ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

5 posters

Go down

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Empty பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

Post by ரூபன் Mon Nov 02, 2009 3:02 pm

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்
(29.07.1967 -02.11.2007)

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Tamilselvanநேற்றுவரை
புன்னகை பூத்தபடி ஊடகவியலாளர்களையும், சர்வதேச இராசதந்திரிகளையும் ஏன்
தனது எதிர்தரப்பில் உள்ள சிறிலங்கா அரசியல் தலைவர்களையும் எதிர்கொண்ட,
அரசியற்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் கடந்த 2ம் திகதி
வெள்ளியன்று காலை சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

உண்மையில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் பொறுப்பாளர்.
ஆனால் எங்களின் பிரதிநிதியாக உலக அரங்கில் செயற்பட்டவர் என்பதனால் அவர்
எங்களில் ஒருவராய், ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிநிதியாக எங்கள்
உணர்வுகளில் நிறைந்திருக்கிறார். இதன் தாற்பரியத்தை மற்றவர்கள் புரிந்து
கொண்டார்களோ இல்லையோ, சிங்கள தேசம் நன்றாகப்புரிந்து கொண்டிதிருந்தது.
அதானால்தான், அவர் மரணத்தையிட்டு மகிழ்ந்து ஆரவாரித்தது. இந்த
மனிதாபிமானமற்ற செய்கைகள் மூலம் சிங்களம் தன்னை இனங்காட்டிக் கொண்டதுடன்,
உலகத்தமிழனத்தின் உணர்வுகளை உலுப்பிவிட்டுள்ளது. தமிழ்ச்செல்வன் என்ற
தமிழர்களின் புதல்வன் தன் மரணத்தின் மூலமும் தன்னினத்தின் மனக்கதவுகளைத்
தட்டிச்சென்றிருக்கிறான்.

1993ல் என நினைக்கிறேன் தமிழ்ச்செல்வன் அவர்கள் அரசியற்துறைப்
பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோது, அவரை முதன் முதலில் பி.பி.சியின்
தமிழ்ச்சேவை பேட்டி எடுத்திருந்தது. “இதுவரை ஒரு இராணுவத்தளபதியாக இருந்த
நீங்கள் இப்போது அரசியற்துறை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
இரண்டுக்குமிடையில் வேறுபாட்டைக் காணவில்லையா” என வினவியபோது,
அப்படியெதுவும் வித்தியாசமில்லை இரண்டுமே விடுதலைப்போராட்டத்திற்கானது
என்பதாக அவர் பதிலளித்திருந்தார். தமிழ்ச்செல்வனைப் பொறுத்தவரை இவை வெறும்
வார்த்தைகளல்ல, அவர் விடுதலைப்போராட்டத்தில் எக்காலத்திலும்,
எந்தப்பணியையும் செய்யத்தயாராய் இருந்தார் என்பதனை தனது 23 வருடகால
விடுதலைப்பணியில், அவரது இறுதி நிமிடம் வரையும் செய்துகாட்டினார்.

அந்த இளவயதில், அவருக்கு தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்ட இயக்கத்தின்
பெரிய பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டபோது அது பலருக்கு வியப்பாகவும் அதே
சமயம் ஏற்புடையதாகவும் இருக்கவில்லை. அவர் அரசியல் விஞ்ஞானத்தையோ சர்வதேச
உறவுகள் பற்றியோ எந்தப் பல்கலைக்கழகத்திலும் கற்கவில்லை என்பது கூட
சிலருக்கு அவர்மீது அசிரத்தையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் கால
ஓட்டத்தில் ஈழத்து இராசதந்திரியாக, அவர்பேச்சுவார்த்தை மேசையிலும்,
சர்வதேச அரங்கிலும் சாதித்தவை, இன்று அவருக்கு மாற்றீடு இருக்கிறதா என்று
கவலைகொள்ள வைத்துள்ளது.

1967ம் ஆண்டு யூலை 29ம் திகதி மட்டுவிலில் அரசியல் பிரதிக்ஜை கொண்ட
தொழிலாளியான திரு. பரமு, திருமதி விசாலாட்சி பரமு தம்பதியினரின் ஐந்தாவது
பிள்ளையாக பிறந்த தமிழ்ச்செல்வன் மட்டுவில சாந்தநாயகி வித்தியாலயத்தில்
ஆரம்பக்கல்வியையும் பின்னர் மட்டுவில் மகாவித்தியாலயத்தில்
உயர்கல்வியையும் கற்றார்.

1983ம் ஆணடு இனக்கலவரத்தினை தொடர்ந்து பல தமிழ் இளைஞர்கள்
விடுதலைப்போராட் இயக்கங்களில் இணைந்து கொண்டதுபோல், 1984ம் ஆண்டில்
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தமிழ்ச்செல்வன் இணைந்து கொண்டார்.
தமிழ்நாட்டில்; இயக்கத்தின் நான்காவது பயிற்சி அணியில் பயிற்சி பெற்ற
அவர்ஆரம்பத்தில் தேசியத்தலைவர் திரு. பிரபாகரனின் தொடர்பாளராகச்
செயற்பட்டார். பின்னர் மருத்துவப் போராளியாகவும் செயற்பட்டுள்ளார்.

1987ல் இந்திய இராணுவம் நிலைகொண்ட காலத்தில், தென்மராட்சிப் பிரதேசப்
பொறுப்பாளாராக நியமிக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் அவருக்கு முன்னர்
அப்பிரதேசப் பொறுப்பாளராகவிருந்து கைதடியில் விபத்தொன்றில் வீரச்சாவடைந்த
மேஜர் கேடில்ஸ் போன்று தென்மராட்சி மக்களின் மனங்களில் இடம்பிடித்துக்
கொண்டார்.

விடுதலைப்புலிகள் இயக்கம் ஆனையிறவு படைத்தளம் மீது நடாத்திய முதல்
மரபுவழிப்போரிலும், பூநகரி சிறிலங்கா இராணுவ முகாம் மீதான ஈருடகத்
தாக்குதலிலும் பங்கெடுத்துக் கொண்ட தமிழ்ச்செல்வன்; இச்சமர்களில்
விழுப்புண் அடைந்தார். காலில் ஏற்பட்டகாயத்தினால் அதன்பின்னர் அவர்
கைத்தடியினுடனேயே இயங்கவேண்டியதாயிற்று. இருப்பினும் கடைசிவரை
கைத்தடியின் உதவியுடனே வன்னியின் மூலை முடுக்களிலிருந்து உலகத்தலை
நகரங்கள் வரை வலம் வந்;தார்.

இறுதியாக ஜெனிவாவில் நடைபெற்ற சிறிலங்கா அரசுடனான பேச்சுவாரத்தையில்
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சுகயீனம்காரணமாக கலந்து கொள்ள
முடியவில்லை. பேச்சுவார்ததை மேசைகளில் ஒரு புலியாக இருந்த பாலசிங்கம்
கலந்து கொள்ளாதமை சிறிலங்கா தரப்பிற்கு ஆறுதலைக் கொடுத்தபோல் தமிழ்
மக்களுக்கும் கவலையைத் தோற்றுவித்திருந்தது. ஆனால் பேச்சுவார்த்தைக்
குழுவிற்கு தலைமையதாங்கிய தமிழ்ச்செல்வன் அதனை மிகவும் கனகச்சிதமாக
கையாண்டு தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.

இறுக்கமானதும், பேச்சுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்காததுமான
விடுதiலைப்புலிகள் இயக்கத்திற்கும் வெளியுலகிற்குமான தொடர்பாளராய்
எப்போதுமே முகமலர்ச்சியுடன் செயற்பட்ட திரு.தமிழச்செல்வன்; இப்போது
எங்களுடன் இல்லை. இழப்புக்கள் இந்த இனத்திற்கு புதியன அல்ல,
இழப்புக்களிலிருந்து உறுதிபெறும் ஒரு இனத்திலிருந்து இன்னும் பல
தமிழ்ச்செல்வன்கள் உருவாகுவார்கள். எனினும் தமிழ்ச்செல்வனின் நினைவுகள்
எப்போதும் எங்களுடன் வாழும். அந்த உணர்வு என்றும் எங்களை செயற்படவைக்கும்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Empty Re: பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

Post by nandhtiha Mon Nov 02, 2009 3:11 pm

வணக்கம்
எம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற இம்மாவீரரின் சிறப்பு: எதிர்க் கருத்தையும் இன் முகத்துடன் ஏற்று மாற்று மொழி உரைத்து மனம் மாற்றும் திறமை. எந்த நிலையிலும் புன்னகை மாறா முகம்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Empty Re: பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

Post by kirupairajah Mon Nov 02, 2009 3:30 pm

உண்மைதான், இவர் புன்சிரிபுடன் ராஜதந்திர ரீதியில் நிலமையை கச்சிதமாக கையாண்டார், இவரின் இளப்பும் தற்போதய பின்நடைவுக்கு ஒரு கார‌ணமும் கூட


பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Empty Re: பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

Post by nandhtiha Mon Nov 02, 2009 5:13 pm

ஏற்றுங்கள் தீபம் இதயத்தில் இவர்நாமம்
போற்றுங்கள் செந்தமிழில் பாவியற்றிச் – சாற்றுங்கள்
தன்னுயிரை எண்ணாது தாயகத்துக் கீந்தாரை
எந்நாளும் நெஞ்சத்தி லேற்றி
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Empty Re: பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

Post by யாழவன் Mon Nov 02, 2009 5:17 pm

kirupairajah wrote:உண்மைதான், இவர் புன்சிரிபுடன் ராஜதந்திர ரீதியில் நிலமையை கச்சிதமாக கையாண்டார், இவரின் இளப்பும் தற்போதய பின்நடைவுக்கு ஒரு கார‌ணமும் கூட
இழப்புக்கள் எமக்கு புதியவைகள் அல்ல.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Empty Re: பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

Post by தாமு Wed Nov 04, 2009 6:00 am

kirupairajah wrote:உண்மைதான், இவர் புன்சிரிபுடன் ராஜதந்திர ரீதியில் நிலமையை கச்சிதமாக கையாண்டார், இவரின் இளப்பும் தற்போதய பின்நடைவுக்கு ஒரு கார‌ணமும் கூட


எவ்வளவு துண்பம் வ்ந்தாலும் சிரிந்து வாழ்வில் முன்னேர வேண்டும்... பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 677196 பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 677196 பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 677196

நல்ல தக்வல் நன்றி ரூபன் தல... பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Icon_lol பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 942
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Empty Re: பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum