புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம்  Poll_c10ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம்  Poll_m10ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம்  Poll_c10ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம்  Poll_m10ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம்  Poll_c10ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம்  Poll_m10ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 5:09 pm

ஆங்கிலேயரே ஆண்டிருக்கலாம் என்பவர்கள், இந்தச் சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆங்கிலேய அரசு 1919இல் ரவுலட் சட்டத்தை கொண்டு வந்தது. விசாரணையே இல்லாமல், காரணமே சொல்லாமல் இந்தியர்களை கைது செய்ய முடியும் என கொடிய நடைமுறையை ஆங்கிலேய அரசு அறிவித்தது. பஞ்சாபில் முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ரவுலட் சட்டத்தை பயன்படுத்தி 581 பேர் கைது செய்யப்பட்டார்கள் ; நூற்றி ஏழு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது,264 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

கூடவே ஆங்கிலேயர் ஒரு தெருவில் தோன்றினால் அவருக்கு தலை குனிந்து வணக்கம் செலுத்த வேண்டும் ; தவழ்ந்தும் செல்ல வேண்டும். தவறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறைகளும் வெடித்தன. காந்தியடிகள் அமிர்தசரஸ் நகருக்குள் நுழைய தடை வேறு விதிக்கப்பட்டு இருந்து. சத்யபால் கிட்ச்லு எனும் இரு தலைவர்களை நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து ஜாலியன் வாலா பாக்கில் கூட்டம் நடந்தது.

அன்றைக்கு சீக்கியர்களின் பண்டிகையான பைசாகி திருநாள் அதற்காகவும் எண்ணற்ற மக்கள் கூடியிருந்தார்கள். பஞ்சாபில் நிலைமை கொதிநிலையில் இருக்கிறது புரட்சி வர வாய்ப்பிருக்கிறது என அம்மாகாணத்தின் காவல் துறை அதிகாரி ரெஜினால்ட் ஓ டயர் முடிவு செய்தான். பார்க்கில் 20,000 மக்கள் கூடியிருந்தார்கள். தொன்னூறு பேர் கொண்ட படைகளோடு வாகனங்களில் மெஷின் கன்களை எடுத்துக்கொண்டு வந்தது அவன் படை.

வெளியேற வழியாக இருந்த ஒரே குறுகலான பாதையை அடைத்து கொண்டார்கள். எந்த வித எச்சரிக்கையும் கொடுக்காமல் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்தியர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ரெஜினால்ட் ஒ டயர் உத்தரவு தர, ஐம்பது பேர் கொண்ட படை அப்பாவி மக்கள் நோக்கி 1,650 ரவுண்டுகள் சுட்டது. மக்கள் செத்து விழுந்தார்கள். பல பேர் கிணற்றில் விழுந்து இறந்து போனார்கள். நெரிசலிலும் பலபேர் இறந்து போனார்கள். அதிகாரப்பூர்வ மதிப்பீடு 379 பேர் இறந்தார்கள்; ஆயிரத்தி இருநூறு பேர் காயமடைந்தார்கள் என்றது. ஆங்கிலேயே மருத்துவரே எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்றார்.

மாகாண ஆளுநர் மைக்கேல் டயர் ரெஜினால்ட் டயர் செய்ததை சரி என்று ஆதரித்தான். ”நீங்கள் செய்த செயல் சரியானது. அதை நான் அங்கீகரிக்கிறேன்’’ என்று சொன்னான். ஹண்டர் கமிஷன் இந்நிகழ்வை விசாரிக்க அமைக்கப்பட்டது. ‘‘நான் மக்களைச் சுட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டுதான் வந்தேன். மெஷின் கன்களை வைத்திருந்த வாகனங்கள் உள்ளே வரும் அளவுக்கு இடமில்லை. இல்லையென்றால் இன்னமும் பல பேரை கொன்றிருப்பேன். மேலும், இதில் எந்த வருத்தமும் இல்லை. அவர்களை நான் எச்சரித்திருக்கலாம். ஆனால் ,அப்படி எச்சரித்து துரத்தி இருந்தால் மீண்டும் வந்து என்னைப் பார்த்து சிரித்து இருப்பார்கள். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு போக நான் எண்ணவில்லை. அது என் வேலையும் இல்லை. சுட்டேன் சுட்டேன் இந்தியர்களை இந்திய மண்ணிலேயே சுட்டேன்’’ என டயர் கொக்கரித்தான். மேலும் குண்டுகள் தீர்ந்து போய் விட்டதாலேயே இவ்வளவு கம்மியான மக்களை கொல்ல முடிந்ததாக வருத்தமும் தெரிவித்தார் டயர்.

பெரும் நெருக்கடியின் காரணமாக வெறுமனே பதவியை விட்டு மட்டும் அனுப்பினார்கள். பதவியை விட்டு நீக்கப்பட்ட பொழுதும் பல லட்சம் ரூபாயை அவன் செய்த அற்புத செயலுக்கு ஆங்கிலேயர்கள் நிதி திரட்டி கொடுத்தார்கள்.மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை 26,000 பவுண்டுகள் திரட்டி அந்த கொலை பாதகத்தை கொண்டாடியது. இங்கிலாந்து நாடாளுமன்றம் அச்செயலை ஆதரித்து தீர்மானம் வேறு போட்டது.

#ஜாலியன்வாலாபாக் #படுகொலை #பஞ்சாப் #காந்தியடிகள் #அமிர்தசரஸ் #சீக்கியர்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 5:11 pm


உத்தம் சிங்…


இந்த படுகொலையை நேரில் பார்த்த உத்தம் சிங் இரு அதிகாரிகளையும் கொல்ல உறுதி பூண்டான். நேரடியாக இங்கிலாந்து போகாமல் கென்யா, ஆஸ்திரியா, அமெரிக்கா, ஜெர்மனி என அலைந்து அவனை கொல்ல இங்கிலாந்து சென்றார். பன்றி தொழுவத்தில் வேலை பார்த்தார். பசி வாட்டி எடுக்க இருபாதாண்டு கால வெறியை அடக்கி வைத்திருந்தார். ரெஜினால்ட் ஒ டையர் ஏற்கனவே இறந்து போக இயற்கை முந்திக்கொண்டது என வருத்தப்பட்டார்.

காக்ஸ்டன் ஹாலுக்கு மைக்கேல் டயர் மற்றும் ஜெட்லாண்ட் எனும் இந்திய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோரை வந்ததும் குறிபார்த்து ஆறு முறை சுட்டார். இறந்து போனான் டயர் . அந்த வேலை முடிந்ததும் கம்பீரமாக ஓடாமல் அங்கேயே நின்ற உத்தம் சிங் ,"என்னுடைய வேலை முடிந்தது ; என் நெஞ்சின் கனல் தணிந்தது !" என்று அறிவித்தார்.

கோர்ட் படியேறிய பொழுது ,"டயர் தூக்கு தண்டனைக்கு உரியவன் அதைத்தான் நான் தந்தேன் !" என்று உறுதிபட சொன்னார் உத்தம் சிங். தன் பெயரை கேட்டபொழுது “ராம் முகம்மது சிங் ஆசாத் ” எனச் சொல்லி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் நாங்கள் என புரியவைத்தான்.

‘‘சுட்டேன் சுட்டேன்… ஆங்கிலேயனை ஆங்கிலேய மண்ணில் சுட்டேன்!”என்று சொல்லி கம்பீரமாக தூக்கு மேடை ஏறினான் அந்த வீரன். தன்னுடைய பிணம் ஆங்கிலேய மண்ணில் புதைக்கப்படக்கூடாது என்கிற அளவுக்கு தேசபக்தி ஊறியிருந்தது அவரிடம். டைம்ஸ் பத்திரிக்கை சுதந்திர போராட்ட வீரன் அவர் என்று புகழாரம் சூட்டியது. யானை போல பழி வாங்காமல் ஓயமாட்டார்கள் இந்தியர்கள் என்று ஜெர்மனி வானொலி அறிவித்தது.

அவனன்றோ இளைஞன். சமீபத்தில் இங்கிலாந்தின் பிரதமர் கேமரூன், இந்தியா வந்தபொழுது அந்நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்காமல் ஆங்கிலேய அரசு உறுதியாக இருப்பது சரியே என்கிற தொனியில் பேசினார் என்பது கூடுதல் தகவல். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம் ஏப்ரல் 13.

#உத்தம்சிங்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 14, 2014 5:39 pm

-
தி.மு.க கூட்டத்துக்கு போனால் அவங்க
சொல்றதுதான் சரின்னு தோணும்..
-
அடுத்த நாளே அதிமுக கூட்டத்துக்கு போனால்
அடடா , இவங்க சொல்றதுத்தான் சரின்னு தோணும்...
-
அப்படித்தான் இந்தக் கட்டுரை எல்லாம்..!
-
ஜாலியன் வாலாபாத் படுகொலைக்கு முன்னர் நடந்த
சம்பவங்களே, இந்த வெறிசெயலை டயர் செய்யக்
காரணமாயிருந்தது..
-
பொறுமை இருப்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம்

-
ஏப்ரல் பத்து, சிறையில் இருக்கும் ரெண்டு முக்கிய உள்ளூர் தலைவர்களை அந்த மாநிலத்தில் இருந்து வெளியேறச் சொன்னதை ரத்து செய்யணுமுன்னு கோரிக்கைவச்சு அம்ரித்ஸர் ஜனங்க, டிப்டி கமிஷனரைப் பார்க்க ஊர்வலமாப் போயிருக்காங்க. அங்கே அவுங்களைக் கலைஞ்சு போகச்சொல்லி ராணுவம் துப்பாக்கி எடுத்துச் சுட்டு பயமுறுத்தி இருக்கு.


எப்பவும் கூட்டமா இருப்பவர்களின் மனநிலை, சரியாச் சிந்திக்காது. அதான் இவ்வளவு பேர் இருக்கோமே என்ற முரட்டு தைரியத்தில் அரசாங்கக் கட்டிடங்கள், பிரிட்டிஷ் பேங்க் எல்லாம் தீ வச்சு ரகளை செஞ்சுக்கிட்டே போறாங்க. அங்கே இங்கேன்னு வெறியாட்டத்தில் ஏழு ப்ரிட்டிஷ்காரர்களைக் கொன்னும் போட்டுட்டாங்க. ராணுவமும் கலகம் நடந்த இடங்களில் சுட்டத்தில் 20 இந்தியர்களும் கொல்லப்பட்டாங்க.

அப்போ மார்ஸெல்லா ஷெர்வுட் என்ற பெண்மணி , (சர்ச் ஆஃப் இங்கிலாந்து மிஷினரியா வந்து இங்கு டீச்சரா 15 வருசமா இருக்கறவங்க) ஒரு சின்ன சந்து வழியா சைக்கிளில் போய்க்கிட்டு இருந்தாங்க. கூட்டம் அவுங்களை வளைச்சுக் கீழே தள்ளி, கையில் இருந்த கட்டைகளால் அவுங்க தலையில் சரமாரியா அடிச்சு, உதைக்கவும் ஆரம்பிச்சுருக்கு. அவுங்க எழுந்து ஓட ஆரம்பிச்சதும் விடாம வளைச்சு அடிச்சுருக்கு. இந்த கலாட்டாவில் எப்படியோ தப்பிச்சு எழுந்து ஓடி, திறந்துருந்த ஒரு வீட்டுக்குள்ளே நுழையப்போனப்ப, வீட்டுலே இருந்த ஆளுங்க உள்ளே வரவிடாமக் கதவை மூடிக்கிட்டாங்க. பின்னாலேயே ஓடிவந்த கூட்டம் திரும்பத்திரும்ப அவுங்களைத் தாக்கி இருக்காங்க. அப்புறம், ரொம்ப ஆபத்தான நிலையில் மயங்கி இருந்தவங்களை விட்டுட்டு ஓடிப்போயிருக்கு கூட்டம்.


இதுக்குப்பிறகு இவுங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் சேர்த்தது இந்தப் பக்கம் வந்த சில ப்ரிட்டிஷ் ராணுவத்தினர். இங்கே அமிரித்ஸரில் அடுத்த ரெண்டு நாட்கள் அமைதியா இருந்தாலும் வேற பகுதிகளில் ரயில்வே தண்டவாளத்தைப் பெயர்த்துப்போடுவது, தந்தி ஒயர்களை அறுப்பது, அரசுக் கட்டிடங்களுக்குத் தீ வைப்பதுன்னு கலவரம் நடந்துக்கிட்டுத்தான் இருந்துச்சு. இப்ப மூணு ப்ரிட்டிஷார் அங்கங்கே கொல்லப்பட்டாங்க.

டீச்சரைத் தாக்கிய மூணாம்நாள் மதியம்தான் பஞ்சாப் மாகாணத்துக் கலவரங்களை அடக்க ராணுவ நடவடிக்கை எடுத்தே ஆகணுமுன்னு தீர்மானம் ஆச்சு. அப்போ ப்ரிகேடியர் ஜெனரலா இருந்த ரெஜினால்ட் எட்வர்ட் ஹேரி டையர், பிரிட்டிஷ் ராணுவத்தின் இந்தியப்பிரிவில் இருந்த அம்பது சிப்பாய்களுடன் உடனே கிளம்பி ஜாலியன் வாலா பாக் என்ற தோட்டத்துக்கு வந்துருக்கார்.

அன்னிக்கு பஞ்சாபிகளுடைய புது வருசம் பைஸாகி. அதைக் கொண்டாட அங்கே சுமார் இருபதாயிரம் மக்கள் குடும்பத்தோடு கூடியிருக்காங்க. மக்கள் கூட்டம் கூடிட்டால் கலாட்டாவில் முடியுது. அதனால் இப்படியெல்லாம் கூட்டம் கூட விடக்கூடாதுன்னு ராணுவம் முடிவு செஞ்ச பிறகும், சட்டையே பண்ணாமல் கூடிய இந்தக் கூட்டத்துக்குச் சரியான பாடம் கற்பிக்கணுமுன்னு சந்துவழியா உள்ளே நுழைஞ்ச அதிகாரி, அங்கே கடல் போல் கூடி இருந்த ஜனத்திரளைப் பார்த்ததும், கலைஞ்சு போங்க என்ற எச்சரிக்கை கூடச் சொல்லாமல், அவுங்களையெல்லாம் சுட்டுத்தள்ளும்படி ராணுவவீரர்களுக்கு உத்தரவு கொடுத்துட்டார். என்னதான் இந்தியன் ட்ரூப்பா இருந்தாலும், ராணுவத்திலே அதிகாரி சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கணும் என்ற நியதிப்படி அவுங்களும் படபடன்னு 1650 ரவுண்டு சுட்டுத்தள்ளிட்டாங்க.

அடுத்துவந்த சிலநாட்களில், இந்த இந்தியர்களை எப்படியெல்லாம் கேவலப்படுத்தினால் அவுங்க மனோதைரியம் ஓடிப்போகுமுன்னு யோசிச்சு, மிஸ். மார்ஸெல்லா ஷெர்வுட் தாக்கப்பட்ட அந்த சந்தின் ரெண்டு முனையிலும் வீரர்களை நிக்க வச்சு, அந்த சந்தின் வழியாப் போகும் இந்தியர்கள் யாரும் நடக்கக்கூடாது. தவழ்ந்து, நெஞ்சால் ஊர்ந்து போகணுமுன்னு சொல்லித் தப்பித்தவறி அந்தப் பக்கம் போன மக்களை அடிச்சு ஊர்ந்துபோகச் சொல்லி இருக்காங்க. சந்தின் நீளம் ஒரு 600 அடி தூரம் இருக்கும். இந்த சந்திலே குடி இருந்தவங்களுக்கும் வெளியே வந்தால் இதே தண்டனைதான். கொடுமைக்குப் பயந்து எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருந்துருக்காங்க.

மாலையில் எட்டு மணியில் இருந்து காலை ஆறு வரை ஊரடங்கும் சட்டம் இருந்ததால் அப்பவும் வெளியில் வர இயலாது. நல்லவேளையா இந்த ஊர்ந்து போகும் சட்டம் ஏழு நாளில் முடிவுக்கு வந்துச்சு. அம்பது சிவிலியன் ஜனங்கள் இதுலே மாட்டிக்கிட்டு நெஞ்சு வயிறு எல்லாம் புண்ணாகி ரத்தம் சொட்டச்சொட்ட ஊர்ந்து போகக் கட்டாயப்படுத்தப்பட்டாங்க.

இதெல்லாம் நடந்த சமயம் பஞ்சாப் கவர்னரா இருந்தவர் Michael O'Dwyer. இவர் ஜெனரல் டையருக்கு ஆதரவா இருந்தவர். ஏற்கெனவே டையர் 1927 இல் செத்துட்டார் என்பதால் அவரைக் கொன்னுப் பழி தீர்த்துக்கும் சான்ஸ் போயிருச்சு. இனி இப்போ ஆதரவா இருந்த கவர்னர் மைக்கேல் ஓ ட்வையர் பாக்கி. இவர் இங்கிலாந்துக்குத் திரும்பிப்போய் பலவருசங்கள் ஆச்சுன்னாலும் விடறதில்லைன்னு திட்டம் போட்டு , மைக்கேல் ஒரு மீட்டிங்லே கலந்துக்கிட்ட சமயம் அவரைச் சுட்டுத்தள்ளியவர்தான் இந்த உத்தம் சிங். இது 13 மார்ச் 1940 நடந்தப்ப ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்து 21 வருசங்கள் ஆகி இருந்துச்சு.


சுட்டுத்தள்ளிட்டுத் தப்பி ஓடாம இருந்தவரைப் பிடிச்சுச் சிறையில் அடைச்சு கேஸ் நடத்தி நாலரை மாசம் கழிச்சுத் தூக்கில் போட்டாங்க. அவரோட உடலை எரிச்ச அஸ்திதான் இங்கே ஜாலியன்வாலா பாக் தோட்டத்துலே நினைவகத்தில் வச்சுருக்காங்க.

மகாபாரதக்கதைபோல ஆகிருச்சு. பெண்ணை இம்சை செய்ததால் வந்த பேரழிவு.

-
(நன்றி: இணையம்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக