புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
57 Posts - 68%
heezulia
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
2 Posts - 2%
viyasan
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
234 Posts - 42%
heezulia
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
21 Posts - 4%
prajai
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_m10தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயாரம்மா - ஆர்னிகா நாசர்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Apr 24, 2014 12:00 pm



சொர்ணசேரி வானொலி நிலையம். இயக்குநர் மைதிலியின் எதிரில் அமர்ந்திருந்தான் நிகழ்ச்சித் தயாரிப்பாளன் ராஜகீர்த்தி.

"மிஸ்டர் கீர்த்தி! அகில இந்திய வானொலி நாடக விழாவில் ஒரு சிறப்பான நாடகத்தைத் தயாரிச்சு வழங்கணும். ஸ்கிரிப்ட் ஏதாவது ரெடியா இருக்கா?"

கீர்த்தி உதடு பிதுக்கினான். "பொதுவாகவே வானொலிக்கு நாடகங்கள் எழுதுற வங்க எண்ணிக்கை ரொம்பக் குறைஞ்சுபோச்சு மேடம். என்கிட்ட 20-க்கும் மேற் பட்ட ஸ்கிரிப்ட்கள் இருக்கு. பெரும்பாலானவை டாகுமென்ட்டரி தரம். பிரசார நெடி அதிகம். நாடக அம்சமே இல்லை."

"இப்படிச் சொன்னா எப்படி? பிரபல எழுத்தாளர் யாருடைய சிறுகதையையாவது கேட்டு வாங்கி, நாடக ஆக்கம் செய்யுங்களேன் கீர்த்தி!"

"என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு மேடம்! சிதம்பரத்தில் சங்கமித்ரன்னு ஓர் எழுத்தாளர் இருக்கார். வயது 76 இருக்கும். மகா முன்கோபி. ஞானபீடம் பரிசு பெற் றவர். அவர் கடந்த 15 வருடங்களாக எந்தக் கதையும் எழுதல. அவரை வற்புறுத்தி ஒரு கதை கேக்கலாம் மேடம். நம்ம அகில இந்திய வானொலி நாடகத் திருவிழாவுக்கு ஒரு நல்ல ஸ்கிரிப்ட் கிடைச்ச மாதிரியும் இருக்கும்; அவரை மீண்டும் எழுதவெச்ச மாதிரியும் இருக்கும்!"

"எது வேணாலும் செய்யுங்க கீர்த்தி. எனக்குப் பழம் பழுத்தா சரி!"

சிதம்பரம். சங்கமித்ரனின் முகவரியை வைத்துக்கொண்டு தேடோ தேடென்று தேடினான் கீர்த்தி. யாருமே சங்கமித்ரனைக் கேள்விப்பட்டிருக்கவில்லை. இரண்டு மணி நேரம் அலைந்து, தில்லை அடுக்கு-மாடிக் குடியிருப்பின் நான்காவது தளத்துக்குப் போனான். அழைப்பு மணியை அமுக்கினான். பதில் இல்லை. கதவைப் பல ஒலியன்களில் தட்டினான். "சார்! ஐயா! எழுத்தாளரே! வீட்டுக்குள்ள யாராவது இருக்கீங்களா..?"

கதவு மெதுவாகத் திறந்து, சங்கமித்ரனின் ஒரு கீற்று தெரிந்தது. "யார் நீ? என் ஃப்ளாட் வாசல்ல நின்னு ஏன் இப்படிக் கத்தற?"

"நான் சொர்ணசேரி வானொலி நிலையத்தில் இருந்து வர்றேன். என் பெயர் கீர்த்தி. நிகழ்ச்சித் தயாரிப்பாளனா இருக்கேன். உங்களைத்தான் பார்க்க வந்தேன். நீங்கதானே திரு.சங்கமித்ரன்?"

"சங்கமித்ரனா? அவன் 1995-லேயே செத்துப்போயிட்டான்டா! இப்ப இருக்கறது அவனோட சக்கை!"

"1995-ல் அப்படி என்னதாங்கய்யா நடந்தது?"

"என் வொய்ஃப் மஞ்சள்காமாலை வந்து செத்துப்போய்ட்-டாடா. அவ இல்லாம இந்த உலகமே வெறுமையாப்போச்சு. அவ போன இடத்துக்கே போகலாம்னு பார்த்தா தற்கொலை செஞ்சுக்கவும் பயமாயிருக்குடா!" - மித்ரனின் கண்களில் நீர்.

"உங்க வேதனையை என்னால புரிஞ்சுக்க முடியுதுய்யா!"

கதவைத் திறந்துவிட்டார் மித்ரன். "வா, உள்ளே வந்து உக்கார்!"

கீர்த்தி சுற்று முற்றும் பார்த்தான். அறைச் சுவர் களில் புகைப்படங்களோ, கண்ணாடி பீரோக்களில் புத்தகங்களோ காணப்படவில்லை.

"நீ என்ன பாக்கறேன்னு புரியுது. போட்டோஸ் அண்ட் புக்ஸ் ஆர் ஹாண்ட்டிங் மீ. அதான், மொத்தமாப் போட்டு எரிச்சுட்டேன்."

மௌனித்தான் கீர்த்தி.

"சரி, என்ன விஷயமா வந்தே?"

"அகில இந்திய வானொலி நாடகத் திருவிழாவுக்கு நீங்க ஒரு கதை எழுதித் தரணும்."

"நான் எழுத்தை விவாகரத்து பண்ணி ரொம்ப காலமாச்சேடா!"

"அப்படிச் சொல்லக் கூடாது. உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளியா வந்தா ஏதாவது குடுத்து உபசரிப்பீங்கள்ல... அது மாதிரி எனக்கு ஒரு கதை குடுத்து உபசரிங்க!"

"கதை கதைன்றியே... உனக்கு இலக்கியம்பத்தி என்ன தெரியும்? என் கதைகளைப் படிச்சிருக்-கியா?"

பதினைந்து நிமிடங்களுக்கு மித்ரனின் கதைகள் பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே வாசித்து முடித்தான் கீர்த்தி. தொடர்ந்து, "எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். எழுத்தாளர்கள்ல நீங்க சிங்கம் மாதிரி. ஆனா, உங்க கர்ஜனைகள் மனிதாபிமானம் மிக்கவை" என்றான்.

"ரொம்பக் காக்கா பிடிக்காதே! எனக்கு இப்பக் கதை எழுத வராது. என்னை விட்ரு! குடித்துக் குடித்து என் மண்டையே வறண்டு-விட்டது!"

"இல்லை. அப்படிச் சொல்லக் கூடாது. உங்களால் முடியும். எனக்காக ஒரே ஒரு கதை எழுதித் தாருங் கள். அது உங்க மாஸ்டர் பீஸா அமையணும்!"

சங்கமித்ரனின் கண்கள் ஏகாந்தத்தில் நிலைத்தன. "இருக்குடா ஒரு கதை. எழுதப்படாத ஒரு மாஸ்டர் பீஸ்! கதைக்குத் தலைப்புக்கூட வெச்சிருந்தேன், 'கிருஷ்ணவேணி வந்தாள்'னு. மனைவியின் மர ணத்துக்கு முன் எழுத ஆரம்-பிச்சு, அவள் மரணத் துக்குப் பின் தூக்கிப் போட்டுட்டேன். அந்தக் -கதையை முடிச்சுத் தர்றேன். ஆனா ஒரு நிபந்தனை..."

"என்ன சார்?"

"கிருஷ்ணவேணியின் கேரக்ட-ருக்குக் குரல் கொடுக்கப்போகும் பெண்ணை என் விருப்பம் அறிந்து-தான் தேர்ந்தெடுக்க வேண்டும்."

"சரி!"

"கதையை எழுதும் அளவுக்கு என் கைகள் திடமாக இல்லை. கதையை நான் சொல்லச் சொல்ல... நீயே எழுதிக்கொள்!"
தலையாட்டினான் கீர்த்தி.

சங்கமித்ரன் சொல்லச் சொல்ல, விறுவிறுவென எழுதினான் கீர்த்தி. கதையைச் சொல்லும்போதே சில இடங்களில் வார்த்தை வராமல் அழுதார். சில இடங்களில் அவனும் நெகிழ்ந்து அழுதான். ஒரு வாறாகக் கதையை எழுதி முடித்து-விட்டு, அவருக்குப் படித்துக் காட்டினான் கீர்த்தி.

"எண்பத்து ஐந்து வயதில் ஒரு கிழவன் இருபது வயதுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றதுபோல இருக்குது இந்தக் கதை. ரெண்டு சந்தோஷம்டா! என் ஆண்மை, அதாவது எழுத்துத் திறமை இன்னும் நிலைத்திருக்கிறது என்பது முதல் சந்தோஷம். ரெண்டாவது சந்தோஷம், பிறந்த குழந்தையும் பீமனைப்போல புஷ்டியாக இருக்கிறது!"

சிரித்தான் கீர்த்தி.

"ஏனப்பா கீர்த்தி? கிருஷ்ணவேணி கேரக்டருக்கு யார் குரல் கொடுக்கப்போறா?"

குரல் வங்கியில் உள்ள நூற்றுக்கணக்கான பெண் குரல்களைப் போட்டுக் காட்டினான். கோவை சரளா குரல், உஷா உதூப் குரல், மால்குடி சுபா குரல், காந்திமதி குரல், மனோரமா குரல்...

வரிசையாகக் கேட்டுக்கொண்டே வந்த மித்ரன் திடீரென, "நிறுத்து... நிறுத்து! இந்தக் குரல் யாருடை யது?" என்றார். "டெரிஃபிக் எக்ஸெலன்ட் அண்ட் எக்ஸ்ட்ராடினரி வாய்ஸ். குரலில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள், வளைவு நெளிவுகள் அசாத்தியம்! இந்த நூற்றாண்டின் இணையற்ற பெண் குரல் இதுதான்டா கீர்த்தி!"

"இந்தக் குரலுக்கு உரிய பெண்மணியின் பெயர் தாயாரம்மா. ஏ ப்ளஸ் கிரேடு ஆர்ட்டிஸ்ட். ஆனா, என்ன காரணமோ தெரியலை... கடந்த ரெண்டு வருஷமா அவங்க எந்த ரெக்கார்டிங்குக்கும் வரலை."

"என்னைப் பிடிச்ச மாதிரி அந்த அம்மாவையும் பிடிடா! அந்தம்மா கிடைக்கலைன்னா இந்த நாடகத்தை உனக்குத் தர மாட்டேன்!"

"ஆண்டவன் கிருபையால அவங்களும் கிடைப் பாங்க சார்! நாளைக்கே நல்ல செய்தியோடு உங்களைச் சந்திக்கிறேன்!"

தாஸ்பேட்டை. ஒளவைத் தெரு. 20-வது குறுக்குத் தெருவுக்குள் பிரவேசித்-தான் கீர்த்தி. கதவைத் தட்டினான். ஓர் 20 வயதுப் பெண் வெளிப்-பட்டாள்.

"யார் சார் நீங்க?"

"வானொலி நிலையத்துல இருந்து வரேன். தாயாரம்மாவைப் பார்க்கணும்!"

"அவங்களைப் பார்க்க முடியாது சார்! படுத்த படுக்கையாஇருக் காங்க. பாலாஜி பாலி கிளினிக்ல அட்மிட் பண்ணியிருக்கோம்."

இருண்டான் கீர்த்தி. "நீங்க அவங்க பொண்ணாம்மா?"

"ஆமா!"

"இப்ப நீங்க அவங்க இருக்கிற ஆஸ்பத்திரிக்குதானே போறீங்க?"

"ஆமா!"

"நானும் உங்ககூட வந்து அவங்களைப் பார்க்கலாமா?"

பத்து நொடி யோசித்து, "சரி வாங்க!" என்றாள்.

மருத்துவமனைக்குள் இருவரும் பிரவேசித்தனர். பினாயில் காயாத ஈரத் துணியின்டிங்க்சர் வாசனை!

இன்டென்சிவ் கேர் யூனிட்டில் தாயாரம்மா படுத்திருந்தாள். வயது 50. சற்றே பூசிய சிவந்த திரேகம். நரைத்த தலைக் கேசம். நோய்-வாய்ப்பட்டு இருந்தபோதிலும் முகத்தில் லட்சுமி கடாட்சம் பொங்கியது. கழுத்துப் பகுதி வீங்கியிருந்தது. தாயாரம்மாவின் கண்கள் கீர்த்தியை அடையாளம் கண்டுவிட்டன. ஆக்சிஜன் மாஸ்க்கை அகற்ற சமிக்ஞை செய்தாள். அகற்றினர். பேசினாள். காற்றுதான் வந்தது. 0.0001 டெஸிபல்கூட தொண்டைப் பெட்டியிலிருந்துவெளிக் கிளம்பவில்லை. மீண்டும் மீண்டும் பேசப் பிரயத்தனம் செய்து தோற்றாள்.

தலைமை மருத்துவர் உள்ளே நுழைந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் கூறினான் கீர்த்தி. மருத் துவர் வேதனையாகச் சிரித்து, "உணவுக் குழாயும் வாய்ஸ் பாக்சும் இணைகிற இடத்தில் கேன்சர் எனச் சந்தேகிக்கிறோம். அந்த அம்மா வால் ஒரு வார்த்தைகூடப் பேச இயலாது. பயாப்ஸி ரிப்போர்ட் மாலை வரும்" என்றார்.

தாயாரம்மா விரல்களை அசைத்து மகளை அருகில் அழைத்தாள். சமிக்ஞையில், "கீர்த்தி எதற்கு வந்திருக்கார்னு கேள்!" என்றாள்.

சொன்னான் கீர்த்தி. மீண்டும் சமிக்ஞை. "என்ன கதை? என்ன ரோல்?"

கையில் கொண்டுவந்திருந்த ஸ்கிரிப்ட்டை படித்துக் காட்டினான் கீர்த்தி. தாயாரம்மாவின் கண்-களில் இருந்து தாரை தாரையாக நீர் பெருக்கெடுத்து வழிந்தது.

"சங்கமித்ரன் என் ஆதர்ச எழுத்தாளர். கதை யைப் பாராட்டத் தமிழில் வார்த்தைகளே இல்லை!" - இதுவும் சமிக்ஞையில்.

சில நொடிக் கரைசலில் தாயாரம்மா தேம்பித் தேம்பி அழுதார். அழுகிறபோதே சில சைகைகள். அவற்றைக் கவனித்துவிட்டு, "எங்கம்மாவுக்கு கேன்சர் வந்ததுகூடக் கவலை இல்லையாம். இந்த ரேடியோ டிராமாவுல நடிக்க முடியலேன்னு அழ-றாங்க!" என்று விளக்கினாள் மகள்.

"என்ன பண்றது? எங்களுக்குக் கொடுப்பினை அவ்வளவுதான்! அப்ப, நான் கிளம்புறேம்மா!" - விடைபெற்றுத் திரும்பினான்.

முதுகில் ஒரு ஈஸ்ட்ரோஜென் பூசிய குரல் பளார் என அறைந்தது. "கீர்த்தி சார்!"

சுழன்று திரும்பினான் கீர்த்தி. அழைத்தது தாயாரம்மாதான்.

"நீங்களா பேசினீங்க... நீங்களா பேசினீங்க..?"

தொண்டையைத் தடவிவிட்டபடி, ஹிஸ்டீரி கலாக எழுந்து அமர்ந்தாள் தாயாரம்மா.

"சீக்கிரம் டாக்டரைக் கூப்பிடுங்க. என்னை வீல்சேரிலேயோ, ஸ்டெச்சரிலேயோ வெச்சு ரிக்கார்-டிங்-குக்குக் கூட்டிட்டுப் போங்க. கிருஷ்ணவேணி கேரக்டரை நான்தான் பண்ணணும். கிருஷ்ணவேணி கேரக்டருக்கு பேசிட்டுச் செத்தாதான் நிம்மதியா சாவேன்!"

ஐஸி யூனிட் பரபரத்தது. தாயாரம்மாவைச் சுமந்துகொண்டு ஆம்புலன்ஸ் வானொலி நிலையம் பறந்தது. ரிக்கார்டிங் ஆரம்பித்தது. நான்கு மணி நேர ரிக்கார்டிங்கில் கிருஷ்ணவேணியாகவே வாழ்ந்து பார்த்துவிட்டாள் தாயாரம்மா.

தாயாரம்மாவின் உணர்ச்சிபூர்வமான குரலைக் கேட்கக் கேட்க... ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்த அனை-வரின் முதுகுத்தண்டிலும் பனிப்பூரான் ஊர்ந்-தது. ஆண்களுக்கு மார்பகம் முளைத்து தாய்ப்-பால் சுரந்தது. சொர்க்கத்துக்குள் ரோலர்கோஸ்டர் பயணம். நொடிக்கு நொடி பேரானந்தம். நிலவேம்பு கஷாயத்துக்குள் மனம் நீச்சலடித்துத் தூய்மை பெற்றது.

ரிக்கார்டிங் முடிந்தது. கீர்த்தி, மித்ரன் உள்பட அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.

மித்ரன் தாயாரம்மாவின் கைகளைப் பற்றி முகத்-தில் ஒற்றிக்கொண்டார். "கடவுள் பெண்ணாக இருந்--தால், அவர் குரல் உங்க குரலின் சாயலில்தான் இருக்கும். என்னுடைய சாதாரணக் கதையை மாஸ்டர் பீஸாக்கிவிட்டீர்கள். இதுவரை வாழ்க் கையை அவநம்பிக்கையுடன் கழித்தேன். இனி, மீதி வாழ்நாளை அர்த்தபூர்வமாகச் செலவழிப்பேன்!"

பதில் பேச தாயாரம்மா வாய் திறந்தாள். வார்த்தை வரவில்லை. காற்றுதான் வந்தது. மீண்டும் மீண்டும் முயற்சிக்க, வாயில் இருந்து ரத்த நூல் வழிந்தது.

ஆம்புலன்ஸ் தாயாரம்மாவைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குப் பறந்தது.

கீர்த்தியிடமும் மித்ரனிடமும், "இன்றைக்கு நடந் தது ஒரு மருத்துவ அற்புதம். ஒன்ஸ் இன் எ ப்ளூ மூன்தான் மருத்துவ அற்புதங்கள் அரங்கேறும். தன் உயிரோடு கரைந்திருக்கும் வானொலி நாடகப் பணி யைச் செய்ய தாயாரம்மா இறைவனிடம் கெஞ்சி நான்கு மணி நேரம் பேசினார்போலும்! இனி அவ் வளவுதான்; அவரால் பேச முடியாது. நீங்களும் இனி அவரைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது!"

வானொலி நிலைய காசோலையைத் தாயா ரம்மாவின் கையில் திணித்தான் கீர்த்தி. பற்றிக் கொண்டன விரல்கள்.

தயங்கித் தயங்கி வெளியேறினர் கீர்த்தியும் மித்ரனும்.

'கிருஷ்ணவேணி வந்தாள்' நாடகத்தைத் தாயா ரம்மா கேட்கும்விதமாக வானொலியை அவளது தலைமாட்டில் வைத்தனர். நாடகம் ஒலிபரப்பானது. நவரச பாவங்களுடன் நாடகத்தைக் கேட்டு முடித் தாள் தாயாரம்மா. நாடகம் முடிந்ததும் செவிலியர் நங்கைகள், மருத்துவர்கள் உட்பட அனைவரும் கரகோஷம் செய்தனர்.

"ஒரு நிமிஷம்..." என்றபடி தாயாரம்மாவின் முன் வந்து நின்றார் மித்ரன்.

"இன்னொரு வானொலி நாடகம் புதுசா எழுதி இருக்கேன். தலைப்பு 'அம்மாவழிப் பாட்டிகளும் அப்பாவழிப் பாட்டிகளும்'. படிக்கிறேன் கேளுங்கம்மா!"

நாடகம் முழுமையையும் படித்து முடித்தார் சங்கமித்ரன். ஏறக்குறைய 100 நொடிகள் நீண்ட மௌனம். பின், அது படீரென்று உடைபட்டது.

"இந்த நாடகத்துல எனக்கு அம்மாவழிப் பாட்டி ரோல்தானே மித்ரன்?"

வினவியது தாயாரம்மாவின் அமானுஷ்யம் ஈஷிய குரல்!


jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Fri Apr 25, 2014 10:53 am

தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  103459460 தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  103459460 

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Fri Apr 25, 2014 11:26 am

தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  103459460 தாயாரம்மா - ஆர்னிகா நாசர்  1571444738 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக