புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
40 தொகுதிகளின் நிலவரம் Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
40 தொகுதிகளின் நிலவரம் Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
40 தொகுதிகளின் நிலவரம் Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
40 தொகுதிகளின் நிலவரம் Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
40 தொகுதிகளின் நிலவரம் Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

40 தொகுதிகளின் நிலவரம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 3:53 pm

40 தொகுதிகளின் நிலவரம் P19
தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!

 இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும் களமிறங்கியிருக்கிறார்கள்.
வேட்புமனு இறுதி செய்யும் சமயத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு சின்னம் கிடைத்தது. அதுவரை வேட்பாளர் பெயரை மட்டுமே சொல்லி வாக்குகளைக் கேட்டது, ரவிக்குமாருக்கு மைனஸ். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காதது இன்னொரு மைனஸ். திருவள்ளூர் தொகுதி தி.மு.க-வுக்குக் கிடைக்காத அதிருப்தியில், இன்னும் சில நிர்வாகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரசாரத்துக்கு ஸ்டாலின் வந்து சென்ற பின்னரே ஒத்துழைப்பு கிடைத்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அடுத்த மைனஸ், புரட்சி பாரதம் கட்சியினர். திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றிபெறக் கூடாது என்ற முனைப்புடன் அவர்கள்  அ.தி.மு.க-வுக்காக சுறுசுறுப்புடன் வேலைபார்த்து வருகிறார்கள். தொகுதியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. கூட்டணி, அது நிச்சயம் பலன் கொடுக்கும் என்று நம்புகின்றனர்.

சிட்டிங் எம்.பி-யான வேணுகோபால்தான் அ.தி.மு.க. வேட்பாளர். இந்தத் தொகுதியில் செய்த பணிகளை ஒவ்வொரு பிரசாரத்திலும் பட்டியலிடுகிறார். சிரித்த முகத்துடன் கட்சியில் எல்லோரையும் அனுசரித்து செல்வது வேணுகோபாலுக்கு ப்ளஸ்.

தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜ் வட சென்னை மாவட்டச் செயலாளராக இருப்பதால், தே.மு.தி.க-வினர் முழுவீச்சில் இவருடைய வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். அதோடு கூட்டணிக் கட்சியினரும், மோடி அலையும் தங்களுக்கு ப்ளஸ் என்கிறார்கள். புதிய வாக்காளர்களும் இளைஞர்களும் நிச்சயம் முரசைக் கொட்டுவார்கள் என்ற நம்பிக்கை ஆணித்தரமாக யுவராஜுக்கு உள்ளது.

உள்ளூர் மைந்தன் என்ற முகவரியுடன் களமிறங்கிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமார். ஆவடியில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட இவர், தொகுதி மக்கள் மத்தியில் ஓரளவுக்குப் பிரபலமானவர். கணிசமான வாக்குகளை வாங்குவார். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால், மோதிரம் டாலடிப்பதைவிட இரட்டை இலையே துளிர்க்கும் நிலை இந்தத் தொகுதியில் தெரிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 3:54 pm

 40 தொகுதிகளின் நிலவரம் Nothchennai
தினக்கூலித் தொழிலாளர்களும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களும் செறிவாக வாழும் தொகுதி வட சென்னை. இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை மீனவர்களும், தலித் மக்களும் கிறிஸ்துவர்களாக உள்ளனர். முஸ்லிம்களும் கணிசமான அளவில் இருக்கின்றனர். 

 இந்தத் தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் வெங்கடேஷ் பாபு, தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் கிரிராஜன், தே.மு.தி.க. சார்பில் சௌந்தர பாண்டியன், சி.பி.எம். சார்பில் உ.வாசுகி ஆகிய பிரதான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

எந்த அடிப்படை வசதிகளும், உள்கட்டமைப்பு வசதிகளும் இன்றுவரை முறையாக நிறைவேற்றப்படாத பகுதி வட சென்னை. சென்னை நகரின் குப்பைத் தொட்டி என்பதுபோல் காட்சியளிக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த காலத்திலேயே தி.மு.க. ஆதிக்கம் செலுத்திவந்த இந்தத் தொகுதி, இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வின் பக்கம் போவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான தி.மு.க-வின் டி.கே.எஸ்.இளங்கோவன், தொகுதிப் பக்கம் அதிகம் எட்டிப் பார்க்காததும், குடிநீரில் பெட்ரோலும் டீசலும் கலந்து வந்தபோது, அஜாக்கிரதையாக செயல்பட்டதும், பெரும் ஆவேசத்தை அந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அவை அப்படியே அ.தி.மு.க-வுக்கு வாக்குகளாக மாறும் என்கிறார்கள். இரண்டு கட்சி ஆட்சியும் வடசென்னையின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பான்மை மக்களிடம் இருக்கிறது.

சிறுபான்மையின மக்கள் அதிகம் உள்ளதாலும், பி.ஜே.பி-யின் கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., தே.மு.தி.க, விடுதலைச் சிறுத்தைகள் இந்தத் தொகுதியில் பெரிய அளவில் பலம் இல்லாமல் இருப்பதும், தே.மு.தி.க. வேட்பாளருக்கு மிகப்பெரிய மைனஸ். தொழிற்சங்கங்கள் வலுவாக இருப்பதால், கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாசுகிக்கு உற்சாகமாக வேலை பார்க்கின்றனர். ஆனால், அவை எந்தளவுக்கு வாக்குகளாக மாறும் எனத் தெரியவில்லை.  இந்தக் குறைகளை எல்லாம் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அரசின் சாதனைகளைச் சொல்லி பிரசாரம் செய்து​வருகின்றனர் அ.தி.மு.க-வினர்.

தி.மு.க. இல்லையென்றால் அ.தி.மு.க. என்ற தமிழகத்தின் மனப்பான்மையின்படி இந்த முறை அ.தி.மு.க-வே இந்தத் தொகுதியில் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
40 தொகுதிகளின் நிலவரம் Star40 தொகுதிகளின் நிலவரம் Star40 தொகுதிகளின் நிலவரம் Star


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 3:54 pm

40 தொகுதிகளின் நிலவரம் Southchennai
பேரறிஞர் அண்ணாவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த தொகுதி தென் சென்னை. படித்தவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், உயர் தட்டு மக்கள், சாஃப்ட்வேர் பணியாளர்கள் என பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய தொகுதி இது. தொடர்ந்து நான்கு முறை இந்தத் தொகுதியில் வென்ற தி.மு.க-வுக்கு கடந்த முறை முற்றுப்புள்ளி வைத்தது அ.தி.மு.க.
 
முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமாரின் மகன் டாக்டர் ஜெயவர்தன் அ.தி.மு.க. வேட்பாளர். தென் சென்னைக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியே வென்றது, அவர்களுக்கு தெம்பைத் தந்துள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து சுறுசுறு பிரசாரத்தில் இருக்கிறார். ஆனாலும், இவர் வட சென்னை வட்டாரத்தில் அறிமுகம் ஆனவர். தென் சென்னை கட்சியினருடன் ஒட்ட முடியவில்லை. இலை வாக்குகள்தான் இவருக்கு பலம். சிட்டிங் அ.தி.மு.க. எம்.பி-யான சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மீதான கெட்ட பெயர்கள் இவருக்கு எதிராக உள்ளன.

பி.ஜே.பி. வேட்பாளர் இல.கணேசன் அனைத்து தரப்பினருக்கும் பரிச்சயமானவராக இருக்கிறார். கடந்த முறை தனித்து நின்று 40 ஆயிரம் வாக்குகள் வாங்கினார். இந்த முறை கூட்டணி பலத்துடன் நிற்கிறார். படித்த வாக்காளர்கள், மத்தியதர வர்க்கத்தினர் ஆதரவு இவருக்கு உண்டு. மோடி பிரசாரம் இவருக்கு கை கொடுக்கிறது.

வட சென்னையில் தா.பாண்டியனுக்கு ஷாக் கொடுத்து கடந்த முறை வெற்றிபெற்ற டி.கே.எஸ்.இளங்கோவன், இந்த முறை தென் சென்னையில் தி.மு.க. சார்பில் மல்லுகட்டுகிறார். கட்சியில் அவர் பிரபலமானவராக இருப்பது ப்ளஸ். தொகுதி மாறியதால், ஆரம்பத்தில் உற்சாகம் இல்லாமல் பிரசாரத்தைத் தொடங்கினாலும், தற்போது கட்சி நிர்வாகிகள் முனைப்புடன் இறங்கி வேலை செய்வது அவருக்குத் தெம்பாக இருக்கிறது.

காங்கிரஸில் சீட் வாங்க போராடிய ரமணி, அந்த முனைப்பை வெற்றிபெறுவதற்குக் காட்டுவதாகத் தெரியவில்லை.

''மோடியின் நீண்ட நாள் நண்பர் இல.கணேசன். மோடி பிரதமர் ஆனால், இல.கணேசன் மந்திரி ஆவார். அவரை ஆதரியுங்கள்'' என்று பேசி ஓட்டு கேட்கிறார்கள் பி.ஜே.பி-யினர். இல.கணேசன் பிரிக்கும் ஓட்டுகளால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறது தி.மு.க. தரப்பு. ஆனால், வீடு வீடாகச் சென்று 'பி.ஜே.பி-க்கு ஓட்டுப் போட்டு வீணாக்காதீர்கள்; அ.தி.மு.க-வுக்கே ஓட்டுப் போடுங்கள்’ என்கிறது அ.தி.மு.க. டீம். அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் 'பதவி பறிபோய்விடும்’ என்ற பயத்தில் உருண்டுபுரண்டு வேலை செய்வது ஜெயவர்தனை வாக்காளர்களிடம் அதிகமாகக் கொண்டுபோய் சேர்க்கிறது. அதனால், இந்த முறையும் இலையே மீண்டும் துளிர்க்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 3:55 pm

40 தொகுதிகளின் நிலவரம் Chentralchennai
பரப்பளவில் சிறிய தொகுதிதான் என்றாலும், தமிழ்நாடே எதிர்பார்க்கும் பரபரப்பான தொகுதியில் மத்திய சென்னையும் ஒன்று.
 கடந்த இரண்டு முறை வென்ற தயாநிதி மாறன்தான் இந்த முறையும் தி.மு.க. வேட்பாளர். அ.தி.மு.க. சார்பில் எஸ்.ஆர்.விஜயகுமாரும் தே.மு.தி.க. சார்பில் ஜோ.க.ரவீந்திரனும் இவரை எதிர்த்துப் போட்டி போடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் சி.டி.மெய்யப்பனும், ஆம் ஆத்மி ஜே.பிரபாகரும் களத்தில் இருக்கின்றனர்.

தி.மு.க. அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே மத்திய சென்னையை மானப் பிரச்னையாகக் கருதுவதால், தேர்தல் களத்தில் ஏகத்துக்கும் அனல். இதுவரை நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. ஒருமுறைகூட இந்தத் தொகுதியில் வெற்றி பெறவில்லை. இதனை உடைத்து அ.தி.மு.க-வை வெற்றிபெற வைத்து வரலாறு படைக்க வேண்டும் என தீயாக வேலை செய்துவருகிறார் விஜயகுமார்.

தயாநிதியும் சளைக்காமல் டைம் டேபிள் போட்டு வீதி வீதியாக வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளார். இவரது மனைவி ப்ரியாவும் தன் கணவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார்.

தே.மு.தி.க. வேட்பாளர் ரவீந்திரன் பெயரே வாக்காளர்களுக்கு இன்னும் தெரியவில்லை. 'யாரோ விஜயகாந்த் கட்சியில் நிற்கிறார்களாம்’ என்றுதான் சொல்கிறார்கள். இந்தத் தொகுதியில் கவனிக்கப்படும் இன்னொரு வேட்பாளர், ஆம் ஆத்மியின் ஜெ.பிரபாகர். படித்த வாக்காளர்கள் பலரும் இந்தத் தொகுதியில் இருப்பதால், இவருக்கு கணிசமான வாக்குகள் விழும்.
மத்திய சென்னை தொகுதியில் பணக்கார வாக்காளர்களும் அதிகம் இருக்கிறார்கள்; அடித்தட்டு மக்களும் அதிகம் வாழ்கிறார்கள்.

'இரண்டாவது வகையினர் வாக்கு இரட்டை இலைக்குதான். முதல் வகையினர் எங்கே வாக்குச்சாவடிக்கு வரப்போகிறார்கள்?’ என்பது அ.தி.மு.க-வினரின் கணக்கு. 'தி.மு.க-வின் கோட்டையான மத்திய சென்னையை விட்டுக்கொடுக்க மாட்டோம். மத்திய சென்னையில் உதயசூரியனை அஸ்தமிக்க விடமாட்டோம். மக்களும் விடமாட்டார்கள்’ என அதீத நம்பிக்கையில் தி.முக-வினர் இருக்கிறார்கள். ஆக மொத்தம் கடுமையான போட்டி நிலவுவதால், யாருக்கு வெற்றி கிடைத்தாலும் சரி... சில ஆயிரம் வாக்கு வித்தியாசங்களில்தான் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

இதற்கெல்லாம் மேலாக, 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக’யாக நிற்கும் தயாநிதி மாறனை ஜெயிக்கவைத்தால், கட்சிக்குள் தங்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கும் என எண்ணி, தேனீயாக வேலை செய்கிறார்கள் உடன்பிறப்புகள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மத்திய சென்னையை தி.மு.க. தக்கவைக்கும் என்றே தெரிகிறது.
40 தொகுதிகளின் நிலவரம் Star%281%2940 தொகுதிகளின் நிலவரம் Star%281%2940 தொகுதிகளின் நிலவரம் Star%281%29


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 3:56 pm

 40 தொகுதிகளின் நிலவரம் Sriperambudru
 
தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது ஸ்ரீபெரும்புதூர். தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும், அ.தி.மு.க. சார்பில் கே.என்.ராமச்சந்திரனும், பி.ஜே.பி. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளராக டாக்டர் மாசிலாமணியும் காங்கிரஸ் வேட்பாளராக அருள் அன்பரசும் களம் காண்கிறார்கள்.

அரக்கோணம் தொகுதி எம்.பி-யான ஜெகத்ரட்சகன் ஸ்ரீபெரும்புதூருக்கு முகாம் மாறிவிட்டார். தொகுதியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள தி.மு.க. போராடுகிறது. பல கல்லூரிகளின் அதிபரும் பிரபல பிசினஸ் புள்ளியுமான ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பு 78 கோடி. ஆனால், ஜெகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் சொத்து மதிப்பைக் காட்டியிருக்கிறார், அ.தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரன். அதனால் இரண்டு பக்கமும் தாராள செலவுகளுக்குப் பஞ்சமே இல்லை. செலவு செய்தும் ஆங்காங்கே அ.தி.மு.க-வினரிடையே அதிருப்தி நிலவுகிறது. தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் சின்னய்யா கொடுத்த வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி வேட்பாளர் பக்கம் திரும்பியிருக்கிறது.

தொழில் வளர்ச்சியால் விவசாய பகுதிகள் தொழில் நகரங்களாக மாறிவிட்டன. வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் இங்கேதான் பெருமளவில் குடியேறுகிறார்கள். இதனால் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை இங்கே அதிகம். அத்துடன் அவர்களுக்கான பிரச்னைகளும் அதிகம். தாம்பரம் ஏரியாவில் போக்குவரத்து நெரிசல், தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுப்பது இங்கே பிரதானப் பிரச்னையாக இருக்கிறது. இது அத்தனையும் ஆளுங்கட்சிக்கு மைனஸ் ஆக வாய்ப்பிருக்கிறது.

ம.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் மாசிலாமணி  கூட்டணி பலத்துடன் வலம் வருகிறார். புதிய வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதி இது. பி.ஜே.பி-க்கு இங்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனக்காக இந்தத் தொகுதியை பி.ஜே.பி.யை சேர்ந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தயார் செய்து வைத்திருந்தார். கடைசி சமயத்தில் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால், தமிழிசையின் உழைப்பு டாக்டர் மாசிலாமணிக்கு உதவியாக இருக்கிறது. வன்னியர்கள் வாக்கும் இங்கு உள்ளது. அதுவும் கூடுதல் பலம்.

'ராஜீவ் காந்தி உயிர்நீத்த பூமியில் நிச்சயம் வெற்றி பெறுவோம்’ என்ற நம்பிக்கையோடு களமிறங்கியிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு. இந்தத் தொகுதியில் காங்கிரஸுக்கு இருக்கும் செல்வாக்கு அருளுக்கு கணிசமான வாக்குகளை வாங்கித் தரும்.
அ.தி.மு.க-வுக்கு இருக்கும் அதிருப்திகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு உதயசூரியன் வாக்கு வங்கிகளை வைத்து தி.மு.க. முன்னேறுகிறது. அதனால் ஜெகத்ரட்சகன் ஜொலிக்கிறார்.
40 தொகுதிகளின் நிலவரம் Star%281%2940 தொகுதிகளின் நிலவரம் Star%281%2940 தொகுதிகளின் நிலவரம் Star%281%29


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 3:56 pm

 40 தொகுதிகளின் நிலவரம் Kanchpuram
  
ஜெயலலிதா முதன்முதலாகப் பிரசாரத்தைத் தொடங்கிய தொகுதி காஞ்சிபுரம்.

தனித் தொகுதியான இதில் அ.தி.மு.க. சார்பாக மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பாக செல்வம், ம.தி.மு.க. சார்பாக மல்லை சத்யா, காங்கிரஸ் சார்பாக சிட்டிங் எம்.பி. விஸ்வநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஓய்வு இல்லாமல் பிரசாரம் செய்து வரும் மரகதம் குமரவேலுக்கு கட்சி மேலிடம், தேர்தல் பொறுப்பாளர்கள், சொந்த செல்வாக்கு என அனைத்தும் இருப்பதால் ஆரம்பத்தில் இருந்தே சுறுசுறுப்புக்குப் பஞ்சம் இல்லை. 

தொகுதி முழுக்க நன்கு அறிமுகம் உள்ளவர் ம.தி.மு.க-வைச் சேர்ந்த மல்லை சத்யா. திருப்போரூர், மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் தொல்லியல் துறைக்கு எதிராக உள்ளூர் மக்களுக்காக ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்திருக்கிறார். தே.மு.தி.க., பா.ம.க. கட்சியினர் பங்களிப்பும், ஜெயலலிதா மீது உள்ள கோபமும் மல்லை சத்யாவுக்கு சாதகம். வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் வ.கோ.ரங்கசாமிக்கும் பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்துக்கும் இடையே உள்ள பகை, பி.ஜே.பி-யில் நிலவும் கோஷ்டிப்பூசல், பணபலம் குறைவு ஆகியவை மைனஸ். 'மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வரப்போகிறது. அப்படியானால், அந்தக் கூட்டணி வேட்பாளர்தான் நம் தொகுதியில் ஜெயிக்க வேண்டும்’ என்று காஞ்சிபுரத்தில் படித்தவர்கள் மத்தியில் செய்யப்படும் பிரசாரம் இவருக்கு ப்ளஸ்.

கடந்த மூன்று முறை தி.மு.க. தனது கூட்டணிக்கே ஒதுக்கியதால், கூட்டணிக் கட்சி வெற்றிக்கே பாடுபட்டு கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர். இந்த முறை தி.மு.க. வேட்பாளராக செல்வம் அறிவிக்கப்பட்டது, தி.மு.க-வுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார் முன்னாள் அமைச்சர் த.மோ.அன்பரசன். எதிர் தரப்பினரின் வாக்குகள் சிதறும் நிலையில், தி.மு.க. வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற்றாலே வெற்றிதான் என்ற ஃபார்முலாவோடு தொகுதி முழுக்கச் சுற்றி வருகிறார். காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு போன்றவை தி.மு.க-வுக்குச் சாதகமான பகுதிகள். மதுராந்தகம், அச்சரப்பாக்கம் பகுதியில் நிலவும் கோஷ்டி பூசல்களால் தி.மு.க. திணறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக இந்த முறையும் இதே தொகுதியில் போட்டியி​டுகிறார் விஸ்வநாதன். 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் இவருக்கு பலம். மேற்கண்ட மூன்று வேட்பாளர்களின் ஓட்டுகளை கணிசமாக சிதைப்பதில் இவருடைய பங்கு இருக்கும்.
மைனஸ் எதுவும் இல்லாமல் மரகதம் குமரவேல் முந்துகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 3:57 pm

40 தொகுதிகளின் நிலவரம் Arokonnam
தென் மாவட்டங்களுக்கு இணையாக சாதி கணக்குப் போடப்படும் தொகுதிகளில் ஒன்று வட மாவட்டத்தில் இருக்கும் அரக்கோணம் தொகுதி. அரசியல் கட்சிகளும் சாதி கணக்கைப் போட்டுத்தான் இங்கே வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளன.
 இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்களையே அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன. அடுத்த இடத்தில் இருக்கும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரை தி.மு.க., வேட்பாளராக்கி இருக்கிறது. 

பா.ம.க. வேட்பாளர் அரங்க.வேலு, கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி பலத்துடன் வென்று, ரயில்வே இணை அமைச்சர் ஆனவர். 2009 தேர்தலில் தோல்வியடைந்த இவர், இப்போது பி.ஜே.பி. கூட்டணி வேட்பாளராகக் களம் காண்கிறார். வேலூர் மாவட்டத்துக்கு மட்டுமே 40 ரயில்வே மேம்பாலங்கள் கட்டியது, ரயில் பாதையை அகலப்படுத்தியது என அவருடைய சாதனைகள் இப்போது நன்றாகவே கைகொடுக்கின்றன. 'வாலாஜாரோடு ரயில் நிலையத்தில் அதிவேக ரயில்கள் நிற்பதற்கு அவரே முக்கியக் காரணம். வாலாஜா, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து வேலைக்காக சென்னைக்கு செல்வோர் ஏராளம். அவர்களுக்கு ஏதுவாக ரயில் போக்குவரத்தை மேம்படுத்தினார்’ என்று வேலு புராணம் பாடுகிறார்கள் மக்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரி, அ.தி.மு.க. அரசின் சாதனைகளைச் சொல்லி தொகுதி முழுக்க சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஆளுங்கட்சி பலமும் வன்னியர் சமூக வாக்குகளும் தன்னைக் கரைசேர்க்கும் என்று நம்புகிறார். ஆனால், வன்னியர் சமூக வாக்குகள் இலையைவிட மாம்பழம் பக்கமே அதிகம் சாய்கிறது.

தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ, உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவர் தந்தை ரங்கநாதன் சோளிங்கர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. இந்த முகவரியை மட்டுமே வைத்துக்கொண்டு உதயசூரியன் சின்னத்தை நம்பி களம் காண்கிறார். அவர் சார்ந்த முதலியார் சமூக வாக்குகள் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். தொகுதியில் கணிசமாக இருக்கும் தலித் வாக்குகளும், முஸ்லிம் வாக்குகளும் தி.மு.க-வுக்கே சாதகமாக உள்ளன. தொகுதிக்கு தொடர்பே இல்லாத வேட்பாளர், புதுமுகம் ஆகியவை அவரைப் பின்னுக்குத் தள்ளுகின்றன. இரண்டு முறை இங்கு எம்.பி-யாக இருந்த ஜெகத்ரட்சகன் தொகுதிக்கு சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்ற மக்களின் கோபமும் தி.மு.க-வுக்கு எதிராக இருக்கின்றன. அதனால், தி.மு.க. பின்தங்குகிறது.

காங்கிரஸ் சார்பில் களம் இறங்கியுள்ள நாசே ராஜேஷ், பசையுள்ள பார்ட்டி. நாசே என்ற தொண்டு நிறுவனம் மூலம் தொகுதியில் ஓரளவு பரிச்சயமானவர். அதனால், கணிசமான வாக்குகளைப் பெற வாய்ப்பு உள்ளது. 

சாதி பலம், கூட்டணி பலம் ஆகியவை காரணமாக தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு டெல்லிக்குச் செல்ல ரயில் ஏறப்போவது அரங்க.வேலு!
40 தொகுதிகளின் நிலவரம் Star%282%2940 தொகுதிகளின் நிலவரம் Star%282%2940 தொகுதிகளின் நிலவரம் Star%282%29


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 3:57 pm

40 தொகுதிகளின் நிலவரம் Vellore
 கத்திரி வெயில் சூட்டைக் காட்டிலும் தேர்தல் சூட்டில் அனலாகக் கொதிக்கிறது வேலூர். பி.ஜே.பி. சார்பில் புதிய நீதிக்கட்சி ஏ.சி. சண்முகம், தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக் அப்துல் ரஹ்மான், அ.தி.மு.க. வேட்பாளராக வழக்கறிஞர் செங்குட்டுவன் ஆகியோர் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளராக விஜய் இளஞ்செழியன் களமிறங்கியுள்ளார்.

துரைமுருகன் தன் மகனுக்காக எதிர்பார்த்த தொகுதி இது. ஆனால், கட்சித் தலைமை, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிவிட்டது. அந்தப் புகைச்சல் தி.மு.க. பிரசாரத்தில் எதிரொலிக்கிறது. துரைமுருகனின் ஆதரவாளர்கள் பலரும் ஏனோ தானோ என்றுதான் வேலை செய்கிறார்கள். தேர்தல் நேரத்தில் நிர்வாகிகள் சிலரைக் கட்சியைவிட்டு நீக்கியது, தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் அப்துல் ரஹ்மான் அதைப்பற்றிக் கவலைப்படாமல் சுற்றிச் சுழல்கிறார். ஜமாத் ஓட்டுகள் எப்படியும் தன்னைக் கரை சேர்த்துவிடும் என்பது அப்துல் ரஹ்மானின் நம்பிக்கை. ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகளில் பெருவாரியாக உள்ள முஸ்லிம் ஓட்டுக்கள் அப்துல் ரஹ்மானுக்குப் ப்ளஸ்.

செலவைப் பற்றி கவலையே படாமல் பலம்காட்டுகிறார் ஏ.சி.சண்முகம். பா.ம.க-வும், தே.மு.தி.க-வும் இங்கே சளைக்காமல் வேலை செய்கின்றனர். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சண்முகத்துக்காகத் தொகுதியில் ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள். இதனால், ஏறுமுகத்தில் நடைபோடுகிறார் சண்முகம். படித்தவர்கள், மத்தியத்தர வர்க்கத்தினர் வாக்குகளை மொத்தமாக அள்ள முடியும் என்று சண்முகம் நினைக்கிறார்.

போட்டி இவர்கள் இருவருக்குள் பலமாக இருக்க... திருவிழாவில் காணாமல்போன குழந்தையைப்போல தவிக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவன். மேயர் கார்த்தியாயினி மீதுள்ள அதிருப்தி, சர்ச்சைக்குரிய வேட்பாளர், பிரசாரத்தில் சுணக்கம், மின்வெட்டு பிரச்னை என அத்தனை பாரங்களும் அ.தி.மு.க. வேட்பாளர் மீது ஏறியுள்ளது. அதை சுமக்கவே முடியாமல் தடுமாறுகிறார் அவர்.
காங்கிரஸ் காட்சியோ இவர்கள் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனி ரூட்டில் 'உங்கள் பொன்னான வாக்குகளை...’ என்றபடி சுற்றி வந்துகொண்டு இருக்கிறது. வேலூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் போட்டியிடாததால் ஆம் ஆத்மி வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

கூட்டணி பலம், மோடியின் அலை, சண்முகத்தின் பண பலம், சுறுசுறுப்பான தேர்தல் வேலைகள் என அத்தனையும் சேர்ந்து வேலூர் தொகுதி சண்முகத்துக்கு சபாஷ் சொல்ல வைக்கும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 3:57 pm

40 தொகுதிகளின் நிலவரம் Krishnagiri
 
ஆந்திரா, கர்நாடகம் ஆகிய இரண்டு மாநில எல்லைகளைத் தொடும் தொகுதி கிருஷ்ணகிரி.

பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம.க. சார்பில் ஜி.கே.மணியும், அ.தி.மு.க-வில் அசோக்குமாரும், தி.மு.க-வில் சின்னபில்லப்பாவும் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் டாக்டர் செல்லக்குமார்.

பி.ஜே.பி. கூட்டணி அமைவதற்கு முன்பே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஜி.கே.மணி. அதனால் கடந்த நான்கு மாதங்களாக தொகுதியை நான்கு ரவுண்டு வந்துவிட்டார். மணி மாநிலத் தலைவராகவும் இருப்பதால் தொகுதி மக்களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறது. மோடி, விஜயகாந்த்தின் பிரசாரம் மணிக்கு கூடுதல் பலம். 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சிதான் அமையும். பா.ம.க. இங்கே ஜெயித்தால் நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்!’ என்று கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்கிறது பா.ம.க. அதற்கும் நல்ல ரெஸ்பான்ஸ்.

அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார் தொகுதி முழுக்க அறிமுகம் இல்லாதவர். அமைச்சர் கே.பி.முனுசாமியின் தீவிர ஆதரவாளர். அ.தி.மு.க-வுக்காக இருக்கும் வாக்கு வங்கி எப்படியும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை முனுசாமிக்கு. கிராமங்களில் ஆளுங்கட்சிக்கு எதிரான பிரச்னைகள் இங்கேயும் எதிரொலிக்கிறது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லாமல், அசோக்குமாரும் முனுசாமியும் கைகோத்தபடி தொகுதியை வலம் வருகிறார்கள்.

இங்கே சிட்டிங் எம்.பி-யாக இருந்தவர் தி.மு.க-வின் சுகவனம். ஸ்டாலினுக்கு செல்லப்பிள்ளை. ஆனாலும், தொகுதிக்குள் இவருக்கு நல்லபிள்ளை என்ற பெயர் இல்லை. அதனால்தான் மாநில அரசியலில் கவனம் செலுத்துவதாகச் சொல்லி ஒதுங்கிவிட்டார் சுகவனம். தற்போது வேட்பாளர் ஆகியிருக்கும் சின்னபில்லப்பா கட்சிக்காரர்களுக்கே அறிமுகம் இல்லாத புதுமுகம். சுகவனம் மீது இருக்கும் அதிருப்திகள் சின்னபில்லப்பாவுக்குத்தான் சிக்கலை உண்டாக்கும்.

ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் காங்கிரஸுக்கு கணிசமான வாக்கு வங்கி உண்டு. அதை நம்பித்தான் அந்தக் கட்சி செல்லக்குமாரை அங்கே நிறுத்தியிருக்கிறது. செல்லக்குமாரும் பிரசாரத்தைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறார். கௌரவமான வாக்குகளுடன் நிச்சயமாக டெபாஸிட் வாங்குவார் என்று அடித்துச் சொல்கிறார்கள் கதர் வேட்டிகள். அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இங்கே குறிப்பிட்ட செல்வாக்கு உண்டு. தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்​சந்திரன் மீது அ.தி.மு.க. ஆட்சியில் வழக்குகள் பாய்ந்தது. இதனால் கோபத்தில் இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள். கிருஷ்ணகிரியில் அசோக்குமார்தான் அசத்துகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 3:58 pm

40 தொகுதிகளின் நிலவரம் Dharmapuri
தர்மபுரியில் நடக்கப் போவது சாதிப் போட்டி. இந்தத் தொகுதியில் வன்னியர்களும் தாழ்த்தப்பட்டவர்களுமே அதிகம்.
 அ.தி.மு.க. சார்பில் மோகனும் தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.பி-யான தாமரைச்செல்வனும் பா.ம.க. சார்பில் அன்புமணியும் காங்கிரஸில் ராமசுகந்தனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் அனைவருமே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

ஓர் ஆண்டுக்கு முன்பே இங்கு அன்புமணியை நிறுத்துவது என்று முடிவெடுத்து அதற்கான வேலைகளை பா.ம.க-வினர் செய்து வந்தனர். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நாளே தர்மபுரியின் ராஜா பேட்டையில் வீடு எடுத்து, பிரசாரம் செய்துவருகிறார் அன்புமணி. அவருக்கு ஆதரவாக அவரது தந்தை ராமதாஸ், சகோதரி கவிதா, மனைவி சௌம்யா எனக் குடும்ப உறுப்பினர்கள் தீவிரப் பிரசாரம் செய்கின்றனர். சாதி பலம், ராமதாஸின் மகன் என்ற அந்தஸ்து, முன்னாள் அமைச்சர் என்ற அறிமுகம் என்பவை ப்ளஸ். தாழ்த்தப்பட்டவர்களின் எதிர்ப்பு மைனஸ். தர்மபுரியில் அன்புமணி நிற்கிறார் என்பதைவிட, தர்மபுரியில் பா.ம.க. ஜெயிக்க வேண்டும் என்பது அக்கட்சியினரின் மானப் பிரச்னையாக மாறி உள்ளதால் பாட்டாளிகளின் தேர்தல் வேலைகள் பரபரப்பாக இருக்கின்றன.

அ.தி.மு.க. சார்பாகப் போட்டியிடும் மோகன், முதல்வரின் நலத்திட்டங்களைச் சொல்லி பிரசாரம் செய்கிறார். அரசு மீது வன்னியர்களிடம் இருக்கும் கோபம், குடிநீர் வசதி செய்து தராமல் இருப்பது ஆகியவை அ.தி.மு.க-வுக்குப் பாதகமாக இருக்கிறது.
தி.மு.க. சார்பாகப் போட்டியிடும் தாமரைச்செல்வனுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கலப்புத் திருமணம் செய்தவர். இவரது மனைவி கீதா தலித் பகுதிகளுக்குச் சென்று, 'உங்க வீட்டு மருமகனுக்குத்தான் நீங்கள் ஓட்டுப் போட வேண்டும்’ என்று பிரசாரம் செய்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதியில் தாமரைச்செல்வன் பெரிதாகத் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க-வினர் பிரசாரம் செய்கிறார்கள்.

காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ராமசுகந்தன், முன்னாள் அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன்.  ''எங்க அப்பா இந்தத் தொகுதியில் போட்டியிட்டு உங்களுக்கெல்லாம் பாடுபட்டாரு. அவர் பையனான எனக்கு ஆதரவு தாங்க'' என்று அப்பா பெயரை வைத்தே வாக்குக் கேட்டு வருகிறார். இது ஒன்று மட்டுமே இவருக்கு ப்ளஸ்.
 
இறுதி நிலவரப்படி, பி.ஜே.பி. கூட்டணி பலம், சாதி செல்வாக்கு, பா.ம.க-வினரின் பலமான வேலைகள் என அன்புமணியின் கையே ஓங்கியிருக்கிறது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக