ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 2 - அட்சய திரிதியை :)

3 posters

Go down

மே 2 - அட்சய திரிதியை :) Empty மே 2 - அட்சய திரிதியை :)

Post by krishnaamma Sun Apr 27, 2014 9:35 pm

மே 2 - அட்சய திரிதியை :) I3z2ZZ9ESG8BWbCHfOmZ+E_1398425687

அட்சய திரிதியை அன்று, ஏதாவது மதிப்புள்ள பொருள் வாங்க வேண்டும் என்று சொல்வர்; இது, வெறும் வார்த்தைக்காக சொல்லப்பட்ட விஷயம் அல்ல!

தங்கம் வாங்க வேண்டுமானால், பெரும் தொகை வேண்டும்; பெரும் தொகை கையில் இருக்க வேண்டுமானால், கடும் உழைப்பு இருக்க வேண்டும். ஆக, இது உழைப்பின் பெருமையை வெளிப்படுத்தும் விழா.
கீதையில் கண்ணன் கூறுகிறான்...

'முயற்சியுடையவன், வேலையை விருப்பத்துடன் செய்கிறவன், எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறவன்... இவர்களைத் தேடி, மகாலட்சுமி வந்தடைகிறாள்...' என்கிறார் பகவான்.

உழைப்பை அலட்சியம் செய்து, தெய்வம் கொடுக்கும் என்று காத்திருப்பவனைத் தேடி, செல்வம் வருவதில்லை. அட்சய திரிதியை அன்று, ஒருவர் பத்து சவரன் நகை வாங்குகிறார் என்றால், அதை வாங்குவதற்காக, கடந்த காலத்தில், அவர் பட்டபாடுகளை, அதற்காக அவர் கொடுத்த உழைப்பை எண்ணிப் பார்க்க வேண்டும்.
உழைப்பின் பெருமையை விளக்க இதோ ஒரு புராணக்கதை...

அம்பரீஷன் என்று ஒரு மன்னர் இருந்தார்; சிறந்த விஷ்ணு பக்தர்; ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடிப்பவர். அறம், நீதி நெறி தவறாமல், தர்மம் குலையாமல், குடிமக்கள் மனம் மகிழும்படி ஆட்சி நடத்தி வந்தார். ஒரு அஸ்வமேத யாகம் செய்வதே குதிரைக் கொம்பான விஷயமாக இருக்கும் போது, இவர், நூறு அஸ்வமேத யாகம் செய்தவர். ஆனாலும், இத்தனை யாகங்கள் செய்து விட்டோம் என்ற கர்வம் அவருக்கு ஏற்பட்டதில்லை. மேலும், அந்த யாகங்களை, அவர் தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ, நாட்டு மக்களுக்காகவோ செய்யவில்லை. எல்லா பலனும் இறைவனுக்கே என்ற ரீதியில், யாகத்தின் பலனை, விஷ்ணுவிடமே அர்ப்பணித்து விட்டார்.

இதனால், மனம் மகிழ்ந்த விஷ்ணு பகவான், அம்பரீஷனுக்கு தரிசனம் தந்து, சுயநலமில்லாத அவரின் உழைப்பை பாராட்டும் விதமாக, தன் சக்கரத்தையே பரிசாகக் கொடுத்தார். அந்த சக்கரத்தைத் தெய்வமாகக் கருதி, வழிபட்டு வந்தார் அம்பரீஷன். அந்த வழிபாடு தான், இன்றும் சக்கரத்தாழ்வார் வழிபாடாக தொடர்கிறது. அந்த சக்கரமே, பிற்காலத்தில், துர்வாச முனிவர் தந்த கஷ்டத்திலிருந்தும், அம்பரீஷனைப் பாதுகாத்தது.

சரி...எவ்வளவு தான் உழைத்தாலும், கஷ்டப்படுபவர்கள் என்று, ஒரு ரகம் எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்கு அட்சய திரிதியை நன்னாளில், தானம் செய்வது பிரதான கடமை. ஒரு காலத்தில், அட்சய திருநாள் கொண்டாடப்படும் சித்திரை மாத வெயிலில், தயிர்சாதம் தானம் செய்வது மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்போது, கால மாற்றத்திற்கேற்ப கல்வி உதவித்தொகை, உடைகள், மருத்துவ உதவி போன்ற தானங்களைச் செய்யலாம். இவ்வாறு செய்தால், தானம் செய்பவருக்கு புண்ணியம் கிடைக்கும். குடும்பத்தில் செல்வம் தழைத்தோங்கும் என்பது ஐதீகம்.

நன்றாக உழைக்க வேண்டும். உழைப்பால் வரும் செல்வத்தில், நமக்கு தேவையானது போக, மற்றதை தகுதியானவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால், அது கடவுளுக்கே செய்தது போல! அவ்வாறு செய்தால், கடவுளின் அருள் கிடைக்கும். அப்போது, எல்லா நாட்களும் நமக்கு அட்சய திருநாள் தான்!

தி.செல்லப்பா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மே 2 - அட்சய திரிதியை :) Empty Re: மே 2 - அட்சய திரிதியை :)

Post by M.M.SENTHIL Sun Apr 27, 2014 9:40 pm

அட்சய திருதியை பற்றிய விளக்கமும், அதை தொடர்ந்து வந்த கதையும் அருமை அம்மா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மே 2 - அட்சய திரிதியை :) Empty Re: மே 2 - அட்சய திரிதியை :)

Post by கிருஷ்ணா Mon Apr 28, 2014 3:58 pm

இன்னொரு கதை :
மன்னர் விஜயராகவ நாயக்கர் அங்குமிங்கும் நடை போட்டுக் கொண்டிருந்தார். அமைச்சர்கள் கவலையோடு அவரவர் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றனர். அமைச்சர்களே! தாங்கள் தான் இதற்கு வழி சொல்ல வேண்டும். நாட்டில் பசி,பட்டினியால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கருணைக்கடலான தெய்வம் ஏனோ என்னை இப்படி சோதிக்கிறது. பத்து வருடமாக மழையே பெய்யவில்லை என்றால், காடு, கழனிகளை கவனிப்பது எப்படி? குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பது எப்படி? நேற்று கூட ஒரு குடிமகன் என்னிடம் ஓடோடி வந்தான். மகாராஜா! என்னை இதுவரை கட்டியாண்ட மனைவி, தாகத்தால் உயிர்போகும் நிலையில் இருக்கிறாள். பசி வேறு. அரண்மனையில் இருக்கும் ஒரு குவளை தண்ணீரைக் கொடுங்கள். நான் அதை அவளுக்கு கொடுத்து உயிரைக் காப்பாற்றுகிறேன். எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள். அத்தனையும் பெண் பிள்ளைகள். தாயில்லாத பெண் பிள்ளைகளை நான் எப்படி பாதுகாப்பேன்? நான் வேலைக்குப் போய்விட்டால் அவர்களைப் பாதுகாக்க யார் இருக்கிறார்கள்? தாயில்லாத பெண் குழந்தைகளை பெண் எடுக்கவும் மாப்பிள்ளை வீட்டார் யோசிப்பார்களே! என் குடும்பம் தறிகெட்டு போவதைத் தடுக்க இந்த ஒரு குவளை தண்ணீரால் முடியும் என்று சொல்லி கதறி அழுதான்.

நானே அவனுடன் மாறுவேடத்தில் தண்ணீர் பானையுடன் புறப்பட்டேன். வீடு சென்று சேர்வதற்குள் அப்பெண்ணின் தலை சாய்ந்து விட்டது. அந்த ஐந்து பெண் குழந்தைகளும் கதறிய கதறல் என் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது. அந்த வாலிபனுக்கு என்னால் ஆறுதல் சொல்லவே முடியவில்லை. அவன் கண்கள் குத்தி மயக்க நிலைக்கு போய் விட்டான். அவனை தெளிவித்து பெண் குழந்தைகளின் திருமணச்செலவுக்கு பணம் கொடுத்து விட்டு வந்தேன். இப்படி நம்மை அறியாமல் எத்தனை குடும்பங்கள் இந்நாட்டில் செத்துக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. நீங்கள் உடனே எனக்கு யோசனை சொல்லுங்கள், என்றார். மூத்த அமைச்சர் ஒருவர் முன் வந்தார். மன்னா! இயற்கையின் சதியை வெல்ல நம் யாராலும் முடியாது. எந்த யோசனையும் பலிக்காது. ஒரே ஒரு வழி இருக்கிறது. நாம் இப்பூவுலகில் வாழும் தெய்வமான ராகவேந்திரரை தரிசிக்க செல்வோம். அவர் மனம் வைத்தால், இப்பூமி வெள்ளக்காடாகும், என்றார். மன்னன் ஒப்புக் கொண்டான். ஸ்ரீராகவேந்திரரை தரிசிக்க ஒரு பட்டாளமே கிளம்பியது.

ராகவேந்திரருக்கு மரியாதை செய்த மன்னன், அவரைத் தன் அரண்மனைக்கு எழுந்தருளுமாறு பணிவோடு கேட்டுக்கொண்டான். மக்கள் துன்பம் தீர்க்க வந்த அந்த கருணைக்கடலும் அரண்மனைக்கு வந்தார். மக்கள் ராகவேந்திரர் செய்யப்போகும் அதிசயத்தைக் காண ஏராளமாகக் கூடினர். எல்லார் முகமும் பசியாலும், தாகத்தாலும் வாடிப் போயிருந்தது. ராகவேந்திரர் அந்த அப்பாவி முகங்களைப் பார்த்தார். அவர்களது இதயங்கள், தன்னை மனதார துதிப்பதைப் புரிந்து கொண்டார். மன்னனிடம், சிறிது நெல் கொண்டு வரச்சொல், என்றார். நெல் வந்தது. அதை ஒரு பலகையில் பரப்பிய ராகவேந்திரர், அக்ஷய என எழுதினார். அக்ஷய என்றால் வாழ்க, வளர்க எனப் பொருள். அந்த தெய்வப்பிறவியே வாழ்க, வளர்க என வாழ்த்திய பின் மக்களுக்கு கஷ்டம் இருக்குமா என்ன? அம்மாத்திரத்திலேயே பத்தாண்டுகளாக நின்று போயிருந்த மழையும் ஒட்டு மொத்தமாக, ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. மன்னனும், மக்களும் அடைந்த இன்பத்திற்கு அளவில்லை. ஆனந்த மழை என்பார்களே! அதை உண்மையாகவே மக்கள் அனுபவித்தனர். அட்சய திருதியை நாளின் நோக்கமே செழிப்பான உலகைப்படைப்பது தான்.

நாமும் இறைவனை பக்தியுடன் வேண்டி, தேவையான காலத்தில் தேவையான மழை பெய்ய பிரார்த்திப்போம்.


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

மே 2 - அட்சய திரிதியை :) Empty Re: மே 2 - அட்சய திரிதியை :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum