாகப் பராமரிக்க வேண்டிய இடம் ©பாத்ரூம்©. நம் உடம்பில் உள்ள அழுக்கைப் போக்கும் இடம் ©பாத்ரூம்© அதுவே அழுக்காக இருந்தால் எப்படி© அங்கேயே துர்நாற்றம் வீசினால் நம் உடம்பில் உள்ள துர்நாற்றம் எப்படிப் போகும்
நோய் உருவாகும் இடமும் அதுதான். நோயைக் குணப்படுத்தும் இடமும் அததுன். நம்ம வீட்டுக்கு யாராவது வந்தால், நம் பாத்ரூமைப் பார்த்துப் பாராட்டினால் நீங்கள் அரண்மனையில் வாழ்வது போன்ற ஒரு மகிழ்ச்சி உண்டாகும். பாத்ரூமைக் கிளீனாக வைத்திருப்பது அணிச்சை செயலாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் உள்ள வீட்டில் பாத்ரூமைக் கிளீனாக வைத்திருப்பது கஷ்டம் தான். கஷ்டத்தைப் பார்த்தால் நாளைக்கு வரும் நோய்க்கு யார் வேதனைப்படுவது © பாத்ரூமைச் சுத்தமாக வைத்து கொள்ளக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். ©நீங்கள் கருமியாகக் கூட இருங்கள். ஆனால் நோய்க்கிருமி வராமலிருக்க பாத்ரூமைச் சுத்தமாகப் பார்த்துங்குங்க.©
புது வருடம் பிறந்தவுடன் இப்போதெல்லாம், இலவசமாக அதிகம் கிடைப்பது டைரிகள் தான். பெரும் பாலானவர்கள் இப்போது கடைப்பிடிக்கும் புதுப்பழக்கம். இந்தாண்டு டைரியை அடுத்த ஆண்டு பயன்படுத்துவது.
அன்பளிப்பாகவோ, இலவசமாகவோ எந்தப் பொருள் கிடைத்தாலும் அதன் மீது நாம் அக்கறை கொள்வதில்லை. காற்று இலவசமாகக் கிடைப்பதால் அதைப் பொருட்படுத்துவதில்லை. காற்றைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய காலம் வந்தால் நம் கதி என்ன© டைரியும் அது போலத்தான். அன்பளிப்பாக வரகிற டைரியையே நாம் பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடுகிறோம்.
வரவு செலவுகளைப் பதிவு செய்ய டைரியை விடச் சிறந்த கணக்கர் உண்டா© உங்கள் புரோகிராம்களை எடுத்துச் சொல்ல டைரியை விட சிறந்த சம்பளம் வாங்காத பி.ஏ உண்டா© எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி எண்கள், இன்னும் என்னென்னவோ வசதிகள். எத்தனை பேர் டைரிகள் நமது பெயர், விலாசம், தொலைபேசி எண், ரத்தப்பிரிவு இப்படித் தகவல்களைப் பதிவு செய்து வைத்துள்ளோம்©
டைரியை முழுமையாகப் பய்னபடுத்தினால் நீங்கள் ஆண்டுக்கு ஒரு புத்தகம் எழுதுகிறீர்கள் என்றே சொல்லலாம். டைரி எழுதுவது ஒரு வரலாற்றுப் பதிவு. பட்டப் படிப்பு முடித்து வேலை பார்க்கும் ஒருவர். அவரது பத்தாம் வகுப்பு நோட்டுப் புத்தகத்தைப் புரட்டும் போது புன்னகை பூப்பது போல டைரி உங்களின் வளர்ச்சியின் அளவுகோல்.
நாம் நேசிக்கும் நபர் மீதோ அல்லது நமது நண்பர்கள் மீதோ சில நேரங்களில் அவர்களது செய்கைகளால் நமக்குக் கோபத்தைக் கொட்டி தீர்க்கும் வகையில் கடுஞ் சொற்களால் எழுதித் தபாலில் அனுப்பி, நமது கோபத்தைத் தனித்துக் கொள்வோம்.
கொஞ்சம் யோசித்தால், ©எதுவும் முடிவல்ல© என்ற பக்குவத்தோடு அவரை நேரில் பார்க்கும் போது, உங்கள் கோபத்தை சூழ்நிலைக்கேற்ப அவரிடம் தெரிவியுங்கள். அவர் உங்களுக்கு சரியான பதிலை அளிக்கலாம். அல்லது, தான் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்கலாம். ஆனால் நாம் அவசரப் பட்டுக் கோபத்தைக் கடிதம் மூலம் எழுதியிருந்தால், கடிதம் சின்ன விஷயத்தைப் பெரியதாக்கிவிடும்.
கடிதம் அன்பையும், நட்பையும், வெளிப்படுத்துவதற்கு மட்டுமே அதிகம் பயன் படவேண்டும். கோபக் கடிதங்கள் சில நேரங்களில் கோர்ட்டில் கூட ஒரு சாட்சி ஆகிவிடும் என்பதை உணர வேண்டும்.
வக்கீலிடமும், டாக்டரிமும் உண்மையை மறைக்கக் கூடாது என்று எல்லோரும் சொல்கிறோம். ஆனால் செயலில் எத்தனை பேர் இதைக் கடைப்பிடிக்கிறார்கள். என்று பார்த்தால் பாதிக்குப் பாதி கூட இருக்காது.
வக்கீலிடம் பேசும்போது, ©நான் நல்லவன்©, ©நான் நல்லவன்© என்று பாயிண்ட் வைத்தே பேசுவார்கள். தான் செய்த தவறை, ©இது ஒரு தவறா©© என்று மனசுக்குள்ளேயே பூட்டி வைத்துப் பேசினால் , உங்கள் வழக்கில் வக்கீல் எப்படி வாதாடி வெற்றி பெறுவார்© செய்த தவறை முதலில் சொல்லி விட்டால் உங்களைக் காப்பாற்ற அவர் முயற்சி எடுப்பார். உங்கள் பலத்தைச் சொல்லுமுன், உங்கள் பலவீனத்தையும் சொல்லி விட்டால் நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.
அதோ போல் தான் டாக்டரிடமும் உங்கள் வீக்னசை சொல்லக் கூச்சப்படாதீர்கள். உங்களைக் காப்பாற்ற முயற்சிப்பவரிடம் என்ன கூச்சம்© இந்த விஷயம் வக்கீலிடமும், டாக்டரிடமும் மட்டும் தான் பொருந்தும், எல்லோரிடமும் எல்லா உண்மைகளையும் உளறிக் கொட்டினால், அது வீண் வம்பில் தான் முடியும்.
பலருக்கும் பயன்படும் தகவல்களைத் தெரிந்து கொண்டால், அதைமற்றவர்களுக்கு சொல்லவே மாட்டார்கள் சிலர். இது குறுகிய மனப்ன்மையாகும். சமுதாயத்தில் அறிவிக்கப்படும் எல்லா பயனுள்ள விஷயங்களும் எல்லோரும் அறிந்து கொள்ளத்தான். ஒரு அப்ளிகேஷன் பார்ம் வாங்கிவிட்டால் கூட, தன் நண்பனுக்கும் சேர்த்தே தன் செலவில் வாங்கும் நண்பனும் உண்டு.
வேகமான உலகில் எங்கே, என்ன கிடைக்கின்றது© எப்படி வாங்குவது© என்பதை அறிந்தால், தெரியாதவர்களுக்குத் தெரியபடுத்துங்கள். அது தர்மத்துக்கு நிகரானது. ஒருவருக்கு வேலை கிடைக்க நீங்கள் வழிகாட்டிப் பாருங்கள்.உங்கள் வாழ்க்கை வளப்படும்.ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்க்க உதவி புரிந்து பாருங்கள். உங்கள் மனம் குழந்தை மனசாக மாறும்.
நாம் மட்டுமே முன்னேற வேண்டும். நாம் மட்டுமே வெற்றி பெற வேண்டும். நாம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும்© என்ற எண்ணத்துக்குத் தீனி போட்டால், நீங்கள் ஒரு வகை மிருகமாக மாறி வருகிறீர்கள் என்று அர்த்தம். மனிதன் என்ற பெயர் உங்களுக்குப் பொருந்தாது.
சிலர் அவசரத்துக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சைக்கிளையோ, ஸ்கூட்டரையோ கேட்பார்கள். இது ஒரு உதவி என்று அவர்களும் பெருந்தன்மையுடன் கொடுப்பார்கள். எப்போதாவது இப்படி உதவி கேட்பதில் தப்பில்லை. சிலர் எப்போதுமே ஏதாவது காரணம் சொல்லி ஓசியில் வண்டி கேட்டு உபத்திரவம் செய்வதைப் பழக்கமாக வைத்திருப்பார்கள்.இது ©புத்திசாலித்தனம்© என்ற பெயரில் செய்யும் பிராடுத்தனம்.
குழந்தைகள் உள்ள வீட்டில் பாத்ரூமைக் கிளீனாக வைத்திருப்பது கஷ்டம் தான். கஷ்டத்தைப் பார்த்தால் நாளைக்கு வரும் நோய்க்கு யார் வேதனைப்படுவது © பாத்ரூமைச் சுத்தமாக வைத்து கொள்ளக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். ©நீங்கள் கருமியாகக் கூட இருங்கள். ஆனால் நோய்க்கிருமி வராமலிருக்க பாத்ரூமைச் சுத்தமாகப் பார்த்துங்குங்க.©
புது வருடம் பிறந்தவுடன் இப்போதெல்லாம், இலவசமாக அதிகம் கிடைப்பது டைரிகள் தான். பெரும் பாலானவர்கள் இப்போது கடைப்பிடிக்கும் புதுப்பழக்கம். இந்தாண்டு டைரியை அடுத்த ஆண்டு பயன்படுத்துவது.
அன்பளிப்பாகவோ, இலவசமாகவோ எந்தப் பொருள் கிடைத்தாலும் அதன் மீது நாம் அக்கறை கொள்வதில்லை. காற்று இலவசமாகக் கிடைப்பதால் அதைப் பொருட்படுத்துவதில்லை. காற்றைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய காலம் வந்தால் நம் கதி என்ன© டைரியும் அது போலத்தான். அன்பளிப்பாக வரகிற டைரியையே நாம் பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடுகிறோம்.
வரவு செலவுகளைப் பதிவு செய்ய டைரியை விடச் சிறந்த கணக்கர் உண்டா© உங்கள் புரோகிராம்களை எடுத்துச் சொல்ல டைரியை விட சிறந்த சம்பளம் வாங்காத பி.ஏ உண்டா© எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி எண்கள், இன்னும் என்னென்னவோ வசதிகள். எத்தனை பேர் டைரிகள் நமது பெயர், விலாசம், தொலைபேசி எண், ரத்தப்பிரிவு இப்படித் தகவல்களைப் பதிவு செய்து வைத்துள்ளோம்©
டைரியை முழுமையாகப் பய்னபடுத்தினால் நீங்கள் ஆண்டுக்கு ஒரு புத்தகம் எழுதுகிறீர்கள் என்றே சொல்லலாம். டைரி எழுதுவது ஒரு வரலாற்றுப் பதிவு. பட்டப் படிப்பு முடித்து வேலை பார்க்கும் ஒருவர். அவரது பத்தாம் வகுப்பு நோட்டுப் புத்தகத்தைப் புரட்டும் போது புன்னகை பூப்பது போல டைரி உங்களின் வளர்ச்சியின் அளவுகோல்.
நாம் நேசிக்கும் நபர் மீதோ அல்லது நமது நண்பர்கள் மீதோ சில நேரங்களில் அவர்களது செய்கைகளால் நமக்குக் கோபத்தைக் கொட்டி தீர்க்கும் வகையில் கடுஞ் சொற்களால் எழுதித் தபாலில் அனுப்பி, நமது கோபத்தைத் தனித்துக் கொள்வோம்.
கொஞ்சம் யோசித்தால், ©எதுவும் முடிவல்ல© என்ற பக்குவத்தோடு அவரை நேரில் பார்க்கும் போது, உங்கள் கோபத்தை சூழ்நிலைக்கேற்ப அவரிடம் தெரிவியுங்கள். அவர் உங்களுக்கு சரியான பதிலை அளிக்கலாம். அல்லது, தான் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்கலாம். ஆனால் நாம் அவசரப் பட்டுக் கோபத்தைக் கடிதம் மூலம் எழுதியிருந்தால், கடிதம் சின்ன விஷயத்தைப் பெரியதாக்கிவிடும்.
கடிதம் அன்பையும், நட்பையும், வெளிப்படுத்துவதற்கு மட்டுமே அதிகம் பயன் படவேண்டும். கோபக் கடிதங்கள் சில நேரங்களில் கோர்ட்டில் கூட ஒரு சாட்சி ஆகிவிடும் என்பதை உணர வேண்டும்.
வக்கீலிடமும், டாக்டரிமும் உண்மையை மறைக்கக் கூடாது என்று எல்லோரும் சொல்கிறோம். ஆனால் செயலில் எத்தனை பேர் இதைக் கடைப்பிடிக்கிறார்கள். என்று பார்த்தால் பாதிக்குப் பாதி கூட இருக்காது.
வக்கீலிடம் பேசும்போது, ©நான் நல்லவன்©, ©நான் நல்லவன்© என்று பாயிண்ட் வைத்தே பேசுவார்கள். தான் செய்த தவறை, ©இது ஒரு தவறா©© என்று மனசுக்குள்ளேயே பூட்டி வைத்துப் பேசினால் , உங்கள் வழக்கில் வக்கீல் எப்படி வாதாடி வெற்றி பெறுவார்© செய்த தவறை முதலில் சொல்லி விட்டால் உங்களைக் காப்பாற்ற அவர் முயற்சி எடுப்பார். உங்கள் பலத்தைச் சொல்லுமுன், உங்கள் பலவீனத்தையும் சொல்லி விட்டால் நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.
அதோ போல் தான் டாக்டரிடமும் உங்கள் வீக்னசை சொல்லக் கூச்சப்படாதீர்கள். உங்களைக் காப்பாற்ற முயற்சிப்பவரிடம் என்ன கூச்சம்© இந்த விஷயம் வக்கீலிடமும், டாக்டரிடமும் மட்டும் தான் பொருந்தும், எல்லோரிடமும் எல்லா உண்மைகளையும் உளறிக் கொட்டினால், அது வீண் வம்பில் தான் முடியும்.
பலருக்கும் பயன்படும் தகவல்களைத் தெரிந்து கொண்டால், அதைமற்றவர்களுக்கு சொல்லவே மாட்டார்கள் சிலர். இது குறுகிய மனப்ன்மையாகும். சமுதாயத்தில் அறிவிக்கப்படும் எல்லா பயனுள்ள விஷயங்களும் எல்லோரும் அறிந்து கொள்ளத்தான். ஒரு அப்ளிகேஷன் பார்ம் வாங்கிவிட்டால் கூட, தன் நண்பனுக்கும் சேர்த்தே தன் செலவில் வாங்கும் நண்பனும் உண்டு.
வேகமான உலகில் எங்கே, என்ன கிடைக்கின்றது© எப்படி வாங்குவது© என்பதை அறிந்தால், தெரியாதவர்களுக்குத் தெரியபடுத்துங்கள். அது தர்மத்துக்கு நிகரானது. ஒருவருக்கு வேலை கிடைக்க நீங்கள் வழிகாட்டிப் பாருங்கள்.உங்கள் வாழ்க்கை வளப்படும்.ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்க்க உதவி புரிந்து பாருங்கள். உங்கள் மனம் குழந்தை மனசாக மாறும்.
நாம் மட்டுமே முன்னேற வேண்டும். நாம் மட்டுமே வெற்றி பெற வேண்டும். நாம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும்© என்ற எண்ணத்துக்குத் தீனி போட்டால், நீங்கள் ஒரு வகை மிருகமாக மாறி வருகிறீர்கள் என்று அர்த்தம். மனிதன் என்ற பெயர் உங்களுக்குப் பொருந்தாது.
சிலர் அவசரத்துக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சைக்கிளையோ, ஸ்கூட்டரையோ கேட்பார்கள். இது ஒரு உதவி என்று அவர்களும் பெருந்தன்மையுடன் கொடுப்பார்கள். எப்போதாவது இப்படி உதவி கேட்பதில் தப்பில்லை. சிலர் எப்போதுமே ஏதாவது காரணம் சொல்லி ஓசியில் வண்டி கேட்டு உபத்திரவம் செய்வதைப் பழக்கமாக வைத்திருப்பார்கள்.இது ©புத்திசாலித்தனம்© என்ற பெயரில் செய்யும் பிராடுத்தனம்.
இது எங்கே முடியும் என்றால், உண்மையிலேயே உங்களுக்கு அவசரமாக வண்டி தேவைப்பட்டு, பொருளாதாரமும் புரட்ட முடியாத நேரத்தில் பக்கத்து வீட்டுக் காரரிடம் வண்டி கேட்டால், உங்கள் வழக்கமான வில்லங்கத்தனத்தை மனதில் வைத்துக் கொண்டு, வண்டி கொடுத்து உதவும் நிலையிருந்தும் ஒரு பொய்க் காரணத்தைச் சொல்லி, ©வண்டி கொடுக்க முடியாது, எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது © என்பார்கள்.
உதவி கேட்பது தப்பல்ல. ஆனால் உதாரித்தனத்துக்கெல்லாம் மற்றவர்களிடம் ஏமாற்று வேலை செய்வது, உங்களை ஆபத்து நேரத்தில் தத்தளிக்க விடும். பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்கு ©ஸ்கூட்டர்© கொடுத்து உதவும் போது, ©பெட்ரோலை நான் போட்டுக்கொள்கிறேன்© என்பது தான் நல்லவர்க்கு அழகு.
கணவன் - மனைவிக்குள் ஊடல், சின்னச் சின்ன சண்டைகள் வருவது சகஜம்.கணவன் வேலைக்குப் போகிறான் என்றால், போருக்குப் போகிறான் என்று அர்த்தம். பொருள் ஈட்டுவது சாதரண விஷயமல்ல.
நேர்மையாக சம்பாதிப்பதற்கு வியர்வை மட்டும் செலவழிக்கவில்லை. அவமானம், கேலி, கிண்டல், சோதனை, தேய்மானம் இத்தனைக்கும் பிறகுதான் வருமானம், வேலை கிடைத்து வேலைக்குப் போகிற கணவர்களுக்கு இப்படி என்றால், வேலையில்லாமல் வீட்டிலிருந்து வேலை தேடும் அல்லது வேலை கிடைக்காத கணவனை நினைத்துப் பாருங்கள். அவருக்கு அந்த வீடே போலீஸ் இல்லாத ஜெயில்.
கணவருக்கு பசிக்கும்போது ருசியாகப் பரிமாற அடுப்புடன் மனைவி வேகிறாள். அந்த அடுப்பில் பூனை தூங்கக் கூடாது என்று கணவன் போராடுகிறான். இதை இருவரும் அடிக்கடி யோசித்தால் ஊடலைவிடக் கூடல் அதிகரிக்கும்.
டைம் டேபிள்போட்டுப் பள்ளியில் படிக்கலாம். வாழ்க்கையை டைம் டேபிள் போட்டு வாழ முடியாது. திட்டம் போடுவதும், செயல்படுவதும் தான் நம் கையில், நடைமுறையில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் துல்லியமாகத் தெரியாது. நாம் நினைத்தது நடக்கவில்லையென்றால் ஒரு சிலர் ஒப்பாரி வைப்பதுடன், உலகத்தில் தனக்கு மட்டுந்தான் இந்தக் கஷ்டம், இந்த கஷ்டம் என்று நினைக்கிறார்கள்.
சிங்கத்துக்கு அடுத்து வேளை உணவு கிடைக்குமா© என்று தெரியாது.ஆனால் அதுதான் காட்டுக்கு ராஜா. அதே போல் உணவு கிடைத்துப் பசி ஆறியபின் தன் பக்கத்தில் மான் உரசினால் கூட சிங்கம் சீண்டாது. சொத்தில் கொஞ்சம் குறைந்து விட்டால் செத்தே போய்விடுவேன் என்று சிலர் பேசுவதைக் கேட்டால் எனக்கு சிரிப்பு தான் வரும். அதே நேரம் அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத பலர் சந்தோஷத்தில் இடி இடிப்பது போல் சிரிப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன்.
டைம்டேபிள் வாழ்க்கை உழைப்பில் இருக்கலாம்.அதிர்ஷ்டத்தை டைம் டேபிள் போடக்கூடாது.ஆறு நாள் பட்டினி கிடந்தாலும் சிங்கம் சிங்கம் தான். ஒரு தகவல் : சிங்கத்தின் பாலை சாதாரணக் கிண்ணத்தில் வைக்க முடியாதாம். கிண்ணம் உருகிவிடுமாம். தங்கக் கிண்ணத்தில் தான் வைக்க முடியுமாம் .
உதவி கேட்பது தப்பல்ல. ஆனால் உதாரித்தனத்துக்கெல்லாம் மற்றவர்களிடம் ஏமாற்று வேலை செய்வது, உங்களை ஆபத்து நேரத்தில் தத்தளிக்க விடும். பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்கு ©ஸ்கூட்டர்© கொடுத்து உதவும் போது, ©பெட்ரோலை நான் போட்டுக்கொள்கிறேன்© என்பது தான் நல்லவர்க்கு அழகு.
கணவன் - மனைவிக்குள் ஊடல், சின்னச் சின்ன சண்டைகள் வருவது சகஜம்.கணவன் வேலைக்குப் போகிறான் என்றால், போருக்குப் போகிறான் என்று அர்த்தம். பொருள் ஈட்டுவது சாதரண விஷயமல்ல.
நேர்மையாக சம்பாதிப்பதற்கு வியர்வை மட்டும் செலவழிக்கவில்லை. அவமானம், கேலி, கிண்டல், சோதனை, தேய்மானம் இத்தனைக்கும் பிறகுதான் வருமானம், வேலை கிடைத்து வேலைக்குப் போகிற கணவர்களுக்கு இப்படி என்றால், வேலையில்லாமல் வீட்டிலிருந்து வேலை தேடும் அல்லது வேலை கிடைக்காத கணவனை நினைத்துப் பாருங்கள். அவருக்கு அந்த வீடே போலீஸ் இல்லாத ஜெயில்.
கணவருக்கு பசிக்கும்போது ருசியாகப் பரிமாற அடுப்புடன் மனைவி வேகிறாள். அந்த அடுப்பில் பூனை தூங்கக் கூடாது என்று கணவன் போராடுகிறான். இதை இருவரும் அடிக்கடி யோசித்தால் ஊடலைவிடக் கூடல் அதிகரிக்கும்.
டைம் டேபிள்போட்டுப் பள்ளியில் படிக்கலாம். வாழ்க்கையை டைம் டேபிள் போட்டு வாழ முடியாது. திட்டம் போடுவதும், செயல்படுவதும் தான் நம் கையில், நடைமுறையில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் துல்லியமாகத் தெரியாது. நாம் நினைத்தது நடக்கவில்லையென்றால் ஒரு சிலர் ஒப்பாரி வைப்பதுடன், உலகத்தில் தனக்கு மட்டுந்தான் இந்தக் கஷ்டம், இந்த கஷ்டம் என்று நினைக்கிறார்கள்.
சிங்கத்துக்கு அடுத்து வேளை உணவு கிடைக்குமா© என்று தெரியாது.ஆனால் அதுதான் காட்டுக்கு ராஜா. அதே போல் உணவு கிடைத்துப் பசி ஆறியபின் தன் பக்கத்தில் மான் உரசினால் கூட சிங்கம் சீண்டாது. சொத்தில் கொஞ்சம் குறைந்து விட்டால் செத்தே போய்விடுவேன் என்று சிலர் பேசுவதைக் கேட்டால் எனக்கு சிரிப்பு தான் வரும். அதே நேரம் அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத பலர் சந்தோஷத்தில் இடி இடிப்பது போல் சிரிப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன்.
டைம்டேபிள் வாழ்க்கை உழைப்பில் இருக்கலாம்.அதிர்ஷ்டத்தை டைம் டேபிள் போடக்கூடாது.ஆறு நாள் பட்டினி கிடந்தாலும் சிங்கம் சிங்கம் தான். ஒரு தகவல் : சிங்கத்தின் பாலை சாதாரணக் கிண்ணத்தில் வைக்க முடியாதாம். கிண்ணம் உருகிவிடுமாம். தங்கக் கிண்ணத்தில் தான் வைக்க முடியுமாம் .
எது நடந்தாலும் நடக்கா விட்டாலும் நீங்கள் சிங்கம் போல் வாழுங்கள்.
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|