புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
11 Posts - 4%
prajai
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
9 Posts - 4%
Jenila
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 9:20 pm


வாழ்க்கையில் இலக்கியத்திற்கு ஸ்தானம் என்ன? இதற்கு இரண்டுவிதமான பதில்கள் இருக்கின்றன. இரண்டும் பாதி உண்மைகள். இலக்கியம் ஒரு மகத்தான பொழுதுபோக்கு, மோகனமான கனவு என்பது ஒரு கொள்கை. வாழ்க்கையின் இரகசியத்தையறிந்து, வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் கோருவது இலக்கியம் என்பது மற்றொரு கட்சி.

இலக்கியம் மனிதனது மோகனமான கனவு, ஆனால் பயன்றற கனவு என்று கொண்டு விடுவது சரித்திரத்திற்குப் பொருந்தாத கூற்று. இலக்கியம் பிறக்கிறது. புதிய விழிப்பும் மக்களிடையே பிறக்கிற. பிரஞ்சுப் புரட்சியே இதற்கு ஆதாரம். புதிய ‘உதய கன்னியை’ முதல் முதலாக வரவேற்பவன் கவிஞன்தான். அவனது தரிசனம், மக்களிடையே ஓர் புதிய சமுதாயத்தைச் சிருஷ்டித்து விடுகிறது.

ஆனால் இதைத் தர்க்கத்தின் அந்தம்வரை சென்று ஆராய்ந்தால், வெறும் பரிகசிப்பிற்குரிய கேலிக்கூத்தாகிறது. ஏன் எனில், இந்தக் கொள்கைக்குப் புறம்பான உன்னத இலக்கியங்கள் இருந்து, அந்தத் தர்க்க வாதத்தைச் சிதறடிக்கிறது. தர்மத்தின் உயர்ச்சிக்காகத்தான் இலக்கியம் என்றால், ரோஜா புஷ்பத்தின் அழகு, அதிலிருந்து அத்தர் எடுக்கும் லாபத்தைப் பொருத்திருக்கிறது என்று கொள்ளவேண்டும்.

கீட்ஸின் ‘என்டிமியன்’ என்ற காவியம் எந்தத் தர்ம சாஸ்திரத்தைத் தூக்கிவைக்க இருக்கிறது? அதன் ஒருவரியின் முன்பு, உலகத்தைத் தூக்கி நிறுத்தப் பாடுபடும் பெர்னாட்ஷாவின் நாடகங்கள் பூராவும் நிற்கமுடியுமா?

இலக்கியம் என்பது “நாடிய பொருளைக் கூட்டுவிக்கும்” சாதனம் என்று நினைத்திருப்பதைப் போன்ற தவறான அபிப்ராயம் வேறு கிடையாது. இலக்கியம் உள்ளத்தின் விரிவு; உள்ளத்தின் எழுச்சி, மலர்ச்சி.

இலக்கியகர்த்தா வாழ்க்கையை அதன் பல்வேறு சிக்கல்களுடன், நுணுக்கத்துடன் பின்னல்களுடன் காண்கிறான். அதன் சார்பாக அவன் உள்ளத்திலேயே ஒரு உணர்ச்சி பிறக்கிறது. அந்த உணர்ச்சி நதியின் நாதம்தான் இலக்கியம்.

அவன் நோக்கில் பட்டது, பெயர் தெரியாத புஷ்பமாக இருக்கலாம்; வெறுக்கத்தக்க ராஜீய சூழ்ச்சியாக இருக்கலாம்; அல்லது மனித வர்க்கத்துக் கொடுமையின் கோரமாக இருக்கலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. அந்த அம்சத்தை நோக்கியவுடன் அவனது மனமும் இருதயமும் சலிக்கின்றன. அந்தச் சலனத்தின் பிரதிமையே இலக்கியம்.

கம்பராமாயணம் ஒரு மோகனமான கனவு. இலட்சியத்தின் தரிசனம். அது ஒரு புதிய சமுதாயத்தை எழுப்பியது. ஆனால் கம்பராமாயணத்தின் மேதை, அதன் சமுதாய சிருஷ்டி சக்தியைத்தான் பொறுத்து இருக்கிறது என்று நினைக்க வேண்டுமானால் அது தர்க்க ஆதாரமாகப் பொழுதுபோக்குச் சம்பாஷணைக்குதவும் பேச்சு. கம்பராமாயணத்தின் மேதையை அறியாதவர்கள்தான் அப்படிக் கூறிக்கொண்டிருக்க முடியும்.

மாணிக்கவாசகர், சடகோபாழ்வார் பதிகங்கள், சமயத்தை ஸ்தாபிப்பதற்கான எண்ணத்திலிருந்து உதித்தவை என்று எண்ணுவதைப் போல் தவறு கிடையாது. அகண்ட அறிவில், வாழ்க்கை ரகசியங்களில் அவர்கள் மனம் லயித்தது. அந்த லயிப்பின் முடிவே அவர்களுடைய கவிதை. அது பிற்காலத்தவர்களால் பிரசாரத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம். அதனால் அதைப் பிரசாரத்திற்காகப் பிறந்தது என்று கூறிவிட முடியாது.

நெப்போலியன் ஒரு தடவை, “ஹோமரின் கவிதையை வைத்துக்கொண்டு, பாரீஸ் நகரை எழுப்பி விடுவேன்” என்று கூறினானாம். அதில் உண்மை இருக்கிறது. இலக்கியத்தின் உயிர்நாடி உணர்ச்சி. உணர்ச்சியில் எழாத தர்ம சாஸ்திரங்கள், வாழ்க்கையைக் கீழே இழுக்கும் பாறாங்கல்லுகள். இந்த உணர்ச்சியின் உண்மைதான் புதிய விழிப்பிற்குக் காரணம்; உண்மையே இலக்கியத்தின் ரகசியம்.

#வாழ்க்கை #இலக்கியம் #மோகனம் #கனவு #புதுமைப்பித்தன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக