புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_m10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_m10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_m10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_m10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_m10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_m10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_m10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_m10அசத்திய அரசு மருத்துவர்கள்! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசத்திய அரசு மருத்துவர்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 2:54 am

அசத்திய அரசு மருத்துவர்கள்! Xhari_01_1864304h.jpg.pagespeed.ic.FRRH5P5FFK

அரசு மருத்துவமனை என்றவுடன், அசுத்தம், அக்கறையின்மை, ஆள்பற்றாக்குறை, இடநெருக்கடி, போதிய மருத்துவ வசதியின்மை என்பதே நம் மனதில் முதலில் நினைவுக்கு வரும்.

எதையும் இலவசமாய் தந்தால், அதன் தரம் குறைவாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இது தவறான எண்ணம் என்கிறார்கள் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.

“ஆட்சி செய்வது எந்த கட்சியாக இருந்தாலும், எத்தனை சலுகைகள் தந்தாலும், எங்கள் கடமையில் நாங்கள் எந்த மாற்றமுமின்றி நிறைவாகத்தான் செய்துவருகிறோம்.

அதிலும், உயிரைக் காக்கும் மருத்துவத் துறையை சேர்ந்தவர்களாகிய நாங்கள், எடுக்கும் முடிவில் தெளிவும், நோயாளிகள் மீது அக்கறையும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறோம்” என்கிறார்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள்.

ஹரி நாரக் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதும் இதனை நிரூபிக்கும் வகையில் நடந்துள்ள சம்பவம்.

கடந்த மார்ச் 2-ம் தேதி மாமல்லபுரத்தில் அடிபட்ட நிலையில் இருந்த ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மார்ச் 3-ம் தேதி காலை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.

அவரின் இரத்த அழுத்தம் குறைவாகவும், மூளையின் செயல் திறன் மிகவும் கவலைக்கிடமாகவும் இருந்தது. அப்போது பணியில் இருந்த மருத்துவர் சி.டி. ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்துள்ளார். ஸ்கேன் முடிவில் மூளையில் இரு இடங்களில் பெரும் ரத்த கசிவு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைப்பார் என்ற சூழ்நிலையில், தலைமை மருத்துவர் மகேஷ்வர் ஆலோசனையின்படி அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உலகத்தின் சிறந்த வசதிகள் பெற்ற பெரிய மருத்துவமனைகளில் கூட இது போன்ற நோயாளிகள் பிழைப்பது கடினம். கோடீஸ்வரரான கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கர் இது போலவே தலையில் அடிபட்டதால் இன்னும் கோமாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி நாரக்குக்கு சிகிச்சைக்குப் பிறகும் முழுமையாக சுயநினைவு திரும்பவில்லை. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது அச்சமயம் மருத்துவர்களுக்கு தெரியவில்லை. எனவே அவருக்கு தேவையான இரத்தம், உடுத்த உடை ஆகியவற்றை கல்லூரி மாணவர்கள் கொடுத்து உதவினர்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வென்ட்டிலேட்டர் நீக்கப்பட்டது. தன் பெயர் ஹரி என்றும், ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மட்டும் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு, சமூக வலைதளங்கள் மூலம், அவரைப் பற்றிய செய்திகள் பகிரப்பட்டன.

ஒடிசாவை சேர்ந்த அரசு மருத்துவர்கள் இதனை அறிந்து, காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். காவல் துறை அதிகாரிகள் இத்தகவலை நோட்டீஸாகவும், வானொலியிலும் அறிவிப்புகளாக வெளியிட்டனர். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் காவல் துறையை அணுகினர். இதன் மூலம் நோயாளியின் முழுப் பெயர் ஹரி நாயக் என்பதும், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த காலஹண்டியில் உள்ள துவமுலா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெற்றோர் பிஸ்வாம்பர் நாயக் மற்றும் லட்சுமி நாயக் என்பதும் தெரியவந்தது.

இந்த செய்தியை பேஸ்புக்கில் பகிர்ந்த, மகேஸ்வரன் தலைமையிலான குழுவைச் சேர்ந்த மருத்துவர் ராஜா விக்னேஷ், “தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைகளுக்கு 40 லட்சம் வரை செலவாகியிருக்கும். இங்கு இவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒடிசாவிலிருந்து அவர்களது உறவினர்கள் வந்த பிறகு, இவரை பார்த்த பிறகு தான் இவரது அடையாளத்தை உறுதி செய்ய முடியும்” என்று கூறுகிறார்.

அரசு மருத்துவமனைகளில் ஹரி நாயக்கைப் போன்று தினமும் குறைந்தபட்சம் 6 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளிலும் நன்கு படித்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களாலும் சவாலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாய் செய்து முடிக்க முடியும் என்பதை இச்சம்பவம் உறுதி செய்துள்ளது.

அரசு மருத்துவமனை என்றாலே, நன்றாக இல்லை.. நன்றாக இருக்காது.. என்று குறை சொல்லிக் கொண்டு இருப்பவர்கள், இந்த செய்தியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்களா?

சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வருவோரிடம் கனிவாகப் பேசுதல், மருத்துவமனையை இன்னும் சுத்தமாகவும் சுகாதாரம் நிறைந்ததாகவும் வைத்தல் போன்ற சில அம்சங்களில் கவனம் செலுத்தினால், இன்னும் பல உயரங்களை எட்டுவோம் என்பதே பொதுமக்களின் கருத்து.

தட்டிக் கேட்க உரிமை இருக்கும் நமக்கு, தட்டிக் கொடுக்கும் கடமையும் இருக்கிறதல்லவா?

[thanks] தி இந்து [/thanks]

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Apr 28, 2014 7:22 pm

என் அம்மாவிடம் நீ இன்னும் ஆறு மாசம் தான் உயிருடன் இருப்பாய் என ஒரு தனியார் மருத்துவமனை கூறியது.

உங்கள் அம்மா பிழைக்க மாட்டார்கள் என்று கூறியது இன்னொரு தனியார் மருத்துவமனை.

இன்று என் அம்மாவை அரசு மருத்துவமனை உயிருடன் திரும்ப தந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றது . நன்றாக இருக்கிறார்.
********
என் மகன் கால் எலும்பு உடைந்த பொது அறுபதாயிரம் கேட்டது தனியார் மருத்துவமனை . ஆனாலும் ஆபரேஷன் பிறகும் அவன் நன்றாக நடப்பான் என்று உறுதி அளிக்கவில்லை.

ஆபரேஷன் தேவை இல்லை என்றும் ஒரு வாரத்தில் சிகிச்சை அளித்து அவன் கால் நன்றாக ஆகிவிடும் என்றும் தைரியம் அளித்தது அரசு மருத்துவமனை. இதுவும் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன . இன்று என் மகன் நன்றாக இருக்கிறான். அவன் பள்ளியில் ஓட்ட பந்தயத்தில் முதலில் வந்த போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவனை சரி செய்த மருத்துவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
******
இந்த இரண்டு நிகழ்ச்சிக்கும் நான் சென்னை ஸ்டான்லி மருத்துவர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்.



கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon Apr 28, 2014 8:57 pm

அசத்திய அரசு மருத்துவர்கள்! 103459460 அசத்திய அரசு மருத்துவர்கள்! 3838410834 அரசு மருத்துவமனை பழிக்கும் நமக்கு பாராட்டவும் கடமை உள்ளது.



கிருஷ்ணா
subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Mon Apr 28, 2014 9:03 pm

நன்றி நன்றி நன்றி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 28, 2014 9:27 pm

கிருஷ்ணா wrote:[link="/t109791-topic#1060504"]அசத்திய அரசு மருத்துவர்கள்! 103459460 அசத்திய அரசு மருத்துவர்கள்! 3838410834 அரசு மருத்துவமனை பழிக்கும் நமக்கு பாராட்டவும் கடமை உள்ளது.

நிஜம் ............. ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 28, 2014 9:46 pm

வாழ்க மருத்துவ குலமே ! நன்றி

முன்னுதாரண பிரம்மாக்களே
நின் குலம் வாழ
வெண் சாமரம் வீசுவேன்
போதும் என்று கூறும்வரை.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக