புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைவிமர்சனம்-மான்கராத்தே
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மான்கராத்தே- விமர்சனம் !
![திரைவிமர்சனம்-மான்கராத்தே 5d3008bd1953526357e83fb12279b030_L](https://2img.net/h/www.tamizhulagam.com/media/k2/items/cache/5d3008bd1953526357e83fb12279b030_L.jpg)
நான்கு மாதங்களுக்குப் பிறகு குறிப்பிட்ட ஒருநாளில் என்ன நடக்கும் என்பது உறுதியாகத் தெரிந்தால் அதைத் தெரிந்துகொள்கிறவர்கள் மனநிலை எப்படியிருக்கும்? மென்பொருள்துறையில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் அவருடைய குழுவினருக்கு நான்குமாதங்கள் கழித்து ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன நடக்கும்? என்பது தெரிகிறது.
ஒரு குத்துச்சண்டைப்போட்டியில் ஒருவர் வெற்றி பெறுவார் அவருக்குச் சன்மானமாக இரண்டுகோடி கிடைக்கும் என்கிற செய்தி இவர்களுக்கு மட்டும் தெரிகிறது. அந்த இரண்டுகோடியைக் கைப்பற்ற அவர்கள் செய்யும் செயல்கள்தாம் படம். இயக்குநர் முருகதாஸின் இந்தக்கதையை அவருடைய உதவியாளராக இருந்த திருக்குமரன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.
வழக்கம்போல வெட்டியாக ஊரைச்சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனைப் பிடித்து குத்துச்சண்டை வீரராக்கப் படாதபாடுபடுகிறார்கள் சதிஷ் குழுவினர். சில நேரங்களில் சிரிப்பும் பல நேரங்களில் சலிப்பும் வருகிறமாதிரியான அக்காட்சிகள் படத்துக்குப் பலவீனம். அவர்களுக்குப் பணம் நோக்கம் என்றால் சிவகார்த்திகேயனுக்கு? ஹன்சிகாவைப் பார்த்து அவருடைய அழகில் மயங்கி அவரைக் காதலிக்கத் துரத்தும் சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகாவுக்கு குத்துச்சண்டை பிடிக்கும் என்று தெரிந்ததால் அதில் ஈடுபடச் சம்மதிக்கிறார்.
அதன்பின்னர் குத்துச்சண்டை மேடைகளில் நடக்கும் கூத்துகளை ஒரு உண்மையான குத்துச்சண்டை வீரர் பார்த்தால் படக்குழுவினரை முகத்தில் குத்தியே கொன்றுவிடுவார். அவ்வளவு கூத்தடித்திருக்கிறார்கள். கூத்தடித்தே இறுதிப்போட்டிவரை வந்துவிடுகிறார் சிவகார்த்திகேயன். கடைசி கொஞ்நேரம் இருக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தை வேறுதளத்துக்கு எடுத்துச்செல்கிறது. எதிர்த்துச்சண்டை போடுவது கராத்தே என்றால் அடிபடாமல் தப்பித்து ஓடுவதுதான் மான்கராத்தே.
பெயருக்குப் பொருத்தமாக சவாலிலிருந்து தப்பித்து ஓடுகிற வேடம் சிவகார்த்திகேயனுக்குப் பொருந்தியிருக்கிறது. அவரிடம் நகைச்சுவையை எதிர்பார்ப்பார்கள் என்பதால் கூடுமானவரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். அவற்றை மிக சாதாரணமாகக் கடந்துபோகிறார் சிவகார்த்திகேயன்.
முழுமையான கதாநாயகன் என்று ஆனபின்னும் வில்லன் காலைப்பிடித்து நான் கெஞ்சுவதா? என்று ஆவேசப்படாமல் வில்லனாக நடிக்கும் வம்சியின் காலில் விழுந்து கதறும்போதும், யாழினி என்னை முழுசா நம்புறா அவள நான் ஏமாத்திடக்கூடாது என்று சொல்லியழும்போதும் நம்மைக் கலங்கவைத்துவிடுகிறார் சிவகார்த்திகேயன். இறுதிக்காட்சிகளில் கோபத்தில் துடித்து அழுது ஆவேசப்பட்டு சண்டைபோடும் காட்சிகளிலும் தப்புச் செய்யாமல் தேர்வு பெறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை எம்மாதிரியான வேடங்களையும் ஏற்று நல்லபடியாக நடித்துவிடுவார் என்கிற பெயரைப் பெற்றுவிட்டார். யாழினி என்கிற அழகுதமிழ்ப்பெயர் வைத்துக்கொண்டு நடித்திருக்கும் ஹன்சிகா இந்தப்படத்துக்காகக் கூடுதல் அழகாகிவிட்டாரா? அவர் அழகாக இருக்க ஒளிப்பதிவாளர் சுகுமார் காரணமா? என்று பட்டிமன்றம் வைக்கலாம்.
பாடல்காட்சிகளில் ரசிகர்களைச் சுண்டியிழுக்கிறார். டார்லிங்டம்பக்கு பாடலுக்கு அவர் போடும் ஆட்டம் பெரியவரவேற்பைப் பெறும். அழகு, ஆட்டம் ஆகியனவற்றைத்தாண்டி சிவகார்த்திகேயன் உயிரோடு தனக்கு வேண்டும் என்று துடித்து அழுகிற காட்சிகளிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார். ஒளிப்பதிவாளர் சுகுமாரும் இசையமைப்பாளர் அனிருத்தும் படத்துக்குப் பெரும்பலங்களாக இருக்கிறார்கள். நாயகனின் அறிமுகப்பாடல், மெல்லிசைப்பாடல், குத்துப்பாடல் என்று வகைக்கொன்றாகப் பாடல்களைப் போட்டு எல்லாவகையையும் ரசிக்க வைத்திருக்கிறார் அனிருத்.
’ஓப்பன் த டாஸ்மாக்’ பாடலில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக கொஞ்நேரம் ஆடியும் இருக்கிறார் அனிருத். அந்தப்பாடலின் நடுவில் ஒரு காட்சியில் இயக்குநர் முருகதாஸ் வந்து சூப்பருப்பு என்கிறார். என்னங்க நடக்குது? குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கும் ஷாஜி, என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறுகிறார். தனக்கு என்ன வேடம் என்பதைக்கூட அவர் உள்வாங்கிக்கொள்ளவில்லை போலும். வில்லனாக நடித்திருக்கும் வம்சியும் அவர் மனைவியாக நடித்திருப்பவரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தில் பெரும்பங்கு வகிப்பவை, சிவகார்த்திகேயனைக் குத்துச்சண்டை வீரராக்க சதிஷ் குழுவினர் பாடுபடுவதும், குத்துச்சண்டை வீரரான பின்பு இறுதிப்போட்டிவரை அவர் முன்னேறுகிற காட்சிகளும்தாம். அந்தக்காட்சிகளைச் சரியாக அமைத்திருந்தால், இது பலமான திரைக்கதையாக இருந்திருக்கும். அவ்விடங்களில் நிறையத் தொய்வு.
முதல்படத்திலேயே புகழ்பெற்ற தொழில்நுட்பக்கலைஞர்கள், பெயர்பெற்ற நாயகன், நாயகி, பெரிய தயாரிப்பு நிறுவனம் ஆகிய எல்லாமே சிறப்பாக அமையப்பெறுவது எல்லோருக்கும் அமையாது. இவ்வளவு அமைந்தும் தன்னுடைய வேலையைச் சிறப்பாகச் செய்யாமல் விட்டிருக்கிறார் இயக்குநர். படம் பெரிய வெற்றி பெற்றாலும் அதற்கான பெருமை இயக்குநருக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.
மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதப்பட்டிருந்தாலும், தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற திருக்குறளையே தன்னுடைய செயல்பாட்டுக்கு ஆதாரமாக நாயகன் காட்டுவது வரவேற்புக்குரியது.
-இணையத்திலிருந்து...
![திரைவிமர்சனம்-மான்கராத்தே 5d3008bd1953526357e83fb12279b030_L](https://2img.net/h/www.tamizhulagam.com/media/k2/items/cache/5d3008bd1953526357e83fb12279b030_L.jpg)
நான்கு மாதங்களுக்குப் பிறகு குறிப்பிட்ட ஒருநாளில் என்ன நடக்கும் என்பது உறுதியாகத் தெரிந்தால் அதைத் தெரிந்துகொள்கிறவர்கள் மனநிலை எப்படியிருக்கும்? மென்பொருள்துறையில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் அவருடைய குழுவினருக்கு நான்குமாதங்கள் கழித்து ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன நடக்கும்? என்பது தெரிகிறது.
ஒரு குத்துச்சண்டைப்போட்டியில் ஒருவர் வெற்றி பெறுவார் அவருக்குச் சன்மானமாக இரண்டுகோடி கிடைக்கும் என்கிற செய்தி இவர்களுக்கு மட்டும் தெரிகிறது. அந்த இரண்டுகோடியைக் கைப்பற்ற அவர்கள் செய்யும் செயல்கள்தாம் படம். இயக்குநர் முருகதாஸின் இந்தக்கதையை அவருடைய உதவியாளராக இருந்த திருக்குமரன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.
வழக்கம்போல வெட்டியாக ஊரைச்சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனைப் பிடித்து குத்துச்சண்டை வீரராக்கப் படாதபாடுபடுகிறார்கள் சதிஷ் குழுவினர். சில நேரங்களில் சிரிப்பும் பல நேரங்களில் சலிப்பும் வருகிறமாதிரியான அக்காட்சிகள் படத்துக்குப் பலவீனம். அவர்களுக்குப் பணம் நோக்கம் என்றால் சிவகார்த்திகேயனுக்கு? ஹன்சிகாவைப் பார்த்து அவருடைய அழகில் மயங்கி அவரைக் காதலிக்கத் துரத்தும் சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகாவுக்கு குத்துச்சண்டை பிடிக்கும் என்று தெரிந்ததால் அதில் ஈடுபடச் சம்மதிக்கிறார்.
அதன்பின்னர் குத்துச்சண்டை மேடைகளில் நடக்கும் கூத்துகளை ஒரு உண்மையான குத்துச்சண்டை வீரர் பார்த்தால் படக்குழுவினரை முகத்தில் குத்தியே கொன்றுவிடுவார். அவ்வளவு கூத்தடித்திருக்கிறார்கள். கூத்தடித்தே இறுதிப்போட்டிவரை வந்துவிடுகிறார் சிவகார்த்திகேயன். கடைசி கொஞ்நேரம் இருக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தை வேறுதளத்துக்கு எடுத்துச்செல்கிறது. எதிர்த்துச்சண்டை போடுவது கராத்தே என்றால் அடிபடாமல் தப்பித்து ஓடுவதுதான் மான்கராத்தே.
பெயருக்குப் பொருத்தமாக சவாலிலிருந்து தப்பித்து ஓடுகிற வேடம் சிவகார்த்திகேயனுக்குப் பொருந்தியிருக்கிறது. அவரிடம் நகைச்சுவையை எதிர்பார்ப்பார்கள் என்பதால் கூடுமானவரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். அவற்றை மிக சாதாரணமாகக் கடந்துபோகிறார் சிவகார்த்திகேயன்.
முழுமையான கதாநாயகன் என்று ஆனபின்னும் வில்லன் காலைப்பிடித்து நான் கெஞ்சுவதா? என்று ஆவேசப்படாமல் வில்லனாக நடிக்கும் வம்சியின் காலில் விழுந்து கதறும்போதும், யாழினி என்னை முழுசா நம்புறா அவள நான் ஏமாத்திடக்கூடாது என்று சொல்லியழும்போதும் நம்மைக் கலங்கவைத்துவிடுகிறார் சிவகார்த்திகேயன். இறுதிக்காட்சிகளில் கோபத்தில் துடித்து அழுது ஆவேசப்பட்டு சண்டைபோடும் காட்சிகளிலும் தப்புச் செய்யாமல் தேர்வு பெறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை எம்மாதிரியான வேடங்களையும் ஏற்று நல்லபடியாக நடித்துவிடுவார் என்கிற பெயரைப் பெற்றுவிட்டார். யாழினி என்கிற அழகுதமிழ்ப்பெயர் வைத்துக்கொண்டு நடித்திருக்கும் ஹன்சிகா இந்தப்படத்துக்காகக் கூடுதல் அழகாகிவிட்டாரா? அவர் அழகாக இருக்க ஒளிப்பதிவாளர் சுகுமார் காரணமா? என்று பட்டிமன்றம் வைக்கலாம்.
பாடல்காட்சிகளில் ரசிகர்களைச் சுண்டியிழுக்கிறார். டார்லிங்டம்பக்கு பாடலுக்கு அவர் போடும் ஆட்டம் பெரியவரவேற்பைப் பெறும். அழகு, ஆட்டம் ஆகியனவற்றைத்தாண்டி சிவகார்த்திகேயன் உயிரோடு தனக்கு வேண்டும் என்று துடித்து அழுகிற காட்சிகளிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார். ஒளிப்பதிவாளர் சுகுமாரும் இசையமைப்பாளர் அனிருத்தும் படத்துக்குப் பெரும்பலங்களாக இருக்கிறார்கள். நாயகனின் அறிமுகப்பாடல், மெல்லிசைப்பாடல், குத்துப்பாடல் என்று வகைக்கொன்றாகப் பாடல்களைப் போட்டு எல்லாவகையையும் ரசிக்க வைத்திருக்கிறார் அனிருத்.
’ஓப்பன் த டாஸ்மாக்’ பாடலில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக கொஞ்நேரம் ஆடியும் இருக்கிறார் அனிருத். அந்தப்பாடலின் நடுவில் ஒரு காட்சியில் இயக்குநர் முருகதாஸ் வந்து சூப்பருப்பு என்கிறார். என்னங்க நடக்குது? குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கும் ஷாஜி, என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறுகிறார். தனக்கு என்ன வேடம் என்பதைக்கூட அவர் உள்வாங்கிக்கொள்ளவில்லை போலும். வில்லனாக நடித்திருக்கும் வம்சியும் அவர் மனைவியாக நடித்திருப்பவரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தில் பெரும்பங்கு வகிப்பவை, சிவகார்த்திகேயனைக் குத்துச்சண்டை வீரராக்க சதிஷ் குழுவினர் பாடுபடுவதும், குத்துச்சண்டை வீரரான பின்பு இறுதிப்போட்டிவரை அவர் முன்னேறுகிற காட்சிகளும்தாம். அந்தக்காட்சிகளைச் சரியாக அமைத்திருந்தால், இது பலமான திரைக்கதையாக இருந்திருக்கும். அவ்விடங்களில் நிறையத் தொய்வு.
முதல்படத்திலேயே புகழ்பெற்ற தொழில்நுட்பக்கலைஞர்கள், பெயர்பெற்ற நாயகன், நாயகி, பெரிய தயாரிப்பு நிறுவனம் ஆகிய எல்லாமே சிறப்பாக அமையப்பெறுவது எல்லோருக்கும் அமையாது. இவ்வளவு அமைந்தும் தன்னுடைய வேலையைச் சிறப்பாகச் செய்யாமல் விட்டிருக்கிறார் இயக்குநர். படம் பெரிய வெற்றி பெற்றாலும் அதற்கான பெருமை இயக்குநருக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.
மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதப்பட்டிருந்தாலும், தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற திருக்குறளையே தன்னுடைய செயல்பாட்டுக்கு ஆதாரமாக நாயகன் காட்டுவது வரவேற்புக்குரியது.
-இணையத்திலிருந்து...
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
சிவா wrote:[link="/t109155-topic#1056443"]விமர்சனத்திற்கு நன்றி, இப்பொழுதுதான் மான் கராத்தே தரவிறக்கம் ஆகிக் கொண்டுள்ளது. முடிந்ததும் பார்க்க வேண்டும்!
எங்களுக்கு
குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் காலில் ஷூ அணிந்து, கையில் ஒரு கிளவுஸை மட்டும் எடுத்துக் கொண்டு உடனேயே போட்டிக்காக கியூவில் போய் நிற்க முடியாது.. இதற்கெல்லாம் முறையான சங்கங்கள் உண்டு. அதில் சேர்ந்து குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற்று.. பயிற்சியாளரின் ஒப்புதல் பெற்ற பின்பு.. திறமைச் சான்றுக்கான முதற்கட்ட போட்டியில் வெற்றி பெற்ற பின்புதான் குத்துச்சண்டை போட்டியாளர் என்ற பெயரே, அடையாள அட்டையுடன் கிடைக்கும்.
இந்தப் பெயர் கிடைத்த பின்பும் நகர அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் என்று போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தால் மட்டுமே தேசிய அளவுக்கே செல்ல முடியும்.. குரும்பப்பட்டியில் நடக்கும் பொங்கல் விழாவில் ஓட்டப் பந்தயம் நடத்தப்படுவது போல, எங்கேயும் குத்துச்சண்டை போட்டியை நடத்திவிட முடியாது..
இதற்கான ஆட்களும் குறைவு.. சங்க அமைப்புகளும் குறைவு.. நடுவர்களும் குறைவு.. விதிமுறைகளை மிகச் சரியாகப் பயன்படுத்தவில்லையெனில் உயிருக்கே அபாயம் என்பதால் இந்த விளையாட்டை வெளியிடங்களில் நடத்துவதற்கு ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ்களை வைத்திருக்கிறது அகில இந்திய குத்துச்சண்டை சம்மேளனம்..!
எல்லாவற்றையும் பரணில் தூக்கிப் போட்டுவிட்டு லாஜிக்கை காலில் மிதித்தபடியே சிவகார்த்திகேயன் என்னும் ஹீரோவுக்காக ஒரே நாளில் பயிற்சி எடுத்து.. வீர வசனங்களை பேசியவுடன்.. கேட்டவுடன்.. ரத்த நாளங்கள் துடிக்க மேடையேறி தேசிய சேம்பியனை அடித்து வீழ்த்துவது என்பதெல்லாம் காமெடியாக செய்திருந்தால் ஓகே.. ஆனால் இங்கே சீரியஸாக எடுத்துத் தொலைத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்படியெல்லாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது..!
-
--உண்மைத்தமிழன்
-
--உண்மைத்தமிழன்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மான் கராத்தே - சினிமா விமர்சனம்
பாக்ஸிங் ரிங்கில் 'பட்டர்’ பீட்டர் 'கில்லர்’ பீட்டரை 'நாக்-அவுட்’ செய்வாரா என்பதே... 'மான் கராத்தே’!
சாஃப்ட்வேர் நண்பர்கள் சதீஷ் அண்ட் கோ-வுக்கு, ஒரு சித்தர் மூலம் நான்கு மாதத்துக்குப் பிந்தைய செய்தித்தாள் கையில் கிடைக்கிறது. அவர்கள் பணிபுரியும் சாஃப்ட்வேர் நிறுவன திவால் முதல் ஆலங்கட்டி மழை வரை செய்தித்தாளில் பதிவாகி இருக்கும் சம்பவங்கள் அப்படி அப்படியே நடக்கின்றன. அதே செய்தித்தாள் மூலம் குத்துச்சண்டைப் போட்டியில் பீட்டர் என்பவர் இரண்டு கோடி ரூபாய் ஜெயிக்கிறார் என்று தெரிந்துகொன்டு அந்தப் பீட்டரைத் தேடினால்... அது சிவகார்த்திகேயன். பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத சிவகார்த்திகேயன் போட்டியில் கலந்துகொண்ட சமயம், இன்னொரு பீட்டரும் என்ட்ரி கொடுக்கிறார். அவர் ஒரே அடியில் எதிராளிகளை 'நாக்-அவுட்’ செய்யும் 'கில்லர்’. இப்போ 'பட்டர்’ பீட்டர் ஜெயிப்பாரா என்பதே கதை!
'பின்னால் நடப்பது முன்கூட்டியே தெரிந்தால்..?’ டைப் ஃபேன்டசி கதையோடு இறங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் திருக்குமரன். கலகல காமெடி, கலர்ஃபுல் ஒளிப்பதிவு, இன்டர்வெல் ட்விஸ்ட்... என செம ஜோர் ஆரம்பம்தான். ஆனால், ரோலர் கோஸ்டர் சவாரி அடித்திருக்கவேண்டிய பின்பாதி, நொண்டியடித்ததால்... 'ஸ்மால் பஸ்’ ட்ரிப் ஆகிவிட்டது!
பில்டப் இன்ட்ரோக்களுக்குப் பிறகு வழக்கமான 'சினா கானா’வாகச் சிரிப்பு சிக்ஸர் விரட்டுகிறார் சிவகார்த்திகேயன். குறள் சொல்லும் போட்டி, டம்மி பிராக்டீஸ் அத்தியாயங்களில் காமெடி நடிப்பு, பன்ச் பாடி லாங்வேஜ்... என பழகிய பிட்ச்சில் செம ஸ்கோர். என்னா டான்ஸ்மா... பின்றீங்க பிரதர். ஆனால், திரைக்கதை திணறும் பின்பாதியில் கடுப்ஸ் ஏற்றுகிறது பீட்டர் கேரக்டரின் அழுகாச்சி பெர்ஃபாமன்ஸ்.
கொழுக் மொழுக் ஹன்சிகா, செம ஸ்லிம் பேபி ஆகிவிட்டார். அது ஓ.கே. ஆனால், க்ளைமாக்ஸில் நடிக்கத் திணறும் அழகியை, 'நடி... நடி’ என்று நடிக்க வைத்திருக்கிறார்கள். நமக்குத்தான்... என்னா அடி?!
அதிரடி ஆக்ரோஷமான 'கில்லர்’ பாக்ஸராக வம்சி கிருஷ்ணா செம ஃபிட். அதிரடி பாக்ஸருக்கு கருணையான மனைவி என அந்தக் குட்டி போர்ஷன் க்யூட். 'சூப்பர் காமெடி பாஸ். அப்படி ஓரமாப் போய்ச் சிரிச்சிட்டு வந்துடவா?’ என சிவகார்த்திகேயனைக் கலாய்க்கும் போதெல்லாம் ஜாலி ரைடு அடிக்கிறார் சதீஷ்.
'டார்லிங் டம்பக்கு...’, 'மாஞ்சா போட்டுதான்...’ பாடல்களில் ரகளை செய்கிறது அனிருத் இசை. மொத்த கேன்வாஸையும் அழகாகக் காட்டும் சுகுமாரின் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளில் எக்ஸ்ட்ரா ரம்மியம்!
பின்பாதியிலும் சிவாவைச் சிரிப்பு ஷோ நடத்தவைப்பதா அல்லது சீரியஸ் க்ளவுஸ் மாட்டுவதா என்பதில் ரொம்பவே குழம்பிவிட்டார்கள் போல! 10 குறள் சொல்லிவிட்டால் ஹன்சிகா பார்சலா? ரெண்டு காமாசோமா பாக்ஸர்களிடம் தப்பித்தால் ஃபைனலுக்குத் தகுதிபெற்றுவிட முடியுமா? சதீஷ் குரூப் வம்படியாகச் சென்று வம்சி மாமனாரிடம் அப்டேட் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? 18 வருட புரொஃபஷனலிஸத்தை 10 நிமிடக் கோபம் காலி செய்துவிடுமா?
படத்தில் செய்தித்தாள் கிடைப்பது மட்டும்தானே ஃபேன்டசி. பின்தொடரும் அத்தனை சம்பவங்களுமா நம்ப முடியாத 'ஃபேன்டசி’யாக அரங்கேறும்? அடப் போங்க பாஸு!
- விகடன் விமர்சனக் குழு
பாக்ஸிங் ரிங்கில் 'பட்டர்’ பீட்டர் 'கில்லர்’ பீட்டரை 'நாக்-அவுட்’ செய்வாரா என்பதே... 'மான் கராத்தே’!
சாஃப்ட்வேர் நண்பர்கள் சதீஷ் அண்ட் கோ-வுக்கு, ஒரு சித்தர் மூலம் நான்கு மாதத்துக்குப் பிந்தைய செய்தித்தாள் கையில் கிடைக்கிறது. அவர்கள் பணிபுரியும் சாஃப்ட்வேர் நிறுவன திவால் முதல் ஆலங்கட்டி மழை வரை செய்தித்தாளில் பதிவாகி இருக்கும் சம்பவங்கள் அப்படி அப்படியே நடக்கின்றன. அதே செய்தித்தாள் மூலம் குத்துச்சண்டைப் போட்டியில் பீட்டர் என்பவர் இரண்டு கோடி ரூபாய் ஜெயிக்கிறார் என்று தெரிந்துகொன்டு அந்தப் பீட்டரைத் தேடினால்... அது சிவகார்த்திகேயன். பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத சிவகார்த்திகேயன் போட்டியில் கலந்துகொண்ட சமயம், இன்னொரு பீட்டரும் என்ட்ரி கொடுக்கிறார். அவர் ஒரே அடியில் எதிராளிகளை 'நாக்-அவுட்’ செய்யும் 'கில்லர்’. இப்போ 'பட்டர்’ பீட்டர் ஜெயிப்பாரா என்பதே கதை!
'பின்னால் நடப்பது முன்கூட்டியே தெரிந்தால்..?’ டைப் ஃபேன்டசி கதையோடு இறங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் திருக்குமரன். கலகல காமெடி, கலர்ஃபுல் ஒளிப்பதிவு, இன்டர்வெல் ட்விஸ்ட்... என செம ஜோர் ஆரம்பம்தான். ஆனால், ரோலர் கோஸ்டர் சவாரி அடித்திருக்கவேண்டிய பின்பாதி, நொண்டியடித்ததால்... 'ஸ்மால் பஸ்’ ட்ரிப் ஆகிவிட்டது!
பில்டப் இன்ட்ரோக்களுக்குப் பிறகு வழக்கமான 'சினா கானா’வாகச் சிரிப்பு சிக்ஸர் விரட்டுகிறார் சிவகார்த்திகேயன். குறள் சொல்லும் போட்டி, டம்மி பிராக்டீஸ் அத்தியாயங்களில் காமெடி நடிப்பு, பன்ச் பாடி லாங்வேஜ்... என பழகிய பிட்ச்சில் செம ஸ்கோர். என்னா டான்ஸ்மா... பின்றீங்க பிரதர். ஆனால், திரைக்கதை திணறும் பின்பாதியில் கடுப்ஸ் ஏற்றுகிறது பீட்டர் கேரக்டரின் அழுகாச்சி பெர்ஃபாமன்ஸ்.
கொழுக் மொழுக் ஹன்சிகா, செம ஸ்லிம் பேபி ஆகிவிட்டார். அது ஓ.கே. ஆனால், க்ளைமாக்ஸில் நடிக்கத் திணறும் அழகியை, 'நடி... நடி’ என்று நடிக்க வைத்திருக்கிறார்கள். நமக்குத்தான்... என்னா அடி?!
அதிரடி ஆக்ரோஷமான 'கில்லர்’ பாக்ஸராக வம்சி கிருஷ்ணா செம ஃபிட். அதிரடி பாக்ஸருக்கு கருணையான மனைவி என அந்தக் குட்டி போர்ஷன் க்யூட். 'சூப்பர் காமெடி பாஸ். அப்படி ஓரமாப் போய்ச் சிரிச்சிட்டு வந்துடவா?’ என சிவகார்த்திகேயனைக் கலாய்க்கும் போதெல்லாம் ஜாலி ரைடு அடிக்கிறார் சதீஷ்.
'டார்லிங் டம்பக்கு...’, 'மாஞ்சா போட்டுதான்...’ பாடல்களில் ரகளை செய்கிறது அனிருத் இசை. மொத்த கேன்வாஸையும் அழகாகக் காட்டும் சுகுமாரின் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளில் எக்ஸ்ட்ரா ரம்மியம்!
பின்பாதியிலும் சிவாவைச் சிரிப்பு ஷோ நடத்தவைப்பதா அல்லது சீரியஸ் க்ளவுஸ் மாட்டுவதா என்பதில் ரொம்பவே குழம்பிவிட்டார்கள் போல! 10 குறள் சொல்லிவிட்டால் ஹன்சிகா பார்சலா? ரெண்டு காமாசோமா பாக்ஸர்களிடம் தப்பித்தால் ஃபைனலுக்குத் தகுதிபெற்றுவிட முடியுமா? சதீஷ் குரூப் வம்படியாகச் சென்று வம்சி மாமனாரிடம் அப்டேட் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? 18 வருட புரொஃபஷனலிஸத்தை 10 நிமிடக் கோபம் காலி செய்துவிடுமா?
படத்தில் செய்தித்தாள் கிடைப்பது மட்டும்தானே ஃபேன்டசி. பின்தொடரும் அத்தனை சம்பவங்களுமா நம்ப முடியாத 'ஃபேன்டசி’யாக அரங்கேறும்? அடப் போங்க பாஸு!
- விகடன் விமர்சனக் குழு
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சிவா wrote:[link="/t109155-topic#1057529"]இதுபோல் இன்னும் இரணடு படங்கள் நடித்தால் சிவகார்த்திகேயன் காணாமல் போய்விடுவார்!
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|