புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைவிமர்சனம்-மான்கராத்தே
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மான்கராத்தே- விமர்சனம் !
நான்கு மாதங்களுக்குப் பிறகு குறிப்பிட்ட ஒருநாளில் என்ன நடக்கும் என்பது உறுதியாகத் தெரிந்தால் அதைத் தெரிந்துகொள்கிறவர்கள் மனநிலை எப்படியிருக்கும்? மென்பொருள்துறையில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் அவருடைய குழுவினருக்கு நான்குமாதங்கள் கழித்து ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன நடக்கும்? என்பது தெரிகிறது.
ஒரு குத்துச்சண்டைப்போட்டியில் ஒருவர் வெற்றி பெறுவார் அவருக்குச் சன்மானமாக இரண்டுகோடி கிடைக்கும் என்கிற செய்தி இவர்களுக்கு மட்டும் தெரிகிறது. அந்த இரண்டுகோடியைக் கைப்பற்ற அவர்கள் செய்யும் செயல்கள்தாம் படம். இயக்குநர் முருகதாஸின் இந்தக்கதையை அவருடைய உதவியாளராக இருந்த திருக்குமரன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.
வழக்கம்போல வெட்டியாக ஊரைச்சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனைப் பிடித்து குத்துச்சண்டை வீரராக்கப் படாதபாடுபடுகிறார்கள் சதிஷ் குழுவினர். சில நேரங்களில் சிரிப்பும் பல நேரங்களில் சலிப்பும் வருகிறமாதிரியான அக்காட்சிகள் படத்துக்குப் பலவீனம். அவர்களுக்குப் பணம் நோக்கம் என்றால் சிவகார்த்திகேயனுக்கு? ஹன்சிகாவைப் பார்த்து அவருடைய அழகில் மயங்கி அவரைக் காதலிக்கத் துரத்தும் சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகாவுக்கு குத்துச்சண்டை பிடிக்கும் என்று தெரிந்ததால் அதில் ஈடுபடச் சம்மதிக்கிறார்.
அதன்பின்னர் குத்துச்சண்டை மேடைகளில் நடக்கும் கூத்துகளை ஒரு உண்மையான குத்துச்சண்டை வீரர் பார்த்தால் படக்குழுவினரை முகத்தில் குத்தியே கொன்றுவிடுவார். அவ்வளவு கூத்தடித்திருக்கிறார்கள். கூத்தடித்தே இறுதிப்போட்டிவரை வந்துவிடுகிறார் சிவகார்த்திகேயன். கடைசி கொஞ்நேரம் இருக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தை வேறுதளத்துக்கு எடுத்துச்செல்கிறது. எதிர்த்துச்சண்டை போடுவது கராத்தே என்றால் அடிபடாமல் தப்பித்து ஓடுவதுதான் மான்கராத்தே.
பெயருக்குப் பொருத்தமாக சவாலிலிருந்து தப்பித்து ஓடுகிற வேடம் சிவகார்த்திகேயனுக்குப் பொருந்தியிருக்கிறது. அவரிடம் நகைச்சுவையை எதிர்பார்ப்பார்கள் என்பதால் கூடுமானவரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். அவற்றை மிக சாதாரணமாகக் கடந்துபோகிறார் சிவகார்த்திகேயன்.
முழுமையான கதாநாயகன் என்று ஆனபின்னும் வில்லன் காலைப்பிடித்து நான் கெஞ்சுவதா? என்று ஆவேசப்படாமல் வில்லனாக நடிக்கும் வம்சியின் காலில் விழுந்து கதறும்போதும், யாழினி என்னை முழுசா நம்புறா அவள நான் ஏமாத்திடக்கூடாது என்று சொல்லியழும்போதும் நம்மைக் கலங்கவைத்துவிடுகிறார் சிவகார்த்திகேயன். இறுதிக்காட்சிகளில் கோபத்தில் துடித்து அழுது ஆவேசப்பட்டு சண்டைபோடும் காட்சிகளிலும் தப்புச் செய்யாமல் தேர்வு பெறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை எம்மாதிரியான வேடங்களையும் ஏற்று நல்லபடியாக நடித்துவிடுவார் என்கிற பெயரைப் பெற்றுவிட்டார். யாழினி என்கிற அழகுதமிழ்ப்பெயர் வைத்துக்கொண்டு நடித்திருக்கும் ஹன்சிகா இந்தப்படத்துக்காகக் கூடுதல் அழகாகிவிட்டாரா? அவர் அழகாக இருக்க ஒளிப்பதிவாளர் சுகுமார் காரணமா? என்று பட்டிமன்றம் வைக்கலாம்.
பாடல்காட்சிகளில் ரசிகர்களைச் சுண்டியிழுக்கிறார். டார்லிங்டம்பக்கு பாடலுக்கு அவர் போடும் ஆட்டம் பெரியவரவேற்பைப் பெறும். அழகு, ஆட்டம் ஆகியனவற்றைத்தாண்டி சிவகார்த்திகேயன் உயிரோடு தனக்கு வேண்டும் என்று துடித்து அழுகிற காட்சிகளிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார். ஒளிப்பதிவாளர் சுகுமாரும் இசையமைப்பாளர் அனிருத்தும் படத்துக்குப் பெரும்பலங்களாக இருக்கிறார்கள். நாயகனின் அறிமுகப்பாடல், மெல்லிசைப்பாடல், குத்துப்பாடல் என்று வகைக்கொன்றாகப் பாடல்களைப் போட்டு எல்லாவகையையும் ரசிக்க வைத்திருக்கிறார் அனிருத்.
’ஓப்பன் த டாஸ்மாக்’ பாடலில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக கொஞ்நேரம் ஆடியும் இருக்கிறார் அனிருத். அந்தப்பாடலின் நடுவில் ஒரு காட்சியில் இயக்குநர் முருகதாஸ் வந்து சூப்பருப்பு என்கிறார். என்னங்க நடக்குது? குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கும் ஷாஜி, என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறுகிறார். தனக்கு என்ன வேடம் என்பதைக்கூட அவர் உள்வாங்கிக்கொள்ளவில்லை போலும். வில்லனாக நடித்திருக்கும் வம்சியும் அவர் மனைவியாக நடித்திருப்பவரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தில் பெரும்பங்கு வகிப்பவை, சிவகார்த்திகேயனைக் குத்துச்சண்டை வீரராக்க சதிஷ் குழுவினர் பாடுபடுவதும், குத்துச்சண்டை வீரரான பின்பு இறுதிப்போட்டிவரை அவர் முன்னேறுகிற காட்சிகளும்தாம். அந்தக்காட்சிகளைச் சரியாக அமைத்திருந்தால், இது பலமான திரைக்கதையாக இருந்திருக்கும். அவ்விடங்களில் நிறையத் தொய்வு.
முதல்படத்திலேயே புகழ்பெற்ற தொழில்நுட்பக்கலைஞர்கள், பெயர்பெற்ற நாயகன், நாயகி, பெரிய தயாரிப்பு நிறுவனம் ஆகிய எல்லாமே சிறப்பாக அமையப்பெறுவது எல்லோருக்கும் அமையாது. இவ்வளவு அமைந்தும் தன்னுடைய வேலையைச் சிறப்பாகச் செய்யாமல் விட்டிருக்கிறார் இயக்குநர். படம் பெரிய வெற்றி பெற்றாலும் அதற்கான பெருமை இயக்குநருக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.
மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதப்பட்டிருந்தாலும், தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற திருக்குறளையே தன்னுடைய செயல்பாட்டுக்கு ஆதாரமாக நாயகன் காட்டுவது வரவேற்புக்குரியது.
-இணையத்திலிருந்து...
நான்கு மாதங்களுக்குப் பிறகு குறிப்பிட்ட ஒருநாளில் என்ன நடக்கும் என்பது உறுதியாகத் தெரிந்தால் அதைத் தெரிந்துகொள்கிறவர்கள் மனநிலை எப்படியிருக்கும்? மென்பொருள்துறையில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் அவருடைய குழுவினருக்கு நான்குமாதங்கள் கழித்து ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன நடக்கும்? என்பது தெரிகிறது.
ஒரு குத்துச்சண்டைப்போட்டியில் ஒருவர் வெற்றி பெறுவார் அவருக்குச் சன்மானமாக இரண்டுகோடி கிடைக்கும் என்கிற செய்தி இவர்களுக்கு மட்டும் தெரிகிறது. அந்த இரண்டுகோடியைக் கைப்பற்ற அவர்கள் செய்யும் செயல்கள்தாம் படம். இயக்குநர் முருகதாஸின் இந்தக்கதையை அவருடைய உதவியாளராக இருந்த திருக்குமரன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.
வழக்கம்போல வெட்டியாக ஊரைச்சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனைப் பிடித்து குத்துச்சண்டை வீரராக்கப் படாதபாடுபடுகிறார்கள் சதிஷ் குழுவினர். சில நேரங்களில் சிரிப்பும் பல நேரங்களில் சலிப்பும் வருகிறமாதிரியான அக்காட்சிகள் படத்துக்குப் பலவீனம். அவர்களுக்குப் பணம் நோக்கம் என்றால் சிவகார்த்திகேயனுக்கு? ஹன்சிகாவைப் பார்த்து அவருடைய அழகில் மயங்கி அவரைக் காதலிக்கத் துரத்தும் சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகாவுக்கு குத்துச்சண்டை பிடிக்கும் என்று தெரிந்ததால் அதில் ஈடுபடச் சம்மதிக்கிறார்.
அதன்பின்னர் குத்துச்சண்டை மேடைகளில் நடக்கும் கூத்துகளை ஒரு உண்மையான குத்துச்சண்டை வீரர் பார்த்தால் படக்குழுவினரை முகத்தில் குத்தியே கொன்றுவிடுவார். அவ்வளவு கூத்தடித்திருக்கிறார்கள். கூத்தடித்தே இறுதிப்போட்டிவரை வந்துவிடுகிறார் சிவகார்த்திகேயன். கடைசி கொஞ்நேரம் இருக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தை வேறுதளத்துக்கு எடுத்துச்செல்கிறது. எதிர்த்துச்சண்டை போடுவது கராத்தே என்றால் அடிபடாமல் தப்பித்து ஓடுவதுதான் மான்கராத்தே.
பெயருக்குப் பொருத்தமாக சவாலிலிருந்து தப்பித்து ஓடுகிற வேடம் சிவகார்த்திகேயனுக்குப் பொருந்தியிருக்கிறது. அவரிடம் நகைச்சுவையை எதிர்பார்ப்பார்கள் என்பதால் கூடுமானவரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். அவற்றை மிக சாதாரணமாகக் கடந்துபோகிறார் சிவகார்த்திகேயன்.
முழுமையான கதாநாயகன் என்று ஆனபின்னும் வில்லன் காலைப்பிடித்து நான் கெஞ்சுவதா? என்று ஆவேசப்படாமல் வில்லனாக நடிக்கும் வம்சியின் காலில் விழுந்து கதறும்போதும், யாழினி என்னை முழுசா நம்புறா அவள நான் ஏமாத்திடக்கூடாது என்று சொல்லியழும்போதும் நம்மைக் கலங்கவைத்துவிடுகிறார் சிவகார்த்திகேயன். இறுதிக்காட்சிகளில் கோபத்தில் துடித்து அழுது ஆவேசப்பட்டு சண்டைபோடும் காட்சிகளிலும் தப்புச் செய்யாமல் தேர்வு பெறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை எம்மாதிரியான வேடங்களையும் ஏற்று நல்லபடியாக நடித்துவிடுவார் என்கிற பெயரைப் பெற்றுவிட்டார். யாழினி என்கிற அழகுதமிழ்ப்பெயர் வைத்துக்கொண்டு நடித்திருக்கும் ஹன்சிகா இந்தப்படத்துக்காகக் கூடுதல் அழகாகிவிட்டாரா? அவர் அழகாக இருக்க ஒளிப்பதிவாளர் சுகுமார் காரணமா? என்று பட்டிமன்றம் வைக்கலாம்.
பாடல்காட்சிகளில் ரசிகர்களைச் சுண்டியிழுக்கிறார். டார்லிங்டம்பக்கு பாடலுக்கு அவர் போடும் ஆட்டம் பெரியவரவேற்பைப் பெறும். அழகு, ஆட்டம் ஆகியனவற்றைத்தாண்டி சிவகார்த்திகேயன் உயிரோடு தனக்கு வேண்டும் என்று துடித்து அழுகிற காட்சிகளிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார். ஒளிப்பதிவாளர் சுகுமாரும் இசையமைப்பாளர் அனிருத்தும் படத்துக்குப் பெரும்பலங்களாக இருக்கிறார்கள். நாயகனின் அறிமுகப்பாடல், மெல்லிசைப்பாடல், குத்துப்பாடல் என்று வகைக்கொன்றாகப் பாடல்களைப் போட்டு எல்லாவகையையும் ரசிக்க வைத்திருக்கிறார் அனிருத்.
’ஓப்பன் த டாஸ்மாக்’ பாடலில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக கொஞ்நேரம் ஆடியும் இருக்கிறார் அனிருத். அந்தப்பாடலின் நடுவில் ஒரு காட்சியில் இயக்குநர் முருகதாஸ் வந்து சூப்பருப்பு என்கிறார். என்னங்க நடக்குது? குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கும் ஷாஜி, என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறுகிறார். தனக்கு என்ன வேடம் என்பதைக்கூட அவர் உள்வாங்கிக்கொள்ளவில்லை போலும். வில்லனாக நடித்திருக்கும் வம்சியும் அவர் மனைவியாக நடித்திருப்பவரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தில் பெரும்பங்கு வகிப்பவை, சிவகார்த்திகேயனைக் குத்துச்சண்டை வீரராக்க சதிஷ் குழுவினர் பாடுபடுவதும், குத்துச்சண்டை வீரரான பின்பு இறுதிப்போட்டிவரை அவர் முன்னேறுகிற காட்சிகளும்தாம். அந்தக்காட்சிகளைச் சரியாக அமைத்திருந்தால், இது பலமான திரைக்கதையாக இருந்திருக்கும். அவ்விடங்களில் நிறையத் தொய்வு.
முதல்படத்திலேயே புகழ்பெற்ற தொழில்நுட்பக்கலைஞர்கள், பெயர்பெற்ற நாயகன், நாயகி, பெரிய தயாரிப்பு நிறுவனம் ஆகிய எல்லாமே சிறப்பாக அமையப்பெறுவது எல்லோருக்கும் அமையாது. இவ்வளவு அமைந்தும் தன்னுடைய வேலையைச் சிறப்பாகச் செய்யாமல் விட்டிருக்கிறார் இயக்குநர். படம் பெரிய வெற்றி பெற்றாலும் அதற்கான பெருமை இயக்குநருக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.
மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதப்பட்டிருந்தாலும், தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற திருக்குறளையே தன்னுடைய செயல்பாட்டுக்கு ஆதாரமாக நாயகன் காட்டுவது வரவேற்புக்குரியது.
-இணையத்திலிருந்து...
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
சிவா wrote:[link="/t109155-topic#1056443"]விமர்சனத்திற்கு நன்றி, இப்பொழுதுதான் மான் கராத்தே தரவிறக்கம் ஆகிக் கொண்டுள்ளது. முடிந்ததும் பார்க்க வேண்டும்!
எங்களுக்கு
குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் காலில் ஷூ அணிந்து, கையில் ஒரு கிளவுஸை மட்டும் எடுத்துக் கொண்டு உடனேயே போட்டிக்காக கியூவில் போய் நிற்க முடியாது.. இதற்கெல்லாம் முறையான சங்கங்கள் உண்டு. அதில் சேர்ந்து குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற்று.. பயிற்சியாளரின் ஒப்புதல் பெற்ற பின்பு.. திறமைச் சான்றுக்கான முதற்கட்ட போட்டியில் வெற்றி பெற்ற பின்புதான் குத்துச்சண்டை போட்டியாளர் என்ற பெயரே, அடையாள அட்டையுடன் கிடைக்கும்.
இந்தப் பெயர் கிடைத்த பின்பும் நகர அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் என்று போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தால் மட்டுமே தேசிய அளவுக்கே செல்ல முடியும்.. குரும்பப்பட்டியில் நடக்கும் பொங்கல் விழாவில் ஓட்டப் பந்தயம் நடத்தப்படுவது போல, எங்கேயும் குத்துச்சண்டை போட்டியை நடத்திவிட முடியாது..
இதற்கான ஆட்களும் குறைவு.. சங்க அமைப்புகளும் குறைவு.. நடுவர்களும் குறைவு.. விதிமுறைகளை மிகச் சரியாகப் பயன்படுத்தவில்லையெனில் உயிருக்கே அபாயம் என்பதால் இந்த விளையாட்டை வெளியிடங்களில் நடத்துவதற்கு ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ்களை வைத்திருக்கிறது அகில இந்திய குத்துச்சண்டை சம்மேளனம்..!
எல்லாவற்றையும் பரணில் தூக்கிப் போட்டுவிட்டு லாஜிக்கை காலில் மிதித்தபடியே சிவகார்த்திகேயன் என்னும் ஹீரோவுக்காக ஒரே நாளில் பயிற்சி எடுத்து.. வீர வசனங்களை பேசியவுடன்.. கேட்டவுடன்.. ரத்த நாளங்கள் துடிக்க மேடையேறி தேசிய சேம்பியனை அடித்து வீழ்த்துவது என்பதெல்லாம் காமெடியாக செய்திருந்தால் ஓகே.. ஆனால் இங்கே சீரியஸாக எடுத்துத் தொலைத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்படியெல்லாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது..!
-
--உண்மைத்தமிழன்
-
--உண்மைத்தமிழன்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மான் கராத்தே - சினிமா விமர்சனம்
பாக்ஸிங் ரிங்கில் 'பட்டர்’ பீட்டர் 'கில்லர்’ பீட்டரை 'நாக்-அவுட்’ செய்வாரா என்பதே... 'மான் கராத்தே’!
சாஃப்ட்வேர் நண்பர்கள் சதீஷ் அண்ட் கோ-வுக்கு, ஒரு சித்தர் மூலம் நான்கு மாதத்துக்குப் பிந்தைய செய்தித்தாள் கையில் கிடைக்கிறது. அவர்கள் பணிபுரியும் சாஃப்ட்வேர் நிறுவன திவால் முதல் ஆலங்கட்டி மழை வரை செய்தித்தாளில் பதிவாகி இருக்கும் சம்பவங்கள் அப்படி அப்படியே நடக்கின்றன. அதே செய்தித்தாள் மூலம் குத்துச்சண்டைப் போட்டியில் பீட்டர் என்பவர் இரண்டு கோடி ரூபாய் ஜெயிக்கிறார் என்று தெரிந்துகொன்டு அந்தப் பீட்டரைத் தேடினால்... அது சிவகார்த்திகேயன். பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத சிவகார்த்திகேயன் போட்டியில் கலந்துகொண்ட சமயம், இன்னொரு பீட்டரும் என்ட்ரி கொடுக்கிறார். அவர் ஒரே அடியில் எதிராளிகளை 'நாக்-அவுட்’ செய்யும் 'கில்லர்’. இப்போ 'பட்டர்’ பீட்டர் ஜெயிப்பாரா என்பதே கதை!
'பின்னால் நடப்பது முன்கூட்டியே தெரிந்தால்..?’ டைப் ஃபேன்டசி கதையோடு இறங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் திருக்குமரன். கலகல காமெடி, கலர்ஃபுல் ஒளிப்பதிவு, இன்டர்வெல் ட்விஸ்ட்... என செம ஜோர் ஆரம்பம்தான். ஆனால், ரோலர் கோஸ்டர் சவாரி அடித்திருக்கவேண்டிய பின்பாதி, நொண்டியடித்ததால்... 'ஸ்மால் பஸ்’ ட்ரிப் ஆகிவிட்டது!
பில்டப் இன்ட்ரோக்களுக்குப் பிறகு வழக்கமான 'சினா கானா’வாகச் சிரிப்பு சிக்ஸர் விரட்டுகிறார் சிவகார்த்திகேயன். குறள் சொல்லும் போட்டி, டம்மி பிராக்டீஸ் அத்தியாயங்களில் காமெடி நடிப்பு, பன்ச் பாடி லாங்வேஜ்... என பழகிய பிட்ச்சில் செம ஸ்கோர். என்னா டான்ஸ்மா... பின்றீங்க பிரதர். ஆனால், திரைக்கதை திணறும் பின்பாதியில் கடுப்ஸ் ஏற்றுகிறது பீட்டர் கேரக்டரின் அழுகாச்சி பெர்ஃபாமன்ஸ்.
கொழுக் மொழுக் ஹன்சிகா, செம ஸ்லிம் பேபி ஆகிவிட்டார். அது ஓ.கே. ஆனால், க்ளைமாக்ஸில் நடிக்கத் திணறும் அழகியை, 'நடி... நடி’ என்று நடிக்க வைத்திருக்கிறார்கள். நமக்குத்தான்... என்னா அடி?!
அதிரடி ஆக்ரோஷமான 'கில்லர்’ பாக்ஸராக வம்சி கிருஷ்ணா செம ஃபிட். அதிரடி பாக்ஸருக்கு கருணையான மனைவி என அந்தக் குட்டி போர்ஷன் க்யூட். 'சூப்பர் காமெடி பாஸ். அப்படி ஓரமாப் போய்ச் சிரிச்சிட்டு வந்துடவா?’ என சிவகார்த்திகேயனைக் கலாய்க்கும் போதெல்லாம் ஜாலி ரைடு அடிக்கிறார் சதீஷ்.
'டார்லிங் டம்பக்கு...’, 'மாஞ்சா போட்டுதான்...’ பாடல்களில் ரகளை செய்கிறது அனிருத் இசை. மொத்த கேன்வாஸையும் அழகாகக் காட்டும் சுகுமாரின் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளில் எக்ஸ்ட்ரா ரம்மியம்!
பின்பாதியிலும் சிவாவைச் சிரிப்பு ஷோ நடத்தவைப்பதா அல்லது சீரியஸ் க்ளவுஸ் மாட்டுவதா என்பதில் ரொம்பவே குழம்பிவிட்டார்கள் போல! 10 குறள் சொல்லிவிட்டால் ஹன்சிகா பார்சலா? ரெண்டு காமாசோமா பாக்ஸர்களிடம் தப்பித்தால் ஃபைனலுக்குத் தகுதிபெற்றுவிட முடியுமா? சதீஷ் குரூப் வம்படியாகச் சென்று வம்சி மாமனாரிடம் அப்டேட் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? 18 வருட புரொஃபஷனலிஸத்தை 10 நிமிடக் கோபம் காலி செய்துவிடுமா?
படத்தில் செய்தித்தாள் கிடைப்பது மட்டும்தானே ஃபேன்டசி. பின்தொடரும் அத்தனை சம்பவங்களுமா நம்ப முடியாத 'ஃபேன்டசி’யாக அரங்கேறும்? அடப் போங்க பாஸு!
- விகடன் விமர்சனக் குழு
பாக்ஸிங் ரிங்கில் 'பட்டர்’ பீட்டர் 'கில்லர்’ பீட்டரை 'நாக்-அவுட்’ செய்வாரா என்பதே... 'மான் கராத்தே’!
சாஃப்ட்வேர் நண்பர்கள் சதீஷ் அண்ட் கோ-வுக்கு, ஒரு சித்தர் மூலம் நான்கு மாதத்துக்குப் பிந்தைய செய்தித்தாள் கையில் கிடைக்கிறது. அவர்கள் பணிபுரியும் சாஃப்ட்வேர் நிறுவன திவால் முதல் ஆலங்கட்டி மழை வரை செய்தித்தாளில் பதிவாகி இருக்கும் சம்பவங்கள் அப்படி அப்படியே நடக்கின்றன. அதே செய்தித்தாள் மூலம் குத்துச்சண்டைப் போட்டியில் பீட்டர் என்பவர் இரண்டு கோடி ரூபாய் ஜெயிக்கிறார் என்று தெரிந்துகொன்டு அந்தப் பீட்டரைத் தேடினால்... அது சிவகார்த்திகேயன். பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத சிவகார்த்திகேயன் போட்டியில் கலந்துகொண்ட சமயம், இன்னொரு பீட்டரும் என்ட்ரி கொடுக்கிறார். அவர் ஒரே அடியில் எதிராளிகளை 'நாக்-அவுட்’ செய்யும் 'கில்லர்’. இப்போ 'பட்டர்’ பீட்டர் ஜெயிப்பாரா என்பதே கதை!
'பின்னால் நடப்பது முன்கூட்டியே தெரிந்தால்..?’ டைப் ஃபேன்டசி கதையோடு இறங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் திருக்குமரன். கலகல காமெடி, கலர்ஃபுல் ஒளிப்பதிவு, இன்டர்வெல் ட்விஸ்ட்... என செம ஜோர் ஆரம்பம்தான். ஆனால், ரோலர் கோஸ்டர் சவாரி அடித்திருக்கவேண்டிய பின்பாதி, நொண்டியடித்ததால்... 'ஸ்மால் பஸ்’ ட்ரிப் ஆகிவிட்டது!
பில்டப் இன்ட்ரோக்களுக்குப் பிறகு வழக்கமான 'சினா கானா’வாகச் சிரிப்பு சிக்ஸர் விரட்டுகிறார் சிவகார்த்திகேயன். குறள் சொல்லும் போட்டி, டம்மி பிராக்டீஸ் அத்தியாயங்களில் காமெடி நடிப்பு, பன்ச் பாடி லாங்வேஜ்... என பழகிய பிட்ச்சில் செம ஸ்கோர். என்னா டான்ஸ்மா... பின்றீங்க பிரதர். ஆனால், திரைக்கதை திணறும் பின்பாதியில் கடுப்ஸ் ஏற்றுகிறது பீட்டர் கேரக்டரின் அழுகாச்சி பெர்ஃபாமன்ஸ்.
கொழுக் மொழுக் ஹன்சிகா, செம ஸ்லிம் பேபி ஆகிவிட்டார். அது ஓ.கே. ஆனால், க்ளைமாக்ஸில் நடிக்கத் திணறும் அழகியை, 'நடி... நடி’ என்று நடிக்க வைத்திருக்கிறார்கள். நமக்குத்தான்... என்னா அடி?!
அதிரடி ஆக்ரோஷமான 'கில்லர்’ பாக்ஸராக வம்சி கிருஷ்ணா செம ஃபிட். அதிரடி பாக்ஸருக்கு கருணையான மனைவி என அந்தக் குட்டி போர்ஷன் க்யூட். 'சூப்பர் காமெடி பாஸ். அப்படி ஓரமாப் போய்ச் சிரிச்சிட்டு வந்துடவா?’ என சிவகார்த்திகேயனைக் கலாய்க்கும் போதெல்லாம் ஜாலி ரைடு அடிக்கிறார் சதீஷ்.
'டார்லிங் டம்பக்கு...’, 'மாஞ்சா போட்டுதான்...’ பாடல்களில் ரகளை செய்கிறது அனிருத் இசை. மொத்த கேன்வாஸையும் அழகாகக் காட்டும் சுகுமாரின் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளில் எக்ஸ்ட்ரா ரம்மியம்!
பின்பாதியிலும் சிவாவைச் சிரிப்பு ஷோ நடத்தவைப்பதா அல்லது சீரியஸ் க்ளவுஸ் மாட்டுவதா என்பதில் ரொம்பவே குழம்பிவிட்டார்கள் போல! 10 குறள் சொல்லிவிட்டால் ஹன்சிகா பார்சலா? ரெண்டு காமாசோமா பாக்ஸர்களிடம் தப்பித்தால் ஃபைனலுக்குத் தகுதிபெற்றுவிட முடியுமா? சதீஷ் குரூப் வம்படியாகச் சென்று வம்சி மாமனாரிடம் அப்டேட் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? 18 வருட புரொஃபஷனலிஸத்தை 10 நிமிடக் கோபம் காலி செய்துவிடுமா?
படத்தில் செய்தித்தாள் கிடைப்பது மட்டும்தானே ஃபேன்டசி. பின்தொடரும் அத்தனை சம்பவங்களுமா நம்ப முடியாத 'ஃபேன்டசி’யாக அரங்கேறும்? அடப் போங்க பாஸு!
- விகடன் விமர்சனக் குழு
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சிவா wrote:[link="/t109155-topic#1057529"]இதுபோல் இன்னும் இரணடு படங்கள் நடித்தால் சிவகார்த்திகேயன் காணாமல் போய்விடுவார்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|