ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலையர் கவிதை

Go down

மழலையர் கவிதை  Empty மழலையர் கவிதை

Post by ayyasamy ram Thu Apr 10, 2014 9:18 pm

வாழும் முறை[/color]
-

காலைப் பொழுதில் அயர்ந்து தூங்காதே
மாலைப் போதினில் மான் போல் விளையாடு
சோலைக் குயிலின் குரலில் கீதமிசை
வேலை தன்னை வெறுத்து ஒதுக்காதே!

-
மேலாம் கல்வி மேன்மை தருமென்று
காலம் முழுதும் கற்றுத் தேர்வாயே!
நூலகம் சென்று படிக்கப் பழகிக் கொள்
நாலும் தெரிவது சாலவும் நன்று

-
பாழும் வெய்யிலில் பதறித் திரியாதே
கீழோர் தொடர்பால் கெட்டு அலையாதே!
வீழும் மண் குடம் போன்று உடையாதே
வாழும் முறையை வளர்த்துக் கொள்வாயே!
-
----------------------------------

>கவிஞர் தடாகத்தான்
நன்றி: நாளை நமதே (மழலையர் கவிதைகள்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழலையர் கவிதை  Empty Re: மழலையர் கவிதை

Post by ayyasamy ram Thu Apr 10, 2014 9:22 pm

மழலையர் கவிதை  MG9lZgKcT7aAA5mXcZZk+c8167-img_7870priyamudanprabu-flower-post28229
-
சொத்து..!
--
ஒன்றும் ஒன்றும் இரண்டு
குன்றாக் கல்வியே நன்று
இரண்டும் இரண்டும் நான்கு
இடரும் கர்வமே துன்பம்
மூன்றும் மூன்றும் ஆறு
மூடச் செயலே பாவம்
நான்கும் நான்கும் எட்டே
நன்மை செய்தால் நலமே!
-
ஐந்தும் ஐந்தும் பத்து
அன்பும் ஆற்றலும் சொத்து!
பத்தும் பத்தும் இருபது
சுத்தம் சுகத்தைத் தருவது
இருபதும் இருபதும் நாற்பது
இருப்பதை வைத்தே மகிழ்வுறு!
-
முப்பதும் முப்பதும் அறுபது
தப்பினைத் திருத்த முயன்றிடு
நாற்பதும் நாற்பதும் எண்பது
சீற்றமும் சினமும் அகற்றிடு
ஐம்பதும் ஐம்பதும் நூறு
அன்பே என்றும் சிறப்பு!
-
----------------------------
>கவிஞர் தடாகத்தான்
நன்றி: நாளை நமதே (மழலையர் கவிதைகள்)
புகைப்படம்: பிரியமுடன் பிரபு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழலையர் கவிதை  Empty Re: மழலையர் கவிதை

Post by ayyasamy ram Thu Apr 10, 2014 9:23 pm

கூடியே எதிர்க்க வேண்டும்
-
-
மஞ்சள் வெயில் காயும்
மனமகிழ் மாலை நேரம்
சஞ்சலம் போக்க எண்ணி
சாலையோரம் நின்றேன்
-
குஞ்சிளம் காக்கை ஒன்றைக்
கொன்ற சிறுவன் தன்னை
வெஞ்சினக் காகக் கூட்டம்
விரட்டியே துரத்தக் கண்டேன்
-
அஞ்சிய சிறுவன் துள்ளி
அம்மா வோவெனத் துடித்து
பஞ்செனப் பறந்து விரைந்து
ஓடக் கண்டேன்.
-
வஞ்சனை செய்து நம்மை
வருத்தவே வந்த பகையைக்
கொஞ்சமும் அச்ச மினிறிக்
கூடியே எதிர்க்க வேண்டும்
-
------------------------
>கவிஞர் தடாகத்தான்
நன்றி: நாளை நமதே (மழலையர் கவிதைகள்)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழலையர் கவிதை  Empty Re: மழலையர் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum