Latest topics
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
2 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
First topic message reminder :
1. இரா.கிரிராஜன் (தி.மு.க.) - வட சென்னை
முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். திமுகவின் மாநில சட்டத்துறை இணைச் செயலாளராக உள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள இவருக்கு, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1. இரா.கிரிராஜன் (தி.மு.க.) - வட சென்னை
முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். திமுகவின் மாநில சட்டத்துறை இணைச் செயலாளராக உள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள இவருக்கு, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Re: தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
11. முத்தையன் (தி.மு.க.) - விழுப்புரம்
டாக்டர் கோ.முத்தையன் வயது 54. 29.5.1959-ல் பிறந்தவர். எம்.பி.பி.எஸ்., டி.ஆர்த்தோ, எம்.எஸ்.ஆர்த்தோ படித்துள்ளார். இவருடைய சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஆலவேலி கிராமம். மனைவி சிவகாம சுந்தரியும் டாக்டராக உள்ளார். மகள்கள் சுப்பிரியா நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், சுகன்யா புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் டாக்டர் படிப்பு படித்து வருகின்றனர். மகன் சூரியா விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
முத்தையன், கடந்த 1989-ம் ஆண்டு முதல் தி.மு.க.வில் சேர்ந்து கட்சி பணியாற்றி வருகிறார். தற்போது இவர், மாவட்ட இலக்கிய அணி புரவலராக உள்ளார். மேலும் 1989-ல் விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 1991-ல் வளத்தி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 1992-2000 வரை விழுப்புரம் தலைமை மருத்துவமனையிலும் அரசு டாக்டராக பணியாற்றி வந்த இவர் தற்போது விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் சேர்மன் சிதம்பரம் தெருவில் சொந்தமாக எலும்பு முறிவு சிகிச்சைக்கான மருத்துவமனை வைத்துள்ளார்.
டாக்டர் கோ.முத்தையன் வயது 54. 29.5.1959-ல் பிறந்தவர். எம்.பி.பி.எஸ்., டி.ஆர்த்தோ, எம்.எஸ்.ஆர்த்தோ படித்துள்ளார். இவருடைய சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஆலவேலி கிராமம். மனைவி சிவகாம சுந்தரியும் டாக்டராக உள்ளார். மகள்கள் சுப்பிரியா நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், சுகன்யா புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் டாக்டர் படிப்பு படித்து வருகின்றனர். மகன் சூரியா விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
முத்தையன், கடந்த 1989-ம் ஆண்டு முதல் தி.மு.க.வில் சேர்ந்து கட்சி பணியாற்றி வருகிறார். தற்போது இவர், மாவட்ட இலக்கிய அணி புரவலராக உள்ளார். மேலும் 1989-ல் விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 1991-ல் வளத்தி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 1992-2000 வரை விழுப்புரம் தலைமை மருத்துவமனையிலும் அரசு டாக்டராக பணியாற்றி வந்த இவர் தற்போது விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் சேர்மன் சிதம்பரம் தெருவில் சொந்தமாக எலும்பு முறிவு சிகிச்சைக்கான மருத்துவமனை வைத்துள்ளார்.
Re: தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
12. பொன்.ரா.மணிமாறன் (தி.மு.க.) - கள்ளக்குறிச்சி
பொன்.ரா.மணிமாறன் வயது 51.பிறந்த தேதி 15.6.1962. எம்.எஸ்.சி. விவசாய படிப்பு படித்துள்ளார். சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம்.
இவருடைய தந்தை மிசா பொன்ராமகிருஷ்ணன் 1949-ல் இருந்து இன்று வரை தியாகதுருகம் நகர செயலாளராக இருந்து வருகிறார். மணிமாறனின் மனைவி அருணா. இவர் 2006 முதல் 2011 வரை தியாகதுருகம் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்தார். மகன் அரவிந்தன் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். மகள் ஹரிதா 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். மணிமாறன், வேளாண்மை துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அப்பணியில் இருந்து 31.7.2013 அன்று விருப்ப ஓய்வு பெற்றார்.
சிறுவயது முதலே தி.மு.க.வில் கட்சி பணியாற்றி வருகிறார். தியாகதுருகம் நகரில் வசித்து வரும் இவர் அதே பகுதியில் மேல்நிலைப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
பொன்.ரா.மணிமாறன் வயது 51.பிறந்த தேதி 15.6.1962. எம்.எஸ்.சி. விவசாய படிப்பு படித்துள்ளார். சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம்.
இவருடைய தந்தை மிசா பொன்ராமகிருஷ்ணன் 1949-ல் இருந்து இன்று வரை தியாகதுருகம் நகர செயலாளராக இருந்து வருகிறார். மணிமாறனின் மனைவி அருணா. இவர் 2006 முதல் 2011 வரை தியாகதுருகம் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்தார். மகன் அரவிந்தன் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். மகள் ஹரிதா 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். மணிமாறன், வேளாண்மை துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அப்பணியில் இருந்து 31.7.2013 அன்று விருப்ப ஓய்வு பெற்றார்.
சிறுவயது முதலே தி.மு.க.வில் கட்சி பணியாற்றி வருகிறார். தியாகதுருகம் நகரில் வசித்து வரும் இவர் அதே பகுதியில் மேல்நிலைப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
Re: தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
13. உமாராணி (தி.மு.க.) - சேலம்
உமாராணியின் குடும்பம் சேலத்தில் பாரம்பரிய மிக்க குடும்பம். இவரது அப்பா எல்.ஆர்.என். சண்முகம் அந்த காலத்து தி.மு.க.காரர். இவருடைய மகள்தான் உமாராணி. இவரும் சிறு வயதில் இருந்தே திமுகவின் பற்றாளர். இவரது தங்கைக்கு அண்ணா சேலம் வந்த போது அஞ்சுகம் என்று பெயர் சூட்டினார்.
உமாராணி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., சமூகவியல் பட்டம் பெற்றவர். கணவர் டாக்டர் செல்வராஜ். சுனிதா, சுகன்யா என்ற இரண்டு பெண்கள். இருவருக்கு திருமணம் ஆகி விட்டது. 1996 முதல் 2001 வரை சேலம் மாநகராட்சியின் கவுன்சிலராக இருந்தார். அரசியலை தாண்டி சமூக சேவைகளை செய்து வருகிறார். சேலத்தில் பல ஆதரவற்ற தொண்டு நிறுவனங்களோடு இணைந்து ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறார்.
இவர் தொடங்கியிருக்கும் ‘‘மலரும்’’ அமைப்பின் மூலம் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான குழந்தைகளுக்கு விழிப்புணர்வும், பாதுகாப்பும், பராரிப்பும் செய்து வருகிறார்.
உமாராணியின் குடும்பம் சேலத்தில் பாரம்பரிய மிக்க குடும்பம். இவரது அப்பா எல்.ஆர்.என். சண்முகம் அந்த காலத்து தி.மு.க.காரர். இவருடைய மகள்தான் உமாராணி. இவரும் சிறு வயதில் இருந்தே திமுகவின் பற்றாளர். இவரது தங்கைக்கு அண்ணா சேலம் வந்த போது அஞ்சுகம் என்று பெயர் சூட்டினார்.
உமாராணி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., சமூகவியல் பட்டம் பெற்றவர். கணவர் டாக்டர் செல்வராஜ். சுனிதா, சுகன்யா என்ற இரண்டு பெண்கள். இருவருக்கு திருமணம் ஆகி விட்டது. 1996 முதல் 2001 வரை சேலம் மாநகராட்சியின் கவுன்சிலராக இருந்தார். அரசியலை தாண்டி சமூக சேவைகளை செய்து வருகிறார். சேலத்தில் பல ஆதரவற்ற தொண்டு நிறுவனங்களோடு இணைந்து ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறார்.
இவர் தொடங்கியிருக்கும் ‘‘மலரும்’’ அமைப்பின் மூலம் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான குழந்தைகளுக்கு விழிப்புணர்வும், பாதுகாப்பும், பராரிப்பும் செய்து வருகிறார்.
Re: தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
14. காந்திசெல்வன் (தி.மு.க.) - நாமக்கல்
காந்திசெல்வனின் சொந்த ஊர் நாமக்கல் அருகேயுள்ள போதுப்பட்டி. எம்.ஏ., எம்.பில். பட்டதாரி. 2.6.1963ல் பிறந்த காந்திசெல்வன் தி.மு.க. மாவட்ட செயலாளராக இருக்கிறார். தீவிர ஸ்டாலின் ஆதரவாளர்.
தந்தை செல்லப்ப கவுண்டர். தாய் நாச்சியம்மாள். மனைவி வசந்தி. மகன் கௌதம். மகள் ஹரிதா. கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த காந்திசெல்வன் ஆரம்ப காலத்தில் லாரி தொழில் செய்து வந்தார். 1984ல் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தர். 1984ல் நாமக்கல், அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் நடந்த மாணவர் மன்ற தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு தீவிர அரசியல் பயணத்தை தொடங்கினார்.
1986-ல் நாமக்கல் நகராட்சி கவுன்சிலர், 1987-ல் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர், 1994-ல் தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளர், 1996-ல் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர், நாமக்கல் நகர கூட்டுறவு வங்கித் தலைவர், 1996-ல் மீண்டும் நகர்மன்ற உறுப்பினர். 2001 சட்டசபைத் தேர்தலில் கபிலர்மலை தொகுதியில் பா.ம.க.-வைச் சேர்ந்த ஏ.ஆர்.மலையப்பசாமியிடம் 4 ஆயிரத்து 312 வாக்குகளில் தோற்றுப் போனார். 2001-ல் நாமக்கல் நகர மன்றத் தலைவர். நாமக்கல் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, நாமக்கல்லை குப்பையில்லா நகரமாக்கியது இவருடைய சாதனை.
2006 சட்டசபைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.-வைச் சேர்ந்த பி.தங்கமணியிடம் 116 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 2006-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்து வந்த போதுதான் 2009 எம்.பி. தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சராகவும் ஆனார்.
காந்திசெல்வனின் சொந்த ஊர் நாமக்கல் அருகேயுள்ள போதுப்பட்டி. எம்.ஏ., எம்.பில். பட்டதாரி. 2.6.1963ல் பிறந்த காந்திசெல்வன் தி.மு.க. மாவட்ட செயலாளராக இருக்கிறார். தீவிர ஸ்டாலின் ஆதரவாளர்.
தந்தை செல்லப்ப கவுண்டர். தாய் நாச்சியம்மாள். மனைவி வசந்தி. மகன் கௌதம். மகள் ஹரிதா. கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த காந்திசெல்வன் ஆரம்ப காலத்தில் லாரி தொழில் செய்து வந்தார். 1984ல் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தர். 1984ல் நாமக்கல், அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் நடந்த மாணவர் மன்ற தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு தீவிர அரசியல் பயணத்தை தொடங்கினார்.
1986-ல் நாமக்கல் நகராட்சி கவுன்சிலர், 1987-ல் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர், 1994-ல் தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளர், 1996-ல் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர், நாமக்கல் நகர கூட்டுறவு வங்கித் தலைவர், 1996-ல் மீண்டும் நகர்மன்ற உறுப்பினர். 2001 சட்டசபைத் தேர்தலில் கபிலர்மலை தொகுதியில் பா.ம.க.-வைச் சேர்ந்த ஏ.ஆர்.மலையப்பசாமியிடம் 4 ஆயிரத்து 312 வாக்குகளில் தோற்றுப் போனார். 2001-ல் நாமக்கல் நகர மன்றத் தலைவர். நாமக்கல் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, நாமக்கல்லை குப்பையில்லா நகரமாக்கியது இவருடைய சாதனை.
2006 சட்டசபைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.-வைச் சேர்ந்த பி.தங்கமணியிடம் 116 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 2006-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்து வந்த போதுதான் 2009 எம்.பி. தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சராகவும் ஆனார்.
Re: தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
15. பவித்ரவள்ளி (தி.மு.க.) - ஈரோடு
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வரதப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர். 13-4-1987 அன்று பிறந்த இவர், சென்னை அண்ணாநகர் ஸ்டேன்ஸ் பள்ளியில் 10-ம் வகுப்புவரை படித்தார். எஸ்.பி.ஓ.ஏ. பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 முடித்த பிறகு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் பட்டப்படிப்பு மற்றும் எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு பட்ட மேற்படிப்பு முடித்தார்.
பவித்ரவள்ளியின் கணவர் வ.ஹரிபிரசாத், வரதப்பம்பாளையம் கிளை தி.மு.க. செயலாளர். ஹரிபிரசாத்தின் தாயார் கிருஷ்ணவேணி கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டுவரை காங்கயம் ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்தவர். 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி தலைவராக இருந்தவர்.
Re: தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
16. செந்தில்நாதன் (தி.மு.க.) - திருப்பூர்
சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள முருககவுண்டன்பாளையம். மனைவி சுசீலா. இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குமரேசன் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. 2 பேரும் டாக்டர்கள்.
தி.மு.க.வில் ஈடுபாடு கொண்ட டாக்டர் செந்தில்நாதன் கடந்த 1997-ம் ஆண்டு முதல் தி.மு.க.வின் உறுப்பினராக இருந்து வருகிறார். கட்சி அறிவித்த மறியல் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். 35 வருடத்துக்கு மேலாக கோபி, ஈரோடு, திருப்பூர், சத்தியமங்கலம், பெருந்துறை, டி.என்.பாளையம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
Re: தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
17. ஆ. ராசா (தி.மு.க.) - நீலகிரி
பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தை ஆ. ராசா ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். பி.எஸ்.சி., பி.எல். பட்டதாரி. 10.05.1963ல் பிறந்த ராசாவின் தந்தை எஸ்.கே. ஆண்டிமுத்து. தாய் சின்னப்பிள்ளை. மனைவி பரமேஸ்வரி. மகள் மயூரி ராஜா. 1996, 1999, 2004 மற்றும் 2009 என 4 முறை மக்களவை உறுப்பினர்.
வழக்கறிஞராக இருந்த ராசா 1996 முதல் ஒன்றியச் செயலாளராகவும் 2004 முதல் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர், தற்போது தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருக்கிறார். 1996-ம் ஆண்டு பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அரசியல் பிரவேசம். கன்னி முயற்சியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
1998- தேர்தலில் அதே தொகுதியில் தோற்றுப் போனார். 1999- தேர்தலில் வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சராக இடம் பெற்றார். 2001ல் சுகாதாரத் துறை இணை அமைச்சராக மாற்றம். 2004 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆனார். 2006ல் வனத்துறை, தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர். 2009 தேர்தலில் பெரம்பலூர் தொகுதி பொது தொகுதியாக மாறியதால் நீலகிரிக்கு மாறினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராசா, அந்த வழக்கில் சிறை கம்பிகளுக்கு பின்னால் தள்ளப்பட்டார். 15 மாத சிறை வாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார். ஆ. ராசாவிற்கு சீட் வழங்கப்பட்டது விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.
Re: தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
18. கணேஷ்குமார் (தி.மு.க.) - கோவை
கோவையை சேர்ந்த கணேஷ்குமாரின் வயது 55. பி.எஸ்சி., பி.எல். பட்டதாரி. முழு நேர வக்கீல்.
1976 முதல் தி.மு.க. உறுப்பினர். கோவை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராகவும், 1986 முதல் மாணவர் அணி மாநில துணை செயலாளராகவும் இன்று வரை பணியாற்றி வருகிறார். வக்கீல் கணேஷ்குமார் 5 முறை தி.மு.க. மாணவர் அணி மாநில துணை செயலாளராக பணியாற்றி இருக்கிறார். மனைவி லட்சுமிநாராயணி. டாக்டர். தீபன் என்ற மகனும், தாரிகா பொன்மணி என்ற மகளும் உள்ளனர்.
கோவையை சேர்ந்த கணேஷ்குமாரின் வயது 55. பி.எஸ்சி., பி.எல். பட்டதாரி. முழு நேர வக்கீல்.
1976 முதல் தி.மு.க. உறுப்பினர். கோவை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராகவும், 1986 முதல் மாணவர் அணி மாநில துணை செயலாளராகவும் இன்று வரை பணியாற்றி வருகிறார். வக்கீல் கணேஷ்குமார் 5 முறை தி.மு.க. மாணவர் அணி மாநில துணை செயலாளராக பணியாற்றி இருக்கிறார். மனைவி லட்சுமிநாராயணி. டாக்டர். தீபன் என்ற மகனும், தாரிகா பொன்மணி என்ற மகளும் உள்ளனர்.
Re: தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
19. பொங்கலூர் பழனிச்சாமி (தி.மு.க.) - பொள்ளாச்சி
பொங்கலூர் பழனிச்சாமியின் வயது 69. தற்போது கோவை மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். இவர் திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியம் செம்மேகவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் 2.8.1947-ல் பிறந்தார். 1971-ம் ஆண்டு பொங்கலூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அதன்பின்னர் 1996-ம் ஆண்டு கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக அமைச்சர் ஆனார். அதை தொடர்ந்து 2006-ம் ஆண்டு கோவை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2-வது முறையாக அமைச்சர் ஆனார். இவர் 1976, 2001, 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
கடந்த 52 ஆண்டுகள் தி.மு.க.வில் உறுப்பினராகவும், 21 ஆண்டுகள் கோவை மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். 1998-ம் ஆண்டு 8 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல பொறுப்பாளராக பதவி வகித்துள்ளார். பி.எஸ்சி பட்டதாரியான பொங்கலூர் பழனிச்சாமி சிமெண்டு ஆலை மற்றும் இரும்பு தாது ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். பொங்கலூர் பழனிச்சாமியின் மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்து விட்டார். இவர்களுக்கு பைந்தமிழ் பாரி என்ற மகனும், இந்து என்ற மகளும் உள்ளனர். பைந்தமிழ் பாரி கோவை மாநகர தி.மு.க. துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
Re: தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
20. எஸ். காந்திராஜன் (தி.மு.க.) - திண்டுக்கல்
62 வயதாகும் காந்திராஜன், பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். சட்டக்கல்லூரியில் படிக்கும்போது அ.தி.மு.கவினரின் தொடர்பால் மாணவர் அணியில் இணைந்து அ.தி.மு.கவில் ஐக்கியமானவர். ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த இவருக்குச் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூருக்கு அருகில் உள்ள மாத்தினிபட்டி எனும் கிராமம். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, 1989ம் ஆண்டு நடந்த சட்டமனறத் தேர்தலில், ஜெயலலிதா, ஜானகி ஆகியோர் தனித்தனி அணியாக போட்டியிட்ட போது... இவர் ஜெயலலிதா அணி சார்பாக வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அத்தேர்தலில் ஜானகி அணியைச் சேர்ந்த முத்துச்சாமியிடம் இவர் தோற்றார். அடுத்து 1991ம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த சமயத்தில், சட்டமனற உறுப்பினராக இருந்து கொண்டே 1992ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை குடிநீர் வடிகால் வாரியத்தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
1993&ம் ஆண்டு இவருக்கு சட்டப் பேரவை துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. 96ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி முடியும் வரை அப்பதவியில் இருந்த காந்திராஜன், 1996ம் ஆண்டு நடந்த சட்டமனறத் தேர்தலில் மீண்டும் வேடசந்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தி.மு.க வேட்பாளர் எஸ்.வி. கிருஷ்ணனிடம் தோற்றார். 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு அ.தி.மு.க சார்பில் சீட் கொடுக்கவில்லை. அதனால் அதிருப்தியில் இருந்த இவர், 2006ம் ஆண்டு துவக்கத்தில் தி.மு.கவில் இணைந்தார். ஆனாலும், 2006ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத்தேர்தல்களில் வேடசந்தூர் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், தி.மு.க கூட்டணியிலும் இரண்டு தேர்தல்களில் இவருக்கு சீட் கிடைக்கவில்லை. அதனால்தான் தற்போது, இவருக்கு எம்.பி சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது, காந்திராஜன் தி.மு.க செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். திண்டுக்கல் மாவட்ட நீதிமனறத்தில் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் மீது தொடரப்பட்டிருக்கும் அவதூறு வழக்கில் ஸ்டாலினுக்காக ஆஜரான வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர். இதுவரை பெரிய அளவில் கெட்ட பெயர் இல்லாமை போன்றவற்றை தனது பலமாகக் கருதுகிறார், காந்திராஜன்.
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வித்தியாசமான வேட்பாளர்கள்!
» அ.தி.மு.க.,வின் கோடீஸ்வர வேட்பாளர்கள்
» 1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
» திமுக நட்சரத்திரங்களை எதிர்க்கும் வேட்பாளர்கள்
» தே.மு.தி.க.வின் 41 தொகுதிகள் வேட்பாளர் பட்டியல்!
» அ.தி.மு.க.,வின் கோடீஸ்வர வேட்பாளர்கள்
» 1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
» திமுக நட்சரத்திரங்களை எதிர்க்கும் வேட்பாளர்கள்
» தே.மு.தி.க.வின் 41 தொகுதிகள் வேட்பாளர் பட்டியல்!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|