புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் பெயர் தமிழச்சி -ராஜேஷ்குமார் -சிறுகதை
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஜன்னலுக்கு வெளியே அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரம், அந்த ராத்திரி 10 மணி வேளையில் மின்மினிப் பூச்சிகளின் கூட்டம் போல் தெரிய, கயல்விழி அதைப் பார்த்தபடி அசையாமல் நின்றாள். ஏதோ ஒரு ஸ்டில் போட்ட மாதிரி தெரியும் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருப்பதில் அவளுக்கு என்றைக்குமே அலுப்பு ஏற்பட்டது இல்லை. ஆனால், இன்றைக்கு அந்தக் காட்சியை அவளுடைய கண்கள் பார்த்துக்கொண்டு இருந்தாலும், மனத் திரையில் ஒட்டாமல் வழுக்கிவழுக்கி விழுந்துகொண்டு இருந்தது. உடம்புக்குள் ரத்தம் ஓடுவதற்குப் பதிலாக வெந்நீர் ஓடுவது போன்ற உணர்வு. நிமிடத்துக்கு ஒரு முறை அவளையும் அறியாமல் அனலாகப் பெருமூச்சு வெளிப்பட்டுக்கொண்டு இருந்தது.
ஹாலில் இருந்து கயல்விழியின் மாமியார் சொர்ணமும் மாமனார் சதாசிவமும் வெளிப்பட்டு அவளை நோக்கி வந்தார்கள். ''நீ ஏம்மா சாயந்தரத்தில் இருந்து கொஞ்சம் டல்லாவே இருக்கே? உடம்புக்கு ஏதும் முடியலையா?''
''அது ஒண்ணும் இல்ல மாமா... இன்னிக்கு ஆபீஸ்ல கொஞ்சம் அதிகப்படி வேலை. அதான் கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்றேன். சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தாப் போதும்!''
''நீ இப்படி டல்லா இருந்து நான் என்னிக்கும் பார்த்தது இல்லை. அதான் கேட்டேம்மா. பத்தரை மணிக்குள்ளே திவாகர் வரலைன்னா நீ சாப்பிட்டுப் படுத்துக்கோ.''
''சரி மாமா.''
கயல்விழி மறுபடியும் ஜன்னலுக்கு வந்தாள். வெளியே மின்னிசோட்டா இப்போது குறைந்த வெளிச்சப் புள்ளிகளோடு தெரிந்தது. 'காலம் இப்படியா... அசுரத்தனமாக நாலு கால் பாய்ச்சலில் ஓடும்? ஏதோ... நேற்றைக்குத்தான் திவாகரோடு ஃப்ளைட்டில் வந்து இறங்கின மாதிரி இருக்கிறது. மகள் மித்ராவுக்கு இப்போது 11 வயது முடியப்போகிறது. அடுத்த வருடம் வயதுக்கு வந்துவிடுவாள்!'
ஏதேதோ யோசனைகளில் நிமிடங்கள் கரைந்துகொண்டு இருக்க... திடுமென்று வெளியே காரின் ஹாரன் சத்தம் கேட்டது. திவாகர்தான்!
கயல்விழி வேகவேகமாகப் போய் முன் பக்க வீட்டுக் கதவைத் திறந்துவைக்க, திவாகர் காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான். 40 வயது. ஆறடி உயரம். இளம் வழுக்கை. ஸ்டோன் வாஷ் பேன்ட், டி-ஷர்ட்.
''ஸாரி கயல்... கொஞ்சம் லேட்டாயிடுச்சு. மித்ரா தூங்கிட்டாளா?''
''ம்...''
''அப்பா, அம்மா?''
''11 மணி ஆகப்போகுதே. இன்னமுமா முழிச்சிட்டு இருப்பாங்க?''
டைனிங் டேபிளுக்குப் போய் இரண்டு தட்டுக்களை எடுத்துவைத்தாள் கயல்விழி. வாஷ்பேசினில் கைகளைக் கழுவிக்கொண்டு எதிரில் வந்து உட்கார்ந்தான் திவாகர்.
ஹாட் பேக்கைத் திறந்துகொண்டே கயல்விழி சொன்னாள், ''சாப்பிட்டு முடிச்சதும் 'லேப்டாப்'பை எடுத்து மடியில் வெச்சுக்காதீங்க. நான் உங்ககூட கொஞ்சம் பேசணும்.''
''இப்பவே பேசேன்.''
''வேண்டாம். மொதல்ல சாப்பிடுங்க.''
''ஏதாவது பிரச்னையா?''
''நீங்களும் நானும் பேசும்போதுதான் அது பிரச்னையா இல்லையான்னு தெரியும்.''
''நான் வந்ததுமே நோட் பண்ணினேன். இன்னிக்கு உன்னோட முகமே சரி இல்லை.''
''அதுகூட என்னோட மனசையும் சேர்த்துக்குங்க.''
''என்ன ஒரே சஸ்பென்ஸா இருக்கு?''
''சாப்பிடுங்க பேசுவோம். அந்த விஷயத்தைப் பத்திப் பேசறதுக்கு எனக்கும் சக்தி வேணும். அதைக் கேக்கிறதுக்கு உங்களுக்கும் சக்தி வேணும். சாப்பிடுங்க...''
''நீ இன்னிக்கு என்னோட கயல் மாதிரியே இல்லை. ஏதோ வேற ஒரு வீட்டுக்குள்ளே வந்துட்ட மாதிரி இருக்கு.''
கயல்விழி பதில் ஒன்றும் பேசாமல் பரிமாற ஆரம்பித்தாள். அதற்குப் பிறகான நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன. திவாகர் சாப்பிட்டு முடிக்க, டைனிங் டேபிளைக் க்ளீன் செய்துவிட்டு, கயல்விழி படுக்கை அறைக்குள் நுழைந்தாள். டி.வி-யில் நியூஸ் சேனல் பார்த்துக்கொண்டு இருந்த திவாகர்... ரிமோட் மூலம் ம்யூட் செய்துவிட்டு, ஒரு புன்முறுவலோடு கயல்விழியை ஏறிட்டான்.
''என்ன விஷயம் சொல்லு?''
''மொதல்ல நான் கேக்குற சின்னச் சின்னக் கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்லிட்டே வாங்க.''
''கேளுங்க மகாராணி.''
''நமக்குக் கல்யாணம் ஆகி எவ்வளவு வருஷம் ஆச்சு?''
''12 வருஷம்.''
''அப்பா, அம்மா இல்லாத என்னை என்னோட அண்ணன்தான் பாசமா வளர்த்தார். படிக்கவெச்சார். இருந்தாலும் நம்ம காதலுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிச்சதைப் பொருட்படுத்தாம உங்களை நான் கல்யாணம் பண்ணிட்டேன். கல்யாணம் பண்ணிட்ட அடுத்த வாரமே மின்னிசோட்டா வந்துட்டோம். இல்லையா?''
''ஆமா.''
''அடுத்த வருஷமே மித்ரா பொறந்துட்டா?''
''இல்லேன்னு யார் சொன்னது?''
''உங்களுக்கும் நல்ல வேலை; எனக்கும் நல்ல வேலை. நமக்குள்ளே இதுவரைக்கும் பொருளாதார ரீதியா ஏதாச்சும் பிரச்னை வந்திருக்கா?''
''இல்லை.''
''இந்த 12 வருஷ காலத்துல என்னிக்காவது ஒருநாள், 'ஏன்டா இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்?'னு நீங்க அலுத்துக்கிட்டது உண்டா?''
''சேச்சே! அப்படியரு நினைப்பு எனக்கு வந்ததே கிடையாது.''
''ஸோ... நான் உங்களுடைய அன்பான மனைவி?''
''சென்ட் பர்சென்ட்!''
''இப்படி ஓர் அன்பான மனைவி இருக்கும்போது உங்களுக்கு எதுக்காக அந்த சில்வியா?''
''சில்வியா?''
''ம்... உங்க ஐ.டி. பார்க்கில் ரிசப்ஷனிஸ்ட்டா வேலை பார்க்கிற சில்வியா!''
''அவளுக்கும் எனக்கும் என்ன?''
''அதை நீங்கதான் சொல்லணும்.''
''கயல், நீ பேசறது சரி இல்லை.''
''நான் பேசறது சரி இல்லையா? அவகூட ஒரு ரெஸ்டாரென்ட்டில் 'கேண்டில் லைட்' டின்னர் சாப்பிடற அளவுக்கு நீங்க நடந்துக்குறது சரி இல்லையா?''
''கயல்! போன வாரம் சாட்டர்டே நைட் ரெஸ்டா ரென்ட்டுக்கு அவளோடு டின்னர் சாப்பிடப் போனது உண்மை. பட், நான் மட்டும் போகலை. என்னோட புராஜெக்ட் சீஃப், அப்புறம் ஏ.வி.பி, வந்து இருந்தாங்க. சில்வியாவுக்கு கன்ஸ்யூமர் கோர்ட் மூலமா ஒரு பெரிய தொகை வந்தது. அதை செலிபரேட் பண்ண ட்ரீட் கொடுத்தா.''
''இதை நான் நம்பணும்?''
''நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. சில்வியாவுக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு நீ நினைக்கிறே... அப்படித்தானே?''
''அப்படித்தான்!''
''அப்படியே வெச்சுக்க...'' - சொன்ன திவாகர் ஸ்விட்ச்சைத் தேய்த்து விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் சாய்ந்தான்.
''குட் நைட்!''
அரை நிமிட நேரம் அங்கேயே நின்று திவாகரை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்த கயல்விழி பின், விருட்டென்று அறையைவிட்டு வெளியேறி, மித்ராவின் அறைக்குள் நுழைந்து அவள் அருகே படுத்துக்கொண்டாள்.
நேரம் நள்ளிரவைத் தாண்டி இருக்க, யாரோ தன்னை உசுப்பும் உணர்வில் சட்டென்று விழித்துக் கொண்டாள் கயல்விழி.
மித்ராவின் குரல். ''அம்மா!''
''எ... எ... என்ன மித்ரா!''
''ஏம்மா... இங்கே வந்து படுத்துட்டிருக்கே?''
''அப்பா ரூம்ல ஏ.சி. சரியா கூலிங் இல்லை. அதான் இங்கே வந்துட்டேன்.''
மித்ரா குரலைத் தாழ்த்தினாள். ''அப்பா... ஹால் சோபாவில் வந்து உட்கார்ந்துகிட்டு என்னமோ மாதிரி இருமிட்டு இருக்கார்.''
கயல்விழி எரிச்சலாக மகளைப் பார்த்தாள். ''நீ போய்ப் பார்த்து, என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு அப்படியே 'காஃப் சிரப்'பை எடுத் துக் குடுத்துட்டு வா.''
மித்ரா எழுந்து போனாள். இரண்டு நிமிஷம் கரைந்து இருந்தபோது மித்ராவிடம் இருந்து அலற லாக ஒரு சத்தம் வெளிப்பட்டது. ''அம்மா! இங்கே வந்து அப்பாவைப் பாரேன்...''
கயல்விழி போர்வையை உதறிவிட்டு எழுந்து ஓடினாள். ஹால் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து இருந்த திவாகர், இரண்டு கைகளாலும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நெளிந்தான்.
''க... க... கயல்! டா... டாக்டருக்குப் போன் பண்ணு''- திவாகரைப் பார்த்து அதிர்ந்துபோன கயல்விழி, பக்கத்து அவென்யூவில் இருக்கும் டாக்டர் ஹென்றிக்குப் பதற்றத்தோடு போன் செய்து விவரம் சொல்ல... அவரும் நைட் கவுனில் காரில் பறந்து வந்தார். திவாகரைச் சோதித்துப் பார்த்துவிட்டு, முகம் முழுவதும் பரவிக்கொண்ட கவலையோடு, உதட்டைப் பிதுக்கினார் ஹென்றி. ''சடன் மாஸிவ் அட்டாக். ஐ ம் ஹெல்ப்லெஸ்!''
அன்றைக்கு ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்த கயல்விழி மீண்டும் தன் இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு வார காலம் பிடித்தது. மாமியார் சொர்ணமும் மாமனார் சதாசிவமும் அழுது அழுது களைத்துப்போய் உடம்பு பாதியாக இளைத்துத் தெரிந்தார்கள்.
துபாயில் இருந்து வந்திருந்த கயல்விழியின் அண்ணன் சம்பத்தும் அவனுடைய மனைவி அருணாவும் அதே வீட்டில் தங்கி, துக்கம் விசாரிக்க வருபவர்களைச் சந்தித்துப் பேசி... திருப்பி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள்.
அன்றைக்கு இரவு 11 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பிறகு சம்பத்தும் அருணாவும், தூங்காமல் விழித்துக்கொண்டு இருந்த கயல்விழியின் பக்கத்தில் போய் உட்கார்ந்தார்கள். ''கயல், திவாகர் திடீர்னு ஹார்ட் அட்டாக்கில் போனது ஓர் அதிர்ச்சியான விஷயம்தான். ஆனா, திவாகர் உயிரோடு இருந்திருந்தா, இன்னும் பல அதிர்ச்சியான விஷயங்கள் நடந்து இருக்கும். நான் அவருடைய கம்பெனிக்குப் போய் விசாரிச்சுப் பார்த்த அளவில் சில்வியாவுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்திருக்கு. ஒவ்வொரு சனிக்கிழமையும் மத்தியானத்துக்கு மேல் ரெண்டு பேரும் புறப்பட்டுப் போய், ஏதாவது ஒரு ஹோட்டல்ல ரூம் எடுத்துத் தங்கி இருக்காங்க. இன்னும் ஆறு மாசத்துக்குள்ளே உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு சில்வியாவைக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணத்துல திவாகர் இருந்திருக்கார். அது விஷயமா ரெண்டு பேரும் டவுன் ஸ்கொயர் பக்கத்தில் இருக்கிற ஒரு லாயரைப் பார்த்து கன்சல்ட் பண்ணிட்டு வந்திருக்காங்க. அது தவிர...'' மேற்கொண்டு பேச முயன்ற சம்பத்தைப் பெருமூச்சோடு கை அமர்த்தினாள் கயல்விழி.
''இது எல்லாம் எனக்கும் தெரியும்ணா! அந்த கம்பெனியில் வேலை பார்க்கிற ஒரு செக்யூரிட்டி ஆபீஸர் தமிழ்நாட்டுக்காரர். அவர் எல்லா விஷயங்களையும் சொல்லப் போகத்தான் நான் அவர்கூட சண்டை போட்டேன். நான் சண்டை போடுவேன்னு அவர் எதிர்பார்க்கலை. டென்ஷன் ஆயிட்டார். ஏற்கெனவே அவருக்கு பி.பி. இருக்கிறதால சடன் அட்டாக். நான் இந்த சில்வியா மேட்டரை இன்னும் கொஞ்சம் நிதானத்தோடு டீல் பண்ணி இருக்கலாம். அவசரப்பட்டுட்டேன்.''
அண்ணி அருணா குறுக்கிட்டாள், ''கயல், இனிமே நடக்கப் போறதைப்பத்தி யோசிப்போம். இனிமே நீயும் மித்ராவும் இந்த மின்னிசோட்டாவில் இருக்கக் கூடாது. துபாய்க்குப் போயிடுவோம். எல்லாரும் ஒண்ணா இருப்போம். நீ படிச்சிருக்கிற கம்ப்யூட்டர் 'ஸ்கில் செட்'டுக்கு ஏத்த மாதிரி துபாய்ல ஒரு நல்ல வேலை கிடைக்கும்.''
கயல்விழி மௌனமாக இருந்தாள்.
''ஆனா, என்னோட மாமியார், மாமனார்?''
''அவங்களைப்பத்தி நீ ஏன் கவலைப்படறே? கோயம்புத்தூருக்குப் பக்கத்துல ஏதோ ஒரு கிராமத்துல அவங்களுக்குத்தான் வீடு இருக்கே. அவங்க அங்கே போகட்டும். இல்லேன்னா, மும்பையில் இருக்கிற அவங்க பொண்ணு வீட்டுக்குப் போகட்டுமே.''
''ஆமா கயல்! அண்ணி சொல்றதுதான் சரி. நீயும் மித்ராவும் எங்களோடு வந்துடுங்க. எல்லாரும் ஒண்ணா இருப்போம். என்னோட பொண்ணு ஸ்ருதியும் மித்ராவும் சேர்ந்து ஸ்கூலுக்குப் போகட்டும்! நீ எங்களோடு வரப் போற முடிவை உன்னோட மாமியார், மாமனார்கிட்டே நாளைக்கே சொல்லிடு. அப்பதான் அவங்களும் எங்கே போறதுன்னு யோசனை பண்ணி முடிவு எடுக்க முடியும்!''
''அண்ணா! மொதல்ல என் கணவரோட பதினோராம் நாள்காரியங் கள் முடியட்டும். நான் நிதானமா அவங்ககிட்டே சொல்லிக்கிறேன்.''
''ஏர் டிக்கெட் புக் பண்ணணும் கயல்.''
''ரெண்டு நாள்தானே... பொறுங்கண்ணா.''
''சரி...'' சம்பத்தும் அருணாவும் எழுந்துகொண்டார்கள்.
மறுநாள். காலை ஆறு மணி.
அமெரிக்கன் டைம்ஸ் பேப்பரைப் புரட்டிக்கொண்டு இருந்த தன் அண்ணன் சம்பத்தை நெருங்கி நின்றாள் கயல்விழி.
''அண்ணா!''
அவன் பேப்பரிலிருந்து நிமிர்ந்தான். ''என்ன கயல்?''
''என்னோட மாமாவும் அத்தையும் தூங்கிட்டு இருக்காங்க. அண்ணி குளியல் அறையில் இருந்து திரும்ப எப்படியும் இருபது நிமிஷமாகும். அதுக்குள்ளே உன் கிட்டே கொஞ்சம் பேசணும்.''
''என்ன விஷயம் சொல்லு?''
''என் கணவரோட காரியங்கள் முடிஞ்ச தும் நீங்களும் அண்ணியும் மட்டும் துபாய் புறப்படுங்க.''
''நீ?''
''நான் வரலை?''
சம்பத் அதிர்ந்து போனவனாக பேப்பரை மடித்துவைத்தான். ''ஏன்... நேத்திக்கு ராத்திரி பேசும்போது எங்ககூட வர்றதாச் சம்மதிச்சியே! இப்ப ஏன் வரலைன்னு சொல்றே?''
''நான் என்னோட அம்மாவையும் அப்பாவையும் விட்டுட்டு வர முடியாது!''
''என்னது! அம்மா-அப்பாவா... அது யாரு?''
''என்னோட அத்தையும் மாமாவையும்தான் சொல்றேன்! நேத்து அண்ணிகூட இருந்ததுனால நான் சில விஷயங்களைப் பேச முடியலை. நம்ம அப்பா-அம்மாவை நான் போட்டோவில்தான் பார்த்திருக்கேன். என்னை வளர்த்தது நீதான்! எனக்குக் கல்யாணமான பிறகுதான் ஒரு தாயோட அன்பு எப்படி இருக்கும்கிறதையும், ஒரு தந்தையோட பாசம் எப்படி இருக்கும்கிறதையும் என்னோட அத்தை, மாமா மூலம் தெரிஞ்சுக் கிட்டேன். அவங்களைப் பொறுத்தவரை நான்தான் மகள். திவாகர் மருமகன். என்னோட முகம் கொஞ்சம் வாடி இருந்தாலும் ரெண்டு பேருமே துடிச்சுப்போயிடுவாங்க. நான் காலையில் விழிக்கும்போது அத்தை காபியோடு நிப்பாங்க. நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ளே டிபன் ரெடியா இருக்கும். ஆபீஸ் போறதுக்குள்ள மாமா என்னோட சேலையை அயர்ன் பண்ணிக் கொடுப்பார். இந்த வேலை எல்லாம் நீங்க ஏன் மாமா பண்றீங்கன்னு கேட்டா... நீ என் பொண்ணும்மா. உனக்குப் பண்ணாம வேற யாருக்குப் பண்றதுன்னு சொல்வார். இவ்வளவு அன்பையும் பாசத்தையும் என் மேல் பொழியற இவங்களை விட்டுட்டு, நான் எப்படி உங்ககூட வர முடியும், சொல்லு? என் கணவர் திவாகர் ஒருவழியில் எனக்குத் துரோகம் பண்ணினாலும் இன்னொரு வழியில் எனக்கு ஒரு நல்ல அம்மாவையும் அப்பாவையும் கொடுத்துட்டுப் போயிருக்கார்.
உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமாண்ணா? என்னோட கணவர் இறந்ததுக்கு அவரோட சிஸ்டர் புவனாவும் புவனா வோட கணவரும் மும்பையிலிருந்து வரலை. காரணம், ஆறு மாதங்களுக்கு முன்னாடி புவனா என் அத்தைகிட்டே போன்ல பேசும்போது என்னை மரியாதைக் குறைவா பேசி இருக்கா. அண்ணியை அப்படி எல்லாம் பேசக் கூடாதுன்னு அத்தை சொல்லி இருக்காங்க. புவனா கேட்கலை. தொடர்ந்து பேசி இருக்கா. அத்தைக்குக் கோபம் வந்து, 'இனிமேல் என்கூட பேசாதே!'ன்னு சொல்லி போனை கட் பண்ணிட்டாங்க. இந்தச் சம்பவம் நடந்து ஆறு மாசமாச்சு. அத்தை புவனாவுக்கு போன் பண்ணவே இல்லை. புவனாவும் போன் பண்ணலை. புவனா போன் பண்ணாததைப் பத்தி அத்தையோ மாமாவோ துளிகூட கவலைப்பட்டதாத் தெரியலை.''
சம்பத் அயர்ந்து போய் நிற்க... கயல்விழி தொடர்ந்தாள், ''இப்ப சொல்லுண்ணா... இப்படிப்பட்ட பாசத்தைப் புறங்கையால் தள்ளிட்டு உன்கூட நான் எப்படி வர்றது? அண்ணியும் நீயும் என்னை உங்களோடு இருக்கக் கூப்பிட்டீங்க. அது நடைமுறைக்குச் சரியா வரும்னு எனக்குத் தோணலை. ஏன்னா, அண்ணி... அண்ணிதான்! எனக்கு அம்மாவாக முடியாது. உன்னோட வீட்ல நான் இருக்க நேர்ந்தா, நாட்கள் செல்லச் செல்ல, அண்ணிக்கு மெள்ள ஒரு ஒரு அலுப்பு எட்டிப் பார்க்கும். நானும் மித்ராவும் பண்ற சின்னத் தப்புக்கள் விஸ்வரூபம் எடுத்து பெரிசாத் தெரியும். தான் விரும்பற டி.வி.சேனலை மித்ரா போடும்போது உன்னோட பொண்ணு ஸ்ருதிக்கு அது பிடிக்காது. அவ சேனலை மாத்தச் சொல்லும்போது, அண்ணியும் நானும் மனசளவில் எதிரிகளா மாறி இருப்போம். இப்படி ஒரு சூழ்நிலை உன் வீட்டில் உருவாகணுமா? நல்லா யோசனை பண்ணிப்பாரு! இது என்னோட வீடு. இங்கே நானும் மித்ராவும் இருந்தா சந்தோஷமா இருப்போம்னு நினைக்கிறேன்.''
''நானும் அதையேதான் நினைக்கிறேன்!''
தனக்குப் பின்னால் எழுந்த பெண் குரல் கேட்டு கயல்விழி திரும்பிப் பார்த்தாள். நீர் சொட்டும் ஈரத் தலையை டவலால் துடைத்தபடி அருணா தெரிந்தாள். உதட்டில் ஒரு மெகா புன்னகை!
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
கிருஷ்ணா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|