புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_m10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10 
12 Posts - 86%
Manimegala
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_m10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_m10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_m10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_m10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_m10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10 
11 Posts - 4%
prajai
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_m10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10 
9 Posts - 3%
Jenila
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_m10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_m10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_m10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_m10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_m10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_m10உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 31, 2014 7:06 am



உத்தரபிரதேசத்தில் தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அகிலேஷ் அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. மத்திய அரசு ஒருபுறம் உ.பி. அரசிடம் அறிக்கை கோரியதோடு, சிபிஐ விசாரணைக்கும் கோடிட்டு காட்டியுள்ள  நிலையில், மாநிலத்தில் போராட்டங்களும் வெடித்துள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரிகள், கடந்த செவ்வாய் அன்று காணாமல் போனார்கள். இது குறித்து பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொள்ள காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  UP%20village
இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டனர்.

காவல்துறையினரின் அக்கறையின்மையினாலே இந்த கொடூர செயல் நடத்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் 7 பேர் வழக்கு பதிவு செய்தனர்.

2 காவலர்கள் பணி நீக்கம்

மேலும், அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் சார்வேஷ் யாதவ் மற்றும் ராக்‌ஷாபால் யாதவ் ஆகிய இரண்டு பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

3 வது குற்றவாளி கைது


இந்நிலையில் குற்றவாளிகள் 7 பேரில் சர்வேஸ் மற்றும் பப்பு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், அவதேஷ் யாதவ் என்ற 3வது குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கை வாபஸ் பெறுமாறு தாக்குதல்

இதனிடையே, புகாரை வாபஸ் வாங்குமாறு குற்றவாளிகளில் ஒருவரின் தந்தை, அச்சிறுமிகளின் தாயாரை வீடு புகுந்து தாக்கியதில் அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.  இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இதனால் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், உத்தரபிரதேசத்தில் ஜனாதிபதிஉ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Rajnath%20singh%20%282%29 ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தினார்.

விளக்கம் கேட்ட மத்திய அரசு

இந்நிலையில், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேச அரசிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நடந்த சம்பவம் குறித்து  அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து  உ.பி. அரசும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. அதில், இந்த சம்பவம் தொடர்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேரை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 2 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை


இதனிடையை பிரேத பரிசோதனை அறிக்கையில் சகோதரிகள் இருவரும் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

'குற்றத்துக்கு துணைபோன போலீஸ்'


 இதனிடையே கொல்லப்பட்ட சகோதரிகளில் ஒருவரது தந்தை அளித்துள்ள பேட்டியில், " சிறுமிகள் இருவரும் உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வதாக கூறி, வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு போய் சேரவில்லை; அவர்களை உள்ளூரை சேர்ந்த சிலர் கடத்தி சென்றுள்ளதாக அச்சிறுமிகளின் சகோதரன் வந்து சொன்னான்.

இதனையடுத்து கடத்தி சென்றதாக தெரியவந்தவரது வீட்டிற்கு சென்று இதுகுறித்து நாங்கள் கேட்டபோது, கடத்தியது உண்மைதான் என்றும், அவர்களை தாங்கள்தான் தங்களது பிடியில் வைத்திருப்பதாகவும், ஆனால் விடுவிக்க முடியாது என்றும் திமிராகவும் சொன்னார்கள். அப்போது அவர்களுடன் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள காவலர்களில் ஒருவரும் உடன் இருந்தார்.

நாங்கள் உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த உடனேயே போலீஸார் துரிதமாக செயல்பட்டிருந்தால், அவர்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அவர்கள் எங்களை வீட்டிற்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்" என குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் ஒரு பலாத்காரம்

இதனிடையே மேற்கூறிய சம்பவம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் நீங்குவதற்குள், உ.பி.யில் மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறி உள்ளது தெரியவந்துள்ளது.  ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் தொகுதி அசாம்கார். இங்குள்ள சராய்மீர் பகுதியில் 17 வயது சிறுமியை, 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் 3 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளா.

தலித் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்ட படாயூன் பகுதியும் சமாஜ்வாதி கட்சி வலுவாக உள்ள தொகுதியாகும். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி வென்ற 5 தொகுதிகளில் படாயூனும் ஒன்று.

உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Rape%20protest%281%29
வெடித்தது போராட்டம்

இவ்வாறு முலாயம் சிங் குடும்பத்தினர் செல்வாக்காக உள்ள பகுதிகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்ற சமூகத்தினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மாநிலம் முழுவதும் பலாத்கார சம்பவத்தை கண்டித்து பரவலாக போராட்டங்கள் வெடித்துள்ளன.
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Mulayamsingh%2825%29பலாத்கார தடுப்பு சட்டத்தை எதிர்த்தவர் முலாயம்

சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவரப்பட்டபோது முலாயம் சிங் யாதவ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்." பையன்கள் என்றால் தவறு செய்யத்தான் செய்வார்கள். அதற்காக அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பது எப்படி சரியாகும்?. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது" என கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

தினமும் 10 பலாத்காரம்: போலீஸ் ஐ.ஜி. ஒப்புதல்


இதனிடையே உ.பி. மாநிலத்தில் தினமும் சராசரியாக 10 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக மாநில போலீஸ் ஐ.ஜி. ஆஷிஸ் குப்தா கூறியுள்ளது, அரசின் கையாலாகாததனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில்  ஐ.ஜி.யின் இந்த பேட்டியால் முதலமைச்சர் அகிலேஷ் கடும் கோபமடைந்துள்ளார்.

 'ரேப் க்ரைசிஸ் செல்':  மத்திய அரசு அதிரடி


இந்நிலையில் உ.பி. பாலியல் பலாத்கார சம்பவத்தில் போலீஸாரின் மெத்தன போக்கு குறித்து எழுந்துள்ள உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Menaka%281%29கண்டனங்களை தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்களில் துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்காக " ரேப் க்ரைசிஸ் செல்' ( Rape crisis cell) என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணை



மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்தினர்,  குற்றவாளிகள் முலாயம் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறை விசாரணை நியாயமாக நடைபெறாது என அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் கொல்லப்பட்ட சகோதரிகளின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் மேனகா தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியால் அகிலேஷ் ஆவேசம்

இந்நிலையில் ஐ.ஜி.யின் மேற்கூறிய பேட்டி,  மத்திய அரசு தலையிடும் அளவுக்கு சென்ற, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு  நிலை போன்றவற்றால், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் விழி பிதுங்கிபோய் உள்ளார்.

இப்பிரச்னை தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அகிலேஷ் யாதவிடம், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது," நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்தானே...? பாதுகாப்பாக உணருகிறீர்களா?" என ஆவேசமுடன் பதிலளித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் உ.பி.யில் பெற்ற அபார வெற்றியை தொடர்ந்து, அடுத்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என பா.ஜனதா காய்நகர்த்தி வரும் நிலையில், அகிலேஷின் இந்த பக்குவமில்லாத அணுகுமுறையும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கும் இதே ரீதியில் சென்றால்,  அடுத்த சட்டசபை தேர்தல் வரைக்குமாவது சமாஜ்வாதி அரசு ஆட்சியில் இருக்குமா என்பது கேள்விக்குறியாகிவிடும்.

விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக