புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
65 Posts - 63%
heezulia
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
1 Post - 1%
viyasan
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
257 Posts - 44%
heezulia
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
17 Posts - 3%
prajai
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகர் விழாவுக்கு 1000 வயது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 29, 2014 5:24 am



"அழகர் மலை', சங்க இலக்கியம் முதல் இன்றைய அறிஞர் பெருமக்கள் வரை இதன் சிறப்பை பலவாறாகப் பெருமைபட பாடி வைத்துள்ளனர். மதுரைக்கு வடக்கே 21.கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த அழகர்மலை. இங்குள்ள கோயிலின் பெயராலேயே இவ்வூர், "அழகர்கோவில்' என அழைக்கப்படுவது தனித்துவமிக்கது.

அந்த மலை கடல் மட்டத்திலிருந்து 900 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 16,838 ஏக்கர் பரப்பளவில், பசுமை மிக்க சோலைகளாய் விரிந்து, ஆண்டு முழுவதும் ரம்யமாய் காட்சியளிக்கிறது. சங்க இலக்கியமான பரிபாடலில் இளம் பெருவழுதி, இத்தலத்தை " இருங்குன்றம்' என்றும், திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் "பழமுதிர்சோலை' என்றும், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் "திருமால் குன்றம்' என்றும், மகாபாரதத்தில் வியாசமுனிவர், "விருஷபாத்ரி' என்றும், ஆழ்வார்களின் பாசுரங்களில் "திருமாலிருஞ்சோலை' என்றும் வெவ்வேறு பெயர்களால் பாடி வைக்கப்பட்ட பெருமை இம்மலைக்கு உண்டு.

இதன் உச்சியில் "இராக்காயி அம்மன்' கோயில் உள்ளது. இங்கு உற்பத்தி ஆகும் நதி "சிலம்பாறு' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் இதனை, "நூபுர கங்கை' என்று பாடி வைத்தார். பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்து வைக்கப்பட்ட 108 வைணவ திவ்யதேச திருத்தலங்களில் சிறப்புமிக்க தலமாக இந்த அழகர்கோயில் திகழ்ந்துவருகிறது.

கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே இம்மலையில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்ததற்குச் சான்றாக, இம்மலையின் கீழ்க்கோடியில் தெற்குச் சரிவில் இயற்கையாக அமைந்திருக்கும் குகை தளத்தில் கல் படுக்கைகளும், "தமிழ் பிராமி' எழுத்தில் அமைந்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா ஒன்பது நாட்கள் "சித்ரா பௌர்ணமி விழா' எனக் கொண்டாடப்படுகிறது. ஊர் முழுக்க வேடிக்கை, பந்தல், ஆட்டம், பாட்டம் என இந்த விழாவையொட்டி ஊரே களைகட்டியிருக்கும். இதனை ராஜராஜ சோழன் (காலம் கி.பி. 1011) கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

அழகர் கோயில் ஏழு பிராகாரங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய அளவிலானது. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள முதல் பிராகார மேற்குச் சுவரின் வெளிப்பக்கமாகக் காணப்படும் ஒரு பழைமையான கல்வெட்டு பிற்காலப் பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (காலம் கி.பி.1192) காலத்தைச் சேர்ந்ததாகும்.

ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து சித்ரா பௌர்ணமி தினத்தன்று அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருவதை அறிந்து கொள்ள முடிகிறது. மதுரையில் நாயக்க வம்ச ஆட்சி வரும் வரை அழகர் கோயிலிலிருந்து கிளம்பும் சுந்தர்ராஜப் பெருமாள் அலங்காநல்லூர், சம்பகுளம், வயலூர், விட்டங்குளம் வழியாக தேனூர் சென்று அங்குள்ள வைகையாற்றில் எழுந்தருள்வதும், பின்னர் அங்கிருந்து வண்டியூர் சென்று தங்கியிருந்து அழகர் மலைக்குத் திரும்புவதுமே தொன்று தொட்டு வரும் வழக்கமாக நீடித்திருந்தது.

மேலும், மதுரை மீனாட்சி- சொக்கநாதர் திருக்கல்யாண வைபவமும், அதனையடுத்து தேரோட்டமும் காலம் காலமாக மாசிமாதத்தில்தான் நடைபெற்று வந்தன. தைமாதம் மக நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி மாசி மகவிழா 48 நாட்கள் நடைபெறும். திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை இந்த விழாவின்போதுதான் மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை நிகழ்ந்தன.

இந்த இருவிழாக்களும் முதன்முதலாக மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான் (காலம் கி.பி.1623 - 1659) மாற்றி அமைக்கப்பட்டு சைவ, வைணவ விழாக்கள் ஒன்றாகச் சங்கமித்து ஒற்றுமை வேரூன்ற வழிவகுக்கப்பட்டது. அதன்படி தொன்றுதொட்டு மாசிமாதம் நடந்து வந்த மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் சித்திரை மாதத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது. அதுபோல கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக தேனூர் செல்வதை மாற்றி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, மூணுமாவடி,தல்லாகுளம், ஆழ்வார்புரம் வழியாக வைகையாற்றில் இறங்கும் விழாவாகப் பயணப்பாதை மாற்றியமைக்கப்பட்டது.

அன்றிலிருந்து இவ்விழாக்கள் ஒருங்கிணைந்த "சித்திரைத் திருவிழா'வாக மதுரை மாநகரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சுந்தர்ராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படும் முன்னரே அழகர் கோயிலில் திருவிழா துவங்கிவிடும். அதன் தொடர்ச்சியாக, நான்காம் திருவிழா நாளான்று கொண்டப்ப நாயக்கன் மண்டபத்திலிருந்து தங்கப் பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்குப் புறப்படுவார்.

வைகையில் இறங்குவதற்கு முன்பும், பின்பும் ஏராளமான திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து தரிசனம் தந்த பின் ஒன்பதாம் திருவிழா நாளான்று மறுபடியும் மலைக்கு அழகர் திரும்பி விடுவார்.

வழக்கம் போல், இந்த ஆண்டும் எதிர்வரும் 14.05.2014 ஆம் நாள் புதன்கிழமை சித்திரை பௌர்ணமி தினத்தில் அழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில் காலை இறங்குகிறார். அழகர்கோவிலில் இருந்து மதுரை வரை வழிநெடுக லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று அழகரின் திவ்ய தரிசனம் கண்டு மகிழ்ந்திருப்பர்.

இராஜகோபுர வாசலில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சந்நிதானம் உள்ளது. இவரே அழகரின் காவல் தெய்வம். இந்த சுவாமிக்கு உருவ வழிபாடு என தனியாக இல்லாமல், கோபுர வாசல் நிலைக்கதவுகளையே சந்தனம் சாத்தி வழிபட்டுவருகின்றனர். இந்த சந்நிதியில் பொய் சாட்சியம் சொல்வதற்கு எவரும் முன்வருவதில்லை. இதனால் இவ் வட்டாரத்தில் பல சிக்கலான வழக்குகளைக்கூட இந்த சந்நிதி முன்பு பேசித் தீர்த்துக் கொள்கின்றனர்.

கோயில் கருவறை பிரணவ வடிவில் வட்ட வடிவில் எழிலான கோலத்தில் அமைந்துள்ளதை நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கருவறையைச் சுற்றி ஏழு கல் சாளரங்கள் அமைத்துள்ளனர். இவை ஒவ்வொன்றும் அதி அற்புதமான சிற்ப வேலைப்பாடமைந்த கலைச்சின்னங்களாகக் காட்சி அளிக்கின்றன.

கருவறையை அடுத்து அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த மகா மண்டபம் ""முனையதரையன் மண்டபம்'' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இம் மண்டப சிற்ப வேலைப்பாடுகள் காலங்கள் கடந்தும் பேர் சொல்லி நிற்கும் நுட்பமானவை.

மூன்றாம் பிரகார திருப்பணிகள் திருமலை நாயக்கர் (காலம் கி.பி. 1623 - 1659) காலத்தில் செய்து முடிக்கப்பட்டன. அவரது காலத்தில் திருப்பணி நடைபெறும் இடங்களில் தவறாமல் அவரது முழு உருவச் சிலையை தமது தேவியருடன் அமைக்கிற வழக்கம் அவரால் கடைப்பிடிக்கப்பட்ட மரபாகும். அதன்படி இப்பிரகாரத்தில் நான்கு இடங்களில் அவரது உருவச் சிலைகள் அமைந்துள்ளன. அழகர் கோயிலின் கட்டடக் கலையும், சிற்ப வேலைப்பாடுகளும் உலகத் தரத்தில் அமைந்தவை.

[thanks] வெ.கணேசன் @ தினமணி [/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக