புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
25 Posts - 38%
heezulia
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
2 Posts - 3%
prajai
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
8 Posts - 2%
prajai
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_m10நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 11, 2014 7:32 pm



இது தேர்தல் காலம். நேர்மை, தூய்மை, ஊழல், லஞ்சம் என்பன உள்ளிட்ட சொற்களின் ஆதிக்கம் மிகுந்த காலம். பிரதமர் வேட்பாளர் முதல் எம்.பி. வேட்பாளர் வரையிலானவர்களின் நேர்மையைப் பற்றி அறிந்தோ அறியாமலோ பேசுகிறோம். சரி, இந்த 'நேர்மை'யின் நிலைமை நம் அன்றாட வாழ்க்கையில் எப்படி இருக்கிறது?

நல்லனவற்றை தூரத்தில் வைத்து ஆராதித்தே பழக்கப்பட்டுப்போன நாம், அதன் கரம் பிடித்து நடக்க முயல்வதே இல்லை. அதனால்தானோ என்னவோ, இறைவனுடன் கூட வழிநடப்பதை தவிர்த்து அவருக்கு தனியாக இல்லம் அமைத்து கொடுத்து வணங்குகிறோம். வெறும் சொல்லாக பார்க்கப்பட வேண்டிய 'நேர்மை'க்கு, என்று தூய்மை சாயம் பூசப்பட்டதோ, அன்றே அது ஊர் பஞ்சாயத்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டது.

'எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல், ஊழல், ஐயகோ..!' என்று தினம் தினம் செய்தித்தாளை பார்த்து விட்டு குமுறும் நடுத்தர வர்க்க தந்தை, தன் மகளுக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் (மன்னிக்கவும். அதிகாரப்பூர்வ சொல் - டொனேஷன்) கொடுத்து சிறந்தது எனக் கருதப்படும் பள்ளியில் எல்.கே.ஜி. சீட் பெற்று கொடுத்து பெருமை கொள்வதை என்னவென்று சொல்வது?

ஐந்து வயதில் பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து விட்டு, அறுபதில் கரும்பாய் இருக்க வேண்டும் என்று எண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?

மகனின் பழக்கவழக்கத்தை வளர்க்கிறேன் என்ற பெயரில் மளிகைக் கடைக்கு அழைத்து செல்கிறார் தாய். கடையில் இருக்கும் ஏழை முதியவர் கணக்குப் பிழையில் பத்து ரூபாய் குறைத்து சொல்ல, சொன்னதை கொடுத்து விட்டு திரும்பும் தாயிடம், "பத்து ரூபாய் கூடுதலா வருமே மா?" என்று கேட்கிறான் மகன். "விடுடா. பத்து ரூபாய் லாபம்" என்று சொல்லி சிரிக்கும் தாய், மகனிடம் விதைப்பது நல்ல பழக்கவழக்கங்களை அல்ல, எளியவரை ஏய்ப்பது என்ற கொடூரமான விதையை. விதைப்பது சரியாய் இருந்தால்தானே வளர்வது முறையாய் இருக்கும்?

நேர்மை இச்சமூகத்தால் இரு வகையாய் அனுசரிக்கப்படுகிறது. ஒன்று அர்ச்சிக்கப்படுகிறது அல்லது வஞ்சிக்கப்படுகிறது. இரண்டுமே தவறென்ற போதிலும், அர்ச்சிக்கப்பட்டாலாவது செய்வது தவறென்ற உள்ளுணர்வு உள்ளத்தை உறுத்தும். நேர்மை வஞ்சிக்கப்படும்போது, நேர்மையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறது. செய்வது தவறென்றுகூட புரியாத பரிதாப நிலையே நிலவுகிறது.

சமீபத்தில் என் அலுவலகத்தில், போக்குவரத்து செலவுகளை திரும்பப் பெரும் சலுகை வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தொகை வரை பற்றுச்சீட்டு இல்லாமலே பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பயணமே செய்யாதவரெல்லாம் பயணம் செய்ததாகக் கூறி ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டனர். நாங்கள் சிலர் மட்டும் உள்ளதை உள்ளபடி பெற்றுக் கொண்டோம். எதிர்பார்க்காத வகையில் அனைவரின் முன்னர் நாங்கள் காட்சிப் பொருளாய் தென்பட்டோம். 'பிழைக்கத் தெரியாதவர்கள்' என்ற பட்டத்தையும் பெற்று, அனைவருக்கும் எள்ளிநகையாட கைப்பொருளாய் சிக்கிக் கொண்டோம். குற்றவாளி கூண்டில் நிற்பதைப் போன்றே உணர முடிந்தது. கேள்வி மேல் கேள்வி, "நிறைய பணம் வச்சுருக்கியோ?" என்ற கேள்வி சற்று வதைக்கவே செய்தது. "அது என் பணம் இல்லையே. அதை எப்படி பெறுவது?" என்று மனம் கேட்க துடித்தாலும், கேட்டாலும் ஒரு பயனும் இல்லை என்று எண்ணி புன்னகைத்து விட்டு முடித்தேன்.

குறுந்தொழில் முதல் பெருந்தொழில் வரை வரி ஏய்ப்பு செய்வது, தவறான கணக்கு காண்பிப்பது, பற்றுச்சீட்டு இல்லாமல் விற்பனை செய்வது, தள்ளுபடி கிடைக்கும் என்பதால் பற்றுச்சீட்டு இல்லாமல் பொருள் வாங்குவது, சாலையோர கடைகளில் சாப்பிட்டுவிட்டு கணக்கு சொல்லும் போது 2 இட்லி குறைவாக சொல்வது, மொழி தெரியாத ஆட்களிடம் ஆட்டோக்காரர்கள் அதிக பணம் கேட்பது, வேலை நேரத்தில் கஸ்டமர்களை பார்க்கப் போவதாக சொல்லி மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ்கள் வீட்டில் ஓய்வு எடுப்பது, விலை தெரியாத மக்களிடம் பொருட்களை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பது... இது போன்ற சிறிய அளவில் செய்வதெல்லாம் தவறில்லை என்று நாம் எண்ணும் வரையில், பெரிய வணிகர்கள் கோடி கோடியாய் ஏய்த்து சம்பாதிப்பதையும், அரசியல்வாதிகள் கத்தை கத்தையாய் ஊழல் செய்வதையும் தட்டி கேட்க நமக்கு அருகதை இல்லை என்றும், அவர்கள் திருந்துதல் நடக்காத காரியம் என்றுமே எண்ணத் தோன்றுகிறது.

கேள்வி கேட்க வேண்டிய 'நேர்மை', கேலிப் பொருளாய் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவதும், கேள்விக் கணைகளால் துளைக்கப்படுவதும், இந்தியாவுக்கு மட்டும் இல்லை, மானுடத்துக்கே இழி நிலை என்றே கொள்ள முடிகிறது. எப்போதும் போல, என்றாவது ஒரு நாள் நேர்மை அர்ச்சிக்கப்படவோ, வஞ்சிக்கப்படவோ இல்லாமல், இயல்பாக அனுசரிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

தி இந்து


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 11, 2014 7:46 pm

அருமையான கட்டுரை சிவா , நல்ல பகிர்வு புன்னகை இந்த வரிகள் போல எங்களுக்கும் பலமுறை நடந்ததுண்டு சோகம்

// சமீபத்தில் என் அலுவலகத்தில், போக்குவரத்து செலவுகளை திரும்பப் பெரும் சலுகை வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தொகை வரை பற்றுச்சீட்டு இல்லாமலே பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பயணமே செய்யாதவரெல்லாம் பயணம் செய்ததாகக் கூறி ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டனர். நாங்கள் சிலர் மட்டும் உள்ளதை உள்ளபடி பெற்றுக் கொண்டோம். எதிர்பார்க்காத வகையில் அனைவரின் முன்னர் நாங்கள் காட்சிப் பொருளாய் தென்பட்டோம். 'பிழைக்கத் தெரியாதவர்கள்' என்ற பட்டத்தையும் பெற்று, அனைவருக்கும் எள்ளிநகையாட கைப்பொருளாய் சிக்கிக் கொண்டோம். குற்றவாளி கூண்டில் நிற்பதைப் போன்றே உணர முடிந்தது. கேள்வி மேல் கேள்வி, "நிறைய பணம் வச்சுருக்கியோ?" என்ற கேள்வி சற்று வதைக்கவே செய்தது. "அது என் பணம் இல்லையே. அதை எப்படி பெறுவது?" என்று மனம் கேட்க துடித்தாலும், கேட்டாலும் ஒரு பயனும் இல்லை என்று எண்ணி புன்னகைத்து விட்டு முடித்தேன்.//

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Apr 11, 2014 8:09 pm

நிமிர்ந்து நில் படம் மனதில் வந்து செல்வதை தடுக்க
முடியவில்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக