புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
40 Posts - 63%
heezulia
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
2 Posts - 3%
viyasan
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
232 Posts - 42%
heezulia
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
21 Posts - 4%
prajai
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலம்புழா அணை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 2:58 am



சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பி, 'குளு குளு' பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமா? பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்று வாருங்கள்.

கோவையிலிருந்து ஒன்றை மணி நேர பயணத்தில், மலம்புழாவை அடைந்து விடலாம். காரிலோ, டூ-வீலரிலோ செல்வதாக இருந்தால், கஞ்சிக்கோடிலிருந்து, ஏழரை கி.மீ., தூரத்தில் மலம்புழா வந்து விடும். கோவையிலிருந்து மிக சமீபத்திலிருக்கும் மலம்புழா, முன் தமிழகத்தோடு இணைந்திருந்தது.

மலம்புழா அணைக்கு சிறிது தூரத்தில் உள்ளது ராக் கார்டன் எனப்படும், கற்களால் ஆன பொம்மை பூங்கா. சண்டிகரிலுள்ள ராக் கார்டனுக்கு அடுத்ததாக உள்ள, பெரிய ராக் கார்டன் இதுதான். இங்குள்ள விதவிதமான மார்பிள் பொம்மைகள், நம்மை வியப்பில் ஆழ்த்தும். இதை பார்த்தபின், அருகிலுள்ள பெரிய பூங்காவிற்குள் காலடி எடுத்து வைத்தோமென்றால், நாமும் குழந்தைகளாகி விடுவோம். குட்டி ரயில், பொம்மை வாயிலிருந்து விழும் தண்ணீர், அழகான வண்ணமயமான பூக்கள் இவற்றை பார்வையிட்டு நகர்ந்தால், தொங்கும் பாலம் வந்து விடும்.

கீழே அறுந்து விழுந்து விடுமோ என்கிற பயத்தில், இந்த பாலத்தில் நடந்து செல்வதே, பெரிய, 'த்ரில்' தான். பாலத்தில் நடக்கும் போதே, அணையின் பிரமாண்ட தோற்றம் தெரிவதால், அணையின் நடுப்பகுதியில் நடப்பது போன்று இருக்கும். தொங்கு பாலத்தை கடந்து சென்றால், படகு இல்லம் வந்து விடும். மோட்டார் படகு, துடுப்புப் படகு என, குழந்தைகளோடு, ஏதாவது ஒரு படகில் ஏறி அமர்ந்து, பூங்கா மற்றும் அணைக்கட்டு பகுதியை சுற்றி வரலாம்.

படகுப் பயணம் முடிந்ததும், அணைப் பகுதியின் மேலே ஏறினால், ரோப் கார் இருக்குமிடம் வரும். இருவர் அமர்ந்து செல்லும் கேபிள்களாக இருக்கும் ரோப் காரில் அமர்ந்து, மலம்புழாவின் மொத்த அழகையும், ஜாலியா ரசிக்கலாம். மேலும், ரோப் காரிலிருந்து கீழிறங்கி, அணைக்கட்டு பகுதியில், ஒரு ரவுண்ட் நடை போட்டு வரலாம்.

அணைக்கட்டிலிருந்து இறங்கி, பாம்பு பண்ணைக்கு சென்றால், அங்கே பிரமாண்ட சைஸ் பாம்புகளிலிருந்து, குட்டி பாம்புகள் வரை பாரக்கலாம். அங்கிருந்து வெளியே வந்தால், அசைவ பிரியர்களுக்காக, குறிப்பாக, மீன் வறுவலுக்கு அடிமையானவர்களுக்காக, அணையிலிருந்து பிரஷ்ஷாக மீன் பிடித்து, சுடக் சுட வறுத்து தருவர். அதன் பின், மீன் பண்ணைக்கு, ஒரு, 'ரவுண்ட்' போய் வரலாம். அப்படியே அருகிலுள்ள நீச்சல் குளத்தில், ஒரு குளியலும் போடலாம்.

— தேசாந்தரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 3:00 am

கொல்லிமலை ஆகாச கங்கை அருவி!

பச்சை மாமலைபோல் மேனி என்று, கொல்லி மலையைப் பார்த்துத்தான், ஆழ்வார்கள் பாடி இருப்பார்களோ என்னவோ! அப்படி ஒரு பசுமை. எங்கு பார்த்தாலும், பச்சைப் படுதாவை போட்டு மூடியது போல் காணப்படும் கொல்லிமலைத் தொடர், நாமக்கல்லிலிருந்து, 40 கி.மீ., தூரத்தில் உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து, 1,190 மீ. உயரத்தில் உயர்ந்து நிற்கும், கொல்லிமலையின் பரப்பளவு ஏறத்தாழ, 400 சதுர மைல்கள். 28 கி.மீ., வடமேற்காக நீண்டும், 19 கி.மீ., கிழக்கு மேற்காக அகன்று கிடக்கும், இந்த மலைவெளியில், அரிய மூலிகைகள். அரப்பள்ளீஸ்வரர் கோவில், அரசு மூலிகைப் பண்ணை, தாவரத் தோட்டம் என, பார்ப்பதற்கு ரம்மியமான பல இடங்கள் உண்டு. அரப்பள்ளீஸ்வரர் கோவில் அருகில் விழும், ஆகாச கங்கை அருவி, மூலிகை மகத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்ட, கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரிக்கு, ஒவ்வோர் ஆண்டும், மே மாதத்தில், திருவிழா நடத்தப்படுகிறது. பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த குகைகளும் இங்கு உள்ளன. நாமக்கல்லில் தங்கி, கார்,பஸ்களில் போய் வரலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 3:01 am

மாத்தூர் தொங்குபாலம்!

ஓர் ஓவியக் கோட்டினைப்போலத் தோன்றும் இது, ஆசியாவின் மிக நீளமான குறுக்குப் பாலம்.

115 அடி உயரமும், 1 கி.மீ. நீளமும் உடையது. திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில், அருவிக்கரை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாத்தூர் என்ற இடத்தில் இருப்பதனால், இதற்கு மாத்தூர் தொங்கு பாலம் என்று பெயர்.

பரளியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இப்பாலம் வழியே, பட்டணம்கல் மலையிலிருந்து, இன்னொரு பக்கத்திற்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. விளவங்கோடு கல்குளம் பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்காக, முன்னாள் முதலமைச்சர் காமராசர் முயற்சியின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலம், சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது. இங்கு குழந்தைகள் பூங்காவும், நீராடும் துறையும் இருக்கின்றன. நாகர்கோவிலில் தங்கி, அவரவர் வசதிப்படி பஸ், கார்களில் சென்று வரலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 3:02 am

காரைவெட்டி பறவைகள் சரணாலயம்!

பறவைகள் எங்கிருந்தால் என்ன? பார்க்கப் பார்க்க அழகுதான். தஞ்சாவூருக்கு வடக்கே, 35 கி.மீ. , தொலைவில் உள்ளது காரைவெட்டி பறவைகள் சரணாலயம்.

இதன் மொத்தப் பரப்பளவு, 454 ஹெக்டேர். ஒவ்வொரு நவம்பர் மாதமும், பெரும்பாலான நீர்ப்பறவைகள், சீதோஷ்ணம் மற்றும் குஞ்சு பொரிப்பதற்காக இங்கு வருகின்றன. பின், ஏப்ரல் மாதம், தன் குஞ்சுகளோடு கிளம்பிச் செல்லும் இப்பறவைகளை பார்ப்பதே கொள்ளை அழகு! தஞ்சாவூரில் தங்கி, இச்சரணாலயத்தை பார்த்து வரலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 3:03 am

ஆனைமலை விலங்குகள் சரணாலயம்!

காட்டில் சுதந்திரமாக சுற்றித் திரியும் விலங்குகளைப் பார்ப்பது எத்தகைய ஆனந்தம் என்பதை, ஆனைமலைக்குச் சென்றால், உணர்வீர்...

யானை, காட்டெருது, தேவாங்கு, கரடி, பொன்னிறப் பறவைகள், எறும்புத் தின்னி போன்றவற்றை இங்கே காணலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில், 1,400 மீட்டர் உயரத்தில், 958 ச.கி.மீ., பரப்பளவில், பொள்ளாச்சி அருகே இச்சரணாலயம் அமைந்துள்ளது.

இங்குள்ள அமராவதி நீர்த் தேக்கத்தில், முதலைகள் ஏராளம். குன்றுகள், அருவிகள், தேக்கு மரக்காடுகள், தோப்புகள், பண்ணைகள், அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள் என, இயற்கை எழில் கைகுலுக்கிக் கொள்ளும் அழகின் தாய்வீடு. டாப்ஸ்லிப் பகுதிக்கு, சுற்றுலாப் பயணிகள், வேன் அல்லது யானை மீது உல்லாச சவாரி சென்று வரலாம்.

பொள்ளாச்சியில் தங்கி, பார்த்து வரலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக