புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10 
11 Posts - 79%
heezulia
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10 
3 Posts - 21%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10 
98 Posts - 42%
ayyasamy ram
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10 
87 Posts - 38%
i6appar
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 2:43 am


அஞ்சையும் அடக்கி ஆற்ற லுடையனாய அநேக காலம்

வஞ்ச மிள் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு

வெஞ்சின முகங்க ளாகி விசையரு பாயுங்கங்கை

செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே



- திருஞானசம்பந்தர்

பொருள் அகப்பகையாகிய ஐம்புலன்களையும் அடக்கி, ஆற்றல் கொண்டவனாக பல ஆண்டுகள் தூய தவமியற்றிய பகீரதனுக்காக, பன்முகங்களுடனும் அடங்காத ஆரவாரத்துடனும் விரைந்து வந்த கங்கையை, திருச்சேறை வாழ் செந்நெறிச் செல்வனார், தன் செஞ் சடையில் ஏற்று அருள் புரிந்தார்!

கங்கைக்குத்தான் எத்தனை பெயர்கள்? பகீரதன் பூமிக்கு அழைத்து வந்ததால் பாகீரதி; சிவனாரின் சடையில் இருப்பதால் ஜடாமங்கை; ஜான்ஹவி முனிவரின் செவி வழியே வந்ததால் ஜான்ஹவி (சானவி); தேவலோகத்தில் வாழ்வதால் சுரநதி; பக்தர்களுக்கு வரம் அளிப்பதால் வரநதி; மூவுலகிலும் பாய்வதால் திரிபதகாமினி; மாந்தாதாவின் புதல்வி என்பதால் மந்தாகினி... எனப் பல பெயர்களுடன் திகழ்கிறாள் கங்காதேவி.

ஆயிரம் முகங்கள், ஆயிரமாயிரம் கரங்களுடன் கங்காதேவி திகழ்வதாக புராணங்கள் போற்றுகின்றன. 'ஆயிரம் முகத்து நதி பாலன்' என்று முருகப் பெருமானைப் பாடுகிறார் அருணகிரிநாதர்.

பர்வதராஜனின் இரண்டு மகள்களில் மூத்தவள் கங்கை; இளையவள் பார்வதி. இவர்களில்... பெண்ணாகவும் நதியாகவும் திகழ்பவள் கங்கை! பகீரதனின் வேண்டு கோளை ஏற்று, இவளை தன் சடையில் தாங்கிக் கொண்ட சிவனாரின் திருக்கோலமே ஸ்ரீகங்காதரர்!

'யோக பட்டயம் தரித்து, அர்த்த ஸ்வஸ்திகாசனத்தில் தட்சிணாமூர்த்தி போல் சிவனார் அமர்ந்திருக்க... அவரின் மேலிரு கரங்களில் மான்- மழு; கீழிரு கரங்களில் சின்முத்திரை, வரத முத்திரையும் திகழும். விரிசடையில்... ஆமை, மீன் மற்றும் முதலை முதலான உயிரினங்கள் தன்னகத்தே கொண்ட கங்கையின் திருமுகம் தென்படும்' என்று ஸ்ரீகங்காதரரின் திருவடிவை வர்ணிக்கிறது சிவபராக்ரமம்.

ஸ்ரீநடராஜர் மற்றும் ஸ்ரீபிட்சாடனர் திருவடிவங்களில் திகழும் கங்காவின் திருவடிவம்... உடலின் கீழ்ப்பகுதி மீன் அல்லது முதலையின் உடல் அமைப்புகளுடனும் மேற்பகுதி கரம்கூப்பித் தொழும் பெண்ணைப் போலவும் அமைந்திருக்கும்.

'கங்கா விசர்ஜனர்' எனும் திருவடிவில் அர்த்த பத்மா சனத்தில் காட்சி தருவார் ஈசன். அவரின் வலது மேல் கரம் சடையில் இருந்து கங்கையை எடுத்து வெளியே விட; வலது கீழ்க் கரம் குடையைப் பிடித்திருக்கும். பெருமானின் இடக் கரங்கள் சூலம் மற்றும் மான் ஆகிய வற்றுடன் திகழும். அருகில்... கங்கை வெளிப்படுவதைக் கண்டு ஊடல் கொண்டு நிற்பாள் உமாதேவி. இந்தத் திருவடிவில் சிவனாரின் பீடத்தில் நிற்கும் நந்தி வித்தியாசமான கோலத்தில் திகழ்வார். அதாவது, கங்கை நீரை தன் வாயில் ஏந்தி, அதில் ஆயிரத்தில் ஒரு பங்கை மட்டும் வெளியில் விடும் நிலையில் இருப்பார்! அருகில் பகீரதனும் நிற்பதைக் காணலாம். இந்தத் திருவடிவம் பல ஆலயங்களில் ஓவியமாகத் திகழ்கிறது.

ஆகமங்களும் புராணங்களும் ஸ்ரீகங்காதரர் வடிவத்தைப் பெரிதும் போற்றுகின்றன. திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானவ ஸ்வாமி கோயிலுக்கும் மேலே (மலையில்)... லலிதாங்குர பல்லவ கிரஹ ஈச்வரம் எனும் பல்லவர் காலக் குடைவரைக் கோயிலில், புடைப்புச் சிற்பமாக உள்ள ஸ்ரீகங்காதரரை தரிசிக்கலாம். வலக் காலை பூமியில் ஊன்றி, இடக் காலை சற்றே மடித்து, முயலகன் மீது வைத்துள்ளார் இவர். இவரின் வலது மேற்கரத்தில் பாம்பு; இடது மேற்கரம் சடைக் கற்றையை விரித்துப் பிடிக்க... அதில் பெண் வடிவில் பிரவாகிக்கும் கங்கையை தரிசிக்கலாம்.

காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீகங்காதரர் வடிவில், உமாதேவி தன் வலக்கரத்தை ஈசனின் கால் மீது வைத்தும்; இடக்கரம் ஆச்சரிய முத்திரையுடனும் விளங்க காட்சி தருகிறாள். இந்த வடிவத்தில், சிவனாருக்கு ஆறு கரங்கள்!

மாமல்லபுரம் ஸ்ரீஸ்தலசயன பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் (மலையில்) உள்ள பாறைச் சிற்பத்தில், எலும்பும் தோலுமாக இளைத்து ஒற்றைக் காலில் நின்று தவம் செய்கிறான் பகீரதன். அவனுக்கு அருள் புரியும் சிவனார், கங்கையை பூமியில் ஓட விடுகிறார். பெருக்கெடுக்கும் கங்கையைக் காண வரும் யானைக் கூட்டத்தையும், ஜான்ஹவி முனிவரின் ஆசிரமம் மற்றும் சிங்கம், புலி முதலான வன விலங்குகளையும் இந்த சிற்பத்தில் காணலாம். காஞ்சி- ஸ்ரீமதங்கேஸ்வரர் கோயிலில், ஸ்ரீகங்காதரரின் சுதைச் சிற்பத்தை தரிசிக்கலாம்.

புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் ஆலயம், முற்கால பாண்டியர்களால் அமைக்கப்பட்ட குடவரைக் கோயில் ஆகும். இந்தக் கோயிலின் அர்த்த மண்டபத்தில், வடக்கு நோக்கிய கங்கைகணபதியையும் தெற்கு நோக்கிய ஸ்ரீகங்காதரரையும் தரிசிக்கலாம். இந்த வடிவில், சிவ பெருமான் தன் வலக்கரத்தால் சடையைப் பிடித்திருக்க... கால் மடக்கி, கீழ் நோக்கிப் பாய்கிறாள் கங்காதேவி!

சோழர் காலத்து கங்காவிசர்ஜன மூர்த்தி வடிவங்களை மயிலாடுதுறை, திருக்கடவூர், திருப் பனந்தாள், திருமீயச்சூர் முதலான ஆலயங்களின் கோஷ்டத்தில் தரிசிக்கலாம். இந்தத் திருவடிவில்... சிவனாரின் தலையில் உள்ள கங்கையைக் கண்டு உமையவள் கோபம் கொள்வது போல் சிற்பம் வடித்துள்ளனர். கோபத்தில் முகம் தாழ்த்தியிருக்கும் அம்பிகையின் தோளைத் தொட்டு, அவளின் முகத்தை நிமிர்த்தி அணைத்தபடி, ஊடலைகளைய முயல்பவராகக் காட்சி தருகிறார் ஈசன். இதனை 'சூடினார் கங்கை யாளை சூடிய துழனி கேட்டாங்கு ஊடினாள் நங்கை யாளும் ஊடலை ஒழிக்க வேண்டி பாடினார் சாம வேதம்...' என்கிறார் திருநாவுக்கரசர்.

காசி ஸ்ரீவிஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீகங்காதீஸ்வரர் சந்நிதி உள்ளது. பகீரதன் வழிபட்டதால் ஸ்ரீபகீரதேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டு திகழ்கிறார் ஈசன். இவரை கங்கை வழிபட்டு பேறுபெற்றதாக காசிக்காண்டம் எனும் நூல் தெரிவிக்கிறது.

சென்னை- புரசைவாக்கம் ஸ்ரீகங்காதீஸ்வரர் ஆலயத்தில் பகீரதனின் வடிவம் உள்ளது. இதேபோல், காஞ்சி சர்வ தீர்த்தக் கரையில் உள்ள ஸ்ரீகங்காதீஸ்வரர் ஆலயம், தக்கோலம் (திருவூறல்).கொள்ளிடக் கரையில் உள்ள கோவிந்தபுத்தூர் ஸ்ரீகங்காஜ டேஸ்வரர் ஆலயம், சேலம்- ஆத்தூர் அருகில் உள்ள விரகனூர் ஸ்ரீகங்காசுந்தரர் ஆலயம் ஆகியன குறிப்பிடத் தக்கவை.

'பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி கண்டு ஆர் அருள் புரிதலை கொள் கங்கை சடையேற்ற அரன்', 'கங்கையாளை கமழ்சடை மேற்கரந்தான்' ஆகிய வரிகளில் (திருமுறை), கங்காதரர் வடிவம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் மகாமகக் குளத்துக்கு அருகில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம், திரு விடைமருதூர், தாராசுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய தலங்களில் கங்காதேவிக்குத் தனிச் சந்நிதியே அமைந்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக