புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_m10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10 
2 Posts - 50%
viyasan
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_m10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_m10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_m10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_m10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_m10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_m10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10 
21 Posts - 4%
prajai
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_m10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_m10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_m10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_m10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_m10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_m10ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 3:41 am

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைத்துள்ளது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமனா அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு விபரம்:

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடை தொடரும்.

குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக முடிவெடுப்பதற்க்காக அரசியல் சாசன அமர்வுக்கு 7 கேள்விகளை உச்ச நீதிமன்றம் தயார் செய்துள்ளது. மேலும், தூக்கு ரத்து செய்யப்பட்டு ஆயுளாக குறைக்கப்படும் பட்சத்தில் அந்த கைதிக்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்க அதிகாரம் இருக்கிறதா என்பதையும் அரசியல் சாசன அமர்வே முடிவு செய்யும், இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

வழக்கு பின்னணி:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கடந்த பிப்ரவரி 18-ம் தேதி ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும், 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதையடுத்து முருகன் உள்ளிட்ட மூவர் மட்டுமல்லாது, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 4 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

மூவர் உட்பட வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்து தமிழக சட்டசபையில், 20-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு மனு:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.முருகன் உள்ளிட்ட மூவருக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ததற்கு எதிராக சீராய்வு மனுவை தாக்கல் செய்த மத்திய அரசு, குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவுக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்தது.

இதனையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஓய்வுக்கு முன் தீர்ப்பு:

ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்திருந்தார். 25-ம் தேதி ஓய்வு பெறப் போவதாகவும், அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கோவையில் அவர் கூறியிருந்தார்.

அதன்படி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 3:41 am

மூவர் வழக்கின் தீர்ப்பு விவகாரம்: கருணாநிதி மீது வைகோ கடும் தாக்கு

பேரறிவாளன் உள்பட மூவர் வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில், திமுக தலைவர் கருணாநிதி வலிய வந்து கருத்து தெரிவித்தது சரியல்ல என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வேதனை தருவதாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து, 2011 செப்டெம்பர் 9 ஆம் தேதியன்று, அவர்களது உயிர் பறிக்கப்படும் என்று, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், உலகப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, 2011 ஆகஸ்ட் 30 ஆம் நாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடியதால், நீதி அரசர்கள் நாகப்பன், சத்யநாராயணா ஆகியோர் அமர்வு தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தடை விதித்தது.

அதற்கு முதல்நாள்தான், 2011 ஆகஸ்ட் 29 இல், இந்த மூன்று தமிழர் தூக்குத் தண்டனையில் தலையிட தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை கிடைக்கப் போவதை அறிந்து, இம்மூவரின் தூக்குத் தண்டனையைக் குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை விடுத்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

பின்னர் காங்கிரஸ் கட்சியின் வஞ்சகப் போக்கால், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, அங்கும், ராம் ஜெத்மலானியின் வாதங்களால், 2014 பிப்ரவரி 18 இல் இவர்களது தூக்குத் தண்டனை நிரந்தரமாக ரத்துச் செய்யப்பட்டது.

இதற்குச் சில நாள்களுக்கு முன்பு, இதே வழக்கில் முதலாவது பிரதிவாதியான நளினி, 22 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் நிலையில், உடல் நலம் குன்றிய தந்தையைப் பார்ப்பதற்காக, உயர் நீதிமன்றத்தில் பரோல் விடுதலைக்கு விண்ணப்பித்தபோது, ஜெயலலிதா அரசு உயர் நீதிமன்றத்தில் அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.

அதே முதலமைச்சர் ஜெயலலிதாதான், மூன்று தமிழர்கள் தூக்குத் தண்டனை உச்ச நீதிமன்றத்தில் ரத்து ஆனவுடன், இந்த மூவர் உள்ளிட்ட ஏழு பேர்களையும் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யத் தனது அமைச்சரவை முடிவு எடுத்து விட்டதாகவும், மூன்று நாள்களுக்குள் மத்திய அரசு பதில் தராவிடில், தான் விடுதலை செய்யப் போவதாகவும் அறிவித்தார்.

இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் இன்று (25.4.2014) தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு, மேற்கூறிய வழக்கு அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக வழங்கி உள்ள தீர்ப்பு எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஏனெனில், இந்த ஏழு பேருமே திருபெரும்புதூர் சம்பவத்தில் துளியும் தொடர்பு இல்லாத குற்றம் அற்ற நிரபராதிகள் ஆவர். ஏறத்தாழ 23 ஆண்டுகளாகச் சிறையில் மனதளவில் சித்திரவதைக்கு ஆளாகி வாடி வதங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். மனிதாபிமான அடிப்படையில் இவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாக வேண்டும்.

இதைச் சொல்லுகின்ற தகுதி எனக்கு உண்டு. ஏனெனில், 1978 ஆம் ஆண்டு, டிசம்பர் 5 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் நடைபெற்ற விவாதத்தில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 433 (ஏ) பிரிவு திருத்த மசோதாவை, இந்திய நாடாளுமன்றத்திலேயே எதிர்த்தவன் நான் மட்டும்தான்.

அந்தத் திருத்தத்தின்படி, 14 ஆண்டுகளுக்கு முடிவு அடையும் முன்பு ஆயுள் தண்டனைச் சிறைவாசி எவரும் விடுதலை செய்யப்படக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. இது மனிதநேயத்திற்கு எதிரானது என்று நான் கடுமையாக எதிர்த்தேன். "கோட்டை அகழியின் அடிவாரத்தில், அந்தகாரம் படைத்த இருட் குகையில் கிடந்து துடிக்கும் ஜீவன்கள் அந்த சிறைப்பறவைகள்" என்ற சார்லஸ் டிக்கன்சின் புகழ்மிக்க வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினேன்.

பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள எல்லாக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று, கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு முன்னர், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகிறேன். தி.மு.க. அரசும் இதைச் செயல்படுத்தவில்லை. ஜெயலலிதா அரசும் இதனை ஏற்கவில்லை.

எந்தப் பிரச்சினை ஆனாலும் வலிய வந்து மூக்கை நுழைத்துக் கெடுதல் செய்வதே கருணாநிதிக்கு வாடிக்கையான ஒன்றாகும்.

ஏழு பேரின் விடுதலையை, உலகெல்லாம் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நேரத்தில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதி அரசர் சதாசிவம், விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வரும் என்று சொன்னதைக் குறைகூறிக் குறுக்குச்சால் ஓட்டிய மகானுபாவர்தான் கருணாநிதி ஆவார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவர் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

எனினும், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வில், இவர்கள் சிறையில் இருந்து விடுதலை பெறும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படிக் கிடைத்தாலும் அது காலம் கடந்த நீதிதான்" என்று வைகோ கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 3:54 am

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் குறுக்கீடு காரணமா?: பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தேகம்

சென்னை: ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவேன் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கில் அரசியல் குறுக்கீடுகள் இருக்குமோ என்று தாம் சந்தேகிப்பதாகவும் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

ராஜிவ் வழக்கில் 7 தமிழரை தமிழக அரசு விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இம்மனுவை இன்று அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கூறியதாவது:

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் குறுக்கீடு காரணமா?: பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தேகம் இன்று என் மகன் விடுதலையாவான் என்ற நம்பிக்கையோடு வந்தேன். ஆனால் இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது. என் மகன் நிரபராதி என நிரூபிக்கப்பட்டும் அவனை விடுதலை செய்யாதது வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் அரசியல் குறுக்கீடுகள் இருக்குமோ என்று சந்தேகிக்கிறோம். ஆனால் நீதி எங்கள் பக்கம் இருக்கிறது. எங்களது நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் குறுக்கீடு காரணமா?:

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தேகம் என் மகனின் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவேன். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். இந்த விஷயத்தில் நாங்கள் தமிழக முதல்வரை பெரிதும் நம்பியிருக்கிறோம். இவ்வாறு அற்புதம் அம்மாள் தெரிவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:12 am

தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் சிலர் அரசியல் செய்கிறார்கள் - ஞானதேசிகன்

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து மேல் விசாரணை நடத்த அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
முக்கியமான வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க அனுப்புவது வழக்கமான ஒன்றுதான். இதில் மத்திய அரசுக்கு அதிகாரமா? அல்லது மாநில அரசுக்கு அதிகாரமா? என்று சிலர் பேசிவருகின்றனர். இது சாதாரண கொலையாக இருந்திருந்தால் மாநில அரசு நேரடியாக விடுதலை செய்ய அதிகாரம் உண்டு.
 
தேசத்தினுடைய மாபெரும் தலைவர் இதில் கொல்லப்பட்டிருக்கின்றார். மேலும் கொலை செய்தவர்களில் நான்கு பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தியர்கள் அல்ல. அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. விசா கிடையாது. திட்டமிட்டு ஊடுருவி மாபெரும் தேசத் தலைவரை கொலை செய்துள்ளனர்.
 
இன்று காலை அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசியதை பார்த்தேன். அவர், இந்த 7 பேரும் நிரபராதிகள் என்று சொல்கிறார். அது தவறான ஒன்றாகும். அவரை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள். அருகில் ஒருவர் நிரபராதி என்று சொல்லிக் கொடுக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். கருணை மனு கால தாமதத்தால் தண்டனை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. விடுதலை குறித்த மாநில அரசின் அறிவிப்பு சரியா? தவறா? என்பதற்காக தான் அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக பார்க்க வேண்டுமே தவிர, அரசியல் செய்யக் கூடாது. சிலர் தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். 3 மாதத்திற்குள் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வந்துவிடும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:15 am

உச்சநீதிமன்றத்தின் முடிவு அதிர்ச்சியையும், வருத்ததையும் அளிக்கிறது- ராமதாஸ்

7 பேர் விடுதலை குறித்தான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முடிவு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதி மன்றம் ஆணையிட்டிருக்கிறது.
 
7 பேரின் விடுதலை தொடர்பாக நல்ல செய்தி வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த தமிழர்கள் அனைவருக்கும் உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்திருக்கிறது.
 
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இவர்களை விடுதலை செய்வது குறித்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 432, 433(ஏ) ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்டு பொருத்தமான அரசு முடிவு செய்யலாம் என்று கூறியிருந்தது.

 மாநில அரசின் அதிகார வரம்புக்குள் உள்ள சட்டங்களின்படி தான் இவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்; அது மட்டுமின்றி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ஒருவர் 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்திருந்தால், அவர்களை விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 433(ஏ) பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
 
இவற்றின் அடிப்படையில் தமிழக அரசு சற்று பொறுப்புடனும், பக்குவமாகவும் செயல்பட்டிருந்தால், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், இராபட் பயாஸ் ஆகிய ஏழு தமிழர்களும் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள்.
 
மாறாக, தமிழக அரசு பொறுப்பின்றி செயல்பட்டதால் தான் 7 தமிழர்களின் விடுதலை மிகவும் சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது.
 
7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கை அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம், இதற்கான அரசியல் சட்ட அமர்வு 3 மாதங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

 உச்சநீதி மன்றத்திற்கு விரைவில் கோடை விடுமுறை விடப்பட விருக்கும் நிலையில், அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்படுவதற்கே இன்னும் பல மாதங்கள் ஆகும். அதன்பின் இந்த வழக்கை இழுத்தடிக்க மத்திய அரசு முயலும் என்பதால் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக சற்று அதிக காலம் ஆகலாம்.
 
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஏற்கனவே 23 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில், மேலும் பல மாதங்கள் அவர்கள் சிறையில் வாட வேண்டும் என்பதே மனித உரிமை மீறல் ஆகும். இத்தகைய சூழலில் 7 தமிழர்களுக்கும் உடனடியாக ஏதேனும் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய அவசியமாகும். இதற்காக இந்திய அரசியல் சட்டத்தின் 161–வது பிரிவைப் பயன்படுத்தி விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் தமிழக அரசின் முன் உள்ளன.
 
இந்த விவகாரத்தின் தமிழக மக்களின் உணர்வுகளை தாம் மிகவும் மதிப்பதாக தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறார். அது உண்மையாக இருந்தால், குறைந்தபட்ச நிவாரணமாக, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக இருட்டுச் சிறையில் வாடும் 7 தமிழர்களும் வெளியுலக சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் வகையில் இவர்களை எவ்வளவு காலத்திற்கு சிறை விடுப்பில் (பரோல்) அனுமதிக்க முடியுமோ அவ்வளவு காலத்திற்கு சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்.
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:27 am

பேரறிவாளன் வழக்கு குறித்து கருத்து கூற விரும்பவில்லை : கருணாநிதி


சென்னை: பேரறிவாளன் வழக்கு நீதிபதிகள் அளவில் விவாதிக்கப்பட்ட விஷயம் என்பதால் கருத்து கூற விரும்பவில்லை என கருணாநிதி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது திமுக தலைவர் கருணாநிதி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:32 am


உச்ச நீதிமன்றம் அரசியல் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து விட்டது: பழ.நெடுமாறன்

சென்னை: உச்ச நீதிமன்றம் அரசியல் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து விட்டதாக உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக உள்ளது" என்றார்.

திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில், "7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தயக்கம் காட்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், "மத்திய- மாநில அரசுகளின் அதிகார உச்சவரம்பு குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து அதிக அதிகாரம் தொடர்பாக தெளிவு ஏற்பட வாய்ப்புள்ளது" என்றார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக