புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
91 Posts - 63%
heezulia
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
6 Posts - 4%
eraeravi
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
1 Post - 1%
viyasan
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
283 Posts - 45%
heezulia
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
19 Posts - 3%
prajai
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
7 Posts - 1%
mruthun
லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_m10லீஸ்... வாடகை... எது நல்லது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லீஸ்... வாடகை... எது நல்லது


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Apr 13, 2014 12:39 pm

சொந்த வீட்டில் குடியிருப்பவர் களுக்கு இருக்கும் பிரச்சினைகளை விட, வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்குப் பிரச்சினைகள் அதிகம் என்பதில் இருவேறு கருத்து இல்லை. சம்பளம் உயருகிறதோ இல்லையோ, ஆண்டுதோறும் வீட்டின் வாடகை மட்டும் கண்டிப்பாக உயர்ந்துவிடும். இதற்கு வீட்டின் உரிமையாளரைக் குறை சொல்வதில் பலன் இல்லை. ஏனென்றால், வீடு அமைந்திருக்கும் பகுதி, வீட்டில் இருக்கும் வசதிகள், போக்குவரத்து சாதகங்கள் ஆகியவைதான் வீட்டின் வாடகையை நிர்ணயிக்கும் காரணிகளாக அமைகின்றன. சென்னை போன்ற பெரு நகரங்களில், அலுவலகத்திற்கு அருகில் வீடு கிடைப்பது பெரும்பாலும், சிலருக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாக இருக்கிறது. ஆனால், இதற்காக அவர்கள் கொடுக்கும் வாடகை மிக அதிகமாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, சொந்தமாக வீடு வாங்க முடியாதவர்களுக்கு, வாடகை வீட்டில் இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் கணிசமான தொகையை அவர்கள் வாடகைக்காகச் செலவிடுகின்றனர். இந்த விஷயத்தை வேறு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால், இதில் உள்ள சாதகமான விஷயம் நமக்குப் புலப்படும். அதுதான் லீஸ். வீட்டை போக்கியம் அல்லது ஒத்திக்கு எடுப்பது.

புறநகர்ப் பகுதிகளில் வாடகைக்கு இருந்து கொண்டு நகர்ப் பகுதிகளுக்கு அலுவலகம் செல்பவர்களுக்கு லீஸ் வீடு கிடைப்பதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது. நகர்ப் பகுதிகளைவிடப் புறநகர் பகுதிகளில் ஏராளமான வீடுகள் லீசுக்குக் கிடைக்கின்றன. ஒருமுறை, குறிப்பிட்ட தொகையை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்து விட்டு, அதற்கான ஒப்பந்தத்தைப் போட்டவுடன், அந்த வீடு நமக்குச் சொந்த வீடு போன்றே மாறிவிடுகிறது என்பது சாதகமான விஷயம். மாதாமாதம் ஒரு கணிசமான தொகையை வாடகையாகக் கொடுப்பதில் இருந்து விடுதலையும் கிடைத்துவிடும்.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. வீட்டின் வசதி வாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்வதுடன், அந்த வீட்டில் நாம் எவ்வளவு காலம் இருக்க முடியும் என்பதையும் ஆராய்ந்த பின்னரே, அந்த வீட்டை லீசுக்கு எடுக்க வேண்டும். பொதுவாக, 11 மாதங்கள் என்ற அளவில் தான் லீஸ் ஒப்பந்தம் போடப்படும். எனவே, 11 மாதங்கள் முடிவடைந்த பின்னர், இரு தரப்பினரும் விரும்பினால், ஒப்பந்தத்தை மேலும் 11 மாதத்திற்கு நீட்டித்துக்கொள்ளலாம். சில வீட்டின் உரிமையாளர்கள் லீஸ் தொகையை அதிகரித்துக் கொடுக்கும்படி கேட்பார்கள். அப்போது லீஸ் எடுப்பவர் விரும்பினால், அதே வீட்டில் இருக்கலாம். இல்லாவிட்டால், லீஸ் தொகையை முழுதாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு வேறு வீட்டை லீசுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

இதில் சாதகமான விஷயம் என்னவென்றால், வாடகை செலுத்த வேண்டியதில்லை என்பதால், லீஸ் எடுத்தவருக்கு, 11 மாதத்திற்கான வாடகைத் தொகை மிச்சமாகும். உதாரணமாக ஆறாயிரம் ரூபாய் வாடகை செலுத்தும் நபர், அந்த வீட்டை லீசுக்கு எடுக்கும் பட்சத்தில், அவருக்கு 11 மாதங்களில் சுமார் 66 ஆயிரம் ரூபாய் மிச்சமாகிறது. அந்த வீட்டிற்கு 3 லட்சம் ரூபாய் லீஸ் தொகையாகக் கொடுத்திருந்தால், வாடகை செலுத்தாத காரணத்தால் மீதமான 66 ஆயிரம் ரூபாயை, அவரது முதலீட்டுக்குக் கிடைத்த வட்டியாகக் கருதலாம். இது வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கும் வட்டித் தொகையை விட மிகவும் அதிகம் என்பதில் சந்தேகமில்லை.

இதேபோல் ஒவ்வொரு மாதமும் அவருக்கு ஆறாயிரம் ரூபாய் மிச்சமாகும் பட்சத்தில், அதைச் சேமித்து, ஓரிரு ஆண்டுகளில் 4 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் செலுத்தி, வேறொரு வீட்டை லீசுக்கு எடுத்து மாறிக்கொள்ளலாம். எனவே, வாடகைத் தொகையைச் சேமித்து லீஸ் தொகையை அதிகரிப்பதன் மூலம், மூலதனம் அதிகரிப்பதுடன், பின்னாளில் அதனைக் கொண்டே புதிய வீட்டை வாங்குவதற்கான முன்பணமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு வீட்டை லீசுக்கு எடுப்பதால் பல்வேறு சாதகங்கள் இருந்தாலும், சில பாதகங்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், லீஸ் எடுக்கும்போது போடப்படும் ஒப்பந்தத்தைச் சரியாக வடிவமைத்துக்கொண்டால், பல பிரச்சினைகளை லீஸ் எடுப்பவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக, லீஸ் ஒப்பந்தம் போடும்போதே, வீட்டுக்கு வெள்ளையடிப்பது, வீட்டின் பராமரிப்பு செலவு ஆகியவற்றிற்கு வீட்டின் உரிமையாளரே பொறுப்பு எனத் தெளிவாகக் குறிப்பிட்டுவிட வேண்டும்.

மேலும், வீட்டைக் காலி செய்ய விரும்பினால், இரு தரப்பினரும், எத்தனை மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, வீட்டின் உரிமையாளருக்கு வீடு தேவைப்படும் பட்சத்தில், லீசுக்கு இருப்பவருக்குச் சுமார் 3 மாதங்கள் வரை கால அவகாசம் கொடுத்து விட்டுக் காலி செய்யச் சொல்லலாம். அதேபோல், வீட்டை லீஸ் எடுத்தவருக்குப் பணம் தேவைப்படும் பட்சத்தில், பணத்தைத் திருப்பித் தர, வீட்டின் உரிமையாளருக்கு 3 மாதங்கள் அவகாசம் தர வேண்டும். இதுதான் பரஸ்பர லீஸ் ஒப்பந்தமாகப் பெரும்பாலும் இருந்து வருகிறது.

ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் போது, ஏதாவது சிக்கல் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக வீட்டைக் காலி செய்து விட்டு வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட முடியும். ஆனால், லீசுக்கு வீடு எடுக்கும் பட்சத்தில், அதுபோல் எளிதாக மாறுவதில் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. எனவே, ஒரு வீட்டை லீசுக்கு எடுப்பதற்கு முன்பாக ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து விட்டே முடிவு செய்ய வேண்டும்.

வாடகைக்குக் குடியிருக்கும் போது, ஏதாவது சிக்கல் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக வீட்டைக் காலி செய்து விட்டு வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட முடியும்.(thehindu)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 13, 2014 6:46 pm

கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி திரு சாமி!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 13, 2014 7:18 pm

கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி சாமி! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 14, 2014 3:49 pm

வாடகை என்றால் ஓராண்டு முடிந்ததும்
பத்து சத வீத வாடகை உயர்த்துவார்கள்
-
லீசில் வாடகை உயர்வு என்பது இருக்காது
என்பதும் கூடுதல் நன்மை...!
-


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 14, 2014 4:44 pm

ayyasamy ram wrote:[link="/t109397-topic#1058344"]வாடகை என்றால் ஓராண்டு முடிந்ததும் பத்து சத வீத வாடகை உயர்த்துவார்கள். லீசில் வாடகை உயர்வு என்பது இருக்காது என்பதும் கூடுதல் நன்மை...!

சென்னையில் 10% வாடகை உயர்வெல்லாம் கிடையாதுங்க. எவ்வளவு டிமாண்ட் இருக்கோ அதைப்பொறுத்துதான் 'உயர்வுத்தொகை' முடிவு செய்கிறார்கள்.

அதேமாதிரி 11 மாதத்துக்கு அப்புறம் உயர்வெல்லாம் கிடையாது. எப்பல்லாம் முடியுதோ அப்பல்லாம் உயர்வுதான்.

இன்னும் சொல்லப்போனால் இருக்குறவன காலி பண்ணச்சொல்லிட்டு புதுசா ஒருத்தன கொண்டுவர்றாங்க. அப்பதானே வாடகையை இஷ்டத்துக்கு உயர்த்தமுடியும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 14, 2014 5:08 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Waajid M A
Waajid M A
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 22/09/2010

PostWaajid M A Tue Apr 15, 2014 12:09 pm

ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்கள். சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம். நண்பர் ஒருவர் வங்கிக் கடனில் ஒரு பிளாட் வாங்கினார். அதை ஒத்திக்கும் விட்டு விட்டார். வங்கிக் கடனை கட்டாமல் தலைமறைவாகி விட்டார். வங்கி அதிகாரிகள் பொருட்களைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டு ஏலத்தில் கொண்டு வந்து விட்டனர். பணம் முழுவதும் அரோகரா. பிளாட் வாங்கும்போது தான் இது அவ்வப்போது நடக்கிறது. எச்சரிக்கை. தெரியாத நபர்களிடம் புரோக்கர்கள் மூலமாக வாங்கும் போது இது அடிக்கடி நடக்கிறது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 15, 2014 3:16 pm

சாமி wrote:[link="/t109397-topic#1058352"]
ayyasamy ram wrote:[link="/t109397-topic#1058344"]வாடகை என்றால் ஓராண்டு முடிந்ததும் பத்து சத வீத வாடகை உயர்த்துவார்கள். லீசில் வாடகை உயர்வு என்பது இருக்காது என்பதும் கூடுதல் நன்மை...!

சென்னையில் 10% வாடகை உயர்வெல்லாம் கிடையாதுங்க. எவ்வளவு டிமாண்ட் இருக்கோ அதைப்பொறுத்துதான் 'உயர்வுத்தொகை' முடிவு செய்கிறார்கள்.

அதேமாதிரி 11 மாதத்துக்கு அப்புறம் உயர்வெல்லாம் கிடையாது. எப்பல்லாம் முடியுதோ அப்பல்லாம் உயர்வுதான்.

இன்னும் சொல்லப்போனால் இருக்குறவன காலி பண்ணச்சொல்லிட்டு புதுசா ஒருத்தன கொண்டுவர்றாங்க. அப்பதானே வாடகையை இஷ்டத்துக்கு உயர்த்தமுடியும்.

நிஜம் தான் அண்ணா

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Apr 16, 2014 11:58 am

Waajid M A wrote:[link="/t109397-topic#1058431"]ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்கள். சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம். நண்பர் ஒருவர் வங்கிக் கடனில் ஒரு பிளாட் வாங்கினார். அதை ஒத்திக்கும் விட்டு விட்டார். வங்கிக் கடனை கட்டாமல் தலைமறைவாகி விட்டார். வங்கி அதிகாரிகள் பொருட்களைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டு ஏலத்தில் கொண்டு வந்து விட்டனர். பணம் முழுவதும் அரோகரா. பிளாட் வாங்கும்போது தான் இது அவ்வப்போது நடக்கிறது. எச்சரிக்கை. தெரியாத நபர்களிடம் புரோக்கர்கள் மூலமாக வாங்கும் போது இது அடிக்கடி நடக்கிறது.

அதற்கு, நாம் முன்னரே வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று வீட்டின் உரிமையாளரிடம் சார்பதிவாளர் அலுவலத்தில் வில்லங்க சான்று வாங்கி வர சொல்ல வேண்டும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 16, 2014 12:32 pm

M.M.SENTHIL wrote:[link="/t109397-topic#1058529"]
Waajid M A wrote:[link="/t109397-topic#1058431"]ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்கள். சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம். நண்பர் ஒருவர் வங்கிக் கடனில் ஒரு பிளாட் வாங்கினார். அதை ஒத்திக்கும் விட்டு விட்டார். வங்கிக் கடனை கட்டாமல் தலைமறைவாகி விட்டார். வங்கி அதிகாரிகள் பொருட்களைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டு ஏலத்தில் கொண்டு வந்து விட்டனர். பணம் முழுவதும் அரோகரா. பிளாட் வாங்கும்போது தான் இது அவ்வப்போது நடக்கிறது. எச்சரிக்கை. தெரியாத நபர்களிடம் புரோக்கர்கள் மூலமாக வாங்கும் போது இது அடிக்கடி நடக்கிறது.

அதற்கு, நாம் முன்னரே வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று வீட்டின் உரிமையாளரிடம் சார்பதிவாளர் அலுவலத்தில் வில்லங்க சான்று வாங்கி வர சொல்ல வேண்டும்.

நல்லது தல . . அனைத்திற்கும் வழி உள்ளது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக