Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்
2 posters
Page 1 of 1
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்
தமிழக - ஆந்திர மாநில எல்லையில், 60 ஆண்டுகளாக நிலவி வந்த மீன்பிடி தகராறு, நேற்று, கலவரமாக வெடித்தது. பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்த ஒரு கிராமத்தினர் மீது ஆத்திரம் கொண்ட, தமிழக - ஆந்திர மாநில கூட்டு மீன்பிடி சங்கத்தினர், அவர்கள் கிராமத்தில், பெட்ரோல் குண்டு வீசி, தீக்கிரையாக்கினர். தாக்குதலைத் தடுத்த, போலீஸ் அதிகாரிகள் உட்பட மூன்று பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. #திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, பழவேற்காடு ஏரி, 250 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. பழவேற்காடு கிராமத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி வரை பரந்து விரிந்துள்ள இந்த ஏரியில், இரு மாநில மீனவர்கள் தங்களுக்கு எல்லை வகுத்து, மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில், கும்மிடிப்பூண்டி அடுத்த, ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள தமிழக பகுதிகளான, நொச்சிகுப்பம், பாட்டைகுப்பம், வெங்கடேச பெருமாள் நகர் உள்ளிட்ட, எட்டு மீனவ கிராமத்தினரும், ஆந்திர மாநிலத்தின், 16 குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களும் இணைந்து, தமிழக- - ஆந்திர மாநில கூட்டு மீன்பிடி சங்கம் அமைத்து, பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
தமிழக எல்லைக்கு உட்பட்ட எட்டு கிராம மீனவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மீன்பிடிப்பு பகுதி போதுமானதாக இல்லை; கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக, அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், அருகில் உள்ள சின்ன மாங்கோடு, பெரிய மாங்கோடு, புதுக்குப்பம் உள்ளிட்ட, சங்கத்தில் சாராத, மற்ற ஒன்பது மீனவ கிராமங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அந்த நேரத்திலெல்லாம், வாக்குவாதம், தகராறு ஏற்படுவது, பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.கடந்த 8ம் தேதி, நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர், ஒன்பது படகுகளில், பழவேற்காடு ஏரியில் உள்ள குருவிதிட்டு பகுதியில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த #மாங்கோடு தரப்பு மீனவர்கள், 300 பேர், 75 படகுகளில், அங்கு சென்று தகராறு செய்தனர். அவர்கள் தாக்கியதில், #நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, ஏழு பேர் காயமடைந்தனர்.
300 படகுகளில் முற்றுகை :
இதனால், கோபம் அடைந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்களும், ஆந்திர மாநில மீனவர்கள், 1,000க்கும் மேற்பட்டோர், 300 படகுகளில், ஈட்டி, வேல் கம்பு, பெட்ரோல் வெடிகுண்டு உள்ளிட்ட, ஆயுதங்களுடன், நேற்று காலை, சின்ன மாங்கோடு மீனவ கிராமத்தை முற்றுகையிட்டனர்.
இந்த தகவலை அறிந்து, திருவள்ளூர் கூடுதல் எஸ்.பி., ஸ்டாலின் தலைமையிலான, 250 போலீசார், சின்ன மாங்கோடு கிராமத்தில் குவிக்கப்பட்டனர். நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள் ஊடுருவுவதை கண்டதும், சின்ன மாங்கோடு மீனவர்கள் வீடுகளை பூட்டி, ஓட்டம் பிடித்தனர். அவர்களை தாக்க, நொச்சிக்குப்பம் மீனவர்கள் வந்தனர். அவர்களை தடுத்து, எச்சரிக்கும் வகையில், போலீஸ் அதிகாரி ஒருவர், துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார். பதிலுக்கு அவர்கள், பெட்ரோல் வெடிகுண்டை, போலீசார் மீது வீசி, முன்னேறினர்.
இதில், ஏ.டி.எஸ்.பி., ஸ்டாலின், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், ஆயுதப்படை காவலர் ராமமூர்த்தி ஆகியோருக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும், சென்னை அப்பல்லோ மற்றும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களை தவிர, மேலும் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், போலீசாரின் மூன்று கார், இரண்டு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை, அடித்து உடைத்து, அவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
வீடுகள், படகுகள் மீது வெடிகுண்டு :
கூட்டத்தை கட்டுப்படுத்த, போலீசாரால் முடியாத நிலையில், சின்ன மாங்கோடு கிராமத்திற்கு புகுந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள், படகுகள் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசினர். இதில், அவை எரிந்தன. பின், ஊருக்குள் சென்று, வீடுகளை சூறையாடி, தீயிட்டு கொளுத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதில், 50 வீடுகள், 60 படகுகள் மற்றும் வீட்டில் இருந்த, மின்னணு மற்றும் மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.அருகில் உள்ள கிராமத்தினர், அச்சத்தில் வீடுகளை காலி செய்து வெளியேறினர். பதற்றமாக சூழல் நிலவுவதால், மேற்கண்ட மீனவர்கள் பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
#பழவேற்காடு #மீன்பிடி #தகராறு #கிராமம் #தீக்கிரை #விரோதம் #பதற்றம்
[thanks]தினமலர்[/thanks]
தமிழக எல்லைக்கு உட்பட்ட எட்டு கிராம மீனவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மீன்பிடிப்பு பகுதி போதுமானதாக இல்லை; கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக, அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், அருகில் உள்ள சின்ன மாங்கோடு, பெரிய மாங்கோடு, புதுக்குப்பம் உள்ளிட்ட, சங்கத்தில் சாராத, மற்ற ஒன்பது மீனவ கிராமங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அந்த நேரத்திலெல்லாம், வாக்குவாதம், தகராறு ஏற்படுவது, பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.கடந்த 8ம் தேதி, நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர், ஒன்பது படகுகளில், பழவேற்காடு ஏரியில் உள்ள குருவிதிட்டு பகுதியில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த #மாங்கோடு தரப்பு மீனவர்கள், 300 பேர், 75 படகுகளில், அங்கு சென்று தகராறு செய்தனர். அவர்கள் தாக்கியதில், #நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, ஏழு பேர் காயமடைந்தனர்.
300 படகுகளில் முற்றுகை :
இதனால், கோபம் அடைந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்களும், ஆந்திர மாநில மீனவர்கள், 1,000க்கும் மேற்பட்டோர், 300 படகுகளில், ஈட்டி, வேல் கம்பு, பெட்ரோல் வெடிகுண்டு உள்ளிட்ட, ஆயுதங்களுடன், நேற்று காலை, சின்ன மாங்கோடு மீனவ கிராமத்தை முற்றுகையிட்டனர்.
இந்த தகவலை அறிந்து, திருவள்ளூர் கூடுதல் எஸ்.பி., ஸ்டாலின் தலைமையிலான, 250 போலீசார், சின்ன மாங்கோடு கிராமத்தில் குவிக்கப்பட்டனர். நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள் ஊடுருவுவதை கண்டதும், சின்ன மாங்கோடு மீனவர்கள் வீடுகளை பூட்டி, ஓட்டம் பிடித்தனர். அவர்களை தாக்க, நொச்சிக்குப்பம் மீனவர்கள் வந்தனர். அவர்களை தடுத்து, எச்சரிக்கும் வகையில், போலீஸ் அதிகாரி ஒருவர், துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார். பதிலுக்கு அவர்கள், பெட்ரோல் வெடிகுண்டை, போலீசார் மீது வீசி, முன்னேறினர்.
இதில், ஏ.டி.எஸ்.பி., ஸ்டாலின், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், ஆயுதப்படை காவலர் ராமமூர்த்தி ஆகியோருக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும், சென்னை அப்பல்லோ மற்றும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களை தவிர, மேலும் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், போலீசாரின் மூன்று கார், இரண்டு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை, அடித்து உடைத்து, அவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
வீடுகள், படகுகள் மீது வெடிகுண்டு :
கூட்டத்தை கட்டுப்படுத்த, போலீசாரால் முடியாத நிலையில், சின்ன மாங்கோடு கிராமத்திற்கு புகுந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள், படகுகள் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசினர். இதில், அவை எரிந்தன. பின், ஊருக்குள் சென்று, வீடுகளை சூறையாடி, தீயிட்டு கொளுத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதில், 50 வீடுகள், 60 படகுகள் மற்றும் வீட்டில் இருந்த, மின்னணு மற்றும் மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.அருகில் உள்ள கிராமத்தினர், அச்சத்தில் வீடுகளை காலி செய்து வெளியேறினர். பதற்றமாக சூழல் நிலவுவதால், மேற்கண்ட மீனவர்கள் பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
#பழவேற்காடு #மீன்பிடி #தகராறு #கிராமம் #தீக்கிரை #விரோதம் #பதற்றம்
[thanks]தினமலர்[/thanks]
Re: பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்
இந்தியாவிற்குள் தானே இருக்கிறது இந்த கிராமங்கள் ?!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கலவரமாக மாறிய லண்டன் கறுப்பின போராட்டம் படங்கள்
» விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது
» பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
» சார்ஜில் போட்டபடியே பேசியதால் விபரீதம்: செல்போன் வெடித்ததால் சிறுவன் பார்வை இழப்பு
» தென்கொரிய மீன்பிடி படகுகள் பறிமுதல்
» விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது
» பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
» சார்ஜில் போட்டபடியே பேசியதால் விபரீதம்: செல்போன் வெடித்ததால் சிறுவன் பார்வை இழப்பு
» தென்கொரிய மீன்பிடி படகுகள் பறிமுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|